கடற்கொள்ளையர்கள்
பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது Pirates Of Malabar Coast (கி.பி. 1600 - 1800)
நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி
Andhazahi Vaitheeswaran Chockalingam, Arun Kumar, David J Praveen, Karthik Dilli, Surendar Lohia, Aravind Sankar, Rameez Raja, Saravanan, Zahir Ibn Jaffarullah, Yathumathi
Copyright © 2018 by Naveena Alexander & Varshini All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher/Author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email below. First Edition. March. 2018 Price Rs. 90/Andhazahi 197, 1st Floor, GST Road,Chrompet, Chennai - 44 Beside Sunday Sports 9884431107 Printed in Chennai, Tamil Nadu.
ப�ொருளடக்கம் முன்னுரை
1
தமிழ் மற்றும் ர�ோமானிய கடற்கொள்ளையர்கள்
3
பக்கநீரிங், பிரைவட்டியரிங்
19
கேப்டன் டியூவ் & அமிட்டி
33
கேப்டன் ஹென்ரி ஏவ்ரி & பேன்சி
45
கேப்டன் ஏவ்ரி & கடற்கொள்ளையர்களின் கூட்டணி
57
கேப்டன் வில்லியம் கிட் & அட்வென்சர் கேலி
70
கேப்டன் செங்-ஐ-ச�ோ (Cheng I Sao)
81
பின்னிணைப்பு
91
பிற்சேர்கை
101
Reference Books
105
IV
V
அந்தாழையின் பிற வெளியீடுகள் நவீனா அலெக்சாண்டர் உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை: திரைக்கதை உத்தி, கேமிரா உத்தி, எடிட்டிங் உத்தி க�ொரில்லா பிலிம் மேக்கிங்: Handbook For Independent Filmmakers புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும் உருகும் பூமி உறையும் உயிர்கள்: ஆன்திரப�ோசீன் பேரழிவு எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen Screenwriting தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக் கலை, கலகம்: கலை இயக்கங்கள்: (பழைய கற்காலம் த�ொடங்கி ப�ோஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950) - புக் – I தெருக்கள், சாலைகள்: கல�ோனியல் சென்னைப்பட்டிணம் (கி.பி. 1640 – 1700) பேலிய�ோ: கேவ்மேன் டையட் சினிமாவிற்கான இசை: ஏன், எப்படி பெறுவது, Handbook For Indie Filmmakers To Understand Cinematic Music லெமூரியா, அட்லாண்டிஸ், மூ: தமிழர் கண்டம்? “ஒன் கிளிக் ” அங்காடிகள்: அமேசான், ஈ-பே, பேபால், அலிபாபா நிறுவனங்களின் வெற்றிகள், த�ோல்விகள், வளர்ச்சிகள் வர்ஷினி கிளிய�ோபாட்டிரா: சூழ்ச்சிகளின் அடையாளமில்லா அடையாளம் ப�ோதை அடிமைகள்: சமூக ஊடகம், இணையம், ப�ோர்னோ தி ஆஸ்கார்ஸ் நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி சமையலறையில் கல்லறை: விசமாகும் உணவுகள் குத்தக்கைக்கு ப�ொதுப்புத்தி: புதிய பரிணாம க�ொள்கை VI
கிருமிக்கண்ட மானிடம் பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand) Next Gen Film Distribution For Indie Filmmakers உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள்: Handbook For Indie Filmmakers VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள் கேஃபேப் – Kayfabe: ரஸ்லிங் நாடகம் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் (AI): அடுத்த த�ொழில் புரட்சி மெடிசி: வங்கியும் அதிகாரமும் முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
VII
முன்னுரை
வா
சிப்பு பழக்கம் த�ொடங்கிய (ஆறாம் வகுப்பு முதல்) காலம் முதல் கப்பல்கள் மீது எனக்கு தனியாத காதல். கடவுள் உருவாக்கிய உயிரினங்களிலேயே உருவத்தில் மிகப் பெரியது கடலில் இருப்பதை ப�ோல மனிதன் உருவாக்கிய வாகனங்களிலேயே உருவத்தில் மிகப் பெரியதும் கடலில்தான் இருக்கிறது. பெருங்கடல்களுக்கு முன் இராட்சத உருவம் க�ொண்ட கப்பல்கள் சிறு துரும்புதான் என்றாலும் கடலை கிழித்துக�ொண்டு பயணிக்கும் அதன் கம்பீரம் எப்போதும் துணிச்சல் மிகுந்த ஆளுமை திறனை நினைவுப்படுத்த கூடியது.
அத்தோடில்லாமல் கடல�ோடு த�ொடர்புடைய செய்திகளும் கதைகளும் படு சுவாரசியமானவை. குறிப்பாக கடல் பயண செய்திகள் மற்றும் கடற்கொள்ளையர்கள் குறித்த செய்திகள். கடலில் வணிகம் த�ொடங்கிய காலம் த�ொட்டே கடல் க�ொள்ளையும் த�ொடங்கிவிட்டிருக்கிறது. இது குறித்த வரலாற்று பதிவுகள் நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட எந்த ஒரு புனைவு கதைகளுக்கும் குறையாத விருவிருப்பான வாசிப்பு அனுபவத்தை தரக் கூடியது. இதற்கென்றே உலகம் முழுவதிலும் தனித்த வாசகர் கூட்டமும் இருக்கிறது. பதினெழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகள் கடற்கொள்ளையர்களின் சுக்கிர திசை காலகட்டமாக பார்க்கப்படுகிறது. துருக்கியர்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கான்ஸ்டான்டிந�ோபிளை கைப்பற்றிய பிறகு ஐர�ோப்பிய நாடுகளுக்கான சந்தை ப�ொருட்கள் செல்வதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. தங்கள் சந்தை இயங்குவதற்கான மாற்று வழிகளை தேடி கடலில் இறங்கின ஐர�ோப்பிய நாடுகள். முதலில் கடலில் காலை வைத்தது ப�ோர்ச்சுக்கல் அதை த�ொடர்ந்து ஸ்பெயின், 1
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
பிரான்ஸ், நெதர்லாண்ட் (டச்சு), டென்மார்க் (டேனிஷ்) இறுதியாக இங்கிலாந்து. ஐர�ோப்பிய நிலப்பகுதிகளில் இந்த நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் வணிக காழ்புணர்ச்சிகளின் காரணமாக பிரைவட்டியரிங் (Privateering) த�ொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்து உள்ளே விரிவாக பார்ப்போம். இதை த�ொடர்ந்து கடற்கொள்ளை பெருக்கெடுத்தது. பதினாறாம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் பெருங்கடலில் இயங்கிய ஐர�ோப்பிய கடற்கொள்ளையர்கள் பிறகு இந்திய பெருங்கடல் பகுதிக்கு தங்களின் களத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அடுத்து வந்த சுமார் 150 வருடங்களுக்கு பெர்ஷிய வளைகுடா மற்றும் மலபார் கடற்கரை பகுதிகளிலும், மலேஷிய கடல் பகுதிகளிலும் கடற்கொள்ளை தலைவிரித்தாடுகிறது. நாடு, இனம், ம�ொழி என்று எவ்வித வித்தியாசமும் பாராபட்சமும் இல்லாமல் அனைத்து நாடுகளின் வணிக கப்பல்களும் கடற்கொள்ளையர்களால் பாதிப்பை சந்தித்தன. கடற்கொள்ளையர்கள் த�ோன்றிய வேகத்திலேயே அழிந்தும்போனார்கள். அவர்கள் குறித்த வரலாற்று பதிவுகள் ஆங்கில ம�ொழியில் கணிசமான அளவிற்கு இருக்கின்றன. தமிழில்? அப்படியெல்லாம் அதிகபிரசங்கித்தனமாக கேட்டுவிடக் கூடாது. கடந்த நூறு வருடங்களாக இலக்கிய இரச வடையை ஊறவைத்து அதிலிருந்தே வாசிப்பு அனுப�ோகத்தை பிரித்துக�ொடுத்துக்கொண்டிருக்கிற�ோம். ஆனால் இன்றைய த�ொழில் நுட்ப வளர்ச்சிகள் மிக முக்கியமாக இணைய த�ொழில் நுட்ப வளர்ச்சி மற்ற ம�ொழிகளில் இருக்கும் இதுப�ோன்ற வாசிப்பு அனுபவத்தை விரிவாக்கும் புத்தகங்களை குறித்து அடுத்த தலைமுறை வாசகனுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. மாற்று வாசிப்பு அனுபவத்திற்கான ஒரு சிறிய முயற்ச்சியாகத்தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிற�ோம். நவீனா அலெக்சாண்டர் (8220855357) வர்ஷினி
2
தமிழ் மற்றும் ர�ோமானிய கடற்கொள்ளையர்கள்
த�ொ
ல் தமிழன் கப்பல் த�ொழில் நுட்பத்தையும் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தையும் கண்டுபிடித்து மற்ற கண்டங்களுடனான கடல் வழி வணிகத்தை த�ொடங்கிய காலம் த�ொட்டே கடற்கொள்ளையும் த�ொடங்கிவிட்டது. அதாவது கடற்கொள்ளையின் த�ொடக்கம் என்பது இன்றிலிருந்து சுமார் 15,000 வருடங்களுக்கு முன்பு செல்லக் கூடியது. (தமிழர்களின் த�ொல் பழங்கால கப்பல் மற்றும் கடல் வணிகம் குறித்து மேலும் அதிகம் அறிந்துக�ொள்ள எனது “லெமூரியா, அட்லாண்டிஸ், மூ: தமிழர் கண்டம்?” புத்தகத்தை வாசிக்கவும்).
ஆனால் துர்பாக்கியம் கடற்கொள்ளையர்கள் குறித்த த�ொல் பழங்கால எழுத்து பதிவுகள் நம்மிடையே இல்லை. இது த�ொடர்பான த�ொல்லியல் ஆதாரங்கள் இனி வரும் காலத்தில் வெளியில் வந்தால்தான் உண்டு. சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்தும் அகநானூறும் கடற்கொள்ளையர்கள் பற்றி பேசுகின்றன. மிக விரிவாக இல்லையென்றாலும் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வெற்றிகளில் ஒன்றாக. இன்றிலிருந்து சுமார் 6000 – 7000 வருடங்களுக்கு முன்பாக சேர, ச�ோழ, பாண்டிய மற்றும் இலங்கை கடற் பகுதிகள் மிக அதிக கப்பல் ப�ோக்குவரத்து க�ொண்ட இயற்கை துறைமுகங்களை உள்ளடக்கிய பகுதிகளாக இருந்திருகின்றன. தென் கிழக்கே சீனாவிலிருந்தும், வடக்கில் சிந்து சமவெளியிலிருந்தும், வட மேற்கே மெசப்பட்டோமிய நாகரீகங்களிலிருந்தும் வணிக கப்பல்கள் இந்த துறைமுக பகுதிகளுக்கு வருவதும் ப�ோவதுமாக இருந்திருகின்றன. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருந்தது தமிழர்களின் வணிக த�ோணிகள். சேர, ச�ோழ மற்றும் பாண்டிய பேரரசுகளில் 3
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
இருந்த வணிகர்களின் த�ோணிகள். சீனாவிலிருந்து பீங்கானில் செய்யப்பட்ட வீட்டு உபய�ோக ப�ொருட்கள், ஆடம்பர அலங்கார ப�ொருட்கள் மற்றும் பட்டு நூல் ப�ொதிகளை ஏற்றிக்கொண்டு வணிக கப்பல்கள் மலாய் தீபகற்பத்தை அடைந்து பிறகு அந்தமான் தீவுகளை கடந்து இலங்கை தீவை வந்தடையும். மிக நீண்ட கடல் பயணம்.
இலங்கை தீவில் சீன சரக்குகள் தமிழ் வணிகர்களின் கைகளுக்கு மாறும். மாறிய வணிக ப�ொருட்களுக்கு ஈடாக தங்கம், வெள்ளி, மசாலா ப�ொருட்கள் மற்றும் மருந்து மூலிகைகளை பெற்றுக்கொண்டு நாடு திரும்பும். இலங்கை தீவிலிருந்து தமிழ் வணிக த�ோணிகள் மசாலா ப�ொருட்கள், லினன் க�ொண்டு தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஆடைகள், மிருகங்களின் தந்தம், க�ொற்கை முத்துக்கள் மற்றும் கலை ப�ொருட்களை ஏற்றிக்கொண்டு சீன கப்பல்கள் வந்த அதே வழியாக சீன துறைமுகங்களை சென்றடையும். பதிலுக்கு தங்கம், வெள்ளி பெற்றுக்கொண்டு நாடு திரும்பும். இலங்கையில் கைமாறி சீன பீங்கான் மற்றும் பட்டு நூல் ப�ொதிகள் தமிழகத்தின் முசிறி, நெல்கிந்தா மற்றும் க�ொமாரா துறைமுகங்களுக்கு க�ொண்டுவரப்படம். அங்கிருந்து அவை உள்நாட்டு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு பீங்கான் கலை ப�ொருட்களாகவும், பட்டு ஆடைகளாகவும் மாற்றப்பட்டு மீண்டும் 4
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இதே துறைமுகங்களுக்கு க�ொண்டு வரப்படும். இவைகளுடன் சேர்த்து மசாலா ப�ொருட்கள், க�ொற்கை முத்துக்கள், லினன் ஆடைகள் மற்றும் கலை ப�ொருட்கள் ஏற்றப்பட்டு தமிழக த�ோணிகளும் அரேபிய கப்பல்களும் பெர்ஷிய வளைகுடாவையும், செங்கடலையும் சென்றடையும்.
இதற்கு மாற்றாக தங்கமும் வெள்ளியும் பெறப்பட்டு த�ோணிகள் மீண்டும் வந்த கடல் வழியிலேயே தாயகம் திரும்பும். வணிகத்தை முடித்துவிட்டு திரும்பும் அனைத்து த�ோணிகளிலும் மூட்டை மூட்டையாக தங்கமும் வெள்ளியும் வணிக இலாபமாக க�ொண்டுவரப்படும். மேலும் மசாலா ப�ொருட்களையும், லினன் துணிகளையும் நேரடியாக தமிழக துறைமுகங்களுக்கே வந்து கிரேக்க ர�ோமானிய வணிகர்கள் க�ொள்முதல் செய்ததும் நடந்திருக்கிறது. இப்படி வரும் கிரேக்க மற்றும் ர�ோமானிய வணிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் தமிழக கடற்கரை பகுதி முழுவதிலும் கட்டப்பட்டிருந்தது. இதற்கான மிக சிறந்த த�ொல்லியல் ஆதாரம் பாண்டிசேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு. சரக்குளை க�ொள்முதல் செய்ய தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வரும் கிரேக்க ர�ோமானிய கப்பல்களும் மூட்டை மூட்டையாக 5
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
தங்க மற்றும் வெள்ளி ப�ொருட்களை க�ொண்டு வரும். (சங்க இலக்கியங்கள் கிரேக்கர்களையும் ர�ோமானியர்களையும் யவனர்கள் என்று குறிப்பிடுகின்றன). மூட்டை மூட்டையாக என்று ச�ொல்வது நிச்சயமாக உயர்வு நவிர்ச்சிக்காகவ�ோ அல்லது மிகைப்படுத்தி ச�ொல்ல வேண்டும் என்று ச�ொல்வதற்காகவ�ோ பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. மூட்டை மூட்டையாக தங்கமும் வெள்ளியும் வந்தன என்பதுதான் உண்மை. இதற்கு கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான ஸ்டிராப�ோ மற்றும் தாலமி ப�ோன்றவர்களே ப�ோதுமான சாட்சி. தங்கள் நாட்டு (கிரேக்கம்) தங்கமும் வெள்ளியும் மலை மலையாக தமிழ் வணிகர்கள் மூலம் தமிழகத்திற்கு செல்வதாக அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு காரணமாக அவர்கள் குறை கூறுவது அவர்கள் நாட்டு பெண்களை. லினன் ஆடைகள் மீதும், தமிழக நறுமண மற்றும் கலை ப�ொருட்களின் மீதும் அவர்களுக்கு இருந்த பைத்தியமே அவைகளை வாங்க வேண்டி தங்கத்தையும் வெள்ளியையும் தண்ணீராக வாறி இறைக்க ச�ொன்னது என்று ஆத்திரம் ப�ொங்க புலம்புகிறார்கள். மூட்டை மூட்டையாக தங்கத்துடனும் வெள்ளியுடனும் நாடு திரும்பும் தமிழ் வணிக த�ோணிகள் கடலில் மிதந்து வரும் தங்க மற்றும் வெள்ளி வயல்களுக்கு ஒப்பானவைதானே. அலுங்காமல் குலுங்காமல் கடலில் பயணித்து வரும் புதையல்களை பேராசை பிடித்த மனங்களுக்கும் குறுக்கு வழியில் செல்வமும் செல்வாக்கும் பெற்றுவிட துடிக்கும் மனங்களுக்கும் விட்டு வைத்துவிட த�ோன்றுமா என்ன. பிறகு என்ன கடற்கொள்ளையை த�ொடங்கிவிட வேண்டியதுதானே. நாடு திரும்பும் தமிழக த�ோணிகள் மாத்திரமல்ல தமிழகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல்களும் புதையல்கள்தான் கடற்கொள்ளையர்களுக்கு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அரேபிய கடலில் கடற்கொள்ளையில் ஈடுபட்டு அழிச்சாட்டியம் செய்தவர்கள் கடம்பர்கள் என்று குறிப்பிடுகிறார் பதிற்றுபத்தின் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார். அன்றைக்கு வெள்ளை தீவுகள் என்று அழைக்கப்பட்ட இன்றைய இலட்ச தீவு கூட்டங்களை தலைமை இடமாக க�ொண்டு கடம்ப கடற்கொள்ளையர்கள் 6
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
7
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
8
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
9
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
இயங்கியிருக்கிறார்கள். மேலும் சேர நாட்டிற்கு (இன்றைய கேரளம்) வடக்கிலிருந்த கடம்ப நாடும் அவர்களின் ஆளுகைக்குள் இருந்தது. இலட்ச தீவுகளில் பதுங்கி இருக்கும் அவர்கள் மூட்டை மூட்டையாக தங்கம் மற்றும் வெள்ளியுடன் வரும் த�ோணிகளை துரத்தி சென்று தாக்கி தங்க மற்றும் வெள்ளி மூட்டைகளை தங்களுடைய த�ோணிகளுக்கு மாற்றிக்கொண்டு வணிகர்களின் த�ோணிகளை நடுகடலில் வைத்து எரித்து கடலுக்குள் மூழ்கடித்துவிடுவதை வாடிக்கையாக செய்திருக்கிறார்கள் கடம்பர்கள்.
தமிழகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் அரேபிய கப்பல்களையும் வழி மறித்து தாக்கி அவைகளின் சரக்குகளை எடுத்துக்கொண்டு அவைகளையும் க�ொலுத்தி மூழ்கடித்திருக்கிறார்கள். தங்கமும், வெள்ளியும், வணிக சரக்காகவும் க�ொள்ளையடித்த ப�ொருட்களை கடம்ப நாட்டின் உள்ளூர் சந்தைகளிலும் அரேபிய துறைமுக சந்தைகளிலும் விற்றிருக்கிறார்கள். கருப்பு சந்தைதான். கடம்ப கடற்கொள்ளையர்கள் உருவாக்கிய கருப்பு சந்தை அரேபிய துறைமுகங்களிலும் தென்னிந்திய துறைமுகங்களிலும் அவர்களுக்கு நிறைய உளவாளிகளை ஏற்படுத்தி க�ொடுத்தது. எந்த 10
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கப்பலில் என்ன வருகிறது, எவ்வளவு வருகிறது, எப்பொழுது துறைமுகத்தை விட்டு கிளம்ப இருக்கிறது, எப்பொழுது துறைமுகத்தை வந்தடையும் என்கிற மிக முக்கிய தகவல்களை அந்த உளவாளிகளின் மூலமே அறிந்துக�ொண்டார்கள் கடம்பர்கள். அடிக்கும் க�ொள்ளைகளில் கணிசமான பங்கு உளவாளிகளுக்கு க�ொடுக்கப்பட்டது. அவர்களுக்கு க�ொடுக்கப்பட்ட வாக்கின்படி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்த அனைத்து நாட்டு கடற்கொள்ளையர்களிடமும் காணப்பட்ட ப�ொதுவான தன்மை இது. தங்களுக்கு உளவு ச�ொல்பவர்களுக்கும், தங்களின் ப�ொருட்களை கள்ள சந்தையில் வாங்கும் வியாபாரிகளுக்கும் க�ொடுக்கும் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றிவிடுவது. க�ொடுத்த வாக்கு தவறாமல் பங்கு த�ொகை வந்துவிடும் என்பதால் பெரும் அளவில் தங்கமும் வெள்ளியும் கடலில் வரும்போது அந்த தகவல் கணகச்சிதமாக கடம்ப கடற்கொள்ளையர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஒரு சில உள்ளூர் துறைமுக ஊழியர்களும் கூட கடம்ப கடற்கொள்ளையர்களுடன் கூட்டணியில் இருந்திருக்கிறார்கள். இந்த வலைப் பின்னலில் இருந்த அனைவருக்கும் செல்வம் க�ொட்டோ க�ொட்டு என்று க�ொட்டி தீர்த்திருக்கிறது. இது தென்னிந்திய வணிகர்களுக்கு தலைவலியை அல்ல உயிர் வலியையே க�ொடுக்க கடம்ப கடற்கொள்ளையர்களை அடக்காவிட்டால் வணிகத்தை முற்றிலுமாக நிறுத்திவிடுவது என்கிற முடிவிற்கு வந்து சேர்ந்தார்கள். இந்த விசயம் அப்போது சேர நாட்டின் அரசனாக இருந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காதுகளுக்கு செல்ல கடம்ப கடற்கொள்ளையர்களுக்கு எதிரான மிகப்பெரும் படையெடுப்பு ஒன்று திட்டமிட்டப்பட்டது. ஒரே நேரத்தில் கடலிலும் நிலத்திலும் கடம்பர்களை எதிர்கொண்டு அவர்களை நிர்மூலமாக்குவது என்று ப�ோர் திட்டம் வகுக்கப்பட்டது. இன்றைய மங்களூர் பகுதியில் த�ொடங்கிய கடம்ப நாட்டை தாக்க இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் படையுடன் கிளம்ப, கடலில் கப்பல் படையுடன் இருந்த கடம்ப கடற்கொள்ளையர்களை கடலில் வைத்து சுற்றி வளைத்து அடிக்க நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் கப்பல் படையுடன் 11
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கிளம்பினான். இலட்ச தீவுகளில் இருந்த கடம்ப க�ொள்ளையர்களின் தலைமையிடத்தை துடைத்தழிக்க நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன் (சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன். அதாவது செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் நெடுஞ்சேரலாதனின் மகன்கள்) மற்றொரு கப்பல் படையுடன் கிளம்பினான். நெடுஞ்சேரலாதனின் மும்முனை தாக்குதலுக்கு முன்பாக கடற்கொள்ளையர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. கடம்ப கடற்கொள்ளையர்களின் ஆட்டம் முற்றிலுமாக முடிவுக்கு க�ொண்டு வரப்பட்டது. நெடுஞ்சேரலாதனின் வெற்றி குறித்து குமட்டூர்க் கண்ணனார் இப்படி விவரிக்கிறார், “வரைமருள் புணரி வான்பிசிர் உடைய, வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல் ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு...” “பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர் நார்அரி நறவின் ஆர மார்பின், ப�ோர்அடு தானைச் சேர லாத!” (பதிற்றுப்பத்து 2: 1-16) எனவும், “துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக் கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை” (பதிற்றுப்பத்து 17: 4-5) எனவும் “இருமுந்நீர்த் துருத்தியுள் முரணிய�ோர்த் தலைச்சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேர லாதன் “ (பதிற்றுப்பத்து 20 :2-5) 12
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
ச�ோழர்களின் கடல் பகுதியான கிழக்கு கடல் பகுதியிலும் கடற்கொள்ளையர்கள் இருந்திருக்கவேண்டும். மலேசிய வளைகுடாவை மையமாக க�ொண்டு அவர்கள் இயங்கியிருக்கவேண்டும். முற்கால ச�ோழ அரசர்கள் அவர்களை அழித்து ஒழித்திருக்கவேண்டும். ஆனால் இது குறித்த எந்த ஒரு தகவலையும் சங்க இலக்கியங்களில் இருந்து நம்மால் பெற முடியவில்லை. இது த�ொடர்பான த�ொல்லியல் ஆதாரங்கள் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருந்தோ அல்லது மலேசிய கடற்கரை பகுதிகளில் இருந்தோ கிடைக்கும் வேலையில் அதிலிருந்து மேலும் பல வரலாற்று தகவல்களை பெற முடியும். ர�ோம வணிக கப்பல்கள் தமிழகத்தின் தென் மேற்கு கடல் பகுதியில் கடம்ப க�ொள்ளையர்களிடம் சிக்கி சீரழிந்ததைப் ப�ோல மத்தியத்தரை கடல் பகுதியில் உள்நாட்டு கடற்கொள்ளையர்களிடம் அகப்பட்டும் அழிவுகளை சந்தித்திருக்கிறது. ஜூலியஸ் சீசருடன் த�ொடர்புடைய கடற்கொள்ளை சம்பவம் ஒன்று ர�ோமானிய எழுத்து வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. மத்தியத்தரைக்கடல் பகுதியில் கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலிருந்தே கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்றைய துருக்கியின் தென் கிழக்கில் மத்தியத்தரைகடல�ோரம் இருந்த சிலிசியாவை மையமாக க�ொண்டு அன்றைய ர�ோமானிய கடற்கொள்ளையர்கள் இயங்கினார்கள்.
