I
பிடல் காஸ்டிர�ோ சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
நவீனா அலெக்சாண்டர்
Andhazahi Karthik Dilli, David J Praveen, Shivani, Zahir Ibn Jaffarulah, Franklin Eden, Gajinikanth, Vaitheswaran Chockalingam, Aravind Sankar, Arun Kumar, Saravanan, Surendar Lohia, Rameez Raja, Mahendram Ameeragam Copyright © 2017 by Naveena Alexander All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher/Author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email below. www.andhazahi.in First Edition. June 2017. Price Rs. 90/Andhazahi 12, Pillayar Koil Street, Durga Nagar,Tambaram-Santorium, Chennai - 47 Printed in Chennai, Tamil Nadu.
ப�ொருளடக்கம் முன்னுரை….
1
பூர்வீகத்தின் வேர்கள்
5
ஏகாதிபத்தியத் திமிங்கல வாய் – பள்ளிப் பருவம்
16
பல்கலைக்கழக மாணவர் பருவம் - I
28
பல்கலைக்கழக மாணவர் பருவம் - III
43
பல்கலைக்கழக மாணவர் பருவம் V
54
பல்கலைக்கழக மாணவர் பருவம் - VI
62
புரட்சியின் வித்து – படிஸ்டாவின் இராணுவச் சதி
75
திசை திருப்பலில் வெற்றி – புரட்சிகர நாட்கள் - II
89
இரண்டாம் தலைமறைவு – புரட்சிகர நாட்கள் IV
104
ஆளுமை மிக்க மனிதன் – சிறை வாச நாட்கள் - II
116
மெக்சிக்கோ நாட்கள் - II
126
சியாரா மீஸ்டிரா நாட்கள் - I
134
IV
பிடலிஸ்டா காம்பிளக்ஸ் – சியாரா மீஸ்டிரா நாட்கள் – II
144
சியாரா மீஸ்டிரா நாட்கள் – III
155
Reference Books
166
V
முன்னுரை….
பி
டல் காஸ்டிர�ோ குறித்த இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க பிடலே தனது வாழ்க்கை குறித்துச் ச�ொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தனது இளமை பருவம் குறித்தும், பள்ளிப் பருவம் குறித்தும், மாணவப் பருவம் குறித்தும், புரட்சிகரப் ப�ோராட்டங்கள் குறித்தும் அவரே நினைவு கூர்ந்த விசயங்களே இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன. ஆகப் பிடல் குறித்த இந்தப் புத்தகம் நம்பகமானது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
எதற்கு எடுத்த எடுப்பில் புத்தகத்தின் நம்பகத்தன்மை குறித்துப் பேசவேண்டும்? பிடல் காஸ்டிர�ோவின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்துப் பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுதான் இங்கே பிரச்சனையே. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் தங்களின் சித்தாந்த நம்பிக்கையின் பின் புலத்திலிருந்து பிடலின் வாழ்க்கையை அணுகியிருப்பதால் அவர்களின் புத்தகங்கள் வெவ்வேறு குணாதிசயங்கள் க�ொண்ட பிடல் காஸ்டிர�ோவை நமக்கு முன் நிறுத்துகின்றன. வலதுசாரி சிந்தனைக�ொண்ட அமெரிக்க எழுத்தாளர்களின் பிடல் குறித்த புத்தகங்கள் அனைத்தும் அவரை ஒரு சர்வாதிகாரியைப் ப�ோலவே சித்தரிப்பதிலிருந்து தவறுவது இல்லை. அது அவர்களுடைய கருத்து. அதை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமையும் உண்டு. ஆனால் பிடல் காஸ்டிர�ோ குறித்து அறிந்துக�ொள்ள விரும்பும் ஒருவர் அத்தகைய கருத்துகள் க�ொண்ட புத்தகங்களைப் படிக்கின்றப�ோது அவர்கள் பிடல் குறித்து மனதிற்குள் எடுக்கும் முடிவு ஒருதலை பட்சமானதாகவே இருக்கும். அப்படியான ஒரு தவறான முடிவிற்கு ஒரு வாசகனை நெட்டி தள்ளுவது வாசிப்பு பழக்கத்திற்கு இழைக்கப்படும் துர�ோகம் ஆகும். அப்படியான 1
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ஒரு துர�ோகத்தை இந்தப் புத்தகம் செய்யாது என்பது உறுதி. இந்தப் புத்தகத்தில் பிடல் காஸ்டிர�ோவை பிடல் காஸ்டிர�ோவாக நீங்கள் பார்க்கலாம். இந்தப் புத்தகம் பெரிதும் அவர் வாழ்ந்த வாழ்வைப் பற்றி அவரே பேசியவைகளில் இருந்து கட்டமைக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை எழுதப் பெரும் உதவியாக இருந்த புத்தகங்கள் இரண்டு. ஒன்று இக்னேஷிய�ோ ரம�ோனே எழுதிய My Life Fidel Castro மற்றொன்று லேய்செஸ்டர் கால்ட்மன் எழுதிய The Real Fidel Castro. காவியங்களின் காலம் மாத்திரமே உன்னதமான தலைவர்களின், புரட்சியாளர்களின், வீரர்களின், வரலாற்றைப் புரட்டிப்போட்ட நாயகர்களின் காலமாக இருக்கும் என்று நினைப்போமேயானால் காவியங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கக் கூடும். காவியங்களுக்காக வேண்டி இவர்கள் மண்ணில் பிறப்பது கிடையாது. காவியங்கள் வேண்டுமானால் இவர்களுக்காகப் பிறப்பு எடுக்கலாம். தலைவனாகவும் நாயகனாகவும் இவர்களைக் காவியங்கள் தங்களுக்குள் வரித்துக்கொள்கின்றன. தான் வரித்துக்கொண்ட இத்தகைய நாயகர்கள் வழி மீண்டும் மனிதச் சமூகத்தில் தலைவர்களும், புரட்சியாளர்களும் பிறப்பெடுக்க உதவுகின்றன காவியங்கள். கடலில் இருந்து தனக்கான நீரைப் பெறும் மேகங்கள் அதே கடலுக்குள் நீரைத் திரும்பப் பெய்வதைப் ப�ோல. குரங்கிலிருந்து மனிதனாக மாறிய காலம் த�ொட்டு மனிதச் சமூகம் அதன் நூற்றாண்டு வளர்ச்சிகள் த�ோறும் பல தலைவர்களையும் புரட்சியாளர்களையும் பார்த்திருக்கிறது. மனிதச் சமூகம் தன் ம�ொழிக்கான எழுத்துகளைக் கற்றுக்கொண்ட பிறகு முதலில் எழுதத் த�ொடங்கியது இவர்களைக் குறித்துத்தான். இதற்கு உதாரணமாக இருப்பது கில்காமேசின் காவியம். இன்றையலிருந்து நான்காயிரம் வருடங்கள் பழமையான சுமேரிய நாகரீகத்தின் ப�ோர் வீரனாகப் பார்க்கப்படுபவன் கில்காமேஷ். சுமேரியர்களின் தாய் கடவுளாக இருந்த மிகவும் சக்தி படைத்த இனானா என்கிற இஸ்தார் கடவுளை எதிர்த்துக் கலகம் செய்தவன் கில்காமேஷ். 2
நவீனா அலெக்சாண்டர்
நெற்றிக்கண்ணைத் திறப்பது கடவுளாக இருப்பினும் அந்த நெற்றிக்கண்ணை உடையவர்கள் மக்களை அடக்கி ஒடுக்க முனையும்போது அவர்களை எதிர்த்து மக்களைத் திரட்டி கலகம் செய்து மனித இனத்திற்கான விடுதலையைத் தேடித்தருவது புரட்சியாளர்களின் ஒத்த தன்மையாக இருக்கிறது அது கில்காமேசாக இருந்தாலும் சரி பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சன்யாட் சென்னாக இருந்தாலும் சரி. அப்படி இருபதாம் நூற்றாண்டுக் கண்ட மிகச் சிறந்த புரட்சியாளர்களில் ஒருவர் பிடல் காஸ்டிர�ோ. மனிதச் சமூக ஒடுக்குமுறை என்பது த�ொழில் புரட்ச்சி காலக்கட்டத்திற்குப் பிறகு பல்வேறு நிலைகளில் தன்னை அதிக அதிகமாகப் பலப்படுத்திக்கொண்டு முன்னிலும் அதிகமாகச் சாமானிய மனிதர்களை நசுக்கித் தரைய�ோடு தரையாக அரைத்து எடுக்கத் த�ொடங்கிவிட்டது. சமூக ஒடுக்குமுறைக்குப் பின்புலக் காரணிகளாக இருக்கும் ஆதிக்கச் சக்திக்கள் தங்களுக்கு எதிராக எழும் ஈனக் குரலையும் கூடத் தங்களின் முழுப் பலத்தையும் ஒன்றுத் திரட்டி ஓங்கி அடித்து அந்தக் குரலை இருந்த இடமில்லாமல் ஆக்கத் தயங்குவதில்லை. இப்படியான சூழ்நிலையில் புரட்சியாளர்களும் தலைவர்களும் மனிதச் சமூகத்திற்கு எதிராகக் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் க�ொடுப்பது என்பது முன்னிலும் சவாலான ஆபத்தான காரியமாக மாறிப்போய்விட்டது. இருபதாம் நூற்றாண்டு இப்படியான சாவல் நிறைந்த காலக்கட்டம்தான். இந்தக் காலக்கட்டத்தில் த�ோன்றிய அனைத்துப் புரட்சியாளர்களும் தலைவர்களும் இந்தப் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த புரட்சியாளர்கள் ஒரு கில்காமேசை அல்லப் பல நூறு கில்காமேசை தங்களுக்குள் வரித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படி இல்லையென்றால் அவர்களின் எதிர் குரல் எழுந்த அடித்த ந�ொடியிலேயே அவர்களுக்கான கல்லறை நிலங்கள் தயார் செய்யப்பட்டுவிடும். த�ொழில் புரட்சியின், அறிவியல் கண்டுபிடிப்புகளின் முழுமையான பயன்களை மனிதச் சமூகத்தின் கடை க�ோடி சாமானியனும் பெற்றான�ோ இல்லைய�ோ ஆனால் ஆதிக்கச் சக்திகளும் ஆதிக்கச் சக்திகளுக்குத் தடையில்லாப் ப�ொருளாதார உதவிகளைச் செய்யும் பெரு மூலதன முதலாளிகளும் 3
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
அந்தப் பயன்களை முழுமையாக ஒட்ட ஒட்ட வழித்து எடுத்துப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தப் பயன்களின் வழி ஒரு தலை, இரண்டு கரங்களுடன் இருந்த தங்களின் ஒடுக்குமுறைகளுக்குப் பல தலைகள் பல கரங்கள் என்று வளர்த்தெடுத்துக்கொண்டுவிட்டார்கள். நவீன கண்டுபிடிப்புகளின் வழியும் உழைப்பு சுரண்டலின் வழியும் தனக்குப் பல தலைகளும் கரங்களும் ஏற்படுத்திக்கொண்டு தென்னமெரிக்க நாடுகளைச் சூறையாடிக்கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்திய ஓடுமுறையை எதிர்த்துக் குரல் க�ொடுப்பது, அதற்கு எதிராகக் கலகம் செய்து மக்கள் புரட்சியை முன்னெடுப்பது என்பது குதிரையின் க�ொம்பில் பால் கரப்பதற்கு ஒப்பானது. அந்தப் பாலைக் கறந்தத�ோடு மாத்திரமல்லாமல் அதன் மூலம் ஓட்டும�ொத்த நாட்டு மக்களும் பயன்பெறும்படி செய்தவர் பிடல் காஸ்டிர�ோ. பல கில்காமேஷ்களை தனக்குள் பிறப்பித்துக்கொண்டு சே குவேரா என்கிற ஓயா புரட்சியாளனுடன் கைக�ோர்த்து ஏகாதிபத்திய ஒடுக்குமுறையைக் கதறக் கதறப் பின்னங்கால் பிடரியில் அடிக்கக் கியூபாவைவிட்டு ஓடவிட்ட காஸ்டிர�ோவின் வாழ்க்கையைக் குறித்து இன்றைய நாட்களில் அதிகம் பேசவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது. அதற்கான ஒரு முயற்சியே இந்தப் புத்தகம்.
நவீனா அலெக்சாண்டர்
[email protected] 8220855357
4
பூர்வீகத்தின் வேர்கள்
பி
டல் காஸ்டிர�ோவின் பூர்வீகம் ஸ்பெயின் நாட்டிலிருந்தே த�ொடங்குகிறது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் கலிஷியாவே காஸ்டிர�ோவின் தந்தையான ஏன்ஜல் காஸ்டிர�ோவின் தாயகம். கலிஷியா, அன்றைய ஸ்பெயின் நாட்டின் ஏழ்மை நிறைந்த கிராமபுர பகுதி. இந்தப் பகுதி பெரும்பான்மை விவசாயச் சமூகம் சார்ந்தது. ஏன்ஜல் காஸ்டிர�ோ அப்படியான விவசாயக் குடும்பம் ஒன்றில் 1875-ல் பிறந்தார். ஏன்ஜல் காஸ்டிர�ோவின் குடும்பத்திற்குத் துண்டு துக்கடா நிலம் என்கிற அளவிற்குக் கூடச் ச�ொத்து இல்லாத காரணத்தால் அவரும் அவருடைய குடும்பமும் அந்தப் பகுதி பெரும் பணக்காரர்களின் விவசாயப் பண்ணைகளில் தினக் கூலிகளாக வேலைப் பார்த்து வந்தார்கள்.
குடும்பமே சேர்ந்து உழைத்துத் தினக் கூலி பெற்றால்தான் அனைவரின் வயிறும் மூன்று வேலை நிறையும் என்பதால் ஏன்ஜல் காஸ்டிர�ோவிற்கு பள்ளிக்குச் செல்வதற்கு எல்லாம் நேரமும் காலமும் அமையவில்லை. ப�ோதிய கல்வியறிவு இல்லாத கடும் விவசாயக் கூலி த�ொழிலாளியாகவே தனது இருபது வயதுவரை பண்ணை நிலங்களில் அவர் உழைத்துக்கொட்டிக் க�ொண்டிருக்க அவருடைய ஊருக்கு நேர் எதிரே அட்லாண்டிக் கடலைத் தாண்டிப் பல மைல்கள் த�ொலைவில் மேற்கில் இருந்த கியூபாவில் அரசியல் நிலைமை படு ம�ோசமாக இருந்தது. அன்றைய நாட்களில் கியூபா, ஸ்பெயின் நாட்டின் மிகப் பெரிய மற்றும் முக்கியக் குடியேற்ற நாடாக இருந்தது. அப்படியென்றால் ஸ்பெயினின் கட்டுப்பாட்டிற்குள், ஸ்பெயின் நாட்டுப் பெரு மூலதனங்களின் இலாபமீட்டும் பெரும் சந்தையாகக் கியூபா இருந்தது என்றும் அர்த்தமாகிறது தானே. அது அப்படியேத்தான். அன்றைய கியூப மக்கள் ஸ்பெயின் நாட்டின் அடிமைகளாக 5
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இருந்தார்கள் என்றும் அர்த்தமாகிறது. நாம் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அடிமைகளாக இருந்ததைப் ப�ோல. ஸ்பேயினின் அடக்குமுறை அடிமைத்தனத்திற்கு எதிராகக் கியூபாவில் பல ஆண்டுகளாகவே விடுதலைப் ப�ோராட்டங்களும் புரட்சிகளும் நடந்தபடி இருந்தது. கியூபாவில் இருந்த ஸ்பேயினின் ஆட்சியாளர்கள் கியூப புரட்சியாளர்களின் க�ொரில்லா தாக்குதல்களுக்கும் த�ொடர்ச்சியாக ஆளாக வேண்டியிருந்தது. கியூபாவில் தனக்கு எதிராக நடந்துக�ொண்டிருந்த தாக்குதல்களைச் சமாளிக்க ஸ்பெயின் தன்னிடமிருந்து அதிக இராணுவத்தைக் கியூபாவிற்கு ஏற்றுமதி செய்துக�ொண்டேயிருந்தது. இராணுவத்திற்குத் தேவைப்படும் வீரர்கள் ஸ்பெயினின் நாடு, நகரம், கிராமம் என்று அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, கியூபாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஏன்ஜல் காஸ்டிர�ோவும் அவருடைய இருபதாம் வயதில் ஸ்பேயின் இராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுக் கியூபாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். கியூபாவை ந�ோக்கிய அவருடைய முதல் பயணம் இது. ஆடுகள் நனைந்து ஜன்னி வந்துவிட்டால் ஆடுகளுக்கு என்னாகும�ோ ஏதாகும�ோ என்று ஏத�ோ ஒன்று கவலைப்பட்ட கதையாகக் கியூப மக்கள் ஸ்பெயினிற்கு அடிமைப்பட்டுப் ப�ோராடிக்கொண்டிருப்பதைக் குறித்து அமெரிக்க மிகவும் கவலைப்பட்டது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் ஸ்பெயினின் அடாவடித்தனங்களைக் கண்டித்தும் கியூப மக்களின் விடுதலைப் ப�ோராட்டங்களை ஆதரித்தும் தலையங்கக் கட்டுரைகளை எழுதித் தள்ளின. அமெரிக்கா உடல் ப�ொருள் ஆவி என்று அனைத்துவிதத்திலும் கியூபாவின் விடுதலைக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொண்டது. சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் உள்ளே புகுந்து குத்தவைத்துவிடலாம் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அமெரிக்காவிற்கு வாய்ப்பாக வந்து அமைந்தது ஒரு பெரும் விபத்து. கியூபாவின், ஹவானா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெய்யின் என்கிற அமெரிக்கப் ப�ோர் கப்பல் திடீரென்று வெடித்துச் 6
நவீனா அலெக்சாண்டர்
சிதறியது. இந்த விபத்தில் பல அமெரிக்கக் கடற்படை வீரர்கள் இறந்துப�ோனார்கள். இது தற்செயலாக நடந்த விபத்து என்று பின்னால் தெரியவந்தப�ோதும் அப்போது அமெரிக்கா இதைத் தன் மீது நடத்தப்பட்ட ப�ோர் தாக்குதலாகவே எடுத்துக்கொண்டது. அதுவும் ஸ்பெயின் தாக்கியதாக நினைத்துக்கொண்டு ஸ்பெயின் மீது ப�ோர் அறிவித்தது. ஏற்கனவே கியூப மக்களின் விடுதலைப் ப�ோராட்டத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த ஸ்பெயின், அமெரிக்காவின் ப�ோர் அறிவிப்பையும் அதைத் த�ொடர்ந்த படையெடுப்பையும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அமெரிக்காவிடம் சரணடைந்து கியூபாவின் ஆட்சி அதிகாரத்தையும் அமெரிக்காவிடம் க�ொடுத்துவிட்டுப் ப�ோதுமடா சாமி வம்பு என்று ஒதுங்கிக்கொண்டுவிட்டது. விடுதலைக் கியூபாவிற்கான கனவைக் கியூபர்களை விட மிக அதிகமாகக் கண்டுக�ொண்டிருந்த அமெரிக்கா, கச்சிதமாகக் கியூபாவின் சான்டியாக�ோவில் இருந்த கவர்னரின் மாளிகையில் தன்னுடைய க�ொடியை ஏற்றியது. எப்படியான ஒரு விடுதலைக் கனவு! அமெரிக்காவிடம் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் க�ொடுத்துவிட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு நாடு திரும்பிய ஸ்பெயின் இராணுவத்துடன் ஏன்ஜல் காஸ்டிர�ோவும் ஸ்பெயின் திரும்பினார். கியூபாவில் குடியேறியிருந்த ஸ்பெயின் செல்வந்தர்களும் முதலாளிகளும் தங்களுடைய அசையா ச�ொத்துகளான நிலங்களையும் நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கும் வந்த விலைக்கும் விற்றுவிட்டு ஸ்பெயினுக்குக் கப்பலேறினார்கள். ஸ்பானியர்களின் ச�ொத்துகளை அடிமாட்டு விலைக்கும் வந்த விலைக்கும் வாங்கிப்போட்டவர்கள் அனைவரும் அமெரிக்கச் செல்வந்தர்களும் பெரு முதலாளிகளுமே. அதாகப்பட்டது கியூபாவின் விடுதலை என்று க�ொடிபிடித்து ஸ்பெயினை வெளியேற்றிவிட்டு அதன் இடத்தில் வந்து உட்கார்ந்துக�ொண்டது அமெரிக்கா. இந்த நடவடிக்கை கியூபர்களையும் ஸ்பானியர்களையும் ஒரே சமயத்தில் கடுப்பாக்கியது. கியூபர்களும், ஸ்பானியர்களும் ஒருசேரத் தாங்கள் 7
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
அமெரிக்காவால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கருதினார்கள். அடுத்த நான்கு வருடங்களுக்குக் கியூபாவைத் தன்னுடன் இணைத்துக்கொள்வதா அல்லது அதற்குப் பூரண விடுதலைத் தந்துவிடுவதாக என்று அமெரிக்காவில் பல விவாதங்கள் நடைபெற்றன. இந்த நான்கு வருடங்களுக்குள்ளாக அமெரிக்காவின் பல பெரு மூலதனங்களின் நிறுவனங்களின் த�ொழில் முதலீடுகள் கியூபாவில் க�ொண்டுவந்து குவிக்கப்பட்டது. கியூபாவின் சந்தை அமெரிக்காவின் ப�ொருட்களுக்கு எத்தகைய கேள்விகளும் இல்லாமல் திறந்துவிடப்பட்டது. அமெரிக்காவின் பெரு நிறுவனங்கள் கியூபாவில் நன்றாகக் காலை ஊன்றிய பிறகு 1902-ல் கியூபாவிற்கு விடுதலைத் தரப்பட்டது. இந்த விடுதலைக்குக் கியூபா சில விலைகளையும் அமெரிக்காவிற்குக் க�ொடுக்க வேண்டியிருந்தது. அந்த விலைகள், கியூபாவின் தென் கிழக்கு பகுதியில் இருந்த இராணுவக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த குவான்டனம�ோ துறைமுகத்தில் நிரந்தரமாக அமெரிக்காவின் இராணுவம் நிறுத்திவைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வது, விடுதலைக் கியூபாவின் அரசியல் அமைப்பில் பிலாட் என்கிற சட்டத் திருத்தம் திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்வது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி கியூபாவில் இயங்கிவரும் அமெரிக்கப் பெரு நிறுவனங்களுக்கு எதிராகவ�ோ அல்லது அவற்றின் இலாபங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளில�ோ கியூபா செயல்படுமானால் அமெரிக்கா எந்தக் கேள்விகளும் இன்றித் தலையிட்டுக் கியூபாவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவரலாம். மேலும் அமெரிக்க உற்பத்திப் ப�ொருட்களை எத்தகைய இடையூறுகளும் இல்லாமல் கியூபாவின் சந்தைக்குள் அனுமதிக்கவேண்டும் என்கிற நிர்பந்தமும் விடுதலைக் கியூபாவின் தலையில் சுமத்தப்பட்டது. இதற்கு எல்லாம் வாட்டமாக அமெரிக்கா கைகாட்டும் ப�ொம்மை ஆட்சியாளர்கள் கியூபாவில் அரசாங்கப் பதவிகளுக்குக் க�ொண்டுவரப்பட்டார்கள். நீண்ட உள்நாட்டு ப�ோரிலிருந்து மீண்ட கியூபா புதிதாகப் பெற்ற இந்த விடுதலையையும் சேர்த்துக்கொண்டு ஒரு புதிய வளர்ச்சியை ந�ோக்கி நடக்கத் த�ொடங்கியது. அமெரிக்கப் பெரு மூலதனங்கள் இஷ்டத்திற்குக் கியூபாவில் புகுந்து விளையாடியதால் வேலை 8
நவீனா அலெக்சாண்டர்
வாய்ப்புகள் பெருகத் த�ொடங்கின. ஒருகட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகமாகி வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படத் த�ொடங்கியது. இந்த வாய்ப்பை ஸ்பானியர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்கள். மீண்டும் ஸ்பெயினிலிருந்து பலர் கியூபாவிற்கு வேலைத் தேடி வரத் த�ொடங்கினார்கள். ஏன்ஜல் காஸ்டிர�ோவும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள இரண்டாம் முறையாகக் கியூபாவிற்கு வந்து சேர்ந்தார். இந்தச் சமயத்தில் கியூபாவில் மிக அதிக வளர்ச்சியைக் கண்டது கிழக்கு பகுதியில் இருந்த ஓரியன்ட் என்கிற பகுதி. இந்தப் பகுதி விவசாயத்திற்கு ஏற்ற செழிப்பான நிலங்களும், இயற்க்கை வளங்களும் க�ொட்டிக் கிடக்கும் பகுதி. இந்தப் பகுதியே அமெரிக்கப் பெரு மூலதனங்களின் முக்கியக் குறியும் கூட. உலகின் மிகப் பெரும் வாழைப்பழ உற்பத்தி நிறுவனமான யுனைட்டட் ஃபுரூட் இந்தப் பகுதியில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கிப்போட்டிருந்தது. வாங்கிப்போட்டிருந்த நிலத்திலிருந்து காடுகளைச் சகட்டு மேனிக்கு அழித்து வழித்து எடுத்துவிட்டுச் சர்க்கரை ஆலைகளையும், வாழைத்தோப்புகளையும் உருவாக்கியது. இந்த வாழைத்தோப்புகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் இருந்து தயாரிக்கப்படும் உற்பத்தி ப�ொருட்களை மிக எளிதாகவும் விரைவாகவும் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டி அந்தப் பகுதி முழுவதிலும் சாலைகளையும் ரெயில் பாதைகளையும் அமைத்தது. இந்தப் பணிகளைச் செய்தது யுனைட்டட் ஃபுரூட்டின் துணை நிறுவனமான நிப் பே இரயில்வே கம்பெனி. இந்த நிறுவனத்திற்கு மிக அதிகப்படியாக வேலையாட்கள் தேவைப்பட்ட சமயத்தில் ஏன்ஜல் காஸ்டிர�ோ இந்தக் கம்பெனியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிறுவனத்தில் வேலை இல்லாத சமயங்களில் அவர் ச�ொந்தமாகவும் கண்ணில் படும் வேலைகளையும் செய்தார். இயல்பிலேயே கடும் உழைப்பாளியான அவர் அன்றைய கியூபாவின் வேலையாட்கள் தேவையை மிக நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். அவர் சிக்கனப் பேர்வழி என்பதால் கையில் மிக விரைவாகக் காசுப் பணம் சேரத் த�ொடங்கியது. ஸ்பெயினில் பண்ணைக் கூலியாக அவர் இருந்தப�ோதே தனக்கென்று ச�ொந்தமாக 9
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
விவசாயப் பண்ணை வாங்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு இப்போது வந்துவிட்டிருந்தார். சில வருடங்கள் கழித்துக் கையில் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் க�ொண்டு பிரான் என்கிற பண்ணையை வாங்கினார். இது பே ஆ நிப் என்கிற இடத்தில் இருந்தது. முதலில் சிறியதாக வாங்கிய இந்தப் பண்ணையின் எல்லையை அவர் விரிவுப்படுத்திக்கொண்டே சென்றார். இந்த விரிவாக்கப் பணி சில சமயம் காசுக்கொடுத்து வாங்கியும் நடந்திருக்கிறது சில சமயங்களில் நடுநிசி நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எல்லை கல்லைப் பல அடிகளுக்குத் தள்ளி நட்டும் நடந்திருக்கிறது. தனது பண்ணை நிலத்தில் கால்நடைகளையும், கரும்பு மற்றும் ச�ோளத்தையும் பயிர் செய்து பணத்தைப் பெருக்கத் த�ொடங்கினார். பண்ணை நிலத்தில் ஆட்களை அமர்த்து அவர்களுக்குத் தடங்கள் இல்லாமல் கூலி க�ொடுக்கும் நிலைக்கு வந்தார் ஏன்ஜல் காஸ்டிர�ோ. இந்தச் சமயத்தில் கியூபாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான மரியா லுயிசா அரக�ோட்டாவை திருமணம் செய்துக�ொண்டார். இவர்களுக்குப் பெட்ரோ எமிலிய�ோ மற்றும் லிடியா என்று இரண்டு பிள்ளைகள். சில வருடங்களில் மரியா அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதன் பிறகு அவருடைய பண்ணையில் வேலைச் செய்த லினா ரூஸ் என்கிற இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழத் த�ொடங்கினார் ஏன்ஜல் காஸ்டிர�ோ. லினா ரூஸ் கியூபாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் பினார் டெல் ரிய�ோ பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் மூன்று ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தார்கள். இவர்களின் மூன்றாவது குழந்தை பிடல். ஆகஸ்டு 13, 1926-ல் பிறந்தார் பிடல். பிடல் என்கிற பெயர் அவருக்குச் சுட்டப்பட்டதின் பின்னால் இருக்கும் அந்தச் சுவாரசியச் சங்கதி என்ன? ஞானஸ்நானத்திற்குக் காத்திருந்த குழந்தை – குழந்தைப் பருவம் ஏன்ஜல் காஸ்டிர�ோவிற்கு பிடல் பின�ோ என்கிற நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். ஏன்ஜல் காஸ்டிர�ோ பிரான் பண்ணையை வாங்கிய பிறகு ஏற்பட்ட நட்பு. பிடல் பின�ோ உள்ளூரில் பெரிய 10
நவீனா அலெக்சாண்டர்
த�ொழிலதிபராகவும் அரசியல் செல்வாக்கு பெற்றவராகவும் இருந்த நேர்மையான மனிதர். பிடல் பின�ோவின் நேர்மையும் அவருடைய ஒழுக்கம் சார்ந்த பழக்கவழக்கங்களும் ஏன்ஜல் காஸ்டிர�ோவை மிகவும் கவர்ந்த விசயங்கள். இவைகள் ஒருபுறம் என்றால் பிடல் பின�ோவின் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் ஏன்ஜல் காஸ்டிர�ோ. பிடல் பின�ோவின் மீது தனக்கிருக்கும் மதிப்பும் மரியாதையையும் காட்டத் தனது மூன்றாவது மகனுக்குப் பிடல் என்று பெயர் வைத்தார் ஏன்ஜல் காஸ்டிர�ோ. மூன்றாவது மகனுக்குத் தேவாலயத்தில் பெயர் சூட்டி ஞானஸ்நானம் செய்யும் சடங்கின்போது ஞானத் தந்தையாக இருக்கும்படி பிடல் பின�ோவை கேட்டுக்கொண்டார் ஏன்ஜல் காஸ்டிர�ோ. ஆனால் பிடல் பின�ோ என்ன காரணத்தினால�ோ இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஏன்ஜல் காஸ்டிர�ோவுக்கும் லினாவுக்கும் முறையான திருமணப் பந்தம் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு ஞானத்தந்தையாக இருக்கப் பிடல் பின�ோ தங்கியிருக்கலாம் என்பது இன்றைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. முறையான திருமணபந்தம் இல்லாததன் காரணத்தால் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் பண்ணிவைப்பதற்குப் பாதரிமார்களையும் ஞானத்தந்தைகளையும் பெறுவதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது ஏன்ஜல் காஸ்டிர�ோவும் லினாவும். பிடலுக்கு எட்டு வயது ஆனப் பிறகே அவருக்கு ஞானஸ்நானம் செய்யும்படியானது. பிடல் கன்சாலஸ் காஸ்டிர�ோ ராஸ் என்கிற கிரிஸ்டன்டம் பெயர் அவருக்குக் க�ொடுக்கப்பட்டது. புத்திக்கூர்மை, நினைத்ததைச் சாதிக்கும் பிடிவாதம், நிறைய முரட்டுத்தனம் இதுதான் குழந்தைப் பருவப் பிடல். அவர் பிறப்பதற்கு முன்பே அவருடைய பெற்றோர்கள் அந்தப் பகுதியிலேயே பெரும் பண்ணையாக இருந்த பிரான் பண்ணையின் உடமையாளர்களாக இருந்தும் அவர்களுடைய வீடு மிக எளிய த�ோற்றமும் நடவடிக்கைகளும் க�ொண்டதாகவே இருந்தது. பணம் க�ொண்டுவரக் கூடிய ஆடம்பரப் ப�ொருட்கள�ோ, மேனாமினிக்கித்தனங்கள�ோ அவருடைய பெற்றோர்கள் அறியாதவைகள். அப்படியான விசயங்களை அவர்கள் பிரான் பண்ணை வீட்டிலும் அனுமதிக்கவில்லை. 11
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சாமானிய விவசாயக் குடியானவனின் வீடு எப்படிக் கால்நடைகளாலும் விவசாய உற்பத்தி கருவிகளாலும் நிறைந்திருக்கும�ோ அப்படித்தான் பிரான் பண்ணை வீடும் இருந்தது. அந்தப் பண்ணை வீடு பல அறைகள் க�ொண்ட பெரிய வீடுதான் என்றாலும் ஆடுகளும், மாடுகளும், க�ோழிகளும் அந்த வீட்டில் இருக்கும் மனிதர்களுடன் சேர்ந்து புழங்கக் கூடியவைகலாகத்தான் இருந்தன. பிரான் பண்ணையில் ஏன்ஜல் காஸ்டிர�ோவின் கரும்புத் த�ோட்டத்தில் வேலைப் பார்த்த ஐயிட்டியை சேர்ந்த விவசாயத் த�ொழிலாளிகளுக்கான சிறிய வீடுகளும் இருந்தன. அவர்கள் அதில் தங்கிக்கொண்டு ஏன்ஜல் காஸ்டிர�ோவின் கரும்பு த�ோட்டத்தில் வேலைப் பார்த்துவந்தார்கள். இந்தத் த�ொழிலாளிகளின் பிள்ளைகளும், உடன் பிறந்த சக�ோதரர்களுமே சிறுவயது பிடலின் விளையாட்டு த�ோழர்கள். பிறந்ததிலிருந்து ஏழ்மையைச் சந்தித்தபடி, கைக�ொடுத்துத் தூக்கிவிடுவதற்கு ஆளுமில்லாமல் முழுக்கத் முழுக்க தன்னுடைய கடுமையான உழைப்பிலேயே முன்னுக்கு வந்திருந்த ஏன்ஜல் காஸ்டிர�ோ தன் பண்ணையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த கூலித் த�ொழிலாளிகளிடம் புதிதாகத் தனக்கு வந்துவிட்டிருந்த செல்வச் செழிப்பு திமிரைக் காட்டியதாகத் தெரியவில்லை. த�ொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை மனதில் க�ொண்டவராகவே அவர் இருந்திருக்கிறார். அவர்களுடைய கூலி விசயத்தில் நேர்மையைக் கடைபிடித்தவராக இருந்தார். உதவி என்று தன் பண்ணை வாசலில் வந்து நின்றுவிட்டவர்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்திருக்கிறார். உதவி தேவைப்பட்ட காலங்களில் யாரிடமிருந்தும் எந்தத் திசையிலிருந்தும் உதவிகளைக் கண்டடையாத மனிதர் என்பதால் தக்க நேரத்திலான உதவியின் அருமையை உணர்ந்த மனிதராக இருந்திருக்கிறார். மற்ற பகுதிகளில் அறுவடை காலம் முடிந்து விவசாயக் கூலித் த�ொழிலாளர்கள் வேலையற்று இருக்கும் சமயங்களில் இவருடைய பண்ணையை நாடி வருவது வழக்கம். காரணம் அறுவடை காலம் முடிந்துவிட்டிருந்தாலும் தன்னுடைய நிலத்தில் மீண்டும் உழவு ஓட்டுவதையும், தன்னுடைய நிலப் பகுதியில் இருக்கும் காடுகளைச் சரி செய்து அங்கே புதிதாக விளை நிலங்களை உருவாக்கும் 12
நவீனா அலெக்சாண்டர்
வேலைகளையும் அவர் அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்து அதற்கான நியாயமான கூலியையும் க�ொடுத்துவிடுவார். இதனால் அவருக்கு இலாபம் இல்லை என்றாலும் இந்தக் காரியத்தை அவர் செய்தார். இத்தகைய த�ொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகள் அவருக்கு அந்தப் பகுதியில் டான் ஏன்ஜல் காஸ்டிர�ோ என்கிற பெயரையும் பெற்றுத் தந்தது. வேலை இல்லாத காலத்திலும் த�ொழிலாளர்களுக்கு வேலையை உண்டுபண்ணி அவர்களுடைய வயிறு காயாமல் பார்த்துக்கொண்ட ஏன்ஜல் காஸ்டிர�ோவின் இந்தப் பழக்கம் பிற்காலத்தில் பிடல் காஸ்டிர�ோ கியூபாவின் ஆட்சியதிகாரத்திற்கு வந்தப�ோது உதவியிருக்கிறது. இதைப் பிடல் காஸ்டிர�ோவே தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகிறார். மேலும் பிடல் காஸ்டிர�ோ குழந்தையாக இருந்தப�ோது அவருடைய விளையாட்டு ப�ொழுதுகள் அனைத்தும் பண்ணையில் வேலைப் பார்த்த கூலித் த�ொழிலாளர்களின் குழந்தைகளுடன்தான். ஏன்ஜல் காஸ்டிர�ோவ�ோ அல்லது லினாவ�ோ தங்களுடைய பிள்ளைகள் கூலித் த�ொழிலாளர்களின் பிள்ளைகளுடன் விளையாடுவதைக் கெளரவப் பிரச்சனையாகக் கருதித் தடை செய்ததும் இல்லை. முதலாளி த�ொழிலாளி என்கிற வர்க வேறுபாடுகள் இல்லாமலேயே அந்தப் பண்ணையில் குழந்தைகள் ஒன்றாக விளையாடியிருக்கிறார்கள். பிடல் காஸ்டிர�ோ வளர வளர அவரை அதிகம் த�ொழிலாளர் வர்கத்தை ந�ோக்கி இழுத்துச் சென்ற வேர்கள் ஏன்ஜல் காஸ்டிர�ோவின் நடவடிக்கைகளிலும் பிரான் பண்ணையின் சூழ்நிலைகளிலுமே இருந்தது. முழுக்கக் முழுக்க கேம்பேசின�ோஸ் என்கிற ஏழைக் கூலித் த�ொழிலாளிகளின் மத்தியில் கழிந்த என் குழந்தைப் பருவமும் பிற்காலத்தில் த�ொழிலாளர் நலன் சார்ந்த அரசியில் நிலைப்பாடுகளை நான் அதிகம் அதிகம் எடுப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று என்று குறிப்பிடுகிறார் பிடல் காஸ்டிர�ோ. படிப்பறிவு அற்ற கரும்பு பண்ணைக் கூலித் த�ொழிலாளிகளின் வாழ்க்கை நிலை, குழந்தைப் பருவப் பிடல் காஸ்டிர�ோவின் மனதில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறு வயதுவரை 13
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
அவர் பிரான் பகுதியிலிருந்த ஐயிட்டியன் கூலித் த�ொழிலாளர்களின் வசிப்பிடங்களிலும், அவர்கள் வேலைப் பார்க்கும் இடங்களிலுமே புழங்கி கழித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாத ஏழைகள் ஒவ்வொரு சிறிய விசயத்திற்கும் பட்ட அவதிகள் நிறைந்த காட்சிகளை விவரம் தெரியாத வயதின் நினைவுகளாக இப்போதும் குறிப்பிடத் தவறுவதில்லை பிடல் காஸ்டிர�ோ பிரான் பண்ணைப் பகுதியில் அரசாங்கத்தின் த�ொடக்கப் பள்ளி ஒன்றும் இருந்தது. இந்தப் பள்ளிக்குச் சான்டியாக�ோவிலிருந்து ஒரு ஆசிரியை வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இந்தப் பள்ளியில்தான் பிடலின் ஆரம்பக் கல்வி த�ொடங்கியது. பல நேரங்களில் ச�ொல்பேச்சு கேளாத மாணவர் என்பதுதான் பிடலின் பள்ளி மாணவர் அடையாளம். ஆசிரியர் ஒன்று ச�ொல்ல அதற்கு எதிர்விதமாகப் பண்ணிவைப்பார் அவர். இருந்தாலும் மாணவராக அவர் வெளிப்படுத்திய புத்திக் கூர்மை மற்ற விசயங்களைச் சரிக்கட்டியது. சில நேரங்களில் ஆசிரியரின் கெடுபிடிகளை எதிர்த்துக்கொண்டு அவர் வீட்டிற்கு ஓடிவந்துவிடுவதும் நடந்திருக்கிறது. பிற்காலத்தில் இது குறித்துப் பிடல் காஸ்டிர�ோவிடம் கேட்கப்பட்டப�ோது, ச�ொல் பேச்சு கேளாமல் ஆசிரியர்களுக்கு எதிராகவ�ோ அல்லது பெற்றோர்களுக்கு எதிராகவ�ோ கலகம் செய்ய வேண்டும் என்பது நான் அப்படி நடந்துக�ொண்டதற்கான காரணம் அல்ல. குழந்தைப் பருவம் முதலே எனக்கு அடக்குமுறை நடவடிக்கைகளின் மீது வெறுப்பு இருந்தது. அன்றைய ஸ்பானிஷ் சமூகம் எதையும் அடக்குமுறையின் மூலமே சாதித்து விட முடியும் – ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளைக் கற்றுக்கொடுப்பது உட்பட – என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருந்த மூடநம்பிக்கைக்கு எதிரான கலகமே எனது சிறு குழந்தை பருவத்து நடவடிக்கைகள். குழந்தை பிராயத்திலேயே அவருடன் ஜனித்துவிட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான மனப்பான்மை என்பது பின் நாட்களில் அமெரிக்காவின் சர்வ வல்லமை ப�ொருந்திய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து நிற்கும் துணிச்சலை அவருக்கு வழங்கியது. அவருக்கு ஆறு வயது ஆனப�ோது பண்ணைக்கு வந்து பாடம் 14
நவீனா அலெக்சாண்டர்
நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையின் வீட்டில் தங்கிப் பாடம் படிக்க அவர் சாண்டியாக�ோ அனுப்பிவைக்கப்பட்டார். அவருடன் அவருடைய மூத்த சக�ோதரி ஏன்ஜிலாவும். அந்த ஆசிரியை இவர்களுக்குப் பாடம் எடுப்பதை இரண்டாம் பட்சமாகவும் இவர்கள் அவருடைய வீட்டில் தங்கிப் பாடம் படிப்பதற்காக ஏன்ஜல் காஸ்டிர�ோ மாத மாதம் க�ொடுத்த கட்டணத்தை முதல் குறியாகவும் க�ொண்டு செயல்பட்டதால் பிடலுக்கு இந்த நாட்கள் மிகவும் த�ொல்லைகள் மிகுந்தவைகளாக மாறிப்போனது. மூன்று வேலைச் சரியாக உணவு கிடைப்பதிலிருந்து த�ொடங்கி அனைத்திலும் பிரச்சனை. இயல்பிலேயே மிரட்டு உருட்டி அடிபணிய வைக்கும் ஒடுக்குமுறை நடத்தைக்கு எதிரான மனப்பான்மை க�ொண்டவர் என்பதால் நிலைமை இன்னும் ம�ோசமாகிப்போனது. ஒரு வருடம் கழித்துப் பிடல் மீண்டும் பிரான் பண்ணைக்கே வந்து சேர்ந்துவிட்டார். அன்றைக்குக் கத்தோலிக்கப் பள்ளியில் சேருவதற்கு என்று இருந்த முக்கிய நிபந்தனைகளில் ஒன்று குழந்தைகள் ஞானஸ்நானம் பெற்றிருக்கவேண்டும் என்பது. இதற்காக வேண்டி அவருக்கு ஆறு வயதில் ஞானஸ்நானம் க�ொடுக்கப்பட்டது. அதன் பிறகு சாண்டியாக�ோவில் இருந்த லா சேல் பள்ளிக் கூடத்தில் அவர் சேர்க்கப்பட்டார். அவருடன் மூத்த சக�ோதரர் ரம�ோனும் இளைய சக�ோதரர் ராவுலும் அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். பள்ளி விடுமுறை சமயங்களில் அவர் பிரானுக்கு வந்து ஏக்கர் கணக்கில் விரிந்து கிடந்த அவருடைய பண்ணை நிலங்களில் சுற்றித் திரிவது அவரது ப�ொழுதுப�ோக்குகளில் ஒன்றாகிப் ப�ோனது.
15
ஏகாதிபத்தியத் திமிங்கல வாய் – பள்ளிப் பருவம்
பி
டல் காஸ்டிர�ோ த�ொடக்க நிலைப் பள்ளிப் படிப்பைத் த�ொடங்கியதைப் பார்ப்பதற்கு முன்பாக அன்றைய காலக்கட்டக் கியூபாவின் அரசியல் நிலையையும் தெரிந்துக�ொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. அவர் பள்ளிப் படிப்பைத் த�ொடங்கியது 1932-ல். இருபதாம் நூற்றாண்டின் த�ொடக்க ஆண்டுகளில் அதாவது 1902-ல் கியூபாவிற்கு ஸ்பெயினிடமிருந்து முழு விடுதலை என்று ச�ொல்லிவிட்டுக் கியூபாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டு வந்த அமெரிக்கா அது த�ொடங்கிக் கியூபாவில் பல ப�ொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கத் த�ொடங்கியது. கியூப மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் தருவதைவிடக் கியூபாவில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் இலாப ந�ோக்கங்களுக்கு அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரும் ஆட்களே கியூபாவின் ஜனாதிபதிகளாக அமெரிக்காவால் முன்னிறுத்தப்பட்டார்கள்.