13
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
த�ொடக்கத்தில் மூன்று கப்பல்களை மாத்திரமே வைத்து இயங்கிய அவர்கள் அதிக பாதுகாப்பில்லாத சிறிய இரக வணிக கப்பல்களை குறிவைத்து தாக்கிக்கொண்டிருந்தார்கள். ர�ோமானிய வணிகர்களிடையே இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாத காரணத்தால் மத்தியத்தரைக்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் இருப்பு அவ்வளவாக கண்டுக�ொள்ளபடாமலேயே இருந்தது. மேலும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் ர�ோமானிய பேரரசு பலகீனமடைந்திருந்ததும் இதற்கு காரணம். மேரியசும் (Marius) ஸ்சுல்லாவும் (Sulla) தங்களுக்குள் அடித்துக்கொண்டு ர�ோமானிய அரசாங்கத்தை இரண்டாக உடைத்திருந்தார்கள். தங்களுக்கான அதிர்ஷ்ட காற்றை நன்றாக பயன்படுத்திக்கொண்ட கடற்கொள்ளையர்கள் தங்களின் பலத்தை க�ொஞ்சம் க�ொஞ்சமா பெருக்கி பெரிய வணிக கப்பல்களை தாக்க த�ொடங்கினார்கள். தங்கமும் வெள்ளியும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடம் புகழங்கக் கூடிய நிலை. ஒரு படி மேலே ப�ோய் பயணிகள் ப�ோக்குவரத்து கப்பல்களையும் துரத்தி சென்று தாக்கி பயணிகளிடமிருந்து க�ொள்ளையடிப்பதும் நடந்தது. செல்வாக்கு மிக்க பயணிகளை பணயமாக பிடித்து வைத்துக்கொண்டு அவர்களின் உறவினர்களிடமிருந்து அதிக தங்கத்தை கரப்பது கடற்கொள்ளையர்களுக்கு கணிசமான இலாபத்தை தந்தது. பயணிகள் ப�ோக்குவரத்து கப்பல் ஒன்றை துரத்தி சென்று தாக்கிய சமயம் ஒன்றின் ப�ோது முக்கிய பயணி ஒருவர் அவர்களிடம் சிக்கினார். முதலில் அந்த பயணி யார் என்பது அவர்களுக்கு தெரியாவிட்டாலும் அந்த பயணியுடன் ஏகப்பட்ட சேவகர்கள் இருந்ததை க�ொண்டு செல்வாக்கு மிக்க ஆள் என்பதை உணர்ந்து பணய கைதியாக பிடித்து வைத்துக்கொண்டார்கள். அவர்களிடம் பணய கைதியாக சிக்கிய அந்த பயணி அடுத்த ர�ோமானிய பேரரசாக வர இருந்த ஜூலியஸ் சீசர் (Julius Caesar). கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய சமயத்தில் சீசர் பித்தீனியாவிலிருந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞன். ர�ோமிலிருந்தால் ஸ்சுல்லா தன் கதையை முடித்துவிடலாம் என்கிற முன்னெச்சரிக்கை காரணமாக ர�ோமை விட்டு வெளியேறி பல 14
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
ஆண்டு காலம் பித்தீனியாவில் தஞ்சமடைந்திருந்த சீசர் ர�ோமின் அதிகார சண்டையில் பங்கெடுத்துக்கொள்ள நாடு திரும்பிய வழியில் இது நடந்தது. தங்கம் கரக்க முடியும் என்று தெரியும் பயணிகளை மாத்திரம் உயிருடன் விட்டுவிட்டு மற்றவர்களின் கைகளை பின்புறமாக இழுத்து கட்டி கடலில் தூக்கி வீசிவிடுவதை வழக்கமாக க�ொண்டிருந்தார்கள் கடற்கொள்ளையர்கள். சீசருடன் வந்த மற்ற பயணிகளுக்கும் இதே முறையில்தான் ம�ோட்சம் க�ொடுக்கப்பட்டது. உயிருடன் விட சீசரிடம் 20 தாலந்துகள் பேரம் பேசப்பட்டது. இன்றைய மதிப்பில் இது பல இலட்சங்களை த�ொடும். சேர்த்து 30 தாலந்துகள் ப�ோட்டு 50 தாலந்துகளாக தருவதாக சீசர் ச�ொல்ல அவரை பிணையாக வைத்துக்கொண்டு பிணைய த�ொகையை எடுத்து வர அவருடைய சேவகர்களை ர�ோமிற்கு அனுப்பிவைத்தார்கள். ஒரு சில வாரங்களில் ச�ொன்னபடி 50 தாலந்துகள் வந்து சேர்ந்தது. சீசரை இராஜ மரியாதையுடன் விடுவித்தார்கள் கடற்கொள்ளையர்கள். வம்பை விலைக்கு வாங்குகிற�ோம் என்பது தெரியாமலேயே. மைலூட்டம் (Miletum) என்கிற துறைமுகத்தை அடைந்த சீசர் கரையேறியதும் ஏறாததுமாக கடற்கொள்ளையர்கள் மீது படையெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய த�ொடங்கிவிட்டார். அடுத்த ஒரு சில மாதங்களில் தேவையான கப்பல் படை தயாரானதும் மத்தியத்தரை கடலில் கடற்கொள்ளையர்களை தேடும் வேட்டை த�ொடங்கியது. மத்தியத்தரை கடல் பகுதி முழுவதிலும் சிதறி கிடக்கும் தீவுகளில் பல நாட்களுக்கு விடாமல் வேட்டை த�ொடர்ந்தது. மனித நடமாட்டம் அற்ற தீவு ஒன்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கடற்கொள்ளையர்கள் க�ொத்தாக அகப்பட்டார்கள். முதல் வேலையாக நங்கூரம் இடப்பட்டிருந்த அவர்களின் கப்பல்கள் அனைத்தும் எறித்து கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. கடற்கொள்ளையர்களுக்கு தப்பிக்க வழியே இல்லாமல் ப�ோனது. சீசர் அவர்களுக்கு க�ொடுத்த 50 தாலந்துகள் பணய த�ொகை திரும்ப பெறப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட கடற்கொள்ளையர்கள் டிராய் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 15
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
ர�ோமில் ஆட்சி இன்னும் அவர் கைகளுக்கு வந்திருக்காத காரணத்தால் அவர்களை சட்டத்தின்படி தண்டிக்கும் உரிமை அவருக்கு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு ஏற்ற தண்டனையை வழங்கும்படி ஆசிய மைனர் பகுதியிலிருந்த ர�ோமிற்கான ஆளுநர் ஜூனியசிடம் விண்ணப்பம் செய்தார் சீசர். இதில் சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் “பைசா பெறாது“ என்பதை நன்றாகவே அறிந்திருந்த ஜூனியஸ் தனக்கு நேரம் கிடைக்கும்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கழன்று க�ொண்டார். ர�ோமில் சீசருக்கும் அவசர அரசியல் வேலைகள் இருந்ததால் கடற்கொள்ளையர்களை டிராய் சிறையிலேயே விட்டு சென்றுவிட்டார். பெரும் வினையை அப்படியே விட்டு செல்கிற�ோம் என்பது தெரியாமலேயே இம்முறை சீசர் தவறு செய்தார். க�ொடுக்க வேண்டிய இடங்களில் க�ொடுக்க வேண்டியதை க�ொடுத்து சிறையிலிருந்த கடற்கொள்ளையர்கள் வெளியேறி தங்களுடைய தலைமையிடமான சிலிசியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். க�ொள்ளையடித்து சேர்த்து வைத்திருந்த ச�ொத்துகள் அனைத்தையும் முதலீடு செய்து சிசிலியாவை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தினார்கள். தங்களுடைய படையையும் பலப்படுத்தியவர்கள் இம்முறை கடல�ோடு நிறுத்தாமல் உள் நாட்டு பகுதிகளிலும் க�ொள்ளையடிக்க புகுந்தார்கள். சுமார் 400 நகரங்கள் சூறையாடப்பட்டதாக புளுட்டார்ச் (Plutarch) குறிப்பிடுகிறார். நிலப்பகுதிகளுக்கே இந்த கதியென்றால் கடலில் அவர்களிடம் சிக்கிய வணிக மற்றம் பயணிகள் ப�ோக்குவரத்து கப்பல்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை நம்முடைய அனுமானத்திற்கே விட்டுவிடுகிறார் புளுட்டார்ச். இந்த வெறியாட்டம் அனைத்தும் சீசர் அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானங்களுக்கான பழிக்கு பழியாக நடத்தப்பட்டது. சென்னட்டிற்கும் ர�ோமின் இராணுவ தலைமைக்கும் பேரரசு பதவியை பிடிப்பது த�ொடர்பாக அடித்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருந்ததால் கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களை அவர்கள் கண்டுக�ொள்ளவேயில்லை. தங்கமும் வெள்ளியும் அருவியாக க�ொட்டியது கடற்கொள்ளையர்களின் காட்டில். 16
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கடற்கொள்ளையின் ப�ோது ர�ோமானிய பயணிகள் சிக்கிவிட்டால் சீசர் மீது நடத்தப்பட வேண்டிய பழிவாங்கும் படலம் அவர்கள் மீது நடத்தப்பட்டது. கடற்கொள்ளையர்களின் ஆட்டம் அனைத்து எல்லைகளையும் மீறிப்போனது. ர�ோம் நகருக்கு வெளியில் இருந்து வர வேண்டிய அனைத்து உணவு தானிய சரக்கு கப்பல்களும் கடற்கொள்ளையர்களிடம் அகப்பட்டு சீரழிய ர�ோம் நகருக்குள் ஏறக்குறைய உணவு பஞ்சமே ஏற்படக் கூடிய நிலை வந்து சேர்ந்தது. அனைத்து சாலைகளும் ர�ோமிற்கு செல்கின்றன என்று பெருமை பேசியவர்களுக்கு கடல் வழிகளை அடைத்து பெரும் அவமரியாதைகளை ஏற்படுத்தினார்கள் கடற்கொள்ளையர்கள். இனியும் விட்டு வைத்தால் மூன்று வேலையும் திருப்தியாக சாப்பிட்டு பதிவி சண்டையில் ஈடுபட முடியாது என்பதை உணர்ந்துக�ொண்ட சென்னட்டும் இராணுவ தலைமையும் கடற்கொள்ளையர்களை முற்றிலும் ஒழித்து கட்டும் ப�ொறுப்பை பாம்பே தி கிரேட் (Pompey The Great)-டிடம் ஒப்படைத்தார்கள். இவர் சீசரின் எதிரணியில் அவருக்கு விர�ோதமாக வேலை செய்துக�ொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் படை திரட்டப்பட்டது. ஒரு இலட்சம் வீரர்களை க�ொண்ட காலாட் படை, ஐந்தாயிரம் குதிரைகள் க�ொண்ட குதிரை படை மற்றும் ஐந்நூறு கப்பல்கள் க�ொண்ட கப்பற்படை பாம்பேவிற்கு க�ொடுக்கப்பட்டது. ஒரு சமயத்தில் கடலிலும் நிலத்திலும் கடற்கொள்ளையர்களை எதிர்கொள்வது என்று முடிவு செய்தார் பாம்பே. கப்பல் படை பிரிக்கப்பட்டு மத்தியத்தரை கடல் பகுதி முழுவதிலும் நிறுத்தப்பட்டது. தாக்குதலின்போது மத்தியத்தரை கடலை கடந்து கடற்கொள்ளையர்கள் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக. முதல் ப�ொறியை கடலில் வைத்தப்பிறகு நிலப்பகுதிக்கு திரும்பினார். மத்தியத்தரை கடல் தீவு கூட்டங்கள் முழுவதிலும் மறைந்திருக்கும் கடற்கொள்ளையர்களை அணைய கட்டியதைப்போல பின் வாங்க செய்து அவர்களின் தலைநகரமான சிலிசியாவில் வைத்து ஒட்டும�ொத்தமாக அவர்களின் கதையை முடித்துவிடுவது என்பது பாம்பேவின் தாக்குதல் திட்டம். ர�ோமின் பெரும் படை தயாரிப்புகளை அறிந்த கடற்கொள்ளையர்கள் பாம்பே எதிர்பார்த்ததைப் ப�ோலவே தீவு 17
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கூட்டங்கள் அனைத்திலும் சென்று பதுங்கிவிட்டார்கள். பாம்பே படையெடுப்பை த�ொடங்கினார். மத்தியத்தரை கடலில் இருந்த சந்து ப�ொந்து தீவுகளையும் சல்லடையாக அறித்தெடுத்த பிறகே அடுத்த தீவிற்கு நகர்ந்தது ர�ோமானிய படை. கடற்கொள்ளையர்கள் தங்களின் பதுங்கிடங்களிலிருந்து வெளியேறி பின் வாங்க த�ொடங்கினார்கள். அவர்களுக்கு மத்தியத்தரை கடலை விட்டு வெளியேற வாய்ப்புகள் இல்லை என்பது தெரிந்துப�ோனது. சிலிசியாவிற்கு திரும்பி க�ோட்டைக்குள் பதுங்குவதை தவிர வேறு வழியேயில்லை என்பதை அவர்கள் உணர்ந்துக�ொண்டார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கென்று உருவாக்கிய சிலிசியா அவர்களுக்கான ப�ொறியாக மாறயிருப்பதை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. சிலிசியாவிற்குள் அனைத்து கடற்கொள்ளையர்களையும் அவர்களின் கப்பல் படையையும் அணை கட்டிய பிறகு ர�ோமானிய படை அவர்களை ஒட்டும�ொத்தமாக அழித்துவிட்டது.
18
பக்கநீரிங், பிரைவட்டியரிங்
ம
லபார் கடற்பகுதயில் (தென்னந்திய கடற்பகுதி) அழிச்சாட்டியம் செய்த கடற்கொள்ளையர்களை பார்ப்பதற்கு முன்பாக க�ொஞ்சமாக வரலாற்று முன்னுரைகளை தெரிந்துக�ொள்ள வேண்டியது அவசியம். முன்பே பார்த்ததை ப�ோல பதினைந்தாம் நூற்றாண்டின் இடை பகுதியில் துருக்கிய ஒட்டமான் பேரரசு கான்ஸ்டான்டிந�ோபிலை (இன்றைய இஸ்தான்புல்) கைப்பற்றிய பிறகு ஐர�ோப்பிய சந்தைகளுக்கான கிழக்காசிய நாடுகளின் ஏற்றுமதி ப�ொருட்கள் வரும் வழி முற்றிலுமாக அடைக்கப்பட்டது. சந்தையை காப்பாற்ற வேண்டிய அழுத்தம் ஐர�ோப்பிய நாடுகளின் மீது விழ கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் மாற்று வழிகளை கண்டுபிடிக்கும் முயற்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
எந்த மாற்று வழியாக இருந்தாலும் அது கடல் வழியாக மட்டுமேதான் இருக்க முடியும் என்பதும் உணரப்பட்டது. மற்ற ஐர�ோப்பிய நாடுகள் எங்கிருந்து த�ொடங்குவது எப்படி த�ொடங்குவது என்று அசமந்தமாக ய�ோசித்துக்கொண்டே இருக்க எதுவாக இருந்தாலும் முயற்ச்சி செய்துதான் பார்த்துவிடுவது என்கிற துணிச்சல் மற்றும் ஆர்வத்துடன் முதலில் களத்தில் இறங்கிய நாடுகள் ஸ்பேயினும் ப�ோர்ச்சுக்கலும். ஸ்பேயினுக்குள்ளேயே இருக்கும் குட்டி நாடு ப�ோர்ச்சுக்கல். மேற்கு பக்கம் பல ஆயிரம் கில�ோ மீட்டர்கள் விரிந்து கிடக்கும் அட்லாண்டிக் கடலை குறுக்காக கடந்தால் தென்னிந்தியாவும் தெற்காசிய நாடுகளும் வந்துவிடும் என்று ஒரு சிலரும், தெற்கு பக்கமாக பயணித்து ஆப்பிரிக்க கண்டத்தை கடந்தால் தென்னிந்தியா வந்துவிடும் என்று மற்றொரு குழுவும் நம்பிக்கொண்டிருந்தன. (அமெரிக்க கண்டத்தை உண்மையில் க�ொலம்பஸ்தான் 19
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கண்டுபிடித்தாரா என்பது குறித்தும் கண்டுபிடிப்பு பயணத்தை த�ொடங்குவதற்கு முன்பே அவருக்கு அமெரிக்க கண்டம் இருந்தது நன்றாகவே தெரிந்திருந்தது என்பது குறித்தும் மேலும் இதன் பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட வராலறுகள் குறித்தும் வாசிக்க எனது “தென்னமெரிக்க தமிழர்கள்” புத்தகத்தை வாசிக்கவும்). அட்லாண்டிக் கடலை குறுக்காக கடக்கும் திட்டத்திற்கு ஸ்பேயின் முதலீடு செய்ய, ஆப்பிரிக்க கண்டத்தை கடக்கும் திட்டத்திற்கு ப�ோர்ச்சுக்கல் முதலீடு செய்தது. அந்த நாடுகளின் முதலீடுகள் இலாபகரமாகவே அமைந்தன. ஸ்பெயின் தென்னமெரிக்க கண்ட நாடுகளில் பூர்வீக குடிகளை அழித்தொழித்த பிறகு தன்னுடைய காலனிய குடியேற்றங்களை நிறுவியது. இதன் பிறகு ஸ்பெயின் கண்டதெல்லாம் தங்க புதையல்கள்தான். இதற்கான ஒரு பருக்கை ச�ோறு உதாரணம் ஸ்பெயினின் செவேல் நகரிலிருக்கும் ஆவணங்களில் இருக்கிறது. மீச�ோ அமெரிக்க நாகரீகங்களில் ஒன்றான ஏஸ்டெக்கை வீழ்த்தி அதன் நகரங்களை சூறையாடி, கைப்பற்றிய வளங்களை சான்டா மரியா கப்பலில் ஏற்றி ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தார் ஸ்பானிய தலபதி க�ோர்டேஸ் (Cortes). ஸ்பெயினின் அரசரான சார்லஸ் V-க்கு பரிசாக சான்டா மரியா வந்து சேர்ந்தது. இது நடந்தது கி.பி. 1519-ல். கப்பலில் இருந்த தங்க மற்றும் வெள்ளி ப�ொருட்கள் பல நூறு கில�ோக்களை தாண்டும் அளவிற்கு இருந்தது. க�ோர்டேஸ் தான் சுருட்டியது ப�ோக எஞ்சியதை அனுப்பி வைத்ததே பல நூறு கில�ோக்களை தாண்டுகிறது என்றால் அமெரிக்க கண்டம் உண்மையில் தங்க சுரங்கமாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பேச்சு ஐர�ோப்பா முழுவதிலும் பரவியது. அமெரிக்க கண்டத்திலிருந்து ஸ்பெயினுக்கு வரும் கப்பல்களில் ஒன்றை தாக்கி கைப்பற்றினாலும் ப�ோதும் பல தலைமுறைகளுக்கு ச�ொத்து சேர்த்துவிடலாம் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் ஸ்பெயின் கப்பல்களை குறிவைத்து பலர் அட்லாண்டிக் கடலில் இறங்கினார்கள். அட்லாண்டிகில் கடற்கொள்ளை த�ொழில் த�ொடங்கியது. கரீபியன் தீவுகளை தங்களின் தலைமையிடமாக தேர்வு 20
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
செய்துக்கொண்டார்கள் கடற்கொள்ளையர்கள். இவர்களுக்கு வைக்கப்பட்ட பெயர் பக்கநீர் (Buccaneer). தென்னமெரிக்க கண்டத்தின் கிழக்கு கடற்கரை (அட்லாண்டிக் கடல் பகுதி) முழுவதையும் தங்களின் இயங்கு களமாக மாற்றிக்கொண்டார்கள். தங்கம் மற்றும் வெள்ளி ப�ொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்படும் எந்த ஒரு ஸ்பெயின் கப்பலாக இருந்தாலும் அது குறிவைக்கப்பட்டது. ஸ்பெயினின் காலனிய நகரங்களிலிருந்த ஒரு சில கவர்னர்களும், துறைமுக அதிகாரிகளும், ஊழியர்களும் பக்கநீர்களுடன் கைக�ோர்த்துக்கொண்டார்கள். என்றைக்கு, எந்த கப்பல், எவ்வளவு மதிப்பு க�ொண்ட ப�ொருட்களுடன் ஸ்பெயினுக்கு புறப்படுகிறது என்கிற உளவு தகவல் இவர்கள் மூலமே கடற்கொள்ளையர்களுக்கு கிடைத்தது. செய்யும் உளவு வேலைக்கு பங்கு இல்லாமல் ப�ோய்விடுமா என்ன.
வடிகட்டிய கடற்கொள்ளையர்கள் ஒருபுறம் என்றால் பிரைவட்டியரிங் (Privateering) மறுபுறம் தலை தூக்கியது. நிலப்பகுதியில் மாற்றி மாற்றி கூட்டு சேர்ந்து தங்களுக்குள் அடித்துக்கொண்ட (முக்கியமாக ஸ்பேயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து) நாடுகள் எதிரி நாடுகளின் கடல் வணிகத்தை சீர் குலைக்க பின்பற்றியது பிரைவட்டியரிங் முறை. இதை கண்ணும் கருத்துமாக செய்தது இங்கிலாந்து. எதிரிகளின் வணிக கப்பல்களை மாத்திரம் குறிவைத்து துரத்தி தாக்கி, அவைகளின் சரக்குகளை (தங்கம், வெள்ளி என்று எதுவாக இருந்தாலும்) கைப்பற்றிக்கொண்டு 21
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
அந்த கப்பல்களை முற்றிலுமாக எரித்து கடலுக்குள் மூழ்கடிப்பது பிரைவட்டியரிங். இதை செய்வதற்கு திறமை மிக்க கப்பல் கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான ஒப்பந்த ஆணை அவர்களிடம் தரப்படும். இதற்கு லெட்டர் ஆஃப் மார்க் (Letter of Marque) என்று பெயர். கடற்படையின் தலைமைய�ோ அல்லது அரசருக்கு உரிய நம்பிக்கையான மந்திரிகள�ோ பிரைவட்டியரிங் ஒப்பந்த ஆணையை தேர்வு செய்யப்பட்ட கேப்டன்களிடம் அளிப்பார்கள். கடற்படையின் தலைமை மற்றும் நம்பிக்கையான மந்திரிகள் மூலம் அரசர் நேரடியாக இதில் சம்பந்தப்படுவதால் பல சமயங்களில் இந்த நடவடிக்கை முற்றிலும் இரகசியாமக வைக்கப்பட்டும். ப�ோலியான, சித்தரிக்கப்பட்ட உயர் அதிகாரிகளின் பெயரில் ஒப்பந்த ஆணை வழங்கப்படுவதும் உண்டு. ஒப்பந்த ஆணையை பெரும் கேப்டனுக்கு பிரைவட்டியர் என்று பெயர். ஆணையை பெற்றுக்கொண்டு கடலில் இறங்கிய பிறகு அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் எழுத்தில் பதிவு செய்து தலைமைக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதும் எதிரிகளின் கப்பல்களில் இருந்து கைப்பற்றிய சரக்குகளில் அவர் பங்கு ப�ோக மற்ற அனைத்தையும் அப்படியே அரசரின் கருவூலத்திற்கு செலுத்திவிட வேண்டும் என்பதும் அதற்கான கணக்கு சரியாக காட்டப்பட வேண்டும் என்பதும் கேப்டன்களுக்கு க�ொடுக்கப்பட்ட மிக மிக முக்கிய நிபந்தனைகள். மூன்றில் ஒரு நிபந்தனையை மீறினாலும் அந்த கேப்டன் கடற்கொள்ளையராக (பைரட் – Pirate) கருதப்பட்டு தண்டிக்கப்படுவார். அந்த காலகட்டத்தில் கடற்கொள்ளையர்களுக்கு க�ொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனை தூக்கு. பிரைவட்டியரிங் விசயத்தில் சில அரசர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் காரியத்திலும் ஈடுபட்டார்கள். எதிரி நாட்டு வணிக கப்பல்களை தாக்குவதுடன் சேர்த்து தனது நாட்டு வணிகர்களின் கப்பல்களை தாக்குவதற்கும் கூட ஒப்பந்த ஆணைகளை வழங்கினார்கள். வலது கையில், கப்பல்கள் வைத்து கடல் வணிகத்தில் ஈடுபட வணிகர்களுக்கு ஒப்பந்தங்கள் (லைசன்ஸ்) வழங்கிவிட்டு, இடது கையில் அதே வணிக கப்பல்களை தாக்கி 22
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
சூறையாடும் பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களையும் வழங்கினார்கள். வணிகர்களை தங்களுடைய இறுக்கமான கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள சில அரசர்கள் இப்படி செயல்பட்டிருக்கலாம். ஸ்பெயின், ப�ோர்ச்சுக்கல் நாடுகளை த�ொடர்ந்து பிரான்சும், டச்சும், டானிஷும் அமெரிக்க மற்றும் தென் கிழக்காசிய காலனியாக்க நடவடிக்கைகளில் ஈடுபடத் த�ொடங்கின. இங்கிலாந்து, இந்த நாடுகளின் கடல் வணிகத்தை பலகீனப்படுத்தும் பிரைவட்டியரிங் வேலைகளிலேயே பெரும்பான்மையாக ஈடுபட்டிருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் அட்லாண்டிக் கடலில் நடைப்பெற்ற நூற்றுக் கணக்கான கடற்கொள்ளை சம்பவங்களில் சரி பாதியை இங்கிலாந்து நாட்டு பிரைவட்டியர்களே நிகழ்த்தியிருந்தார்கள். இருந்தும் ஸ்பெயினும் ப�ோர்ச்சுக்கலும், டச்சும், பிரான்சும் காலனியாக்கத்தில் வல்லரசுகளாக மாறிக்கொண்டிருந்தன. ஸ்பெயின் ஒரு படி மேலே ப�ோய் அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடல் வணிகத்தை ஒட்டும�ொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கியது. தென்னமெரிக்காவிலும் தெற்காசியாவிலும் இருக்கும் தன்னுடைய காலனிய நாடுகள், ஸ்பெயின் வணிக கப்பல்கள் மற்றும் வணிகர்களின் மூலமே உள்ளூர் சந்தைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை செய்ய வேண்டும் என்கிற சட்டத்தை க�ொண்டு வந்தது. மேலும் ஸ்பானிய வணிகர்கள் நிர்ணயிக்கும் விலையில்தான் சந்தையில் ப�ொருட்களின் க�ொள்முதலும் விற்பனையும் நடைப்பெற வேண்டும் என்றும் சட்டத்தை திருத்தியது. ப�ோர்ச்சுக்கல், பிரான்ஸ், இங்கிலாந்து, டச்சு மற்றும் டேனிஷ் நாடுகளுடைய கடல் வணிகத்தின் கழுத்தை முறித்து சந்தையை தனக்கான ஏகப�ோகமாக (Monopoly) மாற்றிவிடலாம் என்பது அதன் கணக்கு. தனக்கான ஆப்பை தானே கணக்காக வைத்துக்கொண்டது ஸ்பெயின். இதன் காரணமாக காலனிய நாடுகளில் கள்ள சந்தைக்கான வாய்ப்புகள் அதிகமானது. இது கரீபியன் தீவு கடற்கொள்ளையர்களுக்கு சுக்கிர திசையை திறந்துவிட்டது ப�ோலானது. தங்கம் மற்றும் வெள்ளி ப�ொருட்கள் செல்லும் வணிக கப்பல்களை மாத்திரம் குறிவைத்து 23
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
வேட்டையாடிக்கொண்டிருந்தவர்களுக்கு எந்த ஒரு சரக்கு கப்பலை வேட்டையாடினாலும் கைப்பற்றிய வணிக ப�ொருட்களை காலனிய நாடுகளின் கள்ள சந்தையில் விற்று பெரும் பணம் பண்ணிவிடலாம் என்கிற புதிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. ஸ்பானிய வணிகர்கள் ச�ொல்லும் க�ொள்ளை விலைக்கு ப�ொருட்களை வாங்குவதற்கு பதிலாக அதே ப�ொருட்களை விலை குறைவாக கள்ள சந்தையில் வாங்க த�ொடங்கினார்கள் காலனிய நாட்டு மக்கள். இது ப�ோதாதென்று ஸ்பெயினின் சந்தை ஏகப�ோகத்தை ஒழித்துகட்டும் நடவடிக்கையாக மற்ற ஐர�ோப்பிய நாடுகளும் சகட்டு மேனிக்கு பிரைவட்டியர்களை களத்தில் இறக்கின. கடற்கொள்ளையர்களும் பிரைவட்டியர்களுமாக சேர்ந்து ஸ்பானிய வணிக கப்பல்களை களமாடி தீர்த்தார்கள். கடற்கொள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்பெயின் திணறியது. அதே சமயத்தில் கரீபியன் தீவு கடற்கொள்ளையர்களின் மேல் செல்வம் அடைமழையாக க�ொட்டி தீர்த்தது. இது மேலும் பல கடற்கொள்ளையர்களை அட்லாண்டிக் கடல் பகுதிக்கு இழுத்தது. வேறு வழியே இல்லாமல் தன்னுடைய ஏகப�ோக சந்தை சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டது ஸ்பெயின். உள்நாட்டிலும் அரசியல் காலை வாறிவிட ஸ்பெயின் வல்லரசு அதன் அந்திம காலத்தை சந்தித்தது. இது பதினேழாம் நூற்றாண்டுகளின் த�ொடக்கம். கடல் வணிகம் மற்றும் காலனியாக்கத்தில் அடுத்த வல்லராசாக மாற இங்கிலாந்து காய்களை நகர்த்த த�ொடங்கியது. இங்கிலாந்து அரசர்கள் நிலப்பகுதியில் முடிந்த வரை தன்னுடைய பரம்பரை எதிரிகளுடன் சமாதனம் செய்துக்கொண்டு பதினெழாம் நூற்றாண்டின் த�ொடக்கத்தில் காலனியாக்க நடவடிக்கையில் இறங்கினார்கள். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிக உரிமம் வழங்கப்பட்டது. பிரைவட்டியரிங் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு மற்ற நாடுகளுடன் சேர்ந்து கரீபியன் தீவுகளில் இருந்த கடற்கொள்ளையர்களை வேட்டையாடும் செயலிலும் இறங்கினார்கள். ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கடற்படைகளின் கெடுபிடி அதிகமானதும் கரீபிய தீவுகளிலிருந்த கடற்கொள்ளையர்கள் ஆப்பிரிக்க மற்றும் மலபார் 24
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கடற்பகுதிகளுக்கு ஜாகையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். ஜாகை மாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. அந்த காரணத்தின் பெயர் கேப்டன் தாமஸ் டியூவ் (Captain Thomas Tew). பைரட் ரவுண்ட் (Pirate Round) முறையை அறிமுகப்படுத்தியவனாக அறியப்படும் கடற்கொள்ளையன். அட்லாண்டிக் கடல் பகுதியை விட்டுவிட்டு ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றிக்கொண்டு அரேபிய மற்றும் மலபார் கடல் பகுதியை அடைந்து அங்கு க�ொள்ளையடிப்பதை குறிப்பதே பைரட் ரவுண்ட்.
டியூவின் பூர்வீகம் இங்கிலாந்தா அல்லது வட அமெரிக்காவிலிருக்கும் ர�ோட்ஸ் தீவு கூட்டமா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் பிறந்திருக்கலாம் என்று ப�ொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடல�ோடும் த�ொழிலை அங்குதான் டியூவ் கற்றிருக்கவேண்டும் தெரிகிறது. உள்ளூரில் சச்சரவு செய்துவிட தண்டனையாக மேற்கிந்திய தீவுகளுக்கு தின கூலியாக அனுப்பி வைக்கப்படுகிறான். இது கி.பி. 1665-க்கும் 1680-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்திருக்கவேண்டும். தண்டை காலம் முடிவடைந்ததும் தாய் நாடு திரும்பாமல் கரீபியன் தீவுகளிலேயே தங்கி மாலுமி பணியில் சேர்ந்து க�ொள்கிறான். படிப்படியாக
உயர்ந்து
கேப்டன்
பதிவியை
அடைகிறான். 25
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
ச�ொந்தமாக கப்பலும் கைக்கு வந்துவிட பிரைவட்டியரிங் ஒப்பந்தங்கள் அவனை தேடி வருகின்றன. எந்த ஐர�ோப்பிய நாடு பிரைவட்டியரிங் ஒப்பந்தம் தருகிறத�ோ அந்த நாட்டுக்கு ஆதரவாக ஜமாய்கன் கடல் பகுதியில் எதிரி நாட்டு வணிக கப்பல்களை வேட்டையாடிக்கொண்டிருந்தான். அவன் பிரைவட்டியராக வேட்டையாடியது பெரும்பாலும் ஸ்பானிய மற்றும் பிரெஞ்சு வணிக கப்பல்களை. வெளி த�ோற்றத்திற்கு தான் ஒரு கண்ணியமான பிரைவட்டியராக்கும் என்று காட்டிக்கொண்ட அவன் வாய்ப்புகள் அமையும்போது கடற்கொள்ளையிலும் ஈடுபட்டான்.
விசயம் அறிந்தவர்கள் மத்தியில் அவனுக்கு இருந்த பட்டப்பெயர் “ர�ோட்ஸ் தீவு கடற்கொள்ளையன் (Rhode Island Pirate)”. வணிக மசாலா ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படும் கடற்கொள்ளை தலைவனை ப�ோல படு மிரட்டலான த�ோற்றம் க�ொண்டவனாக இல்லாமல் (ஹாலிவுட் திரைப்படங்களில் கடற்கொள்ளையர்கள் த�ொடர்பாக யதார்த்தத்தை மீறிய பல விசயங்கள் காட்டப்படுவது வழக்கம். அவை உண்மை கிடையாது. அவை குறித்து பிறகு பார்ப்போம்.) சராசரியான உயர்த்துடன் ஒடிசலான தேகத்தை உடையவனாக இருந்தான் கேப்டன் டியூவ். ம�ொடா குடிகாரன். க�ோபம் வந்துவிட்டால் வாயிலிருந்து வண்டை வண்டையாக வந்து விழும் கெடு கெட்ட வார்த்தைகள். அவனுடைய கப்பலில் வேலை செய்த மற்ற கடற்கொள்ளையர்களை 26
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
எப்பொழுதும் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் அவன் கில்லாடி. அப்படி இல்லாமல் ப�ோனால் கடற்கொள்ளையர்களுடன் குப்பை க�ொட்ட முடியாது. அவர்களுக்குள் அடிதடி சண்டைகளும், கலகங்களும், சதி திட்டங்களும் சர்வ சாதாரணம். க�ொஞ்சம் அசந்தாலும் கேப்டனையே க�ொன்று விட்டு கப்பலை கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்வார்கள். கேப்டன் டியூவிடம் இதெல்லாம் செல்லுபடியாகாது. ம�ொடா குடிகாரனாக இருந்தும் தனக்கு பிரைவட்டியரிங் ஒப்பந்த வேலை தருபவர்களுக்கு சற்று உண்மையாகவே நடந்து க�ொண்டான். இந்த தன்மையே மிகப் பெரும் பிரைவட்டியரிங் வாய்ப்பு ஒன்றை அவனிடம் க�ொண்டு வந்த சேர்த்தது. வட மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை பகுதியிலிருந்த பிரெஞ்சு காலனிய க�ோட்டையான க�ோரியை (இன்றைய செனகல் நாட்டிலிருக்கும் நகரம்) தாக்கி அதன் செல்வங்களை க�ொள்ளையடித்து வரும் பிரைவட்டியரிங் பணி அது. பெர்முடாவின் கவர்னராக இருந்த ஐசக் ரிச்சியர் இதற்கான ஒப்பந்த ஆணையுடன் ஒரு கப்பலையும் கேப்டன் டியூவிடம் அனுப்பி வைத்தார். அடிக்கும் க�ொள்ளையில் ஒரு பங்கு கவர்னருக்கு என்பது ஒப்பந்தம். இது குறித்து அறிந்த மேல்மட்டத்துடன் த�ொடர்பில் இருந்த சில செல்வந்தர்களும் இதில் முதலீடு செய்ய தீர்மானித்தார்கள். அவர்களின் முதலீடுகளுக்கு ஏற்ப அடிக்கும் க�ொள்ளையில் அவர்களுக்கும் ஒரு பங்கு என்று கூட்டாக முடிவானது. கேப்டன் டியூவிற்கான கமிஷன் த�ொகையின் ஒரு பகுதியாக அமிட்டி (Amity) என்கிற கப்பலும் வழங்கப்பட்டது. இது ஒற்றை பாய்மர கப்பல் (ஸ்லூப் – Sloop). பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டு ஐர�ோப்பிய கடற்கொள்ளையர்கள் பெருவாரியாக பயன்படுத்திய கப்பல் ஸ்லூப். வேகத்திற்கு பெயர்போனது ஸ்லூப் வகை கப்பல்கள். இவை இலகுரக கப்பல்கள் என்றாலும் அதிக எடை க�ொண்ட சரக்குகளை சுமந்து ச�ொல்ல கூடியவை. துரத்தலுக்கான (chasing) கப்பல் என்று வந்துவிட்டால் கடற்கொள்ளை தலைவனின் முதல் தேர்வு ஸ்லூப்பாகத்தான் இருக்கும். 27
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
தன்னுடைய தாக்குதல் வலிமையை அதிகப்படுத்திக்கொள்ள நினைக்கும் கடற்கொள்ளை தலைவன் தேர்ந்தெடுக்கும் கப்பல் பிரிக்கன்டீன் (Brigantine - இருக�ொடிமர கப்பல்). அதிக இட வசதி க�ொண்ட கனரக கப்பல் இது. அதிகப்படியான ஆட்களையும், பீரங்கிகளையும் இதில் பயன்படுத்த முடியும். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கான பல மாதங்களுக்கான உணவு ப�ொருட்களையும் குடிநீரையும் சேமித்து வைத்தக�ொள்ள இதில் இடவசதி உண்டு. அதேப�ோல பீரங்கிகளுக்கு தேவையான வெடிப்பொருட்களையும் தாராளமாக சேமித்துக்கொள்ளலாம். இவைகளை தாண்டி க�ொள்ளையடிக்கும் கில�ோ கணக்கான ப�ொருட்களையும் கூட இதில் சேமித்து வைக்க இட வசதியுண்டு. இது கனரக கப்பலாக இருந்தாலும் வேகமாக செல்ல கூடியது. பிரிக் (Brig) வகை கப்பல்கள் பிரிக்கன்டீன் கப்பல்களை ப�ோலவே இரு க�ொடிமரங்களை க�ொண்டவைகளாக இருந்தாலும் உருவத்தில் சற்றே பெரியவை. இதன் மற்றொரு வகை ஸ்கூனர். ப�ோர் கப்பல்கள். ஒவ்வொரு கடற்கொள்ளை தலைவனின் கனவாக இருக்க கூடியவை. கப்பல்களில் அரக்கன் இது. மற்ற கப்பல்களை தாக்கி அழிப்பது ஒன்றுக்கு மாத்திரமே உருவாக்கப்பட்டவை. அதேப�ோல எந்த ஒரு தாக்குதலையும் தாங்கிக்கொள்ளவும் 28
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
29
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கூடியவை. மிக அதிக அளவில் பீரங்கிகளையும், வீரர்களையும் உள்ளடக்கி பயணிக்க கூடியது. முன் பகுதியில் 4, பின் பகுதியில் 8, வலது பக்கவாட்டில் 56, இடது பக்காட்டில் 56 என்று ப�ோர் கப்பலில் 120 பீரங்கிகள் வரை ப�ொருத்த முடியும். பக்கவாட்டு பகுதிகளில் 56 பீரங்கிகளையும் ப�ொருத்த மூன்று அடுக்குள் இருக்கும்.
30
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
உருவில் மிக பெரியது என்பாதல் இதன் வேகம் மிக குறைவுதான். ப�ோர் கப்பல்களை உருவாக்கும் ப�ொருளாதார வசதி நாடுகளின் கப்பல் படைக்கும் பெரும் வணிக குழுக்களுக்கு மாத்திரமே வாய்க்க கூடியதாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்களுடைய ப�ோர் கப்பலை பிரிட்டிஷ் மேன் – ஓ – வார் (British Man-o-War) என்றும் ஸ்பானியர்கள் தங்களுடையதை கேலன் (Galleon) என்றும் அழைத்தார்கள். கடற்கொள்ளையர்களின் க�ொட்டத்தை ஒட்டும�ொத்தமாக ஒழித்துக்கட்ட ப�ோர் கப்பல்கள்தான் களத்தில் இறக்கப்பட்டன. பிரிகெட் (Frigate) இலகுரக ப�ோர் கப்பல். பக்கவாட்டு பகுதிகளில் இரண்டு அடுக்காக சுமார் 50 பீரங்கிகள் வரை ப�ொருத்த முடியும் இதில். கேலன் ப�ோலில்லாமல் இது உருவில் சற்று சிறியது என்பதால் வேகமாக செல்லும். கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க பிரிகெட்கள் வணிக கப்பல்களுக்கு துணையாக அனுப்பப்படும். முன்னும் பின்னும் பிரிகெட்கள் வர இடையில் வணிக கப்பல்கள் பயணம் செய்யும்.
கேப்டன் டியூவிடம் க�ொடுக்கப்பட்ட அமிட்டி 70 டன் எடை க�ொண்டது. எட்டு பீரங்கிகள் ப�ொருத்தப்பட்டிருந்தன. பயணத்திற்கு தேவையான உணவு ப�ொருட்களும் குடிநீரும் கையுடன் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அமிட்டியை பார்வையிட்ட டியூவிற்கு 31
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
வேறு ஒரு திட்டம் த�ோன்றியதாக தெரிகிறது. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
32
கேப்டன் டியூவ் & அமிட்டி
அ
மிட்டையை பார்வையிட்டப�ோதே அந்த திட்டம் டியூவிற்குள் உருவாகிவிட்டிருக்கவேண்டும் என்று த�ோன்றுகிறது. பிரைவட்டியரிங்கில் தன்னுடன் வேலை பார்த்துக�ொண்டிருந்த பழைய ஆட்களை விட்டுவிட்டு புதிய ஆட்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான் டியூவ். தப்பித் தவறியும் கூட நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டும் என்று ய�ோசித்துவிடாதவர்களாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது அவன் தேர்வு செய்து அறுபது கூட்டாளிகளின் இலட்சணமும். எல்லாம் பழம் தின்று க�ொட்டைப்போட்ட முன்னாள் கடற்கொள்ளை மாலுமிகள்.
ஆப்பிரிக்காவில் இருக்கும் ஆங்கிலேயே கம்பெனி ஒன்றின் சார்பாக அங்கிருக்கும் பிரெஞ்சு க�ோட்டையை தாக்க ப�ோகிற�ோம், வரும் க�ொள்ளை ப�ொருட்களை நமக்குள் பிரித்துக்கொள்வோம் என்று ச�ொல்லித்தான் அவர்களை தன்னுடன் பயணம் செய்ய தேர்வு செய்தான். அவனுடன் மற்றொரு பிரைவட்டியரிங் கப்பலும் அனுப்பப்பட இருந்தது. அதன் கேப்டன், ஜார்ஜ். திட்டம் செய்யப்பட்ட நாளில் இரு கப்பல்களும் பெர்முடா கடல் பகுதியிலிருந்து வடமேற்கு ஆப்பிரிக்க கடற்பகுதிக்கு பயணத்தை த�ொடங்கின. பயணம் த�ொடங்கிய ஒரு சில நாட்களுக்குள்ளாக கேப்டன் ஜார்ஜின் கப்பல் புயலில் சிக்கிக்கொண்டது. டியூவின் அமிட்டி புயலுக்கு தப்பிவிட இரண்டாம் கப்பலின் முக்கிய க�ொடிமரம் புயலில் அடிப்பட்டு முறிந்துவிட்டது. அந்த கப்பலால் மேலும் பயணத்தை த�ொடர முடியாது என்பதால் அது மீண்டும் மெர்முடாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது டியூவை கேட்பாரும் இல்லை மேய்ப்பாரும் இல்லை. இந்த பயணத்திற்கான உண்மையான திட்டத்தை தன்னுடைய சகாக்களிடம் விளக்கினான். 33
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
பிரெஞ்சு க�ோட்டையை தாக்கி அதில் வரும் ப�ொருளை பங்கு ப�ோட்டுக்கொள்வதை விட மலபார் கடற்பகுதியில் கடற்கொள்ளையில் ஈடுபட்டால் மிக அதிக ப�ொருள் கிடைக்கும் என்று சகாக்களுக்கு ஆசை காட்டினான். கடற்கொள்ளையை ப�ொறுத்தமட்டில் கேப்டன் முன் வைக்கும் திட்டத்திற்கு கப்பலில் இருக்கும் அனைவரின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் மிக முக்கியம். கடற்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்கத்திற்கும் பணத்திற்கும் மட்டுமே கட்டுப்படுவார்கள் என்பதால் அதை முன்னிறுத்தியே அவர்களிடம் வாங்க வேண்டிய வேலையை வாங்கியாக வேண்டும். கேப்டன் முன்வைக்கும் திட்டத்தில் அனைவரின் ஒப்புதலும் இல்லையென்றால் பிரச்சனைதான். கலகம் த�ொடங்கிவிடும். கலகத்தை த�ொடங்கி வைப்பவன் மற்றொரு கடற்கொள்ளை திட்டத்தை முன் வைத்து அதில் அதிக ப�ொருள் கிடைக்கும் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவுதான். ஏற்கனவே இருக்கும் கேப்டனின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் ப�ோய்விடும். பழைய கேப்டன் மீன்களுக்கு இறையாக வேண்டியதுதான். இது தெரியாமல் டியூவ் கடற்கொள்ளையர்களின் கேப்டனாக பல வருடங்களுக்கு குப்பை க�ொட்டியிருக்க முடியாதுதானே. திட்டம் முழுதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அமிட்டி மடகாஸ்கரை ந�ோக்கி பயணமானது. கடற்கொள்ளையின்போது ஒருவேளை சிக்கிக்கொண்டால் கையிலிருக்கும் பிரைவட்டியரிங் ஒப்பந்தத்தை காட்டி தப்பிவிடலாம் என்கிற தற்காப்பு திட்டத்தையும் டியூவ் மனதில் வைத்திருந்தான். பிரைவட்டியரிங் ஒப்பந்தம் வைத்திருப்பவர்கள் கடற்கொள்ளையில் ஈடுபட்டு கையும் களவுமாக அகப்பட்டு க�ொண்டாலும் அவர்களை கடற்கொள்ளையர்கள் என்று தண்டிக்க அப்போதைய ஐர�ோப்பிய நாடுகளின் சட்டத்தில் வழியில்லாமலிருந்தது. இதன் காரணமாகவே டியூவ் ப�ோன்ற கடற்கொள்ளையர்கள் சட்டப்படியான பிரைவட்டியரிங் ஒப்பந்தம் இல்லாமல் கடற்கொள்ளையில் ஈடுபடுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். அமிட்டி, 1693 ஏப்ரல் மாதம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. டியூவ் வடக்கு திசையை 34
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
சுக்கிர திசையாக கருதியிருக்க வேண்டும். வடக்கே செங்கடல் பகுதியிலிருந்து வேட்டையை த�ொடங்குவது என்று தீர்மானித்து மடகாஸ்கரிலிருந்து வடக்கு ந�ோக்கி பயணம் செய்தான். செங்கடல் பகுதியை அடைந்ததும் அமிட்டியின் வேட்டை த�ொடங்கியது. த�ொடக்கத்தில் டியூவ் எதிர்பார்த்ததைப் ப�ோல பெரிய வணிக கப்பல்கள் எதுவும் செங்கடல் கடற்கரை பகுதிகளிலிருந்து இந்திய கடற்கரைகளுக்கோ அல்லது இந்திய கடற்கரைகளிலிருந்து செங்கடல் பகுதிகளுக்கோ வரவில்லை. தனக்கான அந்த ஒற்றை புதையல் கப்பலை குறிவைத்து செங்கடல் பகுதியிலிருந்து இந்திய கடல் பகுதிக்கும் அங்கிருந்து மீண்டும் இங்குமாக பல நாட்களுக்கு சுற்றித் திரிந்துக�ொண்டிருந்தான் டியூவ். இப்படி அங்கைக்கும் இங்கைக்குமாக அலைந்தே சுமார் 22,000 மைல் இந்திய கடலில் பயணித்ததாக அவனுடைய குறிப்பு (லாக் புக் – log book) புத்தகம் ச�ொல்கிறது. தங்கத்தையும் வெள்ளியையும் உள்ளடக்கிய பெரிய வணிக கப்பலாக இருக்கலாம் என்று நினைத்து அவ்வப்போது சில வணிக கப்பல்களை துரத்தி அவைகளை க�ொள்ளையடிப்பதும் நடந்தது. பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டு அரேபிய வணிக கப்பல்களும் இந்திய வணிக கப்பல்களும் கடலில் சற்று மெதுவாக செல்ல கூடியவைகளாவே இருந்தன. மேலும் அவைகளுக்கான பாதுகாப்பு என்பதும் மிக குறைவாகவே இருந்தது. அப்படியே பாதுகாப்பிற்கு வந்த கப்பல்களும் கூட ஐர�ோப்பிய கப்பல்களின் பீரங்கிகளுக்கும், மஸ்கட் துப்பாக்கிகளுக்கும் முன் தாக்கு பிடிக்க முடியாமல் திணறின. கடற்கொள்ளையர்கள் மஸ்கட் துப்பாக்கி மற்றும் வாளுடன் சண்டையிட அரேபிய மற்றும் இந்திய வணிக கப்பல்களை பாதுகாத்த வீரர்கள் வெறும் வாளுடன் சண்டையிட்டார்கள். இதன் காரணமாக கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான எந்த ஒரு வணிக கப்பலையும் அவர்களால் பாதுகாக்க முடியாமலேயே ப�ோனது. டியூவிற்கு வேலை சுலபமாக முடிந்துக�ொண்டிருந்தது. ஆனால் திருப்தி மாத்திரம் ஏற்படவில்லை. பெரிய வேட்டை ஒன்றை நிகழத்தாமல் இந்திய கடல் பகுதியை விட்டு கிளம்புவதில்லை என்கிற முடிவுடன் வேட்டையை த�ொடர்ந்து க�ொண்டிருந்தான். 35
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
அந்த பெரிய வேட்டையும் ஒருநாள் அவன் கண்களில் சிக்கியது. செங்கடல் பகுதியை கடந்து அரேபிய துறைமுகம் ஒன்றை ந�ோக்கி சென்று க�ொண்டிருந்த படு பிரம்மாண்டமான முகலாய வணிக கப்பல் அது. டியூவும் அவனுடைய சகாக்களும் மலைப்போன்ற முகலாய வணிக கப்பல் ஒன்றை பார்ப்பது இதுவே முதல் முறை. பார்த்த ந�ொடியிலேயே அவர்களுக்கு தெரிந்துவிட்டது அவர்கள் தேடிக்கொண்டிருந்த புதையல் அதுதான் என்பது. அமிட்டி உடனடியாக அதை துரத்த த�ொடங்கிவிட்டது. முகலாய வணிக கப்பலுடன் ஒப்பிடுகையில் அமிட்டி சிறியதுதான் என்றாலும் அமிட்டியின் வேகம் அதன் கூடுதல் பலமாக இருந்தது. முகலாய வணிக கப்பலை நெருங்கியதும் தனது கப்பலின் க�ொடியை ஏற்றினான் டியூவ். அன்றைய வணிக கப்பல்களில் க�ொடிகள் மிக முக்கிய பங்கு செலுத்த கூடியவைகளாக இருந்தன. த�ொலைவில் வரும் கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது, பாதுகாப்பானதா, ஆபத்து ஏதும் விளைவிக்க கூடியதா என்பது ப�ோன்ற முடிவுகள் க�ொடிகளை க�ொண்டே எடுக்கப்பட்டன. பதுங்கியிருந்து வணிக கப்பல்களை துரத்தும் கடற்கொள்ளையர்கள் கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளின க�ொடிகளையும் தங்களின் வசம் வைத்திருந்தார்கள். தங்களுடைய கப்பலில் க�ொடியை ஏற்றுவதற்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தை ஜாலி ர�ோஜர் (Jolley Roger).