குடியரசு என்கிற ப�ோலி முகத்திரைக்குப் பின்னால் நின்றுக�ொண்டு அமெரிக்கா முன்னிறுத்திய ஜனாதிபதிகளின் ஆட்சியை எதிர்த்துக் கியூப மக்கள் பல ப�ோராட்டங்களைத் த�ொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியிருந்தது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களைக் காக்கும் ஒடுக்குமுறை குடியரசு முகத்திரைக்கு எதிரான கியூபாவின் உள்நாட்டு ப�ோராட்டங்களுக்கு மூன்று முகங்கள் உண்டு. மூன்று விதமான எண்ணப்போக்குகள் க�ொண்ட இயக்கங்கள் கியூபாவின் சுயசார்ப்பு குடியரசிற்கான ப�ோராட்டத்தில் இருந்தன. முதலாவது அமெரிக்காவின் பிலாட் சட்டத் திருத்தத்தை (பிலாட் சட்டத் திருத்தம் எதை முன்னிறுத்தியது என்பதை 16
நவீனா அலெக்சாண்டர்
முன்பே பார்த்திருக்கிற�ோம்) அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு அடிபணிந்து நடப்பதை வரவேற்கும் எண்ணப்போக்கு க�ொண்டவர்களின் இயக்கம். இந்த இயக்கமே அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக இருந்த ஒன்று. காரணம் இதிலிருந்து பல உள்ளூர் ப�ொம்மை தலைவர்களை அமெரிக்காவால் மிக எளிதாக உருவாக்க முடிந்தது. இரண்டாவது இயக்கம் இராணுவப் புரட்சியின் மூலம் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை ஒழித்துக்கட்டிவிட்டு ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற எண்ணப் ப�ோக்கு க�ொண்டதாக இருந்தது. மேலும் சர்வாதிகாரத்தையும் இது வளர்த்தெடுப்பதாக இருந்தது. இந்த இயக்கமும் ஒருவகையில் அமெரிக்காவிற்குச் சாதகமானதாகவே இருந்தது. அப்படி இல்லையென்றாலும் தனக்குச் சாதகமானதாக மாற்றிக்கொண்டது அமெரிக்கா. மூன்றாவது, கம்யூனிசச் சார்புக்கொண்ட புரட்சிகர இயக்கம். இந்த இயக்கத்திற்குப் பின்புலமாக இருந்தது கியூபாவின் நடுத்தர வர்கமும் அறிவுசார் வர்கமும். அமெரிக்க ஏகாதிபத்தியத் திமிங்கல வாயின் தாடையை முற்றிலும் முறிக்கவேண்டும் என்கிற எண்ணப் ப�ோக்கு க�ொண்டவர்கள் இந்த இயக்கத்தில் இருந்தார்கள். முதல் இரண்டு இயக்கங்களும் வலதுசாரி தன்மையுடன் இருந்தது. மூன்றாவது இயக்கம் இடதுசாரி தன்மைக�ொண்டதாக இருந்தது. கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் கட்சி என்று இரண்டு கட்சிகளைத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு கியூபாவில் அரசியல் பகடையாட்டம் ஆடிக்கொண்டிருந்த அமெரிக்காவிற்கு முதல் தலைவலியாக வந்து சேர்ந்தவர் ஜெரார்டோ மச்சாட�ோ. லிபரல் கட்சி உறுப்பினரான இவர் தேசியவாதம் பேசிக்கொண்டு அரசியலில் செல்வாக்கு பெற்று முன்னிலைக்கு வந்துக�ொண்டிருந்தார். ஸ்பெயினுக்கு எதிரான கியூப விடுதலைப் ப�ோரில் இளம் படை தளபதியாக இருந்து பெயர் பெற்றவர். அதற்கும் முன்பு அவர் கால்நடைகளைத் திருடுபவராக இருந்த சங்கதிகளை அவரே மூடி மறைத்தும்விட்டார் என்பது வேறு கதை. தன்னுடைய அரசியல் க�ொள்கைகள் அனைத்தும் கியூபா தேசத்தின் நலனுக்கானது மட்டுமே என்றும் அவைகள் அனைத்தும் தேசப் பக்தியை அடிப்படையாகக் க�ொண்டவைகள் என்றும் 17
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
தன்னையும் தன்னுடைய க�ொள்கைகளையும் ஆதரிப்பவர் தேசப் பக்தர்கள் என்றும் எதிர்ப்பவர்களைத் தேச விர�ோதிகள் என்றும் முத்திரைக் குத்துவதே அரசியலில் முன்னிலைக்கு வர அவர் கடைபிடித்த வழிமுறை. அரசியலைத் தவிரக் கியூபாவில் பல த�ொழில் முதலீடுகளையும் அவர் செய்திருந்தார். த�ொழிலதிபர், அரசியல்வாதியான இவர் 1924-ல் நடந்த கியூபாவின் ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்று கியூபாவின் ஜனாதிபதியானார். ஒரு பக்கம் அமெரிக்காவிற்கு ஆதரவாக முட்டுக�ொடுத்துக்கொண்டே உள்நாட்டில் தேசபக்தியைக் குறித்து மக்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய இந்த இரட்டை முகமுடி வெகு நாட்களுக்கு நிலைக்க முடியவில்லை. சீக்கிரத்திலேயே கிழிந்து த�ொங்கியது. தேசபக்தி முகத்திரை கிழிந்தவுடன் சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். எதிர் குரல் எழுப்புபவர்கள் அனைவரும் தேடித் தேடி ஒன்று நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது வேட்டையாடப்பட்டார்கள். ப�ோதா குறைக்கு 1924 மற்றும் 1925 ஆண்டுகளில் கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி படுபாதாளத்தில் வீழ்ந்துப�ோனது. கியூபாவின் ஒட்டும�ொத்தப் ப�ொருளாதாரமும் சர்க்கரை ஏற்றுமதி த�ொழிலை நம்பியே இருந்தது. இன்றைக்கும் கியூபா உலகின் மிகப் பெரிய சர்க்கரை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. சர்க்கரை ஏற்றுமதி த�ொழிலும் வீழ்ந்து உள்ளூர் த�ொழில் துறைகளும் வீழ்ந்தவுடன் மக்கள் பெரும் அளவில் வேலை இழப்புகளுக்கு ஆளாகிப்போனார்கள். நாட்டின் ப�ொருளாதாரம் முப்பது வருடங்களுக்கு முன்னான நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில் மச்சாட�ோவின் தேசபக்தி பம்மாத்து வேலையெல்லாம் கியூப மக்களிடம் எடுபடாமல் ப�ோனது. அதுவரை அவரையும் அமெரிக்கச் சார்பு நிலையையும் ஆதரித்து வந்த நடுத்தர வர்கமும் கூட அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது. இதற்கு முன்பே கியூப பாட்டாளி வர்கம் அரசிற்கு எதிரான ப�ோராட்டத்தில் இருந்தது வந்ததும் இவைகளுடன் சேர்ந்துக�ொண்டது. தேசபக்தியை மக்களிடம் வளர்த்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் ஊழலையும் மச்சாட�ோ அம�ோகமாக வளர்த்துவிட்டிருந்ததால் அதுவும் இந்தச் சமயத்தில் மச்சாட�ோவின் காலை வாரிக்கொண்டிருந்தது. 18
நவீனா அலெக்சாண்டர்
மச்சாட�ோவிற்கு எதிரான ப�ோராட்டங்களில் கியூப மக்களை ஒட்டும�ொத்தமாகத் திரும்பிப் பார்க்கவைத்த ப�ோராட்டம் ஹவானா பல்கலைக்கழகத்தில் வெடித்தது. இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் பிற்காலத்தில் பிடல் காஸ்டிர�ோவும் சட்டம் படிப்பதற்காகச் சேர இருந்தார். பெடரேசியான் டே எஸ்டுடியான்டேஸ் டே லா யுனிவர்ஸ்டாட் டே லா ஹபானா (எப். ஈ. யூ) என்கிற மாணவர்களின் அமைப்பு ப�ோராட்டத்தை முன்னெடுத்தது. இதற்கு ஜூலிய�ோ அன்டோனிய�ோ மேலா என்கிற மாணவர் தலைமை தாங்கினார். இந்தப் ப�ோராட்டத்தை அடக்கிய மச்சாட�ோ மேலாவை மெக்சிக்கோ நாட்டிற்கு நாடு கடத்திவிட்டார். நாடு கடத்தப்பட்டிருந்த மேலா மெக்சிக்கோவில் மர்மமான முறையில் க�ொலை செய்யப்பட்டார். இந்தக் க�ொலை கியூபாவில் ப�ோராட்டக் களத்தில் இருந்த அனைத்துத் அமைப்பினரையும் ஒன்றுபடுத்திவிட்டது. அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து மச்சாட�ோ அரசாங்கத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் ப�ோராடத் த�ொடங்கினார்கள். ஆயுத மேந்திய ப�ோராட்டங்களுக்கும் கூடச் சில அமைப்பினர் திட்டங்களை உருவாக்கினார்கள். மச்சாட்டோ ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையும் ப�ோலிசும் சேர்ந்துக�ொண்டு ப�ோராட்டத்திலிருந்து மக்களைத் தாக்கத் த�ொடங்கினார்கள். கியூபாவில் கிட்டத்தட்ட உள்நாட்டு ப�ோர் சூழ்நிலை. கியூப மக்கள் தங்களின் பிரச்சனையைத் தாங்களே தீர்த்துக்கொள்ளத் தெருவில் இறங்கிப் ப�ோராடிக்கொண்டிருந்தப�ோது இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா உள்ளே புகுந்தது. மீண்டும் ஒருமுறை கியூப மக்களின் ப�ோராட்டத்தை அவர்கள் கையிலிருந்து பறித்துக்கொண்டு தன்னால் மாத்திரமே கியூப மக்களின் பிரச்சனைக்குத் தீர்வை வழங்க முடியும் என்று காட்டிக்கொள்ள நினைத்தது. இறுதியில் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் 1933-ல் மச்சாட�ோ கியூப ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்கப்பட்டுப் புதிய கைப்பொம்மையை ஆட்சியில் உட்காரவைத்தது அமெரிக்கா. இந்தச் சங்கதிகள் ஒருபுறம் ப�ோய்க் க�ொண்டிருக்க ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு வேண்டிப் புல்ஜெனிக்கோ படிஸ்டாவும், 19
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சார்ஜட்ன்களின் புரட்சி என்கிற பெயரில் அரசியல் சதி வேலைகளைச் செய்துக�ொண்டிருந்தார். மீண்டும் ஒருமுறை கியூப மக்களின் தேசிய விடுதலைக்கான ப�ோராட்டம் தார் சாலையில் ஊற்றிய தண்ணீராக எத்தகைய பயனும் இல்லாமல் அடங்கிப்போனது. ப�ோராட்டங்கள் அடங்கினாலும் பெருவாரியான கியூப மக்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்துப் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். அதில் முக்கியப் பங்கு வகித்தது ஹவானா பல்கலைக்கழக மாணவர்கள். ஹவானா த�ொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ப�ோராட்டக்காரர்களை உருவாக்கிக் கியூப சமூகத்திற்கு அளிக்கும் த�ொழிற்சாலையாகவே அடுத்து வந்த பல பத்தாண்டுகளுக்குச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இந்தப் புற அரசியல் சூழலில்தான் பிடல் காஸ்டிர�ோ த�ொடக்க நிலைப் பள்ளிப் படிப்பைத் த�ொடங்க லா சேல் பள்ளிக்கு வந்து சேர்ந்தார். சில நாட்களில் அங்கேயே தங்கிப் படிக்கும் மாணவராக அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்குப் பிரச்சனை த�ொடங்கிவிட்டது. ஒழுக்கம் வரவழைக்க வேண்டிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட ஸ்பானிய முறையிலான அதட்டல் உருட்டல் அதிகார ஒடுக்குமுறைகள் வழமைப�ோல அவருடைய எதிர் கலகம் செய்யும் குணத்தை அதிகப்படுத்தியது. இதனால் அவருடைய படிப்பு திறன் குறைந்தது. ஆசிரியர்களின் அதட்டல்களை எதிர்த்து மல்லுக்கட்டுவதிலேயே அவருடைய சக்திகள் அனைத்தும் ப�ோனது. மூத்த சக�ோதரரான ர�ோமானும் பள்ளியில் அடங்காப்பிடாரி என்கிற பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார். இந்த நிலை இப்படியே த�ொடரப் பள்ளி நிர்வாகம் ஏன்ஜல் காஸ்டிர�ோவிற்கு கடிதம் எழுதிவிட்டது. உங்கள் இரண்டு பிள்ளைகளையும் வந்து ஒரேயடியாகப் பள்ளியை விட்டு அழைத்துச் சென்றுவிடுங்கள் என்று. ஏன்ஜல் காஸ்டிர�ோவிற்கு இந்தச் சம்பவம் மிகுந்த க�ோபத்தைக் கிளப்பிவிட்டது. இருவரையும் மீண்டும் பிரான் பண்ணைக்கே திரும்ப அழைத்துவந்துவிட்டார். ர�ோமான் தனக்கு மேற்கொண்டு படிக்கச் சுத்தமாக விருப்பமில்லை என்று ச�ொல்லிவிட்டதால் அவருடைய படிப்பை மேற்கொண்டு 20
நவீனா அலெக்சாண்டர்
த�ொடரவில்லை. ஆனால் பிடல் தன்னை வேறு ஒரு பள்ளியில் சேர்த்துவிடும் படி அடம்பிடிக்கத் த�ொடங்கினார். ஏன்ஜல் காஸ்டிர�ோ முடியாது என்று மறுக்கத் தாயார் லினாவின் தலையீட்டின் பெயரில் பிடல் சான்டியாக�ோவிலிருந்த மற்றொரு பள்ளியான க�ோலேஜிய�ோ டே ட�ோல�ோர்சில் சேர்த்துவிடப்பட்டார். இது ஜெசுயிஸ்ட் கிருத்தவர்களால் நடத்தப்பட்ட பள்ளி. பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் மாத்திரமே படிக்கும் பள்ளி இது. பள்ளியில் சேர்ந்த சில நாட்களுக்குள் பிடலுக்கு மீண்டும் பிரச்சனைகள் த�ோன்ற அவர் தங்கிப் படிக்கும் மாணவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிறகு அவைகள் க�ொஞ்சம் க�ொஞ்சமாக மறையத் த�ொடங்கின. ஒழுக்கத்தை வரவழைக்க அடக்கு முறைகளைப் பின்பற்றாத ஜெசுயிஸ்ட் பாதரிமார்களின் ப�ோக்கு பிடலுக்கு பிடித்துப்போனது. அதிலும் முக்கியமாக அந்தப் பள்ளியில் விளையாட்டுகளுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் அவரை மேலும் கவர்ந்தது. பாடப் புத்தக வழி மூலமாக மாத்திரமே மாணவர்களுக்கு ஒழுக்கம், நேர்மை மற்றும் தியாகம் ப�ோன்ற பண்புகளைத் திணிக்க முயலாமல் விளையாட்டுகள் மூலமும் இத்தகைய விசயங்களை மாணவர்களின் மனதில் பதியவைப்பதில் முன்னுரிமை தந்தது இந்தப் பள்ளி. இயல்பிலேயே அதிகார ஒடுக்குமுறைக்கு எதிராகக் கலகம் செய்யும் குணம் க�ொண்ட பிடல் காஸ்டிர�ோவிற்கு ஒரு உயர் ந�ோக்கத்திற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யத் துணியவேண்டும் என்கிற துணிச்சலை விதைத்தது இந்தப் பள்ளி நாட்கள்தான். விளையாட்டுகள் பிடலை கவர்ந்து இழுத்த காரணத்தால் பள்ளியில் இருந்த அனைத்து விளையாட்டுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார். அதற்கு ஏற்றார்போலவே அவருடைய உடல் வாகும் அமைந்திருந்தது. உயர்ந்த ஒடிசலான தேகத்துடன் அவரால் அனைத்து விளையாட்டுகளிலும் தேர்ச்சி பெற முடிந்தது. கால்பந்து, பேஸ்பால், டென்னிஸ், தடகள விளையாட்டுகள் மற்றும் நீச்சல் என்று அனைத்திலும் அவர் முன்னிலையில் இருந்தார். அவருடைய விளையாட்டுத் திறமை பள்ளி முழுவதிலும் அவருக்கு என்று தனிச் செல்வாக்கு உருவாகக் காரணமாக இருந்தது. அவரைச் 21
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சுற்றி நண்பர்கள் வட்டமும் பெருகத் த�ொடங்கியது. பள்ளி விடுமுறை நாட்களில் பிரானுக்குச் சென்றுவிடுவார். பிரானில் தந்தையுடைய பண்ணை நிலத்திலும் சுற்றியிருக்கும் காட்டுப் பகுதியிலும் நாய் ஒன்றின் துணையுடன் சுற்றித் திரிவது அவருடைய விடுமுறை கழிப்பு ப�ொழுதுப�ோக்காக மாறிப்போனது. இந்த நாட்களில்தான் தந்தை வைத்திருந்த வான�ொலிப் பெட்டியில் உலகச் செய்திகளைக் கேட்கும் பழக்கம் அவருக்கு உண்டானது. கியூபாவைத் தவிர்த்துப் பல நாடுகளைக் குறித்துத் தெரிந்துக�ொள்ளத் த�ொடங்கினார். அப்படி வான�ொலி கேட்டுக்கொண்டிருந்த சமயம் ஒன்றில் அமெரிக்காவின் தேர்தல் செய்தியைக் குறித்து அவர் கேள்விப்பட்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்டுக்கு அவருடைய தேர்தல் நடவடிக்கைகளைக் குறித்துக் கேட்டு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். இது நடைபெற்றது அவருடைய பதினான்காம் வயதில். காரணமற்ற புரட்சிகள் அல்ல அவைகள் – பள்ளிப் பருவம் II ட�ோல�ோரஸ் பள்ளியில் பிடல் காஸ்டிர�ோ படித்துக்கொண்டிருந்த சமயத்தில் சக மாணவர்களின் பேச்சில் அடிக்கடி அடிபட்ட மற்றொரு பள்ளியைப் பற்றி தெரிந்துக�ொண்டார். அந்தப் பள்ளியும் ஜெசுயிஸ்ட் கிருத்தவ பாதிரிகளாலேயே நடத்தப்பட்ட பள்ளி. ஆனால் அந்தப் பள்ளி தலைநகரான ஹவானாவில் இருந்தது. நாட்டின் மிகப் புகழ்பெற்ற பள்ளிகளில் அதுவும் ஒன்று. அந்தப் பள்ளியின் சிறப்பைத் த�ொடர்ச்சியாகக் கேள்விப்பட்ட பிடல் அந்தப் பள்ளியில் சேர்ந்து தனது படிப்பைத் த�ொடர விரும்பினார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஏன்ஜல் காஸ்டிர�ோ பிறகு பிடலை அவர் விருப்பப்படியே அந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அந்தப் பள்ளி பெலன். இது நடந்தது பிடலின் பதினைந்தாம் வயதில். பாடத்திட்டம், பயிற்று விக்கும் முறைகள், விளையாட்டுகள் என்று அனைத்திலும் மேம்பட்டிருந்த பள்ளி பெலன். படிப்பு மற்றும் விளையாட்டு என்று இரண்டிலும் தனக்கான இடத்தைப் பெறப் பிடல் காஸ்டிர�ோ கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. கூடைப்பந்து, தடகளம், பேஸ்பால், டென்னிஸ் மற்றும் நீச்சல் விளையாட்டுகள் என்று முந்தைய பள்ளியில் அவர் காட்டிய 22
நவீனா அலெக்சாண்டர்
அனைத்துத் திறமைகளையும் இந்தப் பள்ளியிலும் த�ொடர்ந்தார். கூடுதலாக இந்தப் பள்ளியில் மாணவர்களின் மலையேறும் குழுவும் இருந்தது. தி எக்ஸ்பிள�ோரர்ஸ் என்கிற அந்த மலையேறும் குழுவின் தலைவராகவும் பிற்பாடு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு குழுவைத் தலைமை தாங்கி வெற்றியை ந�ோக்கி அழைத்துச் செல்லும் பிடலின் தலைமைத் திறன் வெளிப்பட்ட நாட்கள் ட�ோல�ோரஸ் மற்றும் பெலன் பள்ளி விளையாட்டுப் ப�ோட்டிகள் என்று இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர் அதிகமாக விளையாட்டுப் ப�ோட்டிகளிலேயே கவனம் செலுத்தியதால் படிப்பில் அவருடைய செயல்பாடு கீழே ப�ோகத் த�ொடங்கியது. பெலன் பள்ளி நிர்வாகம் இந்த நிலை த�ொடர்ந்தால் அவர் இறுதி பரிட்சையில் த�ோல்வியைத் தழுவ வேண்டியிருக்கும் என்று அவரை எச்சரிக்கை செய்தது. சக மாணவர்களும் பிடல் இறுதி பரிட்சையில் திணறத்தான் ப�ோகிறார் என்று நினைத்திருக்க அனைவரையும் அசரடிக்கும் விதமாக அனைத்துப் பாடங்களிலும் குறிப்பிடும்படியான மதிப்பெண்களைப் பெற்றுவிட்டார். குறிப்பாகக் கணிதம், இயற்பியல் மற்றும் நிலவியல் பாடங்களில். இந்த மூன்று பாடங்களில் அவர் மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த பாடங்கள் வரலாறு, விவசாயம் மற்றும் பேச்சு கலை (அல்லது விவாதக் கலை). சிறு வயது முதலே அவருக்கு வரலாறு மிகவும் பிடித்த ஒரு விசயம். அதிலும் வரலாற்றில் நடைபெற்ற ப�ோர்கள் அவரை மிகவும் கிளர்ச்சியடைய வைக்கக் கூடியவைகள். மணிக் கணக்கில் வரலாற்றில் நடைபெற்ற முக்கியப் ப�ோர்களைக் குறித்துப் பேசுவது என்றாலும் அவருக்கு அலுக்காது. ப�ோர்களின் மையமாக இருக்கும் இராணுவச் செயல்பாடுகள் அவரை அதிகம் கவர்ந்தது. மனித வரலாறு கண்ட மாபெரும் தளபதிகளின் ப�ோர் களச் செயல்பாடுகளையும் அவர்கள் ப�ோர்களில் கடைபிடித்த யுத்தகளத் தந்திரங்களையும் கற்பனை காட்சிகளாக மனக் கண்ணில் க�ொண்டுவந்து அதை இரசிப்பது அவருடைய விருப்பப் ப�ொழுதுப�ோக்குகளில் ஒன்று. குறிப்பாகப் பள்ளியில் அவருக்கு விருப்பமில்லாத பாடம் நடைபெறும்போது இப்படியான பகல் கனவில் உட்கார்ந்திருப்பது வழக்கம். 23
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சில சமயங்களில் இத்தகைய பகல் கனவு கற்பனையின் ப�ோது ஒருபடி மேலே ப�ோய்த் தான் அந்தப் ப�ோரில் தளபதியாக இருந்திருந்தால் எப்படியான யுத்தகளத் தந்திரங்களை வகுத்து எதிரியைத் த�ோற்கடித்திருப்பேன் என்று காட்சிகளை உருவாக்குவதும் வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் இரண்டாம் உலகப் ப�ோருக்கான புறச் சூழ்நிலைகளும் உருவாகி வந்துக�ொண்டிருந்ததால், உலக வரைபடத்தை வைத்துக்கொண்டு நாடுகளின் இராணுவச் செயல்பாடுகளைத் த�ொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். இதை அவரே பிற்பாடு தன்னுடைய சுயசரிதையிலும் குறிப்பிடுகிறார். பைபிலின் பழைய ஏற்பாட்டில் வரும் ப�ோர்க்களச் சம்பவங்களும் அவரை ஈர்தவைகள். சாமானியன் ஒருவன் சகலப் பலமும் ப�ொருந்திய எதிரியை யுத்தகளத் தந்திரங்களின் மூலம் த�ோற்கடிப்பது பிடல் காஸ்டிர�ோவிற்கு மிகப் பிடித்த அம்சம். இதுவே பிற்காலத்தில் அமெரிக்கா என்கிற மிகப் பலம் ப�ொருந்திய ஏகாதிபத்திய எதிரியைத் த�ொடர்ச்சியாக அவர் த�ோற்கடிப்பதற்கு அடிப்படையாக அமைந்துப�ோனது. ப�ோர்க்கள இராணுவ வரலாற்றிற்குப் பிறகு அவர் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்கும் பாடம் விவசாயம். பள்ளி விடுதியில் பல நாட்கள் இரவு முழுவதும் சில சமயங்கள் ப�ொழுது விடியும் சமயம் வரைக்கும் கூட விவசாயம் குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருந்ததாகப் பிடல் குறிப்பிடுகிறார். பெலன் பள்ளியில் செயல்பட்டு வந்த விவாதக் குழுவிலும் பிடல் உறுப்பினராக இருந்தார். விவாதத்தில் வெல்வதும் ப�ோர் களத்தில் வெல்வதும் ஒன்றே என்பது அவருடைய பள்ளிப் பருவத்துக் கருத்து. இரண்டிலும் இலக்கு என்பது ஒன்றுதான் அது எதிரியை வெல்வது. இதற்குப் பேச்சு திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று அவர் கருதியதால் டிம�ோஸ்தனிஸ் (கிரேக்கச் ச�ொற்பொழிவாளர்) மற்றும் சிசார�ோவின் (ர�ோமானியச் ச�ொற்பொழிவாளர்) ச�ொற்பொழிவுகள் அடங்கிய புத்தகங்களைச் சேகரித்து அதில் அவர்கள் பேசுவதைப் ப�ோலவே தானும் கண்ணாடியின் முன்பு நின்று பேசிப் பழகியிருக்கிறார். 24
நவீனா அலெக்சாண்டர்
இனி வர இருந்த நாட்களில் பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவராக அவர் இருந்தப�ோது நிகழ்த்திய அனைத்து மேடை ச�ொற்பொழிவுகளுக்கும் அடித்தளமாக அமைந்தது பெலன் பள்ளியில் அவர் மேற்கொண்ட பேச்சுப் பயிற்சியே. நாட்டை வழிநடத்தக் கூடிய தலைமை திறனுக்கான அடிப்படைகளை அவரையும் அறியாமலேயே அவர் இந்தப் பள்ளி நாட்களில் தனக்குள்ளே வளர்த்தெடுத்துக்கொண்டிருந்தார். பிற்காலத்தில் அரசியலில் அவர் காலடியெடுத்து வைப்பதற்கான பல வலுவான நண்பர்கள் மூலமான செல்வாக்கை அவர் உண்டாக்கிக் க�ொண்டதும் பெலன் பள்ளி நாட்களில்தான். பெலன் பள்ளி கியூபாவின் ஓட்டும�ொத்த பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் பிள்ளைகள் படித்த பள்ளி என்பதால் அங்கே அவருக்குக் கிடைத்த நட்பு வட்டம் பிற்காலத்தில் அவர் ஆயுதப் புரட்சியை மேற்கொள்ள மறைமுக உதவியாக இருந்திருக்கிறது. அரசியல் கருத்துகளாகப் பிடல் பெலன் பள்ளியில் படித்தது ஜ�ோஸ் அன்டோனிய�ோ பிரைம�ோ டே ரெவேராவின் எழுத்துகளை. அன்றைய நாட்களில் அன்டோனிய�ோ பிரைம�ோ பிளாங்கே எஸ்பன�ோலா என்கிற அரசியல் க�ொள்கை சார்ந்த இயக்கத்தைத் த�ோற்றுவித்திருந்தார். இவருடைய அரசியல் கருத்துகள் வலதுசாரி தன்மை க�ொண்டது. இருந்தாலும் இவருடைய கருத்துகளில் பிடல் காஸ்டிர�ோவை மிகவும் கவர்ந்தது ஸ்பானிய ம�ொழி பேசும் தென்னமெரிக்க நாடுகளின் கூட்டிணைவு என்பது. தென்னமெரிக்கா நாடுகளின் கூட்டினையே பலம் ப�ொருந்திய அமெரிக்காவை எதிர்க்க வசதியாக இருக்கும் என்கிற கருத்தைப் பிடலும் ஆழமாக நம்பினார். அடுத்து விடுதலைப் பெற்ற கியூபாவின் தேசத் தந்தையாகப் பார்க்கப்பட்ட ஜ�ோஸ் மார்டியின் எழுத்துகளும் அன்றைய நாட்களில் பிடல் காஸ்டிர�ோவின் அரசியல் கருத்துக்களை அதிகம் செதுக்கியவைகளாக இருந்தன. பிற்காலத்தில் பிடல் மேற்கொள்ள இருந்த அனைத்துப் புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் தேவைப்பட்ட யுத்தகளத் தந்திரம், தலைமை பண்பு, பேச்சாற்றல் மற்றும் அரசியல் க�ொள்கை தெளிவு ஆகியவைகளுக்கான அடித்தளங்கள் அவரையும் அறியாமலேயே பெலன் பள்ளி நாட்களில் ப�ோடப்பட்டது. 25
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பள்ளிப் படிப்பை முடித்த பிடல் காஸ்டிர�ோ அடுத்துச் சட்டப் பட்டப்படிப்பு படிப்பதற்காக ஹவானா பல்கலைக் கழகத்தில் சேருவது என்று முடிவு செய்தார். அவருடைய வாழ்க்கையையும் கியூபாவின் அரசியல் தலையெழுத்தையும் என்றென்றைக்குமாக மாற்றிப்போடுவதற்கான களமாக ஹவானா பல்கலைக்கழகம் அவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தது என்பது அப்போது அவர் அறியாத ஒன்று. இது குறித்துப் பார்ப்பதற்கு முன்பாகப் பிடல் காஸ்டிர�ோவின் பள்ளிப் படிப்பு நாட்கள் குறித்த அத்தியாயத்தை அவருடைய வார்த்தைகளிலேயே முடிப்பது சிறப்பாக இருக்கும்தானே. ‘நான் ஒரு புரட்சியாளனாகப் பிறக்கவில்லை. ஆனால் அவசியமான நேரங்களில் நான் எதிர் குரல் மூலமான புரட்சிகளைச் செய்யத் தவறியதில்லை. நான் பிறந்த ஊரிலும், நான் படித்த பள்ளிகளிலும் சில நேர்மையற்ற அநியாயமான விசயங்களைப் பார்க்கவும் புரிந்துக�ொள்ளவும் த�ொடங்கினேன். நாட்டில் நிலவிய முதலாளித்துவ நடவடிக்கைகள் எனது நினைவில் அப்படியே பசுமையாகப் பதிந்து ப�ோயிருக்கின்றன. பிரானில் இருந்த ஏழை எளிய மக்களின், கடும் உழைப்பாளிகள், அமெரிக்கச் சர்க்கரை ஆலைகளால் உறிஞ்சப்பட்ட மக்களின், பசித்த வயிற்றுடனும் வெறும் கால்களுடனும் உதவி தேடி எனது தந்தையை வந்து பார்த்த ஏழைகளின் உருவங்கள் எனது நினைவுகளில் இருந்து என்றைக்கும் அழிக்க முடியாதவைகள். நேர்மையற்ற அநீதியான சூழலில் நானும் கூடச் சில விசயங்களில் நேரடியாகவே பாதிப்புகளுக்கு உள்ளான தருணங்களும் உண்டு. சிறிது சிறிதாகச் சமூக நீதி குறித்தும் சுய மரியாதை குறித்தும் தெரிந்துக�ொள்ளத் த�ொடங்கினேன். இதன் விளைவாக எதிர் கேள்விகளைக் கேட்கத் த�ொடங்கினேன். எதிர் கேள்விகள் என்னை அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டின. எனது எதிர் கேள்விகள் மூலமான கலகங்கள் சிறு சிறு ஒத்துழையாமை புரட்சிகளாக மாறின. நியாயமான காரணங்களே இல்லாத புரட்சிகள் அல்ல என்னுடைய சிறு வயது கலக நடவடிக்கைகள். எனது புரட்சி எதிர்ப்புகள் அனைத்தும் நியாயமான நேர்மையான சுய மரியாதைக்கான காரணங்களைக் க�ொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நீதிக்கான நேர்மைக்கான சுய மரியாதைக்கான 26
நவீனா அலெக்சாண்டர்
தேடல் என்னில் அதிகமாகவே இருந்திருக்கிறது. அவைகளே எனது ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளின் அடிப்படையாகவும் இருக்கின்றன.’
27
கூறுகட்டி
விற்கப்பட்ட குடியரசு – பல்கலைக்கழக மாணவர் பருவம் - I
பி
டல், 1945-ல் சட்டம் படிப்பதற்காக ஹவானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அது இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டம் என்பதால் ஐர�ோப்பாவில் சர்க்கரைக்கான விலை உச்சத்திலிருந்து. இதன் காரணமாகக் கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி த�ொழில் உச்சத்திற்குப் ப�ோய்க்கொண்டிருந்தது. சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் கியூபா ஈட்டிக்கொண்டிருந்த வருவாயில் பெரும்பகுதி கியூபாவில் செயல்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் வாய்களுக்குள்ளேயே ப�ோய்க் க�ொண்டிருந்தது. கியூபாவிலிருந்த பெரும் சர்க்கரை உற்பத்தி ஆலைகள் அமெரிக்க நிறுவனங்களுடையது என்பதால் இந்த நிலை. சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் க�ொள்ளை இலாபத்தைப் பெற்றுக்கொண்டு குறைந்த அளவிலான சம்பளத் த�ொகைகளையே ஆலைகளில் வேலைப் பார்த்த கியூப த�ொழிலாளர்களுக்கு வழங்கிவந்தன.
சர்க்கரை உற்பத்திக்குத் தேவையான பெருவாரி கரும்பு விவசாய நிலங்களையும், அதில் முதுகு ஒடியக் கூலி வேலைப் பார்த்த கியூப மக்களின் உழைப்பையும் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க நிறுவனங்கள் இவைகளின் மூலம் பெற்ற இலாபத்தை மீண்டும் கியூபாவிலேயே முதலீடு செய்வதற்குப் பதிலாக அமெரிக்காவிற்கு மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றுக�ொண்டிருந்தன. இவைகள் மச்சாட�ோவிற்கு எதிராக எழுந்த கியூப மக்களின் புரட்சிகர எதிர் குரலை அடுத்து வந்த ஆண்டுகளிலும் ஓயவிடாமல் பார்த்துக்கொண்டன. வழமைப�ோல ஹவானா பல்கலைக்கழக மாணவர்கள் இதில் கியூப நாட்டின் மனசாட்சியைப் ப�ோலச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் கவனிக்கப்பட 28
நவீனா அலெக்சாண்டர்
வேண்டிய விசயம் ஹவானா பல்கலைக்கழகம் கம்யூனிஸ்ட் க�ொள்கைகளின் இயங்குதளமாக இருந்தது என்பது. ஹவானா பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் க�ொண்டவர்களாகவே இருந்தார்கள். பிடல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பாக இருந்த ஆண்டுகளின் அரசியல் நிலை குறித்து இங்கே பார்க்கவேண்டியிருக்கிறது. மச்சாட�ோவின் ஆட்சியைக் கவிழ்த்து அவரை வீட்டிற்கு அனுப்பிய பிறகு கியூப நாட்டிற்கான தனது தூதர் மூலம் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைத் தனது நேரடியான கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்தது அமெரிக்கா. இந்தச் சமயத்தில் நாம் முன்பே பார்த்த சார்ஜன்ட் பாடிஸ்டா ‘சர்ஜன்ஸ் புரட்சி’ என்கிற பெயரில் அமெரிக்கத் தூதரை ஓரம் கட்டிவிட்டுக் கியூப இராணுவத்தின் துணையுடன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து சேர்ந்தார். இராணுவத்தின் துணை மாத்திரமே தன்னைக் கறை சேர்க்காது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் ஹவானா பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவருடன் கை க�ோர்த்துக்கொண்டார். அப்போதைய பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் டாக்டர் ராம�ோன் க்ராவு. ரிவல்யூஷனரி டைரக்டிரெட் என்கிற பெயரில் ராம�ோனின் தலைமையில் கியூப ஆட்சி அமைந்தது. ஆட்சிக்கு வந்த கையுடன் கம்யூனிசச் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த பல புரட்சிகர மாற்றங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. உதாரணமாக நிலச் சீர்திருத்தம், பெண்களுக்கு வாக்கு உரிமை அளிப்பது, குறைந்த பட்ச கூலிக்கான அளவு நிர்ணயம், குறைந்த வேலை நேரம், புதிய வர்த்தகக் க�ொள்கைகள் என்பது ப�ோன்றவைகள். இந்த நடவடிக்கைகள் அமெரிக்கத் தூதரின் மூலைக்குள் எச்சரிக்கை மணியை அடித்தது. இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் கியூபாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் வெறும் கையைதான் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும் தந்தி அடிக்கத்தொடங்கிவிட்டார். அமெரிக்காவிற்கு அண்டத்தில் அலர்ஜியை உண்டாக்கும் கம்யூனிச நடவடிக்கைகளைப் பக்கத்து நாட்டில் அதுவும் மிகச் சிறிய நாட்டில் அனுமதிப்பது சரியல்ல உடனடியாக அமெரிக்கக் கப்பல் படை கியூபாவிற்கு வந்து சேர்ந்து ஆட்சியாளர்களுக்குப் 29
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பயம் காட்டவேண்டும் என்று அந்தத் தூதர் அமெரிக்காவிற்குச் செய்தி அனுப்பினார். இந்த எச்சரிக்கைக்குத்தான் படிஸ்டா காத்துக்கொண்டிருந்தார். அமெரிக்கப் பூச்சாண்டியைக் காட்டி ராம�ோன் க்ராவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுத் தனது கையாட்களை ஆட்சி அதிகாரத்திற்குக் க�ொண்டுவந்தார். பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகவேண்டியிருந்தது. ஆட்சியிலிருந்து இறக்கி விடப்பட்ட ராம�ோன் க்ராவு, ஆதன்டிக் ரிவல்யூஷனரி பார்டி என்கிற அரசியல் கட்சியை உருவாக்கினார். இதைப் பற்றியெல்லாம் கண்டுக�ொள்ளாத படிஸ்டா அமெரிக்காவுடன் க�ொல்லைப்புற உறவிலும் இருந்தார். மறைமுகமாகத் தனது கட்டுப்பாடுகளைக் கியூபாவின் ஆட்சியில் செலுத்தும் சக்தியாக இருந்தார். தன்னுடைய முயற்சிகளின் முடிவில் 1940-ல் கியூபாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கைய�ோடு காங்கிரசுக்கான தேர்தலையும் அவர் நடத்தியப�ோது பிடல் காஸ்டிர�ோவின் ஒன்றுவிட்ட சக�ோதரரான பெட்ரோ எமிலிய�ோ ஆதன்டிக் ரிவல்யூஷனரி பார்டி சார்பில் ஓரியன்ட் மாகாணத் தேர்தல் களத்தில் நின்றார். அப்போது பதினான்கு வயதில் இருந்த பிடல் காஸ்டிர�ோ தன்னுடைய சக�ோதரன் தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஓரியன்ட் மாகாண மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தேர்தல் முறையின் உள்ளடி மற்றும் வெளிப்படை வேலைகளைக் குறித்துப் பிடல் அறிந்துக�ொண்டது இந்தச் சமயத்தில்தான். நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துவிட்டு மிகுந்த தன்னம்பிக்கையுடன் படிஸ்டா அடுத்த ஐந்தாண்டு ஆட்சி காலப்பகுதிக்கான தேர்தலை நடத்த மக்கள் படிஸ்டாவிற்கு எதிராக வாக்களித்து அவரை ஓரம் கட்டிவிட்டார்கள். படிஸ்டா ஓரம் கட்டிய ராம�ோன் க்ராவு 1944 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கியூபாவின் ஜனாதிபதியாக வந்தார். முதல் முறை ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ராம�ோன் க்ராவுவாக அவர் இந்த முறை இல்லை. தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவர், வேண்டியவர்களுக்கு இலஞ்சம் க�ொடுப்பதையும் அதிகாரமிக்க பதவிகளைக் க�ொடுப்பதையும் 30
நவீனா அலெக்சாண்டர்
தனது இயல்பாக மாற்றிக்கொண்டுவிட்டார். இதன் காரணமாகக் கியூபாவின் நிலை முன்னேறுவதற்குப் பதிலாக மேலும் ம�ோசமாகிப்போனது. எந்தப் பல்கலைக்கழக மாணவ அமைப்பின் சார்பில் அவர் முதன் முறை ஜனாதிபதி பதவிக்குத் தேர்வானார�ோ அதே அமைப்பை இப்போது தனக்கு எதிராகப் பேசவிடாமல் அடக்கி ஒடுக்கினார். மேலும் மாணவ அமைப்பின் பலத்தை முற்றிலும் முடக்குவதற்காக வேண்டி மாணவர்களுக்குள்ளேயே சிறு சிறு எதிர் குழுக்களை உருவாக்குவதற்கான பணத்தையும் வாரியிறைத்தார். மாணவக் குழுக்களின் கைகளில் ஆயுதங்கள் சர்வச் சாதாரணமாகப் புழங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. நாட்டின் மனசாட்சியாக இருந்து ஆட்சியாளர்களின் ம�ோசடித்தனங்களுக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பி வந்த பல்கலைக்கழக மாணவ அமைப்பு சிறு சிறு குழுக்களாக உடைந்து தங்களுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக மாறி ஆயுதங்களைக் க�ொண்டு தாக்கிக்கொண்டார்கள். இத்தகைய தாக்குதல்களின் தீவிரத்தை அதிகப்படுத்த மாணவர்களின் ப�ோர்வைக்குள் மறைந்திருந்த கூலிப்படைகளும் அதிகாரத்தில் இருந்தவர்களால் பல்கலைக்கழகத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டன. அடிதடி வன்முறைகளும், க�ொலைகளும் ஹவானா பல்கலைக்கழகத்தில் சர்வசாதாரண நிகழ்வுகளாக மாறிப்போனது. பேராசிரியர்கள் மிரட்டப்பட்டார்கள். ஸ்பானிய மரபுப்படி பல்கலைக்கழகங்கள் தனித்த அதிகாரம் படைத்தவைகள் என்பதால் இத்தகைய வன்முறைகளைக் கண்டிக்கும் விதமாகக் காவல்துறையால�ோ அல்லது இராணுவத்தால�ோ பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியாது. அதற்கு அவைகளுக்குச் சட்டப்படியான அனுமதியும் கிடையாது. மேலும் தாங்கள் வளர்த்துவிடும் பல்கலைக்கழக வன்முறைகளைத் தாங்களே காவல்துறைக�ொண்டோ அல்லது இராணுவம் க�ொண்டோ அடக்குவதை எந்த நிலையிலும் அதிகாரத்தில் இருந்த சக்திகள் விரும்பவில்லை. பிடல்
காஸ்டிர�ோ
ஹவானா
பல்கலைக்கழகத்தில் 31
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சேர்ந்தப�ொழுது இதுதான் பல்கலைக்கழகத்தின் எதார்த்த நிலையாக இருந்தது. ஆனால் இந்த வன்முறைகளைக் குறித்துப் பிடல் கண்டுக�ொண்டதாகவே தெரியவில்லை. பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவுடன் தனது இலக்கைத் துல்லியமாக அறிந்துக�ொண்டவரைப்போலச் செயல்படத்தொடங்கினார். பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு வேண்டித் தந்தையிடம் ச�ொல்லி ஒரு கார் வாங்கிக்கொண்டவர் அதிலேயே தனது சக�ோதரி ஏன்ஜலாவுடன் ஹவானாவிற்கு வந்து தனி வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கிக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் சில மாதங்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்திய பிடல் பிற்பாடு முழுக்கப் முழுக்க பல்கலைக்கழக அரசியல் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். மாணவ அமைப்பின் (எப். ஈ. யூ) தலைவராக வரவேண்டும் என்பதே அவருடைய முதற்கட்டக் குறியாக இருந்தது. அதற்கான அனைத்து வழிகளையும் வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்தத் தவறவில்லை. ஒரு நாள் தவறாமல் அன்றைக்கு வெளிவந்துக�ொண்டிருந்த அரசியல் ஏடுகளையும் பத்திரிக்கைகளையும் படித்துக் கியூபாவின் அரசியல் சூழ்நிலையை நன்கு உள்வாங்கிக்கொண்டார். அது குறித்துப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசவும் த�ொடங்கினார். அவர் வகுப்பில் இருப்பதைவிட மாணவர்கள் பெருவாரியாகக் கூடும் இடங்களான பல்கலைக்கழகக் கேபிடீரியாவிலும் ஹவானா முழுவதிலும் இருந்த மற்ற கேபிடீரியாக்களிலுமே இருந்தார். அந்த இடங்களில் மாணவர்களுக்கு மத்தியில் அன்றைய அரசியல் சூழ்நிலை குறித்துப் பேசியபடி இருந்தார். அவர் பேசிய அந்தப் பேச்சுகளைக் குட்டி அரசியல் ச�ொற்பொழிவுகள் என்றே ச�ொல்லலாம். அந்த அளவிற்குத் தனது பேச்சாற்றலைப் பயன்படுத்தி அவர் மாணவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். மற்ற மாணவ அரசியல் செயல்பாட்டாளர்களிடமிருந்து தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள அவர் ஒரு தேர்ந்த எக்ஸ்சிகியூட்டிவ் ப�ோலக் க�ோட் சூட் உடையை அணிந்துக�ொண்டு இத்தகைய பேச்சுகளை நிகழ்த்தினார். நெடிது உயர்ந்த அவருடைய உடற்கட்டும், பேச்சாற்றலும், தனித்துவமான உடையும் அவரைக் கூட்டத்தில் தனித்துக் காட்டியது மாத்திரமல்லாமல் மாணவர்களிடையே 32
நவீனா அலெக்சாண்டர்
க�ொஞ்சம் க�ொஞ்சமாகச் செல்வாக்கும்பெற வைத்தது. தன்னுடைய பேச்சுகளில் நேர்மைக்கும், சமூக நீதிக்கும், நியாயமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியத்துவம் க�ொடுத்துப் பேசி வந்தார். தங்களுக்கு எதிராக எழும் எதிர் குரல்களைப் பணத்தை அடித்து விலைக்கு வாங்குவதின் மூலமாகவும் வன்முறையை ஏவி நசுக்குவதின் மூலமாகவும் இல்லாமல் ஆக்க ஆளும் வர்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அவர் தன்னுடைய பேச்சுகளில் வன்மையாகக் கண்டனம் செய்தார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கியூப அரசியலை எதிர்த்துப் ப�ோராடுவது எத்தகைய பயனையும் க�ொண்டுவரப்போவதில்லை மாறாக அமெரிக்கக் கட்டுப்பாட்டைத் தலையெழுத்து என்று சகித்துக்கொண்டு ப�ோய்த் த�ொலையவேண்டியதுதான் என்கிற மனப்போக்கில் இருந்த மாணவர்களை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இப்படியான மனப்போக்கு சுயமரியாதை அற்ற அடிமைத்தனப் ப�ோக்கு என்று வன்மையாகச் சாடினார். உயிரைத் தக்கவைத்துக்கொள்ள எதிரியின் காலைத் துடைத்துப் பிழைப்பு நடத்துவதற்குப் பதிலாக எதிர் குரல் எழுப்பி ஒரு நாள் வாழ்ந்தாலும் ஆண்மையுடன் வாழ்வது மேல் என்று மாணவர்களை உலுக்கத் த�ொடங்கினார். ஆளும் வர்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையின் வன்முறை செயல்பாடுகளும், இலஞ்சமும் ஊழலும், அமெரிக்காவிற்குப் பணிந்துப�ோகும் சுயமரியாதை அற்ற அடிமை மனப் ப�ோக்கும் கியூப அரசியலின் சாபக்கேடுகள் என்று விளாசித் தள்ளினார். பல்கலைக்கழக வளாகத்திலும், ஹவானாவின் சந்து ப�ொந்துகளிலும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் ப�ோக்கிற்கு எதிராக நடத்தப்பட்ட சின்னச் சிறிய ப�ோராட்டங்களில் கூடப் பிடல் காஸ்டிர�ோ தானே முன்வந்து தன்னை இணைத்துக்கொண்டார். யாரும் அவரை இத்தகைய ப�ோராட்டங்களுக்குக் கூப்பிட வேண்டும் என்று அழைப்புகளுக்கு எல்லாம் அவர் காத்துக்கொண்டிருந்ததே கிடையாது. அப்போதைய அவருடைய ஒரே இலக்கு அமெரிக்காவின் சட்டாம்பிள்ளை ப�ோக்கை எதிர்த்துக் குரல் எழுப்பவேண்டும் என்பதுதான். அதற்கான நடவடிக்கைகளில் 33
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ஒன்று இரண்டு மட்டுமே இருந்தாலும் அவர்களுடன் அவர் ப�ோய் நின்றுக�ொள்வார். கூட்டம் இருக்கும் இடத்தில் மட்டும்தான் பேசுவது என்பது ப�ோன்ற செயற்கையான கட்டுப்பாடுகள் எல்லாம் இதுப�ோன்ற சமயங்களில் அவரிடம் இருந்தது இல்லை. ஆனால் அவருடைய பேச்சுகளுக்கு மக்களைக் கவர்ந்து இழுக்கும் ஈர்ப்பு விசை இருந்தது. சமரசம் அற்ற அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற ஒற்றை இலக்கு மாத்திரமே அவருடைய செயல்பாடுகளின் பேச்சுகளின் இயங்கு விசையாக இருந்தது. இந்த ஒற்றை இலக்கிலிருந்து அவருடைய வாழ்வின் இறுதிவரை அவர் மாறிச் செல்லவ�ோ அல்லது தடுமாறிப்போகவ�ோ இல்லை என்பது அவருடைய க�ொள்கை பிடிப்பு க�ொண்ட மனதிற்கான எடுத்துக்காட்டு. முதல் கம்யூனிசச் சித்தாந்தத் தெளிவு – பல்கலைக்கழக மாணவர் பருவம் - II ஹவானா பல்கலைக்கழக மாணவராகப் பிடல் காஸ்டிர�ோ, கியூபாவிற்காக மாத்திரம் ப�ோராடுவது என்று தன்னைக் குறுக்கிக்கொள்ளவில்லை. கரீபிய கடல் பகுதி நாடுகளில் எங்கெல்லாம் அமெரிக்கா தன்னுடைய வல்லாதிக்கத்தை நிறுவ முயன்றத�ோ அந்த நாடுகளுக்கு ஆதரவாகவும் அவர் ப�ோராடுவதைத் தனக்குத்தானே வரித்துக்கொண்ட கடமையாகக் கருதினார். அமெரிக்க ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து ப�ோர்டோரிக்கோ நாட்டை விடுதலைச் செய்ய உருவாக்கப்பட்ட யுனிவர்சிட்டி கமிட்டியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ப�ோன்று ட�ொமினியன் ரிபப்லிக் நாட்டின் விடுதலைப் ப�ோராட்டத்தை முன்னிறுத்தித் த�ோற்றுவிக்கப்பட்ட கமிட்டி ஃபார் டிமாக்கிரசியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். ட�ொமினியன் ரிபப்லிக் நாட்டில் அமெரிக்காவின் விளையாட்டு ப�ொம்மையாக ஆட்சி செய்துக�ொண்டிருந்த டுரிஜில�ோஸ் அரசாங்கத்தை எதிர்த்து உருவானது கமிட்டி ஃபார் டிமாக்கிரசி. அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்ப்பதற்காகவேண்டி மத்திய அமெரிக்கா, க�ொலம்பியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளின் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் அரசியல் 34
நவீனா அலெக்சாண்டர்
குழு ஒன்றை உருவாக்குவதிலும் அப்போது அவருக்குப் பெரும் விருப்பம் இருந்தது. ஹவானா பல்கலைக்கழகத்திற்குள் இயங்கிக்கொண்டிருந்த மேலும் இரண்டு முக்கிய மாணவர் அமைப்பிலும் பிடலுக்கு இப்போது த�ொடர்பு ஏற்பட்டது. அந்த இரண்டும் ச�ோசியலிஸ்ட் ரிவல்யூஷனரி மூவ்மன்ட் (எம்.எஸ்.ஆர்) மற்றும் இன்சரக்ஷ்னல் ரிவல்யூஷனரி யூனியன் (யூ.ஐ.ஆர்). இந்தச் சமயத்தில்தான் அவர் மேல் கியூப கம்யூனிஸ்ட் கட்சியுடன் கவனம் திரும்பியது. பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறை மாணவராக இருந்த அல்பெர்டோ குவேரா கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அல்பெர்டோ குவேரா பின்னாட்களில் கியூப சினிமாவின் தந்தையாகப் ப�ோற்றப்பட்டவர். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பிடல் காஸ்டிர�ோ நடத்திக்கொண்டிருந்த அரசியல் பேச்சுக்களும் அவருடைய அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளும் அல்பெர்டோ குவேராவைக் கவர்ந்தது. பல்கலைக்கழகத்தில் பிடலிடம் ஒரு கடிதம் க�ொடுத்துத் தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டார். பிடலைப் ப�ொறுத்தவரை பல்கலைக்கழகத்தில் அவருக்கு இருந்த பல கம்யூனிஸ்ட் சித்தாந்தம் க�ொண்ட நண்பர்களைப் ப�ோல அவரும் ஒருவர் என்பதே. எவ்விதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் அதி தீவிரச் சுதந்திர மனப்பான்மையுடன் புரட்சிகரக் கருத்துக்களைப் பேசி வந்த பிடலை முதலில் நம்புவதிலும் கம்யூனிஸ்டுகளுக்குத் தயக்கம் இருந்தது. காரணம் அவருடைய நிலவுடமையாளர் குடும்பப் பின்னணி. செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் எப்படி ஏழைகளின் த�ொழிலாளர்களின் மிக முக்கியமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றி அதி தீவிரக் கருத்துகள் க�ொண்டிருக்க முடியும் என்பதே. ஆனால் பிடல் காஸ்டிர�ோ தன்னுடைய சுயசரிதையில் பல்கலைக்கழகக் காலத்திலேயே தனக்குத் தீவிரக் கம்யூனிசச் சித்தாந்தப் புத்தகங்கள் அறிமுகமானது என்று குறிப்பிடுகிறார். பல்கலைக்கழகக் காலத்திலேயே தான் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டாக மாறியதாகச் ச�ொல்கிறார். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது சமூக நீதி மற்றும் நியாயவாதம் குறித்த கலககாரனாக மட்டுமே இருந்த தான் இதற்குப் 35