36
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
வணிக கப்பல்களை ஏமாற்றி அவைகளை தாக்குவதற்கான வாட்டமான இடத்திற்கு வரும் வரை எதாவது ஒரு நாட்டின் க�ொடியை ஏற்றுவது கடற்கொள்ளையர்களின் வழக்கம். பழக்கமான நாட்டின் க�ொடியாக இருக்கிறதே நம்மை நெருங்கி வருவதும் மற்றொரு வணிக கப்பல்தான் என்று ஏமாந்து எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் விட்டுவிட்டால் வேட்டையை சுலபமாக முடித்துவிடுவார்கள் கடற்கொள்ளையர்கள். வணிக கப்பல்களை தாக்கும் த�ொலைவிற்கு வந்த பிறகு தங்களின் க�ொடியை கடற்கொள்ளையர்கள் ஏற்றி பீதியை கிளப்ப முயற்ச்சி செய்வார்கள். முகலாய கப்பலை நெருங்கிய பிறகு அதை தாக்கும்படி தன்னுடைய சகாக்களுக்கு கட்டளையிட்டான் டியூவ். அமிட்டியிலிருந்த அனைத்து கடற்கொள்ளையர்களும் க�ொடிமரத்தில் த�ொங்கவிடப்பட்டிருக்கும் நீண்ட கயிறுகளை பிடித்து இழுத்து த�ொடங்கியபடி முகலாய வணிக கப்பலில் தாவி குதித்தார்கள். பாதுகாப்பிற்கென்று ஐநூறு வீரர்கள் இருந்தும் சிறிய எதிர் குரலும் கூட இல்லாமல் முகலாய வணிக கப்பல் டியூவின் சகாக்களிடம் சரண்டைந்தது. இதை டியூவே எதிர் பார்க்கவில்லை. முகலாய வணிக கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை வைத்து தன்னுடைய தரப்பில் சிறிய அளவிலாவது உயிர் சேதம் ஏற்படலாம் என்று அவன் நினைத்திருக்க சிறிய சிராய்ப்பு கூட இல்லாமல் அவனுடைய சகாக்கள் மலைப்போன்ற முகலாய வணிக கப்பலை கைப்பற்றிவிட்டிருந்தார்கள். பேச்சு மூச்சற்று மூர்ச்சையாகி விழக் கூடிய அளவிற்கான ப�ொருட்கள் அந்த வணிக கப்பலில் இருந்ததை டியூவும் அவனுடைய சகாக்களும் கண்டார்கள். மூட்டை மூட்டையாக மசாலா ப�ொருட்கள், பேரல் பேரலாக பட்டு துணி, டன் கணக்கில் யானை தந்தங்கள் என்று ஒவ்வொரு சேமிப்பு அறையும் அவர்களை அசறடித்தது. இவைகளை அள்ளி சென்று கள்ள சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்றாலே இலட்சங்களில் பணம் தேரிவிடும் என்று அவர்கள் திருப்தி அடைவதற்குள் மற்றொரு இன்ப வெடிகுண்டு அவர்களை தாக்கி மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தது. மற்றொரு சேமிப்பு அறையில் 1,00,000 பவுண்ட்களுக்கும் அதிகமான மதிப்பில் தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. 37
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
அனைத்து க�ொள்ளை ப�ொருட்களையும் வழித்து துடைத்து அமிட்டிக்கு இடம் மாற்றினார்கள் டியூவின் சகாக்கள். க�ொள்ளை ப�ொருட்களின் அதிகப்படியான எடையை தாங்க முடியாமல் அமிட்டி தள்ளாடியது. அதன் தள்ளாட்டத்தை ப�ொருட்படுத்தாமல் அதை வேக வேகமாக மடகாஸ்கரின் வடகிழக்கு தீவு கூட்டங்களில் ஒன்றான செயின்ட் மேரிக்கு செலுத்தினான். ஒருவேலை வேறு எதாவது முகலாய பாதுகாப்பு கப்பல்கள் தங்களை தாக்க பின் த�ொடர்ந்து வந்தால் திறந்த கடலில் பயணம் செய்து அகப்பட்டுக்கொள்ளாமல் மடகாஸ்கர் தீவு கூட்டங்களுக்குள் புகுந்து ஆட்டம் காட்டி தப்பிவிடலாம் என்பது அவனது திட்டம். ஆனால் அவன் எதிர்பார்த்ததை ப�ோல அவர்களை பின்தொடர்ந்து எந்த கப்பலும் வரவில்லை. இதை நன்றாக உறுதி செய்து க�ொண்ட பிறகு நீண்ட அலைச்சலின் காரணமாக பாதிப்படைந்திருந்த அமிட்டியை சரி செய்யும் வேலையில் இறங்கினான். அது ஒருபுறம் நடந்துக�ொண்டிருந்தப�ோதே க�ொள்ளையடித்த ப�ொருட்களை சகாக்களுடன் பங்கு பிரித்துக்கொண்டான். அவனுக்கு இரண்டு பங்கு, துணை கேப்டனுக்கும், கப்பலின் மருத்துவருக்கும் ஒன்றரை பங்கு மற்றவர்களுக்கு ஒரு பங்கு என்று பாகம் பிரிக்கப்பட்டது. மற்றவை பிரைவட்டியரிங் ஒப்பந்தம் க�ொடுத்த கவர்னருக்கும் அமிட்டி கப்பலை க�ொடுத்த செல்வந்தர்களுக்கும் பிரித்து வைக்கப்பட்டது. டியூவிற்கு ம�ொத்தமாக 8000 பவுண்ட்கள் பங்கு த�ொகையாக வந்து சேர்ந்தது. மற்றவர்களுக்கு 1000 முதல் 3000 பவுண்ட்கள் பங்கு த�ொகையாக வந்தது. ஒவ்வொருவரும் பல தலைமுறைகளுக்கு உட்கார்ந்தே சாப்பிட கூடிய அளவிற்கான பணம். அமிட்டி கப்பல் தயாரானதும் மீண்டும் ஒரு சுற்று மலபார் மற்றும் அரேபிய கடல் பகுதிக்கு சென்று வேட்டையாடலாம் என்பது டியூவின் அடுத்த கட்ட திட்டமாக இருந்தது. பல தலைமுறைகளுக்கு கையில் பணம் சேர்ந்துவிட்ட மிதப்பில் அவனுடைய சகாக்கள் இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. சிலர் நாடு திரும்பவேண்டும் என்று ச�ொல்ல 38
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
மற்றும் சிலர் மடகாஸ்கர் தீவிலேயே நிலையாக குடியேறிவிடுவது என்று முடிவு செய்தார்கள். டிசம்பர் மாத இறுதியில் (கி.பி. 1693-ம் வருட) அமிட்டி பழுதுகள் சரிபார்க்கப்பட்டு முழுதும் தயாரானது. முன்பே பார்த்ததை ப�ோல சிலர் மடகாஸ்கர் தீவிலேயே தங்கிவிட மற்றவர்களுடன் அமிட்டி அமெரிக்காவிற்கு புறப்பட்டது. ஐந்து மாதங்கள் கழித்து மெர்முடா கடல் பகுதியை அடைந்தது. அப்போது சூறாவளி அங்கே ஆட்டம் காட்டிக் க�ொண்டிருக்க வடக்கு கடல் பகுதிக்கு நகர்ந்து நியூப�ோர்ட்டை வந்தடைந்தது அமிட்டி. கடற்கொள்ளையில் அடித்த ப�ொருட்களை விற்பதற்கான புகழ்பெற்ற கள் சந்தை நியூப�ோர்ட். கடற்கொள்ளையர்களின் விருப்பத்திற்குரிய துறைமுகம். அமிட்டியிலிருந்த க�ொள்ளை ப�ொருட்கள் அனைத்தும் அங்கே விற்று தீர்க்கப்பட்டது. அள்ள அள்ள குறையாமல் வந்து க�ொண்டேயிருந்த அமிட்டியின் சரக்குகளை பார்த்து நியூப�ோர்ட் துறைமுக கள்ள சந்தை வாயடைத்து ப�ோனது. அனைத்தும் மலபார் மற்றும் அரேபிய கடல் பகுதியில் அடித்த சரக்குகள் என்று டியூவ் விளாவாரியாக தன்னுடைய இந்திய பெருங்கடல் கடற்கொள்ளையை பற்றி எடுத்து ச�ொல்ல கேப்டன் டியூவின் புகழ் அடுத்த ஒரு சில நாட்களில் சுற்றியிருந்த நகரங்களின் பேசு ப�ொருளாகிப்போனது. கடற்கொள்ளையில் அசகாய சூரர் என்கிற நிலைக்கு டியூவின் புகழ் உயர்ந்தது. கள்ள சந்தையில் ப�ொருட்களை விற்று பணத்தை வாரி சுருட்டிய பிறகு நியூ யார்க் துறைமுகத்திற்கு செல்வது என்று முடிவு செய்தான் டியூவ். நியூ யார்கில் அவனுடைய மனைவியும் மகள்களும் இருந்தார்கள். அவன் அமிட்டியை கிளப்புவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக மற்றொரு பிரைவட்டியரிங் ஒப்பந்தம் அவனை தேடி வந்தது. ஒப்பந்தத்தை க�ொடுத்தவர் உள்ளூர் கவர்னர் ஜான் க்ரேன்ஸ்டன். பிரெஞ்சு வணிக கப்பல்களின் கடல் வழிக்குள் நுழைந்து எதிர்படும் பிரெஞ்சு வணிக கப்பல்களை சூறையாட வேண்டும் என்பது ஒப்பந்தம் ச�ொன்ன பணி. இதற்கு டியூவிற்கு 500 பவுண்ட்கள் கமிஷன் த�ொகையாக தரப்பட்டது. ப�ோதா குறைக்கு க�ொள்ளையடிக்கும் சரக்கில் கணிசமான பங்கும் எடுத்துக்கொள்ளலாம் என்று ஊக்க த�ொகையும் தரப்பட்டது. சுக்கிர திசையில் அதிர்ஷ்ட சூறாவளி வீசினால் இப்படித்தான் 39
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
இருக்கும்போல. இந்த வேலையையும் முடித்துவிட்டு நியூ யார்க் ப�ோய் சேர்ந்தான் டியூவ். அங்கே அவனுக்கு இராஜ மரியாதை வரவேற்பு காத்திருந்தது. நகர வாசிகளுக்கு மத்தியில் டியூவ் புதிய நட்சத்திரமாக உயர்ந்திருந்தான். செல்வாக்கு மிக்க மனிதர்களின் விருந்துகள் மற்றும் கேளிக்கைகள் அனைத்திலும் டியூவிற்கும் அவனுடைய குடும்பத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நியூயார்க்நகரின்கவர்னராகஇருந்த பென்ஜமின்பிலெட்சர்தன்வீட்டு விருந்திற்கு டியூவை சிறப்பு விருந்தினராக அழைத்ததும் நடந்தது. டியூவை ப�ோல பல பிரைவட்டியரிங் கேப்டன்களை அவருக்கு தெரியும். பல பிரைவட்டியரிங் கேப்டன்களை புதிதாக உருவாக்கி அவரே வளர்த்துவிட்டும் இருக்கிறார். (எல்லாம் பிரைவட்டியரிங் மூலம் வரும் கமிஷன் மற்றும் க�ொள்ளை ப�ொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வரும் பங்கு பணத்திற்காகத்தான்) ஆனால் டியூவை ப�ோல பல தலைமுறைகளுக்கு ப�ோதுமான அளவிற்கு கடற்கொள்ளை செய்த பிரைவட்டியரிங் கேப்டன்கள் யாரையும் அவர் பார்த்ததில்லை. டியூவுடன் தனகிருந்த நட்பை மேலும் வலிமையானதாக ஆக்கிக்கொள்ள நியூ யார்க் நகர வீதிகளில் தன்னுடைய குதிரை க�ோச் வண்டியில் அவனுடன் உலா வருவதையும் த�ொடர் கதையாக்கினார் கவர்னர். பென்ஜமின் பிலெட்சர் மூலமாகவே அமிட்டி கப்பலை க�ொடுத்த செல்வந்தர்களுக்கான க�ொள்ளை பங்களையும், மெர்முடா கவர்னருக்கான பங்கையும் க�ொடுத்தனுப்பினான் டியூவ். அவர்களுக்கு க�ொடுக்கப்பட்ட பங்குகளின் அளவு பென்ஜமின் பிலெட்சரின் வாயை பிளந்து மூட வைத்தது. அன்றைய நாட்களில் சமூகத்தின் உயர்ந்த மற்றும் பணம் படைத்த குடிமகன்களாக பார்க்கப்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் வணிகர்களின் வருடாந்திர ஊதியமே கூட டியூவின் சக கூட்டாளிகள் பெற்ற பங்கு த�ொகையை விட பல மடங்கு கீழேதான் இருந்தது. ச�ொல்லப்போனால் இங்கிலாந்து பிரபுக்களுக்கு க�ொடுக்கப்பட்ட வருடாந்திர ஊதியத்திற்கு நிகரானது டியூவின் சகாக்கள் பெற்ற பங்கு த�ொகை. அப்படியென்றால் டியூவ் பெற்ற பங்குகின் அளவு எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது ச�ொல்லியும் தெரிய வேண்டியதில்லைதானே. 40
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இது மற்ற கடற்கொள்ளையர்களையும், கடற்கொள்ளையனாக மாறினால் என்ன என்று ய�ோசனையில் இருந்தவர்களையும் இந்திய பெருங்கடலை ந�ோக்கி துரத்தியது. ஒருவர் இருவர் என்றில்லை படை படையாக புற்றீசல் ப�ோல நியூ யார்க், ப�ோஸ்டன், சார்ல்ஸ்டன், பிரிஸ்டோல், இலண்டன் நகரங்களிலிருந்து கிளம்பி இந்திய பெருங்கடலை ம�ொய்த்தார்கள். எல்லாம் க�ொள்ளையடிக்கத்தான். ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருந்துவிடுமா என்ன. இந்திய பெருங்கடலில் இரண்டாவது முறையாக கடற்கொள்ளையில் ஈடுபடுவது என்று முடிவு செய்தார்கள் கேப்டன் டியூவும் கவர்னர் பென்ஜமின் பிலெட்சரும். பிரைவட்டியரிங் ஒப்பந்தத்தை கவர்னர் ஏற்பாடு செய்து தர நவம்பர் 1694-ல் அமிட்டி இந்திய பெருங்கடலுக்கு புறப்பட தயாரானது. இம்முறை மேலும் இரண்டு கப்பல்கள் டியூவுடன் அனுப்பப்பட தயாராக இருந்தன. இம்முறை டியூவுடன் செல்ல கடற்கொள்ளையர்கள் தங்களுக்குள் முட்டி ம�ோதிக்கொள்ளும் நிலை. டியூவ் தன்னுடன் முப்பது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டான். அமிட்டிய�ோடு சேர்த்து மூன்று கப்பல்களும் புறப்பட்டன. முன்பு ப�ோலவே புறப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே அட்லாண்டிக் கடலில் சூறாவளி வந்துவிட மற்ற இரண்டு கப்பல்களும் சூறாவளியில் சிக்கி பழுதடைந்தன. அவை திருப்பி நியூ யார்க் துறைமுகத்திற்கே அனுப்பப்பட்டன. அடுத்த நான்கு மாதங்களில் அமிட்டி மடகாஸ்கரை தலைமையிடமாக க�ொண்டு மலபார் கடல் பகுதியிலும் செங்கடல் பகுதியிலும் சுற்றி திரிய த�ொடங்கியது. சென்ற முறை ப�ோலில்லாமல் இந்த முறை இந்திய பெருங்கடல் ஐர�ோப்பிய கடற்கொள்ளையர்களால் நிரம்பி வழிந்தது. அனைவரும் சட்டபடியான பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களை கையில் வைத்துக்கொண்டு கடற்கொள்ளை செய்துக�ொண்டிருந்தார்கள். ஆளுக்கொரு பக்கம் இயங்கினால் உருப்படாது என்று தீர்மானித்த சில கடற்கொள்ளை கேப்டன்கள் ஒன்று சேர்ந்து வேட்டையில் ஈடுபடுவது என்று முடிவு செய்தார்கள். டியூவுடன் கூட்டு சேர்ந்ததில் மிக முக்கிய கடற்கொள்ளை கேப்டன், கேப்டன் ஏவ்ரி. இவனை குறித்து அடுத்த அத்தியாயத்தில் விரிவாக 41
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
பார்ப்போம். மற்றவர்கள் கேப்டன் ஜ�ோசப் பார�ோ, ப�ோர்ட்ஸ்மவுத் அட்வன்சர் கப்பலின் கேப்டன். ரிச்சர்ட் வான்ட், டால்பின் கப்பலின் கேப்டன். வில்லியம் மேய்ஸ், பெர்ல் கப்பலின் கேப்டன். தாமஸ் வேக், சுசானா கப்பலின் கேப்டன். இந்த க�ொள்ளை கூட்டணி உருவானது 1695 ஆகஸ்டில். செங்கடலின் நுழை வாயிலாக இருந்த பாப்-எல்-மன்டாப் வளைகுடாவை மையமாக வைத்து தங்களுக்கான வேட்டையை தேடி ர�ோந்து பணியில் ஈடுபடுவது என்று அவர்களுக்குள் முடிவானது. மிக சரியாக இந்த நாட்களில்தான் இங்கிலாந்தில் டியூவ் மற்றும் ஏவ்ரியை பிடிப்பதற்கான திட்டம் தயாரானது. இதற்கு இங்கிலாந்து அரசர் வில்லியம் – III தன்னுடைய ஒப்புதலை தந்தார். இவர்களை பிடிப்பதற்கான கப்பலின் தலைவனாக நியமிக்கப்பட்டவன் கேப்டன் வில்லியம் கிட். கடற்கொள்ளையர்களை துரத்தி பிடித்து கைது செய்து இங்கிலாந்திற்கு க�ொண்டு வர அனுப்பப்பட்ட கேப்டன் வில்லியம் கிட்டே கடற்கொள்ளையனாக மாறியதை இனி வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.
மேலும் பல வார தேடல்களுக்கு பிறகு செப்டம்பர் மாத இறுதியில் டியூவின் கூட்டணி எதிர்பார்த்த அந்த பெரிய வேட்டை அவர்களின் கண்களில் பட்டது. மலை ப�ோன்ற முகலாய கப்பல். கூட்டணி அந்த கப்பலை துரத்த த�ொடங்கியது. இரவு வந்தவுடன் முகலாய கப்பல் அவர்களின் கண்களிலிருந்து மறைந்துவிட்டது. இருந்தும் விடாமல் 42
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
அதை துரத்தி சென்றார்கள். அடுத்த நாள் காலையில் முகலாய கப்பல் மீண்டும் அவர்களின் கண்களில் தென்பட்டது. டியூவ் முன்னால் துரத்தி செல்ல மற்ற கேப்டன்கள் அவனுக்கு பாதுகாப்பு தருவதை ப�ோல பக்கவாட்டில் வந்து க�ொண்டிருந்தார்கள். முகலய கப்பலுக்கு அருகில் சென்றதும் டியூவ் அமிட்டியின் க�ொடியை ஏற்றினான். சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் முதல் நாள் மாலையிலிருந்தே ஆறு கப்பல்கள் பின்னால் விரட்டி வருவதை கவனித்துவிட்டிருந்த முகலாய கப்பல் தக்க ஏற்பாடுகளுடன் தயாராகவே இருந்தது. அது வணிக கப்பல் அல்ல பயணிகள் கப்பல். ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற பயணிகளை ஏற்றி வந்த கப்பல். கப்பலில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மஸ்கட் துப்பாக்கிகளுடன் தயாராக இருந்தார்கள். பீரங்கிகளும் தயாராகவே இருந்தன. இதை டியூவ் எதிர் பார்க்கவில்லை. முதல் முறை ப�ோலவே காரியத்தை சுலபமாக முடித்துவிடலாம் என்றுதான் அவன் நினைத்திருந்தான். அமிட்டி முகலாய கப்பலின் பக்கவாட்டில் வந்தவுடன் முகலாய கப்பலில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் டியூவின் சகாக்களை பார்த்து சரமாரியாக சுட த�ொடங்கிவிட்டார்கள். ப�ோதா குறைக்கு பீரங்கி குண்டுகளும் இடைவெளி விடாமல் வெடிக்க த�ொடங்கின. அமிட்டி பலத்த தாக்குதலுக்கு உள்ளானது. டியூவின் ஆட்களால் முகலாய கப்பலுக்குள் தாவி குதிக்க முடியாதபடி மஸ்கட் துப்பாகிகள் குண்டுகளை ப�ொழிந்படி இருந்தன. பீரங்கி குண்டுகள் அமிட்டியை பதம் பார்த்தன. அமிட்டி குண்டுகளின் தாக்குதலில் அப்படியும் இப்படியும் தள்ளாடி சாய த�ொடங்கியது. அமிட்டியின் மேல் தளத்தில் நின்று தன்னுடைய ஆட்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்த டியூவின் அருகில் வந்து விழுந்து வெடித்து சிதறியது ஒரு பீரங்கி குண்டு. மேல் தளத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தூக்கி வீசப்பட்டான் டியூவ். அடுத்த சில நிமிடங்களுக்கு த�ொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் அமிட்டியை தாக்கிவிட்டு சற்றே ஒய்ந்தது. வெடி மருந்துகளின் வெண் புகை மண்டலம் கலைந்த பிறகு மேல் தளத்தில் தூக்கி வீசப்பட்டிருந்த டியூவை ந�ோக்கி தத்தி தவழ்ந்து அவனுடைய கூட்டாளிகள் வந்து சேர்ந்தார்கள். 43
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
தலைக்கு மேலே இன்னமும் துப்பாக்கி குண்டுகள் பறந்தபடியேதான் இருந்தது. டியூவின் முகம் முற்றிலும் கருகிவிட்டிருந்தது. வயிறு கிழிந்து குடல் முற்றிலுமாக வெளியே சரிந்துவிட்டிருந்தது. குத்துயிரும் குலை உயிருமாக இரத்த வெள்ளத்தில் கிடந்த டியூவ் சரிந்த குடலை தன்னுடைய கைகளில் தூக்கி பிடித்தபடி தனக்கருகில் வந்த சக்காக்களை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். அடுத்த சில ந�ொடிகளில் அவனுடைய உயிர் பிரிந்துவிட்டது. அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் முகலாய கப்பலின் பாதுகாப்பு படை வீரர்களிடம் சரணடைந்தார்கள்.
44
கேப்டன் ஹென்ரி ஏவ்ரி & பேன்சி
அ
டுத்த முக்கிய கடற்கொள்ளையனான கேப்டன் ஹென்ரி ஏவ்ரி (Captain Henry Every)-யை குறித்து பார்ப்பதற்கு முன்பாக பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டு கடற்கொள்ளையர்கள் குறித்து ப�ொதுவாக ச�ொல்லப்படும் மிகைப்படுத்தல்களை பற்றி பார்த்துவிடுவ�ோம். மிகைப்படுத்தல்களுக்கு மூல காரணமாக இருப்பவை ஹாலிவுட் வணிக மசாலா திரைப்படங்கள். இவை காட்டும் கடற்கொள்ளையர்கள் த�ோற்றத்தில் த�ொடங்கி ஆடைகள் வரை மிகைப்படுத்தல்களின் ம�ொத்த உருவமாக இருக்க கூடியவர்கள். யதார்த்தத்தில் கடற்கொள்ளையர்கள் இதற்கு முற்றிலும் மாறாகவே இருந்தார்கள்.
நீளமாக சடைபிடித்த முடி வளர்த்துக்கொண்டு, கை துண்டு இழுத்து கட்டிய தலையில் முக்கோண த�ொப்பியுடன், கருப்பு துணியால் ஒரு கண்ணை மூடி, த�ொள த�ொள ஆடைகளுடன், பூட்ஸ் அணிந்த கால்களுடன், ஒரு கையில் ரம் பாட்டிலுடனும் மற்றொரு கையில் கை துப்பாக்கியுடனும் காண்பதற்கு பீதியை கிளப்ப கூடியவர்களாக ஹாலிவுட் திரைப்படங்கள் உங்கள் மனதில் பதினாறாம் நூற்றாண்டு கடற்கொள்ளையர்கள் குறித்த சித்திரத்தை பதிய வைத்திருந்தால் அதை அழித்துவிடுங்கள். தேர்ந்த கடற்கொள்ளையர்களாக இருந்தவர்கள் ப�ொதுவாக நீளமான தலைமுடியை க�ொண்டிருக்கவில்லை. நீளமான தலைமுடி பாய்மர கயிறுகளில் சிக்கி விபத்துகளை உண்டாக்கிவிடும் என்பதால். அதேப�ோல பெரும்பான்மையான கடற்கொள்ளையர்கள் தலையில் கை துண்டை கட்டிக்கொண்டிருக்கவில்லை. முக்கோண த�ொப்பியை மாத்திரமே அணிந்திருந்தார்கள். அதுவும் கடுமையான வெயிலில் இருந்து தலையை பாதுகாத்து க�ொள்ள. அவர்களின் த�ொப்பில் 45
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
எலும்பு கூட சித்திரங்கள் எல்லாம் வரையப்பட்டிருக்கவில்லை. மேலும் கடற்கொள்ளையர்கள் காதுகளில் வகை வகையான கம்மல், ஜிமிக்கி, த�ோடுகளுடன் வலை வந்திருக்கவும் இல்லை. கழுத்தில் ம�ொத்தையான தங்க சங்கிலி மாத்திரம் அணிந்திருந்தார்கள். தங்க சங்கிலியில் தங்கத்தாலான பல் குத்தும் குச்சி த�ொடங்கி தங்க காசு வரை இணைத்து த�ொங்கவிட்டிருந்தார்கள். கடற்கொள்ளையர்களின் ப�ொதுவான உடையாக இருந்தது வெள்ளை நிற மேலாடையும் கருப்பு நிற கீழாடையும். அவையும் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்த வடிவமைப்பை க�ொண்டவை. பூட்ஸ் காலணிகளை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தியது கிடையாது. மிருங்களின் த�ோளில் செய்யப்பட்ட மெல்லிய காலணிகளையே பயன்படுத்தினார்கள். பல சமயங்களில் வெறுங்காலுடனேயே இருந்தார்கள். ரம் என்றில்லை ப�ோதை தரக் கூடிய எந்த திரவமாக இருந்தாலும் அதை எடுத்து உள்ளே தள்ளிவிடுவார்கள். இடுப்பில் எந்நேரமும் ஒன்றுக்கு மேற்பட்ட கை துப்பாக்கிகளும் (பிளின்ட்லாக் வகை) வாளும் (கட்லேஸ்) த�ொங்கியபடி இருக்கும். பைப் க�ொண்ட சுருட்டை எப்போதும் ஊதி தள்ளியபடி அவர்கள் திரிவார்கள் என்று சித்தரிக்கப்படுவதும் மிகைப்படுத்தல்தான். அதற்காக அவர்கள் புகைபிடிக்க மாட்டார்கள் என்பதில்லை. சுருட்டை மிக கவனமாகவே கையாள்வார்கள். கப்பலின் மேல் தளத்தில் இருக்கும்போதே புகை பிடிக்க முடியும். கப்பலின் உள் அறைகளில் இருக்கும்போது புகை பிடிப்பது தன் கப்பலுக்கு தானே க�ொள்ளி வைத்து க�ொள்வதற்கு சமமானது. டன் கணக்கில் துப்பாக்கி குண்டுகளுக்கான ரவையும், பீரங்கி குண்டுகளுக்கான ரவையும் இருக்கும் இடத்தில் யார்தான் புகைப்பிடிப்பார்கள். இப்படியான யதார்த்தமான கடற்கொள்ளையர்களுக்கு மத்தியில் விதி விலக்கு ப�ோன்றவன் கேப்டன் ஹென்ரி ஏவ்ரி. குடி பழக்கம் அற்ற, சுய ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் நிறைந்த ஆள். அதற்காக கடற்கொள்ளையர்களில் இவன் ஒரு தேவ தூதன் ப�ோலும் என்று நினைத்துவிட வேண்டாம். சூழ்ச்சிகள் நிறைந்தவன். தனக்கு வேண்டியதை கச்சிதமாக திட்டம்போட்டு சாதித்து க�ொள்ள கூடியவன். தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 46
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
குறுக்கே எது தடையாக வந்தாலும் அதை காலில் ப�ோட்டு அறைத்து தள்ளிவிட்டு முன்னேறி ப�ோய் க�ொண்டே இருக்க கூடியவன். சூழ்நிலை எவ்வளவு ம�ோசமாக இருந்தாலும் அதை பற்றி குறை கூறிக்கொண்டிருக்காமல் அந்த சூழ்நிலையை தன்னுடைய காரிய தேவைக்கு பயன்படுத்த தெரிந்தவன். சுய ஒழுக்கங்கள் அற்ற, பலகீன மனம் படைத்த, உறுதியில்லாத எளிய சக மனிதர்கள் மீது அவனுக்கு எப்போதும் மதிப்போ அல்லது பச்சாதாபம�ோ இருந்தது கிடையாது. தன்னுடைய இந்த குணத்தை அவன் எந்நிலையிலும் அப்பட்டமாக வெளிக்காட்டியது கிடையாது. அப்படி காட்டினால் இவர்களை க�ொண்டு தன்னுடைய காரியங்களை சாதித்துக்கொள்ள முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆள் சராசரி உயரத்தில் இருந்தாலும் என்ன செய்கிற�ோம், ஏது செய்கிற�ோம், எப்படி செய்கிற�ோம் என்பதை மிக நன்றாகவே அறிந்து செய்யும் உறுதியான மனம் க�ொண்டிருந்ததன் காரணமாக அவனுடைய த�ோற்றத்தில் அதிகாரத்தை வெளிப்படுத்தும் தன்மை இருந்தது. இதுவே கட்டுகளுக்கு அடங்காத, சுய ஒழுக்கங்கள் அற்ற, குடி பழக்கம் க�ொண்ட கடற்கொள்ளையர்களை அவனுடைய ச�ொல்லுக்கும், திட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் மறு பேச்சில்லாமல் கீழ்படியும் படி செய்தது. எளிய மனிதர்களை அவனுக்கு ஆகாது என்றாலும் அவன் பிறந்தது என்னவ�ோ ஏழ்மை பீடித்த குடும்பத்தில்தான். இங்கிலாந்தின் பிளைமூத் நகரில் 1653 வாக்கில் அவன் பிறந்திருக்கலாம் என்று அவனை குறித்த எழுத்து பதிவுகள் ச�ொல்கின்றன. குடும்பத்தில் ஏழ்மை இருந்தாலும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டான். ஆள் படு கூர்மையான, ந�ொடிகளில் தனக்கு சாதகமான தீர்மானங்களை எடுக்க கூடியவன் என்பதால் சிறு வயதிலேயே கப்பல் படையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. கூடவே கணித அறிவும் இருந்ததால் கடல�ோடும் கலை வெகு சீக்கிரத்திலேயே அவனுக்கு கை வந்த கலையாக ஆகிப்போனது. மிக இள வயதிலேயே வணிக கப்பல்களின் சீப் ஆபிசர் (Chief Officier) பதவிக்கும் உயர்ந்தான். இந்த பதவிக்கு பர்ஸ்ட் மேட் (First Mate) 47
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
என்று வேறு பெயரும் உண்டு. கப்பலின் சீப் மாஸ்டருக்கு (Ship’s Master) அடுத்த நிலையில் (செகண்ட்-இன்-கமாண்ட், Second-InCommand) இருப்பது சீப் ஆபிசர் பதவி. ஒரு கப்பலின் கடல�ோடும் (Navigation) நுணுக்கங்களை அறிந்தவர் சீப் மாஸ்டர். சீப் ஆபிசருக்கும் இந்த நுணுக்கங்கள் தெரியும் என்றாலும் பெரும்பான்மையாக கப்பலின் நிலை தன்மை மற்றும் சரக்கு கையாளும் பகுதியை கட்டுப்படுத்துபவராக இருப்பார். எல்லா வகையான சரக்கு கப்பல்களிலும் சீப் ஆபிசராக பணியாற்றும் வாய்ப்பும் இள வயதிலேயே ஏவ்ரியை தேடி வந்தது. ஆப்பிரிக்காவின் வடமேற்கு கடற்கரை பகுதிகளிலிருந்து கரீபியன் தீவுகளுக்கு அடிமைகளை ஏற்றி சென்ற அடிமை வணிக கப்பல்களின் சீப் ஆபிசராக பணியாற்றும் வாய்ப்பு உட்பட. நல்லவன் ப�ோல நைச்சியமாக பேசி ஏமாற்றி கருப்பின மக்களை அடிமைகளாக பிடித்து வருவதில் ஏவ்ரி கில்லாடி என்கிற எழுத்து குறிப்பும் இருக்கிறது. இங்கிலாந்து கப்பல் படையின் ஹெச்.எம்.எஸ் ரூபர்ட் (HMS Rubert)ல் சீப் ஆபிசராக பணிக்கு சேர்ந்தது அவனுடைய வளர்ச்சிகளில் ஒன்று. அதில் பணி செய்தப�ோதே மாஸ்டர்ஸ் மேட் (Master’s Mate) பதவிக்கு உயர்ந்தான். இதிலிருந்து அவன் விடுவிக்கப்பட்ட பிறகே அடிமை வணிக கப்பல் பணிக்கு அவன் சென்றது. அதிலிருந்து விலகி 1693-ல் சார்ல்ஸ் – II (Charles II) என்கிற பிரைவட்டியரிங் கப்பலில் பர்ஸ்ட் மேட் (First Mate) பணியில் சேர்ந்தான். இலண்டனை சேர்ந்த சில முதலீட்டாளர்கள் பிரைவட்டியரிங் த�ொழிலில் பணம் பார்ப்பதற்காக உருவாக்கிய நிறுவனத்தை (ஸ்பேனிஷ் எக்ஸ்பெடிஷன் ஷிப்பிங் - Spanish Expedition Shipping) சேர்ந்த நான்கு கப்பல்களல் இதுவும் ஒன்று. இதில் அப்போதைய ஸ்பெயின் அரசருக்கும் ஒரு பங்கிருந்தது. கரீபியன் தீவுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி த�ொழில் செய்யும் நிறுவனமாக இது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இதன் உண்மையான ந�ோக்கம் பிரெஞ்சு வணிக கப்பல்களை தாக்கி க�ொள்ளையடிப்பது மட்டுமே. அடிக்கும் க�ொள்ளையில் ஸ்பெயினின் அரசருக்கு கணிசமான பங்கு ப�ோக மற்றவற்றை முதலீட்டாளர்கள் பிரித்து எடுத்துக்கொள்வது என்பது 48
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
நிறுவனத்தின் த�ொழில் ஒப்பந்தம். பிரெஞ்சு வணிக கப்பல்களை க�ொள்ளையடிப்பதற்கான சட்ட ரீதியான பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களை ஸ்பெயின் அரசர் வழங்கினார். க�ொள்ளையில் ஒரு பங்கும் மாத சம்பளமாக ஒரு த�ொகையும் தரப்படும் என்கிற நிபந்தனையில் பெயரில் நிரவனத்தின் கப்பல்களில் வேலை ஆட்கள் (கடற்கொள்ளையர்கள்தான்) எடுக்கப்பட்டார்கள். இப்படித்தான் ஏவ்ரி சார்ல்ஸ் – II கப்பலில் ப�ோய் பணிக்கு சேர்ந்தது. இதன் கேப்டன் கிப்சன். முழ நேர குடிகாரன். ப�ோதை தெளியும் பகுதி நேரத்தில் பெயருக்கு கேப்டன் வேலை பார்த்தவன். இவனுக்கு உதவியாகத்தான் ஏவ்ரி வந்து சேர்ந்தது. ச�ொல்லப்போனால் சார்ல்ஸ் – II கப்பலுக்கான பெரும்பகுதி மாலுமிகளை தேர்வு செய்ததும் ஏவ்ரிதான். த�ொடங்கப்பட்ட சில மாதங்களில் ஸ்பேனிஷ் எக்ஸ்பெடிஷன் ஷிப்பிங் நிறுவனத்தின் பெயரில் சில கடற்கொள்ளைகள் நிகழ்த்தப்பட்டன. அதன் பிறகு ஸ்பெயின் அரசர் ச�ொல்லியிருந்தபடி பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களை தராத காரணத்தால் நிறுவனத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் கடற்கொள்ளையர்களுக்கு சம்பள பாக்கி வைக்க த�ொடங்கினார்கள். எந்த ஒரு வேலையும் இல்லாமல் பல நாட்களுக்கு சார்ல்ஸ் – II கப்பல் அதன் கடற்கொள்ளையர்களுடன் ஸ்பெயினின் வட மேற்கு துறைமுகமான லா க�ொருனாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எறியும் க�ொள்ளியில் எண்ணையை ஊற்றிய கதையாக பல மாத சம்பளபாக்கியில் சார்ல்ஸ் – II கப்பலின் கடற்கொள்ளையர்கள் தங்களுக்குள் வெந்துக்கொண்டிருந்த வேலையில் கேப்டன் டியூவ் இந்திய பெருங்கடல் பகுதியில் அடித்த பெரும் க�ொள்ளை பற்றிய செய்தி காற்றில் வந்து சேர்ந்தது. சந்தர்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த தெரிந்த ஏவ்ரி, இந்த செய்தியை க�ொண்டு மற்ற கடற்கொள்ளையர்களின் சம்பளபாக்கி வெறுப்பை அதிகப்படுத்தினான். கேப்டன் டியூவ் ப�ோல மலபார் மற்றும் அரேபிய கடல் பகுதிகளுக்கு சென்று க�ொள்ளையடிக்க அவனுக்கு தேவைப்பட்டதெல்லம் பலம் மிக்க ஒரு கப்பலும் சில கூட்டாளிகளும். 49
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
தனக்கான கப்பல் சார்ல்ஸ் – II என்பதை தீர்மானித்துவிட்டிருந்த அவன் அதை கைப்பற்றும் திட்டத்தில் இறங்கினான். அதன் முதல் படிதான் மற்ற கடற்கொள்ளையர்களின் சம்பளபாக்கி வெறுப்பை அவன் அதிகப்படுத்தியது. சார்ல்ஸ் – II கப்பலை கைப்பற்றினால் நாமும் டியூவ் ப�ோல இந்திய பெருங்கடல் பகுதிக்கு சென்று பெரும் வேட்டையில் ஈடுபடலாம் என்று அவர்களுக்கு ஓதினான். அவர்களுடைய சம்மதம் உடனடியாக அவனுக்கு கிடைத்துவிட்டது. கப்பலை கைப்பற்றுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. தினமும் இரவு வேலையில் துறைமுகத்திலிருந்த மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு அங்கேயே கவிழ்ந்து கிடப்பது கேப்டன் கிப்சனின் வழக்கம். அப்படி அவன் குடிப�ோதையில் மயங்கிய பிறகு சார்ல்ஸ் – II கப்பலின் நங்கூர கயிற்றை வெட்டிவிட்டு யாருக்கும் தெரியாமல் நடு கடலுக்கு எடுத்து சென்றுவிடுவது என்று ஏவ்ரி திட்டத்தை தயார் செய்தான். தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த மே மாதம் 7-ம் (வருடம் 1694) தேதியை தேர்வு செய்தான். அன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு சார்ல்ஸ் – II கப்பலை நடு கடலுக்கு க�ொண்டு சென்றுவிடுவது என்று முடிவானது. குறிக்கப்பட்ட நாளும் வந்து இரவும் வந்து சேர்ந்தது. ஆனால் அன்றைய தின அதிசயமாக கேப்டன் கிப்சன் குடிக்க வழக்கமாக செல்லும் மது கடைக்கு செல்லாமல் கப்பலில் தன்னுடைய அறையிலேயே மது பாட்டில்களை பரப்பிக்கொண்டு குடிக்க உட்கார்ந்துவிட்டார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஏவ்ரியின் கூட்டாளிகள் முழித்து நிற்க ஏவ்ரி எத்தகைய பதட்டமும் இல்லாமல் ப�ொறுமையாக காத்திருந்தான். கேப்டன் கிப்சன் குடி மயக்கத்தில் மல்லாந்துவிட ஏவ்ரி தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த த�ொடங்கினான். கப்பலின் நங்கூர கயிறு அறுக்கப்பட்டது. அதிக ஓசை எழுப்பாமல் கப்பல் நடுகடலுக்கு நகர்த்தப்பட்டது. நிறுவனத்தின் மற்ற கப்பல்களில் ஒன்றான ஜேம்சின் கேப்டன், சார்ல்ஸ் – II கப்பல் இரகசியமாக நழுவி செல்வதை கவனித்துவிட்டான். சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்த கூடிய ஏவ்ரியின் சூழ்ச்சி திறனையும், சம்பளபாக்கிக்காக பல மாதங்களாக முனுமுனுத்துக் க�ொண்டிருக்கும் கடற்கொள்ளையர்களின் கலக குரலையும், சார்ல்ஸ் – II கப்பல் இரவில் நகர்த்தி செல்லப்படுவதையும் 50
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
சில விநாடிகளில் ஒன்றிணைத்து கடற்கொள்ளைக்காக கப்பல் திருடப்படுகிறது என்பதை ஊகித்துவிட்ட ஜேம்ஸ் கப்பலின் கேப்டன் தன்னுடைய சகாக்களை துரிதப்படுத்தி சார்ல்ஸ் – II கப்பலை ந�ோக்கி பீரங்கி தாக்குதலை த�ொடங்கினான். அன்றைய இரவு அதிர்ஷ்டம் ஏவ்ரியின் பக்கமிருந்ததால் கப்பல் எந்த சேதமும் இல்லாமல் நடு கடலுக்கு வந்து விட்டது. அடுத்த நாள் பகல் வேலையில் ப�ோதை மயக்கம் தெளிந்து கேப்டன் கிப்சன் எழுத்து உட்கார்ந்தவுடன் வழக்கத்திற்கு மாறாக கப்பல் நடு கடலில் பயணம் செய்துக�ொண்டிருப்பதை ப�ோல உணர்ந்தார். ஏவ்ரி அவருடைய அறைக்கு அழைக்கப்பட்டான். அறைக்கு வந்த ஏவ்ரி, கேப்டனின் அதிகாரம் பிடுங்கப்பட்டு ஒரு முழு இரவு ஆகிவிட்டதையும் விருப்பமிருந்தால் சீப் ஆபிசராக தனக்கு கீழ் வேலை பார்க்கலாம் என்று விளக்கி கூறினான். கடற்கொள்ளையில் ஈடுபட விருப்பமில்லையென்றால் படகு மூலம் இப்பொழுதே லா க�ொருனாவிற்கு திரும்பி சென்றுவிடலாம் என்றும் அவருக்கு வாய்ப்பு க�ொடுத்தான். கிப்சன் திரும்பி சென்றுவிடுவதாக ச�ொல்ல, திரும்பி செல்ல விருப்பமுடைய மற்றவர்களும் அவருடன் சென்றுவிடலாம் என்று வாய்ப்பு க�ொடுக்கப்பட்டது. கிப்சனும் மற்ற சிலரும் திரும்பி சென்றுவிட மற்றவர்கள் ஒன்று கூடி ஏவ்ரியை தங்களின் கேப்டனாக தேர்வு செய்தார்கள். அவர்களாகவே இந்த முடிவை ந�ோக்கி செல்ல வேண்டும் என்பதைதான் அவனும் எதிர்பார்த்தான். அதற்கான திட்டங்களைத்தானே அவனும் செயல்படுத்தியது. கப்பலின் முழு கட்டுப்பாடும் தன் கைக்கு வந்ததும் முதல் வேலையாக அவன் செய்தது சார்ல்ஸ் – II என்கிற அதன் பெயரை மாற்றிவிட்டு பேன்சி (Fancy) என்றாக்கியது. மலபார் மற்றும் அரேபிய கடல் பகுதிகளில் பேன்சி, வணிக கப்பல்களை விரட்டி தாக்கி க�ொள்ளையடிப்பதில் எமகாதக கப்பலாக மாற இருந்ததின் த�ொடக்கம் இந்த பெயர் மாற்றம். ஆங்கிலேயே கப்பல்களில் ஏற்றப்படும் செயின்ட் ஜார்ஜ் க�ொடியை ஏற்றினான். தன்னுடையது கடற்கொள்ளை கப்பல் என்பதை அறிவிக்கும் மற்றொரு க�ொடியையும் ஏற்பாடு செய்தான். இந்திய பெருங்கடல் பகுதிக்கு சென்ற பிறகுதான் க�ொள்ளையில் 51
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
ஈடுபட வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை வாய்ப்பு கிடைத்தால் எந்நேரத்திலும் எந்த இடத்திலும் எந்த கப்பலையும் விட்டு வைக்காமல் க�ொள்ளையடிக்க வேண்டியதுதான் என்கிற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தினான் ஏவ்ரி.
ஆப்பிரிக்காவின் வடமேற்கு பகுதியிலிருக்கும் கேப் வெர்டி (Cape Verde Islands) தீவுகளை நெருங்கிய சமயத்தில் பார்பைட�ோஸ் (Barbados) பகுதியிலிருந்து வட ஆப்பிரிக்காவிற்கு வந்து க�ொண்டிருந்த மூன்று ஆங்கிலேயே வணிக கப்பல்களை கண்டான். மறு ய�ோசனைக்கு இடமேயில்லாமல் மூன்று வணிக கப்பல்களும் தாக்கப்பட்டன. இதை ஏவ்ரி வேண்டுமென்றேதான் செய்தான் என்று த�ோன்றுகிறது. பிரைவட்டியரிங் ஒப்பந்தம் இல்லாமல் எந்த ஒரு ஐர�ோப்பிய வணிக கப்பலையும் தாக்கி க�ொள்ளையடிப்பது இங்கிலாந்திலும் மற்ற ஐர�ோப்பிய நாடுகளிலும் மரண தண்டனைக்கு உரிய குற்றமாகும் அப்போது. அப்படியிருந்தும் இதை அவன் செய்ய காரணம் வரும் நாட்களில் தன்னுடைய சகாக்கள் கட்டளைகளுக்கு கீழ்படியாமல் பாதியிலேயே தனக்கு எதிராக கலகம் செய்யாமலிருக்க. அடுத்து மேற்கு கரையிலிருந்த கினிக்கு சென்று அங்கிருந்த பழங்குடிகளிடம் க�ொள்ளை நிகழ்த்தப்பட்டது. அங்கிருந்து பென்னின் கடற்பகுதிக்கு சென்று சிறிய தீவான பிய�ோக்கோவில் 52
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
தங்கினார்கள். ப�ோர் கப்பலான பேன்சியை உருமாற்ற திட்டமிட்டிருந்தான் ஏவ்ரி. அதன்படி பிய�ோக்கோவில் அதற்கான வேலைகள் நடந்தன. அதன் தளங்கள் குறைக்கப்பட்டு இலகுரக கப்பலாக மாற்றப்பட்டது. உருவத்தை விட வேகமே கடற்கொள்ளைக்கு அதிக பலத்தை தரக் கூடியது என்பதை ஏவ்ரி தன்னுடைய அனுபவத்தில் மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்தான். அதன் வெளிப்பாடே பேன்சியின் உருமாற்றம்.
சில குறிப்புகள் மடகாஸ்கர் தீவுக்கு வட மேற்கில் இருக்கும் ஜ�ோஹன்னா தீவில் வைத்தே பேன்சியின் உருமாற்றத்தை நிகழத்தியதாக ச�ொல்கின்றன. உருமாற்றம் நிகழ்ந்த பிறகு மீண்டும் பேன்சி களமிறங்கியது. ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை தாண்டிய பிறகு இரண்டு டேனிஷ் பிரைவட்டியரிங் கப்பல்கள் தென்பட அவையும் சூறையாடப்பட்டது. ஐர�ோப்பிய கடற்கொள்ளையர்களின் புகழிடமாக இருந்த மடகாஸ்கர் தீவு பகுதியை 1695-களின் த�ொடக்க மாதங்களில் வந்தடைந்தது பேன்சி. குழுவினருக்கு தேவையான உணவு ப�ொருட்களையும் குடிநீரையும் நிரப்பிக்கொள்ள ஜ�ோஹன்னா தீவில் பேன்சி நிருத்தப்பட்டது. மீண்டும் ஒரு அதிர்ஷ்ட கடல் பகுதியில் முகலய
காற்று ஏவ்ரி பக்கம். மலபார் வணிக கப்பல் ஒன்றை தாக்கி 53
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
க�ொள்ளையடித்து விட்டு, க�ொள்ளை ப�ொருட்களுடன் பிரெஞ்சு கடற்கொள்ளை கப்பல் ஒன்று உணவு ப�ொருட்கள் மற்றும் குடிநீர் நிரப்பிக்கொள்வதற்காக ஜ�ோஹன்னா தீவிற்கு வந்து சேர்ந்தது. ப�ொதுவாக கடற்கொள்ளையர்கள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்து வேலை செய்வார்களே ஒழிய தங்களுக்குள் க�ொள்ளையடித்துக்கொள்ளமாட்டார்கள். ஏவ்ரி இதற்கெல்லாம் விதிவிலக்கு. பிரெஞ்சு கப்பலை நேரடியாக தாக்கி க�ொள்ளையடிக்க கட்டளையிட்டால் தன்னுடைய சகாக்கள் செய்யமாட்டார்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதே சமயத்தில் சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அவனுடைய சூழ்ச்சி திறன் க�ொள்ளையடிப்பதற்கான தக்க நியாயத்தை நிமிடங்களில் உருவாக்கிவிட்டது. அப்போது ஐர�ோப்பாவில் பிரான்சும் இங்கிலாந்தும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்ததால் எந்த ஒரு பிரெஞ்சு கப்பலையும் தாக்குவது நம்முடைய கடமை என்று அவன் அறிவிக்க பிரெஞ்சு கப்பல் சூறையாடப்பட்டது. அந்த கப்பலையும் தன்னுடையதாக்கிக்கொண்டான் ஏவ்ரி. பிரெஞ்சு கடற்கொள்ளையர்களும் தன்னுடன் சேர்ந்து க�ொள்ளலாம் என்கிற வாய்ப்பையும் அவர்களுக்கு க�ொடுத்தான். சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிமிடங்களில் திட்டங்களை வகுத்து செயல்படக் கூடிய கடற்கொள்ளை தலைவனுக்கு கீழ் வேலை செய்வது அதிக இலாபம் தரக் கூடியதுதான் என்பதை அனுபவத்தில் உணர்ந்து வைத்திருந்த அவர்களில் சிலர் இந்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்டார்கள். இதுவரையான தன்னுடைய க�ொள்ளைகளே இங்கிலாந்தில் நிச்சயம் தன்னை தேடப்படும் குற்றவாளியாக மாற்றியிருக்கும் என்பதால் தன்னை பிடிக்க தேடிவரும் ஆங்கில கேப்டன்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் எழுதி தீவின் தலைவரிடம் க�ொடுத்தான். தான் இங்கிருந்து சென்ற பிறகு இங்கு வரும் ஆங்கிலேயே வணிக கப்பலின் கேப்டனிடம் கடிதத்தை க�ொடுக்கும்படி ச�ொல்லியிருந்தான். ஜ�ோஹன்னா பெப்ரவரி 18, 1695 என்று தேதியிடப்பட்டிருந்த அந்த கடிதம் தன்னை தேடி பின் த�ொடர்ந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சனைதான் என்று வெளிப்படையாகவே எச்சரித்திருந்தது. 54
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
மேலும் தான் எந்த ஒரு ஆங்கிலேய, டச்சு கப்பலையும் க�ொள்ளையடிக்கவில்லை என்றும் அப்படி நடந்திருப்பதாக ச�ொல்லப்படுமானால் அதற்கு தான் ப�ொறுப்பில்லை என்றும் தன்னுடைய கட்டளையை மீறி தன்னுடைய சகாக்கள் செயல்படுவதாகவும் கழுவிய மீனில் நழுவிய மீனாக தனக்கும் தன்னுடைய சகாக்களின் செயல்களுக்கும் எவ்வித த�ொடர்பும் இல்லை என்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். ஒருவேளை தான் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் இந்த கடிதத்தை தன் தரப்பு வாக்குமூலமாக காட்டி தப்பிவிடலாம் என்பது கடிதத்தை எழுதுவதற்கு பின்னாலிருந்த அவனது அதி முக்கியமான திட்டம். அவனுடைய திட்டங்கள் மற்றும் கட்டளைகளின் பெயரில் நடைப்பெறும் அனைத்து கடற்கொள்ளைகளுக்கும் தன்னுடைய சகாக்களை முழு ப�ொறுப்பாக்கி தண்டனைகளை அவர்கள் மீது மாத்திரம் திருப்பி விடுவதற்கான அவனுடைய சூழ்ச்சி. அவன் ச�ொன்னபடியே அந்த கடிதம் அந்த தீவிற்கு அடுத்த சில நாட்களில் வந்த ஆங்கிலேயே வணிக கப்பல் ஒன்றின் கேப்டன் கைகளுக்கு சென்றது. அவரின் வழி அந்த கடிதம் இங்கிலாந்து கப்பல் படை தலைமைக்கு சென்று சேர்ந்தது. தன்னுடைய கடிதத்தை படிக்கும் யவரும் தன்னுடைய சூழ்ச்சியை கண்டுபிடித்துவிடாமலிருக்க மற்றொரு சூழ்ச்சியையும் அதில் அவன் சேர்த்திருந்தான்.
55
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
தான் சூழ்நிலை கைதி மாத்திரமே என்பதை ப�ோலவும், எப்போதும் இங்கிலாந்தின் நன்மைக்கே பாடுபடுபவன் என்பதை ப�ோலவும் காட்டிக்கொள்ள கடிதத்தின் பின் குறிப்பாக, மடகாஸ்கர் தீவு கூட்டங்களில் ஒன்றான ம�ோஹேலியில் 160 பிரெஞ்சு கடற்கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாகவும் அந்த பகுதிக்கு வரும் எந்த ஒரு வணிக கப்பலையும் தாக்கி க�ொள்ளையடிக்கும் திட்டத்துடன் அவர்கள் இருப்பதாகவும் உளவு தகவலும் ச�ொல்லியிருந்தான். அவன் குறிப்பிட்டிருந்த அந்த பிரெஞ்சு க�ொள்ளையர்கள் அவனிடம் கப்பலையும் க�ொள்ளையடித்த ப�ொருட்களையும் இழத்திருந்த நாம் முன்பே பார்த்த அதே க�ொள்ளையர்கள்தான். அவனுடம் இணைந்து க�ொள்ளாத மற்ற பிரெஞ்சு க�ொள்ளையர்களைத்தான் இப்படி கடிதத்தில் காட்டிக்கொடுத்திருந்தான்.
56
கேப்டன் ஏவ்ரி & கடற்கொள்ளையர்களின் கூட்டணி
எ
ன்னதான் ஏவ்ரி சந்தர்பங்களையும் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி தான் தப்பித்துக்கொள்ளுவதற்கான சூழ்ச்சி மிக்க கடிதத்தை எழுதி இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தாலும் இங்கிலாந்தில் அவனுக்கு குத்தப்பட்ட முத்திரை கடற்கொள்ளையன் என்பதே. படு ம�ோசமான என்கிற வார்த்தைகளும் சேர்த்தே அந்த முத்திரை குத்தப்பட்டது. ஜ�ோஹன்னா தீவிலேயே வேட்டையை எங்கிருந்து த�ொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டான் ஏவ்ரி. செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலில் இருந்த பெரின் தீவில் (Perim Island) பதுங்கிக்கொண்டு அரேபிய துறைமுகங்களிலிருந்து மலபார் பகுதிகளுக்கு செல்லும் வணிக கப்பல்களையும் அதேப�ோல மலபார் பகுதிகளில் இருந்து அரேபிய துறைமுகங்களுக்கு வரும் வணிக கப்பல்களையும் தாக்குவது என்பது அவனுடைய திட்டம்.
57
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
பெரின் தீவுக்கு ப�ோகும் வழியில் இரண்டு சிறிய இரக அமெரிக்க கடற்கொள்ளை கப்பல்கள் அவனுடன் சேர்ந்துக�ொண்டன. ஆகஸ்டு மாதத்தின் த�ொடக்கத்தில் (கி.பி. 1695) ஏவ்ரி தன்னுடைய கூட்டாளி கப்பல்களுடன் பெரின் தீவிற்கு சென்று பதுங்கினான். அந்த கடல் பகுதியை நிதானிக்க வேண்டி சில நாட்கள் அங்கே ர�ோந்து சுற்றி வந்தான். அடுத்த அவனுடைய திட்டம் தயாரானது. வெற்றுக்கு வணிக கப்பல்களை தேடி கடலில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருப்பதை விட இந்த பகுதியில் வசிக்கும் சிலரை பிடித்து அவர்களின் மூலம் எந்தெந்த கப்பல்கள் எப்போது இந்த பகுதிக்கு வந்து செல்லும் என்கிற அதி முக்கிய தகவலை தெரிந்துக�ொண்டால் வேட்டை சுலபமாகிவிடும் என்பது அவனுடைய திட்டம். திட்டம் செயல்படுத்தப்பட்டது. அங்கு மீன் பிடி த�ொழிலில் ஈடுபட்டிருந்த சில மீனவர்களை கைதிகளாக பிடித்து பிணையாக தன்னுடைய கப்பலில் வைத்துக்கொண்டான். தனக்கு தேவையான தகவலை ச�ொல்லிவிட்டால் அவர்கள் உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்று பேரம் பேசப்பட்டது. இன்னும் சில நாட்களில் ம�ோச்சா துறைமுகத்திலிருந்து (அரேபியா) முகலாய வணிக கப்பல் குழு ஒன்று கிளம்ப இருப்பதாகவும் அதில் தங்கம், வெள்ளி, பட்டு ப�ோன்ற ப�ொருட்களுடன் ஹஜ் புனித யாத்திரைக்கு வந்த பெரும் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்களும் நாடு திரும்ப இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரிந்த தகவலை உயிருக்கு பயந்து மீனவர்கள் அவனிடம் க�ொட்டிவிட்டார்கள். புறப்பட இருக்கும் முகலாய வணிக கப்பல் குழுவில் குறைந்தது இருபது கப்பல்கள் பாதுகாப்பிற்கு வர இருக்கிறது என்கிற தகவலையும் ஏவ்ரி தெரிந்துக�ொண்டான். வேட்டை அவ்வளவு சாதாரணமாக இருக்கப்போவதில்லை என்பது த�ொடக்கத்திலேயே அவனுக்கு தெரிந்துவிட்டது. தன்னுடன் இருக்கும் கூட்டாளிகளை வைத்துக்கொண்டு இந்த வேட்டையை நிகழ்த்த முடியுமா என்கிற சந்தேகமும் அவனுக்குள் உதிக்க த�ொடங்கியது. மீண்டும் அவன் பக்கமாக ஒரு அதிர்ஷ்ட காற்று. அடுத்த சில நாட்களில் கேப்டன் டியூவும் மேலும் இரண்டு அமெரிக்க கடற்கொள்ளை கப்பல்களும் பெரின் தீவு பகுதி வந்து சேர்ந்தன. 58
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
59
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கேப்டன் டியூவின் அத்தியாயத்தில் பார்த்த கடற்கொள்ளையர்களின் பெரும் கூட்டணி உருவானது. கேப்டன் டியூவ், அமிட்டி கப்பல். கேப்டன் ஜ�ோசப் பார�ோ, ப�ோர்ட்ஸ்மவுத் அட்வன்சர் கப்பலின் கேப்டன். ரிச்சர்ட் வான்ட், டால்பின் கப்பலின் கேப்டன். வில்லியம் மேய்ஸ், பெர்ல் கப்பலின் கேப்டன். தாமஸ் வேக், சுசானா கப்பலின் கேப்டன். கூட்டணியின் தலைமை அட்மிரலாக ஏவ்ரி மற்ற கடற்கொள்ளை கேப்டன்களால் தேர்வு செய்யப்பட்டான். ஆறு கப்பல்களின் தலைமையாக பேன்சி (ஃப்ளாக் ஷிப் – Flag Ship) செயல்படும் என்று முடிவானது. அவர்களிடம் ம�ொத்தமாக 400 கடற்கொள்ளையர்கள் இருந்தார்கள். முகலாய வணிக குழு புறப்படும் நாளில் வேலையை பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல் அது புறப்படும் நாள் வரைக்கும் தினந்தோறும் செங்கடல் பகுதியில் ர�ோந்து பணியில் ஈடுபடுவது என்று கூட்டாக முடிவு செய்தார்கள். அந்த நாளும் வந்து சேர்ந்தது. ம�ொத்தமாக 25 கப்பல்கள் முகலாய வணிக குழுவில் இருந்தன. கான்ஜ்-ஐ-சாவாய் (Ganj-i-sawai), குழுவின் தலைமை கப்பலாக இருந்தது. சுமார் 1600 டன் எடையுடன் 80 பீரங்கிள் ப�ொருத்தப்பட்டிருந்த மலைப்போன்ற கப்பல் அது. கில�ோ கணக்கிலான தங்கமும் வெள்ளியும் பட்டு துணிகளும் (ம�ொத்த பதிப்பாக சுமார் 13,00,000 பவுண்ட்கள் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது) இதிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கான்ஜ்-ஐ-சாவாய் கப்பலில் மஸ்கட் துப்பாக்கிகள் க�ொண்ட 500 பாதுகாப்பு படை வீரர்களும் இருந்தார்கள். மேலும் பெரும் செல்வந்த மற்றும் அரச குடும்பங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பயணிகளும் இருந்தார்கள். அவர்களிடமிருந்த ம�ொத்த ஆடைகளும் ஆபரணங்களும் தனியாக ஒரு இலட்சம் பவுண்ட்களை தாண்ட கூடியதாக இருந்தன. கான்ஜ்-ஐ-சாவாய் கப்பலுக்கு பாதுகாப்பாக அதன் அருகிலேயே வந்த மற்றொரு கப்பல் 600 டன் எடை க�ொண்ட பட்டா முகமத் (Fateh Muhammed). சூரத்தில் பெரும் வணிகராக இருந்த அப்துல் காஃபருக்கு (Abdul Ghaffer) ச�ொந்தமானது பட்டா முகமத். அதில் சுமார் 60,000 பவுண்ட்களுக்கான தங்கம், வெள்ளி மற்றும் பட்டு துணி ப�ொருட்கள் இருந்தன. இதிலும் பாதுகாப்பு படை வீரர்கள் இருந்தார்கள். 60
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
முகலாய வணிக குழு செங்கடல் பகுதியை விட்டு வெளியே வந்தவுடன், முன்னால் ப�ோக விட்டு பின்புறத்திலிருந்து துரத்தி சென்று இருபத்தைந்து கப்பல்களையும் தனித் தனியாக பிரித்து தாக்கி க�ொள்ளையடிப்பது என்று திட்டமிட்டு செங்கடல் அரேபிய கடலுடன் கலக்கும் நுழைவாயில் பகுதியில் காத்திருந்தார்கள் ஏவ்ரியின் தலைமையிலான கடற்கொள்ளையர்கள். புறப்பட்ட இரண்டு மூன்று நாட்கள் கழித்து முகலாய வணிக குழு செங்கடல் அரேபிய கடலுடன் கலக்கும் நுழைவாயில் பகுதியை வந்தடைந்தது. அது மாலை வேலை. ஏவ்ரியும் மற்ற கடற்கொள்ளை கேப்டன்களும் வணிக குழுவை த�ொலைவிலிருந்து பார்த்துவிட்டார்கள். முதலில் நன்றாக இடைவெளிவிட்டு வணிக குழுவை விரட்டி செல்வது என்று முடிவு செய்தார்கள். துரத்த த�ொடங்கியதும் டியூவ் வேகமாக முன்னேறி சென்று கான்ஜ்-ஐ-சாவாயை முதலில் தாக்குவது என்றும் பின்னால் வரும் ஏவ்ரி பட்டா முகமத்தை தாக்கி க�ொள்ளையடித்துவிட்டு பிறகு டியூவுடன் இணைந்துக�ொள்வது என்றும் பேசி முடிவானது. அவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாகவே முகலாய வணிக குழு அவர்களின் கண்களிலிருந்து மறைந்து வெகு த�ொலைவு சென்றுவிட்டிருந்தது. இது கடற்கொள்ளையர்களுக்கு பின்னடைவுதான் என்றாலும் விடாமல் துரத்த த�ொடங்கினார்கள். நான்கு நாட்களின் துரத்தலுக்கு பிறகு மீண்டும் வணிக குழு அவர்களின் கண்களில் தென்பட்டது. துரத்தல் த�ொடங்கியது. கேப்டன் டியூவின் அமிட்டி வேகமாக முன்னேறி சென்றது. கேப்டன் ரிச்சர்ட் வான்டின் டால்பின் கப்பலுக்கும் கேப்டன் தாமஸ் வேக்கின் சுசானா கப்பலுக்கும் வேகம் ப�ோதாமல் பின் தங்க த�ொடங்கின. ஆள் பலம் முக்கியம் என்பதால் டால்பின் கப்பலில் இருந்த அனைவரையும் தன்னுடைய கப்பலில் ஏற்றிக்கொண்டு அதை முற்றிலும் எரித்து கடலில் மூழ்கடித்தான் ஏவ்ரி. சுசானா ஓரளவிற்காவது தாக்கு பிடித்து நேரத்திற்கு வந்து சேர்ந்துவிடும் என்பதால் அதை அதன் ப�ோக்கில் விட்டுவிட்டு கேப்டன் ஜ�ோசப் பார�ோவின் ப�ோர்ட்ஸ்மவுத் அட்வன்சர் கப்பலும் ஏவ்ரியின் பேன்சியும் முன்னோக்கி சென்றன. வணிக குழுவை வேகமாக துரத்தி சென்ற டியூவின் அமிட்டி இப்போது முற்றிலுமாக அவர்களை விட்டு துண்டிக்கப்பட்டிருந்தது. 61
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கூட்டாளிகள் இல்லாமல் அது தனியாக கான்ஜ்-ஐ-சாவாயை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானது. அதை பற்றி கவலைப்படாமல் முன்னேறி சென்று கான்ஜ்-ஐ-சாவாயை தாக்கி பரல�ோகம் ப�ோய் சேர்ந்ததை முன்பே பார்த்தோம். உதவிக்கு கூட்டாளிகள் வந்து சேராத காரணத்தால் கேப்டன் டியூவ் இறந்தவுடன் அமிட்டியில் எஞ்சியிருந்த கடற்கொள்ளையர்கள் கான்ஜ்-ஐ-சாவாயை கப்பலின் பாதுகாப்பு படை வீரர்களிடம் சரணடைந்துவிட்டார்கள். அமிட்டி எறிக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. அத�ோடு சேர்த்து கேப்டன் டியூவின் உடலும் கடலுக்கடியில் ப�ோய் சேர்ந்தது. இவையெல்லாம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்தே ஏவ்ரியின் பேன்சி முகலாய வணிக குழுவை காணும் த�ொலைவிற்கு வந்து சேர்ந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை ஏவ்ரி உடனடியாக உணர்ந்து க�ொண்டுவிட்டான். முன்பே ப�ோட்ட திட்டத்தின்படி பட்டா முகமத் கப்பலை குறி வைத்து பேன்சியை விரட்டினான். அவனுக்கு பின்னாலேயே உதவிக்கு ப�ோர்ட்ஸ்மவுத் அட்வன்சர் கப்பலும், பெர்ல் கப்பலும் வரத் த�ொடங்கின. ஏவ்ரியின் துணிச்சல் மற்றும் சாமர்த்தியம் காரணமாக பட்டா முகமத் மிக சிறிய எதிர்ப்பை மாத்திரம் காட்டிவிட்டு அவனிடம் சரணடைந்துவிட்டது. அதிலிருந்த ப�ொருட்கள் அனைத்தும் பேன்சிக்கு மாற்றப்பட்டது. இறுதியாக அதிலிருந்த பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்த்து பட்டா முகமத் கப்பல் க�ொலுத்தப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. இந்த தாக்குதல் முடிவதற்குள் கான்ஜ்-ஐசாவாயை கப்பல் அவர்களை விட்டு மேலும் இரண்டு நாட்கள் த�ொலைவிற்கு சென்றுவிட்டிருந்தது. மீண்டும் விரட்டல் த�ொடங்கியது. இரண்டு நாட்களுக்கு பிறகு கான்ஜ்-ஐ-சாவாயை நெருங்கிய ஏவ்ரியின் பேன்சி பக்கவாட்டில் அதை கடந்து தாக்குதலுக்கு வாட்டமாக தன்னை நிறுத்திக்கொண்டது. கான்ஜ்ஐ-சாவாயை கப்பலின் கேப்டன் முகம்மது இம்ராஹிம் (Muhammad Ibrahim). இரண்டு கப்பல்களும் பீரங்கி குண்டுகளை ஒன்றின் மீது ஒன்று வெடிக்க த�ொடங்கியது. கான்ஜ்-ஐ-சாவாயையின் 80 பீரங்கிகளுக்கு முன்பாக தன்னால் தாக்கு பிடிக்க முடியாது என்பதை அறிந்திருந்த ஏவ்ரி ஒற்றை பீரங்கி 62
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
குண்டில் அதை முற்றிலும் முடமாக்க முயற்ச்சி செய்தான். அதன் முக்கிய க�ொடி மரத்தை (Main Mast) குறி வைத்தே பேன்சியின் பீரங்கிகளை இயக்க கட்டளையிட்டான். அவன் எதிர்பார்த்தபடியே முக்கிய க�ொடி மரம் முறிந்து கான்ஜ்-ஐ-சாவாயை முடமானது. பிறகு முடமான அதன் மீது தாவி அதை கைப்பற்றும்படி தன்னுடைய சகாக்களுக்கு கட்டளையிட்டான். கான்ஜ்-ஐ-சாவாயையிலிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மஸ்கட் துப்பாக்கிகளை க�ொண்டு கப்பல் மீதும் ஏற முயன்ற கடற்கொள்ளையர்கள் சுட்டார்கள்.