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பின்பே சித்தாந்தங்களின் அடிப்படையிலான முழுமையான புரட்சியாளனாக மாற்றமடைந்ததாகச் ச�ொல்கிறார். பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்த ப�ோது அரசியல் ப�ொருளாதாரப் பேராசிரியர் ப�ோர்டில�ோ மூலமாகத் தனக்குக் கம்யூனிசச் சித்தாந்தங்கள் குறித்தும் அது முன் வைத்த ப�ொருளாதார நிலைப்பாடுகள் குறித்தும் தெளிவான அதே சமயத்தில் ஆழமான பார்வை கிடைத்தது என்கிறார். முதலாளித்துவச் சமூகத்தின் செயல்பாடுகளைத் தான் நேரில் பார்த்துக் கடந்து வந்திருந்தாலும் அதன் உள்ளார்ந்த கருத்தியல் மற்றும் நடைமுறை குறைபாடுகளை, முதலாளிகளுக்கு மாத்திரமே சாதகமாக இருக்கும் அதன் சூழ்ச்சியைப் பேராசிரியர் ப�ோர்டில�ோ மூலமே அதிகம் புரிந்துக�ொண்டதாக நினைவு கூறுகிறார். ஹவானா பல்கலைக்கழக மாணவக் கூட்டமைப்பான எஃப்.ஈ.யூவில் தலைவராக வரவேண்டும் என்பது பிடலின் இலக்காக இருந்ததை முன்பே பார்த்தோம். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே அப்போது அந்த அமைப்பின் தலைவராக இருந்த மன�ோலா காஸ்டிராவுடன் பிடலுக்கு நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. மன�ோலா எம்.எஸ்.ஆர் அமைப்பிலிருந்து எஃப்.ஈ.யூ-விற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.எஸ். ஆர் பணம் மற்றும் பலவகையான சலுகைகளைப் பெற்றுக்கொண்டு ஆளும் வர்கத்தின் கைக் கூலியாகச் செயல்படுகிறது என்கிற சந்தேகக் குற்றச்சாட்டிற்கும் ஆளாகி இருந்தது. ப�ோதா குறைக்கு மன�ோலா, முதல் முறையாக அமைந்த க்ராவுவின் அமைச்சரவையில் முக்கியப் பணியில் இருந்ததும் சந்தேகத்தை அதிகமாக்கியது. அப்படியிருந்தும் பிடல் அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரிடம் நெருக்கம் காட்டியதற்கு ஒரே காரணம் எம்.எஸ்.ஆர், ட�ொமினியன் ரிபப்லிக் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்காவின் வல்லாதிக்கத்திற்கு எதிராகக் குரல் க�ொடுத்ததுதான். இந்த நிலையில் க்ராவு கட்சியின் சார்பில் மிகுயில் டே செஸ்பிடிஸ் என்பவர் மேயர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக நின்றார். இவர் ஆளும் கட்சியான க்ராவின் கட்சியுடன் சேர்த்துப் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். ஹவானா பல்கலைக்கழக மாணவர்களைத் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதன் மூலம் தன் 36
நவீனா அலெக்சாண்டர்
மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்கிற திட்டத்துடன் அவர் மன�ோலாவை அணுகினார். பல்கலைக்கழக மாணவர்களைத் தனக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும்படி அவர் மன�ோலாவிடம் கேட்டுக்கொண்டார். இது குறித்துப் பேசுவதற்காக மன�ோலா ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்திற்குப் பிடல் காஸ்டிர�ோவையும் அழைத்திருந்தார் மன�ோலா. மன�ோலா இப்படியான ஒரு திட்டத்துடன் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை அணுகியிருப்பதைக் குறித்துப் பிடல் பல்கலைக்கழகப் பத்திரிக்கையில் எழுதியும் இருந்தார். இதன் காரணமாகப் பிடலின் ஆதரவு மிகுயிலுக்கு இருக்கும் என்று பலரும் நினைத்திருக்க அந்தச் சிறப்பு கூட்டத்தில் பேசிய பிடல் மூன்று நிபந்தனைகளுக்கு மிகுயில் ஒப்புக்கொண்டால் தன்னுடைய ஆதரவையும் தனது நண்பர்களுடைய ஆதரவையும் அவருக்குக் கண்ணை மூடிக்கொண்டு தரவதாகப் பேசினார். அந்த மூன்று நிபந்தனைகள், இதற்கு முன்பு ஆளும் க்ராவுவின் கட்சியினரால் க�ொலை செய்யப்பட்ட மாணவர் அமைப்பு தலைவர்களை உயிர்ப்பித்துக் க�ொண்டு வரவேண்டும், மக்களின் வரி பணத்தைச் சுரண்டி ஆட்சியாளர்களும் அவர்களுடைய கை கூலிகளும் க�ொள்ளையடித்த க�ோடி கணக்கிலான பணம் அனைத்தையும் அரசு கஜானாவில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் மற்றும் வரலாறு புரட்டப்பட்டு நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த கியூபாவின் நிலை க�ொண்டுவரப்படவேண்டும். பிடலின் இந்த மூன்று நிபந்தனைகள் அடங்கிய அந்தப் பேச்சு பல்கலைக்கழகம் முழுவதும் மாணவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. முதலாம் ஆண்டில் இருக்கும் ஒரு மாணவன் அதிலும் க�ொலை பாதகங்களுக்கு அஞ்சாத ஆளும் கட்சி சார்புக்கொண்ட எம்.எஸ்.ஆர் கைகாட்டிய ஒரு நபரை எதிர்த்துப் பேசுவது என்றால் அதற்கு உண்மையிலேயே பிடலுக்கு தனித்துவமான துணிச்சல் இருக்கத்தான் வேண்டும் என்று பேச்சு அடிபட்டது. அசட்டுத் துணிச்சல் என்பதை விடத் தான் என்ன செய்கிற�ோம் என்பதைத் தெரிந்து துணிந்தேதான் தன்னுடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார் பிடல். 37
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
மாணவர் கூட்டங்களைத் தாண்டி வெகு மக்களின் முன் 1946 நவம்பரில் தனது முதல் அரசியல் மேடை பேச்சை நிகழ்த்தினார் பிடல். அப்போது அவருக்கு வயது இருபது. கியூபா ஸ்பேயினின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சமயத்தில் ஆளும் சக்திகளால் க�ொலை செய்யப்பட்ட எட்டு மருத்துவ மாணவர்களின் நினைவு அஞ்சலி கடைபிடிக்கும் விதமாக ஹவானா பல்கலைக்கழகம் விடாட�ோ என்கிற பகுதியில் இருந்த கல்லறைத் த�ோட்டத்தில் ஒரு ஆண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. அந்த விழாவில் கூடிய இருந்த ப�ொது மக்களிடையே பேசியவர்களில் பிடல் காஸ்டிர�ோவும் ஒருவர். இறந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அடுத்து அவர் பேசிய பேச்சு ஆளும் க்ராவு தரப்பைப் புரட்டிப் புரட்டிப்போட்டு வறுத்தெடுத்துவிட்டது. மந்திரி சபையில் இருப்பவர்கள் தங்களுக்கு வாட்டமாகச் சட்ட நடைமுறைகளை வகுத்துக்கொண்டு ப�ொது மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் க�ொழுப்பதையும், இதைக் கண்டிக்கவேண்டிய க்ராவு அதைச் செய்யாமல் தனது ஆட்சி காலத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளும் சதியில் மூழ்கியிருப்பதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக எத்தகைய எதிர் குரலும் எழுந்துவிடாதபடி கூலிப் படைகளையும் குண்டர்களையும் வைத்துக்கொண்டு அரசாங்கம் செயல்படுவதாகவும் இதற்கெல்லாம் கியூப மக்கள் ஒரு முடிவைக் க�ொண்டுவரவேண்டும் என்றும் விளாசித் தள்ளினார். ப�ொது மக்கள் ஆளும் வர்கம் காட்டித் திரியும் பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் பயந்து அடிபணிந்துப�ோய் விடாமல், இத்தகைய சர்வாதிகாரப் ப�ோக்கிற்கு எதிராகத் தெருவில் இறங்கி எதிர் கலகம் செய்யவேண்டும் என்று பேசினார். அடுத்த நாள் காலைச் சில தினப் பத்திரிக்கைகள் பிடலின் விளாசித் தள்ளல் பேச்சை முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டன. இது பிடலை, பரவலாகக் கியூப மக்களிடம் க�ொண்டு சேர்த்தது. இது த�ொடங்கி ஆவேசமாகப் பேசிய பிடலின் முகம் அறியப்பட்ட ஒன்றானது. மேயர் தேர்தலில் எம்.எஸ்.ஆர் ஆதரித்த ஊழல் பேர்வழியைப் பிடல் கேள்விக்குள்ளாக்கி நிலை குலைய வைத்த சம்பவம் அவரை எம்.எஸ்.ஆர் அமைப்பின் எதிர் அமைப்பான யூ.ஐ.ஆர்வுடன் நெருங்கிப் ப�ோக வைத்தது. பிடல் காஸ்டிர�ோவின் சமரசம் அற்ற ப�ோராட்டக் குணம் யூ.ஐ.ஆர் அமைப்பின் தலைவரான எமிலிய�ோ 38
நவீனா அலெக்சாண்டர்
டிர�ோவை மிகவும் கவர்ந்தது. யூ.ஐ.ஆர் அமைப்பு அதிகம் கம்யூனிசச் சித்தாந்தம் க�ொண்டது. பிடல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் இருந்தப�ோது எஃப்.ஈ.யூ-வின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் க்ராவுவின் பணமும், செல்வாக்கும் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக இந்த முறையும் எம். எஸ்.ஆர் அமைப்பைச் சேர்ந்த என்ரிக் ஓவேரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செகரட்டரி ஜெனரல் பதவிக்குப் ப�ோட்டியிட்ட பிடல் தனது நண்பரான அல்பிரட�ோ குவேராவிடம் வெற்றியைப் பறிக�ொடுத்தார். இதிலும் ஆளும் கட்சியின் மறைமுகக் கைங்கரியம் வேலைச் செய்தது. இது தெரிந்தே வெளிப்படையான தேர்தல் நடைமுறை வேண்டும் என்று பிடல் இதற்கு முன்பே பலமுறை ப�ோராடிப் பார்த்தார். ஆனால் இந்தத் தேர்தல் பழைய மூடுமந்திர முறையிலேயே நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கு முன்பே எஃப்.ஈ.யூ அமைப்பிலிருந்த முக்கியத் தலைவர்களுக்கு, அரசாங்கத்தில் க�ொல்லைப்புற வாசல் வழியாகப் பணம் வரும் முக்கியப் பதவிகள் தரப்பட்டன. எஃப்.ஈ.யூ தலைவராக இருந்த மன�ோலாவிற்கு நேஷனல் ஸ்போர்ட்ஸ் டைரக்டர் பதவி தரப்பட்டது. எம்.எஸ்.ஆர் அமைப்பின் குண்டர் படை தலைவராகச் செயல்பட்ட மரிய�ோ சலபாரியாவிற்கு ப�ோலீஸ் பியுர�ோ ஆ இன்வஸ்டிகேஷன் துறையின் தலைமை ப�ொறுப்பு தரப்பட்டது. எமிலிய�ோ டிரைய�ோவிற்கு டைரக்டர் ஆ தி நேஷனல் ப�ோலீஸ் அக்கேடமி பதவி தரப்பட்டது. இப்படிப் பலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டே எஃப்.ஈ.யூ தேர்தலை நடத்தியது க்ராவு-வின் அரசாங்கம். இதற்கு இடையே பிடல் க்ராவு அரசாங்கத்தின் மற்றொரு அடக்குமுறையை அம்பலப்படுத்தியிருந்தார். ஐயில்-ஆப்-பைன்ஸ் சிறைச்சாலையில் கைதிகள் மிக ம�ோசமாக நடத்தப்பட்டதையும் அங்கே அவர்களின் வாழ்க்கை படு கேவல நிலையில் இருந்ததையும் நேரில் சென்று பார்த்து அது குறித்த கட்டுரைகளை ஹவானாவின் பல முக்கியப் பத்திரிக்கைகளில் எழுதினார். இதுவும் ஆளும் தரப்பைக் கடுப்பேற்றியது. இந்தக் கடுப்புகளை எல்லாம் சேர்த்து வைத்து எஃப்.ஈ.யூ தேர்தலில் பிடலுக்கு எதிராகக் காட்டித் 39
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
தீர்த்துக்கொண்டது. இந்தக் காலக்கட்டத்திலேயே பிடல் முதல் தடவையாக முறை சார்ந்த தேசிய அரசியல் நீர�ோட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். அவர் 1947 வசந்தக் காலத்தின்போது அவருடைய அபிமான அரசியல் தலைவராக இருந்த எடுராட�ோ சிபாசின் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அந்தக் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டார். எடுராட�ோ சிபாசும் பிடலைப் ப�ோலவே ட�ோல�ோரஸ் மற்றும் பெலன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். மச்சாட�ோ ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளையும் ஊழல் செயல்பாடுகளையும் வெளிப்படுத்திச் சிறைக்குச் சென்றவர். பிற்பாடு படிஸ்டாவின் ஆட்சி காலத்திலும் அரசாங்க ஒடுக்குமுறைக்கும் சிறைவாசத்திற்கும் பழக்கப்பட்டுப்போனவர். எடுராட�ோ சிபாஸ் அருமையான மேடை ச�ொற்பொழிவாளர். இவருடைய பேச்சாற்றலும் இவரை ந�ோக்கிப் பிடல் காஸ்டிர�ோவை இழுத்த காரணங்களில் ஒன்று. த�ொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஊழலையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துப�ோகும் க�ோழைத்தனத்தையும் விமர்சித்துப் பேசி வந்தவர். ஞாயிறு இரவு த�ோறும் 8 முதல் 8:30 வரை வான�ொலியில் இவர் செய்து வந்த அரசியல் விமர்சனங்கள் கியூப மக்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. வான�ொலி நிகழ்ச்சிகள் கியூப அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த காலக்கட்டம் அது. பார்ட்டி ஆ தி கியூபன் பீப்பில் என்கிற கட்சியை 1947 மே மாத 15-ல் த�ொடங்கினார். இந்தக் கட்சிக்கு ஆர்த்தோடாக்சோஸ் என்கிற பெயரும் உண்டு. தேசத்தின் தந்தையாக மதிக்கப்பட்ட ஜ�ோஸ் மார்ட்டியின் அரசியல் க�ொள்கைகளை அடிப்படையாகக் க�ொண்டது இந்தக் கட்சியின் க�ொள்கைகள். பல்கலைக்கழகத்திலிருந்து இந்தக் கட்சியில் சேர்ந்த ஒரே முக்கிய மாணவ அமைப்பு தலைவர் பிடல் மாத்திரமே. கட்சியின் இளைஞர் பிரிவாகப் பிடல், சிபாசின் அனுமதியுடன் ரேடிக்கள் ஆர்தோடக்ஸ் ஆக்சன் என்கிற அமைப்பை உண்டாக்கினார். இந்தக் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் இளைஞர்களும் தினக் கூலிகளும்தான். சிபாசின் சமரசமற்ற ஊழல் எதிர்ப்பு, 40
நவீனா அலெக்சாண்டர்
அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு ப�ோன்றவைகளே சமூகத்தின் சாமானிய மனிதர்களை அவரை ந�ோக்கி இழுத்த முக்கிய விசயங்கள். கியூபாவில் இருந்த அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் அவர் தன்னுடைய பேச்சுகளில் த�ொடர்ந்து கண்டித்து வந்தார். கியூபாவின் மண் மற்றும் மக்கள் வளத்தைப் பெரும் அளவில் பயன்படுத்திக் க�ொள்ளை இலாபம் குவித்த அவர்கள் ச�ொற்பக் கூலிகளையே கியூப த�ொழிலாளர்களுக்குக் க�ொடுத்து வந்தார்கள். வேலை நேரமும் அதிகம். சில அமெரிக்க நிறுவனங்கள் கியூபாவின் வளங்களை மூலப் ப�ொருட்களாக எடுத்துக்கொண்டு கியூப மக்களை வைத்து மின்சாரம் தயாரித்துக் க�ொள்ளை விலைக்கு அதை மீண்டும் கியூப மக்களுக்கே க�ொடுத்தன. இடையில் அவர்கள் அடித்த க�ொள்ளை இலாபம் மாத்திரம் அவர்களின் அமெரிக்கத் தலைமை அலுவலகங்களுக்குப் ப�ோய்க் க�ொண்டிருந்தது. ப�ோக்குவரத்து த�ொழிலிலும் இதுதான் கதை. அமெரிக்காவின் கை கூலி அரசாங்கங்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த கியூப அரசுகள் இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கண்டுக�ொண்டதில்லை. இவைகளையும் வன்மையாகக் கண்டித்தார் சிபாஸ். பிடல் தீவிரக் கம்யூனிஸ்டாக மாறுவதற்கு முன்பு அவரை ஈர்த்த முதலும் கடைசியுமான அரசியல் கட்சி என்றால் அது சிபாசின் கட்சிதான். ஜ�ோஸ் மார்டிக்கு அடுத்துப் பிடலை ஈர்த்த கியூப அரசியல் தலைவர் ஒருவர் இருப்பார் என்றால் அதுவும் சிபாஸ்தான். சிபாசின் கருத்துகள் கியூபாவின் புதிய அரசியல் மாற்றத்திற்கானவைகள் என்றாலும் அதைச் சாதிக்க அவர் புரட்சிகர வழிமுறைகளை ஆதரித்தது கிடையாது. தேர்தல் வழிமுறைகளையே அவர் நம்பினார். இந்த ஒரு விசயத்தில் மாத்திரமே பிடலுக்கும் அவருக்கும் வித்தியாசம் இருந்தது. கியூபாவில் அடி முதல் முடி வரை முற்றிலும் புதிய அரசியல் மாற்றம் க�ொண்ட வரப் புரட்சிகர நடவடிக்கைகள் மூலமே முடியும் என்பதைத் தீவிரமாக நம்பியவர் பிடல். தேர்தல் முறையில் இருக்கும் ஓட்டைகள், ஊழல்கள், ஓடுக்கு முறைகள், திருட்டுத்தனங்கள் ப�ோன்றவற்றை மீறி அரசியலில் அடிப்படை மாற்றம் சாத்தியமே இல்லை என்பது பிடலின் அரசியல் கருத்து. ந�ோக்கத்தை அடையக் கூடிய வழியில் இருவருக்கும் வித்தியாசம் இருந்தாலும் ந�ோக்கம் ஒன்றுதான் என்பதால் சிபாஸ் 41
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இயல்பாகவே பிடலின் அபிமான அரசியல் தலைவராகிவிட்டார்.
42
முதல் இரகசியக் க�ொரில்லா தாக்குதல் பயிற்ச்சி – பல்கலைக்கழக மாணவர் பருவம் - III
ஹ
வானா பல்கலைக்கழகத்தில் 1947 ஜூலை 16 சிறப்பு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பிடல் காஸ்டிர�ோவும் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார். தான் பேசிய ப�ோது மாணவ அமைப்பு தேர்தலில் உள்ளடி வேலைப் பார்த்த க்ராவுவின் அரசாங்கத்தைக் கிழித்துத் த�ொங்கவிட்டுவிட்டார் பிடல். இது மாணவ அமைப்பின் தலைமை பதவிகளில் இருந்தவர்களையும் ஏற்கனவே தலைவர் பதவிகளில் இருந்துவிட்டு அரசாங்கப் பணிகளுக்குச் சென்றுவிட்டவர்களையும் நிறையவே அசைத்துப் பார்த்துவிட்டது. பிடலின் இந்த நேரடி தாக்குதலுக்கு உடனடியாக எதிர் வினையாற்றினார்கள்.
பிடல் அந்த ஆண்டு இறுதி தேர்வுகளுக்குத் தன்னைப் பதிவு செய்துக�ொள்ளாததைக் காரணம் காட்டி அவர் இனிப் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே இனி வரக் கூடாது என்று தடைப�ோட்டார்கள். இந்தத் தடையை அமல் படுத்த காரணமாக இருந்தவர் மரிய�ோ சலபாரியா. இந்தத் தடையை மீறிப் பிடல் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவாரேயானால் அவர் உயிர் உடலில் தங்காது என்றும் எச்சரிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்திற்குள் தன்னை நுழையவிடாமல் தடுத்த உத்தரவைக் கண்டு க�ொந்தளித்துவிட்டார் பிடல். இது குறித்து 1961-ல் அவர் குறிப்பிட்டதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம். ‘தேசிய அரசியல் என்கிற வியாதியால் பல்கலைக்கழகச் சூழல் சீரழிந்துப�ோயிருந்தது. அப்போது எனக்கிருந்த மனத் திடமும், தடைகளைத் தகர்தெறிந்து முன்னேறிப் ப�ோய்க்கொண்டே 43
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இருக்கவேண்டும் என்கிற உத்வேகமும் இதற்கு எதிராகப் ப�ோராடிப் பார்த்துவிட வேண்டும் என்று தூண்டியது. எந்த நிலையிலும் சமரசம் செய்துக�ொள்ளாத எனது நேர்மை குணம், ஊழல் பணத்தாலும் குண்டர்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் நேருக்கு நேராக ம�ோதும்படியானது. ஊழல் அரசியல் வாதிகளால் தூண்டப்பட்ட குண்டர் படை பல்கலைக்கழகத்திற்குள் என்னை நுழையவிடாதபடி தடுத்தன. பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியாத அந்தச் சூழ்நிலை எனது வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நேரங்களில் ஒன்றாகிப்போனது. கடற்கரையில் தனிமையில் கடலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனாக இதைக் குறித்து ய�ோசித்தேன். தடையை மீறிப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. உயிர் ப�ோயேவிடும்தான். ஆனால் உயிருக்குப் பயந்துக�ொண்டு பல்கலைக்கழகத்திற்குப் ப�ோகாமல் இருப்பது க�ொலை மிரட்டலுக்குப் பயந்தது ப�ோலாகிவிடும். இது எனது இலட்சியங்களையும் நான் க�ொண்ட க�ொள்கைகளையும் விட்டுவிட்டுக் க�ோழைப�ோலத் திரும்பி ஓடுவதற்கு நிகரானது என்று முடிவு செய்து பல்கலைக்கழகத்திற்குள் செல்வது என்று முடிவு செய்தேன். அப்படியே செய்யவும் செய்தேன்…….கையில் ஒரு துப்பாக்கியுடன்…..’ பிடல் காஸ்டிர�ோ தனது பாதுகாப்பிற்கு என்று முதல் முறையாகத் துப்பாக்கியைக் கையில் எடுத்தது இந்தச் சமயத்தில்தான். அவர் அடுத்த நாள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தப�ோது பதினைந்துபேர் க�ொண்ட ஆயுதம் தாங்கிய கூலிப்படை ஒன்று அவருடைய கதையை முடிக்கத் தயாராக இருந்தது. அவருக்கு எதிரான க�ொலை முயற்சிகளின் த�ொடக்கமும் இதுவே. இதைச் சமாளிக்கப் பிடலை பின்பற்றும் சில நண்பர்கள் அவருடன் இருந்தார்கள். அவர்களின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தது. பிடல் எதற்கும் துணிந்து முன்னேற்பாடுகளுடன் வந்திருப்பதை உணர்ந்துக�ொண்ட அந்தக் கூலிப்படை அப்போதைக்கு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டது. இதைத் த�ொடர்ந்து சில நாட்களுக்குப் பல்கலைக்கழகத்திலிருந்த அவருடைய ஆதரவாளர்கள் எப்போதும் அவருடைய பாதுகாப்பிற்கு என்று அவருடனேயே இருந்தார்கள். இந்தச் 44
நவீனா அலெக்சாண்டர்
சம்பவத்திற்குப் பிறகு பிடல் காஸ்டிர�ோவிற்கு பன்னாட்டு அரசியலில் முக்கியப் பங்கு செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இந்த வாய்ப்பு பிற்காலத்தில் படிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக அவர் நிகழ்த்திய க�ொரில்லா தாக்குதலுக்கான முன் மாதரி பயிற்சி ப�ோலவும் அமைந்துப�ோனது. த�ொண்ணூறு சதவிகிதம் பிடல் கஸ்டிர�ோ தன்னை மிகப் பெரிய புரட்சி நடவடிக்கை ஒன்றிற்குத் தயார் படுத்திக்கொண்டிருந்தார் என்றால் அதற்குத் தேவையான பத்துச் சதவிகித முன் அனுபவப் பயிற்சிகளை வாய்ப்புகள் அவருக்கு உண்டாக்கியபடி இருந்தன. ட�ொமினியன் ரிபப்லிக் நாட்டின் அமெரிக்கக் கைப்பாவை அதிபரான ட்ரோஜில�ோ குறித்து முன்பே பார்த்திருக்கிற�ோம். அவருடைய ஆட்சியை இரகசியக் க�ொரில்லா தாக்குதலின் மூலம் முடிவிற்குக் க�ொண்டுவந்து அந்த நாட்டை மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியப் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது ஹவானா பல்கலைக்கழக மாணவ அமைப்புகளின் முக்கிய அஜன்டாக்களில் ஒன்று என்பதையும் முன்பே பார்த்தோம். மாணவர்களிடையே தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த அஜன்டாவை பார்த்தது க்ராவுவின் அரசாங்கம். இந்த வாய்ப்பைக் க்ராவுவிற்கு எடுத்துக் கூறி இதைச் செயல்படுத்துவதற்கான அனுமதியை வாங்கியது கல்வித் துறை மந்திரியாக இருந்த ஜூலியான் அலிமான். இவரும் ஊழல் பேர்வழிதான். இவர் எம்.எஸ்.ஆர் அமைப்பிற்கு நெருக்கமானவர் என்பதால் ட்ரோஜில�ோ அரசின் மீதான இரகசியத் தாக்குதல் திட்டம் எம்.எஸ்.ஆர் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் இரகசிய இடங்களில் பதுக்கி வைக்க ஏற்பாடு செய்தார் அலிமான். இரகசியக் க�ொரில்லா குழுவிற்குத் தலைமையாக ஜுவான் ர�ொட்ரிகேஸ் நியமிக்கப்பட்டார். இவர் ட�ொமினியன் நாட்டிலிருந்து தப்பிவந்த அகதி. இரகசியத் தாக்குதல் குழுவிற்கு என்று 1,200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கியூபா, ட�ொமினிகன் ரிபப்லிக், வெனிசுவேலா, கவுத்தமாலா, க�ோஸ்டோ ரிகா மற்றும் ஹ�ோன்டுராஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் 45
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இருந்தார்கள். ஓரியன்ட் மாகாணத்தின் ஓலுஜின் பகுதியில் இருந்து காய�ோ கான்பைட்ஸ் என்கிற ஆளில்லாத் தீவிற்குச் சென்று தாக்குதலுக்குக் காத்திருக்க வேண்டும் என்பது இரகசியத் தாக்குதலுக்கான திட்டமாக வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்துத் தனது யூ.ஐ.ஆர் நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட பிடல் இதில் இணைந்துக�ொள்ளப் பெரிதும் விரும்பினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்திலும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற இலட்சியம் க�ொண்ட பிடல் இந்த வாய்ப்பைத் தவர விடவில்லை. எம்.எஸ்.ஆர் அமைப்பின் தலைமை அவர் மீது க�ொலை வெறி க�ோபத்தில் இருந்தாலும் இந்தத் திட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டிச் சில நண்பர்களின் மூலம் (ஜூவான் ப�ோஸ்க் - ட�ொமினிகன் அறிஞர், என்ரிக் - எஃப்.ஈ.யூ தலைவர்) எம்.எஸ்.ஆர் அமைப்பை அணுகினார் பிடல். அந்தத் திட்டத்தில் பிடலை அவர்கள் சேர்த்துக்கொண்டது மாத்திரமல்லாமல் திட்டம் நிறைவேறி முடியும் காலம்வரை அவர்களால் பிடலுக்கு எத்தகைய ஆபத்தும் வராது என்றும் உறுதிக்கொடுத்தார்கள். ஓலுஜின் பகுதியில் 1947 ஜூலை மாதத்தின் இறுதியில் திட்டமிட்டபடி இரகசியக் க�ொரில்லா குழு கூடியது. அவர்கள் பல படைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டார்கள். பிடல் ஒரு படை பிரிவின் தலைமை பிடலிடம் க�ொடுக்கப்பட்டது. ஜூலை 29 அன்று இரவு மூன்று படகுகளில் இந்தக் குழு காய�ோ கான்பைட்சுக்கு ப�ோய்ச் சேர்ந்தது. அடுத்து இரண்டு மாதங்களுக்கு அங்கே அவர்கள் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டார்கள். கியூப ஆட்சியாளர்களைப் ப�ொறுத்தவரையில் இது இரகசியத் திட்டமாக இருந்தாலும் அமெரிக்காவிற்கும், ட்ரோஜில�ோவிற்கும் இது குறித்து ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் தெரிந்தே இருந்தது. கியூபாவிற்குள் அமெரிக்காவும் ட்ரோஜில�ோவும் விதைத்து வைத்திருந்த உளவாளிகளின் கைவண்ணம் மூலமாக. கியூபாவின் இராணுவத் தலைவர் வாஷிங்டன் அழைக்கப்பட்டு நன்றாக உபசரிக்கப்பட்டுக் கூடவே இந்தச் சதி திட்டம் குறித்துக் கடுமையாக எச்சரிக்கையும் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் கியூபாவிற்குத் திரும்பவந்து 46
நவீனா அலெக்சாண்டர்
அமெரிக்காவின் க�ோபத்தைக் க்ராவுவிடம் ச�ொல்லச் செப்டம்பர் 20 அன்று இரகசியத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டுத் தாக்குதல் குழுவை நாடு திரும்ப உத்தரவிட்டார் க்ராவு. இராணுவத் தலைவர் இரகசியக் குழுவைக் கைது செய்ய ஒரு ப�ோர் கப்பலை அனுப்பினார். கல் ஆ நை என்கிற இடத்தில் தாக்குதல் குழு இடைமறிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களை ஹவானாவிற்கு க�ொண்டுவந்தார்கள். இந்தக் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிய பிடல் ஓரியண்டிலிருந்த தனது நண்பருடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவர் மீண்டும் வழக்கம்போல ஹவானா பல்கலைக்கழகத்திற்கு வரத் த�ொடங்கினார். பல்கலைக்கழகத்தில் பிடலை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. காரணம் கைது நடவடிக்கையின் ப�ோது மற்ற தலைவர்கள�ோடு சேர்த்துப் பிடலும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்கிற தகவலே பல்கலைக்கழகத்தில் ச�ொல்லப்பட்டிருந்தது. ட�ொமினியன் தாக்குதல் த�ோல்வி அடைந்ததற்குக் காரணமாக இருந்த ஆளும் கட்சியைத் தனது விமர்சனங்களின் மூலம் குற்றம்சாட்டினார் பிடல். அதே ஆண்டு நவம்பர் மாதம் க்ராவுவின் ஆட்சியை முடிவிற்குக் க�ொண்டுவருவதற்கான ஒரு வாய்ப்பும் பிடலுக்கு கிடைத்தது. இந்தத் திடீர்த் தாக்குதல் குறித்துப் பின்னாளில் தனது மை லைப் சுயவரலாற்று புத்தகத்தில் பேசும்போது பிடல் இப்படிக் குறிப்பிடுகிறார், ‘கியூப விடுதலைப் ப�ோராட்ட வரலாற்றில் இருந்து நான் கற்றுக்கொண்ட விசயங்களில் ஒன்று வழமையான அரசாங்கப் படைகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்குக் க�ொரில்லா ப�ோர் முறையே பயனுள்ளதாக இருக்கும் என்பது. இந்தப் ப�ோராட்டத்தைப் ப�ொறுத்தவரை எனது திட்டம் ட�ொமினிக்கன் ரிபப்லிக் நாட்டு மலைகளுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து க�ொரில்லா ப�ோர் முறையைக் கட்டமைப்பதே. காய�ோ கான்பைடைசில் குழப்பம் ஏற்பட்டதும் எனது தலைமையில் இருந்த குழை அழைத்துக்கொண்டு மலைகளுக்குச் சென்று க�ொரில்லா தாக்குதலைத் த�ொடங்குவது என்று திட்டம்போட்டேன். ஆனால் அதை மேற்கொள்வதற்கு முன்பே விசயங்கள் வேறு விதமாகப் ப�ோய்விட்டன’. 47
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
தனது அரசாங்கத்தின் மீதான மக்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளக் கண்ணில் பட்டக் கவர்ச்சிகரமான திட்டங்களை எல்லாம் கண்டமேனிக்குச் செய்துக�ொண்டிருந்த க்ராவு தான் ஏற்பாடு செய்த ஒரு பேரணியில் முதல் விடுதலைப் ப�ோரைத் த�ொடங்கிவைத்த பெருமைக்கு உரிய மணியை ஊர்வலமாக எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தார். அந்த வரலாற்று சிறப்பு மிக்க மணி ஓரியண்ட் மாகாணத்தின் மான்சானில�ோ நகரில் இருந்தது. மான்சானில�ோ கம்யூனிசச் செல்வாக்கு மிக்க நகரம். அந்த நகர நிர்வாகம் ஊழல் பெருச்சாளியான க்ராவுவின் கவர்ச்சி திட்டத்திற்கு எல்லாம் வரலாற்று சிறப்பு மிக்க மணியைத் தர முடியாது என்று மறுத்துவிட்டது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த மணியை நாம் ஊர் வலமாக எடுத்துவந்து ஜனாதிபதியின் அரண்மனைக்கு முன்பாக வைத்துக் க்ராவு இராஜினாமா செய்துவிட்டு ஓடும் வரை அதை ஒலிக்கச் செய்யவேண்டும் என்கிற திட்டத்தை முன்வைத்தார் பிடல். இது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த மணியை ஹவானா க�ொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கினார் பிடல். ஆர்த்தோடாக்சி கட்சியின் சில முக்கியஸ்தர்கள் இதற்கு ஆகும் செலவை ஏற்றுக்கொண்டார்கள். பிடலின் நண்பரான அல்பெர்டோ குவேரா இந்த விசயத்தில் எஃப்.ஈ.யூ-வின் ஆதரவை அவருக்குப் பெற்றுக் க�ொடுத்தார். பிடலின் திட்டப்படி அவரும் மற்றொரு கம்யூனிஸ்ட்டான லிய�ோனல் ச�ோட்டுவும் அந்த மணியை ஹவானா பல்கலைக்கழகத்திற்கு எடுத்து வந்தார்கள். முதல் கம்யூனிசச் சார்பு அரசியல் ச�ொற்பொழிவு – பல்கலைக்கழக மாணவர் பருவம் IV ப�ோராட்டத்திற்காக வேண்டிப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த மணி அடுத்த நாள் திருட்டுப் ப�ோயிருந்தது. இந்தத் திருட்டு யாருடைய வேலையாக இருக்கும் என்பது கியூபாவில் இருந்த அனைவரும் அறிந்த இரகசியம் என்பது தெளிவு. பிடல் உடனடியாக உள்ளூர் வான�ொலி நிலையம் ஒன்றிற்குச் சென்று க்ராவுவின் அரசாங்கம் மணியைத் திருடிவிட்டதாக அறிவித்தார். அன்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த அரசாங்கத்தின் கை கூலி காவல் துறை 48
நவீனா அலெக்சாண்டர்
அதிகாரிகளின் பெயர்களையும் அவர் அறிவித்தார். அன்று மாலைப் பல்கலைக்கழகத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிய பிடல் அரசாங்கத்தைத் தன்னுடைய பேச்சால் நையப்புடைத்தார். முதல் முறையாக இந்தப் பேச்சிலேயே கம்யூனிசச் சித்தாந்தங்கள் க�ொண்ட ப�ொருளாதாரச் சீர்திருத்தங்களைக் குறித்தும் பேசினார் பிடல் காஸ்டிர�ோ. க்ராவுவின் ஆட்சியில் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதையும் அவர்களின் நிலை மேலும் சீரழிந்து பரம ஏழைகளாக மாறிவரும் நிலையையும், அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் க�ொள்ளை இலாபம் ஈட்டக் கியூபாவின் மக்கள் வளமும் மண் வளமும் சுரண்டப்படுவதையும், மருத்துவம் மற்றும் கல்விப�ோன்ற அடிப்படைத் தேவைகளுக்கு நாட்டின் வரிப்பணம் செலவிடப்படாமல் இராணுவத்திற்கான ஆடம்பரச் செலவுகளுக்குச் செலவிடப்படுவதையும் கடுமையாகக் கண்டனம் செய்தார். மணி விசயத்தில் முற்றிலும் அசிங்கப்பட்டுப்போன ஆளும் கட்சி அதற்குப் பழி தீர்க்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. இந்த முறை கம்யூனிஸ்டுகள் மீதும் அதன் பழி தீர்க்கும் க�ோபம் திரும்பியது. மான்சானில�ோ நகரக் கம்யூனிஸ்ட் கரும்பு த�ொழிலாளர் கட்சியின் தலைவரான ஜீசஸ் மெனென்டேசை 1948 ஜனவரி 22-ல் கைது செய்தது அரசாங்கம். மணி விசயத்தை மனதில் வைத்து அரசாங்கம் அவரைக் கைது செய்ய அவர் மீதான குற்றம் ஏதுமில்லாத காரணத்தால் அவரைக் கைது செய்த அடுத்த ந�ொடியே விடுதலைச் செய்யும்படியும் ஆனது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மெனென்டேஸ் வீடு திரும்பும் வழியில் சுட்டு க�ொல்லப்பட்டார். இது ஹவானா பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் க�ொந்தளிப்பை உண்டாக்கியது. அதற்கு அடுத்த மாதத்தில் ப�ோலிசாரின் வன்முறைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய பேரணியின்போது சில மாணவர்கள் ப�ோலிசாரின் கார்களைக் கல் வீசி அடித்து ந�ொறுக்கினார்கள். இதனால் ப�ோலீசார் தரப்பில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்தத் தடியடியில் பிடலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அந்த மாதத்தின் இறுதியில் பிடலின் முன்னால் நண்பரும் முன்னால் எஃப்.ஈ.யூ தலைவரும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் 49
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
டைரக்டருமாக இருந்த மன�ோலா காஸ்டிர�ோ அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். எம்.எஸ்.ஆர் அமைப்பு பிடல் காஸ்டிர�ோவே இந்தக் க�ொலைக்குக் காரணம் என்று செய்தி தாள்களில் கதைகட்டிவிட்டது. இதை அறிந்த பிடல் தனது நண்பர்களுடன் நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கும் அந்தச் சம்பவத்திற்கும் எத்தகைய த�ொடர்பும் இல்லை என்கிற விளக்கத்தையும் அதற்கான ஆதாரத்தையும் காட்டினார். அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட காவல் துறை அவரை அப்போதைக்குக் கைது செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டாலும் இரண்டு நாட்கள் கழித்து அவரைக் கைது செய்தது. அவருக்கு எதிராக எத்தகைய ஆதாரத்தையும் காவல் துறையால் காட்ட முடியாமல் ப�ோனதால் நீதிபதி பிடல் காஸ்டிர�ோவை விடுதலைச் செய்து உத்தரவிட்டார். இருந்தாலும் அப்போதைக்கு அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனை ஜாமின் பேரிலேயே இது நடந்தது. ப�ொய் க�ொலை குற்றச்சாட்டைச் சுமத்திப் பிடலை சிறைக்கு அனுப்பி அவரை அரசியலில் இருந்து ஒழித்துவிட நினைத்த எம்.எஸ்.ஆர் அமைப்பு இந்த முயற்சியிலும் த�ோல்வியைத் தழுவியதும் மீண்டும் ஒரு முறை பிடல் மீது க�ொலை வெறி தாக்குதல் நடத்தத் தயாரானது. இதை அறிந்திருந்த பிடல் சில நாட்களுக்கு அவர்களுக்குப் ப�ோக்கு காட்டத் த�ொடர்ச்சியாகத் தான் தங்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். இந்தக் க�ொந்தளிப்பான சம்பவங்களுக்குப் பிறகு பன்னாட்டு அரசியலில் ஈடுபடும் மற்றொரு வாய்ப்பு பிடலை தேடி வந்தது. அதை அவர் தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டார். அர்ஜென்டின ஜனாதிபதி பெர�ோன் அனுப்பிய பாரின் ரிலேஷன்ஸ் கமிட்டி மார்ச் மாதம் 1948ல் கியூபாவிற்கு வந்தது. இந்தக் கமிட்டியின் ந�ோக்கம் தென்னமெரிக்க நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை ஒரு கூட்டமைப்பின் கீழ் இணைத்து அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் ப�ோக்கை எதிர்ப்பது. மேலும் பால்க்லேண்ட் தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து மீட்பதும் இதன் ந�ோக்கம். ந�ோக்கம் சிறப்பானதாக இருந்தாலும் பெர�ோன் மீது சர்வாதிகாரி என்கிற முத்திரை குற்றச்சாட்டும் 50
நவீனா அலெக்சாண்டர்
இருந்தது. இதன் காரணமாக அந்தக் கமிட்டியில் சேர ஹவானா பல்கலைக்கழக மாணவர்கள் தயங்கினார்கள். சர்வாதிகாரப் ப�ோக்கைப் பிடல் எதிர்த்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (அது மாணவர்களின் கூட்டமைப்பாக இருந்தாலும் சரியே) என்பது மிக அவசியம் என்பதைத் தீவிரமாக நம்பியதால் (காரணம் அதைத்தான் ஜ�ோஸ் மார்ட்யும் முன்வைக்கிறார்) தன்னையும் இந்தக் கமிட்டியில் இணைத்துக்கொண்டார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது நிற வேற்றுமையை, வர்க வேற்றுமையை, க�ொள்கை வேற்றுமைகளைக் கடந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் தனது சக மாணவர்களுக்கு எடுத்துச் ச�ொல்லிப் புரியவைத்தார். ஒற்றுமையே பலம் என்பது அவரது புரட்சிகரக் க�ொள்கைகளில் ஒன்று. அர்ஜென்டின கமிட்டியின் க�ொள்கைகள�ோடு சேர்த்து மேலும் நான்கு க�ொள்கைகளைச் சேர்த்தார் பிடல். அவைகள் மால்வினாசில் இங்கிலாந்தின் காலனி ஆட்சியை ஒழிப்பது, பனாமா கால்வாயைப் பனாமா நாட்டிடம் ஒப்படைப்பது, ட�ொமினியன் ரிபப்லிக் நாட்டிற்கும் ப�ோர்டோ ரீக்கோ நாட்டிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை வாங்கித் தருவது. இவைகளுக்கு அர்ஜென்டின கமிட்டியும் சம்மதம் தெரிவித்தது. இதன்படி அந்தக் கமிட்டியுடன் வெனிசுவேலா, பனாமா மற்றும் க�ொலம்பியா நாடுகளுக்குத் தனது யூ.ஐ.ஆர் அமைப்பு நண்பரான ரபேல் டெல் பின�ோவுடன் சென்றார் பிடல். இது நடந்தது 1948 மார்ச் 19. நாட்டை விட்டு வெளியே ப�ோகக் கூடாது என்று பிடலுக்கு நிபந்தனை ஜாமின் இருந்த காரணத்தால் அவர் ஹவானா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முன்பு தன் மீது ப�ொய்யாகப் புனையப்பட்ட மன�ோலா க�ொலை வழக்குபற்றி எடுத்துக் கூறித் தன் தரப்பு நியாயத்தை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காத விதத்தில் வாதாடினார். பிடலின் தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாட்டைவிட்டு அவர் வெளியில் செல்லக் கூடாது என்று விதித்திருந்த நிபந்தனை திரும்பப் பெற்றுக்கொண்டு அவரை விடுதலைச் செய்தார். அதன் பிறகு பிடலும் அவருடைய நண்பரும் தங்களின் பயணத்தைத் த�ொடர்ந்தார்கள். 51
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
அவர்கள் க�ொலம்பியா நாட்டில் இருந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த எஃப்.ஈ.யூ அமைப்பு தலைவர்கள், அர்ஜென்டின தலைநகரான பியூனஸ் அயர்சில் கூட்டப்பட இருந்த கமிட்டியில் தாங்களே கியூப பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகளாகக் கலந்துக�ொள்ள முடியும் என்று பேசத் த�ொடங்கினார்கள். கியூப மாணவர்கள் இப்படியான ஒரு வாய்ப்பை வீணடித்துவிடக் கூடாது என்று த�ொடக்கத்திலிருந்தே பிடல் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்க, த�ொடக்கத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எஃப்.ஈ.யூ இந்தக் கமிட்டிக்கான செல்வாக்கு கூடுவதைக் கண்டுக�ொண்டு இப்போது வந்து நின்று உரிமைக�ொண்டாடுவதைப் பிடல் வன்மையாகக் கண்டித்தார். பிடலின் தரப்பு நியாயத்தை அவர்களால் அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பிடலின் வாதங்களை அப்படி அசட்டை பண்ணிவிடவும் முடியாது. காரணம் அவருடைய வாதங்கள் வெறும் முரட்டுத்தன விதண்டாவாதங்கள் அல்ல. அவைகள் தன் தரப்பு நியாயங்களை மறுக்க முடியாத வார்த்தைகளில் வலிமையுடன் எடுத்து வைக்கும் சமரசமற்ற வாதங்கள். இறுதியில் கியூப மாணவர்கள் சார்பில் பிடலும் அவருடைய நண்பருமே அந்தக் கமிட்டியில் பங்கெடுக்கலாம் என்று எஃப்.ஈ.யூ ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் க�ொலம்பியா நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்த கைட்டான் என்கிற தலைவர் படுக�ொலை செய்யப்பட்டார். அவர் படுக�ொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள்தான் பிடலும் அவருடைய நண்பரும் அவரைச் சந்தித்து அர்ஜென்டின கமிட்டி நடத்த இருக்கும் கூட்டத்தின் இறுதி நாள் ஊர்வலத்தில் கலந்துக�ொண்டு பேசும்படி அவரை அழைக்கச் சென்றிருந்தார்கள். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார். அவரின் படுக�ொலையை அடுத்துத் தலைநகரான ப�ோக�ோட்டாவில் கலவரம் வெடித்தது. அப்போதைய வெனிசுவேலா அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ப�ொம்மை அரசு என்பதால் உள்நாட்டில் அரசுக்கு எதிரான மனநிலையே இருந்தது. இந்தக் கலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் அரசுக்கு எதிரான தங்களின் க�ோபத்தை வெளிப்படுத்தினார்கள். காவல்துறையும் கூட மக்களின் இந்தக் கலவரத்தில் சேர்ந்துக�ொண்டு 52
நவீனா அலெக்சாண்டர்
அரசுக்கு எதிரான தங்களின் நிலையை வெளிப்படுத்தினார்கள். ஆனால் எத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையும் திட்டமும் இல்லாமல் உருவான இந்தக் கலவரம் எத்தகைய பயனையும் விளைவிக்காமல் வந்த வேகத்திலேயே அடங்கியும் ப�ோனது. இந்தக் கலவரச் சூழலை நேரில் பார்த்த பிடல் இதிலிருந்து தனது புரட்சிகரப் ப�ோராட்டத்துக்கான பல பாடங்களையும் பெற்றுக்கொண்டார். கலவரத்தின் ந�ோக்கம் நியாயமானதாகவே இருந்தாலும் கலவரச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் செய்யும் வெறுப்பு வன்முறைகளும், ஒருங்கிணைந்த தலைமையும், திட்டமிடலும், வழிகாட்டலும் இல்லாத கலவரங்கள் மாற்றத்திற்கான எத்தகைய விளைவுகளையும், வெற்றிகளையும் உண்டாக்காது என்பதை அவர் கண்கூடாகப் பார்த்து அறிந்துக�ொண்டார். ப�ோக�ோட்டா கலவரத்திற்குப் பிறகு பிடலும் அவருடைய நண்பரும் பனாமா நாட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் அந்த நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பிற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கக் கூலிப்படை பனாமா நகர வீதிகளில் மாணவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு நடத்தி முடித்திருந்தது. அந்தக் கலவர இடங்களைப் பிடல் நேரில் சென்று பார்த்தார். அந்தக் கலவரத்தில் காயம்பட்டவர்களை அவர் சந்தித்து ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் உணர்வுகளையும் தெரிந்துக�ொண்டார். பிற்காலத்தில், படிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக அவர் கட்டமைக்க இருந்த புரட்சிகர நடவடிக்கைகளுக்கான திட்டங்களை வடிவமைப்பதில் இந்தச் சம்பவங்கள் பெறும் அனுபவத் தாக்கங்களைச் செலுத்தின.
53
திருமணமும் அரசியல் செயல்பாடுகளும் – பல்கலைக்கழக மாணவர் பருவம் V
இ
ந்தச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 1948 ஏப்ரல் வாக்கில் பிடல் கியூபா திரும்பினார். அடுத்த இரண்டு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்குப் பிடலின் ஆஸ்தான அரசியல் தலைவர் சிபாஸ் ப�ோட்டியிட்டார். எதிர் தரப்பில் த�ொழிலாளர் துறை மந்திரியாக இருந்த கார்லோஸ் பிரைய�ோ நிறுத்தப்பட்டார். இவருக்குப் பின்னால் க்ராவுவின் செயல்பாடுகள் இருந்தது. சிபாசுக்காக பிடல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழக்கம்போல அவருடைய சமரசமற்ற பேச்சுகள் மக்களிடையே பட்டையைக் கிளப்பின. பிடலின் ச�ொந்த மாகாணமான ஓரியண்டிற்கு சிபாசுடன் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றார் அவர். சில சமயங்களில் சிபாசின் தேர்தல் உறை த�ொடங்குவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்பு பிடலின் உரை மக்கள் கூட்டத்தை மேடையை ந�ோக்கி இழுத்தது. இருந்தும் தேர்தலில் சிபாஸ் த�ோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது.
பிடலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை அடுத்து இந்த முறை அதிகம் தாக்குதலுக்கு உள்ளானது க்ராவுவின் கட்டளைக்குச் செயல்பட்டுவந்த காவல் துறையே. பிடல் சில காவல்துறை அதிகாரிகளின் பெயரைச் ச�ொல்லி நேரடியாகவே அவர்களைத் தாக்கிப் பேசினார். இப்படிப் பேசுவது அவரை ஆபத்தில் நிறுத்தும் என்பதை நன்கு உணர்ந்தே அவர் அப்படிச் செய்தார். பிடல் காஸ்டிர�ோவின் அரசியல் செயல்பாடுகளில் எதுவும் முன் ய�ோசனை இல்லாமல் அந்த நிமிடத்தைய உணர்ச்சிப் பெருக்கில் நிகழ்தப்பட்டவைகள் கிடையாது. ஆபத்துகள் தெரிந்தும் அவர் தன்னுடைய தேர்தல் பேச்சுகளில் சில காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதற்குக் காரணம் அப்பாவிகள் மீதும், 54
நவீனா அலெக்சாண்டர்
மாணவர் மீதும், கம்யூனிசத் த�ொழிலாளர் தலைவர்கள் மீதும் நடத்தப்பட்ட க�ொலைவெறி தாக்குதல்கள். எதிர் தரப்பு இந்தத் தாக்குதல்களைப் பார்த்துக்கொண்டு சும்மாய் இருந்துவிடவில்லை. ஜனாதிபதி தேர்தல் முடிந்த அடுத்த ஒரு வாரத்திலேயே பிடலை சிக்கவைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. ஹவானாவில் ஒரு ப�ோலிஸ் சார்ஜன்ட் சுட்டு க�ொலை செய்யப்பட்டார். அந்தச் சார்ஜன்ட் இறக்கும் தறுவாயில் தன்னைச் சுட்டது பிடல்தான் என்று மரண வாக்குமூலம் க�ொடுத்ததாகப் ப�ோலி ஆவணம் தயாரிக்கப்பட்டது. இதற்குச் சாட்சியாக ஒரு மாணவரையும் ஏற்பாடு செய்தது எதிர் தரப்பு. இதன் அடிப்படையில் பிடல் கைது செய்யப்பட்டார். இது த�ொடர்பாக நீதிமன்ற விசாரணை த�ொடங்குவதற்கு முன்பாகவே எதிர் தரப்பு ஏற்பாடு செய்திருந்த ப�ொய் சாட்சி அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தனக்குப் பணம் க�ொடுத்துப் பிடலுக்கு எதிராகப் ப�ொய் சாட்சி ச�ொல்லச் ச�ொன்னார்கள் என்று அந்த மாணவன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். எதிர் தரப்பு ஜ�ோடனை செய்த குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்து பிடலை விடுதலைச் செய்து தீர்ப்பு எழுதினார் நீதிபதி. தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட துணிவில் அதே வருடம் செப்டம்பர் மாதத்தில் தனியார் ப�ோக்குவரத்து கம்பெனிகள் பயணசீட்டின் விலையைத் தங்கள் விருப்பப்படி உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது அரசாங்கம். கரும்பு விவசாயக் கூலி த�ொழிலாளர்களையும், நடுத்தர வர்கத்தையும், மாணவர்களையும் நேரடியாகப் பாதிக்கக் கூடிய விசயம் இது என்பதால் த�ொழிலாளர் அமைப்புகளும் மாணவர்களும் ப�ோராட்டத்தில் இறங்கினார்கள். பிடலும் யூ.ஐ.ஆர் அமைப்பின் முக்கிய உறுப்பினரான கருப்பினத்தைச் சேர்ந்த ஜஸ்டோ பியன்டிசும் மாணவர்களின் ப�ோராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆர்தோடாக்சோ கட்சி சார்பு க�ொண்ட வான�ொலியில் இருவரும் இது குறித்துப் பேசுவதற்குத் த�ொடர்ச்சியாகப் பதினைந்து நிமிட ஸ்லாட் ஒதுக்கித்தரப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு எந்த வகையில் சாமானிய மக்களின் ப�ொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடிய இந்தக் கட்டண உயர்வைக் கண்டித்துப் பேசினார்கள் வழக்கம் ப�ோலப் 55
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பிடலின் உரையில் அணல் பறந்தது. நிலைமை ம�ோசமடைவதைக் கண்டுக�ொண்ட அரசாங்கம் உடனடியாக அப்போதைக்குக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இப்படித் த�ொடர்ச்சியாகப் ப�ோராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பிடல் காதலிக்கவும் தவறவில்லை. ஹவானா பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறை மாணவியாக இருந்த மிர்தா டையஸ் பாலார்டை அவருடைய காதலி. மிர்தா பிடலின் சக வகுப்பு நண்பரான ரபேல் டையஸ் பாலார்டின் சக�ோதரி. பிடலும் மிர்தாவும் முதலில் சந்தித்துக்கொண்டது பல்கலைக்கழகச் சட்டத்துறை கேன்டீனில். பார்த்த மாத்திரத்திலேயே இருவரும் ஒருவரை ஒருவர் ஈர்த்துக்கொண்டார்கள். காதலிக்கு என்று பிடல் கற்பனை செய்துவைத்திருந்த அனைத்து அம்சங்களையும் க�ொண்டவராக இருந்தார் மிர்தா. மிர்தாவின் குடும்பம் செல்வச் செழிப்பில் பிடலின் குடும்பம்போல்தான் என்றாலும் கூடுதலாக அந்தக் குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கும் இருந்தது. மிர்தாவின் தந்தை ஓரியண்ட் மாகாணத்தில் இருந்த பான்ஸ் நகரின் மேயர் பதவியில் இருந்தார். அவர் சிறந்த வழக்கறிஞரும் என்பதால் பல செல்வாக்குள்ள மனிதர்கள் அவருடைய கிளையன்டுகளாகவும் இருந்தார்கள். படிஸ்டா அதில் ஒருவர். காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்துக�ொள்ள முடிவு செய்தார்கள். இந்தத் திருமணத்தில் பிடலின் பெற்றோர்களுக்கு முழுத் திருப்தி. அரசியல் ப�ோராட்டங்களே கதியாகக் கிடக்கும் தங்களுடைய மகனின் வேகத்தை இந்தத் திருமணம் கட்டுப்படுத்தும் என்று சந்தோசப்பட்டார்கள். மிர்டாவின் தந்தைக்கு இந்தத் திருமணத்தில் லேசான நெருடல் இருந்தது. பிடலின் ப�ோராட்டப் பின்னணி அவரின் நெருடலுக்குக் காரணம். அதிலும் அவருடைய கிளையன்டுகளாக இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்துப் பிடல் செய்து வரும் ப�ோராட்டங்கள் அவரைச் சற்றே தயக்கம் க�ொள்ளச் செய்தது. இருந்தும் பிடலும் மிர்டாவும் 1948 அக்டோபர் 11 அன்று பான்சில் இருந்த ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தில் திருமணம் செய்துக�ொண்டார்கள். மூன்று மாதத் தேனிலவுக்கு அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் அமெரிக்காவில் தஞ்சம் 56
நவீனா அலெக்சாண்டர்
புகுந்திருந்த முன்னால் ஜனாதிபதி படிஸ்டா அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த எட்டே வருடங்களில் தான் இப்போது வாழ்த்து ச�ொல்லிக்கொண்டிருக்கும் பிடல் காஸ்டிர�ோ தன்னுடைய ஆட்சியைக் கவழிக்கப்போகிறார் என்பதைக் கனவிலும் நினைக்காமல். அமெரிக்காவின் மியாமியில் சில வாரங்கள் இருந்த பிடலும் மிர்டாவும் நியூ யார் நகருக்குச் சென்றார்கள். அங்கே ரபேல் ஏற்பாடு செய்திருந்த பிளாட்டில் தங்கினார்கள். அங்கே தங்கியிருந்த நாட்களில் அவரைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்த ஒரு விசயம் கம்யூனிஸத்தைப் பரம எதிரியாகப் பாவிக்கும் ஒரு நாட்டில் மார்க்சின் டாஸ் கேபிட்டல் புத்தகம் கடைகளில் விற்பனைக்கு இருப்பது. அங்கு இருந்த ஒரு புத்தகக் கடையில் பிடல் மார்க்சின் டாஸ் கேப்பிட்டல் புத்தகத்தை வாங்கினார். தேனி நிலவு முடிந்து நாடு திரும்பிய இருவரும் விடாட�ோ நகரில் சிறிய வீடு ஒன்றை வாடைக்கு எடுத்துக்கொண்டு திருமண வாழ்க்கையைத் த�ொடங்கினார்கள். பிடல் மீண்டும் அரசியல் ப�ோராட்டங்களைத் த�ொடங்கினார் என்று ச�ொல்வது ப�ொருத்தமாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டில் இருப்பதால் தன்னுடைய சட்டப் படிப்பிலும் கவனத்தைத் திருப்பத் த�ொடங்கினார். முந்தைய ஆண்டுகளில் எழுதாமல் விட்டத் தேர்வுகளுக்கும் சேர்த்துப் படிக்க அதிக நேரம் ஒதுக்கத் த�ொடங்கினார். இதற்காக வேண்டி அவர் தன்னுடைய பேச்சுகளையும் ப�ோராட்டங்களையும் முற்றிலும் கைவிட்டுவிடவில்லை. இந்த நிலையில் ஒருநாள் குடிப�ோதையில் இருந்த சில அமெரிக்க மாலுமிகள் சென்டிரல் ஹவானாவில் இருந்த மார்டியின் சிலை இருந்த மேடை மீது ஏறி அதன் மீது சிறுநீர் கழித்துக் கேவலமாக நடந்துக�ொண்டார்கள். இதைக் கண்டு அங்கிருந்த கியூபர்கள் க�ொந்தளித்துப்போனார்கள். அந்த மாலுமிகளைப் பிடித்து அடிக்கத் த�ொடங்கினார்கள். விசயத்தைக் கேள்விப்பட்ட ப�ோலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து அந்த அமெரிக்க மாலுமிகளைப் பாதுகாப்பாகக் காவல் நிலையத்திற்குக் க�ொண்டு சென்றுவிட்டார்கள். மக்கள் காவல் நிலையத்திற்கு வெளியே நின்று அந்த அமெரிக்கர்களுக்கு எதிராகக் க�ோசம் ப�ோட்டார்கள். விசயத்தைக் கேள்விப்பட்ட 57
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பிடல் தனது நண்பர்களைக் கூட்டிக்கொண்டு அடுத்த நாள் காலை அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு அமெரிக்க மாலுமிகளின் கேவலமான நடத்தைக்குக் கண்டனம் க�ோசம் எழுப்பினார்கள். இந்த விசயத்தில் கியூப மக்களுடன் இருந்திருக்க வேண்டிய காவல் துறை முற்றிலும் உள் நாட்டு மக்களுக்கு எதிராகவே நடந்துக�ொண்டது. தூதரகத்திற்கு வெளியே க�ோசம் எழுப்பிக்கொண்டிருந்த பிடலையும் அவர் தலைமையில் இருந்த மாணவர்களையும் தடியடி நடத்திக் கலைத்தது. இதில் பிடலுக்கும் அவருடைய சகாக்களும் தடியடி காயங்கள் ஏற்பட்டது. அமெரிக்க மாலுமிகளின் நடத்தையைக் கண்டித்தும், தவறாக நடந்துக�ொண்டவர்களைக் கண்டிக்காமல் தவறுக்கு நியாயம் கேட்டுப் ப�ோராடிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட காவல் துறையையும் கண்டித்துப் பிடலும், அல்பெர்டோ குவேராவும், லையனல் சூட்டோவும் முக்கியப் பத்திரிக்கைகளின் அலுவலகங்களுக்கு முன்பாகச் சென்று ப�ோராட்டங்கள் நடத்தினார்கள். அமெரிக்காவிற்குப் பயந்துக�ொண்டு அதன் காலடியில் படுத்துக்கிடக்கும் அரசாங்க அதிகாரிகளையும் காவல் துறை அதிகாரிகளையும் எதிர்த்துக் க�ோசம் ப�ோட்டார்கள். அமெரிக்காவை எதிர்த்துக் க�ோசம் ப�ோடுவதைக் கண்டும்காணாமல் விட்டுவிடக் கூடிய அதிகார வர்கம், அமெரிக்காவிற்குச் சாமரம் வீசும் அதிகாரிகளின் பெயர்களைப் ப�ொது வெளியில் ச�ொன்னால் கண்டும் காணாமல் விட்டுவிடுமா என்ன. த�ொடர்ச்சியாக இந்த வேலையில் ஆதாரங்களுடன் ஈடுபட்டுவரும் பிடல் அவர்களுக்குப் பெரும் த�ொல்லையாக மாறிக்கொண்டிருந்தார். எந்தப் பிரச்சனை என்றாலும் அங்குப் புகுந்து தங்களைத் த�ோல் உறிக்கும் அவர் எத்தகைய சமரசத்திற்கும் (பணத்தை வாயில் வைத்துத் திணிப்பதுதான்) உடன் படக்கூடியவர் இல்லை என்பதாலும் ஒரேயடியாக அவர் வாயை மூடிவிட மீண்டும் ஒரு திட்டம் தயாரானது. அவரை ஒழித்துக்கட்ட ஒரு க�ொலை முயற்ச்சி 1949 ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டது. பிடலும் அவருடைய நண்பர் ஜஸ்டோவும் வான�ொலி நிலையம் ஒன்றில் மக்களிடையே பேசி வருவதை முன்பே பார்த்திருக்கிற�ோம். இந்த வான�ொலி நிகழ்ச்சியில் பிடல் 58
நவீனா அலெக்சாண்டர்
பேச வரும்போது அவரைச் சுட்டு க�ொலை செய்வது என்கிற ஏற்பாட்டுடன் எம்.எஸ்.ஆர் அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் அந்த வான�ொலி நிலையத்தின் அருகில் காத்திருந்தார்கள். அன்றைய தினம் பிடலுக்கு பதிலாக ஜஸ்டோ அந்தக் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வர அடையாளம் மாறிப்போய் அந்த குண்டர்கள் ஜஸ்டோவை சுட்டு க�ொன்றுவிட்டுத் தப்பிய�ோடிவிட்டார்கள். இந்தப் படுக�ொலை பல்கலைக்கழகத்தைத் தாண்டிப் ப�ொது மக்களிடமும் பெரும் க�ொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாட்டில் தலைவிரித்தாடும் கூலிப்படை மற்றும் குண்டர் படையைக் கட்டுப்படுத்தாத அரசைக் கண்டித்து எதிர் குரல் கிளம்பத் த�ொடங்கியது. இந்த வன்முறை அட்டூழியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தம் ஆளும் வர்கத்தின் மீது விழுந்தது. குண்டர்கள் கலாச்சாரத்தை ஒழிக்கக் குண்டர்களுக்கு அரசாங்கத்தில் வேலைப் ப�ோட்டுக் க�ொடுத்தது அன்றைய பிரைய�ோவின் அரசாங்கம்! இந்த நாட்களே பிடல் அதிகமாக மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் புத்தகங்களைப் படிக்கத் த�ொடங்கிய காலக்கட்டம். மார்க்ஸ் எழுதிய டாஸ் கேப்பிட்டல், கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ, தி சிவில் வார்ஸ் இன் பிரான்ஸ், தி எயிடீன்த் புருமையர், தி கிரிட்டிக் ஆ தி க�ோதா ப்ரோகிராம் புத்தகங்கள் இதில் குறிப்பிடத்தக்கது. லெனின் எழுதிய வாட் இஸ் டு பி டன், தி ஸ்டேட் அன்ட் தி ரிவல்யூஷன், இம்பீரியலிசம் எ சுப்பீரியர் பேஸ் ஆ கேப்பிட்டலிசம் ப�ோன்ற புத்தகங்கள். இந்தப் புத்தக வாசிப்புகள் பிடலை அதிகம் கம்யூனிசத்தை ந�ோக்கி அவரை இழுத்துச் சென்றது. இந்த வாசிப்புகள் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் ஆழமாகப் பகுத்துப் பார்க்க அவருக்கு உதவின. அதற்கு ஏற்றார் ப�ோல 1949 க�ோடை காலத்தைப் பிடலும் மிர்டாவும் பான்ஸ் கழிக்கும்படியானது. அப்போது மிர்டா ஆறு மாதங்கள் கருவுற்றிருந்தார். பான்ஸ் நகரின் ஒரு பகுதியில் அமெரிக்க யுனைட்டட் ப்ரூட் கம்பெனியின் மேலதிகாரிகள் ச�ொகுசாக வாழ்ந்துக�ொண்டிருக்க அடுத்த பகுதியில் அந்தக் கம்பெனியில் உழைத்துக்கொண்டிருந்த உள்நாட்டு மக்கள் பஞ்சைப் பராரிகளாக வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பராரிகள் அந்த 59
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
நிறுவனத்தின் ச�ொகுசு எல்லைக்குள் நுழைந்துவிடாதபடி காவலும் ப�ோடப்பட்டிருந்தது. உள்நாட்டிலேயே அகதிகளைப்போல நடத்தப்பட்ட பான்ஸ் மக்களின் நிலை பிடலை க�ொந்தளிக்க வைத்தது. மார்க்சின் எழுத்துகள் அவர் வாழ்வில் அதுவரை பெற்ற அனுபவங்களுக்கான அரசியல் ரீதியிலான விளக்கங்களைக் க�ொடுத்தது. தன்னை மார்க்சின் எழுத்துகள் வெற்றிக�ொண்டு விட்டதாகச் ச�ொல்கிறார் பிடல். மார்க்ஸ் எடுத்து வைத்த சமூகச் சீர்கேடுகளுக்கான மறுக்க முடியாத உண்மைகள் என்னைக் கட்டிப்போட்டுவிட்டன என்கிறார். இது குறித்து அவருடைய நேரடி வார்தைகளிலேயே கேட்பது சிறப்பாக இருக்கும். மை லைப் புத்தகத்தில் அவர் இது குறித்துச் ச�ொல்வது, ‘சமூகம் என்றால் என்ன என்று எனக்கு விளக்கியது மார்க்சியம். அதுவரை கண்கள் கட்டப்பட்டுத் தெற்கு எது வடக்கு எது என்று திக்கு தெரியாமல் நடு காட்டில் தவிக்கும் மனிதனைப் ப�ோன்றே தவித்துக்கொண்டு இருந்தேன். வர்க ப�ோராட்டம் குறித்த வரலாறு அறிந்திருக்கவில்லை என்றால�ோ, மனிதச் சமூகம் ஏழைகள், பணக்காரர்கள் என்று பிரிந்துகிடப்பதை உணரவில்லை என்றால�ோ, சிலர் பலரை ஒடுக்கிச் சுரண்டுவதைப் புரிந்துக�ொள்ளவில்லை என்றால�ோ அவனுடைய நிலைமை கண்கள் கட்டப்பட்டுக் காட்டில் விடப்பட்டவனைப் ப�ோன்றதுதான்.’ ‘முதலாளித்துவம் பெரும் அளவில் மனித உளவியலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடியது. ச�ோசலிஸ்டுகளிடம் இந்தத் தன்மை கிடையாது. ச�ோசலிஸ்டுகள் நல்ல வேலைச் சூழலில் உழைப்பதையும் நல்ல வேலையையுமே முதன்மையாகக் கருதுகிறார்கள். ஆனால் முதலாளித்துவம் த�ொழிலாளர்கள் மூலம் கிடைக்கக் கூடிய அதிக உற்பத்தியையே குறியாகக் க�ொண்டது. இதன் காரணமாகக் கையில் பணம் வைத்திருக்கும் முதலாளித்துவப் ப�ோக்கு க�ொண்டவர் சிறிய த�ொழிலைத் த�ொடங்கி அதிக உற்பத்தியைப் பெருக்கிப் பணக்காரராக இருக்கும் அவர் மேலும் பணம் படைத்தவராக மாறுகிறார். இப்படியான விசயங்களை நான் நேரடியாகப் பார்த்தவன். இதில் வின�ோதம் இவர்களால் சுரண்டப்பட்ட சாமானியர்கள் பதிலுக்கு இவர்களை மரியாதையுடனும் மதிப்புடனும் பார்க்கவேண்டி இருக்கிறது. 60
நவீனா அலெக்சாண்டர்
இதற்குக் காரணம் பணம்.’ ‘இது குறித்து மேலும் நான் படிக்கத் த�ொடங்கியப�ோதுதான் முக்கியமாகப் ப�ொருளாதாரம் குறித்து நான் படித்தப�ோதுதான் கார்ல் மார்க்ஸ் என்று ஒரு மனிதர் இருப்பதும், ச�ோசலிசம் என்று ஒரு விசயம் இருக்கிறது என்பதும், மார்க்ஸ்சிட்கள், கம்யூனிஸ்டுகள் என்று சித்தாந்த ரீதியில் பலர் இருப்பதும் அறிமுகமாகத் த�ொடங்கியது. இது எனது பல்கலைக்கழகக் காலக்கட்டத்தின் முதல் ஆண்டுகளில் நடந்த விசயங்கள். மனிதச் சமூகம் எப்படியானது என்கிற புரிதலை மார்க்சிடமிருந்து பெற்றுக்கொண்டேன். மார்க்ஸ் இல்லாமல் மனிதச் சமூகம் கடந்து வந்திருக்கும் வரலாற்று பாதைகளை முழுதுமாகப் புரிந்துக�ொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.’ ‘மார்க்சின் கருத்துக்களும் மார்டியின் கருத்துகளுமே எனது முக்கியப் ப�ோராட்டங்களுக்கான கருத்தியல் பின் புலத்தைக் க�ொடுத்தவைகள். வேறு வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் இவர்களின் கருத்துக்களைப் படித்த நான் அவைகளை நடைமுறையில் செயல்படுத்த, செயல்படுத்தும்போதும் மற்றவர்களில் இருந்து தனித்து நிற்கப் பெரிதும் உதவியாக இருந்தது. ப�ோக்கோட்டா கலவரம், ட�ொமினிகன் ரிபப்லிக் தாக்குதல் ப�ோன்ற செயல்பாடுகளில் இந்தக் கருத்துகளே என்னைத் தனித்துச் சிந்திக்கக் கூடியவனாக மாற்றியிருந்தன. அந்த வகையில் அந்த நாட்களில் நான் முழுமையான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டாக பக்குவமடைந்திருந்தேன்.’ ‘படிஸ்டா 1952-ல் இராணுவச் சதி செய்து ஆட்சியைப் பிடித்தப�ோதே எனது எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கான திட்டங்களைத் தயார் செய்துவிட்டேன். ஒரு புரட்சிகரப் ப�ோராட்டத்தை முன்னெடுக்கும் அதே சமயத்தில் கட்டுக்கோப்பாகக் கட்டியமைக்கப்பட்ட ஒரு மக்கள் எழுச்சியையும் உண்டாக்க வேண்டும் என்பது எனது எதிர்காலத் திட்டம். புரட்சிக ப�ோராட்டத்திற்குத் தேவையான சித்தாந்தப் பின்புலத்தைக் க�ொடுத்தவைகள் லெனினின் எழுத்துகள்.’
61
முதல்
வெளிநாட்டு தலைமறைவு – பல்கலைக்கழக மாணவர் பருவம் - VI
அ
ரசியல் கட்சிகளிலும், மாணவ அமைப்புகளிலும் தலைவிரித்தாடிய கூலிப் படை கலாச்சாரத்தையும் குண்டர் படை கலாச்சாரத்தையும் கட்டுப்படுத்தும் விதமாக வன்முறை கலாச்சாரத்தை எதிர்க்கும் மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தில் இருந்த கம்யூனிஸ்டுகளும் ஆர்தோட�ோக்சாக்களும் ஒருங்கிணைந்து உருவாக்கியது 30 செப்டம்பர் மூவ்மண்ட் அமைப்பு. தங்களின் சித்தாந்தங்களில் வன்முறைகளுக்கு இடம் க�ொடுக்கும் மாணவர்களுக்கோ அல்லது வன்முறையை வளர்க்கும் கூலிப்படைகளுடன் த�ொடர்பில் இருக்கும் மாணவர்களுக்கோ இந்த அமைப்பில் இடம் கிடையாது என்று தீர்மானகரமான முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
கம்யூனிஸ்டுகள் சார்பில் அல்பெர்டோ குவேராவும், ஆர்தோட�ோக்சாஸ் கட்சி சார்பில் மேக்ஸ் லெஸ்னிக்கும் இந்த அமைப்பின் தலைவர்களாக இருந்தார்கள். இதில் இணைந்துக�ொள்ளப் பிடல் விரும்பினார். வன்முறையிடம் உறவாட வன்முறையால் மட்டுமே முடியும் என்பது பிடலின் அனுபவப் பாடம். நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் வன்முறைக்கு எதிரில் எடுபடாது. ஆனால் பிடல் தனது நேர்கொண்ட பார்வையையும், நிமிர்ந்த நன்னடையையும் சமரசங்களுக்கும் வன்முறை பூச்சாண்டிகளுக்கும் பயந்து கைவிட்டுவிடாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதத்தைச் சுமந்து திரிய வேண்டியிருந்தது. எந்தக் காரணத்திற்காகவும் ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு 62
நவீனா அலெக்சாண்டர்
30 செப்டம்பர் மூவ்மண்டில் இடம் கிடையாது என்று ச�ொன்னது அந்த அமைப்பின் க�ொள்கை விளக்கம். இந்த விளக்கமே பிடல் இதில் சேர்வதற்கும் தடையாக இருந்தது. இதே காரணத்தையே அல்பெர்டோ குவேராவும் மேக்ஸ் லெஸ்னிக்கும் பிடலிடம் கூறினார்கள். தன் உயிருக்கு எத்தகைய ஆபத்து வந்தாலும் பரவாயில்லை இந்த அமைப்பில் தன்னையும் இணைத்துக்கொள்வதே முக்கியம் என்று முடிவெடுத்துவிட்ட பிடல் தன்னுடைய பாதுகாப்பிற்காகத் தன்னுடன் வைத்திருந்த கை துப்பாக்கியை (பிடல் தனது பாதுகாப்பிற்கு என்று எந்நேரமும் தன்னுடன் வைத்திருந்த துப்பாக்கி பிரவுனிங் ஐ-பவர்) பல்கலைக்கழகத்திற்குள் எடுத்து வருவதில்லை என்று இருவருக்கும் உறுதி க�ொடுத்தார். கை துப்பாக்கி தடையைத் தவிர மற்றொரு உறுதி ம�ொழியையும் பிடலிடமிருந்து எதிர்பார்த்தார்கள் 30 செப்டம்பர் மூவ்மண்டின் தலைவர்கள். அது யூ.ஐ.ஆர் அமைப்புடன் இருக்கும் த�ொடர்பைப் பிடல் முற்றிலும் அறுத்துக்கொள்ள வேண்டும் என்பது. யூ.ஐ.ஆர் அமைப்பு சில அதி தீவிரச் சித்தாந்தம் க�ொண்ட மாணவர்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. வன்முறைக்கு அவர்கள் அஞ்சியதில்லை. வேறு வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் வன்முறை என்கிற முள்ளை வன்முறை என்கிற முள்ளால் எடுக்கக் கூடியவர்கள். அதன் காரணமாக அந்த அமைப்பில் இருந்த அல்லது அந்த அமைப்பினருடன் த�ொடர்பில் இருந்த அனைவரும் வன்முறையாளர்களாகவே பார்க்கப்பட்டார்கள். பிடல் யூ.ஐ.ஆர் அமைப்பின் முன்னால் தலைவரான எமிலிய�ோ டிரைய�ோவுடன் நட்பில் இருந்த காரணத்தால் வன்முறையாளர் முத்திரை பிடலின் மீதும் குத்தப்பட்டது. பிடலுக்கும் யூ.ஐ.ஆர் அமைப்பிலிருந்த சிலர் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கைகளுக்கும் முற்றிலும் த�ொடர்பில்லை என்றாலும் பனை மரத்தின் அடியில் நின்று பாலைக் குடித்துத் த�ொலைத்தால் அதற்கான பதிலையும் ச�ொல்லித்தானே ஆகவேண்டியிருக்கிறது. பிடலும் ச�ொன்னார். அந்த அமைப்பில் இருக்கும் நண்பர்களுடன் தான் இனி எப்போதும் த�ொடர்புக�ொள்ளப் ப�ோவதில்லை என்று உறுதி ம�ொழி க�ொடுத்தார். இதன் பிறகே பிடல் 30 செப்டம்பர் மூவ்மண்டில் 63
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சேர்த்துக்கொள்ளப்பட்டார். பேக்ட் ஆ தி ஆக்சன் குரூப் என்கிற சிறிய அமைப்பு ஒன்றையும் பிடல் தன்னுடைய பாதுகாப்பிற்கு என்றும் பல்கலைக்கழக வன்முறையில் பாதிக்கப்படும் அப்பாவி மாணவர்களைக் காப்பதற்கு என்றும் ஏற்படுத்தியிருந்தார். அதையும் கலைத்துவிட்டார். 30 செப்டம்பர் மூவ்மண்ட், 1949 நவம்பர் 13 அன்று சிறப்பு கூட்டம் ஒன்றைப் பல்கலைக்கழகத்தில் இருந்த மார்டையர்ஸ் கேலரியில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ச�ொற்பொழிவாற்றும் ப�ொறுப்பு பிடலிடம் க�ொடுக்கப்பட்டது. பிடலின் பேச்சிற்கும் கூட எதிரியின் வன்முறையை ஓங்கித் தலையில் அடிக்கும் சக்தி உண்டு. அது அன்றைய பேச்சில் நடந்தது. அரசாங்கத்தின் சகல விதமான அனுக்கிரகத்துடன் பல்கலைக்கழகத்திற்குள் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்திக் க�ொண்டிருந்த அத்தனை கும்பல்களையும் அம்பலப்படுத்திக் கிழித்து மூலைக்கு ஒன்றாகத் த�ோரணமாகத் த�ொங்கவிட்டுவிட்டார். பிடலின் பேச்சு அடுத்த நாள் தேசியப் பத்திரிக்கைகளில் முதல் பக்கச் செய்திகளாக வந்தது. தான் இறங்கியிருக்கும் காரியத்தில் உயிரைத் துச்சமாக மதிக்கும் ஒரு நபராலேயே இப்படியெல்லாம் படு துணிச்சலாகப் பேச முடியும் என்று பல்கலைக்கழகம் எங்கும் பரபரப்பாகிப்போனது. சிலர் முட்டாள்தனமான அசட்டுத் துணிச்சல் என்றும் கூட விமர்சனம் செய்தார்கள். ஆனால் பிடல் தனது எதிர்ப்பு ப�ோராட்ட வரலாற்றில் என்றைக்குமே தெரிந்தே அசட்டுத்தனமான காரியங்களைச் செய்தது கிடையாது. தான் செய்யும் காரியத்தின் பின் விளைவுகளை நன்றாகத் தெரிந்தே அதை எதிர்கொள்வதற்கான வழிகளையும் அறிந்தே செயல்பட்டிருக்கிறார். இப்போதும் அப்படியே நடந்தது. கடுப்பின் உச்சத்திற்குச் சென்ற எதிர் தரப்பு இந்த முறை என்ன ஆனாலும் பிடலின் கதையை முடித்தே ஆகவேண்டும் என்று களத்தில் இறங்கியது. இந்தச் ச�ொற்பொழிவிற்கு அடுத்து வந்த நான்கு வாரங்களுக்கு மேக்ஸ் லெஸ்னிக்கின் பிளாட்டில் தலைமறைவாக இருந்தார் பிடல். கூலிப்படையும் குண்டர்படையும் அவரை வெகு தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்க அங்கிருந்து மட்டன்சாஸ் மாகாணத்திற்கும் பிறகு அங்கிருந்த இரயில் மூலம் ச�ொந்த 64
நவீனா அலெக்சாண்டர்
ஊரான ஓரியண்டிற்கு ப�ோய்ச் சேர்ந்தார் பிடல். அவர் எங்குச் சென்றாலும் விடுவதில்லை என்கிற முடிவுடன் க�ொலை வெறி கும்பலும் அவரைப் பின்தொடர்ந்து வந்துக�ொண்டே இருந்தார்கள். இதை நன்கு அறிந்திருந்த பிடல், தந்தையிடம் க�ொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்குப் பறந்துவிட்டார். முதலில் மையாமிக்கும் பிறகு நியு யார்க்குக்கும் ப�ோனார். அமெரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அதுவரை விடுபட்டிருந்த பாடங்கள் அனைத்தையும் படித்து முடித்தார். அது ப�ோகக் கம்யூனிஸ்ட் புத்தகங்கள் பலவற்றையும் படித்தார். கியூபாவில் நிலைமை சற்று மாறியதும் பிடல் அமெரிக்காவிலிருந்து ஹவானா திரும்பினார். பல்கலைக்கழகத்தில் அவருடைய இறுதி ஆண்டு தேர்வுகள் நெருங்கிக் க�ொண்டிருந்ததால் ப�ோராட்டங்களைக் க�ொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தேர்வுகளில் கவனம் செலுத்தினார். செப்டம்பர் 1950-ல் பிடல் ‘டாக்டர் இன் லா’ பட்டம் பெற்று விட்டுப் பட்டதாரியாகப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்தார். அவருடைய தந்தை இதற்குப் பரிசாக அவருக்குப் ப�ோன்டியாக் கார் ஒன்றை அளித்தார். மனைவியின் தந்தைக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு மற்றும் அவருடைய பட்டம் இரண்டும் அவர் நினைத்திருந்தால் அவருக்குப் பணம் க�ொட்டும் ஒரு வேலையை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால் பிடல் பணத்தைத் தேடிப் ப�ோகவில்லை. அவருக்கு அது எப்போதும் ஒரு பெரிய விசயமாகவும் இருந்ததில்லை. சில பணம் படைத்த குடும்பத்துப் பிள்ளைகள் செய்வதைப்போலத் தந்தையின் த�ொழிலை மேற்கொண்டு எடுத்து நடத்தி இலாபங்களைக் குவிக்கும் வழியையும் பிடல் தேர்ந்தெடுக்கவில்லை. அது அவருடைய இயல்பும் அல்ல அவருடைய க�ொள்கைகளுக்கு ஏற்றதும் அல்ல. பல்கலைக்கழகத்தில் அவருடைய சக மாணவர்களாக இருந்த ஜார்ஜ் அசிபாசு மற்றும் ரபேல் ரிசன்டே ஆகிய�ோருடன் சேர்ந்து ஏழைகளுக்கும் சாமானியர்களுக்கும் உதவும் சட்ட ஆல�ோசனை அலுவலகம் ஒன்றைத் த�ொடங்கினார். ரபேல் ரிசன்டேவும், ஜார்ஜ் அசிபாசுவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி க�ொண்டவர்கள். பல்கலைக்கழகத்தில் படித்தப�ோது கம்யூனிசச் சார்பு க�ொண்டவர்களாக இருந்தவர்கள். இதில் விசேசம் அசிபாசு 65
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பல்கலைக்கழகத்தில் நடந்த எஃப்.ஈ.யூ தேர்தலின் ப�ோது பிடலுக்கு எதிராக வாக்களித்தவர். அதற்கான காரணம் என்னத்தான் பிடல் ஏழைகளின் துன்பங்களைக் குறித்துப் பேசினாலும் அவர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய பேச்சுகள் எல்லாம் ப�ோலியாக இருக்கலாம் என்பது அவருடைய எண்ணமாக இருந்திருக்கிறது. பிடல் பேசியதைப் ப�ோலவே இப்போது நடந்துக�ொண்டது அசிபாசுவை மிகவும் கவர்ந்துவிட்டது. பிடல் முன் வைத்த ய�ோசனை மற்ற இருவரும் அவருடன் சேர்ந்து செயல்படுத்த முன்வந்தார்கள். பிடலும் ரிசன்டேவும் சேர்ந்து பழைய ஹவானா பகுதியில் ஒரு சிறிய அலுவலக அறையைத் த�ொடங்கினார்கள். வந்து செல்பவர்களுக்குத் தேவையான இருக்கைகளை வாங்கிப் ப�ோடுவதற்குக் கூட அப்போது அவர்களிடம் முதலீடு என்று எதுவும் கிடையாது. பிடலின் ச�ொந்த ஊரான பிரானில் ஒவ்வொரு சதுர அடியும் அவருடைய தந்தைக்குச் ச�ொந்தம். அங்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் அவருடைய குடும்பத்திற்குச் ச�ொந்தமான ஒரு கட்டிடம் நிற்கும். பிடல் கேட்டிருந்தால் அவருடைய தந்தை சகல வசதிகளும் க�ொண்ட ஒரு அலுவலகத்தை ஹவானாவின் ஏதாவது ஒரு வணிகக் கட்டிடத்திலேயே கூட அமைத்துத் தந்திருக்க முடியும். ஆனால் பிடல் இந்த விசயத்தில் தனது தந்தையின் உதவியை நாடவேயில்லை. தனது அலுவலகத்தைப் பணத்தால் கட்டி எழுப்ப அவர் விரும்பவில்லை. சாமானியர்களுக்கு உதவி செய்வதின் மூலமே கட்டியெழுப்ப முடிவு செய்தார். பெரும் பணமே அனைத்துத் தீமைகளுக்கும் வாசல் என்பதை ஆழமாக நம்பியவர் பிடல். பணத்தின் காரணமாக வரும் பேராசையையும் அவர் அருவருப்பான விசயமாகவே பார்த்தார். பணத்தின் மீதான பேராசையே அரசியலில் ஊழல் பேர்வழிகளை உண்டாக்குகிறது என்று தன்னுடைய பேச்சுகளில் த�ொடர்ந்து விமர்சனம் செய்தார். தங்களின் பேராசை காரணமாக ஊழல் வாதிகள் தன் நாட்டை ஏகாதிபத்தியச் சக்திகளிடம் அடகு வைக்கிறார்கள் என்றும் அந்தச் சக்திகள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளுக்கு நாட்டு மக்களை அடக்கி ஓடுக்குகிறார்கள் என்றும் த�ொடர்ச்சியாகப் பேசி வந்தவர். பிடலிடம் ச�ொல் ஒன்று செயல் வேறு இல்லை என்பதற்கு 66
நவீனா அலெக்சாண்டர்
உதாரணமாக நடந்து அவருடைய இந்த அலுவலகம். வருவாய் இல்லாமல் அலுவலகம் த�ொடங்கிய நாளில் இருந்தே திணறியது. இவர்களுடைய அலுவலகத்தின் முக்கிய வாடிக்கையாளர் ஒரு ஸ்பானிய மர வியாபாரி. அந்த வியாபாரியிடமிருந்து மரம் வாங்கிக்கொண்டு கடன் பாக்கி வைத்திருந்த த�ொழிலாளர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்யும் வேலை மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிடல் அந்தக் கடன் பாக்கியை வாங்கிய முறை வித்தியாசமானது. அவர் நேரடியாக மரத் த�ொழிலாளர்களிடம் சென்று கடன் பாக்கியைக் கேட்காமல் அந்தத் த�ொழிலாளர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு யாரெல்லாம் அவர்களுக்குச் சரியாகக் கூலியைக் க�ொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள�ோ அவர்களின் விலாசங்களை வாங்கிக்கொண்டு அங்கே ப�ோய் நின்றுவிடுவார். த�ொழிலாளர்களுக்குக் கூலி க�ொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாக இருந்ததுதான் இதில் முரண்நகை. இந்த முரண்நகையைப் பிடல் நன்றாக உணர்ந்திருந்த காரணத்தினாலேயே இந்த வழிமுறையைக் கையாண்டார். அந்த மர வியாபாரியும் பெரிய அளவில் த�ொழில் செய்யவில்லை என்பதால் பிடலின் வேலைக்கு அவர் முடிந்தவரை மரப் ப�ொருட்களையே சம்பளமாகக் க�ொடுத்துவந்தார். உழைத்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழை விவசாயிகளும், வேலை நிறுத்தம் செய்த காரணத்தால் வேலையில் இருந்து துரத்தப்பட்ட த�ொழிலாளர்களும், ப�ோராட்டங்களில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த ஏழை மாணவர்களுமே பிடலின் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள். நடைபாதை கடை வியாபாரிகளும் அவருடைய வாடிக்கையாளர் பட்டியலில் உண்டு. இவர்களுக்காகச் சட்டப் ப�ோராட்டங்களில் ஈடுபட்டப�ோது அவர் இவர்களிடமிருந்து பண வடிவில் சம்பளமாக எதையும் பெற்றுக்கொண்டதே கிடையாது. அவர்களால் ப�ொருளாக எதையாவது க�ொடுக்க முடிந்தால் அது மிகச் சிறியதாக இருந்தாலும் அதை வாங்கிக்கொள்வார் இல்லை என்றால் அதுவும் இல்லை. அமெரிக்க முதலீட்டில் கியூபாவில் இயங்கிய பெரு நிறுவனங்களின் சேவையில் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் 67
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சார்பிலும் பிடல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். உதாரணமாக அமெரிக்க முதலாளி ஒருவரின் த�ொலைபேசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குக் க�ொடுத்த வாக்குறுதிக்கு மாறாக நடந்துக�ொண்டதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் சார்பில் அந்தத் த�ொலைபேசி நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு த�ொடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய இழப்பீட்டைப் பெற்றுத் தந்திருக்கிறார். நகராட்சி அமைப்புகள் நகர விரிவாக்கம் என்கிற பெயரில் சேரி மக்களின் இருப்பிடங்களை இடித்துத் தள்ளியப�ோது அந்த மக்களின் சார்பாகச் சட்டப் ப�ோராட்டமும் நடத்தியிருக்கிறார். பள்ளிகளில் மாணவர்கள், மாணவ அமைப்புகளைக் கூட்டவ�ோ நடத்தவ�ோ கூடாது என்று கல்வி அமைச்சகம் தடை க�ொண்டுவந்த ப�ோது ஹவானாவில் இருந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் சியன்பியூகஸ் நகரில் அரசுக்கு எதிராகப் ப�ோராட்டத்தில் இறங்கினார்கள். இது நவம்பர் 1950ல் நடந்தது. பிடல் மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களின் ப�ோராட்டத்தில் கலந்துக�ொண்டார். இந்தப் ப�ோராட்டத்தின் ப�ோது மாணவர்களுக்கும் ப�ோலிசுக்கும் சுமார் நான்கு மணி நேரம் தள்ளுமுள்ள நடந்தது. நிலைமை சமாளிக்க முடியாமல் ப�ோலிஸ் தடியடி நடத்த அதில் பிடலுக்கு பலத்த காயம். எப்போதும் ப�ோராட்டக் களத்தில் பிடல் முன் வரிசையில் நிற்கக் கூடியவர். ப�ோராட்டக்காரர்களை அடிதடிகளுக்கு ஆளாக்கிவிட்டுப் பின்னால் ஓடி ஒளிந்துக�ொள்ளும் இயல்பு அவருக்குக் கிடையாது. ஆக நடக்கும் ப�ோராட்டத்தில் ப�ோலிஸ் தடியடி நடத்தினால் முதல் அடி பிடலுக்குத்தான் விழும். இந்தப் ப�ோராட்டத்தின்போது பிடல் கைது செய்யப்பட்டார். காவல்துறைக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டிச் சான்டா கிளாரா மாகாணத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். இந்தக் கைது நடவடிக்கையை வான�ொலியில் பேசியப�ோது சிபாஸ் கண்டித்தார். அவரை அடைத்து வைத்திருந்த காவல் நிலையத்திற்கு எதிரே மக்கள் கூட்டம் கூடிவிட்டது. இது த�ொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தப�ோது அவர் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அடிப்படை உரிமைகளைப் பறிக்க நினைக்கும் அரசின் சட்டங்களுக்கு எதிராகவும், காவல் துறையின் 68
நவீனா அலெக்சாண்டர்
அராஜகங்களுக்கு எதிராகவும் ச�ொற்பொழிவே நடத்திவிட்டார். விட்டால் பிடல் நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்திவிடுவார் என்று பயந்த நீதிபதி அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலைச் செய்துவிட்டார். பழங்களை டப்பாக்களில் அடைத்து ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனம் ஒன்று பல வருடங்களாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த த�ொழிலாளர்களை ஒட்டும�ொத்தமாக ஒரே நாளில் திடீரென்று வீட்டிற்கு அனுப்பிவிட்டுக் குறைந்த சம்பளத்திற்குப் புதிய த�ொழிலாளர்களை வேலைக்கு எடுக்கத் த�ொடங்கியது. பல வருடங்களாக வேலைப் பார்த்துவந்த த�ொழிலாளர்களுக்கு வருடா வருடம் சம்பள உயர்வு க�ொடுப்பதிலேயே நிறுவனத்தின் க�ொள்ளை இலாபம் பறிப�ோவதைத் தடுக்கும் விதமாக இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது அந்த நிறுவனம். இது த�ொழிலாளர் சட்டத்திற்கு எதிரான குற்றச் செயல். அந்த நிறுவனத்தின் இந்தச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டிய அரசாங்கம் அந்த நிறுவனத்திடம் பெற வேண்டிய ‘அம்சங்களை’ பெற்றுக்கொண்டு கண்டும்காணாமல் இருந்தது. வேலை இழந்த த�ொழிலாளர்களின் சார்பில் சட்டப் ப�ோராட்டத்தில் இறங்கினார் பிடல். அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு த�ொடுத்தார். பிடலின் இந்தப் ப�ோராட்டச் செயல்பாடுகளைத் த�ொடர் செய்திகளின் மூலம் மக்களுக்கு அறிவித்தது அலெர்டா என்கிற பத்திரிக்கை. இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் ராம�ோன் வாஸ்கோன்சில�ோஸ். இவர் முந்தைய பிரைய�ோஸ் ஆட்சியில் மந்திரி சபையில் இருந்தவர். இந்தப் பத்திரிக்கைக்கு 30,000 வாசகர்களே இருந்தார்கள். பத்திரிக்கையின் சர்குலேசனை அதிகரிக்க விரும்பிய ராம�ோன், பிடலின் இந்தப் ப�ோராட்டத்தைத் த�ொடர் செய்தியாக வெளியிடத் த�ொடங்கினார். பத்திரிக்கையின் சர்குலேசன் அதிகரிக்கத் த�ொடங்கியது. இது த�ொடங்கி அலெர்டா பத்திரிக்கையில் பிடல் குறித்த அனைத்துச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் க�ொடுக்கப்பட்டது. பிடலின் கட்டுரைகளும் கூட இந்தப் பத்திரிக்கையில் த�ொடர்ச்சியாக வெளியானது. 69
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
நிலத்தின் பேரில் கடன் க�ொடுத்துவிட்டுப் பிறகு அந்தக் கடனைக் காரணம் காட்டி விவசாயக் கூலிகளின் நிலத்தைப் பிடுங்கிக்கொண்ட பண்ணை உரிமையாளர் ஒருவர் மீது பிடல் த�ொடுத்த வழக்கு குறித்த செய்திகளும் இந்தப் பத்திரிக்கையில் த�ொடர்ச்சியாக வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படியான சட்டப் ப�ோராட்டங்களைத் தவிர மற்ற அரசியல்சார்ந்த நடவடிக்கைகளிலும் தவறாமல் தன்னை இணைத்துக்கொண்டிருந்தார் பிடல். இடது சாரி சிந்தனையாளர்களும் பெர்டினார்ட் ரஸ்சலும் க�ொரியாவில் அமெரிக்கா நடத்திக்கொண்டிருந்த ப�ோருக்கு எதிராகப் பேசி வந்ததை ஆதரித்த பன்னாட்டு அமைப்பான கியூபன் பீஸ் கமிட்டியில் இணைந்து அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் ப�ோருக்கு எதிராகக் குரல் க�ொடுத்தார். அமெரிக்காவின் க�ொரியப் ப�ோரில் அமெரிக்காவிற்கு ஆதரவாகக் கியூபா தனது இராணுவ வீரர்களையும் களமிறக்கியதை வன்மையாகக் கண்டம் செய்தார் பிடல். கியூபன் பீஸ் கமிட்டி என்பது இரஷ்யாவின் இரகசியப் பிரச்சார நிறுவனம் என்கிற கியூப அரசின் குற்றச்சாட்டையும் அவர் கண்டித்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் அதாவது 1951 ஆண்டின் க�ோடை காலத்தில் பிடலின் ஆதர்ச அரசியல் தலைவரான சிபாஸ் தவறான ஒரு அரசியல் நகர்வை எடுத்தார். இறுதியில் அந்த நகர்வு அவருடைய உயிரையும் குடித்துவிட்டது. சிபாசிற்கு யார�ோ சிலர் கல்வி துறை அமைச்சர் அருலியான�ோ சான்சேஸ் குறித்த தவறான தகவல் ஒன்றைக் க�ொடுத்திருக்கிறார்கள். அருலியான�ோ சான்சேஸ் ஊழல் செய்து அவருக்கு என்று குவாத்தமாலாவில் பெரும் பண்ணை நிலம் ஒன்றை வாங்கிப்போட்டிருப்பதாகச் ச�ொன்னது அந்தத் தகவல். உண்மையில் அருலியான�ோ சான்சேஸ் நேர்மையான மந்திரிகளில் ஒருவர். எட்டி சிபாசின் மக்கள் செல்வாக்கைச் சிதைக்கும் சதியாக இந்தப் ப�ொய்யான தகவல் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ச�ொல்லப்போனால் இது சிபாசிற்கு அரசாங்கம் விரித்த வலை. அதை உணராமல் தனக்குக் கிடைத்த தகவலின் நம்பகத்தன்மையை முழுதும் விசாரித்து அறிந்துக�ொள்ளாமல் அது உண்மை என்று நம்பிச் செனட் கூட்டத்தில் அருலியான�ோ சான்சேஸ் மீது இந்த ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். தான் வழக்கமாகப் பேசும் 70
நவீனா அலெக்சாண்டர்
வான�ொலி நிகழ்ச்சியிலும் இந்தக் குற்றச்சாட்டை மக்களிடம் தெரிவித்தார். அவருடைய குற்றச்சாட்டை நிருபிக்கும் ஆவணங்களைப் ப�ொதுவெளியில் வெளியிடும்படி எதிர் சவால் விட்டது அரசு தரப்பு. ஆனால் கிடைத்த தகவலை நிருபிக்கக் கூடிய ஆவணங்கள் எதுவும் இல்லை சிபாசிடம். அந்தத் தகவலை அவருக்குச் ச�ொன்னவர்களும் அப்படி ஒன்றுமில்லை என்று பின்வாங்கிவிட்டார்கள். தான் திட்டமிட்டு ஒரு சதியில் சிக்கவைக்கப்பட்டதை அப்போதுதான் உணர்ந்தார் சிபாஸ். அவரால் அவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை மக்களிடம் வெளியிட முடியவில்லை. இதையே எதிர்பார்த்த அரசு தரப்பும் சிபாஸ் ஒரு ப�ொய்யர், அவருடைய அரசியல் இலாபத்திற்காக எந்தப் ப�ொய்யையும் ச�ொல்லத் தயங்கமாட்டார் என்று பிரச்சாரம் செய்யத் த�ொடங்கிவிட்டது. ஆகஸ்ட் 5 அன்று வழக்கமான வான�ொலி நிகழ்ச்சியில் பேசிய அவர் தன்னுடைய குற்றச்சாட்டு ஒருநாள் உண்மையாகும் என்று ச�ொல்லிவிட்டு வான�ொலியில் பேசிக்கொண்டிருக்கும்போதே தான் எடுத்து வந்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டார். ஊழலுக்கு எதிரான எனது கடைசி எச்சரிக்கை மணி இது என்று ச�ொல்லிக்கொண்டே தனது வயிற்றில் சுட்டுக்கொண்டார். ஆர்தோட�ோக்சாஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும் பிடலும் அப்போது அவர் அருகே இருந்தார்கள். நடந்த விபரீதத்தைச் சட்டென்று உணர்ந்துக�ொண்ட பிடல் ஓடிச்சென்று ஒரு காரை எடுத்து வந்து இரத்தச் சகதியில் இருந்த சிபாசை தூக்கிப்போட்டுக் க�ொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சை பெற்றுவந்த சிபாஸ் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்தும் க�ொண்டார். ஆனால் பதின�ொரு நாட்கள் கழித்துச் சிபாஸ் இறந்துவிட்டார். சிபாசுக்கு அஞ்சலி செலுத்தவரும் இலட்சக் கணக்கான மக்களைச் சமாளிக்கக் கூடிய இடவசதி ஆர்தோட�ோக்சாஸ் கட்சி தலைமையகத்தில் இல்லாததால் ஹவானா பல்கலைக்கழகத்தின் கிரேட் ஹால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிபாசின் உடல் ப�ொது மக்களின் அஞ்சலிக்காக அங்கே வைக்கப்பட்டது. தனது ஆதர்சத் தலைவரை எந்தச் சூழ்ச்சி திட்டத்தின் மூலம் எதிர் தரப்பு காவு வாங்கியத�ோ அதே திட்டத்தைக் 71
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
கையில் எடுத்துச் சிபாசின் மரணத்திற்கு நியாயம் கற்பிக்க முடிவு செய்தார் பிடல். ஜனாதிபதி பிரைய�ோசின் ச�ொத்து விவரங்களைக் குறித்த இரகசியத் தேடலில் இறங்கினார். பிரைய�ோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்த ஊழல் பணத்தில் ஹவானாவில் வாங்கிப்போட்டிருந்த பண்ணை நிலம் குறித்துத் தெரிந்துக�ொண்டார். அந்தப் பண்ணை நிலத்திற்குச் செல்வதற்கான சாலை வசதிகளையும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செய்துக�ொண்டதையும் அறிந்துக�ொண்டார். இவைகளை நிருபிக்கும் ஆவண ஆதாரங்களையும் கச்சிதமாகச் சேகரித்துக்கொண்டார். தனது தலைவர் எதில் பிசகினார�ோ அதைப் பாடமாக எடுத்துக்கொண்டு அதைக் கவனமாகக் கையாண்டார். இதில் த�ோற்றால் தன்னுடைய பெயர் கெடுவதுடன் சேர்த்து இறந்துப�ோன சிபாசின் பேரும் சேர்ந்தே கெட்டுவிடும் என்பதை நன்றாக மனதில் க�ொண்டே மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டார். ஜனாதிபதிக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தச் சாபாஸ் பேசி வந்த வான�ொலி நிகழ்ச்சியில் பேச அனுமதி கேட்டார் பிடல். ஆனால் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியின் புதிய மேலிடம் மீண்டும் ஒரு விபரீதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. அதனால் மற்றொரு வான�ொலியில் ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அலெர்டா பத்திரிக்கையும் முதல் பக்கச் செய்தியாக இதை வெளியிட்டது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் க�ொண்டிருந்த நேரத்தில் பிடலின் இந்தக் குற்றச்சாட்டு ஜனாதிபதி பிரைய�ோசை நிலை குலையச் செய்தது. பிடல் தகுந்த ஆதாரங்களுடன் தனது குற்றச்சாட்டை முன்வைத்ததால் அது ப�ொய் என்று நிருபிக்க முடியாமல் திணறிப் ப�ோனது அரசாங்கத் தரப்பு. ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் க�ொண்டிருந்தது. அடுத்த ஜனாதிபதி ப�ோட்டியில் தன்னையும் இணைத்துக்கொள்ள அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த படிஸ்டாவும் கியூபாவிற்குத் திரும்பி வந்தார். அந்தத் தேர்தலில் காங்கிரசிற்குப் ப�ோட்டியிடப் பிடல் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியில் விண்ணப்பம் செய்தார். ஆர்தோட�ோக்சாசின் புதிய தலைமை பிடலின் ப�ோராட்டச் செயல்பாடுகளைக் கருத்தில் க�ொண்டு அவருக்குச் சீட்டு தர மறுத்துவிட்டது. ஆனாலும் விடாத பிடல் ஹவுஸ் ஆ 72
நவீனா அலெக்சாண்டர்
ரெப்ரசன்டேடிவ்சிற்கு ப�ோட்டியிடச் சீட் கேட்டார். இம்முறை அவருடைய க�ோரிக்கையை மறுக்க முடியாது கட்சி மேலிடம் அவருக்கு அனுமதி வழங்கியது. ஹவானாவின் ஏழைகள் நிறைந்த நகரங்களில் ப�ோட்டியிட அவருக்குச் சீட் ஒதுக்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் அவருக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தைத் த�ொடங்கினார். பிரச்சாரக் கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் ஏற்பாடு செய்தார். பல மணி நேரம் பிரச்சாரத்தில் செலவழித்தார். ஹவானாவில் ஆர்தோட�ோக்சாஸ் கட்சி உறுப்பினர்களாகப் பதிவு செய்திருந்த 80,000 கட்சிக்காரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தனக்கு ஆதரவு கேட்டு 80,000 கடிதங்களை அனுப்பினார். இதற்கு முன்பு கியூபாவில் யாரும் இப்படியான ஒரு தேர்தல் பிரச்சார முறையை முயற்சித்தது கிடையாது. படிஸ்டாவும் யூனிட்டரி ஆக்சன் பார்ட்டியின் சார்பில் தேர்தல் களத்தில் நின்றார். ஆனால் ஜனாதிபதி பதவிக்கு. பிடல�ோடு சேர்த்து, ஆர்தோட�ோக்சாஸ் கட்சி வேட்பாளர்களுக்குத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் அப்படியே ச�ொல்லின. அந்தக் கருத்துக்கணிப்புகள் படிஸ்டாவிற்கு வெற்றி வாய்ப்பு பத்துச் சதவிகிதமே என்றன. ஆர்தோட�ோக்சாஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்களின் வாழ்க்கை அத�ோகதிதான் என்று பல ஊழல் அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வயிற்றில் பய ஆசிட் சுரக்கத் த�ொடங்கிவிட்டது. முக்கியமாக இராணுவத்தில் இருந்த சில உயர் அதிகாரிகளுக்கு. தாங்கள் தப்பிக்கவேண்டுமானால் இந்தத் தேர்தலை எப்படியாவது முறியடித்தாக வேண்டும் அதற்கு அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி சதி. இராணுவச் சதி. அதற்குத் த�ோதான ஆளாக அவர்களுக்குப் பட்டது படிஸ்டா. தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டிக்கொண்டிருந்த சமயத்தில் உயர் இராணுவ அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு படிஸ்டாவை சந்தித்தது. இராணுவச் சதிக்கான ஒரு திட்டத்தை அவர் தயார் செய்தால் தாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாக உறுதிம�ொழி க�ொடுத்தார்கள். தேர்தல் கருத்து கணிப்புகளும் படிஸ்டாவின் வெற்றி அழகைச் ச�ொல்லிவிட்டதால் தனக்குக் கிடைத்த அருமையாக வாய்ப்பாக 73
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இதைப் பார்த்தார் உருவானது.
74
படிஸ்டா.
படிஸ்டாவிடம்
சதி
திட்டம்
புரட்சியின் வித்து – படிஸ்டாவின் இராணுவச் சதி
ப
டிஸ்டா தன்னுடைய சதி திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டு 1952 மார்ச் 10 அன்று அதிகாலையில் செயலில் இறங்கினார். இதற்கு முந்தைய நாளன்று கூடப் படிஸ்டா மட்டன்சாஸ் மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில்தான் ஈடுபட்டிருந்தார். ஆட்சியைக் கவிழ்க்கும் சதி திட்டத்துடன்தான் அவர் மட்டன்சாஸ் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட அறிந்திருக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிப் படிஸ்டா மார்ச் 10 நள்ளிரவைத் தாண்டிய விடியற்காலை ப�ொழுதில் மூன்று இராணுவ வாகனங்களில் பத்து இராணுவ அதிகாரிகளுடன் கேம்ப் க�ொலம்பியா ப�ோய்ச் சேர்ந்தார். அந்த இடத்தில்தான் கியூப இராணுவத்தின் பெரும்பகுதி படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே இராணுவக் கேம்பில் இருந்துதான் படிஸ்டா செர்ஜன்ட்ஸ் ரிவ�ோல்டை வழி நடத்தியது. அதே முன் அனுபவத்துடன் இப்போதும் செயல்பட்டார். அந்த இராணுவத் தளத்திலிருந்த நான்கு பட்டாலியன்களின் கமாண்டிங் ப�ொறுப்பும் படிஸ்டாவுடன் வந்திருந்த இராணுவ அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது. வளாகத்திற்குள் இருந்த உயர் இராணுவ அதிகாரிகளின் வீடுகள் அனைத்தும் சுற்றி வளைக்கப்பட்டு அதிகாலை சுகானுபவத் தூக்கத்தில் இருந்த அதிகாரம் பிடுங்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நடவடிக்கை முடிந்ததும் லா கபானா க�ோட்டைக்குத் தகவல் ச�ொல்லப்பட்டது. 75
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ஹவானா துறைமுகத்தில் இருந்த அது நாட்டின் முக்கியக் கடற்படை தளம். அந்தத் தளத்தில் இருந்த படிஸ்டாவின் கைகூலிகள் அதைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்தார்கள். ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள். படிஸ்டாவின் கூட்டாளியான ப�ோலீஸ் லெய்டுனன்ட் சாலாஸ் மத்தியத் த�ொலைபேசி அலுவலகத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்தார். அவருடைய ஆட்கள் அனைத்து முக்கியத் த�ொலைபேசி எண்களையும் ஒட்டுகேட்கத் த�ொடங்கினார்கள். அடுத்த ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே இராணுவமும் ப�ோலீசும் நாட்டின் முக்கியப் பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் வான�ொலி நிலையங்களுக்குள் நுழைந்து தங்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்க் க�ொண்டுவந்தது. அதி முக்கியக் அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய கட்சிகளின் அலுவலகங்களுக்கும் இதே கதிதான். கதவுகள் இழுத்து மூடப்பட்டுச் சீல் வைக்காத குறையாக மூட்டப்பட்டன. இவைகள் அனைத்தும் விடிவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாக நடந்தேறி விட்டது. படிஸ்டாவின் திட்டம் அவ்வளவு துல்லியமாக இருந்தது. துல்லியமாக இருந்த அந்தத் திட்டத்தை அவருடைய கை கூலிகள் படு விரைவாக நடைமுறையில் செய்து முடித்தார்கள். முந்தைய நாள் இரவு குடியரசு நாட்டில் தூங்கப்போன கியூபர்கள் அடுத்த நாள் விடியற்காலையில் இராணுவச் சதிக்கு உள்ளான ஒரு நாட்டில் கண் விழித்தார்கள். கியூபாவின் முக்கிய நகரங்களில் எங்குத் திரும்பினாலும் இராணுவம் மற்றும் ப�ோலீசின் தலைகளே தென்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ப�ோராட்டக்காரர்கள் அனைவரும் முதல் நாளே அடையாளம் காணப்பட்டுப் பட்டியலிடப்பட்டுவிட்டார்கள். அவர் அனைவரும் விடிந்தும் விடியாத காலைப் ப�ொழுதில் கைது செய்யப்பட்டுச் சிறைக்குக் க�ொண்டு செல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துக�ொள்ளவே பல மணி நேரங்கள் பிடித்தது. ஜனாதிபதியும் அவருடைய மந்திரி சபை சகாக்கள் மாத்திரமே கைதி செய்யப்படாமல் 76
நவீனா அலெக்சாண்டர்
விட்டுவைக்கப்பட்டிருந்தார்கள். இவைகளை எல்லாம் முடித்துக்கொண்டு கமுக்கமாக அதைச் செயல்படுத்தவேண்டும் என்பது திட்டம். ஆனால் அந்தத் திட்டம் எதிர்பாராத விதமாக வெளியில் கசிந்துவிட்டது. அதாவது படிஸ்டாவின் ஆட்கள் மூலம் தான் கைது செய்யப்படப்போகிற�ோம் என்கிற செய்தி ஜனாதிபதி பிரைய�ோவிற்கு முன்பே தெரிந்துவிட்டது. கேம்ப் க�ொலம்பியாவில் இருந்த இராணுவ ஜெனரல்கள் கைது செய்யப்பட்டப�ோது ஜெனரல் கேப்ரிராவின் மனைவி யாருக்கும் தெரியாமல் இந்த இராணுவச் சதி திட்டத்தைக் குறித்து அவருடைய மகளுக்குத் த�ொலைபேசியில் தெரியப்படுத்திவிட்டார். அவருடைய மகள், அவளுடைய நண்பருக்குச் ச�ொல்ல அவர் ஜனாதிபதியின் மாளிகைக்கு இந்த விசயத்தைத் த�ொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டார். அதிகாலை உறக்கத்தில் இருந்த ஜனாதிபதியை உலுக்கி எழுப்பி இந்தச் செய்தி ச�ொல்லப்பட்டது. அரக்கப்பரக்க ஜனாதிபதி மாளிகைக்கு ஓடிய பிரைய�ோ அந்த நேரத்தில் அவசர அவசரமாகத் தனது மந்திரி சபையைக் கூட்டினார். சபை இராணுவத்தில் தங்களுக்குக் க�ொஞ்ச நஞ்ச ஆதரவு இருக்குமா என்று பார்க்கத் தங்களுக்குத் தெரிந்த வழிகளின் மூலம் முயற்ச்சி செய்தார்கள். மட்டன்சாஸ் மாகாணத்தின் மத்தியப் பகுதியில் இருந்த இராணுவக் கேந்திரமும் லாஸ் வில்லாசில் இருந்த இராணுவக் கேந்திரமும் ஜனாதிபதியின் கட்டளைக்குத் தாங்கள் கட்டுப்படுவதாகச் செய்திகள் அனுப்பின. ஜனாதிபதி இராணுவத்திற்குள்ளேயே குறுக்குசால் ஓட்ட முயற்ச்சி செய்வதைச் சாலாஸ் படிஸ்டாவிற்கு தெரியப்படுத்தினார். உடனே படிஸ்டா ஒரு சிறு படையை ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பிவைத்தார். அப்போதைக்குக் கைது செய்யாமல் மாளிகைக்குள்ளேயே ஜனாதிபதியைக் காவலில் வைப்பது திட்டம். அடுத்த சில மணி நேரங்களில் பீரங்கி படை ஒன்றும் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தால�ோ பீரங்கிப் படை திரும்ப அழைக்கப்பட்டுவிட்டது. ஹவானா பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் எஃப்.ஈ.யூ தலைவர் அல்வேர�ோ பார்பாவின் தலைமையில் ஜனாதிபதி 77
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பிரைய�ோவை சந்தித்து எப்படியாவது படிஸ்டாவின் இந்த இராணுவச் சதியைத் தடுத்து நிறுத்தும்படி கேட்டார்கள். அதற்கான வழி தெரிந்தால் நான் ஏன் சும்மாய் இருக்கப்போகிறேன் என்று புலம்பாத குறையாக ஜனாதிபதி அவர்களிடம் புலம்பத் தங்களுக்கு ஆயுதங்கள் தந்தால் ஜனாதிபதிக்குத் துணையாகப் படிஸ்டாவை எதிர்த்துத் தாங்கள் ப�ோராடத் தயார் என்று ச�ொன்னார்கள். பிரைய�ோ பல்கலைக்கழகத்திற்கு இதற்கான ஆயுதங்களை அனுப்பிவைப்பதாகச் ச�ொன்னார். அதைக் கேட்டு மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி ஆயுதங்களுக்காகக் காத்திருக்க அது இறுதிவரை வரவேயில்லை. தங்களின் கட்டளைக்குக் கீழ்படிவதாகச் ச�ொன்ன இராணுவக் கேந்திரம் ந�ோக்கி ஜனாதிபதி பிரைய�ோவும் அவருடைய மந்திரிகளும் தங்களின் அடையாளங்களை மறைத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். ஆனால் அதற்கு முன்பே அந்தக் கேந்திரத்தின் கமாண்டரைப் படிஸ்டாவின் ஆட்கள் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டிருந்தார்கள். பாதி வழியில் இந்தச் சங்கதி தெரியவர ஜனாதிபதியும் அவருடைய ஆட்களும் கமாகுவே கேந்திரத்திற்கு ஓடினார்கள். அங்கேயும் படிஸ்டாவின் ஆட்கள் கைவரிசையைக் காட்டிவிட்டிருந்தார்கள். தப்பி ஓடுவதற்கு வழியில்லாமல் சுற்றி வளைக்கப்பட்டுவிட்ட ஜனாதிபதி திரும்ப ஹவானாவிற்கே வந்து மெக்சிக்கோவின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். ப�ொழுது விடிய விடிய அரையும் குறையுமாக மேலிடத்தில் நடப்பவைகளை கேள்விப்படத் த�ொடங்கிய த�ொழிலாளர் சங்கங்கள் படிஸ்டாவின் சதிக்கு எதிராகப் ப�ோராட்டங்களை அறிவித்தார்கள். ஆனால் அனைத்துத் தகவல் த�ொடர்பு வழிகளும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் எங்கு யார் ப�ோராட்டத்திற்கு ஆதரவாகக் கூடுகிறார்கள் என்பதை ஒருங்கிணைக்க முடியாமல் அனைத்துப் ப�ோராட்டங்களும் அறிவிக்கப்பட்ட அடுத்த ந�ொடியே ப�ொட்டிக்குள்ளும் ப�ோய்விட்டது. பெரும்பான்மையான ஹவானாவாசிகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு கச்சிதமாக எத்தகைய ஆர்ப்பாட்டமும் பரபரப்பும் இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார் படிஸ்டா. 78
நவீனா அலெக்சாண்டர்
பிடல் காஸ்டிர�ோவும் அதிகாலை தூக்கத்தில்தான் இருந்தார். அவருக்கும் நடந்துக�ொண்டிருக்கும் விசயங்கள் தெரியாது. ரெனே ரெட்ரிகியூஸ் என்கிற நண்பர் அவருக்குத் த�ொலைபேசியில் இந்த விசயத்தைச் ச�ொன்னார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்டார் பிடல். நிச்சயம் கைது பட்டியலில் அவருடைய பெயரும் இருக்கும் என்பதை ஊகித்தவர் அப்போதைக்கு அடையாளத்தை மறைத்துக்கொள்ளும்படி தயாராகி அவருடைய ஒன்றுவிட்ட சக�ோதரி லிடியாவின் பிளாட்டிற்குச் சென்றுவிட்டார். ஓரிடத்தில் தங்காமல் முடிந்தவரை இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பது என்று முடிவெடுத்தார். லிடியாவின் சதியிலிருந்த ரெடியைப் பல்கலைக்கழகத்திலும் ஆர்தோட�ோக்சாஸ் கட்சி அலுவலகத்திலும் நிலைமை எப்படி இருக்கிறது பார்த்துவர அனுப்பினார். அன்று மதியம் மற்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு வான�ொலிகள் அனைத்தும் படிஸ்டாவின் புதிய இராணுவ ஆட்சியைக் குறித்து அறிவித்தன. முந்தைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களையும் அதிகார முறைகேடுகளையும் முடிவிற்குக் க�ொண்டுவரவே தான் இப்படியான ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்ததாகத் தன்னுடைய இராணுவச் சதிக்குக் குழந்தைகளும் கூட நம்பாத ஒரு காரணத்தைச் ச�ொன்னார் படிஸ்டா. அதே வருடம் நவம்பரில் ஜனநாயகத் தேர்தல்களைத் தானே முன் நின்று நடத்துவதாகச் ச�ொன்னார். லிடியாவின் பிளாட்டிலிருந்து அன்டின�ோ ஹ�ோட்டல் அறைக்கு மாறினார் பிடல். அடுத்த நாள் காலை அவரும் ரெனேவும் பேருந்து பிடித்துப் புறநகர் பகுதியில் இருந்த ஆர்தோட�ோக்சாஸ் கட்சி உறுப்பினர் ஈவா ஜிம்னேஸ் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கினார். அந்தச் சமயத்தில் படிஸ்டாவின் இராணுவச் சதியைக் கண்டித்து ‘ரிவலியுசிய�ோன் ந�ோ சர்பாச�ோ’ என்கிற அறிக்கையை எழுதி அதை ரெனே மற்றும் ஈவாவிடம் க�ொடுத்து அலெர்டா பத்திரிக்கை அலுவலகத்தில் சேர்க்கச் ச�ொன்னார். ஆனால் அலெர்டா அந்தக் கண்டன அறிக்கையைப் பிரசூரிக்க முடியாது என்று ச�ொல்லிவிட்டது. பிரசூரித்தால் பத்திரிக்கையை ம�ொத்தமாக இழுத்து மூடும்படியாகிவிடும் என்பதால். எந்தப் பத்திரிக்கையும் அதைப் பிரசூரிக்க 79
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
முன்வரவில்லை. பிடல் அந்த அறிக்கையை மிம�ோகிராப்பில் (மிம�ோகிராப் என்பது இன்றைய செராக்ஸ் மெசின் ப�ோன்றது) 500 பிரதிகளாக எடுத்துக்கொண்டார். இதில் ரவுலும், நிக்கோ ல�ோப்பசும் அவருக்கு உதவியாக இருந்தார்கள். அடுத்த ஆறு நாட்களில் சிபாசின் கல்லறையில் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியின் கூட்டம் கூட இருந்தது. அதற்கு வருபவர்களிடம் இந்த அறிக்கையைக் க�ொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அதே ப�ோல அன்றைக்கு அவருடைய அறிக்கையை வந்திருந்தவர்களிடம் விநிய�ோகம் செய்துவிட்டு ஆர்த்தோட�ோக்சாஸ் கட்சி படிஸ்டாவின் இந்தச் சதியை எதிர்த்துப் ப�ோராட வேண்டும் என்று பேசினார் பிடல். ஆனால் ஆர்த்தோட�ோக்சாஸ் கட்சி தலைமை இந்த விசயத்தில் ப�ொறுத்துப் ப�ோவதே அனைவருக்கும் நல்லது என்று ச�ொல்லிவிடப் பிடல் க�ொந்தளித்துவிட்டார். ஆனால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதே எதார்த்த நிலையாக இருந்தது. சதியின் மூலம் ஆட்சியைப் பிடித்த அடுத்த ஒரு வாரத்திற்கெல்லாம் அனைத்துத் தரப்பிலிருந்தும் தனக்குத் தேவையான ஆதரவை வலிந்தும் மிக எளிதாகவும் பெற்றுக்கொண்டார் படிஸ்டா. மெக்சிக்கோ தூதரகம் முன்னாள் ஜனாதிபதி கியூபாவைவிட்டு வெளியேறப் படிஸ்டா அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. படிஸ்டா அதற்கு உடனடியாகச் சம்மதித்துவிட்டார். மாட்டேன் என்று அடம் பிடித்துத் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக மெக்சிக்கோவின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. பிரைய�ோசுடன் சேர்ந்து அவருடைய கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கியூபாவை விட்டு வெளியேறிவிட்டார்கள். ஆர்த்தோட�ோக்சாஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மாத்திரம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அதனால் அவர்கள் த�ொடர்ச்சியாக எஸ்.ஐ.எம்மின் (படிஸ்டா இராணுவத்தின் உளவு அமைப்பு) மிரட்டல்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. கியூபாவின் மாகாணக் கவர்னர்கள், மேயர்கள், பெரும் த�ொழிலதிபர்கள், செல்வாக்க பெற்ற மனிதர்கள் என்று பலரும் த�ொடர்ச்சியாக வான�ொலி நிகழ்ச்சிகளில் வந்து 80
நவீனா அலெக்சாண்டர்
படிஸ்டா அரசாங்கத்திற்கான தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டார்கள். அரசாங்க இயந்திரத்தின் ப�ொது நிறுவனங்களின் தலைவர்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்தார்கள். படிஸ்டாவின் அரசை எதிர்த்தது ஆர்த்தோட�ோக்சாஸ் கட்சியில் இருந்த ஒரு சில தலைவர்களும் பிடலும் மாத்திரமே. பிடல் க�ோர்ட் ஆ அர்ஜன்சிசில் படிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராகக் கிரிமினல் வழக்கு த�ொடர்ந்தார். படிஸ்டாவின் செயலுக்கு நூறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை தர முடியும் என்று வாதிட்டார். ஆனால் அதற்கெல்லாம் படிஸ்டா அரசு மசியக் கூட இல்லை. கிரிமினல் நடவடிக்கையின் மூலம் ஆட்சியைப் பிடித்த படிஸ்டாவிற்கு அவருடைய ஆட்சிக்கு எதிராக நடைபெறும் புரட்சிகரப் ப�ோராட்டங்களைத் தண்டிக்கவும் கண்டிக்கவும் எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை என்று பேசினார். பன்னாட்டு அளவில் வெனிசுலா, நிக்காராகுவா மற்றும் ட�ொமினியன் ரிபபிலிக் நாட்டு அதிபர்கள் உடனடியாகப் படிஸ்டாவின் அரசை அங்கீகரித்துவிட்டார்கள். அதைத் த�ொடர்ந்து இலத்தின் அமெரிக்க நாடுகளும் ஐர�ோப்பிய நாடுகளும் படிஸ்டாவின் அரசை ஏற்றுக்கொள்ளத் த�ொடங்கின. அமெரிக்க மட்டும் படிஸ்டாவின் எண்ணப் ப�ோக்கை அறிந்துக�ொள்ள வேண்டிப் ப�ொறுமையாக இருந்தது. படிஸ்டா நேரடியாகவே அமெரிக்காவிற்குத் தன்னுடைய பணிவைக் காட்டிக்கொண்டார். அமெரிக்கா சர்வச் சுதந்திரமாகக் கியூபாவிற்குள் புகுந்து விளையாடலாம் என்று எழுதிக் க�ொடுக்காத குறையாகத் தன் பணிவைக் காட்டினார். இது ஒன்றுதானே அமெரிக்காவும் எதிர்பார்ப்பது. மே 27 அன்று அமெரிக்காவும் படிஸ்டாவின் அரசை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. இதற்கு மேல் என்ன வேண்டும் படிஸ்டாவிற்கு! ப�ோராடுவதற்கான அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்ட பிறகு பிடல் அந்த முடிவை எடுத்தார். பூனையின் தப்பிக்கும் உரிமையை எல்லாப் பக்கமிருந்து தடுத்துவிட்டு அதை நெருங்கினால் அது நம் மீது பாயத்தானே செய்யும். அதைத்தான் பிடலும் செய்தார். நிலைநாட்டப்பட்ட சட்டத்தின் வழி அவர் சதியை எதிர்த்துப் ப�ோராடியப�ோது அதிகார வர்க்கம் சட்டத்தை இழுத்துப் பூட்டி வைத்துவிட்டதால் வேறு 81
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
வார்த்தைகளில் பேசினால்தான் நியாயம் கிடைக்கும் என்கிற நிலைக்கு அவர்களே பிடலை தள்ளிக்கொண்டுப�ோனார்கள். இனிப் புரட்சி ஒன்றினால் மாத்திரமே படிஸ்டாவின் ஆட்சியை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் என்று முடிவானதும் பிடல் தன்னுடைய புரட்சிக்கான இயக்கத்தைக் குறித்துத் திட்டம் தயார் செய்யத் த�ொடங்கினார். புயலுக்கு முன்பான அமைதி நாட்கள் தீ மூவ்மென்ட் – புரட்சிகர நாட்கள் - I மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஒரு அரசை அவர்களின் விருப்பத்திற்கு எதிராகச் சதி செய்து அவர்களிடமிருந்து திருடிக்கொண்ட படிஸ்டாவை புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து கவிழ்பதில் எத்தகைய தார்மீகத் தவறும் இருக்க முடியாது என்று திடமாக நம்பினார் பிடல். புரட்சி என்கிற பெயரில் உணர்ச்சி க�ொந்தளிப்பில் தத்துபித்து என்று எதையும் செய்ய விரும்பவில்லை அவர். தன்னுடைய புரட்சிக்குத் தேவையான இயக்கத்தை முதலில் கட்டியெழுப்ப முடிவு செய்தார். அந்த இயக்கத்திற்கு இரண்டு முகங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். ஒன்று ப�ொது வாழ்க்கை முகம் க�ொண்டது இரண்டாவது இராணுவ முகம் க�ொண்டது. ப�ொது வாழ்க்கை முகம், படிஸ்டாவின் அரசக்கு எதிராக வழமையான ப�ோராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பத்திரிக்கைகள் மற்றும் வான�ொலி நிகழ்ச்சிகளை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இராணுவ முகம், ஆயுதப் ப�ோராட்டத்திற்கான ஆட்களைச் சேர்ப்பது, பயிற்ச்சி அளிப்பது, தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரிப்பது ப�ோன்ற விசயங்களைச் செய்ய வேண்டும். இந்த முகம் மிக மிக இரகசியமானதாக வைக்கப்படவேண்டும். இருமுகம் க�ொண்ட இந்த அமைப்பிற்கு அவர் வைத்த பெயர் தி மூவ்மென்ட். இதன் முழுக் கட்டுப்பாடும் பிடலிடமே இருந்தது. அவருக்குத் தெரியாமல் இந்த இயக்கத்தில் ஒரு தூசும் பறந்துவிட முடியாது. இந்த இயக்கம் செல் வடிவத்தில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு செல்லிலும் பத்து ஆட்கள் இருப்பார்கள். ஒரு செல்லின் இருப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து மற்ற செல்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த அனைத்துச் செல்களும் ஒரு தலைமையின் 82
நவீனா அலெக்சாண்டர்
கீழ் வழி நடத்தப்படும். ஹவானாவில் தனது பழைய ஆர்தோட�ோக்சாஸ் கட்சி நண்பர்களைச் சந்தித்த ப�ோதே அவருக்கு இப்படியான ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கான எண்ணம் த�ோன்றியது. அந்த நண்பர்கள் அனைவரும் படிஸ்டாவின் அரசிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டும் என்கிற துடிப்பில் இருந்தவர்கள். அதில் முக்கியமானவர்கள் இருபத்திநான்கு வயதான ஏபேல் சான்டாமரியா மற்றும் அவருடைய சக�ோதரி ஹைடி சான்டாமரியா. இவர்களின் சிறிய வீடே தி மூவ்மென்ட் இயக்கத்தின் அலுவலகமாக மாறிப்போனது. பிடல் வெகு அரிதாக நம்பிய ஒரு சில ஆட்களில் ஏபேல் சான்டாமரியாவும் ஒருவர். பிடலின் வலது கரம் ப�ோல இருந்தவர். ஏபேல் சான்டாமரியாவை பிடலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் ஜீசஸ் ம�ோன்டேன். ஜெனரல் ம�ோட்டார்ஸ் கம்பெனியில் ஜூனியர் மேனேஜராக இருந்தவர் ஜீசஸ் ம�ோன்டேன். தேர்தல் பிரச்சாரத்திற்குத் தேவையான காரைப் பிடல் தேடியப�ோது அவருக்கு அறிமுகமானவர் ஜீசஸ் ம�ோன்டேன். இவரும் தி மூவ்மென்ட் உறுப்பினர்தான். இயக்கத்திற்குத் தேவையான கார்களை இரகசியமாக ஏற்பாடு செய்வது இவருடைய வேலை. தி மூவ்மென்ட் இயக்கத்தில் தெரிந்தவர்களை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொள்ளவில்லை பிடல். இயக்கத்தில் சேரக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. அனைத்தும் பிடல் தனக்குத்தானே வகுத்துக்கொண்டதும் கூட. இரகசியம் காப்பதும் கண்மூடித்தனமான அர்ப்பணிப்பும் முக்கிய விசயங்கள். அடுத்த முக்கிய விசயம் குடியில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கவேண்டும். குறைந்தபட்சம் படிஸ்டாவின் ஆட்சியைத் தூக்கியடிக்கும் வரையாவது. அடுத்த முக்கிய விசயம் ஒழுக்கம். அடுத்த முக்கிய விசயம் காலம் தவறாமை. இவைகளை யார் மீறினாலும் ஏன் பிடலே மீறினாலும் அவர்கள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவார்கள் என்பது பிடல் இந்த இயக்கத்திற்காக வகுத்து ஒழுக்க விதிகள். எந்த நிலையிலும் இயக்கம் குறித்த இரகசியம் காத்தல் என்பது அதி முக்கியமான விதியாக முன் நிறுத்தப்பட்டது. இந்த இயக்கத்தின் கூட்டங்களில் 83
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
கூட மிகத் மிக தாழ்ந்த குரலிலேயே பிடல் பேசியிருக்கிறார். சுவர்களுக்குக் கூடக் காதுகள் இருக்கும் என்பது பிடலின் அனுபவம். அடுத்து இயக்கத்திற்குள் வந்தவர் மெல்பா ஹெர்நான்டேஸ். இவர் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர். இவர் அவருடைய நம்பகமான நண்பரான ராவுள் க�ோமெசை இயக்கத்திற்குள் க�ொண்டுவந்தார். ம�ோன்டேன், அவருடைய நெருங்கிய நண்பரான லூயிஸ் சான்டாவை இணைத்துவிட்டார். பிடல், நிக்கோ ல�ோப்பசை உள்ளே க�ொண்டுவந்தார். இவர்களே தி மூவ்மென்ட் இயக்கத்தின் இதயம் ப�ோன்றவர்கள். ஏபேல் சான்டாமரியாவும், ஹைடி சான்டாமரியாவும், மெல்பாவும் பிடலுக்கு அடுத்த நிலை தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பிடலின் கையிலேயே இருந்தது. சான்டாமரியாவின் வீடு தவிர மெல்பாவின் வீடும் பிடலின் ஒன்றுவிட்ட சக�ோதரி லிடியாவின் வீடும் இயக்கத் தலைவர்கள் இரகசியமாகச் சந்தித்துப் பேசுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. பிற்பாடு மால்சிய�ோன் பகுதியில் உள்ளடங்கியிருந்த ஒரு அலுவலகம் இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜூலை 1952-க்கு பிறகு இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பணியை வேகப்படுத்தினார் பிடல். ஒரு வருட முடிவிற்குள்ளாக 1200 நம்பகமான உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டிருந்தார். செல்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்திருந்தது. தலைமை பதவியின் எண்ணிக்கையும் நான்கிலிருந்து பத்தாக உயர்த்தப்பட்டிருந்தது. வழமையான ப�ோராட்டங்களை முன்னெடுக்கும் பிரிவிற்கு ஆறு தலைவர்களும், இராணுவப் பிரிவிற்கு ஆறு தலைவர்களும் இருந்தார்கள். பிடலும் ஏபேல் சான்டாமரியாவும் இந்த இரண்டு பிரிவிற்கும் ப�ொதுவான தலைவர்களாக இருந்தார்கள். நம்பகமான சாமானியர்களையே பிடல் இயக்கத்திற்குள் க�ொண்டுவந்தார். நடைபாதை வியாபாரி, ஓட்டுனர், கடை உதவியாளர், சப்ளையர், மெக்கானிக் ப�ோன்றவர்களே அதிகம் இருந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் ஹவானாவை சுற்றியிருந்த சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பிடலின் பேச்சு திறமையால் அவருடைய அரசியில் க�ொள்கைகளைப் 84
நவீனா அலெக்சாண்டர்
பின்பற்றத் த�ொடங்கியவர்கள். கண்மூடித்தனமாக. இந்த இயக்கத்தில் இருந்த ஒரே கம்யூனிஸ்ட் ரவுல் காஸ்டிர�ோ. ரவுல் 1953 வசந்தக் காலத்தில் வியன்னாவில் நடந்த கம்யூனிஸ்ட் அமைதி மாநாட்டில் கலந்துக�ொண்டுவிட்டுப் பிறகு கிழக்கு ஐர�ோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவிட்டுக் கியூபா திரும்பியிருந்தார். நாடு திரும்பியதும் கம்யூனிஸ்ட் யூத் மூவ்மென்டில் சேர விண்ணப்பித்திருந்தார். உறுப்பினர் சேர்ப்பு ஒருபுறம் நடைபெறும்போதே இரகசியச் செய்தித்தாள் ஒன்றையும் நடத்திக்கொண்டிருந்தார் பிடல். அதன் பெயர் சான் ல�ோஸ் மிஸ்மோஸ். கையால் இயக்கக் கூடிய பழைய அச்சு இயந்திரம் ஒன்று இதற்காக வாங்கப்பட்டிருந்தது. இதில் அலெக்ஜாண்டர�ோ என்கிற புனைபெயரில் படிஸ்டா அரசாங்கத்திற்கு எதிரான கட்டுரைகளை எழுதினார் பிடல். சான் ல�ோஸ் மிஸ்மோஸ் என்கிற பெயரில் பிடலுக்கு திருப்தி இல்லாததால் க�ோமேசுடன் சேர்ந்து எல் அக்யுசேடர் என்கிற பத்திரிக்கையைத் த�ொடங்கினார். பிறகு இதுவே தி மூவ்மென்டின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையாகிப்போனது. சான் ல�ோஸ் மிஸ்மோஸ் கைவிடப்பட்டது. இயக்கத்திற்கு அடுத்து இரகசிய வான�ொலி ஒளிபரப்பு வசதியைக் க�ொண்டுவந்தார் பிடல். டாக்டர் மரிய�ோ மூன�ோஸ் சென்டிரல் கியூபாவில் இருந்த க�ோல�ோன் நகரைச் சேர்ந்தவர். புரட்சிகரச் சிந்தனை க�ொண்டவர். இவர் மருத்துவர் என்றாலும் வான�ொலி த�ொழில் நுட்பத்தில் ஆர்வமும் ஆளுமையும் க�ொண்டவர். இரண்டு எளிய டிரான்ஸ்மிட்டர்களை வைத்து ஒரு ஒலிபரப்பு நிலையத்தை உருவாக்கினார். அதன் மூலம் தி மூவ்மென்டின் செய்திகள் ஒலிபரப்பப்பட்டது. பிடல் ஒவ்வொரு அடியிலும் மிக இரகசியமாக இந்த இயக்கத்தைக் கட்டமைத்துக் க�ொண்டு வந்தப�ோதும் எஸ்.ஐ.எம்-ன் ஆட்கள் தி மூவ்மென்டில் ஊடுருவி இருந்தார்கள். இது ஒரு சம்பவத்தின் மூலமே பிடலுக்கு தெரியவந்தது. சிபாசின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு 1952 ஆகஸ்ட் 16 அன்று ஏற்பாடாகி இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு வரும் ப�ொது மக்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு விநிய�ோகம் செய்வதற்காக ஆயிரக் கணக்கில் எல் அக்யுசேடர் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டிருந்தது. 85
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு முந்தைய நாள் இரவு மூவ்மென்ட் உறுப்பினர் க�ோன்சாலஸ் வீட்டிலிருந்த அச்சு இயந்திரம் அடித்து ந�ொறுக்கப்பட்டது. மறுநாள் வினிய�ோகத்திற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த எல் அக்யுசேடர் பத்திரிக்கைகளும் கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. அடுத்த நாள் சிபாஸ் கல்லறைக்கு எல் அக்யுசேடர் பத்திரிக்கையுடன் வந்திருந்த மூவ்மென்டின் ஒரு சில தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் மெல்பாவும் ஒருவர். அவரை அன்றைய தினமே விடுதலையும் செய்துவிட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அடுத்த நாள் பிடலும் மெல்பாவும் வக்கீல்கள் என்கிற முறையில் காவல் நிலையம் சென்றார்கள். அங்கே ம�ோன்டேன் மற்றும் ரவுல் க�ோமேசையும் கைதிகளாகப் பார்த்ததும் பிடலுக்கு அதிர்ச்சி. காரணம் அவர்களுக்கும் சிபாசின் கல்லறை நிகழ்ச்சிக்கும் எத்தகைய த�ொடர்பும் இல்லாத ப�ோதும் அவர்களும் கைது செய்யப்பட்டிருந்தது பிடலுக்கு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது. ஒரு சில நாட்களில் வான�ொலி நிலையமும் கண்டுபிடிக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு சில நாட்களில் எல் அக்யுசேடர் பத்திரிக்கை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டுவிட்டார்கள். ஆனால் பிடலுக்கு ஏற்பட்ட சந்தேகம் மாத்திரம் குறையவேயில்லை. இந்தச் சம்பவத்திற்கு ஒரு சில நாள் கழித்துப் பிடலும் ஏபேல் சான்டாமரியாவும் இரவில் சாலையில் சென்றுக�ொண்டிருந்தப�ோது ப�ோலிஸ் பேட்டிர�ோல் அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்குக் க�ொண்டு சென்றது. அவர்களைச் ச�ோதனை செய்த அவர்கள் பிறகு விட்டுவிட்டார்கள். இதன் பிறகு தி மூவ்மென்டின் உறுப்பினர் சேர்க்கையில் அதிகக் கெடுபிடிகளையும் ச�ோதனைகளையும் செய்யத் த�ொடங்கினார் பிடல். இந்தக் கைது நடவடிக்கைகளில் அவருக்கு இருந்த ஒரே திருப்தி இயக்கத்தின் இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் எத்தகைய காவல் துறை ச�ோதனைகளுக்கும் உள்ளாகாததே. இயக்கத்திற்குள் ஊடுருவி இருந்தவர்களால் இராணுவப் பிரிவைக் குறித்து அறிந்துக�ொள்ள முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது அவருக்கு. இராணுவப் பிரிவில் உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி க�ொடுத்து 86
நவீனா அலெக்சாண்டர்
வந்தது பெட்ரோ மிரட். இவர் ஒரு ப�ொறியியல் மாணவர். துப்பாக்கிகளைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர். இயக்கத்தில் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே இவருடைய திறமையை அறிந்துக�ொண்ட பிடல் இவரை இராணுவப் பிரிவின் தலைமைக் குழுவில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். ஆயுதப் பயிற்ச்சி 1952 இலையுதிர் காலத்தில் நடந்தது. ஹவானாவிற்கு அருகில் இருந்த பண்ணை நிலங்களில் இது நடந்தது. துப்பாக்கி சூடு பயிற்சியை வெளிப்படையாகச் செய்ய முடியாத காரணத்தால் அதற்கு வேறு ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். இயக்கத்தின் உறுப்பினரான ஆஸ்கார் அல்கால்டே ப�ொருளாதார அமைச்சகத்தில் இளநிலை அதிகாரியாக இருந்த காரணத்தால் அவருக்குத் துப்பாக்கி சூடு பயிற்ச்சி கிளப்களில் அனுமதி உண்டு. அதில் அவர் துப்பாக்கிகளில் உண்மையான குண்டுகள் ப�ோட்டுச் சுட்டு பழகியத�ோடு தன்னுடைய அனுமதி அட்டையைக் காட்டி இயக்கத்தில் இருந்து ஒவ்வொருவராக ஒவ்வொரு நாள் அந்தக் கிளபிற்கு அழைத்துச் சென்று துப்பாக்கி சுடும் பயிற்ச்சி அளித்தார். உறுப்பினர்களுக்குள் சங்கேத ம�ொழியில் பேசிக் க�ொள்வதற்கான பயிற்சியை டசன்டேவும் டிச�ோலும் பார்த்துக்கொண்டார்கள். பிடலுக்கும் மற்ற இயக்கத் தலைவர்களுக்கும் இடையில் செய்திகளைக் க�ொண்டு செல்ல நிக்கோ ல�ோப்பஸ் நியமிக்கப்பட்டார். தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவதில் மட்டும் பிடலுக்கு பெரும் பிரச்சனை இருந்தது. அவர்களிடம் இருந்ததெல்லாம் வேட்டைக்குப் பயன்படக் கூடிய விளையாட்டு இரகத் துப்பாக்கிகள் மாத்திரமே. ஆயுதங்களை வாங்கத் தேவையான பணமும் பிரச்சனையாக இருந்தது. பிடல் அவருடைய அண்ணன் ரம�ோனிடம் 140 பிச�ோக்களை கடனாக வாங்கிவந்தார். சில உறுப்பினர்கள் வீட்டிலிருந்த மரச் சாமான்களை விற்றுச் சிறிது பணம் திரட்டிக்கொடுத்தார்கள். ம�ோன்டேன் ஜெனரல் ம�ோட்டார்ஸ் வேலையை விட்டப�ோது அந்த நிறுவனம் அவருக்கு வழங்கிய 4,000 பிச�ோக்களையும் அவர் ஆயுதம் வாங்கக் க�ொடுத்துவிட்டார். ஒருமுறை ஸ்பானிய ஆயுத வியாபாரி மூலமாக ஆயுதங்களை வாங்க அல்கால்டே சென்றிருந்தப�ோது அங்கே சந்தேகத்திற்கு இடமான ஆட்கள் நடமாடிக்கொண்டிருந்ததால் அது எஸ்.ஐ.எம்-ன் 87
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சூழ்ச்சியாக இருக்கலாம் என்று பயந்து அவர் திரும்ப வந்துவிட்டார். தேவையான ஆயுதங்களை வாங்குவது இறுதிவரை இயக்கத்திற்கு ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்தது. இந்த நிலையில் ஜனவரி 1953-ல் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியுடன் தனக்கிருந்த அனைத்துத் த�ொடர்புகளையும் பிடல் முறித்துக்கொண்டார். அதற்குக் காரணம் படிஸ்டா அரசாங்கத்துடன் அனைத்துக் கட்சி உடன்பாடு மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ளலாம் என்கிற முடிவை ஆர்தோட�ோக்சாஸ் கட்சி எடுத்ததுதான். நம்மைப் படிஸ்டாவின் ஊழல் பணத்திற்கு விற்றுக்கொள்வதற்குச் சமம் இந்த முடிவு என்று கத்திவிட்டுக் கட்சி கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
88
திசை திருப்பலில் வெற்றி – புரட்சிகர நாட்கள் - II
தி
மூவ்மென்ட் இயக்கத்தைக் க�ொண்டு படிஸ்டாவின் அரசாங்கத்திற்கு எதிராகக் க�ொரில்லா தாக்குதல் முறையிலேயே புரட்சிகர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் பிடலின் அடிப்படையான திட்டம். பல்கலைக்கழகத்தில் அவர் மாணவராக இருந்த காலத்திலேயே ஊழல் ஆட்சிகளுக்கு எதிராகப் புரட்சிகர நடவடிக்கைகள் ஒன்றின் மூலமே தீர்வு காண முடியும் என்று ச�ொல்லியும் எழுதியும் வந்தவர் அவர். ஜனாதிபதி மாளிகையைப் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் க�ொண்டு வரக் கூடிய வாய்ப்பு இது என்கிற பின்புலத்திலேயே பல ப�ோராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். அவருடைய ஆஸ்தானத் தலைவரான சிபாசின் இறுதி ஊர்வலத்தைக் கூட இதற்கான வாய்ப்பாகப் பார்த்தார். ஆகப் படிஸ்டாவின் ஆட்சியைத் தூக்கியெறிய ஜனாதிபதி மாளிகையைத் தாக்கவேண்டும் என்பது அவர் மிக நன்றாக அறிந்த ஒன்று.