63
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
சற்று நேரத்தில் பெர்ல் கப்பலும், ப�ோர்ட்ஸ்மவுத் அட்வன்சர் கப்பலும் சுசானா கப்பலும் ஒன்றின் பின் ஒன்றாக அங்கு வந்துவிட அதன் கடற்கொள்ளையர்களும் கான்ஜ்-ஐ-சாவாயையில் தாவி ஏற முயற்ச்சி செய்தார்கள். துப்பாக்கி குண்டுகளையும் மீறி கடற்கொள்ளையர்கள் அதன் மேல் தளத்தில் தாவி ஏறிவிட்டார்கள். கான்ஜ்-ஐ-சாவாயையின் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிளை தூக்கி வீசிவிட்டு வாட்களுடன் கப்பலில் ஏற முயன்ற கடற்கொள்ளையர்களை தாக்கினார்கள். அந்த வாழ்வா சாவா ப�ோராட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. கான்ஜ்-ஐ-சாவாயையின் மேல் தளத்தில் இரத்த வெள்ளம் ஓடிய பிறகு எஞ்சியிருந்த அதன் பாதுகாப்பு படை வீரர்கள் கடற்கொள்ளையர்களிடம் சரணடைந்தார்கள். இதன் பிறகு த�ொடங்கியது கடற்கொள்ளையர்களின் நரக வெறியாட்டம். கப்பலின் ஒவ்வொரு அறையாக சென்று தங்க வெள்ளி பட்டு துணிகளை மூட்டை கட்டி எடுத்து வந்து பேன்சியில் சேர்த்த பிறகு கான்ஜ்-ஐ-சாவாயையின் பயணிகளிடம் சென்றார்கள். பயணிகளில் பெரும்பாலும் பெண்களே இருந்தார்கள். அப்போதைய முகலாய அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மனி உட்பட. அவர்களின் மீது அனைத்து விதமான மனித தன்மையற்ற சித்திரவதைகளும் நிகழ்த்தப்பட்டது. அனைத்தும் 64
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
அவர்களிடமிருந்த தங்க ஆபரணங்களை க�ொள்ளையடிக்க. அவர்களின் கைகளில் சிக்காமலிருக்க சில பெண்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து க�ொண்டார்கள். மேலும் சிலர் கையில் கிடைத்த ஆயுதங்களை க�ொண்டு தற்கொலை செய்துக�ொண்டார்கள்.
பின்னாட்களில் பிடிபட்ட பேன்சி கப்பல் கடற்கொள்ளையர்களில் ஒருவன் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் க�ொடுத்த ப�ோது அன்று நிகழ்ந்த மனித தன்மையற்ற செயல்களை நினைக்கையில் தன்னுடைய ஆன்மா இப்போதும் பதைத்து நடுங்குவதாக குறிப்பிட்டான். வழக்கம் ப�ோல திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்திவிட்டு கடற்கொள்ளையர்களுக்கும் அவர்களின் மனித தன்மையற்ற செயல்களுக்கும் தனக்கும் எந்தவித த�ொடர்பும் இல்லை என்பதைப்போல பேன்சி கப்பலில் அவனுடைய அறையில் உட்கார்ந்திருந்தான் ஏவ்ரி. அனைத்தும் முடிந்த பிறகு தப்பி உயிர் பிழைத்திருந்தவர்களுடன் சேர்த்து கான்ஜ்-ஐ-சாவாயை கப்பலை அதன் ப�ோக்கில் விட்டுவிட தீர்மானித்தார்கள். அடிக்கப்பட்ட ம�ொத்த க�ொள்ளை ப�ொருட்களும் பேன்சியிலேய இருக்கட்டும் பாதுகாப்பான தீவு ஒன்றுக்கு சென்ற பிறகு பாகம் பிரித்துக்கொள்ளலாம் என்று மற்ற கப்பல்களின் 65
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கேப்டன்களிடம் ச�ொல்லிவிட்டு பயணத்தை த�ொடர்ந்தான் ஏவ்ரி. அவனை நம்பிய மற்ற கடற்கொள்ளை கேப்டன்களுக்கு அவனுடைய மற்றொரு சூழ்ச்சி திட்டம் காத்திருந்தது. இரவு கவிழ்ந்ததும் பேன்சியின் வேகத்தை பயன்படுத்தி மற்ற கேப்டன்களுக்கு ப�ோக்கு காட்டிவிட்டு அடித்த ம�ொத்த க�ொள்ளை ப�ொருட்களுடன் அவர்களிடமிருந்து தப்பி மடகாஸ்கரின் கிழக்கு கடல் பகுதியிலிருந்த ப�ோர்பன் தீவிற்கு வந்து சேர்ந்தான். அங்கு வைத்து அவனுடைய கூட்டாளிகளுக்கு அடித்த க�ொள்ளையிலிருந்து பாகம் பிரித்து க�ொடுத்தான். குழுவிலிருந்த பிரெஞ்சு மற்றும் டச்சு நாட்டு க�ொள்ளையர்கள் அந்த தீவிலேயே தங்கிவிட மற்றவர்களுடன் கரீபியன் தீவு கூட்டங்களில் ஒன்றான பஹாமாசின் நாவ்சா நகருக்கு புறப்பட்டான் ஏவ்ரி. நவம்பர் 1695-ல் பேன்சி நாவ்சாவிற்கு புறப்பட்டது. இந்த சமயத்தில் கான்ஜ்-ஐ-சாவாயை கப்பல் சூரத் துறைமுகத்தை அடைந்தது. நடந்தவைகளை கேள்விப்பட்ட மக்கள் க�ொந்தளிக்க அங்கிருந்த ஆங்கிலேயே கம்பெனி நிர்வாகிகள் பதற்றமடைந்தார்கள். கடற்கொள்ளையர்களின் செயல்களுக்கு நிச்சயம் மக்கள் தங்களைத்தான் தாக்குவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு முன்பாக பல முறை இது ப�ோல நடந்துமிருக்கிறது. விசயம் முகலாய பேரரசர் அவுரங்கசீபின் காதுகளை வரை சென்றது. ஆந்திரமடைந்த அவர் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் இருந்த ஆங்கிலேய கம்பெனி ஆலைகளை இழுத்து மூட உத்தரவிட்டார். அதன் நிர்வாகிகளையும் ஊழியர்களையும் கைது செய்யவும் உத்தரவிட்டார். த�ொடர்புடைய கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆங்கிலேயர்கள் இங்கே வணிகம் செய்ய முடியாது அவர்கள் மீது ப�ோர் த�ொடுக்கப்படும் என்றும் பேரரசரிடமிருந்து ஆங்கிலேய கம்பெனிக்கு தகவல் ப�ோனது. கம்பெனி ஆட்கள் அலறி புடைத்து அந்த தகவலை இங்கிலாந்தின் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு உடனடியாக 6,00,000 பவுண்ட் இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு க�ொடுத்தார்கள். அடுத்த ஆறு மாதங்களில் அதாவது 1696-ம் வருடத்தின் இடை பகுதியில் இங்கிலாந்து சட்டமன்றம் கடற்கொள்ளை மனித 66
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இனத்திற்கு எதிரான குற்றம் என்று அறிவித்து ஏவ்ரியின் தலைக்கு 500 பவுண்ட்கள் விலை வைத்தது. அப்படியும் யாரிடமிருந்தும் அவனை குறித்த தகவல் வராததால் ஏவ்ரியின் தலைக்கான பரிசு த�ொகை 1000 பவுண்ட்களாக உயர்த்தப்பட்டது.
மேலும் இங்கிலாந்தில் மாத்திரமல்ல ஏவ்ரி இங்கிலாந்து அரசால் உலகம் முழுவதிலும் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அதற்கான தேடப்படும் குற்றவாளி விளம்பரம் இங்கிலாந்தின் காலனிய நாடுகள் முழுவதிலும் வெளியிடப்பட்டது. நாவ்சாவில் தங்கியிருந்த ஏவ்ரி க�ொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை முதலீடாக வைத்து அடிமை வணிக த�ொழிலில் ஈடுபடுவதற்கான முயற்ச்சிகளை செய்துக்கொண்டிருந்தான். தன்னுடைய முகம் தேடப்படும் குற்றவாளியாக உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டிருப்பதை தெரிந்துக�ொண்ட ஏவ்ரியும் அவனுடைய கூட்டாளிகளும் ஆளுக்கொரு திசையில் பாதுகாப்பு தேடி ஒட த�ொடங்கினார்கள். சிலர் மேற்கிந்திய தீவுகளுக்கும், சிலர் வட அமெரிக்க காலனிய நாடுகளுக்கும், சிலர் இங்கிலாந்திற்குமே தப்பி ஓடினார்கள். இருந்தும் அவர்களில் 24 பேர் இங்கிலாந்து அரசிடம் சிக்கிக்கொண்டார்கள். அவர்கள் மீதான கான்ஜ்-ஐ-சாவாயை 67
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கப்பல் க�ொள்ளையும் அதை த�ொடர்ந்த மனித தன்மையற்ற குற்ற நடவடிக்கைகளும் நிருபிக்கப்பட்ட ஆறு பேருக்கு நவம்பர் 1696ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏவ்ரி சிக்கினால் நிச்சயம் அவனுக்கு மரண தண்டனைதான் என்பது இதிலிருந்து நிருபனமானது. ஏவ்ரி தன்னுடனிருந்த சில கூட்டாளிகளின் மூலம் இரண்டு மூன்று ஸ்லூப் கப்பல்ளை வாங்கி அதில் தன்னுடைய க�ொள்ளை பங்கை ஏற்றி ஐயர்லாந்திற்கு தப்பி சென்றான். ஜூன் 1696-ல் ஐயர்லாந்தின் டுன்பான்கே கடல் பகுதியில் கரை ஏறி யாருக்கும் சந்தேகத்தை கிளப்பிவிடாத வகையில் தன்னுடைய க�ொள்ளை பங்கை எடுத்துக்கொண்டு தன்னுடன் வந்த கூட்டாளிகளில் ஒரு சிலரை அங்கேயே விட்டுவிட்டு மாயமானான். அவனுடன் வந்த வேறு சில கூட்டாளிகள் வேறு ஒரு துறைமுகத்தில் இறங்கி தங்களுடைய க�ொள்ளை பங்கை கப்பலில் இருந்து இறக்கும்போது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். டுன்பான்கே பகுதியில் ஏவ்ரி அநாமத்தாக விட்டு சென்ற அவனுடைய கூட்டாளிகள் அவர்களுடைய க�ொள்ளை பங்கு தங்க காசுகளை மது கடைகளில் குடிப்பதற்கு செலவழிக்க அவர்கள் மீது சந்தேகம் வலுத்து அவர்களும் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அந்த 24 கடற்கொள்ளையர்கள். இவர்களிடம் ஏவ்ரி குறித்து கேட்கப்பட்டப�ோது ஆளுக்கொரு தகவலை கூறினார்கள். அவன் ஐயர்லாந்தில் இருப்பதாகவும், ஸ்காட்லாந்தில் இருப்பதாகவும், இலண்டனில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இருப்பதாகவும், மடகாஸ்கருக்கு சென்றுவிட்டதாகவும் அவர்களுக்கு தெரிந்ததை கூறினார்கள். தான் எங்கு தப்பி செல்கிற�ோம் என்பது தன்னுடைய கூட்டாளிகளில் ஒருவருக்கு தெரிந்துவிட்டாலும் அது தனக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை முன்பே நன்கு அறிந்திருந்த ஏவ்ரி தான் தப்பி ப�ோக இருக்கும் இடம் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையை ச�ொல்லியிருந்தான். அதை உண்மை என்று நம்பிய பிடிபட்ட குற்றவாளிகள் ஏவ்ரியின் இருப்பிடம் குறித்து 68
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கேட்கப்பட்டப�ோது அதையே திருப்பி ச�ொன்னார்கள். ஆனால் ஜூன் 1696-க்கு பிறகு ஏவ்ரியை இந்த உலகின் எந்த ஒரு மூலையிலும் யாரும் மீண்டும் பார்த்திருக்கவில்லை. அவன் இந்த நாட்டிற்கு தப்பி ப�ோயிருக்கலாம், அந்த நாட்டிற்கு தப்பியிருக்கலாம் என்று பல செவி வழி செய்திகள் மாத்திரம் இன்று வரை அவனை குறித்து திரும்ப திரும்ப ச�ொல்லப்படுகிறது. நிச்சயம் அவனுடைய க�ொள்ளை பங்கை முழுவதும் வெளிப்படையாக செலவழித்திருக்க முடியாமல் எங்காவது அவன் பதுக்கி வைத்திருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையில் அது த�ொடர்பான புதையல் வேட்டையும் இன்றுவரை த�ொடர்ந்தபடிதான் இருக்கிறது. சிலர் ஐயர்லாந்திற்கு வந்து பதுங்கிய அவன் தன்னிடமிருந்த க�ொள்ளை ப�ொருட்களை இங்கிலாந்தை சேர்ந்த தங்க மற்றும் வெள்ளி வணிகர் ஒருவரிடம் க�ொடுத்து அதற்கான பணத்தை பெற முடியாமல் ஏமாந்து இறுதியில் வறுமையில் இறந்துப�ோனதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ச�ொல்கிறார்கள். வேறு சிலர் மடகாஸ்கர் தீவிலிருக்கும் லிபர்டாலியா நகரின் அரசனாக அவன் இருப்பதை பார்த்ததாக பதிவு செய்திருக்கிறார்கள்.
69
கேப்டன் வில்லியம் கிட் & அட்வென்சர் கேலி
ஸ்கா
ட்லாந்தை பூர்வீகமாக க�ொண்டவன் கேப்டன் வில்லியம் கிட் (Captain William Kidd). அவனுடைய பிறப்பு சார்ந்த எழுத்து பதிவுகள் 1645 ஜனவரி மாதத்தில் அவன் பிறந்ததாக ச�ொல்கின்றன. அவனுடைய குழந்தை பருவம் குறித்தும் பள்ளிப் பருவம் குறித்தும் ஏதும் அறிய கிடைக்கவில்லை. அவனுடைய இளமை காலம் குறித்த பதிவுகள் 1689-லிருந்து கிடைக்க த�ொடங்குகிறது. அப்போது அவன் மேற்கிந்திய தீவு கடல் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயே கடற்கொள்ளை கப்பல் ஒன்றின் மாலுமிகளில் ஒருவனாக குறிக்கப்படுகிறான்.
அந்த கப்பலில் கலகம் ஏற்பட அது திருடப்பட்டு பிலெஸ்ட் வில்லியம் (Blessed William) என்று அதன் பெயர் மாற்றப்படுகிறது. அதன் கேப்டனாக கிட் தேர்வு செய்யப்பட்டான். கேப்டன் கிட் நெவிஸ் பகுதிக்கு தன்னுடைய ஜாகையை மாற்றிக்கொள்கிறான். நெவிஸ் இங்கிலாந்து குடியேற்றகாரர்கள் நிறைந்த நகரம். அதை பிரெஞ்சுகாரர்களிடமிருந்து பாதுகாக்கும் ப�ொறுப்பை அதன் கவர்னர் க�ோடிங்டன் கேப்டன் கிட்டிடம் ஒப்படைத்தார். இதற்கான சம்பள த�ொகையாக பேசப்பட்டது பிரெஞ்சு கப்பல்கள் மற்றும் நகரங்களில் அடிக்கப்படும் க�ொள்ளை ப�ொருட்களை அப்படியே கேப்டன் கிட்டின் குழு எடுத்துக்கொள்ளலாம் என்பது. இதன் த�ொடர்ச்சியாக பிரெஞ்சு குடியேற்ற தீவான மேரிகலேன்ட் கேப்டன் கிட்டால் தாக்கப்பட்டது. அதில் அடிக்கப்பட்ட க�ொள்ளை த�ொகை 2000 பவுண்ட்கள். இதற்கு அடுத்த ஒரு வருடத்தில் கிட்டின் கப்பல் மற்றொரு கடற்கொள்ளையனான ராபர்ட் குல்லிப�ோர்டால் திருடப்பட பிரைவட்டியரிங் த�ொழிலில் இருந்து விலகி சாரா பிராட்லி காக்ஸ் என்பவரை திருமணம் செய்துக�ொண்டு நியூ யார்க் 70
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
நகரில் குடியேறினான் கிட். அன்றைய நியூ யார்க் நகரின் பெரும் செல்வந்தர்களில் சாராவும் ஒருவர்.
அடுத்த நான்கு வருடங்களுக்கு கிட் அமைதியான குடும்ப வாழ்கையை நடத்திக்கொண்டிருக்க 1695-ல் வந்து சேர்ந்தது வினை. நாம் முன்பே பார்த்த கேப்டன் டியூவின் மலபார் கடற்கொள்ளைக்கு பிறகு பெரும் க�ொள்ளை கூட்டமே இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்து கடற்கொள்ளையில் புகுந்து விளையாடியது இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர்களுக்கு பெரும் மண்டை குடைச்சலாக இருந்தது. ஒவ்வொரு முறை ஆங்கிலேயே க�ொடி ஏற்றிய கடற்கொள்ளையர்கள் இந்திய வணிக கப்பல்களை க�ொள்ளையடிக்கும்போதும் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் அவர்களின் க�ோபத்தை நேரடியாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆலைகள் மீதே காட்டினார்கள். கடற்கொள்ளையர்களின் க�ொள்ளைகளுக்கு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நஷ்ட ஈடு க�ொடுக்கும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருந்தது. ப�ோதா குறைக்கு இங்கிலாந்தின் அரசவையே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக கப்பல்களை க�ொள்ளையடிக்கும் பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களை க�ொடுத்துக்கொண்டிருந்தது. தன் 71
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
ச�ொந்த நாடே தங்களுடைய வணிக கப்பல்களை அவ்வப்போது சூரையாடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக�ொள்ளாமலேயே அதனிடமே அபயம் தேடி நின்றது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. கடற்கொள்ளையர்களை ஒழிக்கிறேன் பேர்வழி என்று பெயருக்கு ஒரு குழுவை உருவாக்கினார் அன்றைய இங்கிலாந்து அரசர் வில்லியம் - III. அப்போது பலமாக இருந்த விக் கட்சியை சேர்ந்த மந்திரிகளும் பிரபுக்களும் இந்த குழுவில் இருந்தார்கள். தங்களின் உண்மையான பெயர்களை மறைத்துக்கொண்டு லார்ட் ச�ோமர்ஸ், லார்ட் ஓர்போர்ட், லார்ட் பெல்லம�ோன்ட் என்கிற பெயர்களில் உருவாக்கப்பட்டிருந்தது அந்த குழு. அதன் தலைவர் வில்லியம் - III. லார்ட் பெல்லம�ோன்ட் என்கிற ப�ோர்வையில் இருந்தவர் அமெரிக்க நியூ யார்க் நகரின் கவர்னர் ரிச்சர்ட் கூட். மலபார் கடற்கொள்ளையர்களை வேட்டையாடுவதற்கு என்று அட்வென்சர் கேலி (Adventure Galley) கப்பல் வாங்கப்பட்டது. அந்த நாட்களில் ப�ொதுவாக காணப்படாத புதுமையான வடிவமைப்புடன் கட்டப்பட்டிருந்த கப்பல் இது. பீரங்கிகள் 34டன் துடுப்புகளும் அதில் ப�ொருத்தப்பட்டிருந்தன. துடுப்புகள் அற்ற பாய்மரங்களை மாத்திரமே க�ொண்ட பெருவாரியான கப்பல்கள் அன்றைக்கு மேற்கில் வழக்கிலிருந்தன. அடுத்து இதற்கு கேப்டனை பிடிக்கும் வேலை த�ொடங்கியது. அந்த சமயத்தில் நியூ யார்கிலிருந்த லார்ட் பெல்லம�ோன்டுக்கு கேப்டன் கிட் பற்றி ச�ொல்லப்பட கிட் தேர்வு செய்யப்பட்டான்.
72
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
பிரைவட்டியரிங் ஒப்பந்தத்தை 1695 டிசம்பர் 11-ல் கிட்டிடம் க�ொடுத்தார் லார்ட் பெல்லம�ோன்ட். இங்கிலாந்தின் கப்பல் படை சார்பில் எழுதப்பட்டிருந்த அந்த ஒப்பந்தத்தில் அரசர் வில்லியம் – III கைய�ொப்பமிட்டிருந்தார். இந்திய பெருங்கடல் கடற்கொள்ளையர்களை தேடி செல்லும் வழியில் பிரெஞ்சு கப்பல்களை கண்டால் அவைகளை க�ொள்ளையடித்துக்கொள்ளலாம் என்றும் க�ொள்ளையடிக்கும் ப�ொருட்களில் 10% அரசருக்கு சேர வேண்டும் என்றும் குறிப்பிடபட்டிருந்தது. பிடிபடும் கடற்கொள்ளையர்களை தண்டிப்பது த�ொடர்பான மற்றொரு பிரைவட்டியரிங் ஒப்பந்தமும் தரப்பட்டது. ஒப்பந்தங்களை பெற்ற பிறகு தன்னுடைய குழுவிற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய நியூ யார்க் நகருக்கு வந்தான் கிட். அவன் தேர்வு செய்த ஆட்கள் அனைவரும் தலைமைக்கு கட்டுப்படாத, படும�ோசமான கடற்கொள்ளையர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இவர்களில் ஒரு சிலர் பின்னாட்களில் அவனுக்கு எதிராக திரும்பி அவனுடைய உயிருக்கு உலை வைக்கப்போகிறார்கள் என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய சகாக்களாக கிட் தேர்வு செய்திருந்த 120 கடற்கொள்ளையர்களின் பெயர் பட்டியலும் கிட்டின் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வரும்படி செய்தது. தன் கையிலிருந்த பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களை கேடயமாக வைத்துக�ொண்டு கடற்கொள்ளையில் ஈடபட திட்டமிட்டேதான் கிட் இவர்களை தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் என்று கருதுபவரும் இருக்கிறார்கள். நியூ யார்க் துறைமுகத்திலிருந்து 1696 செப்டம்பர் மாதம் அட்வென்சர் கேலி புறப்பட்டது. அடுத்து மூன்று மாதங்களில் மடகாஸ்கர் தீவின் வட மேற்கு தீவுக் கூட்டங்களில் ஒன்றான க�ோம�ோரா தீவை வந்தடைந்தது. வந்ததும் வராததுமாக அட்வென்சர் கேலியிலிருந்தவர்களை காலரா ந�ோய் தாக்கி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை அள்ளிக்கொண்டு ப�ோய்விட்டது. மீதமிருப்பவர்களை வைத்துக்கொண்டு எங்கிருந்து நூற்று கணக்கில் கூட்டம் கூட்டமாக திரியும் கடற்கொள்ளையர்களை பிடிப்பது. பல மாதங்கள் 73
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
இந்திய பெருங்கடல் பகுதியில் சுற்றி திரிந்தும் அவன் தேடி வந்த கடற்கொள்ளையர்களை அவன் காணவேயில்லை அல்லது அவன் கண்டும் அவர்களை பிடிக்காமல் விட்டிருக்கவேண்டும். கூட்டாளி க�ொள்ளையர்கள் கலகத்தில் ஈடுபட த�ொடங்கினார்கள். மலபார் வணிக கப்பல்களை க�ொள்ளையடிக்கும்படி அவனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
74
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இப்படியான தகராறுகளில் ஒன்றின்போது கிட், வில்லியம் மூர் என்னும் பர்ஸ்ட் மேட்டை இரும்பு வாளியை தூக்கி வீசி தலையில் அடித்து க�ொன்றான். கலகம் செய்யும் மற்றவர்களுக்கான ஒரு எச்சரிக்கையாக இந்த க�ொலை நிகழ்ந்ததா அல்லது எதிர்பாராமல் நடந்த ஒன்றா என்பதை பின்னாட்களில் தன் மீதான விசாரணையின் ப�ோது கிட்டினாலேயே தெளிவாக விளக்க முடியாமல் ப�ோனது. கடற்கொள்ளையிலும் ஈடுபடாமல், தேடி வந்த கடற்கொள்ளையர்களையும் பிடிக்காமல் வெற்றுக்கு இந்திய கடலில் சுற்றிக்கொண்டிருந்த கிட் மீது சந்தேகமேயில்லாமல் கடற்கொள்ளையன்தான் என்று முத்திரை குத்தப்படுவதற்கான சந்தர்பமும் 1698 ஜனவரி 30-ல் குவெத்தா மெர்சன்ட் (Quedah Merchant) என்கிற வணிக கப்பலின் வடிவில் வந்து சேர்ந்தது. குவெத்தா மெர்சன்ட் 400 டன் எடை க�ொண்ட ஆர்மீனிய வணிக கப்பல். மஸ்லின், பட்டு துணி, தங்கம் மற்றும் வெள்ளி ப�ொருட்களுடன் சென்னைப்பட்டிணத்திலிருந்த செயின்ட் ஜார்ஜ் க�ோட்டை துறைமுகத்திற்கு வந்து க�ொண்டிருந்தது. கப்பலின் கேப்டன் ஆங்கிலேயரான ரைட் ஆனால் அவர் கப்பலின் பாதுகாப்பிற்கு பிரெஞ்சு அரசு மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களை வைத்திருந்தார்.