அப்படியிருக்கையில் அவர் ஏன் மான்கடா என்கிற இராணுவக் கேந்திரத்தைத் தாக்கத் திட்டம் ப�ோட்டார்? அதற்குக் காரணம் ஆயுதங்கள். அவருடைய ப�ோராட்டத்திற்கான ஆயுதங்களை வாங்குவது அவருக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆகையால் படிஸ்டாவின் இராணுவக் கேந்திரத்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து அவரையே தாக்கும் திட்டமாகத்தான் அவர் மான்கடா தாக்குதல் திட்டத்தை வகுத்தார். மான்கடா இராணுவக் கேந்திரத்தைத் திடீர்த் தாக்குதல் ஒன்றின் மூலம் தகர்த்துத் தங்கள் ப�ோராட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலைகளுக்குச் சென்று அங்கிருந்து க�ொரில்லா தாக்குதலை முன்னெடுக்கவேண்டும் என்பதே பிடலின் முழுமையான 89
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ப�ோராட்டத் திட்டம். இந்த முழுமையான திட்டத்தின் ஒரு பகுதியே மான்கடா தாக்குதலும் செஸ்பிடிஸ் இராணுவச் சாவடி தாக்குதலும். ஓரியண்ட் மாகாணத்தில் இருக்கும் சான்டியாக�ோ நகரில் இருந்தது மான்கடா இராணுவக் கேந்திரம். சான்டியாக�ோ நகரில் இருந்து அறுபது மைல் த�ொலைவில் இருந்த பையாம�ோ நகரில் இருந்தது செஸ்பிடிஸ் இராணுவச் சாவடி. ஜூன் மாதத்தில் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியைச் சேர்ந்த இராணுவ வரலாற்று பேராசிரியரான ப�ோர்டல் வில்லாவை அணுகிய பிடல் மான்கடா இராணுவக் கேந்திரத்தின் மீது திடீர்த் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்துக் கேட்டார். அந்தக் கேந்திரத்தில் இருக்கும் இராணுவ வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் தாக்குதல் வெற்றி பெறாது என்று ச�ொன்னார் ப�ோர்டல் வில்லா. பிடல் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மான்கடா கேந்திரத்தில் அதிகபட்சம் நானூறு வீரர்கள் இருக்கலாம் என்று கணித்தார் பிடல். அந்த நானூறு வீரர்களும் அதிகாலை நேரத்தில் தூக்கத்தில் இருக்கப்போவதால் சுதாரிப்பாக இருக்கமாட்டார்கள் என்றும் நினைத்தார். மேலும் ஜூலை 25 அன்று சான்டியாக�ோவில் செயின்ட் ஜேம்ஸ் திருவிழாவும் நடக்க இருந்தது. இந்த விழாவில் கலந்துக�ொள்ளப் பெரும்பாலான இராணுவ வீரர்கள் நகருக்குச் சென்றுவிடுவார்கள். திருவிழாவிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருபவர்களும் க�ொண்டாட்டக் குடிவெறியில் இருக்கப்போவதால் அவர்கள் கேந்திரத்திற்குள் வந்ததும் தூங்கப்போய்விடுவார்கள். ஆக அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் மிகக் குறைந்த இராணுவ வீரர்களே காவல் பணியில் இருக்கப்போகிறார்கள். ஜூலை 26 அதிகாலையில் கேந்திரத்திற்குள் சென்று அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் வீரர்களைத் துப்பாக்கி முனையில் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்துவிட்டு அபாயச் சங்கு பிடிப்பதற்குள் தேவையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் என்று தன் திட்டத்தை வகுத்தார் பிடல். மான்கடா தாக்குதல் நடக்கும்போதே இராணுவத்தைக் குழப்பவும் திசை திருப்பவும் செஸ்பிடிஸ் இராணுவச் சாவடியையும் ஒரே நேரத்தில் தாக்குவது என்றும் திட்டம் ப�ோட்டார். 90
நவீனா அலெக்சாண்டர்
தாக்குதல் திட்டம் த�ோல்வி அடையும் பட்சத்தில் அருகில் இருக்கும் சியாரா மீஸ்டிரா மலை பகுதிகளுக்குள் (கியூபாவின் மிக உயர்ந்த மலைத் த�ொடர்) சென்று மறைந்துக�ொண்டு தப்பித்துவிடலாம் என்ற மாற்று திட்டமும் வைத்திருந்தார். அப்படி மான்கடா தாக்குதல் வெற்றி பெரும் ப�ோது தாக்குதலுக்குப் பிறகு சான்டியாக�ோவில் இருக்கும் வான�ொலி நிலையங்கள் ஒன்றிலிருந்து தி மூவ்மென்டின் மெனிபெஸ்டோவை (இயக்கத்தில் இருந்த கவிஞர் ரவுல் க�ோமேஸ் எழுதியது) நாட்டு மக்களுக்கு வாசிப்பது என்றும் நினைத்தார். அந்த மெனிபெஸ்டோ ஆர்தோட�ோக்சியாஸ் கட்சியே ஜ�ோஸ் மார்டியின் அரசியல் வாரிசாக வரக் கூடிய தகுதி க�ொண்டது என்று ச�ொன்னது. பிடலின் இந்த விரிவான திட்டம் தி மூவ்மென்ட் இயக்கத்தில் இருந்த யாருக்கும் தெரியாது. ஒரு புரட்சிகரப் ப�ோராட்டம் நடக்க இருக்கிறது அதற்காகத்தான் தாங்கள் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிற�ோம் என்பது வரை மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தார்கள். இயக்கத்தின் மற்ற எந்தத் தலைவர்களிடமும் கூடப் பிடல் தன்னுடைய திட்டத்தைக் குறித்துப் பேசவில்லை. படிஸ்டாவின் இராணுவ உளவு இயக்கத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்கிற சந்தேகம் அவருக்குப் பலமாக இருந்ததால் அவர் இது பற்றி யாரிடமும் விரிவாகப் பேசவில்லை. தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் தாக்குதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்குச் ச�ொல்லப்பட்டது. சான்டியாக�ோவிற்கு பத்து மைல் த�ொலைவில் இருந்த சிபன�ோய் என்கிற இடத்தில் எர்னஸ்டோ டிச�ோல் மூலம் இரண்டு ஏக்கர் பண்ணை நிலத்தை வாடைக்குப் பிடிக்க ஏற்பாடு செய்தார் பிடல். அந்தப் பண்ணையில் டிச�ோல் க�ோழி பண்ணை அமைப்பதைப் ப�ோல ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிப்பார்வைக்கு அது க�ோழிப் பண்ணைப் ப�ோல இருந்தது ஆனால் அந்தப் பண்ணையில் தாக்குதலுக்குத் தேவையான கையிலிருந்த ஆயுதங்களையும் வீரர்கள் அணிந்துக�ொள்ள இருந்த இராணுவ உடைகளையும் பதுக்கிவைத்தார். நூறு இராணுவ உடைகள் கள்ளச் சந்தையில் வாங்கப்பட்டது. ஹைடி சான்டாமரியாவும் மெல்பாவும் இராணுவப் பேட்ஜ்களைத் தயார் செய்தார்கள். ரெனாட்டோ குயிட்டார்ட் உள்ளூரில் ஒரு ஆளைப் பிடித்து மான்கடா கேந்திரத்தின் வெளிப்புற அமைப்பு குறித்தும் வாயில் காவலர்களின் வேலை நேர 91
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
மாற்றம் குறித்தும் அவர்களின் நடமாட்டம் குறித்தும் தேவையான தகவல்களைத் தெரிந்துக�ொண்டார். மேலும் சான்டியாக�ோ மற்றும் பேய�ோமா பகுதியில் இருந்த விடுதிகளில் வீரர்களுக்கான தங்கும் அறைகளை ஏற்பாடு செய்தார் குயிட்டார்ட். இயக்கத்தின் தலைவர்களுக்கு ரெக்ஸ் ஹ�ோட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜூலை 16 அன்று ஏபேல் சான்டாமரியா சான்டாமரியாவிற்கு வந்து தலைமை ப�ொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தத் தாக்குதலுக்கு என்று அவருடன் சேர்த்து ம�ொத்தமாக 165 வீரர்களைத் தேர்ந்தெடுத்தார் பிடல். மான்கடா கேந்திரத்தைத் தாக்க அவருடன் சேர்த்து 138 வீரர்களும், செஸ்பிடிஸ் இராணுவச் சாவடியைத் தாக்க 27 வீரர்களும் என்று பிரிக்கப்பட்டார்கள். வீரர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள்தான். ஹவானா மற்றும் பினார் டெல் ரிய�ோ பகுதிகளைச் சேர்ந்தவர்கள். வீரர்களில் இரண்டு பேர் வக்கீல்கள் (பிடல் மற்றும் மெல்பா), ஒரு மருத்துவர், ஒரு பல் மருத்துவர், ஐந்து அக்கவுண்டன்ட்கள் மற்றும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் (ரவுல் காஸ்டிர�ோவுடன் சேர்த்து) இருந்தார்கள். மற்ற அனைவரும் சாதாரணத் த�ொழிலாளர்கள். பிடலைத் தவிர இந்த வீரர்கள் யாருக்கும் குழந்தைகள் கிடையாது. நம்பகமான அதே சமயத்தில் குழந்தைகள் இல்லாதவர்களாகப் பார்த்துத்தான் பிடல் தேர்ந்தெடுத்தார். காரணம் இந்தத் தாக்குதலின் ப�ோது உயிர் இழப்புகள் நிச்சயம் ஏற்படலாம் அந்த இழப்புகளின் வழி உருவாகக் கூடிய தகப்பனில்லாத பிள்ளைகளை உருவாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஜூலை 22 த�ொடங்கி ஜூலை 24 வரை பல கட்டங்களாக அனைத்து வீரர்களும் சான்டியாக�ோவிற்கும் பேய�ோமாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஜூலை 24 அன்று பிடல் சான்டியாக�ோவிற்கு கிளம்புவதாகத் திட்டம். அதற்கு முன்பு அவர் ஹவானாவில் பல காரியங்களை முடித்தார். நட்டி ரிவல்யுட்டாவிடம் தாக்குதலுக்குப் பிறகு சில முக்கியப் பத்திரிக்கைகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் விநிய�ோகிக்கும் படி மெனிபெஸ்டோக்களின் பிரதிகளைக் க�ொடுத்தார். இதைச் சரியாக ஜூலை 26 அதிகாலை 5 மணிக்குச் செய்யவேண்டும் என்றும் 92
நவீனா அலெக்சாண்டர்
அறிவுறுத்தினார். பிறகு ஹவானாவில் இருந்த ஒரு கம்யூனிசப் புத்தகக் கடைக்குச் சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி கார்லோஸ் ரபேல் ர�ொட்ரிகியூசை சந்தித்தார். கார்லோஸ் ரபேல் ர�ொட்ரிகியூஸ் கட்சியின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவர். படிஸ்டாவின் முந்தைய ஆட்சி காலத்தில் மினிஸ்டிரியில் இருந்தவர். பிடல் அவருடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அன்று மாலையே சான்டியாக�ோவிற்கு பயணமானார். முதலில் அவர் சென்றது பேய�ோமாவிற்கு. அங்கு ரவுல் மார்டினசை சந்தித்தார். ரவுல் மார்டினஸ் செஸ்பிடஸ் இராணுவச் சாவடியைத் தாக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட பிடல் நள்ளிரவு (ஜூலை 25) நேரத்தில் சிபன�ோய் பண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்றது காவலுக்கு இருந்த ம�ோன்டென். குழுவினரும் பிடலும் வந்த கார்கள் அனைத்தும் பண்ணைக்குள் மறைத்து வைக்கப்பட்டது. பண்ணை வீட்டின் ஒரே ஒரு அறையில் மட்டும் மின்சார விளக்கை எறியவிட்டு விட்டு மற்ற அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டுவிட்டன. பிடலும், குயிட்டார்டும், ஏபேல் சான்டாமரியாவும் வளையமாக உட்கார்ந்துக�ொண்டு தாக்குதல் திட்டம் குறித்துப் பேசத் த�ொடங்கினார்கள். அங்கிருந்த குழுவினர்களுக்கு அப்போதுதான் மான்கடா தாக்குதல் திட்டத்தின் முழு விபரமும் தெரியவந்தது. பிடல் தாக்குதல் திட்டத்தை விளக்கத் த�ொடங்கினார். இருபத்திய�ொரு வீரர்கள் க�ொண்ட குழு முதலில் கேந்திரத்திற்கு வெளியே இருக்கும் மருத்துவமனையைக் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவர வேண்டும். கேந்திரத்திற்குச் சற்றுத் த�ொலைவில் இருக்கும் பேலஸ் ஆ ஜஸ்டிஸ் கட்டிடத்தை மற்றொரு குழு கட்டுக்குள் க�ொண்டுவரவேண்டும். இந்த இரண்டு இடத்திலிருந்தும் நுழைவாயில் 3 வழியாகக் கேந்திரத்திற்குள் வரும் முக்கியத் தாக்குதல் குழுக்களுக்கு அவர்கள் பாதுகாப்பு தரவேண்டும். நுழைவாயில் 3-ல் காவலில் இருக்கும் மூன்று இராணுவ வீரர்களையும் கைது செய்து அவர்கள் அபாயச் சங்கை ஒலிக்க விடாமல் பார்த்துக்கொண்டு நுழைவாயிலை மற்ற குழுக்கள் 93
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
உள்ளே செல்வதற்கு வழி செய்யவேண்டும். இந்தப் ப�ொறுப்பு குயிட்டார்ட் கீழ் இருந்த குழுவிற்குக் க�ொடுக்கப்பட்டது. நுழைவாயில் திறக்கப்பட்டதும் பிடலின் தலைமையில் வரும் குழு கேந்திரத்திற்குள் புகுந்ததும் மூன்றாகப் பிரிந்து ஒன்று கேந்திரத்தின் வான�ொலி நிலையத்தையும் மற்றொன்று வீரர்களின் தங்கும் அறையையும் மற்றொன்று ஆயுதக் கிடங்கையும் கட்டுக்குள் க�ொண்டு வரவேண்டும். ஆயுதக் கிடங்குகளைக் கட்டுக்குள் க�ொண்டுவந்த பிறகு அதைத் தகர்த்துத் தங்களின் வண்டிகள் முழுக்க ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு அந்தக் குழு கேந்திரத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும். ஆயுதங்கள் பத்திரமாக வெளியேறிப் பிறகு மற்றவர்களும் பின்வாங்கி வெளியேறி விடவேண்டும். இவைகள் அனைத்தும் ஒரு ச�ொட்டு இரத்தம் கூடச் சிந்தாமல் நடைபெற வேண்டும். தேவைப்பட்டால் தாக்குதலில் இறங்கலாம் என்று விளக்கி முடித்தார் பிடல். ஹைடியும் மெல்பாவும் இந்தத் தாக்குதலில் பங்குபெறுவதை முதலில் பிடல் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் டாக்டர் மரிய�ோ முன�ோஸ் அவர்கள் செவிலியர்களின் உடையில் வரட்டும் என்று ச�ொன்னார். அவர்களும் பிடிவாதமாக இருந்ததால் பிடல் அதற்கு ஒப்புக்கொண்டார். டாக்டர் மரிய�ோ முன�ோஸ் மருத்துவர் உடையிலும் அவர்கள் இருவரும் செவிலியர்கள் உடையிலும் மருத்துவமனைக்குள் சென்று பின்னால் வரும் குழுவிற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் இது திட்டம். அதிக ஆபத்தான முக்கிய அணியைத் தானே வழி நடத்திச் செல்லப்போவதாகச் ச�ொன்னார் பிடல். அதுதான் அவரின் பழக்கமும் கூட. தன்னுடன் இருப்பவர்களை ஆபத்தில் இறக்கிவிட்டுவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் க�ோழைதன தலைமை பண்புக�ொண்டதல்ல அவருடையது. வரும் ஆபத்து எதுவாக இருந்தாலும் முதலில் அது தன்னைக் கடந்தே தன்னுக்குப் பின்னால் இருக்கும் ஆட்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆனால் முக்கிய அணியைப் பிடல் வழி நடத்திச் செல்வதை ஏபேல் சான்டாமரியா ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை பிடலின் உயிருக்கு ஏதும் நடந்துவிட்டால் இயக்கத்தைத் த�ொடர்ந்து நடத்து முடியாமல் ப�ோய்விடும் என்பதால் தான் அந்த ஆபத்தான பணியை 94
நவீனா அலெக்சாண்டர்
எடுத்துக்கொள்வதாகச் ச�ொன்னார் ஏபேல். ஹைடியும் மெல்பாவும் அப்படியே நினைத்தார்கள். ஆனால் பிடல் இதற்கு உடன்படவில்லை. அப்படித் தன்னுடைய உயிருக்கு ஏதும் நடந்துவிட்டால் ஏபேல் தலைவராக இருந்து இயக்கத்தை வழிநடத்திச் செல்லவேண்டும் என்று ச�ொல்லிவிட்டார். ஏபேல் மருத்துவமனையைக் கட்டுக்குள் க�ொண்டுவரும் குழுவை வழி நடத்திச் செல்லவேண்டும் என்று முடிவானது. அந்தக் குழுவில்தான் ரவுல் காஸ்டிர�ோ இருந்தார். இந்த விசயங்களை எல்லாம் விளக்கி முடித்த பிறகு அந்த நள்ளிரவு நேரத்திலேயே மீண்டும் காரில் வெளியே கிளம்பினார் பிடல். சான்டியாக�ோவில் இருந்த அவருடைய நண்பரான க�ோன்டே அகியுர�ோவை சந்திக்கப்போனார். இவர் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் வான�ொலி ஒலிபரப்பு துறை வல்லுநர். தாக்குதலுக்குப் பிறகு இயக்கத்தின் மெனிபெஸ்டோவை வான�ொலியில் ஒலிபரப்ப இவருடைய உதவி பிடலுக்கு தேவைப்பட்டது. ஆனால் க�ோன்டே வீட்டில் இல்லை. அந்தத் திட்டம் நிறைவேறாமல் மீண்டும் பண்ணைக்கே திரும்பிவந்தார் பிடல். அவர் வந்ததும் அனைவருக்கும் கியூப இராணுவ உடையும் ஆயுதங்களும் குழுவினருக்கு வழங்கப்பட்டது. குழுவினர் அவர்கள் ப�ோட்டிருக்கும் உடைகளுக்கு மேலேயே இராணுவ உடையை அணிந்துக�ொள்ளக் கட்டளையிடப்பட்டது. அப்போதுதான் தாக்குதல் முடிந்ததும் இராணுவ உடையைக் கழட்டி வீசிவிட்டு எளிதாக அடையாளம் மாற்றிவிட்டுத் தப்புவதற்கு வசதியாக இருக்கும் என்பதால். பிடலுக்கு தைக்கப்பட்ட இராணுவ உடை அவருக்குப் ப�ொருந்தவில்லை. அவருடைய உயரத்திற்கு அது ப�ோதாமல் இருந்தது. பிடல் சிரமப்பட்டே தன்னை அந்த உடைக்குள் திணித்துக்கொண்டார். தன்னுடைய தாடி மீசையையும் கூட எடுத்துவிட்டார் அடையாளத்தை மறைக்க வேண்டி. வினிய�ோகிக்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் இலகு ரக .22 ரைபில்ஸ். குழுவில் இருந்த ஒருவர் அந்தத் துப்பாக்கியைத் தலைக்கு மேல் தூக்கிப்பிடித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் ப�ோது அறியாமல் துப்பாக்கியின் டிரிகரை அழுத்திவிட்டார். அந்தப் பின் நள்ளிரவில் அதிகச் சத்தத்துடன் வெடித்தது துப்பாக்கி. குழுவில் 95
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்துவிட்டார்கள். துப்பாக்கி வெடித்த ஓசை யாருக்காவது கேட்டுக் கூடியிருக்கும் தங்கள் மேல் தேவையில்லாத சந்தேகத்தைக் கிளப்பிவிடும�ோ என்று. ஆனால் சில நிமிடங்களுக்குள் குழுவில் சகஜ நிலை திரும்பிவிட்டது. அதிகாலை சுமார் 4 மணி அளவில் குழுவினர் அனைவரும் சுற்றி வட்டமாக நின்றார்கள். அனைவருக்கும் பருகப் பால் க�ொடுக்கப்பட்டது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் எந்தவித இரத்தக் களரியும் இல்லாமல் ப�ோன வேகத்தில் பத்தே நிமிடத்தில் காரியத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம் என்றார் பிடல். மான்கடா தாக்குதல் ஓரியன்ட் பகுதியில் கலவரத்தை உண்டாக்கும் அது கியூபா முழுவதும் பரவிப் படிஸ்டாவின் ஆட்சிக்குப் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். இந்தத் தாக்குதலின் ப�ோது அசம்பாவிதங்கள் நடந்தாலும் நடக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் நிச்சயமாக உயிர் இழப்புகள் இருக்கும். விருப்பமில்லாதவர்கள் இப்போதே இதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று பேசி முடித்தார் பிடல். குழுவினர் அனைவரும் இந்தத் தாக்குதலில் இருக்கும் ஆபத்து தெரிந்தே வந்திருக்கிறார்கள் அதனால் யாரும் பின்வாங்க வாய்ப்பில்லை என்று பிடல் நினைத்திருக்க அவரே ஆச்சரியப்படும் வகையில் பத்துப் பேர் தாங்கள் இந்தத் தாக்குதலில் இருந்து விலகிக் க�ொள்வதாகச் ச�ொன்னார்கள். அது முழுக்க மாணவர்களை உள்ளடக்கிய குழு. விலகலுக்கு அவர்கள் ச�ொன்ன காரணம் கையில் வைத்திருக்கும் இந்தச் சாதாரண ஆயுதங்களைக் க�ொண்டு சக்தி வாய்ந்த இராணுவக் கேந்திரத்தைத் தாக்குவது சரிவராது என்பது. அவர்கள் விலகுவதற்கு அனுமதி அளித்த பிடல் அவர்களைப் பண்ணையின் ஒரு பகுதியில் இரண்டு வீரர்களின் துப்பாக்கி முனை கண்காணிப்பில் வைத்தார். தாங்கள் திரும்பி வந்து இந்தப் பண்ணையை விட்டுக் கிளம்பிய பிறகு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு உறுதி க�ொடுத்த பிறகு மீண்டும் குழுமி இருந்த வீரர்களிடம் வந்து ஒரு சிறிய ச�ொற்பொழிவு செய்தார். இந்தச் ச�ொற்பொழிவு பிற்காலத்தில் கியூப பள்ளிகள் அனைத்திலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. பிடல் பேசி முடித்ததும் திட்டமிட்டபடி குழு 5 மணிக்கு அவர் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கார்களுக்குச் 96
நவீனா அலெக்சாண்டர்
சென்று ஏறிக்கொண்டார்கள். மான்கடாவை தகர்ப்போம் – புரட்சிகர நாட்கள் - III பதினாறு கார்களில் அந்தப் புரட்சிப் படை சிப�ோனேய் பண்ணையிலிருந்து சான்டியாக�ோ செல்லும் சாலையில் விரைந்துக�ொண்டிருந்தது. அப்போது நேரம் அதிகாலை 5 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. பார்த்துப் பார்த்து உருவாக்கிய திட்டம்தான் என்றாலும் அதை நடைமுறையில் செயல்படுத்தியப�ோது பிடல் எதிர்பார்த்திராத விசயங்களும் அந்தத் திட்டத்துடன் சேர்ந்துக�ொண்டு த�ொடங்கியதிலிருந்தே காரியத்தைப் பின்னுக்கு இழுக்கத் த�ொடங்கின. சாலையில் ஒன்றின் பின் ஒன்றாகப் ப�ோய்க் க�ொண்டிருந்த கார்களில் ஒன்றின் டயர் பஞ்சராகி நின்றுவிட்டது. மற்றொரு கார் நான்கு வீரர்களைத் தவறவிட்டுவிட்டு வந்துக�ொண்டிருந்தது. மற்றொன்று சாலை சந்திப்பு ஒன்றில் தவறாகத் திரும்பிவிட்டதால் அணியை விட்டு விலகி வேறு பாதையில் சென்றுக�ொண்டிருந்தது. பேலஸ் ஆ ஜஸ்டிசை தாக்கும் ப�ொறுப்பை ஏற்றிருந்த லெஸ்டர் ர�ொட்ரிகியூயசின் அணியும் (இதில்தான் பிடலின் தம்பி ரவுல் காஸ்டிர�ோவும் இருந்தார்) சரியான பாதையைத் தவறவிட்டுவிட்டுப் பிறகு திட்டமிட்ட நேரத்திற்கும் வெகு நேரம் கழித்து வந்து சேர்ந்தது. ஏபேல் சான்டாமரியா தலைமையில் வந்த அணி குறித்த நேரத்திற்கும் ஒரு விநாடிகள் முன்பே வந்து இராணுவ ஆஸ்பத்திரியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்துவிட்டது. முன்னணி தாக்குதலை நிகழ்த்தும் ப�ொறுப்பிலிருந்த ரெநாட்டோ குயிடார்ட்டின் அணியும் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தாமதமாகவே வந்து சேர்ந்தது. திட்டத்தின்படி நுழைவாயில் 3-ல் 5:15 மணிக்கு நுழைந்திருக்கவேண்டிய அந்த அணி சில விநாடிகள் தாமதமாகவே நுழைவாயில் 3-க்கு முன்னால் வந்து நின்றது. குயிடார்ட்டும் மற்றவர்களும் காரில் இருந்து இறங்கிக் காவலுக்கு நின்றுக்கொண்டிருந்த படிஸ்டாவின் வீரர்களைப் பார்த்து ஜெனரல் வருகிறார் என்று கத்திக்கொண்டே ப�ோலியான பரபரப்பு காட்டினார்கள். நுழைவாயில் 3 காவலுக்கு இருந்த மான்கடா இராணுவ வீரர்கள் படிஸ்டாதான் வருகிறார் என்று 97
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
தவறாக நினைத்துக்கொண்டு அவர்களும் பரபரப்பு காட்ட ஜீசஸ் ம�ோன்டேனும், ரமிர�ோ வால்டேசும் மற்றும் ஜ�ோஸ் சுவேரசும் அந்த வீரர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு அவர்களைக் கைது செய்தார்கள். இதைத் த�ொடர்ந்து குயிடார்ட்டும் அணியில் இருந்த மற்றவர்களும் நுழைவாயில் 3-யை திறந்துக�ொண்டு அதற்கு அருகிலிருந்த படிகளில் ஏறி ஓடினார்கள். அந்தப் படிகள் மான்கடா இராணுவக் கேந்திரத்தின் தகவல் த�ொடர்பு தலைமையகம் என்று அவர்கள் தவறாகக் கணித்துவிட்டிருந்தார்கள். இந்த நேரத்திற்கு எல்லாம் அணியின் மற்ற கார்களும் திறந்துவிடப்பட்ட நுழைவாயில் 3-ற்கு வந்திருக்க வேண்டும் ஆனால் அவைகள் வந்த சேரத் தாமதமாகிக் க�ொண்டிருந்தது. அதில் முதலில் வரவேண்டியது பிடல் தலைமையில் இருந்த அணிதான். ஆனால் பிடல் இருந்த கார் நுழைவாயில் 3-யை நெருங்கிக் க�ொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மான்கடா இராணுவ மையத்தின் ர�ோந்து வண்டி ஒன்று குறுக்கே வந்து க�ொண்டிருந்தது. அந்த ர�ோந்து வண்டி உண்மையில் கவனித்தது பிடலின் காரைய�ோ அல்லது அவருக்குப் பின்னால் வந்துக�ொண்டிருந்த மற்ற கார்களைய�ோ அல்ல மாறாகத் வழக்கத்திற்கு மாறாக திறந்துகிடக்கும் நுழைவாயில் 3-யை. அந்த நுழைவாயிலில் ஏத�ோ பிரச்சனை என்று அவர் நினைத்தவர்களாக அந்த நுழைவாயிலுக்கு முன்பு வந்து நின்றார்கள். வண்டியில் இரண்டு சப்-மெசின் கன்களுடன் இராணுவ வீரர்கள் இருந்தார்கள். குறுக்கே நின்றுக்கொண்டிருந்த இராணுவ வீரர்களை அடித்துத் தூக்கிவிட்டு நுழைவாயில் 3-க்குள் நுழைய நினைத்த பிடல் தன்னுடைய காரின் வேகத்தை அதிகப்படுத்தினார். அவருடைய மற்றொரு கையில் பிஸ்டல் இருந்தது. இதன் காரணமாகக் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பிடல் காரை நடைபாதை மேடை மீது ம�ோதிவிடக் கார் நின்றுவிட்டது. இதைப் பார்த்த ர�ோந்து வண்டியில் இருந்த இராணுவ வீரர்கள் பிடலின் காரை ந�ோக்கிச் சுடுவதற்குத் தயாராகப் பிடலுக்கு பின்னால் வந்து க�ொண்டிருந்த அணியினர் இராணுவ ர�ோந்து வண்டி மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ர�ோந்து வண்டியில் இருந்த ஒரு இராணுவ வீரர் க�ொல்லப்பட்டார். இதைத் த�ொடர்ந்து 98
நவீனா அலெக்சாண்டர்
அங்கிருந்த மிலிட்டரி ஆஸ்பத்திரியிலிருந்து சில இராணுவ வீரர்கள் பிடலின் அணியை ந�ோக்கிச் சுடத் த�ொடங்கினார்கள். பிடலும் காரிலிருந்த மற்றவர்களும் காரை விட்டு வெளியே வந்து காருக்குப் பின்னால் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு திருப்பி மிலிட்டரி ஆஸ்பத்திரியை ந�ோக்கிச் சுட்டார்கள். பின்னால் வந்த அணியினரும் அந்தத் தாக்குதலில் இறங்க மான்கடா இராணுவத் தளத்தின் அபாயச் சங்கு அலறத் த�ொடங்கிவிட்டது. திட்டமிட்ட தாக்குதலைத் த�ொடங்குவதற்கு முன்பே மான்கடா இராணுவக் கேந்திரம் விழித்துக்கொண்டு அபாயச் சங்கை ஒலிக்க விட்டது பிடலின் தாக்குதல் திட்டத்தை முடிவு க�ொண்டுவருவதைப் ப�ோல ஆகிவிட்டது. இப்போது மிலிட்டரி ஆஸ்பத்திரியின் பல சன்னல்களில் இருந்து இராணுவ வீரர்கள் நுழைவாயில் 3-க்கு முன்னால் தேங்கி நின்றுவிட்ட பிடலையும் மற்ற அணியினரையும் சரமாரியாகச் சுடத் த�ொடங்கினார்கள். ஐந்நூறு அடிகள் தள்ளியிருந்த தலைமை செயலகக் கட்டிடத்தின் க�ோபுரத்திலிருந்து ஒரு சக்தி வாய்ந்த மெசின் கன்னும் பிடலையும் அணியினரையும் ந�ோக்கிச் சுடத் த�ொடங்கியது. நுழைவாயிலை ந�ோக்கி ஓடும்படி பிடல் த�ொடர்ந்து கத்தியும் அணியினரால் அவர்களின் மறைவிடங்களில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஒரு இஞ்ச் விடாமல் இராணுவ வீரர்களின் த�ோட்டாக்கள் காற்றில் பறந்துக�ொண்டிருந்தது. கார்களுக்குப் பின்னால் மரங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த அணியினர் அசைய முடியாமல் அப்படியே நின்றுவிட்டார்கள். குயிடார்ட்டின் தலைமையில் இருந்த அணி மாத்திரமே மான்கடா கேந்திரத்தின் உள்ளே நுழைந்திருந்தது. அவர்களுக்குப் பின்னால் வந்திருக்க வேண்டிய பிடல் அணியும் மற்ற அணியும் நுழைவாயில் 3-க்கு வெளியே இராணுவத் தாக்குதலில் சிக்கிக் க�ொண்டதால் குயிடார்ட்டின் அணி மற்றவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு இராணுவக் கேந்திரத்திற்குள் தனித்து அகப்பட்டுக்கொண்டது. பிடல் கணித்திருந்ததை விடப் பல நூறு வீரர்கள் கேந்திரத்திற்குள் இருந்தார்கள். சான்டியாக�ோ திருவிழாவை மனதில் க�ொண்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்பே படிஸ்டா பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான இராணுவ வீரர்களை அங்கே குவித்துவிட்டிருந்தார். 99
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ஆயுதங்கள் இல்லாமல் தூங்கிக்கொண்டிருந்த இராணுவ வீரர்களை முதலில் குயிடார்ட்டின் அணி சிறைபிடித்துவிட்டது. ஆனால் மான்கடா கேந்திரத்தின் அபாயச் சங்கு ஒலித்துவிட்டதால் மற்ற பகுதிகளில் இருந்த இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் கேந்திரம் எங்கும் நுழையத் த�ொடங்கக் குயிடார்ட்டின் அணி அவர்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது. குயிடார்ட்டின் அணிக்கும் இராணுவ வீரர்களும் இடையே தாக்குதல் த�ொடங்கியது. இந்தத் தாக்குதலில் குயிடார்ட்டும் மற்று மூன்று புரட்சி அணி வீரர்களும் க�ொல்லப்பட்டார்கள். தப்பி அணியினர் கேந்திரத்தை விட்டு வெளியேறிப் பின்வாங்கி ஓடினார்கள். நிலைமை ஆபத்தாகி வருவதை உணர்ந்துக்கொண்ட பிடல் தன்னுடைய அணியினரைப் பின்வாங்கிச் செல்லும்படி உரக்கக் கத்தி சைகை செய்தார். ப�ோர் களத்தில் எதிரியின் கை ஓங்கும்போது பின் வாங்கித் தப்பிச் சென்றுவிட்டு அடுத்த நாள் திரும்ப வந்து எதிரியைத் தாக்குவதே சிறந்த யுத்தக் களத் தந்திரமாக இருக்கும் என்பது பிடலின் நம்பிக்கை. அவர் சிறுவயதில் படித்த அனைத்துப் ப�ோர் வீரர்களின் வரலாறும் அப்படித்தான் ச�ொல்லியிருந்தன. த�ோற்றுவிடுவ�ோம் என்று தெரிந்த பிறகும் எதிரிக்கு முன்பாக நின்றுக�ொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருப்பதை விடக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தித் தப்பிச் சென்று உயிரைக் காப்பாற்றிக்கொண்டு அடுத்த நாள் மீண்டும் வந்து எதிரியை நிலை குலைய வைப்பதே சிறந்த செயல்பாடாக இருக்கும். இப்படிச் செய்வதின் மூலம் குறைந்தபட்சம் எதிரியைத் த�ொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டிருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அணியினர் தங்களின் கார்களுக்குள் ஏறிப் பின் வாங்கித் தப்பிச் சென்றார்கள். பிடலும் தப்பிச் செல்லத் தன்னுடைய காரை எடுக்க முயற்ச்சி செய்தப�ோது அது முற்றிலும் முடங்கிவிட்டது. பின் வாங்கிக்கொண்டிருந்த மற்றொரு காரைப் பின் த�ொடர்ந்து ஓடி அதில் த�ொற்றி ஏறிக்கொண்டார் பிடல். அணியினர் பின் வாங்கிச் செல்ல உதவும் வகையில் பெட்ரோ மிரட்டும் மேலும் இரண்டு புரட்சிகர வீரர்களும் இராணுவத்தை ந�ோக்கிப் பலமாகச் சுடத் த�ொடங்கினார்கள். ஜஸ்டிஸ் ஆ பேலசில் இருந்த ரவுல் காஸ்டிர�ோவின் அணியும் இராணுவத்தை ந�ோக்கிச் சுடத் த�ொடங்கினார்கள். தாக்கிக்கொண்டிருந்த இராணுவ வீரர்கள் 100
நவீனா அலெக்சாண்டர்
வேறு வழியில்லாமல் தப்பிச் சென்றுக�ொண்டிருந்த கார்களை விட்டுவிட்டு இந்த இரண்டு அணியையும் பார்த்துத் திருப்பிச் சுட்டார்கள். பிடலின் அணி பின்வாங்கிச் சென்றதும் ரவுல் காஸ்டிர�ோ அணியினர் தாக்குவதை விட்டுவிட்டுத் தப்பித்து வெளியேறி ஆயுதங்களையும் இராணுவ உடையையும் கழட்டி அங்கே வீசிவிட்டுக் கால்நடையாக நடந்து தப்பித்தார்கள். ஏபேல் சான்டாமரியாவின் குழு மாத்திரம் இராணுவத்திடம் வகையாகச் சிக்கிக்கொண்டது. வெளியே என்ன நடந்துக�ொண்டிருக்கிறது என்பதை அவர்களால் பார்க்க முடியாது என்பதால் பிடல் அணி பின்வாங்கிச் சென்ற விசயம் அவர்களுக்குப் பல விநாடிகள் கழித்துத்தான் தெரியவந்தது. அதற்குள் இராணுவம் கேந்திரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ச�ோதனைக்கு வந்துவிட்டது. ஹைடியையும் மெல்பாவையும் தப்பிச் செல்லும்படி ச�ொன்ன ஏபேல் தங்களுக்கு எது நடந்தாலும் அது பற்றி தகவல் ச�ொல்ல யாராவது உயிருடன் இருக்கவேண்டும் என்று அவர்களைத் தங்களிடமிருந்து பிரித்து அனுப்பிவிட்டார். அவர்கள் இருவரும் நேராகக் குழந்தைகள் வார்டுக்குள் சென்றுவிட்டார்கள். ஏபேலும் குழுவினரும் இராணுவ உடைகளைக் கழற்றிப் பதுக்கிவிட்டு உள் ந�ோயாளிகளைப் ப�ோலக் காலியாகக் கிடந்த படுக்கைகளில் ந�ோயாளிகளைப் ப�ோலப் படுத்துக்கொண்டார்கள். முதலில் அங்கே ச�ோதனைக்கு வந்த இராணுவ வீரர்கள் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லை என்று அங்கிருந்து ப�ோய்விட்டார்கள். ஆனால் அதிர்ஷ்டம் அன்றைக்குப் புரட்சிகர வீரர்களுக்கு என்று எழுதப்படவில்லை ப�ோலும். மான்கடா கேந்திரத்தின் பத்திரிக்கை அதிகாரி அங்கே உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அவர் புரட்சிகர வீரர்களின் நடவடிக்கைகளையும் ஒன்றுவிடாமல் பார்த்திருந்துவிட்டு அடுத்த முறை ச�ோதனைக்கு வந்து இராணுவ வீரர்களிடம் அனைவரையும் காட்டிக்கொடுத்துவிட்டார். குழந்தைகள் வார்டில் இருந்த ஹைடி மற்றும் பெல்பா உட்பட. புரட்சிகர வீரர்கள் அனைவரும் துப்பாக்கி கட்டையால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்கள். வீரர்களின் இந்தச் செயலைக் கண்டித்த டாக்டர் முன�ோஸ் அந்த இடத்திலேயே 101
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதல் முடிந்து முதலில் க�ொல்லப்பட்டவர் அவர்தான். மான்கடா தாக்குதலில் படிஸ்டா இராணுவத்திற்கே அதிக இழப்புகள். பத்தொன்பது இராணுவ வீரர்கள் இறந்து இருபத்தி ஏழு வீரர்கள் காயம் பட்டிருந்தார்கள். புரட்சிகர வீரர்கள் தரப்பில் ஆறு பேர் இறந்து பதினைந்து பேர் காயம் பட்டிருந்தார்கள். இராணுவ வீரர்கள் தரப்பில் நிகழ்ந்த அதிக உயிரிழப்புகள் அவர்களைக் க�ொந்தளிப்பான மனநிலைக்குக் க�ொண்டு சென்றுவிட்டது. பழிக்குப் பழிவாங்கத் துடித்தார்கள். அவர்களிடம் சிக்கிய புரட்சிகர வீரர்களில் ஐம்பத்தி இரண்டு பேர் அடுத்த இரண்டு நாட்களில் விசாரணை என்கிற பெயரில் க�ொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் க�ொல்லப்பட்டார்கள். அப்படி இருந்தும் இராணுவத்தின் ஆத்திரம் அடங்கியபாடில்லை. சிக்கிய புரட்சிகர வீரர்களுக்கு நடந்த சித்திரவதை க�ொடுமைகளைச் சில இராணுவ வீரர்களாலேயே சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பின்னாட்களில் இது குறித்துப் பேசிய மெல்பா குறிப்பிடுகிறார். மெல்பாவிடம் விசாரணை செய்யும்போது தங்களின் ந�ோக்கம் இரத்தக் களரியில்லாமல் தாக்குதல் நடத்துவதுதான் என்று அவர் ச�ொன்னதற்கு, உங்களுக்கு இரத்தம் சிந்தாமல் நடக்கவேண்டுமா வா இப்போது இரத்தத்தைப் பார்க்கலாம் என்று ச�ொல்லிக்கொண்டே மெல்பா கேந்திரத்தின் முடிதிருத்தும் அறைக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்கிறார்கள். வழக்கமாக அங்கேதான் படிஸ்டாவின் இராணுவ உளவு அமைப்பான எஸ்.ஐ.எம் அரசியல் குற்றவாளிகளைச் சித்திரவதை செய்வது வழக்கம். அந்த அறையின் நாலு பக்கச் சுவரில் இடமேயில்லாமல் இரத்தம் தெறித்திருப்பதை மெல்பா பார்த்தார். அவர் பார்த்தப�ோது அந்த இரத்தத் திட்டுகள் காய்ந்து கூடப் ப�ோயிருக்காமல் சுவரிலிருந்து வழிந்துக�ொண்டிருந்திருக்கிறது. அந்த அறையின் முன் வாசல் பகுதி முழுவதும் இரத்தம் சிறு சிறு குட்டைப�ோலத் தேங்கிக் காற்றுப்பட்டு அலை அலையாகக் கலங்கியதைப் பார்த்ததாக அந்தச் சித்திரவதை நாட்களின் நினைவுகள் குறித்து மெல்பா நினைவு கூறுகிறார். மான்கடாவின் நிலை இது என்றால் செஸ்பிடஸ் தாக்குதலும் 102
நவீனா அலெக்சாண்டர்
படுத�ோல்வி முடிந்துவிட்டது. அவர் திறந்துக�ொண்டு உள்ளே நுழையத் திட்டமிட்டிருந்த நுழைவாசல் கதவு எதிர்பாராத விதமாக அன்றைக்கு மூட்டப்பட்டிருக்க அவர்கள் சுவர் எகிறி உள்ளே குதித்தார்கள். அப்போது அங்கே கட்டிவைக்கப்பட்டிருந்த குதிரைகள் சத்தம் எழுப்பச் சாவடியில் இருந்த இராணுவ வீரர்கள் விழித்துக்கொண்டு பதில் தாக்குதலில் இறங்கிவிட்டார்கள். பதினைந்து நிமிடம் நீடித்த துப்பாக்கி சூட்டின் முடிவில் பத்துப் பேர் பின்வாங்கித் தப்பித்துவிட்டார்கள். பன்னிரெண்டு பேர் இராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்கள். அதில் பிறகு பலபேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
103
இரண்டாம் தலைமறைவு – புரட்சிகர நாட்கள் IV
ஜூ
லை 26 மதியம் நெருங்கிக் க�ொண்டிருந்தப�ோது பின் வாங்கி வந்திருந்த பிடலும் மற்ற அணியினரும் சிபன�ோய் பண்ணையை வந்தடைந்தார்கள். பலருக்குப் பலமான காயங்கள். சிலர் மன உறுதியை இழந்தவர்களாக ஹவானாவிற்கே திரும்பிப் ப�ோய்விடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். இன்னும் சிலர் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துவிடலாம் என்று பேசத் த�ொடங்கினார்கள். பிடல் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். சரணடைவதும் த�ொடங்கிய ப�ோராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஓடுவதும்தான் அவருடைய வாழ்க்கை அகராதியிலேயே இல்லாத விசயங்கள் ஆயிற்றே. பண்ணைக்கு வடக்கு திசையில் இருந்த கிரான் பியட்ரா மலைப் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு க�ொரில்லா தாக்குதல் குழுவைக் கட்டமைக்கவேண்டும் என்று திட்டம்போட்டார் பிடல்.
இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அவருடன் பத்தொன்பது வீரர்களே நடக்கத் த�ொடங்கினார்கள். வழியில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் தங்கினார்கள். அந்தப் பெண் தன்னுடைய பேரனை அவர்களுக்கு மலையில் வழிகாட்டுவதற்காக அனுப்பிவைத்தார். சில மைல்கள் அந்த இளைஞனின் வழி காட்டுதலில் சென்றுக�ொண்டிருந்த பிடல் அதற்கு மேல் தாங்கள் பார்த்துக்கொள்வதாகச் ச�ொல்லி அந்த இளைஞனின் உதவிக்கு நன்றி ச�ொல்லித் திரும்ப அனுப்பிவைத்துவிட்டார். இறுதியாகப் ப�ோய்ச் சேரும் இடத்தின் இரகசியத்தைக் காப்பதற்கே இந்த நடவடிக்கை. அடுத்த நாள் காலை மலை உச்சியில் இருந்த கிராமம் ஒன்றை அடைந்தார்கள். 104
நவீனா அலெக்சாண்டர்
ஒரு நாள் முழுவதும் உணவும், குடிக்க நீரும் இல்லாமல் அவர்கள் த�ொடர்ச்சியாக நடந்து வந்ததின் காரணமாக முற்றிலும் ச�ோர்ந்துப�ோய்விட்டார்கள். அந்தக் கிராமத்தில் இருந்த பலரும் அவர்களின் வின�ோதமான த�ோற்றத்தைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு உணவு க�ொடுக்க மறுத்துவிட்டார்கள். இறுதியாக ஒரு கருப்பின விவசாயி அவர்களுக்காக ஒரு பன்றியை அடித்து உணவு ஏற்பாடு செய்தார். அந்த விவசாயியின் உதவிக்கு அப்போதைக்குத் தன்னால் முடிந்த எதையாவது செய்ய நினைத்த பிடல் தன்னிடமிருந்த பிஸ்டலை அவரிடம் க�ொடுத்துவிட்டார். அந்த விவசாயியை அடிமை நிலையிலேயே வைத்துச் சுரண்டி க�ொடுமைப்படுத்திக்கொண்டிருந்த நில உரிமையாளரின் வன்முறைகளில் இருந்து அவரைத் தற்காத்துக்கொள்ள. அந்தக் கிராமத்தில் தங்கிக் க�ொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தப�ோது அவர்கள் மற்றொரு விவசாயியின் வீட்டில் ஒலித்துக்கொண்டிருந்த வான�ொலி செய்தியைக் கேட்க நேர்ந்தது. அந்த வான�ொலி நிகழ்ச்சியில் ஜெனரல் படிஸ்டா அவர்கள் அன்று காலை நிகழ்த்திவிட்டு வந்திருந்த மான்கடா இராணுவக் கேந்திரத் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தார். அந்தத் தாக்குதல் திட்டமிட்டே நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்டுத் தாக்குதல் என்றும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிரைய�ோவின் உள்ளடி வேலைகள் இருப்பதாகவும் குற்றம் சுமத்தினார். மேலும் கம்யூனிசத் துண்டு பிரச்சாரங்களையும் தாங்கள் சிபன�ோய் பண்ணையிலிருந்து கைப்பற்றியதாகச் ச�ொன்னார். (ஏபேல் சான்டாமரியா அங்கிருந்த சமயத்தில் படிப்பதற்காக எடுத்து வந்திருந்த லெனின் எழுதிய புத்தகங்களையே அவர் இப்படிக் குறிப்பிட்டார்). வான�ொலியில் பேசிய படிஸ்டா, மான்கடா கேந்திரத்தைத் தாக்கிய கலகக்காரர்கள் மனிதத் தன்மை அற்று காட்டுத்தனமாக நடந்துக�ொண்டதாகவும் அவர்களின் கைகளில் கிடைத்த இராணுவ வீரர்களைக் க�ொடூரமாகக் க�ொலை செய்துப�ோட்டார்கள் என்றும் இருந்தும் இராணுவ வீரர்கள் பிடிபட்ட கலகக்காரர்களிடம் சட்டத்தின்படி நடந்துக�ொண்டார்கள் என்றும் எதார்த்த நிலைக்கு எதிரான கருத்துக்களைத் தனது உரையில் ச�ொல்லிக்கொண்டிருந்தார். 105
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
மான்கடா தாக்குதல் நிகழ்விற்குப் பிறகு உடனடியாக நாட்டில் அவசர நிலையை அறிவித்தார் படிஸ்டா. பத்திரிக்கை செய்திகள் தணிக்கைக்கு ஆளாகின. இராணுவத்தை உயர்வாகவும் தாக்குதல் நடத்தியவர்களைப் படும�ோசமாகவும் நாட்டு மக்களிடையே சித்தரிக்கும் செய்திகளே பெரும் அளவில் பிரசுரிக்கப்பட்டன. பிடிபட்ட தி மூவ்மென்ட் புரட்சிகர வீரர்களுக்கு மான்கடா இராணுவக் கேந்திரத்தில் நடைபெற்ற மனிதத் தன்மையற்ற எந்தச் சித்திரவதைகள் குறித்தும் செய்திகளில் வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. சட்டத்தை மீறிய இராணு வீரர்களின் சித்திரவதை நடவடிக்கைகளை அரசாங்கமே ஆதரித்து மறைக்கும் வேலைகளில் ஒன்றாக இது இருந்தது. அப்படியிருந்தும் ஒரு பெண் பத்திரிக்கையாளர் மான்கடாவில் புரட்சி செய்த வீரர்களுக்கு நடந்த சித்திரவதைகள் குறித்த கட்டுரை ஒன்றைப் புகைப்பட ஆதாரங்களுடன் ஒரு முன்னணி பத்திரிக்கையில் வெளியிட்டார். பிடிபட்ட புரட்சிகர வீரர்களின் பின்னணி ப�ொதுவுடைமை மற்றும் ஆர்தோட�ோக்சாஸ் கட்சிகளாக இருந்த காரணத்தால் இந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் த�ொடர்பு இருப்பதாகப் ப�ொய்யான ஜ�ோடனைகளைச் செய்யத் த�ொடங்கியது படிஸ்டா அரசாங்கம். முதலில் புரட்சிகர வீரர்களின் தாக்குதல் செயலைக் கண்டித்த மக்கள் அதைத் த�ொடர்ந்த படிஸ்டா இராணுவத்தின் செயல்பாடுகளைப் பார்த்து முன்னிலும் அதிகமாகப் படிஸ்டாவையும் இராணுவத்தையும் விமர்சிக்கத் த�ொடங்கிவிட்டார்கள். நாட்டில் இருந்த மாநிலக் கவர்னர்கள் கேட்டுக்கொண்டும் படிஸ்டாவின் இராணுவம் பிடிபட்ட புரட்சிகர வீரர்களை வேட்டையாடிக்கொண்டிருந்ததால் ஜூலை 28-ல் ஆர்கிபிஷப் பெரேஷ் செரான்டேஸ் (இவர்தான் இருபது வருடங்களுக்கு முன்பு பிடல் காஸ்டிர�ோவிற்கு ஞானஸ்நானம் க�ொடுத்தவர்) இராணுவத்திற்கும் புரட்சிகர வீரர்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கும் இடையிலான சமாதானத் தூதுவராகச் செயல்பட முன்வந்தார். கலகக்காரன் என்று யார் மீது சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்களை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டு வந்து சித்ரவதை 106
நவீனா அலெக்சாண்டர்
செய்துக�ொண்டிருந்த இராணுவ வீரர்களின் செயல்பாடுகள் (கலனல் சாவியான�ோ தலைமையில் இயங்கிய) முடிவிற்கு வந்தது. மான்கடாதாக்குதலுக்குப்பிறகுபின்வாங்கிச்சென்றரவுல்காஸ்டிர�ோ கால்நடையாகவே பிரான் பண்ணைக்குப் ப�ோய்க் க�ொண்டிருந்தார். ஜூலை 29 அன்று ப�ோகும் வழியில் இருந்த இராணுவச் ச�ோதனை சாவடியில் அவர் சிக்கிக்கொண்டார். அவரிடம் அடையாள அட்டை ஏதும் இல்லாததால் அவர் அப்போதைக்குச் சிறைவைக்கப்பட்டார். பிறகு அவர் பிடல் காஸ்டிர�ோவின் தம்பி என்று அடையாளம் காணப்பட்டு மான்கடா கேந்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தப் புரட்சிகரத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர் பிடல் என்பதை நிச்சயமாக உறுதி செய்துக�ொண்ட இராணுவம் அவரைத் தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவித்தது. ர�ோந்து விமானங்களை வைத்துக்கொண்டு அவரைத் தேடும் அளவிற்கு இறங்கியிருந்தது இராணுவம். ஆர்கிபிஷப் பெரேஷ் செரான்டேஸ், பிடலும் அவருடன் இருந்தவர்களும் சென்ற பாதையில் பின் த�ொடர்ந்து வந்த அவர் அவர்களைச் சரணடைந்து விடும்படியும் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் என்றும் க�ோன் ஒலிபெருக்கியில் அறிவித்தபடி இருந்தார். இதைக் கேள்விப்பட்ட பிடல் தன்னைப் பின் த�ொடர்ந்து வந்துக�ொண்டிருந்தவர்களில் உடல்நிலை மிகவும் ம�ோசமானவர்களை மாத்திரம் ஆர்கிபிஷப் பெரேஷ் செரான்டேசிடம் சரணடைந்துவிடும்படி ச�ொன்னார். அப்படிச் சரணடைந்தவர்கள் ப�ோகப் பிடலுடன் இருந்தவர்கள் ஆஸ்கார் அல்கால்டே மற்றும் ஜ�ோஸ் சுவரேஸ் மாத்திரமே. மூவரும் க�ொஞ்சம் க�ொஞ்சமாக முன்னேறிச் சியாரா மீயஸ்டிரா பகுதிக்குச் சென்றுவிடுவது என்று முடிவு செய்தார். அங்கே வைத்துத் தனக்கான க�ொரில்லா குழுவை உருவாக்குவது என்பது பிடலின் திட்டம். ஆனால் ஆக்ஸ்ட் 1 விடியல் சமயத்தில் மூவரும் மலை குடிசை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் பாதுகாப்பு படையிடம் அகப்பட்டுக்கொண்டார்கள். பிடிபட்ட மூவரையும் உயிருடன் விடாமல் சுட்டு தள்ளவிட வேண்டும் என்பது இராணுவ வீரர்களின் ஆவேசப் பேச்சு. முக்கியமாகப் பிடல் காஸ்டிர�ோவை. ஆனால் மூவரையும் கண்டுபிடித்த படைப் பிரிவின் தலைமை ப�ொறுப்பில் இருந்த லெய்டுனன்ட் பெட்ரோ சாரியா மூவரையும் 107
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
உயிருடன் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்று ச�ொல்லி இராணுவ வீரர்களின் ஆசைக்கு முட்டுக்கட்டை ப�ோட்டுவிட்டார். இந்தப் மூவரை மாத்திரமல்ல இந்த பிரச்சனையின் ப�ோது மான்கடாவிலும் சான்டியாக�ோவிலும் பிடிபட்ட பல கலகக்காரர்களின் உயிரைக் காப்பாற்றியவர் இவர். மான்கடாவிற்கு பிடலை அழைத்துச் செல்லும் வழியில் பெட்ரோ சாரியாவிடம் பிடல் ஏன் தன்னைக் க�ொல்ல இராணுவ வீரர்களுக்கு உத்தரவு தரவில்லை என்று கேட்டிருக்கிறார். கைதியாகப் பிடிபட்டவர்களைக் க�ொல்லும் வேலை இராணுவ வீரனுக்கு அழகு அல்ல என்று ச�ொன்னார் பெட்ரோ சாரியா. இப்படி நேர்மையாக இருந்தால் இராணுவமே உங்களைக் க�ொன்றுவிடும் என்று பிடல் ச�ொல்ல அப்படிக் க�ொன்றால் க�ொன்றுவிட்டுப்போகட்டும் அதற்காக என்னை நான் மாற்றிக்கொள்ள முடியாது என்றிருக்கிறார் பெட்ரோ சாரியா. தன்னை ஒத்த மனிதர் ஆனால் இருக்கும் இடம்தான் வேறு வேறு என்று அப்போது கருதியிருக்கிறார் பிடல். பின்னாட்களில் பிடல் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் பெட்ரோ சாரியா இறந்தப�ோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துக�ொண்டு அவருக்கு மரியாதை செய்தார் பிடல். இவர்களை மான்கடா சிறையில் ஒப்படைத்தால் நிச்சயம் இவர்கள் க�ொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த பெட்ரோ சாரியாவும் ஆர்கிபிஷப் பெரேஷ் செரான்டேசும் அவர்களைச் சிட்டி ஜெயிலில் ஒப்படைத்துவிட்டார்கள். மெல்பாவும் ஹைடியும் முன்பே அந்தச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். ஒருபுறம் இந்தச் சங்கதிகள் நடந்துக�ொண்டிருக்கப் பத்திரிக்கைகளுக்கு இருந்த தணிக்கை மற்றும் கெடுபிடிகளின் காரணமாக இராணுவத்தின் எந்தவிதச் செயல்பாடுகளையும் அறிந்துக�ொள்ள முடியாமல் ப�ோனது. இதன் காரணமாகப் பிடல் காஸ்டிர�ோ உயிருடன்தான் இருக்கிறாரா என்கிற குழப்பம் ஏற்படத் த�ொடங்கியது. இந்தக் குழப்பத்தில் ஒரு உள்ளூர் பத்திரிக்கை பிடல் காஸ்டிர�ோ இறந்துவிட்டார் என்று முதல் பக்கச் செய்தியை வெளியிட்டது. இது அப்போது சிட்டி ஜெயிலில் இருந்த கலகக்காரர்களின் காதுகளுக்கும் வந்து சேர்ந்தது. அவர்கள் தங்களுக்கு மீதம் இருந்த நம்பிக்கைகளையும் இழந்துவிட்ட நிலையில் இந்தச் செய்தி 108
நவீனா அலெக்சாண்டர்
அவர்களை முற்றிலும் மனச் ச�ோர்வடையச் செய்துவிட்டது. இந்த நிலையில்தான் பிடல் அந்தச் சிறைக்குக் கைதியாகக் க�ொண்டுவரப்பட்டார். சிறையில் இருந்த அவருடைய சகாக்களுக்கு மீண்டும் உற்சாகம் த�ொற்றிக்கொண்டுவிட்டது. சிட்டி ஜெயிலில் கானல் சாவியான�ோ தானே நேரடியாகப் பிடலிடம் விசாரணையைத் த�ொடங்கினார். இந்த விசாரணை த�ொடங்குவதற்கு முன்பே பிடல் ஒரு திட்டத்துடன்தான் இருந்தார். எந்தச் சூழ்நிலையிலும் தனது ப�ோராட்டக் கருத்துக்களை மக்களிடம் க�ொண்டு செல்வதற்கான வாய்ப்புகளைத் தேடியபடி இருப்பவர் பிடல். அந்த வாய்ப்பு சிறிதாக இருந்தாலும் சரி பெரிதாக இருந்தாலும் சரி அதைப் பிடல் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடியவர். இந்த விசாரணையையும் அப்படியே அவர் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். தி மூவ்மென்ட் இயக்கத்தை அதன் செயல்பாடுகளை, ந�ோக்கத்தை அவ்வளவு இரகசியமாக வைத்திருந்த பிடல் இந்த விசாரணையின் அதைக் குறித்த அத்தனை விசயங்களையும் எத்தகைய ஒளிவு மறைவுகளும் இல்லாமல் ச�ொல்லிவிட முடிவு எடுத்தார். பிடலின் புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த வாக்குமூலம் நிச்சயம் பத்திரிக்கைகளுக்குத் தந்து அதன் மூலம் நாட்டிற்கு எதிராகப் பிடல் கலகம் செய்துவிட்டதைப் ப�ோலச் சித்தரிக்கப் படிஸ்டா அரசாங்கம் முயலும் என்று கணித்தார். அப்படிச் செய்யும் பட்சத்தில் தனது கருத்துகளிலும் அதன் அடிப்படையில் அமைந்த செயல்பாடுகளிலும் இருக்கும் நியாயத்தை மக்கள் நிச்சயம் எத்தகைய திரிபுகளும் இல்லாமல் படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்துக�ொண்டார். பிடல் கணித்ததைப் ப�ோலவே படிஸ்டாவின் கை கூலியான கானல் சாவியான�ோவும் நடந்துக�ொண்டார். பிடல் க�ொடுத்த வாக்கு மூலத்தை அவர் அப்படியே பத்திரிக்கைகளுக்குக் க�ொடுத்துவிட்டார். தான் கணித்ததைப் ப�ோல இப்படி நடந்தால் அதுவே பெரிய வெற்றிதான் என்று பிடல் நினைத்துக்கொண்டிருக்கப் பிடலின் இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பல நிலைகளுக்கு உயரே க�ொண்டு சென்றார் கானல் சாவியான�ோ, தான் செய்வது என்னவென்கிற புரிதலே இல்லாமல். சிறையில் பத்திரிக்கையாளர்கள் பிடலை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிக்கையாளர்களின் 109
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலாக ஒரு புரட்சிகரப் பிரசங்கமே செய்தார் பிடல். வான�ொலியில் பிடல் பேசுவதற்கும் ஏற்பாடு செய்து த�ொலைத்தார் கானல் சாவியான�ோ. கானல் சாவியான�ோ முன் ய�ோசனை இல்லாமல் செய்துவிட்ட இந்தக் காரியங்கள் அரசாங்கத்திற்கு எதிராகவே பாய்ந்துவிட்டது. மக்களும், மாணவர்களும், த�ொழிலாளர் தலைவர்களும் மற்ற பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பிடலின் பேச்சிலும் கருத்துகளிலும் இருக்கும் நியாயத்தை வரவேற்கத் த�ொடங்கிவிட்டார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத் தாளத்திற்கு ஏற்ப ஆட்டம் ப�ோடும் படிஸ்டாவின் அரசாங்கத்தையும், அரசியலில் க�ொழுத்துக்கிடக்கும் ஊழல்களையும், குண்டர்களை அதிகாரிகளாகப்போட்டு நடத்தப்படும் அரசாங்க இயந்திரத்தையும் வெளுவெளு என்று வெளுத்து எடுத்தார் பிடல். மான்கடா தாக்குதல் சமயத்தில் பிடலின் செயலை இது தீவிரவாதம் என்றும் இதுப�ோன்ற தீவிரவாதிகள் நாட்டிற்குக் கேடு என்றும் விமர்சனம் செய்தவர்கள் கூடப் பிடலின் பேச்சில் இருந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு மான்கடா தாக்குதலை நியாயப்படுத்தத் த�ொடங்கிவிட்டார்கள். கானல் சாவியான�ோவின் செயல்பாட்டால் படிஸ்டாவின் அரசாங்கத்திற்கு எதிராக உருவாகும் எண்ண ஓட்டத்தை அறிந்துக�ொண்ட மற்ற அதிகாரிகள் பிடலை அதிகம் மக்களிடமிருந்து தனிமை படுத்த முடிவு செய்தார்கள். சிட்டி ஜெயிலில் இருந்து பிடலும் மற்ற புரட்சிகரக் கைதிகளும் சான்டியாக�ோவிற்கு வடக்கில் இருந்த சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள். பிடல் தனிமை சிறையில் வைக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பிடல் பத்திரிக்கையாளர்களுக்கு எழுதும் பதில்களும் தடை செய்யப்பட்டது. பிடலின் மனைவி மிர்டாவும், தாயார் லினாவும், ஒன்று விட்டச் சக�ோதரி லிடியாவும் சிறையில் பிடலை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது. நான்கு வாரங்கள் கழித்தே பிடல் அவருடைய குடும்பத்தினர்களுக்கு மட்டும் கடிதம் எழுத அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் கடிதமும் சிறை துறையின் தணிக்கைக்குப் பிறகே வெளியே அனுப்பப்பட்டது. 110
நவீனா அலெக்சாண்டர்
வரலாறு என்னை மன்னிக்கும் – சிறை வாச நாட்கள் - I சான்டியாக�ோவில் இருந்த பேலஸ் ஆ ஜஸ்டிசில் செப்டம்பர் 21 அன்று பிடலுக்கு எதிரான வழக்கு த�ொடங்கியது. ம�ொத்தமாக 122 குற்றவாளிகள் மீது வழக்கு த�ொடுக்கப்பட்டிருந்தது. தி மூவ்மென்ட் இயக்கத்தில் எத்தகைய த�ொடர்பும் இல்லாத கம்யூனிஸ்ட் மற்றும் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அப்படிச் சேர்க்கப்பட்ட அனைவரும் படிஸ்டாவின் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தவர்கள். இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிருபணமானால் ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு முதல் அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் நிலை இருந்தது. நீதிமன்றம் முழுவதும் இராணுவத்தின் தலைகளே நிரம்பிக் கிடந்தது. ஒருவேளை அது இராணுவ நீதிமன்றமாக இருக்கலாம�ோ என்கிற சந்தேகத்தைக் கூட உண்டுபண்ணியது. இராணுவத்தினருக்கு நிகராகப் பத்திரிக்கையாளர்களின் கூட்டம் அலைம�ோதியது. பிடல் தனது தரப்பு வாதத்தைத் தானே வாதாடிக்கொள்வதாகச் ச�ொல்லிவிட்டார். சிறைச்சாலையையே தனது பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக்கொண்ட பிடல் நீதிமன்றம் ப�ோன்ற பெரிய ஆடுகளத்தை விட்டுவைத்துவிடுவாரா என்ன. விடவில்லை. நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் அவர் பேசிய பேச்சுகளும் படிஸ்டாவின் இராணுவ ஆட்சிக்கு மக்களிடையே எதிர் பாதிப்புக்களை உண்டாகியபடி இருந்தது. விசாரணை த�ொடங்கிய முதல் நாளிலேயே ஆரம்பித்துவிட்டார் பிடல். குற்றவாளிகளுக்கு இடப்பட்டிருந்த கை விலங்குகளை அவிழ்த்துவிட்டு விட்டு விசாரணை நடத்தும்படி வலியுறுத்தினார். மேலும் அரசாங்கத்தரப்பில் வைக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் ச�ொல்லும் ப�ோர்வையில் மணி கணக்கில் படிஸ்டாவின் இராணுவச் சதி குறித்தும், குடியரசு பறிக்கப்பட்டு மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவதைக் குறித்தும் பேசினார். தான் எதிர்த்துப் புரட்சி செய்தது சட்ட விர�ோதமாக இராணுவச் சதி செய்து ஆட்சியைப் பிடித்த படிஸ்டாவை எதிர்த்துத்தானே தவிரக் கியூப நாட்டின் அரசியல் அமைப்பை எதிர்த்து அல்ல என்று மிகத் 111
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
தெளிவாகத் தனது தரப்பு நியாயத்தை வித்தியாசம் பிரித்துக்காட்டி வாதாடினார். புரட்சிக்குப் பிறகு பிடிபட்ட தனது தி மூவ்மென்ட் வீரர்களுக்கு மான்கடா இராணுவ மையத்தில் நடைபெற்ற மனிதத் தன்மை அற்ற சித்திரவதைகளைக் குறித்தும் பேசத் த�ொடங்கினார். ம�ோன்டென், ஹைடி சான்டாமரியா என்று அவரைத் த�ொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் மான்கடா இராணுவ மையத்தில் நடைபெற்ற சித்திரவதைகளைக் குறித்துப் பேசினார்கள். ப�ோரிஸ் சான்டா க�ொல�ோமா, ஏபேல் சான்டாமரியா ப�ோன்றவர்களுக்கு விசாரணை என்கிற பெயரில் நடந்த சித்திரவதைகள் குறித்து நீதிமன்றத்தில் ச�ொல்லப்பட்டது. இராணுவத்தின் இந்தச் சட்ட மீறல் அராஜகத்தையும் நீதிமன்றம் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டார் பிடல். வேறு வழியில்லாமல் நீதிமன்றம் இராணுவ அத்து மீறல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் ச�ொன்னார்கள். படிஸ்டாவும் இராணுவமும் ஆடி ப�ோய்விட்டது. வழக்கில் இப்படி ஒரு திருப்பத்தைப் பிடலும் அவருடைய ஆட்களும் செய்வார்கள் என்று எதிர் தரப்பு பகல் கனவிலும் கூட நினைத்திருக்காது. சாட்சிகள் நீதிமன்றத்திற்கு வந்தால் மக்கள் மத்தியில் தங்களின் கதி அத�ோ கதிதான் என்பதை அவசர அவசரமாக உணர்ந்துக்கொண்ட இராணுவம் பிடலின் வாயை மூடும் வேலைகளைத் த�ொடங்கினார்கள். பிடலும் அவருடைய அமைப்பினரும் நீதிமன்றத்தில் பேசியவைகளை பத்திரிக்கையாளர்கள் செய்திகளாக வெளியிடத் தடைவிதிக்கப்பட்டது. பிடலின் வாயை நிரந்தரமாக மூடிவிட - க�ொலை செய்துதான் - திட்டம் தயாரானது. இதைப் பிடலும் உணராமலில்லை. ஏன்ஸ் என்கிற சிறை அதிகாரிக்குப் பிடலின் உணவில் விசம் கலக்க உத்தரவு வந்திருக்கிறது. இதை அவர் பிடலிடமும் தெரிவித்திருக்கிறார். பிடல் அந்த உணவை எடுத்துக்கொள்ளாத காரணத்தால் சந்தேகம் அடைந்த மேலதிகாரிகள் அந்தச் சிறை அதிகாரியை வேலையை விட்டு அனுப்பிவைத்துவிட்டார்கள். செப்டம்பர் 26 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு வர இருந்த 112
நவீனா அலெக்சாண்டர்
நிலையில் பிடலை எப்படியாவது பேசவிடாமல் தடுக்க முயற்ச்சி செய்த இராணுவத் தரப்பு அவருக்கு உடல் நிலை சரியில்லை அதனால் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியாது என்று ப�ொய்யாக மருத்துவச் சான்றிதழ் அளித்தது. தனக்கு உடல் நிலை சரியில்லை என்று ப�ோலியாக மருத்துவச் சான்றிதழ் தயாரிக்கிறார்கள் என்பதைப் பிடல் துண்டு சீட்டில் எழுதி அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி மெல்பா ஹெர்நான்டசிடம் இரகசியமாகக் க�ொடுத்துவிட்டார். விசாரணை அன்று தன் தலைமுடியில் மறைத்து வைத்திருந்த பிடலின் துண்டைச் சீட்டை எடுத்து நீதிபதிகளிடம் க�ொடுத்தார். நீதிபதிகள் அவருடைய உடல் பரிச�ோதனைக்கு ஆணையிட்டார்கள். பிடல் நன்றாகவே இருக்கிறார் என்று மருத்துவப் பரிச�ோதனை முடிவுகள் தெரிவித்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த ஆணையிட்டார்கள். ஆனால் இராணுவம் அவரை நீதிமன்றத்திற்கு அனுப்ப முடியாது சென்று மறுத்துவிட்டது. அத�ோடு நிற்காமல் பிடல் மாத்திரம் இனித் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார் என்று தெரிவித்துவிட்டது. இதைத் த�ொடர்ந்து வழக்கு வேக வேகமாக நடத்தப்பட்டது. பிடலை யார் கண்ணிலும் காட்டாமல் பார்த்துக்கொண்டது இராணுவம். செப்டம்பர் 28 அன்று ரவுல் காஸ்டிர�ோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பிடலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். அக்டோபர் 5 அன்று முதல் கட்ட விசாரணை முடிந்தது. தி மூவ்மென்ட் இயக்கத்துடன் த�ொடர்பில்லாத அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டார்கள். கலகக்காரர்கள் அனைவரும் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு ரவுல் கேஸ்டிர�ோ, பெட்ரோ மீரெட், எர்னஸ்டோ டிச�ோல் மற்றும் ஆஸ்கார் அல்கால்டே ஆகியவர்களுக்குப் பதிமூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருபது பேர்களுக்குப் பத்து வருடச் சிறை தண்டனையும், மூன்று பேர்களுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனையும், மெல்பாவிற்கும் ஹைடி சான்டாமரியாவிற்கும் ஏழு மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மான்கடா மையத்தில் இருந்த மருத்துவமனை செவிலியர்கள் அறையில் அக்டோபர் 16 அன்று பிடலின் மீதான விசாரணை மீண்டும் த�ொடங்கியது. 113
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
விசாரணை படுவேகமாக நடைபெற்றது. பிடல் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் ச�ொல்லும்படியான வாய்ப்பே தராமல் இருந்தன கேள்விகள். ஆம் இல்லை என்று ச�ொல்லும் வகையிலேயே அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் எதிர் தரப்பு சாட்சிகளுக்கு அவர்கள் விருப்பம் ப�ோல நேரம் தரப்பட்டது. இதைப் பிடல் வண்மையாகக் கண்டனம் செய்தார். தன் தரப்பு நியாயத்தை விளக்கத் தனக்கு அதிக நேரம் தரவேண்டும் என்று அவர் கேட்டபடி இருந்தார். வேறு வழியில்லாமல் அவர் பேச அனுமதி அளிக்கப்பட்டது. எத்தகைய இடையூறுகளும் இல்லாமல் தன் செயல்பாடுகளுக்கான விளக்கத்தை இரண்டு மணி நேரம் பேசி முடித்தார் பிடல். இந்த இரண்டு மணி நேரப் பேச்சின் த�ொகுப்பே பிற்காலத்தில் ‘வரலாறு என்னை மன்னிக்கும்’ என்று அழைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அரசியல் பேச்சுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘குற்றம்சாட்டப்பட்ட மனிதனை நீதிமன்றத்திற்கு அழைத்து வர அஞ்சும் அரசு, இரத்தத்தாலும் அடக்குமுறையாலும் உருவாக்கப்பட்ட அரசு……’என்று த�ொடங்கித் தன்னுடைய புரட்சிகரச் செயல்பாடு எந்த வகையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீதானதல்ல என்பதையும் வன்முறையின் மூலம் ஆட்சியைப் பிடித்துக்கொண்ட படிஸ்டா ஆட்சிக்கு எதிரானது மட்டுமே என்பதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திப் பேசினார். இந்தப் ப�ோராட்டத்தில் தன்னுடன் இணைந்து ப�ோராடித் தங்களின் உயிரை இழந்தவர்களின் உயிர் தியாகத்தைப் பெருமைப்படுத்திப் பேசினார். நீதிபதிகளைப் பார்த்து, ‘நீங்களும் நீதி விசாரணைக்குத் தப்ப முடியாது, ஒருமுறை அல்லப் பலமுறை நீங்களும் வரலாற்றில் நீதி விசாரணைக்கு உள்ளாவீர்கள்…’ என்றார். இறுதியாக, ‘சிறைச்சாலையைக் கண்டு எனக்கு எவ்விதப் பயமும் இல்லை. எனது சக வீரர்கள் 70 பேரைக் க�ொன்ற சர்வாதிகாரி ஒருவனின் க�ோபத்தைக் கண்டும் எனக்கு எத்தகைய பயமும் கிடையாது. என்னைத் தண்டியுங்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. வரலாறு என்னை மன்னிக்கும்’ என்று முடித்தார். இரண்டு மணி நேரம் பேசி முடித்துவிட்டு பிடல் உட்கார்ந்த ப�ோது அந்த அறை அப்படிய�ொரு அமைதியில் உறைந்திருந்தது. சில 114
நவீனா அலெக்சாண்டர்
விநாடிகள் யாரும் எதுவும் பேசவில்லை. அறை முழுவதிலும் இருந்த கண்கள் பிடலையே பார்த்துக்கொண்டிருந்தன. பதினைந்து வருட சிறை தண்டனை பிடல் காஸ்டிர�ோவிற்கு விதிக்கப்பட்டது.
115
ஆளுமை மிக்க மனிதன் – சிறை வாச நாட்கள் II
பி
டல் ஹவானா பல்கலைக்கழக மாணவராக இருந்த ப�ோது எந்தச் சிறைச்சாலையின் நிலை படும�ோசமாக இருக்கிறது என்று நேரில் பார்த்துப் பத்திரிக்கைகளில் எழுதினார�ோ அதே சிறைக்கு இப்போது அவரும் அவருடைய சக வீரர்களும் அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்கள் சிறை தண்டனையைக் கழிக்க அனுப்பப்பட்ட சிறைச்சாலை ஐல் ஆப் பைன். அந்தச் சிறையின் நிலைமைக்கு எதிராக மாணவப் பிடல் நடத்தியிருந்த ப�ோராட்டங்களின் விளைவாக அந்தச் சிறைச்சாலையின் நிலை இப்போது மேம்படுத்தப்பட்டிருந்தது. கைதிகள் உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள், கைதிகள் தாங்களே சமைத்துக்கொள்வதற்கான வசதி, நூலகமும் இப்போது க�ொண்டுவரப்பட்டிருந்தது.
சிறை வாசம் அவருடைய புரட்சிகரக் க�ொள்கைகளை முடக்கிவிடவில்லை. அது முடியவும் முடியாது. சிறைக்குள்ளேயே தனது அடுத்த புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைக்கத் த�ொடங்கிவிட்டார். அதற்குப் பெயர் 26 ஜூலை மூவ்மென்ட். மான்கடா மையத் தாக்குதல் நாளின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். பிடலின் கூட்டாளிகள் சிறைச்சாலையைக் கல்விக் கூடமாக மாற்றிவிட்டிருந்தார்கள். தாங்கள் இருந்த சிறைக்கு அவர்கள் வைத்த பெயர் ஏபேல் சான்டாமரியா ஐடியாலஜிக்கல் அகாடமி. ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் சிறைக்குள் பாடம் நடக்கும். பிடல் தத்துவமும் நவீன வரலாறும் பாடமாக எடுப்பார். பெட்ரோ பழங்கால வரலாறும், ம�ோன்டேன் ஆங்கிலமும் எடுப்பார். இது 116
ப�ோகப்
பிடல்
நிறையப்
புத்தகங்களை
வாசிக்கத்
நவீனா அலெக்சாண்டர்
த�ொடங்கினார். வரலாறும் தத்துவமும் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. அரசியல் வாசிப்பில் மார்டி, மார்க்ஸ் மற்றும் லெனின் புத்தகங்களுக்கு முக்கிய இடம் க�ொடுத்தார். சிக்மன்ட் பிராய்டின் புத்தகங்களும் வாசித்தார். சிறைச்சாலை நூலகத்திலிருந்து தஸ்தாவிஸ்கி, பல்சாக் மற்றும் தாக்கரே ப�ோன்றவர்களின் புத்தகங்களை எடுத்து வாசித்தார். மார்க்சின் புத்தகங்களில் இருந்த கம்யூனிசக் கருத்துக்களை அதிகம் உள்வாங்க இந்தச் சிறைவாச நாட்கள் பிடலுக்கு பெரும் உதவியாக இருந்தது. முன்னிலும் அதிகமாக அவர் தனது அரசியல் கருத்துக்களை மார்க்சின் கருத்துக்களை இணைத்துக்கொள்ளத் த�ொடங்கினார். சிறைக்கு வெளியே பிடலின் அரசியல் செல்வாக்கு முன்னிலும் அதிகமாக உயர்ந்திருந்தது. படிஸ்டா 1954 நவம்பரில் ப�ொதுத் தேர்தலுக்கு அனுமதி அளித்து அதற்கான ஏற்பாடுகளில் இருந்தார். முக்கியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் கண் துடைப்பு நாடகம் என்பது தெரிந்திருந்தாலும் படிஸ்டா தான் நடத்துவது ஜனநாயகப் பண்பு க�ொண்ட தேர்தல் என்று காட்டுவதற்காகப் பத்திரிக்கைகளுக்கு விதித்திருந்த தணிக்கைகளையும் தடைகளையும் முற்றிலும் தளர்த்தினார். இந்த நடவடிக்கை வெளியில் இருந்த பிடலின் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெரும் உதவியாக அமைந்தது. பத்திரிக்கை சுதந்திரத்தைப் பயன்படுத்திச் சிறையில் பிடலுக்கு நடந்த நடந்துக�ொண்டிருந்த சித்திரவதைகளைக் குறித்துத் த�ொடர்ந்து எழுதத் த�ொடங்கினார்கள். இதில் முக்கியமானது ப�ோஹீமியா பத்திரிக்கை. ப�ோஹீமியா பத்திரிக்கை தனது நிருபர்களைச் சிறைக்கு அனுப்பியது பிடலை சந்தித்து நேர்காணல் நடத்த. இதற்கு முன்பே இந்தப் பத்திரிக்கை 1953 ஆம் ஆண்டின் உலக முக்கிய ஆளுமைகளில் ஒருவராகப் பிடல் காஸ்டிர�ோவை அறிவித்திருந்தது. பிடலுடன் சேர்த்து முக்கிய ஆளுமைகளாக அறிவிக்கப்பட்டிருந்தவர்கள் குயின் எலிசபெத் II, ஷா ஆ ஈரான் ப�ோன்றவர்கள். பிடலை சிறையில் சந்தித்த ப�ோஹீமியா பத்திரிக்கை நிருபர்கள் அதற்கு அடுத்த வாரத்தில் சிறையில் அவர் இருக்கும் பல புகைப்படங்களுடன் கூடிய கட்டுரையை வெளியிட்டார்கள். அந்தக் கட்டுரையில் மக்கள் என் பின்னால் இருக்கும் வரை மகிழ்ச்சியுடன் இதுப�ோன்ற ஒரு புரட்சியை நாட்டின் அடி த�ொடங்கி முடிவரை க�ொண்டுவருவேன். 117
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
அது நிச்சயம் கியூப மக்களின் நல்வாழ்விற்கான ஒன்றாக இருக்கும் என்று ச�ொல்லியிருந்தார். இந்தச் சிறைவாசத்தின் நடுப் பகுதியில் பிடலுக்கும் அவருடைய மனைவி மிர்டாவுக்கும் இடைவெளி அதிகமானது. ஒருமுறை அவர் சிறையில் வான�ொலி செய்தி ஒன்றைக் கேட்டுக்கொண்டிருந்தப�ோது பிடலின் மனைவி உள்துறை அமைச்சக வேலையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை அறிந்தார். மிர்டா படிஸ்டா அரசாங்க வேலை ஒன்றில் இருந்தது பிடலிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி அவருக்குப் பெரும் க�ோபத்தை உண்டுபண்ணிவிட்டது. யாருடை அரசாங்கத்திற்கு எதிராகத் தான் ப�ோராடிக்கொண்டிருக்கிற�ோம�ோ அந்த அரசாங்கத்திடமிருந்தே தன்னுடைய மனைவி மாதச் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தது மிர்டா மீது அவருக்குக் கடும் க�ோபத்தை ஏற்படுத்திவிட்டது. சிறையில் அவரைச் சந்திக்க வந்த சமயங்களில் கூட மிர்டா இதைப் பற்றி அவரிடம் எதுவும் ச�ொல்லவில்லை. படிஸ்டா அரசாங்கத்தின் ஊழல் பணத்தைச் சம்பளமாக வாங்கியதை, அந்த விசயத்தைத் தன்னிடம் மறைத்ததைத் தன் மனைவி தனக்கு இழைத்த துர�ோகமாகவே பார்த்தார் பிடல். விவாகரத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். உள்துறை அமைச்சர் ஹெர்மிடா மீதும் இதற்காகக் குற்றம் சுமத்தினார். பிடல் படிஸ்டாவிற்கு எதிராகப் புரட்சி ப�ோராட்டம் என்று கூறிக்கொண்டே படிஸ்டாவின் அரசாங்கத்தில் அவருடைய மனைவியை வேலைக்குச் சேர்த்துவிட்டு மாதச் சம்பளம் வாங்கிப் பிழைத்திருக்கிறார் என்பது ப�ோன்று தனது செல்வாக்கைக் குறைக்கும் சூழ்ச்சியான காரியத்தை உள்துறை அமைச்சர் ஹெர்மிடா செய்துவிட்டார் என்று பகிரங்கமாக அறிவித்தார். பிடல் தன் மீது வைத்த இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டு உள்துறை அமைச்சர் ஹெர்மிடாவிற்கு மனச்சங்கடமாகிவிட்டது. அமைச்சர் ஹெர்மிடா நேரடியாகவே பிடலை சந்திக்கச் சிறைக்கு வந்துவிட்டார். தன்னுடைய நிலையை அவருக்கு விலக்கினார். பிடலின் மைத்துனர் ரபேலின் வேலை இது என்பதை அவர் விளக்கினார். பிடலுக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது. உள்துறை அமைச்சர் ஹெர்மிடா மீது தான் வைத்த குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். உள்துறை அமைச்சர் ஹெர்மிடா 118
நவீனா அலெக்சாண்டர்
வந்து பிடலை பார்த்துச் சென்ற பிறகு பிடலின் சிறை அறைக்குப் பல வசதிகள் செய்து தரப்பட்டது. மின்சார இணைப்பு க�ொடுக்கப்பட்டு விளக்கு ப�ொருத்தப்பட்டது. சுத்தமான துணிகள் அவருக்குக் க�ொடுக்கப்பட்டது. க�ொடுக்கப்பட்ட உணவின் தரம் கூட உயர்த்தப்பட்டிருந்தது. பிடலுக்கும் மிர்டாவிற்கும் விவாகரத்து க�ொடுக்கப்பட்டது. பிடலின் மகன் பிடலிட்டோவை வளர்க்கும் ப�ொறுப்பும் மிர்டாவிடமே க�ொடுக்கப்பட்டது. வெளியே ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. படிஸ்டா ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சார ஊர்வலங்களில் எல்லாம் ஹைடி சான்டாமரியாவும் மெல்பாவும் சிறையில் இருக்கும் புரட்சிகர வீரர்களுக்கான அம்னெஸ்டி நியாய விசாரணை கேட்டு முழக்கங்கள் எழுப்பினார்கள். படிஸ்டாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி க�ொடுத்தார்கள். தான் நடத்தும் கண்துடைப்பு தேர்தல் நாடகத்திற்கு ஜனநாயகத்தன்மையை ப�ொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் படிஸ்டாவிற்கு. வேறு வழியில்லாமல் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கான அம்னெஸ்டி கமிட்டி உருவாக்கப்பட்டது. பிடலின் பிற்கால வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்க இருந்த இரண்டு இளம் பெண்களும் அந்தக் கமிட்டியில் இருந்தார்கள். ஒருவர் வில்மா எஸ்பின், இவர் பின்னாளில் ரவுல் காஸ்டிர�ோவை திருமணம் செய்துக�ொண்டார். அடுத்தவர் சிலியா சான்சேஷ், இவர் பின்னாளில் பிடலின் காரியதரிசியாக இருந்தவர். மான்கடா தாக்குதலுக்குப் பிறகு மெக்சிக�ோ நாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்த இரண்டு சக புரட்சியாளர்களையும் பகிரங்கமாக நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டார் பிடல். அப்படி நடக்கும் பட்சத்தில் படிஸ்டா அரசிற்கு இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று மீண்டும் புரட்சிகர வீரர்கள் மீது விசாரணையைத் த�ொடங்க வேண்டும் அல்லது அவர்களுக்குப் ப�ொது மன்னிப்பு க�ொடுத்து விடுவிக்க வேண்டும். மீண்டும் புரட்சிகர வீரர்கள் மீது விசாரணையைத் த�ொடங்கினால் தேர்தல் சமயத்தில் படிஸ்டா அசிங்கப்பட்டு நிற்கவேண்டும். இதைப் படிஸ்டா விரும்பமாட்டார் என்பதைப் பிடல் மிகச் சரியாகவே கணித்திருந்தார். 119
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
மார்ச் 1955-ல் காங்கிரசிற்கு முன்னால் அம்னெஸ்டி மில் வந்தது. எதிர்காலத்தில் எத்தகைய புரட்சிகர நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் என்கிற நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் அரசாங்கம் சிறையில் இருக்கும் புரட்சிகர வீரர்களை விடுதலைச் செய்வதாக அறிவித்தது. பிடலும் அவருடைய சக வீரர்களும் இந்த நிபந்தனைக்கு உடன்படச் சம்மதிக்கவில்லை. தாங்கள் சிறை தண்டையை முழுதாக அனுபவித்துக்கொள்வதாக அறிவித்தார்கள். கண் துடைப்பு தேர்தல் மூலம் ஜனாதிபதியாகிவிட்ட படிஸ்டா அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் க�ொண்டு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அவர்களை விடுதலைச் செய்ய ஒப்புக்கொண்டார். அவர் இப்படி ஒரு அரசியல் நகர்வு எடுக்கக் காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குக் காவடி தூக்கிப் பல அமெரிக்கப் பெரு நிறுவனங்களைக் கியூபாவில் முதலீடு செய்ய வைத்திருந்தார். இதன் மூலம் கியூபாவின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதாக அவர் கருதினார். கியூபாவின் முக்கிய நகரங்கள் எங்கும் வானுயரக் கட்டிடங்கள் முளைத்து எழுந்தன. பணக்காரர்களின் வாழ்க்கை தரம் மேலும் அதிகமாகி அவர்கள் மேலும் பணக்காரர்களாகச் சேரிகள் மேலும் சேரிகள் ஆகி ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் க�ொண்டிருந்தார்கள். நடுத்தர வர்கமும் அமெரிக்கக் கலாச்சாரத்தை ந�ோக்கி நகர நிர்ப்பந்தித்தது படிஸ்டாவின் ப�ொருளாதாரக் க�ொள்கை. அமெரிக்காவிலிருந்து சி.ஐ.ஏ ஏஜெண்டுகள் த�ொடங்கித் துணை ஜனாதிபதி வரை கியூபாவிற்கு வந்து சுற்றுப் பயணம் செய்து பார்த்துப் படிஸ்டாவின் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றுக�ொண்டிருந்தார்கள். இந்த நிலையில் புரட்சிகர வீரர்களைச் சிறையில் த�ொடர்ச்சியாக வைத்திருப்பதும் அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு ப�ொது மக்களிடம் கழிவிரக்கத்தைத் தேடுவதையும் இனிமேலும் ஏன் அனுமதிக்கவேண்டும் என்று கருதினார். அதனால் சிறையில் இருந்த புரட்சிகர வீரர்களை அம்னெஸ்டி பில் மூலம் விடுதலைச் செய்ய உத்தரவிட்டார். மே 1955, 15-ல் பிடலும் அவருடைய சகாக்களும் சிறையில் இருந்து விடுதலைச் செய்யப்பட்டார்கள்.
120
நவீனா அலெக்சாண்டர்
மீண்டும் ஒரு புரட்சி அதில் இல்லை த�ோல்வி – மெக்சிக்கோ நாட்கள் -I பிடல் சிறையில் இருந்து வெளியே வந்தப�ோது அவருக்குச் சிறை வாசலிலேயே பெரும் வரவேற்பு க�ொடுக்கப்பட்டது. சிறை வாசலிலேயே பத்திரிக்கையாளர்களுக்கும் வான�ொலி நிலையங்களுக்கும் அவர் பேட்டிகளைக் க�ொடுத்தார். ஹவானாவிற்கு திரும்பும் வழியிலும் அவருக்கு வரவேற்புகள். பத்திரிக்கை பேட்டிகளும் வான�ொலி நிகழ்ச்சிகளும் த�ொடர்ந்தன. அவர் தங்க முடிவு செய்திருந்த லிடியாவின் வீடு வரை பல்கலைக்கழக மாணவர்கள் பிடலை த�ோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றார்கள். விடுதலைப் பெற்ற ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் மூவ்மென்ட் இயக்கத்திற்கு உயிர் க�ொடுக்கத் த�ொடங்கிவிட்டார். கார்சியா பார்சினா உருவாக்கிய ரிவல்யூசனரி நேஷனலிஸ்ட் மூவ்மென்டை (எம்.என்.ஆர்) தன்னுடைய இயக்கத்துடன் இணைக்கும் சந்திப்புகளை ஏற்பாடு செய்தார். இந்த இடத்தில் எம்.என்.ஆர் இயக்கம் குறித்து நாம் சிறிது தெரிந்துக�ொள்ள வேண்டியிருக்கிறது. நேஷனல் ரெவல்யூஷனரி மூவ்மென்ட் (எம்.என்.ஆர்) இயக்கத்தை உருவாக்கியவர் ரபேல் கார்ஷியா பார்சீனா. இவர் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறை பேராசிரியராக இருந்தவர். எட்டி சிபாசுடன் சேர்ந்து 1947-ல் ஆர்தோட�ோக்சாஸ் கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். மிக உயர்ந்த இராணுவக் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராக இருந்தவர். இதன் காரணமாகப் பல இராணுவ அதிகாரிகளுக்கு ஆதர்ச நாயகனாக இருந்தவர். இரத்தம் சிந்தாமல் படிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்கிற எண்ணம் இவருக்கும் இருந்துவந்தது. இதன் காரணமாக இவர் உருவாக்கியதே எம்.என்.ஆர் இரகசிய இயக்கம். பிடலின் இயக்கத்தைப் ப�ோல் இல்லாமல் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த அனைவரும் நடுத்தரக் மேல் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். அதிகாரம் மிக்க அரசாங்கப் பணிகளில் வேலைச் செய்பவர்களாகவும் பல்கலைக்கழக மாணவர்களாகவும் இருந்தவர்கள். ஹவானாவில் இருந்த கேம்ப் க�ொலம்பியா இராணுவ மையத்தைத் தாக்குவது 121
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ரபேல் கார்ஷியாவின் திட்டம். இந்தத் தாக்குதலில் அவருக்கு உதவி செய்ய அந்த இராணுவ மையத்தில் இருந்த சில அதிகாரிகளும் அவருக்கு உதவி செய்வதாகச் ச�ொல்லியிருந்தார்கள். இந்த நிலையில் மார்ச் 1953-ல் ரபேல் கார்ஷியா பிடலை சந்தித்துத் தன்னுடைய தாக்குதல் திட்டத்தை விளக்கி ஆதரவு தரும்படி கேட்டார். பிடலும் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். எதிரியை யார் தாக்கினால் என்ன. இந்தத் தாக்குதலைத் த�ொடங்குவதற்கு முன்பாக ரபேல் கார்ஷியா ஒரு மிகப் பெரும் தவறைச் செய்தார். நம்பகமானவர்கள் என்று அவர் நினைத்த அனைவரிடமும் தன்னுடைய தாக்குதல் திட்டத்தைக் குறித்துப் பேசினார். இது அவரைச் சிக்கலில் க�ொண்டுப�ோய் நிறுத்திவிட்டது. தாக்குதலைத் த�ொடங்கும் தினத்தன்று இவரும் இவருடைய கூட்டாளிகளும் கூடியிருந்த வீட்டைக் கச்சிதமாகக் காவல்துறை சூழ்ந்துக�ொண்டு அந்த வீட்டிலிருந்த அனைவரையும் கைது செய்தார்கள். தாக்குதலைத் த�ொடங்குவதற்கு முன்பே அனைவரும் சிறைக்குச் சென்றுவிட்டார்கள். ரபேல் கார்ஷியாவும் அவருடைய கூட்டாளிகளும் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவர் சிறைக்குச் சென்றதும் அப்போதைக்கு எம்.என்.ஆர் இயக்கம் உடைந்து சிதறிவிட்டது. பிடல் சிறையில் இருந்து வந்த பிறகு எம்.என்.ஆர் இயக்கத்திலிருந்த முக்கியத் தலைவர்கள் அனைவரையும் தன்னுடைய இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். இதில் முக்கியமானவர்கள் அர்மான்டோ ஹார்ட் மற்றும் பிராங்க் பியாஸ். இந்த நடவடிக்கைகள�ோடு சேர்த்துத் தான் சிறையில் இருந்தப�ோது உருவாக்கிய 26 ஜூலை மூவ்மென்டையும் இணைத்துப் புதிதாக 26 ஜூலை ரிவல்யூசனரி மூவ்மென்ட் (எம்.ஆர்-26-7) இயக்கத்தை உருவாக்கினார். வரலாறு என்னை மன்னிக்கும் பேச்சு த�ொகுப்பு ப�ொது மக்களிடமும் பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் வினிய�ோகம் செய்யப்பட்டது. அனைத்தும் அருமையாகப் ப�ோய்க் க�ொண்டிருக்கிறது என்று படிஸ்டா நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் பல்கலைக்கழக மாணவர்களிடையே அடிதடி கலவரம் ஒன்று உருவானது. அதைத் த�ொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ அரசு மீண்டும் 122
நவீனா அலெக்சாண்டர்
ஒடுக்குமுறைகளைத் த�ொடங்கிவிட்டது. பத்திரிக்கைகள் மற்றும் வான�ொலிகளின் வாய்களில் மீண்டும் பிளாஸ்திரி ஒட்டப்பட்டது. பிடல் ப�ோன்ற புரட்சிகரத் தலைவர்கள் எந்தப் பத்திரிக்கையிலும் வான�ொலியிலும் இது குறித்துக் கருத்துகள் வெளியிடக் கூடாது என்று நெருக்குதல் க�ொடுக்கப்பட்டது. பிடல் சிறையில் இருந்து வந்த பிறகு அவருடைய கட்டுரைகளைத் தினமும் வெளியிட்டுவந்த லா காலே பத்திரிக்கை இழுத்து மூடப்பட்டது. பிடலின் கருத்துக்களை வெளியிட்டுவந்த மற்றொரு பத்திரிக்கையான அலெர்டாவும் அரசாங்கத்தால் மூடப்பட்டது. அலெர்டா தீவிரக் கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்புவதாகக் காரணம் காட்டப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பில் ரவுல் காஸ்டிர�ோவிற்கு த�ொடர்பு இருப்பதாகக் கருத்துக்களைப் பரப்பியது அரசாங்கம். இதற்குப் பதிலடி க�ொடுத்த பிடல் பத்திரிக்கைகளின் கருத்துகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஏன் அரசாங்கமே வெடி குண்டுகளை வைத்திருக்கக் கூடாது என்று கேட்டார். இதில் கடுப்பான அரசாங்கம் எதிர் வினையாகக் குண்டர்கள் மூலம் பிடலின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம் என்று பேச்சு பரவியது. இதனால் பிடல் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி ரவுலும், நிக்கோ ல�ோபெசும், ம�ோன்டெனும் பாதுகாப்பில் இருந்தார்கள். பிறகு ரவுல் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரியவந்ததும் அவர் மெக்சிக்க நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து, மெக்சிக்கோ நாட்டிற்குச் சென்றுவிட்டார். பிடலும் மெக்சிக்கோவிற்கு சென்றுவிடத் தீர்மானித்தார். ஜூலை 7 1955-ல் அவர் மெக்சிக்கோவிற்கு பறந்தார். செல்வதற்கு முன்பாக அவர் எம்.ஆர் -26-7 இயக்கத்திற்குச் சில இரகசியக் கட்டளைகளையும் க�ொடுத்துவிட்டுத்தான் சென்றார். முன்பே பார்த்ததுதான் பிடல் எந்த ஒரு விசயத்தையும் காரணமில்லாமல் செய்யக் கூடியவர் அல்ல. மெக்சிக்கோவிற்கு செல்லவேண்டும் என்கிற திட்டத்திற்குப் பின்னால் பல பெரிய சங்கதிகள் அடங்கியிருந்தது. சிறையில் இருந்த வந்த நாள் த�ொடங்கி மீண்டும் ஒரு புரட்சி அந்தப் புரட்சியில் த�ோல்வி என்கிற பெயருக்கே இடமில்லை என்று ச�ொல்லி வந்தார். இதைப் பத்திரிக்கைகளிலும் சூசகமாக மக்களிடம் ச�ொல்லியபடிதான் இருந்தார். ஆனால் மக்கள் இனி ஒரு புரட்சிக்கு வாய்ப்பே இல்லை என்கிற மனநிலையிலேயே 123
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இருந்தார்கள். பிடலின் நண்பர்களுக்கும் அதுவே எண்ணமாக இருந்தது. மேலும் பிடலால் முன்பை ப�ோலத் தன்னுடைய இயக்கத்தின் செயல்பாடுகளைப் படு இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாத நிலையும் கியூபாவில் இருந்தது. இருபத்தி நான்கு மணிநேரமும் பிடல் அரசாங்கத்தின் உளவு பார்வையிலேயே இருந்தார். இராணுவக் கேந்திரம் மீது தாக்குதல் நடத்தியவரை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளுமா என்ன அரசாங்கம். அவரை விடுதலைச் செய்துவிட்டாலும் அவரின் ஒவ்வொரு செயலையும் ம�ோப்பம் பிடித்துக்கொண்டே இருந்தது அரசாங்கம். இந்த நிலையில் பிடல் பேசிக்கொண்டிருந்த மீண்டும் ஒரு புரட்சி அதில் இல்லை த�ோல்வி என்கிற மந்திரத்தை அவர்கள் நம்பும் மனநிலையில் இல்லை. பிடலுக்கும் நன்கு தெரியும் அரசாங்கம் தன்னை விடுதலைச் செய்துவிட்டாலும் தன்னால் இனி முன்பு ப�ோல இயங்க முடியாது என்று ஆகவே அவர் தேர்ந்தெடுத்தது மெக்சிக�ோவை. தனது இரண்டாவது புரட்சிகரத் தாக்குதலுக்குத் தேவையான வீரர்களையும் அவர்களுக்குத் தேவையான இராணுவப் பயிற்சிகளையும், ஆயுதப் பயிற்சிகளையும் க�ொடுக்கவே பிடல் மெக்சிக�ோவைத் தேர்ந்தெடுத்து அங்குச் செல்லத் திட்டமிட்டார். எம்.ஆர்-26-7 இயக்கத்தை மெக்சிக்கோவில் நிறுவி இந்தக் காரியங்களைப் பார்க்க அவர் முடிவு செய்திருந்தார். தேவையான படையும், படைக்குத் தேவையான பயிற்சியும் ஆயுதங்களும் கிடைத்த பிறகு கியூபா திரும்பிப் படிஸ்டா அரசுக்கு எதிராகக் க�ொரில்லா தாக்குதல் நடத்துவதுதான் அவருடைய முழுமையாகத் திட்டம். இந்தத் திட்டதிற்குத் தேவைப்படக் கூடிய நிதியை இங்கே சேகரித்து அனுப்பும்படி அவர் கியூபாவில் இருந்து கிளம்பும்போது இங்கே இருந்த எம்.ஆர்-26-7-க்கு கட்டளை க�ொடுத்துவிட்டுக் கிளம்பினார். இடதுசாரி சிந்தனை க�ொண்டவர்களுக்குப் பாதுகாப்பு தருவதில் மெக்சிக்கோ பெயர் பெற்றது. இதன் காரணமாகவே கியூபாவில் அரசின் பயங்கரவாதத்திற்கு உள்ளாகும் இடது சாரி சிந்தனையாளர்கள் கியூபாவைத் தங்களது இரண்டாம் 124
நவீனா அலெக்சாண்டர்
தாயகமாகக் க�ொள்வார்கள். இதன் அடிப்படையிலேயே பிடலும் மெக்சிக்கோவிற்கு பயணமானார். அவருக்கு அங்கே பல நண்பர்களும் உண்டு. கூடவே எதிரிகளும் உண்டு. மெக்சிக்கோவில் அவர் சிறிய அறை ஒன்றை வாடைக்கு எடுத்துக்கொண்டு அதில் தங்கினார்.