75
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
கேப்டன் இங்கிலாந்து குடிமகன் என்பதால் குவெத்தா மெர்சன்ட் கப்பலை தாக்காமல் விட்டு விடலாம் என்று கிட் ச�ொல்ல அவன் வைத்திருப்பது பிரெஞ்சு ஆவணங்கள் அதனால் அதை க�ொள்ளையடிப்பது எந்த விதத்திலும் விதி மீறல் இல்லை என்று ச�ொல்லிவிட்டு கிட்டின் மறு வார்த்தைகளுக்கு கூட காத்திராமல் குவெத்தா மெர்சன்ட்டை க�ொள்ளையடித்தார்கள் அவனுடைய கூட்டாளிகள். ப�ோதா குறைக்கு குவெத்தா மெர்சன்ட் கப்பலையும் அதன் கேப்டனிடமிருந்து பிடுங்கிக�ொண்டார்கள். கேப்டன் ரைட்டை சென்னைப்பட்டிணத்தில் சேர்த்துவிட்டு இரண்டு கப்பல்களுடன் மடகாஸ்கரை ந�ோக்கி சென்றான் கிட். சென்னைப்பட்டிண கிழக்கிந்திய கம்பெனி கவர்னர் மூலம் குவெத்தா மெர்சன்ட் க�ொள்ளையடிக்கப்பட்ட செய்தி இங்கிலாந்திற்கு செல்ல கிட் தேடப்படும் கடற்கொள்ளையர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டான். அந்த சமயத்தில் இங்கிலாந்தில் அரசருடன் கூட்டு வைத்துக்கொண்டு ஊழல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விக் கட்சியினர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துக�ொண்டிருந்தது. விக் கட்சியை சேர்ந்த மந்திரிகளையும் பிரபுக்களையும் நீதிமன்றத்திற்கு இழுத்து நாறடிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த எதிர் கட்சியினர் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த சமயமாக பார்த்துதான் கிட்டின் மீதான குற்றச்சாட்டு அங்கே ப�ோய் சேர்ந்தது. அரசரும் அவருக்கு உடந்தையாக சில விக் கட்சி பிரமுகர்களும்தான் கேப்டன் கிட்டிற்கு பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களை க�ொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்றும் கிட் அடிக்கும் க�ொள்ளையில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது என்றும் அரசல் புரசலாக பேச்சுகள் ப�ோய் க�ொண்டிருக்க குவெத்தா மெர்சன்ட் கப்பல் க�ொள்ளை அதை உண்மை என்றாக்கிவிட்டது. கிட் கடற்கொள்ளையன் என்று அறிவிக்கப்பட அவனை ஒப்பந்தம் செய்த நாம் முன்பே பார்த்த லார்ட்களும் அரசரும் அவசரம் அவசரமாக அவனை கை கழுவி தங்களுக்கும் அவனுக்கும் எத்தகைய த�ொடர்பும் இல்லை என்று நிருபிக்கும் வேலைகளில் இறங்கினார்கள். அதாவது கிட்டிற்கு அவர்கள் க�ொடுத்த ஒப்பந்தங்களுக்கான ஆதாரங்களை அழிக்கும் வேலையில். 76
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கிட் இங்கிலாந்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இரண்டு கட்சிகளுக்கு இடையிலான அரசியல் பகடையாட்டத்தில் தன்னுடைய தலை தேவையில்லாமல் உருட்டப்படுவதை அறிந்துக�ொள்வதற்கான எத்தகைய வாய்ப்புகளும் இல்லாமல் 1698 ஏப்ரல் 1-ம் தேதி மடகாஸ்கர் தீவில் தங்கியிருந்தான் கிட். குவெத்தா மெர்சன்ட் கப்பலின் பெயரை அட்வென்சர் பிரைஸ் (Adventure Prize) என்று மாற்றினான். அட்வென்சர் கேலி கலகலத்துவிட்டிருக்க அதிலிருந்த இரும்பு ப�ொருட்களை முற்றிலும் எடுத்துக்கொண்டு அதை எரித்துவிட்டான். குவெத்தா மெர்சன்ட் க�ொள்ளை ப�ொருட்களுடன் அட்வென்சர் பிரைஸ் கப்பலில் வீடு திரும்ப முடிவு செய்தான். அவன் கரீபியன் தீவுகளை வந்தடைந்த பிறகே இங்கிலாந்தில் அவனும் அவனுடைய கூட்டாளிகளும் தேடப்படும் கடற்கொள்ளையர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதை தெரிந்துக�ொண்டான். குவெத்தா மெர்சன்ட் கப்பல் க�ொள்ளையே இதற்கான முக்கிய காரணமாக இருந்ததை அறிந்துக�ொண்ட அவன் அவசரம் அவசரமாக அட்வென்சர் பிரைஸ் கப்பலை மறைத்து வைக்கும் காரியத்தில் இறங்கினான். அது தனக்கு எதிரான சாட்சியமாக மாறிவிடும் என்பதால். சிலர் கரீபியன் தீவிலேயே அட்வென்சர் பிரைஸ் கப்பலை அவன் எரித்து கடலுக்குள் மூழ்கடித்து விட்டதாக கருதுகிறார்கள். சிலர் அதை அவன் அங்கே மறைத்து வைத்ததாக குறிப்புகளை தருகிறார்கள்.
77
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
அடுத்து தன்னிடமிருந்த க�ொள்ளை ப�ொருட்களை பல பாகங்களாக பிரித்து கரீபியன் தீவுகளிலிருந்த தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் பத்திரமாக வைத்திருக்கும்படி தான் திரும்ப வந்து பெற்றுக்கொள்வதாகவும் க�ொடுத்து வைத்தான். க�ொள்ளை ப�ொருளின் சில பாகங்களை கரீபியன் தீவுகளில் ஒன்றான கார்டினர்ஸ் தீவில் புதைத்து வைத்தான். அடித்த க�ொள்ளையை ஆள் நடமாட்டம் இல்லாத தீவு ஒன்றில் புதைத்து வைத்த முதலும் கடைசியுமான கடற்கொள்ளையான் கேப்டன் கிட் மாத்திரமே. எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்துவிட்டதாக நினைத்த கிட் நியூ யார்க் நகருக்கு சென்றான். தன்னிடம் பிரைவட்டியரிங் ஒப்பந்தங்கள் இருப்பதாகவும் தனக்கான தண்டனை விலக்கை பெற்று தரும்படியும் லார்ட் பெல்லம�ோன்டிற்கு தகவல் அனுப்பினான். கிட்டை கைது செய்து இங்கிலாந்திற்கு அனுப்பி தங்களுக்கும் அவனுக்கும் எத்தகைய த�ொடர்பும் இல்லை என்பதாக காட்ட நினைத்திருந்த “லார்ட்களுக்கு” வாய்ப்பை தானாகவே ப�ோய் கைகளில் க�ொடுத்தான் கிட். அவனை கைது செய்யும் தங்களின் திட்டத்தை அவன் ம�ோப்பம் பிடித்துவிடாமலிருக்க லார்ட் பெல்லம�ோன்ட் முதலில் தண்டனை விலக்கு பெறுவது கடினம்தான் இருந்தாலும் தான் முயற்ச்சி செய்வதாக உறுதி அளித்தார். அவருடைய பேச்சை நம்பிய கிட் அவரை சந்திக்க முடிவு செய்தான். அந்த முதல் சந்திப்பிலேயே அவனை கைது செய்துவிட்டால் அவன் மறைத்து வைத்திருக்கும் க�ொள்ளை ப�ொருட்களை கண்டு பிடிக்க முடியாது என்பதால் அவனை விட்டு பிடிக்க திட்டம் ஏற்பாடானது. அவன் மறைத்து வைத்திருந்த க�ொள்ளை ப�ொருட்களை மீட்டு அவனுக்கு எதிரான வலுவான சாட்சியமாக அதை காட்ட லார்ட் பெல்லம�ோன்ட் முடிவு செய்திருந்தார். முதல் சந்திப்பில் தன்னால் முடிந்தவரை அவனுக்கு தண்டனை விலக்கு பெற்று தருவதாக மீண்டும் உறுதி அளித்தார் லார்ட். கையுடன் அவனுக்கு க�ொடுக்கப்பட்டிருந்த பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களையும் திரும்ப பெற்றுக்கொண்டார். அந்த ஒப்பந்தங்களை தானே இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக கூறி. 78
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இதையெல்லாம் நம்பிய அவன் சற்று சூதானம் இழக்க அவனுக்கு தெரியாமலேயே அவனுடைய த�ொடர்புகள் அனைத்தும் முற்றிலுமாக ஆராயப்பட்டு கரீபியன் தீவுகளுக்கு லார்ட் பெல்லம�ோன்டின் ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். அவன் க�ொள்ளை ப�ொருட்களை க�ொடுத்து வைத்திருந்த அனைத்து நண்பர்களிடமிருந்தும் அவை மீட்கப்பட்டன. கார்டினர்ஸ் தீவில் அவன் புதைத்து வைத்திருந்த க�ொள்ளை ப�ொருட்களும் த�ோண்டி எடுக்கப்பட்டு லார்ட் பெல்லம�ோன்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தன்னிடம் வந்த அனைத்து க�ொள்ளை ப�ொருட்களையும் அப்படியே கிட்டிற்கு எதிரான சாட்சியங்களாக குறிப்பிட்டு இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தார் லார்ட். தாங்கள் கிட்டிற்கு க�ொடுத்த பிரைவட்டியரிங் ஒப்பந்தங்களை மாத்திரம் யார் கண்ணிலும் அவ்வளவு சீக்கிரத்தில் அகப்பட்டுவிடாதபடி மற்ற ஆவணங்களுக்கு மத்தியில் வைத்து அனுப்பிவைத்தார். ஜூலை 6, 1699 அன்று மீண்டும் கிட் லார்ட் பெல்லம�ோன்டை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. தனக்கு பின்னால் நடந்த குழி பறிப்பு வேலைகளை சற்றும் அறிந்திராத கிட் சந்திப்புக்கு சென்றான். அன்றே அவன் கைதும் செய்யப்பட்டான் லார்ட் பெல்லம�ோன்டால். கிட் ஸ்டோன் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு தனிமை சிறையில் வைக்கப்பட்டான். ஓராண்டுகளுக்கு. ஓராண்டு கழித்து விசாரணைக்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டான். இங்கிலாந்தில் ட�ோரி கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டிருக்க விக் கட்சியினரின் வண்டவாளங்களை வெளியில் க�ொண்டு வர கிட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைத்தார்கள். சூழ்நிலையை அவதானித்து ட�ோரி கட்சியினர் எதிர்பார்த்தபடி கிட் நீதிமன்ற விசாரணையின் ப�ோது செயல்பட்டிருந்தால் அவன் தண்டிக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம் ஆனால் கிட் அதை செய்ய தவறிவிட்டிருந்தான். கிட் தன்னை நிரபராதி என்றே திரும்ப திரும்ப ச�ொல்லிக்கொண்டிருந்தான். இங்கிலாந்தின் சட்டத்தை மீறி தான் எதையும் செய்யவில்லை என்றும் தன்னுடைய பிரைவட்டியரிங் 79
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
நடவடிக்கைக்கு அரசர் மற்றும் கப்பல் படையின் சட்ட பூர்வமான பிரைவட்டியரிங் ஒப்பந்தங்கள் இருக்கின்றன என்றும் அதை லார்ட் பெல்லம�ோன்ட் தனக்கான சாட்சியமாக நீதிமன்றத்திற்கு அனுப்பியிருப்பதாகவும் தன் தரப்பு வாதமாக முன் வைத்தான். ஆனால் நீதிமன்றம் எவ்வளவு தேடியும் மலைப்போன்ற ஆவணங்களிலிருந்து அந்த ஒப்பந்தங்களை அவனுக்கான சாட்சியமாக எடுக்கவே முடியவில்லை. வேற வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் அவனுக்கு ஒப்பந்தங்களை க�ொடுத்த “லார்ட்கள்” விசாரணை சமயத்தில் அதில் வெளியில் வந்துவிடாதபடி பார்த்தும் க�ொண்டார்கள். விசாரணைகள் முடிந்து கிட் கடற்கொள்ளையன் என்று நிருபனமானதாக அறிவிக்கப்பட்டு 23 மே, 1701-ல் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தேம்ஸ் நதிகரையில் டில்பரி சதுக்கத்தில் வைத்து அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட அவனுடைய உடல் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த தூக்கு கயிற்றிலேயே த�ொங்கிக்கொண்டிருந்தது.
80
கேப்டன் செங்-ஐ-ச�ோ (Cheng I Sao)
ஒ
ரு குறிப்பிட்ட தூரம் வரை கடலே கண்ணிற்கு தெரியாதவாறு ஐநூறு, அறுநூறு ஜங்ஸ் என்றழைக்கப்படும் பழைய சீன கப்பல்களின் அணிவகுப்பு, பியர்ல்ஸ் ஆற்றின் சமவெளி நகரங்களை ந�ோக்கி.
இரத்த வாடைக்கு ஓடி வந்து ம�ொய்க்கும் ஈ கூட்டம் ப�ோல அந்த கப்பல்கள் முழுவதும் க�ொள்ளையர்கள் புறப்படுவதற்கு தயாராய். கிட்டதட்ட ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் வரை இருந்தது அவர்களுடைய எண்ணிக்கை. செங்-ஐ-ச�ோவின் தலையசைப்பிற்காய் காத்து கிடந்த அவர்கள் எல்லோருடைய கண்களிலும் க�ொலைவெறி. அத�ோடு பார்வையில் படும் அனைத்தையும் தங்கள் கப்பலுக்கு க�ொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்கிற களவிற்கான பரபரப்பும் இருந்தது. இதுவரை ப�ோகா டிக்ரிஸ்யை (Bocaa Tigris) தாண்டி செல்லாமல் இருந்த அவர்கள் முதன் முதலாக அவற்றை கடந்து மிக செழுமையும், வளமையும் வாய்ந்த பியர்ல்ஸ் ஆற்று சமவெளி கிராமங்களை தாக்க தயாராகியிருக்கிறார்கள், தங்கள் தலைவியின் கட்டளைப்படி. (தற்போது Human என்று அழைக்கப்படும் Bocaa Tigris சீனாவின் பியர்ஸ் ஆற்றின் சமவெளியில் இருக்கும் ஒரு ஜல சந்திப்பு. இது வடக்கு பக்கம் shiziyang வையும் தெற்கு பக்கம் Lingdinasuang வையும் பிரிக்கிறது) இத�ோ… செங்-ஐ-ச�ோவும், அவளுடைய கணவருமான செங் ப�ோவும் (Cheng Pao) புறப்படுவதற்கான உத்தரவை க�ொடுக்க பெரும் ஆரவாரத்துடன் கப்பல்கள் நகர துவங்கியது. 81
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
82
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
அவர்களுக்கான இலக்கு வளமையான கிராமங்கள் மற்றும் செழுமையான நகரங்கள். இதுவரை கடலில் வரும் சரக்கு கப்பல்களையும், சில தீவு கூட்டங்களையும் தாக்கி க�ொள்ளையடித்தவர்கள் முதன் முதலாக கட்டமைக்கப்பட்ட கிராமங்களையும் நகரங்களையும் தைரியமாக தாக்க தயாராக காரணம். ஒன்றே ஒன்று தான், அது செங்-ஐ-ச�ோ. இவர்கள் கடலில் நகர்ந்து க�ொண்டிருக்கும் ப�ோதே நாம் செங்-ஐச�ோவை பற்றி பேசி விடுவ�ோம். இவர்கள் கரையிறங்கி விட்டால், நடக்க ப�ோகும் க�ொலை, க�ொள்ளைகளுக்கிடையே பழைய கதைகளை பேச முடியாமல் ப�ோகக் கூடும். செங்-ஐ-ச�ோ, சீனாவின் அதி முக்கிய துறைமுகமான கான்டன் (Contan -தற்பொழுது Guangzhou) நகரத்தை சேர்ந்தவர். பெண்களை ப�ோக ப�ொருளாகவும், கணவருக்கு மனைவியாக பணிவிடை செய்பவராகவும், மகன்களை பெறுபவராகவும் மட்டுமே கருதி இயங்கி க�ொண்டிருந்த அக்கால சீனாவின் தெற்கு மாகாணத்தை சேர்ந்த, தெற்கு சைனா கடற்கரையை ஒட்டியிருந்த துறைமுக நகரம் தான் கான்டன். இந்த ஒரு துறைமுகத்தின் வழி மட்டும் தான் வெளி நாட்டவர் சைனாவிற்குள் சரக்குகளை இறக்கவும் ஏற்றவும் முடியும். மிக பெரும் இலாபத்தை அள்ளி குவிக்கும் கப்பல் வாணிகத்தில் சீனர்களுடனான வியாபாரத்திற்கு ஐர�ோப்பியர்களும் குறிப்பாக பிரிட்டிஷ், டச்சு, ப�ோர்ச்சுகீசியர்களும், அமெரிக்கர்களும் ப�ோட்டி ப�ோட கான்டன் நகரம் இருபத்தி நான்கு மணி நேரமும் பரபரப்புடன் இயங்கி க�ொண்டிருந்தது. பணமும், பல விதமான கலாச்சாரங்களும், பரபரப்பும், மிக நீளமான கடல் பயணமும் சேர்ந்தால் இறுதியில் அவர்களுக்கு தேவை உல்லாசம் தானே. கிட்டதட்ட பல நூறு மடங்கு இலாபத்தில் ப�ொருட்களை விற்ற கடல் வியபாரிகள் கை நிறைய பணத்துடன் முதலில் தேடி அலைவது. 83
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
பெண் உடல்கள் தானே… அப்படியான பரபரப்பு கான்டன் நகரில், பூக்கள�ோடு கூடிய சிறுபடகுகளில், ப�ோதை, ஆடல், பாடல்களுடன் பெண்களும் கிடைக்க விபச்சாரம் க�ொடிகட்டி பறந்தது. மிக பெரிய துறைமுகத்தை ந�ோக்கி பல நூற்றுக்கணக்கான கப்பல்கள் சைனா கடல் மற்றும் இந்திய கடல் முழுவதும் சரக்குகளுடன் இங்கும் அங்கும் அலைய ஆரம்பிக்க, சர்க்கரையை ந�ோக்கி வரும் எறும்பு ப�ோல், கடற் க�ொள்ளையர்களும் இந்திய கடல் மற்றும் சைனா கடல் ந�ோக்கி கூட்டமாய் வந்து தங்கள் கைவரிசையைக் காட்ட துவங்கினர். வந்தவர்கள் பல மாதங்கள் கடலில் கண்கொத்தி பாம்பாக காத்து கிடந்து களவாடிய ப�ொருக்களுடன் தங்களை உற்சாக படுத்திக்கொள்ள கான்டன் ந�ோக்கி வந்தனர். அப்படியாக வந்தவர் தான், முக்கியமான சிவப்பு க�ொடி கடற் க�ொள்ளையர் கூட்டத்தை சேர்ந்த செங் ஐ (cheng I). அவர் தேடி சென்ற பூக்கள் படகில் செங்-ஐ-ச�ோ இருக்க, முதல் சந்திப்பிலேயே மனதை பறி க�ொடுத்த செங் ஐ, செங்-ஐ-ச�ோவை தனது மனைவியாக்கி க�ொண்டார். செங்-ஐ-ச�ோ என்பதற்கு அர்த்தம் செங் ஐயின் மனைவி என்பதாகும் (wife of Cheng I). அப்படியெனில் இயற்பெயர்? சில வரலாற்று ஆசிரியர்கள் அவருடைய பெயர் சிங் சிலி (Ching Slih) அல்லது செங் யச�ோ (Zheng Yiaso) அல்லது யங் (Shih Yang) ஆக இருக்கலாம் என ச�ொல்கிறார்கள். ஆனால் உண்மையான பெயர் உறுதி செய்யப்படவில்லை. பெயரில் என்ன இருக்கிறது. பெயரில் செங்-ஐயினுடைய மனைவி என அழைக்கப்பட்டாலும், செங்-ஐயை விட வரலாற்றில் தனித்து நின்றவர். கியூங் (Qing) அரசர்களையே இறுதியில் தனது க�ோரிக்கையை ஏற்க வைத்தவர். வரலாற்றில் எந்த கடற்கொள்யைர்களும் செய்யாத பல விஷயங்களை செய்தவர். 84
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இப்படியான உடல் விற்கும் பெண்ணாக இருந்து கடற் க�ொள்ளையர் கூட்டத்தின் தலைவியான செங்-ஐ-ச�ோ விற்கும், செங்-ஐக்கும் திருமணம் நடக்கும் ப�ொழுது செங்-ஐயின் கடற்கொள்ளை கூட்டம் வியட்நாமின் டைசன் (Tay-Son) அரசுக்கு உள் நாட்டு புரட்சியளர்களை அடக்க உதவி க�ொண்டிருந்தது.
குறைந்த அளவில் இருந்த கடற்கொள்ளையர்கள் டை-சன் அரச வம்சத்தால் பல ஆயிரமாக பெருக, அவர்களுக்கு சிறந்த ஆயுதங்களும், கப்பல்களும் டை-சன் அரசால் வழங்கப்பட்டது. வியட்நாம் கடற் பகுதியை பாதுகாத்தும் மற்ற கப்பல்களை க�ொள்ளை அடித்தும் வந்த கடற்கொள்ளையர் கூட்டம் 1802-ல் டைசன் அரசின் வீழ்ச்சிக்கு பிறகு என்ன செய்வது என கையை பிசைந்த நேரத்தில், டை-சன் கடற்கொள்ளை படை பிரிவின் தலைவரான செங் சிய்யும் (Cheng chi’I) அந்நேரம் பார்த்து ப�ோரில் க�ொல்லப்பட, செங்-ஐ மெதுவாக தலைவர் பதவிக்கு குறி வைத்தார். டை-சனின் வீழ்ச்சியால் அலைபாய்ந்து க�ொண்டிருந்த குழுக்களை ஒருங்கிணைத்த செங்-ஐ புதிய க�ொள்கைகளையும், இருப்பிடங்களையும் அமைத்தார். அதன் மூலமாக தலைவர் பதவியையும் கைப்பற்றினார். 85
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
இதை த�ொடர்ந்து அடுத்த ஐந்து வருடங்களில் கிட்டதட்ட முந்நூறு கப்பல்களை தனக்கு கீழ் க�ொண்டு வந்த செங்-ஐ, 1807-ல் வியட்நாம் கடற்கரையில் வைத்து க�ொல்லப்பட்டார். அது வரை செங்-ஐயின் மனைவியாகவும் துணை தலைவராகவும் இருந்த செங்-ஐ-ச�ோ தனது கணவரின் பதவியை தானே ஏற்று க�ொள்ள முற்பட்டார். ஆனால் ஏத�ோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் சரியாக காய் நகர்த்தினார். கிட்டதட்ட ஐம்பதாயிரம், அறுபதாயிரம் கடற்கொள்ளையர்கள். ஐநூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள். அனைத்தையும் சரியாக கையாள வேண்டும். க�ொள்ளையர்கள் ஏற்கனவே அவருடைய ஆளுமையை பார்த்திருந்தாலும் சரியான ஒரு பக்க துணை வேண்டும் என நினைத்தவள், ஆட்சிக்கு க�ொண்டு வந்தது செங்ஐயின் வளர்ப்பு மகனான செங்-ப�ோவை (Cheng Pao). அவனை தனக்கு பக்க துணையாக வைத்து க�ொண்டவள் பிறகு சில ஆண்டுகளில் அவனையே மணந்து க�ொள்ள, கப்பலின் தலைவி பதவியில் இருந்து அவளை யாரும் அசைக்க முடியாதது உறுதியானது. தலைமை ப�ொறுப்பில் செங்-ஐ-ச�ோ வந்தவுடன் மிக கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டது. அதன்படி உயர் நிலை தலைவர்களின் கட்டளைப்படி கடற்கொள்ளையர்கள் கீழ் படிந்து நடக்க வேண்டும். அவ்வாறு நடக்க தவறினால் அது முதன்மை குற்றமாக எடுத்துக் க�ொள்ளப்பட்டது. அடுத்து பிடித்து வரப்படும் பெண்களை தலைவரின் அனுமதி இல்லாமல் கற்பழிப்பத�ோ அல்லது திருமணம் செய்வத�ோ முதன்மை குற்றமாக கருதப்பட்டது. அடுத்து க�ொள்ளையடித்த ப�ொருட்கள் கப்பலுக்கு க�ொண்டுவர பட வேண்டும். அவைகளை தலைவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதும் முதன்மை குற்றம் தான். மேலும் பிடித்து வரப்படும் பெண் கைதிகளின் விருப்பத்தின் பேரிலும் கூட த�ொடர்பு வைத்து க�ொண்டாலும் அந்த க�ொள்ளையனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அந்த பெண்களின் காலில் அதிக எடை க�ொண்ட ப�ொருளை கட்டி கடலுக்குள் தள்ளி விடுவார்கள். முறையான விடுப்பு இல்லாமலும் தேவையில்லாமலும் கடற்கொள்ளையர்கள் 86
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
வேலைக்கு வரவில்லை எனில் அவர்களுடைய ஒரு காது அறுக்கப்படும். இப்படியாக பல கடுமையான சட்ட திட்டங்கள் செங்-ஐ-ச�ோ காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் லாட்ரைன் பாஸஸ் (Ladrane passes) என்ற முறை செங்-ஐச�ோவால் முறைப்படுத்தப்பட்டது. அது பிளாக் ரெண்ட் என்றும் அழைக்கப்பட்டது. அதன் படி கடற்கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை கடக்க வியாபார கப்பல்கள் குறிப்பிட்ட த�ொகையை க�ொடுக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட த�ொகை க�ொடுக்கும் கப்பல்கள் தாக்கப்படாது. இவ்வாறு கட்டுக�ோப்பாக கடற்கொள்ளையர்களை வழிநடத்தி வந்த செங்-ஐ-ச�ோ, சரக்கு கப்பல்களை சூறையாடி வந்த வேலையில் துணிந்து எடுத்த முடிவு தான் பியர்ஸ் துறைமுக நகரங்களின் மீதான தாக்குதல். ஏற்கனவே திட்டமிட்ட வியூகம் தான். நகரத்தில் ஆயுதங்களுடன் நுழைவது, அவர்களை சரணடைய ச�ொல்வது, சரணடைந்தால் மிக பெரும் த�ொகையை பணயமாக கேட்பது. அவர்கள் ஓடி சென்று ஒளிந்து க�ொண்டால் ஊருக்குள் புகுந்து க�ொள்ளை அடிப்பது. கையில் அகப்படும் ஆட்களை க�ொல்வதும் பெண்களை தூக்கி வருவதும் நடக்கும். எதிர்த்தால் ஊரையே எரித்து க�ொத்து க�ொத்தாக மக்களை க�ொன்று குவித்து பெண்களை சிறைபிடித்து, வழக்கம் ப�ோல் க�ொள்ளை அடிப்பதுதான். ம்ம்ம்… இத�ோ காட்சிக்கு வருவ�ோம். சிவப்பு க�ொடிகள் அசைய செங்-ஐ-ச�ோவின் கப்பல் நடுவில். அவளுடைய கப்பல் முழுவதும் பெரும்பாலும் டை-சன் ப�ோரில் பங்கெடுத்த சீன மற்றும் மங்கோல் கடற்கொள்ளையர்கள்தான். கதைக்கு வருவ�ோம். செப்டம்பர் 25, 1809 பியர்ல்ஸ் சமவெளியை ந�ோக்கி கிளம்பிய கப்பல்களில் இருந்து இறங்கி வரிசையாக கிராமங்களையும், நகரங்களையும் தாக்க துவங்கினர். பல கிராம மக்கள் பயந்து பின் வாங்க, சிலர் இவர்கள் கேட்ட த�ொகையை க�ொடுக்க, சிலர் எதிர்த்து ப�ோராடினர். த�ொகையை க�ொடுத்தாலும், அவர்களை சூறையாட விட்டாலும், எதிர்த்து ப�ோராடினாலும் இறுதியில் ஒன்றும் மிச்சம் 87
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
இருக்க ப�ோவதில்லை என்பது தான் உண்மை. பெண்களை தூக்கி செல்வதும் தடுக்கபட ப�ோவதில்லை. செங்-ஐ-ச�ோவின் தலைமையில் வந்த கடற்கொள்ளையர்களை எதிர்த்தவர்களில் மிக முக்கியமானவர்கள் கான்டன் நகரின் தெற்குபுறம் இருந்த கான்-சின் (Kan-Shin) என்ற நகரத்தை சேர்ந்தவர்கள். கடற்கொள்ளையர்கள் வருவதை அறிந்த அவர்கள் முதலியே தடுப்பு சண்டையை மேற்கொண்டனர். முதல் தடுப்பை உடைத்து உள்ளே நுழைந்த கடற்கொள்ளையர்களை அதற்கு அடுத்த படியில் இருந்தவர்கள் எதிர்த்து ப�ோராடினர். கத்திகள் முதல் பல விதமான ஆயுதங்களுடன் ப�ோராடிய மக்களை வழி நடத்தியது ச�ோ-வேய்-டென்ஸ் (Cho-Wei-tens) என்ற குத்து சண்டை ஆசான். அவரும் அவருடைய மனைவியும் மாணவர்களும் சண்டையை முன் எடுக்க, உடன் மக்களும் இணைந்து க�ொண்டார்கள். இதில் செங்-ஐ-ச�ோவின் கடற்கொள்யைர்கள் முதலில் திணறி ப�ோனது உண்மைதான். ஆனால் அடுத்தடுத்து வந்து குவிந்த கடற்கொள்ளையர்களின் பெரும் எண்ணிக்கைக்கு முன் மக்களின் வீரம் த�ோற்க, அந்த நகரம் தீக்கு இரையாக்கப்பட்டது. நகரம் சூறையாடப்பட்டது. இது முடிந்ததும், அடுத்தடுத்த நகரம் என செங்-ஐ-ச�ோவின் ஆட்டம் முடிவில்லாமல் சென்றது. இதை தடுக்க வந்த சீன ப�ோர் கப்பல்களும் த�ோற்கடிக்கப்பட்டது. பல வீரர்கள் க�ொல்லப்பட்டார்கள். இவை நடந்தேறிய ஒரு வாரத்திற்குள், லிட்டில் ஹாம்போவை செங்-ஐ-ச�ோ மிகவும் சாமர்தியமாக வீழ்த்தினார். அதாவது சீன ப�ோர் கப்பலின் த�ோல்வியை பார்த்த லிட்டில் ஹாம்போ தனது படையை இரண்டாக பிரித்து பாதியை கடற்கரையிலும், மீதியை நகர எல்லையிலும் நிறுத்தி வைக்க, செங்-ஐ-ச�ோ இந்த இரு அணியையும் ஒரே நேரத்தில் தாக்கி வெற்றி பெற்றார். இப்படியாக கிட்டதட்ட இரண்டு மூன்று மாதங்களில் பியர்ல்ஸ் சமவெளி நகரங்களை சூறையாடிய கடற்கொள்ளை கூட்டம், ப�ோர்சுசீகியர்கள் மற்றும் சீன ப�ோர் கப்பல்களை த�ோற்கடித்து நிலை க�ொண்டது. பல கடற்கொள்ளைகளை நிகழ்த்திய செங்-ஐச�ோ சரணடையும் நிலையும் வந்தது. ஆனால் அந்த நிலையையும் 88
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கூட தனக்கும் தனது கூட்டத்திற்கும் சாதகமாக மாற்றிய ஆளுமை செங்-ஐ-ச�ோ உடையது. ப�ொதுவாக சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை, பச்சை மற்றும் கருப்பு ஆகிய க�ொடிகளுடன் இயங்கிய தனி தனி கடற்கொள்ளை குழு அனைத்திற்கும் தலைவர், சிவப்பு க�ொடி கூட்டத்தின் தலைவர் தான். அவர் தான் அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர். அவர்களுடைய கட்டளைப்படி தான் அனைவரும் செயல்பட முடியும். அதன் படி செங்-ஐ-ச�ோ இவர்கள் அனைவருக்கும் தலைவியாகவும், சிவப்பு க�ொடியுடன் கூடிய கப்பல்களுக்கு தலைவியாகவும் இருக்க, செங்-ஐ-ச�ோவிற்கு அடுத்த நிலை கப்பல் கருப்பு க�ொடிகளுடன் கூடியது. அதன் தலைவர் கூ-பிய�ோ-கேய் (Kuo pio-kai), செங்-ஐச�ோவின் பதவிக்கு ஆசைப்பட்டு அது முடியாமல் ப�ோக சீன அரசிடம் சரணடைகிறார். இந்த சூழ்நிலையில் செங்-ஐ-ச�ோவும் சரணடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஆனாலும் தனது நிலையை குறித்து கவலைபடாத செங்-ஐ-ச�ோ, சீனாவின் கியுங் அரசர்களுடன் செய்த உடன்படிக்கை மற்ற எந்த கடற்கொள்ளை தலைவனும் செய்யாத ஒன்று. அந்த உடன்படிக்கையின் சாரம், க�ொள்ளையடித்த ப�ொருட்கள் க�ொள்ளையர்களுக்கு ச�ொந்தமானது. அது அவர்களின் மறு வாழ்விற்கு தேவை. தனது கணவர் செங்-ப�ோவிற்கு இராணுவத்தில் உயர் பதவி வழங்க வேண்டும். அனைத்து கடற்கொள்ளையர்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் விடுவிக்கப்படவேண்டும். தனது கணவர் செங்-ப�ோ தனி கப்பல் வைத்துக் க�ொள்ளலாம். கடற்கொள்ளையர்களை முடிந்தால் இராணுவத்தில் எடுத்துக்கொள்ளலாம். அது தவிர அவர்களின் மறுவாழ்விற்கு அரசாங்கம் முடிந்த கட்டமைப்புகளை செய்ய வேண்டும். தனது கூட்டாளிகள் முன்பு செய்த அனைத்து க�ொலை, க�ொள்ளை மற்றும் கற்பழிப்பு குற்றங்கள் முழுமையாக மன்னிக்கப்பட வேண்டும். அவர்கள் புது வாழ்வு துவங்கவும், வாழ்வாதாரத்திற்கும் வழிவகைகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதே. 89
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
இந்த உடன்படிக்கை 1810-ல் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு அமைதியாக செங்-ப�ோவுடன் பிஜியன் புர�ோவின்ஸில் (Fujian province) வாழ்க்கை நடத்திய செங்-ஐ-ச�ோ, 1822-ல் செங்-ப�ோ இறக்க, தனது 69-வது வயதில் 1844-ல் இறந்தார். இந்த காலகட்டத்தில் செங்-ஐ-ச�ோ மிக பெரிய விபசார விடுதியும், சூதாட்ட கிளப்பும் நடத்தியதாக சில வரலாற்று ஆசிரியர்கள் ச�ொல்கிறார்கள். அதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
90
பின்னிணைப்பு
கீழ் வரும் எழுத்து ஆவணங்கள், PRIVATEERING AND PIRACY IN THE COLONIAL PERIOD: ILLUSTRATIVE DOCUMENTS புத்தகத்திலிருந்து மேற்கோளுக்காக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கேப்டன் ஏவ்ரி குறித்த எழுத்து ஆவணங்கள் New Providence SS. Whereas in the month of Aprill in the year of our Lord God one Thousand Six hundred and ninety six Capt. Henry Every als Bridgeman came into the Harbor of new Providence with the Shipp Charles als Fancy, which said Capt. Every and his Shipps Crew were few days after their arrivall thought and supposed to be by the Major Part of the Island of Providence to be guilty of piracy upon the open Seas, And that the with in mentioned John Devin was one of the Ships Company, and was lately apprehended and taken as one of the said Pirates in order to be 91
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
brought to his Tryall, which was accordingly done the 22d of this Instant August, and the Bill being presented against the within mentioned John Devin to the Gran Jury, which sd Grand Jury found the Bill, and afterwards the sd John Devin was brought to the Court, and holding up his hand was arraigned; The Petty Jury being sworne, the Attorney Gen’ll opening the matter to the Court and Jury against the sd John Devin, The Petty Jury returning to the Court found the within mentioned John Devin not Guilty, upon which the sd John Devin was cleared by proclomation, as by the publick Entrys doth and may more at large appear: Whereupon and upon the humble Requestt to me made by the sd John Devin, I, Ellis Lightwood Esq., Chief Judge, have thought fitt to certifie this under my hand, and ordered the publick Seale of this Goverment to be hereunto affixed as a Testimony of his the sd John Devins Innocency relating to the supposed piracy of Capt. Every als Bridgeman in the ship Charles als Fancy. ELLIS LIGHTWOOD New England. Anno Rs. Gulielmi 3d Decim. At a Court of assize and General Goal Delivery holden at Boston for the County of Suffolk, within his Maj’ties Province of the Massachusetts Bay in New England, upon the 25th Day of Octo’r 1698. John Devin, Chyrurgion, bound over by Recogniscance unto this Court, to answer what should be objected ag’st him on his Maj’ties behalf as being one of the Company belonging to the Ship Charles al’s Fancey, Henry Every al’s Bridgeman Command’r, at the time when several acts of Piracy were committed by the sd Every al’s Bridgeman and Company in the aforesd Ship, upon the high Seas of India and Persia, and for aiding and assisting in the sd Piracys and shareing in the Plunder so piratically taken. The sd Jno. Devin, being called, appeared and produced a Certificate und’r the hand of Ellis Lightwood Esq., chief Judge of the Island of Providence, and the Public Seal of the Government there, Importing that the sd Devin had lately been indicted, arraigned and tryed for the same matters and Facts (whereof he is now inquired) In the Kings Court within the sd Island of Providence and found not guilty by the Jury, and clear’d by Proclamation, which afore cited Certificate being read and other the proceedings in the case in the sd Court at Providence, Proclamation was made, and nothing of further charge or Evidence appearingagainst the sd Jno. Devin, he was openly acquitted. Which at Request of sd Devin and by ord’r of his Maj’ties Justices of Assize etc. is hereby Certified under the Seal of the sd Court. Dated at Boston the Second day 92
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
of November, Anno predict. கேப்டன் ஏவ்ரி நீதிமன்ற ஆவணங்கள் Petition of the East India Company. July, 1696. To their Excellencyes The Lords Justices of England in Council, The humble Petition of the Governour and Company of Merchants of London trading into the East Indies Most humbly sheweth That the said Governour and Company have lately received certain Intelligence That Henry Every, Commander of a Ship called the Fancy, of 46 Guns, is turned Pirate and now in the Seas of India or Persia, who with divers other Englishmen and Forreigners to the number of about 130 (the names of some of which are hereunto annexed) run away with the sa[id Ship], then called the Charles, from the Port of Corona in Spain and that the said Pirate ha[vin]g ... at the Island of Johanna had left there the following Declaration: vizt.: To all English Commanders, let this satisfie, That I was riding here at this instant in the Ship Fancy Man of War, formerly the Charles of the Spanish Expedition, who departed from Croniae the 7th of May 1694 Being (and am now) in a Ship of 46 Guns, 150 Men, and bound to Seek our Fortunes. I have never as yet wronged any English or Dutch, nor ever intend whilst I am Commander. Wherefore as I commonly speak with all Ships, I desire whoever comes to the perusall of this to take this Signall, That if you, or any whom you may inform, are desirous to know what wee are at a distance, Then make your Ancient up in a Ball or Bundle and hoist him at the Mizenpeek, the Mizen being furled. I shall answer with the same and never molest you, for my Men are hungry, Stout, and resolute, and should they exceed my Desire I cannot help myself. As yet an Englishmans Friend HENRY EVERY. At Johanna February 28th, 1694. The Copy of which said Declaration was brought by Some of the saidCompany’s Ships to Bombay and from thence transmitted to England with the annexed Clause of a Letter relating thereunto. And the said Governour and Company having likewise understood by some fresh Advices from Persia hereunto annexed That the said Pirate had in pursuance 93
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
of his said Declaration pillaged severall Ships belonging to the Subjects of the Mogull in their passage from the Red Sea to Surrat, upon notice whereof the Factoryes of the said Company at Surrat had guards set upon their Houses by the Governour of the place till such time The Mogulls pleasure was known, Whereby the said Governour and Company have reason to fear many great inconveniences may attend them not only from the Reprizalls which may be made upon them at Surrat or other their Factories But also from the Interruption which may be thereby given to their Trade from Port to Port in India, as well as to their Trade to and from thence to England. Wherefore your Peticioners do most humbly beseech your Excellencies to use such effectuall means for the preventing the great Loss and damage which threatens them hereby, as to your Excellencies great wisdom shall be thought fit. And your Peticioners shall ever pray etca. Signed by order of the Governour and Company RO. BLACKBORNE, Secretarie Extract, E.I. Co. Letter from Bombay. May 28, 1695. Extract of a Clause in the Generall Letter from Bombay dated the 28th May, 1695. By our shipping now arrived who touched at Johanna Wee have News That Strongs ship which was one of them that w[ent] for the Spanish Expedition isrunn away with from the Groyn and come into these seas carrying 46 Guns and 130 men, as your Honours will perceive by Copy of the Captains Letter left at Johanna that accompanyes this. Your Honours Ships going into that Island gave him chase, but hee was too nimble for them by much, having taken down a great deal of his upper work and made her exceeding snugg, which advantage being added to her well sailing before, causes her to sail so hard now that shee fears not who follows her. This Ship will undoubtedly into the Red Seas and Wee fear disappoint us of Our above expected Goods, And it is probable will after shee had ransacked that Gulph proceed to Persia and doe what mischief possible there, which will procure infinite clamours at Suratt and the Government will be for embargoing all that ever Wee have there. Abstract, E.I. Co. Letters from Bombay. October 12, 1695. 94
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
By Letters received the 4th of this Inst. from the Generall and Councill for the English Affairs residing att Bombay dated 12th October 1695 the Company are advised as followeth, vizt. That on the 29th August the Generall and Councill dispatched the Company’s ship the Benjamin, Burthen 468 Tunns, Captain Brown Commander, in Company of two Dutch ships that wintered here, for Surrat, with almost all the Cargoes of the three ships, except the Lead that the Mocha carryed in her for Persia (which wee had nott time to take out, she arriving so late). On the 7th of September she arrived Surrat Rivers mouth, where the President, according to Orders, fell to unlading her, but by that time they had gott the Guns, 4 or 500 Bales, and some other Goods on shoar, on the 11th Ditto, One of AbdullGofores[3] Ships arriving, their people sent the Governour word, that they were plundered by an English Vessell, severall of their Men killed in fight, and others barbarously used; Upon which there was a great noise in Towne, and the Rabble very much incensed against the English, which caused the Governour to send a Guard to Our Factory to prevent their doing any violence to Our People. the 13th in the Morning, the Gunsway, one of the Kings Ships, arrived from Judda and Mocho,[4] the Nocqueda[5] and Merchants, with one voice, proclaiming that they were robbed by four English Ships near Bombay of a very great Sume, and that the Robbers had carryed their plundered Treasure on Shoar there, on which there was farr greater noise than before. upon this the Governour[6] sent a very strong Guard to the Factory and clapt all our People in Irons, shut them up in a room, planked up all their windows, kept strict Watches about them, that no one should have pen, ink, or paper to write, stopped all the passages, that no Letters might pass to Us. att this time Captain Brown being att Surat, with some of his Officers and Boats Crew, faired in Common with the rest, and so did some others, that were on shoar, to look after their sick att Swally;[7] and their Long boat and Pinnace going on Shoar there, for Water and Provisions, They sent one Man to the Choultrey,[8] to inquire what News, (having heard somewhat of the Rumour). this person they seized on, by severall Peons, which caused them immediately to putt their boats off, which they had no sooner done, but sundry small Armes were discharged at them. This Caused the Boats to repair to their Ship, att the Rivers mouth, where the Dutch told them, they durst not supply them with any thing while there. But one of them, being ready to sail for Batavia, said, if they would sail in Company with them, they would supply them with what they wanted, as soon as they were out of sight of the Rivers Mouth, which was done according to promise, and so the Benjamin, by the Generall Consent of 95
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
their Officers, came hither, having left her Captain and thirty nine more of her Company behind. as soon as we had a full relation of these things, we immediately wrote to Court, to one Issa Cooley, an Armenian, whom wee intend to make our Vakeel[9] to represent Our Cause to the King, and to Excuse Our Selves from being concerned in those barbarous Actions. Wee Also wrote to the Governour of Surrat and all the Great Umbraws[10] round Us to the same effect, hearing by all that come from Surrat, that that Citty is in an uproar about Us, and being informed also, that Severall Letters are gone to the Siddy[11] (who is very near Us with an Army) from Court and Surat, wee are making what preparation Wee can for our Own defence, nott knowing what this Extream ferment may produce. On the 28th past, We received a Letter from the President and Councill by theGovernour’s permission, Coppy of which is enclosed with a Coppy of Our Answer. Wee have also wrote the Governour a Second time and the Vockanavis, Cozze and Hurcorra,[12] and have sent a Letter to the King, Asset Cawn, and the Cozyse[13] att Court, endeavouring as much as possible to allay the heat, by clearing our innocency, and have promised that if Our Shipping arrives according to Expectation, that wee will send one or two next Season to Mocho and Judda to convoy their Fleet. Wee are informed, that one English man in Surrat carrying to Prison, was so wounded by the Rabble, that he dyed three days after, and that severall others were barbarously used. it is certain the Pyrates, which these People affirm were all English, did do very barbarously by the People of the Gunsway and Abdul Gofors Ship, to make them confess where their Money was, and there happened to be a great Umbraws Wife (as Wee hear) related to the King, returning from her Pilgrimage to Mecha, in her old age. She they abused very much, and forced severall other Women, which Caused one person of Quality, his Wife and Nurse, to kill themselves to prevent the Husbands seing them (and their being) ravished. All this will raise a black Cloud att Court, which We wish may not produce a severe storme. The Pyrates, being neglected of all hands, begin to grow formidable, and if some Course be nott taken to destroy them, they will yearly increase, having found their trade so beneficiall, and how soon the Companys servants, as well as their Trade, may be sacrificed to revenge the Quarrell of the Sufferers, they know not.
96
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கேப்டன் கிட் நீதிமன்ற ஆவணங்களின் பகுதி. Deposition of Benjamin Franks. October 20, 1697. The Deposition of Benjamin Franks aged about 47 years (who came out in the Adventure Gally, a Privateer, Captain William Kid Comander) Inhabitant of New York. Declareth That having lived in Barbadoes and Jamaica and traded in severall parts of the West Indies, meeting of late with great losses of above £12,000 sterling by the Earthquake and Enemyes and through misfortune, came to New York and there finding Captain Kid comeing out with a full Power to the East Indies to take the Pyrates, which he shewed me by the means of my Friends, so resolved to go with him to the East Indies and to remain there at Surrat or any other place where I could best follow my profession, being a Jeweller, for he told me he would put into some of the said Parts. Wee sailed from New York the 6th September 1696 in Company with a Brigantine belonging to Bermudas, bound to the Maderaes. there met with a Brigantine from Barbadoes bound for England who had lost her Mast and Boltsprit, whom Captain Kid assisted with a Mast, Riggin and Canvas, for which kindness [the] Master gave him a few flour Barrells with Sugar. the same Brigantine after she had what she wanted proceeded on her Voyage. And a day or two after wee espyed a Ship whom Wee gave chase to three days and came up with her, found her to be a Portuguez from Brazile bound to the Maderaes. the Captain of the Portuguez pre[sen]ted Captain Kid with a Roll of Brazile Tobacco and some Sugar, in lieu of which Captain Kid sent him a Cheshire Cheese and a Barrell of White Bisket, but through mistake of the Steward the Barrell thought to be Bisket proved to be Cutt and Dry Tobacca. So Wee proceeded to Maderaes and saw the Brigantine in safe that came under our Convoy. wee stayed there one day. before wee departed from thence the Portuguez ship came in. Thence wee went to Bona Vista,[2] took in some Salt, thence to St. Jago, tooke in Water and some Provisions; from St. Jago wee steered our course for Cape Bona Esperanza,[3] but before wee got to the Latitude thereof Wee met with three English Men of War and a Fireship, Captain Warren in the Windso[r] Comodore,[4] Captain Acton in the Advice,[5] the Tygerand Fire Ship I do not know the Commanders names. I was on board the Commodore when he told me that Kids Commission was firm and good and that he would not molest or hinder 97
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
his proceedings for his puting his hands to his Ears, and discoursing of severall other things of the Voyage amongst the rest the Commodore told Kid he had lost a great many of his men and asked him to spare him some, who answered that he would let him have 20 or 30, and about a day or two after Kid went on board one of the Men of War again and in the Evening came on board his own ship very much disguised with drink and left the Men of War without sparing them the men he promised. Some time after had sight of the Cape, did not put in but went directly for Madagascar and imported at a place called Talleer,[6] where took in some Water and provisions. after our being there some time came a Sail in sight and came to an Anchor in Augustine Bay, upon which wee weighed Anchor and came to her, the two Ports being but a little way distant each from other. We found her to be a Sloop from Barbadoes come to buy Negroes, after which Wee returned to Talleer, our former Port, and the next day the Master of the Sloop came on board Us being very ill when he came. a few dayes after ordered the Sloop to come down to Talleer, and the same day she came down the Owner and Merchant[7] dyed on board of us, and he that succeeded him could by no Means agree with the Master of the Sloop but continually a quarrelling and fighting. Our Captain did what he could to make up the difference between them but to no purpose. So when wee had done getting our provisions etc. on board Wee sailed for Johanna,[8] and the Sloop followed us, and seeing two Ships gave them Chase, found them to be both East India Men and so went in together in Company to Johanna and two India Men came in after. Wee took in Some Water and went to Mohilla[9] to clean our Ship. And this Sloop still followed Us, but our Captain told him severall times to be gone and agree amongst themselves, but they took no notice thereof, continuing with Us all the time of our Stay here, being about 5 weeks, where buryed severall of our Company but the just number I know not. when Wee had been there about 5 weeks a Pinnace came on board of Us with some Men, the quantity I know not, for being mortall sick, the Merchant of the Sloop dyed there too. Wee returned from this place to Johanna and the Sloop in our Company. Wee took in some more water and some French Men, the quantity I know not for I was carryed a shoar sick and lay a shoar all the time wee lay at Johanna. We sailed thence, leaving the Sloop behind Us, directly for India and touched at a place called Motta.[10] there was 5 Junks ashoar and at an Anchor ditto place. our Captain wanted to take in some water, sending the Pinnace ashoar for some, which the Natives refused, upon which our Captain next morning sent both Boats with a matter of 40 Men or thereabouts with Armes, as I heard 98
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
lying very Sick of aFeaver, Ague and Flux, and that he had bought two Cowes and some dates, and 2 dayes after the People run away into the Mountains, as I heard. after they run away the People sent a shoar, found India Corn and Garravances[11] in great holes, and brought off likewise six of the Natives, of whom four leaped overboard in the Night and swam ashoar. the other two gave [3] Cowes and 2 sheep for their ransom, as I heard of the Seamen, lying very ill. from thence wee went to the Babs[12] and there anchored to wait for the Pyrates, as the Seamen said, but meeting with none, sending the Pinnace out 3 or 4 times, as I heard of the Seamen, but at Carwar ashoar I heard of the Seamen that they was to go to Mocho.[13] after the Pinnace went with the Captain, QuarterMaster came back and gave an account there was 17 Sail, which I heard of the Seamen as I lay very ill. our Captain ordered two men ashoar on one of the Babs. when the Fleet came in sight the Men waved the Jack.[14] the whole Fleet came by the Babs on a Saturday in the evening in the month of August, but the day of the month I do not remember. our Captain weighed and stood amongst the Fleet, as I heard of the Seamen. the next morning at break of day one of the Fleet began to fire at Us, as I heard of the Seamen, which alarming the rest they all did the same. There was one Ship which the Captain said was a Mallabar, pretty near Us, as I heard of the Seamen. then our Captain ordered the People to row up to him, being but little Wind, then the Mallabar fired at Us and our Captain at him severall Guns. at last our Captain perceiving an English and Dutch Colours did all he could to get away. the Captain designed to go to the high Land off St. Johns.[15] meeting with a small Vessell under English Colours he chased her and comanded the Master to come on board and plundered the Ship. I hearing a great noise asked what it was. they told me that our Folks beat the People aboard of the little ship and against night I heard there was a Portuguez. so doing my endeavour to creep up to speak to the Portuguez and asked him what was the best news, he told me that he and the Master was forced to stay on board of our Ship, and that he did belong to Bombay, and that our Captain had taken out some Rice, Raisons and old Cloths and some Money. I heard of the Seamen that our Captain had Information of three ships that had gone out of Aden bound for Callicut being off Carwar, and being in necessity for Wood and Water put in there, at which time I made great intercession to the Captain for leave to go ashoar, which at last I obtained by giving him a Beaver Hat, for he was unwilling to let any go ashoar but whom he thought he could trust, for fear they should run away for most of his people seemed dissatisfyed and would I believe do as I have done in making their 99
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
Escape if had opportunity, for the Carpenter and his mate with severall others does design to run away with the Pinnace. This I do swear by the old Testament to the best of my knowledge and what I have heard of the Seamen thatall the above written is true. BENJAMIN FRANKS. Bombay the 20th October 1697.
100
பிற்சேர்கை
பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை கரீபியன், ஆப்பிரிக்காவின் மேற்கு கிழக்கு, தென்னிந்தியாவின் மேற்கு கிழக்கு மற்றும் சுத்திரா கடல் பகுதிகளில் க�ொடி கட்டிப் பறந்த கடற்கொள்ளையர்கள். Eustace The Monk Klaus Strotebeker Aruj Barbarossa Guillame Le Testu John Hawkins Sir Francis Drake Edward Collier Sir Walter Raleigh Claes Gerritszoon Compaen Roche Braziliano Henry Morgan William Kidd William Dampier Jonas Berntsson Rene Duguary Trouin Samuel Burgess Cheng I Sao Louis Michel Aury William Howard Allen Roberto Cofresi Nathaniel Gordon
-
கி.பி. 1170 - 1217 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1360 - 1401 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1473 - 1518 கி.பி. 1509 - 1572 கி.பி 1532 - 1595 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1540 - 1596 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1550 - 1605 கி.பி. 1554 - 1618 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1587 - 1660 கி.பி. 1630 - 1675 கி.பி. 1635 - 1688 கி.பி. 1645 - 1701 கி.பி. 1652 – 1715 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1665 - 1732 (க�ோராசியர்) கி.பி. 1673 - 1736 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1690 - 1716 கி.பி. 1775 - 1844 கி.பி. 1788 - 1821 கி.பி. 1790 - 1822 (ப்ரைவிட்டியர்) கி.பி. 1791 - 1825 கி.பி. 1826 - 1862 101
கடற்கொள்ளையர்கள்: பேராசைகள் உயிர்தெழுவது கிடையாது
Captain Thomas Anstis Captain Balestrier Samuel Bellamy Abraham Blauvelt Stede Bonned Anne Bonny George Booth Dixie Bull John Callice Dirk Chivers Eric Cobham Christopher Condent John Coxon Robert Culliford Howell Davis Jean Thomas Dulaien Peter Easton James Ferguson Edward England John Evans Henry Every Jose Gaspar (Gasparilla) Charles Gibbs Red Legs Greaves John Halsey Benjamin Hornigold Henry Johnson Thomas Jones John Julian Francois I’olonnais Jean Lafitte Francois Le Clerc Edward Low George Lowther David Marteen William May 102
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
Captain Christopher Mings Jean David Nau Noland Richard Nathaniel North John Nutt Grace O’Malley William Parker Lawrence Prince Hendrick Quintor Calico Jack Racham Mary Read Manuel Pardal Rivero Joseph Rivers Bartholomew Roberts Woodes Rogers Elizabeth Shirland Simon Simonson Ralph Stout Gertrude Imogene Stubbs Edward Teach Blackbeard Thomas Tew Charles Vane Rachel Wall Godeke Wessels (Privateer) Palgrave Williams Richard Worley John Yeates
103
Reference Books
Raiders & Rebels: A History Of The Golden Age Of Piracy by Frank Sherry Elusive Pirates, Pervasive Smugglers: Violence And Clandestine Trade In The Greater China Seas Edited by Robert J. Antony How History’s Greatest Pirates Pillaged, Plundered, And Got Away With It The Stories, Techniques, And Tactics Of The Most Feared Sea Rovers From 1500 – 1800 by Bennerson Little A General History Of The Pirates by Daniel Defoe The Pirates Own Book or Authentic Narratives Of The Lives, Exploits And Executions Of The Most Celebrated Sea Robbers The Pirates Of Malabar And An Englishwoman In India Two Hundred Years Ago by Colonel John Biddulph The Periplus Of The Erythraean Sea: Travel And Trade In The Indian Ocean By A Merchant Of The First Century Pirate Women: The Princesses, Prostitutes And Privateers Who Ruled The Seven Seas by Laura Sook Duncombe Pirates Of Barbary: Corsairs, Conquests And Captivity In The Seventeenth Century Mediterranean by Adrian Tinniswood The Travels Of Marco Polo Privateering And Piracy In The Colonial Period: Illustrative Documents by John Franklin Jameson
105