125
அந்தப் புரட்சிகர நட்பின் முதல் சந்திப்பு – மெக்சிக்கோ நாட்கள் - II
எ
ர்னஸ்டோ சே குவேராவை முதலில் சந்தித்தது ரவுல் காஸ்டிர�ோதான். நாடு கடத்தப்பட்டவர்களுக்கான தேநீர் குழுமத்தில் வைத்துத்தான் ரவுல் சே குவேராவைச் சந்தித்தார். (அப்போது எர்னஸ்டோ குவேராவிற்குச் சே என்கிற அடைம�ொழி பெயருடன் சேர்ந்திருக்கவில்லை). அந்தச் சந்திப்பின் ப�ோது சே குவேரா தான் சில கியூபர்களை க�ோஸ்டோ ரிக்காவில் சந்தித்ததாகவும் அவர்கள் பிடல் காஸ்டிர�ோ என்பவரின் தலைமையில் கியூபாவில் மான்கடா தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்றும் ச�ொன்னார். ரவுல் அந்தப் பிடல் காஸ்டிர�ோ தனது சக�ோதரன்தான் என்றும் அவரும் தற்போது இங்கேதான் இருப்பதாகவும் ச�ொல்லக் குவேரா பிடலை சந்திக்க விரும்பினார். அதன் பேரில் ரவுல் குவேராவைப் பிடல் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
வரலாற்று சிறப்பு மிக்க இரண்டு நண்பர்களின் சந்திப்பு நடந்தது. சே குவேராவும் பிடலைப் ப�ோலவே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சித்தாந்தம் க�ொண்டவர். பின்னாளில் பிடலே விளக்கியதைப் ப�ோலச் சே குவேரா ஒரு மேம்பட்ட புரட்சிகர எண்ணங்களைக் க�ொண்டவர். சற்றேர் குறையத் தன் சம வயதில் இருந்த ஒரு புரட்சிக்காரரைப் பிடல் அதிக அளவில் மதித்தார் என்றால் அது குவேரா மாத்திரமே. பிடலை ப�ோலவே சே குவேராவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எந்த இடத்தில் பார்த்தாலும் அதற்கு எதிராகப் ப�ோராட வேண்டும் என்கிற வேகம் க�ொண்டவர். பிடல் தன்னுடைய கியூப புரட்சிக்கான திட்டத்தை அவரிடம் விளக்கினார். அன்றைக்கு இரவு முழுவதும் இருவரும் அந்தத் திட்டத்தைக் குறித்தே பேசினார்கள். விடியும் தறுவாயில் சே குவேரா தானும் 126
நவீனா அலெக்சாண்டர்
அந்தத் திட்டத்தில் இருப்பதாகப் பிடலின் அனுமதியை எதிர்பார்க்காமலேயே தன்னையும் கியூப புரட்சிப் ப�ோராட்டத்தில் சேர்த்துக்கொண்டார். அவர்களின் திட்டத்திற்கு முதல் தேவையாக இருந்தது பிடல் சேர்க்கும் ஆட்களுக்கு முறையான இராணுவப் பயிற்ச்சி அளிக்கக் கூடிய ஒருவர். பிடலின் தேடலுக்கு ஏற்றார் ப�ோல ஒருவர் கிடைக்கவும் செய்தார். அவர் அல்பர்டோ பேய�ோ. மிகவும் வயதானவர். க�ொரில்லா ப�ோர் முறையில் தேர்ச்சி பெற்றவர். அவரும் கியூபாவைச் சேர்ந்தவர்தான். ஸ்பானிஷ் மில்லட்டரி அகாடமியில் க�ொரில்லா ப�ோர் முறை குறித்துப் படித்தவர். ஸ்பானியப் படையில் சேர்ந்து ம�ோர�ோக்கோவில் சண்டையிட்டவர். கரீபியன் பகுதியில் இருந்த பல புரட்சி குழுக்களுக்குக் க�ொரில்லா ப�ோர் முறை பயிற்சி க�ொடுத்தவர். பிடல் பேய�ோவை சந்தித்தப�ோது அவரிடம் எதுவுமே இல்லை. படைக்குத் தேவையான ஆட்கள் இல்லை, அவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள் இல்லை, ஆயுதங்களை வாங்கப் பணம் இல்லை, பயிற்சி பெற்ற படையைக் கியூபாவிற்கு அழைத்துச் செல்லப் படகு இல்லை. ஆனாலும் இவைகள் எல்லாம் தன்னிடம் இருப்பதைப் ப�ோல மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர் பேய�ோவை சந்தித்ததைக் குறித்துப் பிற்பாடு பேய�ோ நினைவு கூறுகிறார். என்னைச் சந்தித்த ப�ோது அவரிடம் எதுவும் இல்லையென்றாலும் அவரிடமிருந்த தெளிவும் தன்னம்பிக்கையும் என்னை அவருடைய க�ோரிக்கைக்குச் சம்மதிக்க வைத்தது. பிடல் கியூபாவிலும் தாக்குதலுக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்க எம்.ஆர்-26-7 இயக்கத்தின் மூலம் த�ொடர்ச்சியாக வேலைச் செய்துக�ொண்டிருந்தார். சான்டியாக�ோவிலும் ஹவானாவிலும் இருந்த இயக்கத் தலைவர்களை ஆர்தோட�ோக்சாஸ் கட்சியில் இருக்கும் புரட்சிகரச் சிந்தனை க�ொண்ட இளைஞர்களைத் தன்னுடைய இயக்கத்தின் பக்கம் இழுக்கக் கட்டளையிட்டார். அவர்களின் வழியே கியூப மக்களுக்கு மெனிபெஸ்டோ எண்.1 என்று அறிக்கையையும் வெளியிட்டார். கியூபாவில் இருந்த பழைய சகாக்களான பெட்ரோவிற்கும் பிராங்க பையசுக்கும் வேறு ஒரு இரகசிய வேலையைக் க�ொடுத்திருந்தார். பிடல் கப்பலில் அழைத்து வர இருந்த புரட்சிப் 127
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
படை கரையேறுவதற்கான ஏற்ற இடத்தைக் குறித்த உளவு வேலை அவர்களுடையது. பிடலின் படை கரையேறியதும் எப்படிச் சத்தமே இல்லாமல் அவர்களை மற்ற இடங்களுக்கு நகர்த்துவது என்கிற முக்கியப் ப�ொறுப்பும் அவர்களுக்குக் க�ொடுக்கப்பட்டது. படைக்குத் தேவையான ஆயுதங்களை வாங்கப் பணம் தேவைப்பட்டது. இந்தத் திட்டத்திலேயே பிடலுக்கு பெரும் தலைவலியாக இருந்த விசயம் பணம் மாத்திரம்தான். பிடல் பணத்திற்கு முக்கியத்துவம் க�ொடுப்பவர் கிடையாது. பணத்தைப் பெரிதாகக் கருதியவரும் கிடையாது. அவர் வக்கீல் த�ொழில் பார்த்தப�ோது கூட அவர் யாரிடமும் கறாராகப் பணத்தைக் கட்டணமாக வாங்கியவர் கிடையாது. ஆனால் ப�ோராட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று வருகிறப�ோது பணம் அவருக்குப் பெரும் பிரச்சனையைக் க�ொண்டுவந்தது. மெக்சிக்கோவில் அவருக்குத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் அவர் இதற்காகப் பணம் கேட்டு முடிந்தவரை வாங்கியும் வைத்திருந்தார். ஆனால் அந்தப் பணம் ப�ோதுமானதாக இருக்கவில்லை. அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்த கியூபர்களிடம் தன் திட்டத்தை விளக்கிப் பணம் திரட்டலாம் என்று முடிவு செய்தவராக 1955 அக்டோபர் மாதம் அவர் அமெரிக்காவிற்குக் கிளம்பினார். ஆறு வாரச் சுற்றுப்பயணம் திட்டம் வைத்துக்கொண்டு நியு யார்க், மயாமி, டம்பா, பிள�ோரிடா மற்றும் பல நகரங்களுக்கு ஒவ்வொன்றாகப் ப�ோகத் த�ொடங்கினார். படிஸ்டாவின் ஏஜன்டுகளும், அமெரிக்காவின் எப்.பி.ஐ-யும் அமெரிக்காவில் சுற்றியலைந்துக�ொண்டிருந்த பிடலின் மீது தங்களின் கவனத்தைத் திருப்பினார்கள். பணத்தைச் சேகரிக்கும் பிடல் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வார் என்று ஒருவாரு படிஸ்டாவின் ஆட்கள் ஊகித்துவிட்டதால் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அவரால் ஒன்றும் செய்ய முடியாதபடி அவருடைய செல்வாக்கைக் கெடுக்கும் வேலையில் இறங்கினார்கள். கியூபாவிலும் மெக்சிக�ோவிலும் பிடல் அமெரிக்காவில் சேகரிக்கும் பணத்தைக் க�ொண்டு ஊழல் செய்யப்போவதாகச் செய்திகளைப் பரப்பிவிட்டார்கள். மெக்சிக்கோ திரும்பிப் பிடலுக்கு அப்போதுதான் தெரியவந்தது 128
நவீனா அலெக்சாண்டர்
கியூப பத்திரிக்கைகள் தன்னைப் பற்றி இப்படி எழுதும் சங்கதி. குறிப்பாக ஒரு காலத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த ப�ோஹீமியன் பத்திரிக்கை கூட இப்போது அவரைத் தாக்கி எழுதியிருந்தது. தனது நேர்மையான செய்கைகளை முழு உண்மை தெரியாமல் கியூப பத்திரிக்கைகள் விமர்சனம் செய்வதைக் கண்டு அவருக்குக் க�ோபம் வந்தது. தனது விளக்கத்தை அந்தப் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பினார். கியூப மக்களுக்காக மெனிபெஸ்டோ எண். 2-யை எழுதி அனுப்பினார். ‘எத்தனை முறை எனது மகனுக்குப் பால் வாங்கக் கூடக் காசில்லாமல் திண்டாடி இருக்கிறேன். உரியக் கட்டணம் செலுத்தாமல் எத்தனை முறை எனது விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது, இந்தச் சமயங்களில் எல்லாம் என் சட்டை பாக்கெட்டில் கட்டு கட்டாகப் பணமிருந்தும் ஒருப�ோதும் நான் அவைகளை ஒருப�ோதும் எனது ச�ொந்தச் செலவுகளுக்கு என்று எடுத்துப் பயன்படுத்தியது இல்லை. அவைகளை நான் எதற்காகப் பெற்றேன�ோ அதற்காகவே முழுதும் செலவு செய்திருக்கிறேன்…..’ இப்படிப் ப�ோனது அவருடைய தன்னிலை விளக்கம். திட்டத்தின் அடுத்த கட்டமாக மெக்சிக்கோவில் இருந்த ஆர்லாண்டோ டே கார்டினாசைப் ப�ோய்ப் பார்த்தார் பிடல். ஆர்லாண்டோ மெக்சிக்கோவில் வசித்த கியூப நாட்டைச் சேர்ந்தவர். பெரிய அளவில் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். முன்னாள் கியூப ஜனாதிபதி பிரைய�ோவிற்கு தேவையான ஆயுதங்களை வாங்கிக் க�ொடுத்தவரும் இவர்தான். முதலில் பிடலுக்கு ஆயுதங்களை வாங்கிக் க�ொடுக்க மறுத்தவர் பிறகு பிடலின் விடாப்பிடியான துரத்தல் மூலம் அதற்கு ஒப்புக்கொண்டார். அடுத்தபடியாக மெக்சிக்கோ சிட்டியில் சில வீடுகளை வாடகைக்குப் பிடித்து எம்.ஆர்-26-7 இயக்கத்தில் சேர்த்துக்கொண்டிருந்த வீரர்களுக்குக் கானல் பேய�ோ மூலம் முதல் கட்டப் பயிற்சிகளைத் த�ொடங்கினார். பயிற்சிகள் ஆயுதங்களைக் கையாளும் கட்டத்திற்கு வந்ததும் தென் கிழக்கு பகுதியில் இருந்த சால்கோ நகரில் ஒரு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்தார் பிடல். அங்கே கனல் பேய�ோ இயக்கத்தினருக்கு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சியைத் 129
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
த�ொடங்கினார். இந்த நிலையில் பிடல் பயிற்சிகளைத் துரிதப்படுத்த விரும்பினார். காரணம் அமெரிக்காவில் அவர் இந்தத் திட்டத்திற்காகப் பணம் சேகரித்தப�ோது 1956 வருடத்தின் முடிவிற்குள்ளாகத் தான் கியூபாவைப் புரட்சியின் மூலம் படிஸ்டாவிடமிருந்து மீட்டுவிடுவேன் என்று வாக்கு க�ொடுத்திருந்தார். இதுவும் அவருக்கு அவரே விதித்துக்கொண்ட காலவரைக் கட்டுப்பாடு. அந்தக் கட்டத்தில் கியூபாவிலிருந்து அவருக்கு ஒரு முக்கியத் தகவல் வந்தது. கியூப அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் அவருக்கு என்று சில ஆதரவாளர்கள் இருந்தார்கள் அவர்களின் மூலம் இந்தத் தகவல் அவருக்குக் கிடைத்தது. படிஸ்டா அரசாங்கத்தின் மிலிட்டரி இன்டலிஜன்ட்ஸ் (எஸ்.ஐ.எம்) அமைப்பு பிடலின் கதையை முடிக்கப் ப�ோட்டிருக்கும் திட்டமே அந்தத் தகவல். கியூபாவின் கப்பற்படை மூலம் மெக்சிக்க நாட்டிற்குள் இரண்டு ஏஜன்டுகளை மெக்சிக்க ப�ோலிசாரின் உடையில் அனுப்பிப் பிடலை கைது செய்து அவரை ஒதுக்கு புறமான பகுதிக்குக் க�ொண்டு க�ொலை செய்துவிட்டு அப்படியே நான் இரகசியத் திட்டம் த�ொடர்பாக வெளிநாட்டிற்குச் செல்கிறேன் என்று பிடல் எழுதியதைப் ப�ோல ஒரு கடிதத்தை அவருடைய சகாக்களுக்குக் கசியவிடுவது என்பது அந்தத் திட்டம். இந்தச் சதி திட்டத்தை முறியடிக்க நினைத்த பிடல் அந்தத் தகவலைப் பகிரங்கமாகப் பத்திரிக்கைகளுக்குக் க�ொடுத்துவிட்டார். இது குறித்துப் பத்திரிக்கைகள் பேசத் த�ொடங்கியதும் அந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் ப�ோட்டுவிட்டது மிலிட்டரி இன்டலிஜன்ட்ஸ். இந்தத் திட்டம் கிடப்பில் ப�ோடப்பட்டாலும் படிஸ்டா அரசு பிடலை கைது செய்யும்படி மெக்சிக்க தூதரகத்திற்கு அழுத்தம் க�ொடுத்தது. இதன் காரணமாக மெக்சிக்க சிட்டியில் ப�ோலன்கோ நகரில் பிடல் வாடகை எடுத்திருந்த வீடு ச�ோதனையிடப்பட்டது. அங்கே பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. அங்கே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் மெக்சிக்கோவில் இருந்த சில எம்.ஆர்-26-7 தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தெருவில் இரண்டு நண்பர்களுடன் பேசியபடி சென்றுக�ொண்டிருந்த பிடல் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்குக் க�ொண்டு செல்லப்பட்டார். சால்கோவில் பிடல் வாடகை எடுத்திருந்த 130
நவீனா அலெக்சாண்டர்
பண்ணையும் ச�ோதனையிடப்பட்டு மேலும் சில எம்.ஆர்-26-7 இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒட்டும�ொத்தமாகப் பிடலின் நாற்பது சகாக்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள் ரவுல் காஸ்டிர�ோ நீங்களாக. இந்தக் கைது நடவடிக்கை செய்தியைக் கியூப மற்றும் மெக்சிக்க பத்திரிக்கைகள் வெளியிட்டன. செய்தி எப்படி வரவேண்டும் என்று கியூப தூதரகம் எழுதிக்கொடுத்தத�ோ அதையே பத்திரிக்கைகள் பிரசுரித்தன. பாடிஸ்டா அரசுக்கு எதிராகச் சதியில் ஈடுபட்டதால் பிடலும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டார்கள் என்று ச�ொன்ன எழுதிக்கொடுக்கப்பட்ட செய்திகள். கைது செய்தவர்களை மீண்டும் கியூபாவிற்கே அனுப்பிவிடப் ப�ோவதாகச் ச�ொன்னது மெக்சிக்க ப�ோலிஸ். கியூபாவிற்குத் தங்களை அனுப்பினால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அந்த நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார் பிடல். அவருடைய மெக்சிக்க நண்பர்கள் அவரை விடுதலைச் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப�ோது நீதிபதி அவர்களை விடுதலைச் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் மெக்சிக்க உள்துறை அமைச்சரகம் பிடலை விடுதலைச் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ச�ொன்னது. இதைத் த�ொடர்ந்து வெளியுறவு சட்டச் சிக்கல் குறித்த குழப்பங்கள் த�ோன்றின. மெக்சிக்கோவின் முன்னாள் ஜனாதிபதி கார்டினாஸ் இந்த விசயத்தில் நேரடியாகத் தலையிட்டுப் பிடலை விடுதலைச் செய்யும்படி க�ோரிக்கை வைத்தார். இதன் பிறகு பிடலுடன் கைது செய்யப்பட்ட அவருடைய கூட்டாளிகள் மட்டும் விடுதலைச் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு விரைவில் மெக்சிக�ோவை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்கிற நிபந்தனையும் க�ொடுக்கப்பட்டது. பிடலும், சே குவேராவும், காலிக்ஸ்டோ கால்சியாவும் சிறையிலேயே இருந்தார்கள். பனாமாவில் நடந்துக�ொண்டிருந்த பான்-அமெரிக்கன் மாநாடு முடியும்வரை பிடலை விடுதலைச் செய்ய முடியாத நிலை. பிடலை விடுதலைச் செய்தால் தான் பான்-அமெரிக்கன் மாநாட்டிற்கு வரமாட்டேன் என்று சிறுபிள்ளைப�ோலப் படிஸ்டா 131
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
அடம்பிடித்ததால் மெக்சிக்கோவிற்கு இந்தத் தர்மச் சங்கட நிலை. பிடலைக் கண்டு படிஸ்டா பயப்படுவதைக் கிண்டல் செய்யும் விதமாகப் ப�ோஹீமியா பத்திரிக்கை புதிய வார்த்தை ஒன்றைத் தன்னுடைய தலையங்கத்தில் எழுதியது. அந்த வார்த்தை ‘பிடலிஸ்டா காம்பளக்ஸ்’. அதாவது பிடல் காஸ்டிர�ோவின் பிம்பத்தைக் குறித்த பயம் என்று இதற்கு விளக்கம் எழுதியது அந்தப் பத்திரிக்கை. பனாமா மாநாட்டிற்குப் பிறகு பிடல் மாத்திரம் விடுவிக்கப்பட்டார். சே குவேராவும் காலிக்ஸ்டோவும் குவாத்தமாலா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சிகரச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்களை விடுதலைச் செய்ய முடியாது என்று ச�ொல்லிவிட்டது காவல் துறை. தங்களை விடுதலைச் செய்வதற்காக வேண்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சே குவேரா ச�ொல்லியும் உங்களை இப்படியே விட்டுவிட்டுப் ப�ோகமாட்டேன் என்று பதில் ச�ொல்லியிருக்கிறார் பிடல். தன்னுடன் ப�ோராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நட்டாத்தில் விட்டுச் செல்லும் சுயநல ந�ோக்கு க�ொண்ட தலைமை பண்பு பிடல் அறியாதது. தன்னுடன் இருப்பவர்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவர்களை மீட்க எந்த விலையையும் க�ொடுக்கும் நிலைக்குச் செல்லக் கூடியவர் பிடல். அப்படியே இந்த விசயத்திலும் நடந்தது. சில வாரங்கள் கழித்துச் சே குவேராவும் காலிக்ஸ்டோவும் விடுதலைச் செய்யப்பட்டார்கள். அமெரிக்கச் சுற்றுப் பயணமெல்லாம் செய்து சேகரித்துச் சேர்த்த பணத்தில் வாங்கிய ஆயுதங்கள் அனைத்தும் காவல் துறை கைப்பற்றிக்கொண்டதால் மீண்டும் ஆயுதத் தேவை பிரச்சனை பிடலுக்கு எழுந்தது. மீண்டும் ஆயுதங்களை வாங்கவேண்டுமானால் மீண்டும் அவருக்குப் பணம் தேவை. செத்தாலும் யாரிடம் கை நீட்டிப் பண உதவி பெறக் கூடாது என்று நினைத்திருந்தார�ோ இறுதியில் அவரிடமே ப�ோய் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் பிடல். அவர் செய்யவே கூடாது என்று நினைத்திருந்தது முன்னாள் ஜனாதிபதி பிரைய�ோசிடம் பண உதவி பெறுவதை. படிஸ்டா அரசாங்கத்தைக் கவிழ்க்க யார் என்ன உதவி கேட்டாலும் 132
நவீனா அலெக்சாண்டர்
அள்ளிக் அள்ளி க�ொடுக்கத் தயாராக இருந்த பிரைய�ோசும் பிடலுக்கு உதவத் தயங்கினார். என்ன இருந்தாலும் அவர் ஆட்சியில் இருந்தப�ோது பிடல் அவரைத் தன்னுடைய பேச்சுகளால் வறுத்தெடுத்த ஆளாயிற்றே. இதில் ஒரு முரண்நகை சம்பவம் ஒன்றும் இருக்கிறது. மெக்சிக்கோவில் இருந்து பிடலை மீண்டும் கியூபாவிற்கே திருப்பி அனுப்பிவிடுவ�ோம் என்று காவல் துறை ச�ொன்ன ப�ோது பிடலுக்கு ஆதரவாகக் குரல் க�ொடுத்தவர்களில் பிரைய�ோசும் ஒருவர். சில நண்பர்களின் சமரசத்தின் மூலம் பிரைய�ோஸ் பிடல் ஆயுதம் வாங்குவதற்குத் தேவையான பணத்தைத் தர ஒப்புக்கொண்டார். ஆனால் இதில் மற்றொரு பிரச்சனையும் இருந்தது. பிரைய�ோஸ் அப்போது டெக்சாஸில் இருந்தார். பிடலை சந்திக்க அவர் மெக்சிக்கோ வந்தால் அவரால் திரும்ப டெக்சாஸ் ப�ோக முடியாது. அதேப�ோலப் பிடல் அவரைப் பார்க்க டெக்சாஸ் சென்றால் திரும்ப மெக்சிக்கோவிற்கு வர முடியாது. இந்த இக்கட்டை சமாளிக்க முடிவு செய்த பிடல் ரிய�ோ கிரான்டே ஆற்றில் குதித்து நீந்திச் சட்டத்திற்குப் புறம்பாக டெக்சாஸிற்குள் நுழைந்து பிரைய�ோசை சந்தித்தார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு பிரைய�ோஸ் உடனடியாக 50,000 அமெரிக்க டாலர்களைக் க�ொடுத்தார். அடுத்த தவணையாக மற்றும�ொரு 50,000 அமெரிக்க டாலர்களைக் க�ொடுப்பதாகப் பிடலுக்கு வாக்களித்தார் பிரைய�ோஸ். எம்.ஆர்-26-7 இயக்கத்திற்கு இது மிகப் பெரிய உந்து சக்தி பணமாக இருந்தது. காவல்துறை ச�ோதனையில் பறிக�ொடுத்த ஆயுதங்கள் அனைத்தையும் மீண்டும் வாங்கிப் பதுக்கிவைத்தார் பிடல். அடுத்த தேவையாக அவருக்கு முன் வந்த நின்றது மெக்சிக�ோவிலிருந்த பயிற்சி பெற்ற புரட்சிப் படையைக் கியூபாவிற்கு அழைத்துச் செல்லத் தேவையான படகு.
133
பாட்டிமா அறிவிக்கப்போகும் சுதந்திரம் – சியாரா மீஸ்டிரா நாட்கள் - I
ப
டையுடன் சியாரா மீஸ்டிரா ப�ோய் இறங்குவதற்கான படகை வாங்கும் வேலைகளைத் த�ொடங்கினார் பிடல். முதலில் கைவிடப்பட்ட அமெரிக்கக் கப்பல் படை படகு ஒன்றை வாங்குவதாகத் திட்டம் ஆனால் இந்தத் திட்டத்தை ஒதுக்கிவிட்டார். மெக்சிக்கோவின் கரீபிய கடல் பகுதியான டுக்ஸ்பான் துறைமுகத்தில் ஒரு மரப்படகைப் பார்த்தார் பிடல். அது ஒரு அமெரிக்கருடையது. அதன் பெயர் கிரான்மா. அதன் ம�ொத்த நீளம் பதிமூன்று மீட்டர்கள். வசதியாக இருபது பேர் அதில் பயணம் செய்யக் கூடிய அளவில் இருந்தது. அந்தப் படகின் இரண்டு ம�ோட்டர்களும் பழுதடைந்த நிலையில் இருந்தது. பல இடங்களில் மரமாத்து வேலைகளும் செய்ய வேண்டியிருந்தது.
பிடல் அந்தப் படகின் நிலையை எடுத்துச் ச�ொல்லி முடிந்தவரை விலையைக் குறைத்தார். இறுதியாக 18,000 அமெரிக்க டாலர்களுக்கு அதை வாங்கினார். துறைமுகத்திற்கு அருகில் இருந்த ஒரு வீட்டில் வைத்தே இதற்கான பணத்தைக் க�ொடுத்தார். அதே வீட்டையே புறப்படும் அன்றைக்குப் படை வீரர்கள் கூடும் இடமாகவும் முன்பே ஆயுதங்களைக் க�ொண்டு வந்து சேகரித்துக்கொள்ளும் இடமாகவும் பிடல் தேர்வு செய்தார். பிடலின் நகர்வுகளைப் படிஸ்டாவின் அரசாங்கம் கவனித்தபடியே இருந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரைய�ோவிடமிருந்த பிடல் ப�ொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டு ட�ொமினிக்கன் ரிபபிலிக் நாட்டின் டிர�ோஜில�ோவின் துணையுடன் 1956 முடிவிற்குள் கியூபாவைத் தாக்க இருப்பதாக அவர் மீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது. மேலும் மெக்சிக்கோவில் இருந்த தனது தூதரகத்தின் மூலம் பிடலையும் அவருடைய கூட்டாளிகளையும் கைது செய்யும்படி 134
நவீனா அலெக்சாண்டர்
மெக்சிக்க அரசாங்கத்திற்குத் த�ொடர்ந்து அழுத்தம் க�ொடுத்தார் படிஸ்டா. பிரான் பையஸ் சான்டியாக�ோவிலிருந்து மெக்சிக்கோவிற்கு வந்து ஒரியன்டிலிருந்த நிலையைப் பிடலிடம் விளக்கினார். அதாவது பிடல் தனது படையும் சியாரா மீஸ்டிராவில் இறங்கும்போது படிஸ்டா இராணுவத்தின் கவனத்தைத் திருப்பும் விதமாக அதே நேரத்தில் ஒரியன்டில் ஒரு ப�ோராட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது திட்டம். ஆனால் ஓரியன்டில் அதற்கான சூழ்நிலை இன்னமும் கனியவில்லை என்று ச�ொன்னார் பிரான்க். மெல்பாவும் இப்படியான ஒரு செய்தியுடன் பிடலை சந்தித்தார். ஆனால் ஏற்ற சூழ்நிலைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்க விரும்பவில்லை பிடல். அவருக்கு 1956 வருடத்திய முடிவிற்குள் தன் திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்கிற தனக்குத்தானே விதித்துக்கொண்ட காலக்கெடுவின் அழுத்தம். எம். ஆர்-26-7 இயக்கம் 1956 நாங்கள் திரும்புவ�ோம் இல்லையென்றால் தியாகிகளாவ�ோம் என்கிற வாசகம் க�ொண்ட துண்டு காகிதங்களைக் கூடச் சுற்றில் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படிஸ்டாவின் அரசாங்கம் பிடலின் இரகசியத் தாக்குதல் குறித்து அறிந்துவைத்திருக்கும் நிலையில் தாக்குதலை நிகழ்த்துவது ஆபத்தில் முடியும் என்று கானல் பேய�ோவும் பிடலை எச்சரிக்கை செய்தார். ஆனால் பிடலுக்கு வேறு வழியில்லை. தன்னுடைய திட்டங்களை எதிரிக்குக் காட்டிக் க�ொடுத்தது அவருடைய பழைய பல்கலைக்கழக நண்பரான ரபேல் டெல் பின�ோவாகத்தான் இருக்கும் என்று சந்தேகித்தார் பிடல். பெரும் பணத்திற்காக அவன் இதைச் செய்திருக்கலாம் என்று நினைத்தார். எது எப்படிய�ோ பிடலின் திட்டங்கள் வெளியே தெரியத் த�ொடங்கிவிட்டது. அதிலும் முக்கியமாக யாருக்குத் தெரியக் கூடாது என்று இரகசியமாகக் காப்பாற்றி வந்தார�ோ அந்த எதிரிக்கே தெரிந்துவிட்டது. நவம்பர் 21 அன்று மெக்சிக்க ப�ோலிஸ் தெரேசா கசுச�ோசின் வீட்டைச் ச�ோதனை செய்து பிடல் சேகரித்து வைத்திருந்த அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றிச் சென்றது. காவல்துறையில் இருந்த நண்பர் ஒருவர் மூலம் பிடலுக்கு கிடைத்த தகவல் ஒன்று இப்படிச் ச�ொன்னது, அடுத்த எழுபத்தி இரண்டு மணி நேரத்திற்குள் அவர் 135
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
மெக்சிக�ோவை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு ஆளாகவேண்டியதுதான். பிடல் உடனடியாகச் சான்டியாக�ோவில் இருந்த பிரான்க்குக்கு தந்தி செய்தி ஒன்று அனுப்பினார். ‘நீங்கள் கேட்ட புத்தகம் அச்சில் இல்லை’ என்று சங்கேத ம�ொழியில் இருந்தது செய்தி. இந்தச் செய்தியின் அர்த்தம் ஓரியன்ட் மாகாணத்தில் இருந்த நிக்யுர�ோ கடற்கரையில் நவம்பர் 30-ல் கரையேறுவ�ோம் என்பது. படகு பயணம் ஐந்து நாட்கள் பிடிக்கும் என்று கணித்திருந்தார் பிடல். நவம்பர் 23 அன்று மெக்சிக்கோ சிட்டியிலிருந்து காரில் கிளம்பிய அவரை மெக்சிக்க ப�ோலிஸ் நகருக்கு வெளியே வைத்து மடக்கியது. பெரும் த�ொகையை வாங்கிக்கொண்டு அவரை மேற்கொண்டு ப�ோகவிட்டாலும் அவரைப் பின் த�ொடர்ந்து வந்தார்கள். அவர் டக்ஸ்பானை அடைந்ததும் அங்கு நடக்கும் ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டுக் கியூப தூதரகத்திற்கு அவர் கடல் வழியாகக் கிளம்ப இருப்பதாகத் தகவல் ச�ொல்லிவிட்டார்கள். கிரான்மா படகிலிருந்து பழுதுகள் முற்றிலும் நீக்கப்படவில்லை. அப்படியிருந்தும் பிடல் பயணத்தைத் த�ொடக்கிவிட்டார். அன்று மாலையே இருபது பேர் க�ொள்ளளவு க�ொண்ட படகில் எண்பத்தி இரண்டுபேர் ஏறிக்கொண்டார்கள். கூடவே த�ொண்ணூறு ரைப்பில்களும், இரண்டு ஆண்டை-டேங்-கன்களும், மூன்று மேசின் கன்களும் மற்றும் நாற்பது பிஸ்டல்களும் படகில் ஏற்றப்பட்டது. கிரான்மா படகின் சக்தியை மீறிய பாரம் இது. நவம்பர் 25 நள்ளிரவிற்குப் பிறகு கிரான்மா விளக்குகளை அனைத்துவிட்டுக் கரீபிய கடலில் மெல்ல நகரத் த�ொடங்கியது. அந்த நேரம் பார்த்து மழையும் பிடித்துக்கொண்டது. மெக்சிக்கோவிற்கு கிழக்கில் இருந்த கியூபாவை அடைய வேண்டுமானால் கிரான்மா 1200 மைல் கடலில் பயணித்தாக வேண்டும். பெரும் கல் ஒன்றைத் தூக்கிச் சிறிய எறும்பின் தலையில் வைத்துப் பல கில�ோமீட்டர்களுக்கு நடக்கச் ச�ொன்னால் அந்தச் சிறிய எறும்பு எப்படித் திணறும�ோ அதே ப�ோலத் திறந்த கடலில் திணறியது கிரான்மா. அப்படியும் இப்படியும் அலைக்கழிக்கப்பட்ட படகில் பலருக்குத் தலைச் சுற்றத் த�ொடங்கிவிட்டது. கடலில் எழும்பிப் பெரிய அலைகளும் மழையும் படகிற்குள் தண்ணியை 136
நவீனா அலெக்சாண்டர்
வாரி க�ொட்டின. தலைச் சுற்றலுக்கு நடுவே படகில் நிரம்பிய நீரையும் வெளியே வாரி இறைக்க வேண்டிக் கட்டாயம் வீரர்களுக்கு. இது ப�ோதாது என்று ஒருநாள் இரவு நேரத்தில் ஒரு வீரர் படகின் அலைக்கழிப்பில் தவறிக் கடலுக்குள் விழுந்துவிட்டார். ஏற்கனவே பயணம் திட்டமிட்ட நாட்களைக் கடந்துப�ோய்க் க�ொண்டிருக்கக் கடலில் விழுந்த வீரரைத் தேடுவதில் நேரத்தை வீணாக்க முடியாது என்கிற இக்கட்டான நிலையிலும் அந்த வீரரைக் காப்பாற்றாமல் இங்கிருந்து நகருவதில்லை என்று ச�ொல்லிவிட்டார் பிடல். பிறகு இருளில் ஒருமணி நேரம் தேடி அவரை மீட்டார்கள். ஐந்து நாட்கள் என்று பிடல் நினைத்திருக்க ம�ோசமான வானிலையின் காரணமாகப் பயணம் ஏழு நாட்களாக நீண்டுவிட்டது. ஓரியன்டிலிருந்த சகாக்களுக்கு இந்தத் தாமதத்தைத் தெரிவிக்கப் பிடலுக்கு எந்த வழியும் இல்லை. குறித்த நேரத்தில் அவர் அங்குப் ப�ோய் இறங்கவில்லை என்றால் அவருடைய படைக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஏற்கனவே அவருடைய திட்டங்களைப் படிஸ்டாவின் இராணுவம் ம�ோப்பம் பிடித்துவிட்டிருந்ததால் அவருடைய இந்தத் தாக்குதல் திட்டப் பயணம் எந்த ந�ொடியிலும் உயிர் பலிவாங்கும் இக்கட்டிலேயே இருந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் இனிக் கவலைப்படுவதாக இல்லை. அப்படித்தான் ச�ொல்லியது அவருடைய உறுதியான செயல்பாடுகள். தன் உயிரையும் தன் சகாக்களின் உயிரையும் அவர் பணயம் வைப்பது கியூப நாட்டு மக்களின் நன்மைக்காக. அந்த மக்களுக்கு விடிவு கிடைக்குமென்றால் அவர் எதற்குத் தயாராக இருந்தார். பிடலின் தந்தி செய்திக்கு ஏற்றபடி தயாராக இருந்த பிரான் பையஸ் நவம்பர் 30 (1956) விடியக் காலையில் எழுச்சி ப�ோராட்டத்தைத் த�ொடங்கிவிட்டார். எம்.ஆர்-26-7 என்கிற கைப்பட்டையுடன் இராணுவ உடையில் இருந்த ப�ோராட்டக்காரர்கள் சான்டியாக�ோவில் இருந்த படிஸ்டாவின் அரசாங்கக் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவர்களின் கைகளில் ரைப்பில்கள் இருந்தன. காவல்நிலையம் ஒன்று தீக்கிரையானது. இதே ப�ோன்ற எழுச்சி தாக்குதல்கள் மான்சானில�ோ நகரத்திலும் அதைச் சுற்றி இருந்த நகரங்களில் நடந்தது. சிலியா சான்சேஸ் சில புரட்சிகர வீரர்களுடன் பிடல் வந்து இறங்குவதாக இருந்த நிக்யுர�ோ 137
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
கடற்கரைக்குச் சென்று பிடலின் வருகைக்காகக் காத்திருந்தார். கரையேறும் பிடல் சியாரா மீஸ்டிராவிற்கு செல்வதற்கு முன்பாகச் சிலியா சான்சேசின் புரட்சிகர வீரர்களுடன் சேர்ந்து நிக்யுர�ோவில் இருக்கும் இராணுவச் சாவடிகளைத் தாக்குவது என்பது திட்டம். ஆனால் பிடலுக்காக அவர் காத்திருந்ததுதான் மிச்சம். பிடலின் வருகை தாமதமானதால் சான்டியாக�ோவில் எழுச்சி ப�ோராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தவர்களும் க�ொஞ்சம் க�ொஞ்சமாகப் பின்வாங்கிக்கொண்டார்கள். சான்டியாக�ோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசயங்களைப் படகிலிருந்த வான�ொலி வழியாக உடனுக்குடன் கேட்டபடி இருந்தார் பிடல். படிஸ்டா அரசாங்கம் கியூபாவின் கடற்கரை பகுதிகளை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டு வந்துவிட்டது. முக்கியமாகப் பிடல் கரையேறக் கூடிய பகுதி என்று எதிர்பார்க்கப்பட்ட ஓரியன்ட் பகுதி இராணுவத்தின் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவரப்பட்டது. இவைகளையும் தாண்டிக் கியூபாவின் கடற்கரை முழுவதும் விமானப் படை விமானம் ஒன்று ர�ோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. டிசம்பர் 2 ப�ொழுது விடிந்து க�ொண்டிருந்த சமயத்தில் கிரான்மா கியூபாவின் கடற்கரையை வந்தடைந்தது. அதிலும் முழுவதிலுமாகக் கரையேறவில்லை. அலையாத்தி காடுகள் நிறைந்த ஒரு பகுதியில் கரையிலிருந்து சில நூறு மீட்டர்களுக்கு முன்பே சகதி நிறைந்த கடல் நீரில் சிக்கி நின்றுவிட்டது கிரான்மா. முதலில் தான் வந்திருப்பது கியூபாவின் கடற்கரைதானா என்கிற சந்தேகம் இருந்தது பிடலுக்கு. அவரிடமிருந்த நேவிகேட்டர் கருவி வேலைச் செய்யாத காரணத்தால் கடலில் எங்கு இருக்கிற�ோம் என்பதே தெரியாமல்தான் நடந்துக்கொண்டிருந்தது கிரான்மாவின் பயணம். படகு சகதியில் சிக்கிக் க�ொண்டதால் அதிலிருந்த ப�ோராட்டக்காரர்கள் அனைவரும் சகதியில் இறங்கி நடந்தே கடற்கரையை அடைய வேண்டியிருந்தது. படகில் இருந்த அனைத்து ஆயுதங்களைச் சுமந்துக�ொண்டு அந்தச் சகதி நிறைந்த தண்ணீரில் நடந்து கரையேறுவது முடியாத காரணமென்பதால் அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு படகை விட்டு இறங்கித் தண்ணீரில் தட்டு தடுமாறி நடந்து கரையை அடைந்தார்கள். பெரிய ஆயுதங்களையும், 138
நவீனா அலெக்சாண்டர்
மருந்துகளையும் படகிலேயே கைவிட்டுவிடும்படியானது. பின்னால் இது பற்றி தன்னுடைய நாட்குறிப்பில் எழுதிய சே குவேரா படகு கரைக்கு அருகே வந்து உடைந்திருந்தால் எப்படி அதில் இருப்பவர்கள் கரையேறுவார்கள�ோ அப்படித்தான் நாங்களும் செய்தோம் என்று குறிப்பிட்டார். கரை ஏறி உள் நாட்டிற்குள் நடக்கத் த�ொடங்கிய அவர்கள் அந்தப் பகுதியில் தன்னந்தனியாக இருந்த விவசாயி ஒருவரின் வீட்டை அடைந்தார்கள். அவரிடம் தான் யார் என்றும் தான் வந்திருக்கும் ந�ோக்கத்தையும் பிடல் எடுத்துத் தங்களுக்குச் சாப்பிட உணவு கிடைக்குமா என்று கேட்டார்கள். அந்த விவசாயி அவர்களைச் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதற்கு ஒரு பன்றி க�ொன்று உணவு தயாரித்தார். அவர்கள் சாப்பிட உட்காருவதற்கு முன்பே த�ொலைவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. கடற்கரை பகுதியில் ர�ோந்துப் பணியில் இருந்த இராணு வீரர்கள் அனாமத்தாகக் கிடந்த கிரான்மாவை பார்த்துவிட்டு அதற்கு அருகில் இருந்த அலையாத்தி காட்டைப் பார்த்துச் சுட்டச் சத்தம்தான் அது. படகில் இருந்தவர்கள் அலையாத்தி காடுகளுக்குள் மறைந்திருக்கலாம் என்கிற ந�ோக்கில் அப்படிச் சுட்டார்கள். சத்தம் கேட்ட அடுத்த ந�ொடியில் பிடல் ப�ோராட்டக்காரர்களை அந்த இடத்தை விட்டு வேகமாக நகரச் ச�ொல்லிவிட்டார். அவர்கள் கரையிறங்கி இருந்தது சியாரா மீஸ்டிராவின் மலைப்பாங்கான காடுகள் நிறைந்த பகுதி. அது ஓரியன்ட் மாகாணத்தின் தெற்கு கடற்கரைய�ோரம் த�ொண்ணூறு மைல்கள் நீண்டு செல்லும் அடர்த்தியான காடுகள் நிறைந்த மலைத்தொடர். கரையிறங்கி இடைவிடாமல் மூன்று நாட்களுக்கு அந்தக் காடுகளுக்குள் நடந்துக�ொண்டிருந்தார்கள். பகல் ப�ொழுதில் மறைந்துக�ொண்டு இரவில் தங்களின் பயணத்தை மேற்கொண்டார்கள். த�ொடர்ச்சியாக நடந்துக�ொண்டிருந்ததால் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவேண்டிச் சிறிய சமவெளி ப�ோன்று இருந்த பகுதியில் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். அது டிசம்பர் 5 பகல் ப�ொழுது. திடீரென்று பல பகுதிகளில் இருந்தும் பெரும் ஓசையுடன் த�ோட்டாக்கள் சரமாரியாகப் பறந்து வரத் த�ொடங்கின. 139
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
ர�ோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்களின் கண்களில் அவர் அகப்பட்டுக்கொண்டதன் விளைவு. இந்தத் தாக்குதல் சற்றும் எதிர்பார்க்காத நினைத்தும் பார்க்காத ஒன்று என்பதால் ப�ோராட்டக்காரர்கள் திணறிப் ப�ோனார்கள். சிலர் துப்பாக்கி சூடு த�ொடங்கி ந�ொடியிலேயே த�ோட்டாக்களுக்குப் பலியாகியிருந்தார்கள். பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாப்பக்கமும் ஓடினார்கள். சிலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துவிட்டார்கள். பிடல் வழிகாட்டியாக முன்னால் நடந்துக�ொண்டிருந்ததால் இந்தக் களேபரத்திலிருந்து சற்றுத் த�ொலைவில் முன்னால் இருந்தார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் அவரும் அவருடன் இருந்த இரண்டு பேரும் மரங்களுக்குப் பின்னால் பாதுகாப்பாகப் பதுங்கிக் க�ொண்டார்கள். அந்த நேரத்தில் பிடலுடன் இருந்த அந்த இருவர் யுனிவர்சோ சான்சேஸ் மற்றும் பவுஸ்டின�ோ பெரேஸ். யுனிவர்சோ சான்சேஸ் பிடலின் பாதுகாவலர், பவுஸ்டின�ோ பெரேஸ் மருந்தியளாளர். மதிய நேரத்தில் மூவரும் மறைந்திருந்த பகுதியை ர�ோந்து விமானம் ஒன்று கண்டுபிடித்துவிட்டது. அந்த மூவரையும் ந�ோக்கித் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மூவரும் அருகில் இருந்த கரும்பு த�ோட்டத்திற்குள் சென்று மறைந்துக�ொண்டார்கள். அடுத்து வந்த நான்கு பகல்களும் மூன்று இரவுகளும் மூவரும் அந்த இடத்திலேயே மறைந்திருந்தார்கள். ர�ோந்து விமானம் அவர்களைத் தேடுவதை விடும்வரை அவர்கள் அங்கே பதுங்கியிருப்பது என்று முடிவு செய்தார்கள். உணவாக அந்தக் கரும்புகளின் சாரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த இடத்தில் இரவு நேரம் தூங்கும்போது பிஸ்டலை நெஞ்சின் மீது வைத்துக்கொண்டு அதன் டிரிகரில் விரலை வைத்தபடியே தூங்கி இருக்கிறார் பிடல். பாதுகாப்பு படையினரிடம் தான் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காக. ஒரு சின்ன அசைவு ஏற்பட்டாலும் அது உயிரைப் பறித்துவிடும் என்று மற்ற இருவரும் ச�ொல்லியும் பிடல் இப்படித்தான் தூங்கியிருக்கிறார். ர�ோந்து வாகனமும் பாதுகாப்பு படையினரும் அந்த இடத்தை விட்டு முற்றிலும் அகன்றுவிட்டார்கள் என்பதை உறுதி செய்துக�ொண்டு மூவரும் கரும்பு த�ோட்டத்திலிருந்து வெளியேறிக் கிழக்கு பக்கம் மலைக்கு மேலிருந்த குலிர்மோ கார்சியா என்பவரின் வீட்டை 140
நவீனா அலெக்சாண்டர்
அடைந்தார்கள். குலிர்மோ கார்சியா, சிலியாவின் நண்பர். அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த விவசாயிகள் தாக்குதலில் தப்பிய�ோடிய மற்ற ப�ோராட்ட வீரர்களைத் தேடுவதில் பிடலுக்கு உதவினார்கள். சில நாட்கள் கழித்து அந்த இடத்திலிருந்து மலைக்குச் சற்று மேலே இருந்த மன்கோ பெரேஸ் என்பவரின் வீட்டில் வந்து தங்கினார்கள். அங்கே இருந்த ப�ோது தாக்குதலில் தப்பிய சில ப�ோராட்டக்காரர்கள் குறித்த தகவல் கிடைத்தது. தாக்குதல் நடந்து பதிமூன்றுநாட்கள் கழித்து (18 டிசம்பர்) ரவுல் காஸ்டிர�ோவும் மற்ற நான்கு ப�ோராட்டக்காரர்களும் பிடலிடம் வந்து சேர்ந்தார்கள். அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் சே குவேரா பிடல் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் ஏழுபேர் இருந்தார்கள். கரையிறங்கியப�ோது இருந்த சுமார் எண்பது பேரில் இப்போது பிடலிடம் மீதம் இருந்தது சுமார் இருபது பேர் மட்டுமே. டிசம்பர் மாத இறுதியில் இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய மேலும் மூன்று ப�ோராட்ட வீரர்கள் பிடலுடன் வந்து சேர்ந்தார்கள். தாக்குதலுக்குப் பிறகு படிஸ்டா செய்தியாக வெளியிடச் ச�ொன்ன விசயத்தை வெளியிட்டன பத்திரிக்கைகள். பிடல் அழைத்து வந்த புரட்சிகர வீரர்களின் படை ஏறத்தாழ முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தாக்குதலில் பிடல் க�ொல்லப்பட்டுவிட்டதாகவும் ஆனால் அவருடைய உடல் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளியிட்டன பத்திரிக்கைகள். பத்திரிக்கைகளின் படி செத்துவிட்ட பிடல் சியாரா மலைப்பகுதியில் உட்கார்ந்துக�ொண்டு தன்னுடைய அடுத்த கட்ட வேலைகளைத் த�ொடங்கியிருந்தார். மான்கோவை சான்டியாக�ோவிற்கும் மான்சானில�ோவுக்கும் அனுப்பிய பிடல் அங்கிருக்கும் எம்.ஆர்-26-7 இயக்கத்தினரிடம் தான் உயிருடன் இருக்கும் செய்தியைச் ச�ொல்லிவிட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மருந்துப் ப�ொருட்களையும் வாங்கிவரச் ச�ொன்னார். மான்கோவும் அந்தப் பகுதியில் இருந்த யுஜினியா வர்டேசியா என்கிற பெண்மணியும் பிடல் ச�ொன்னபடியே செய்து முடித்தார்கள். புரட்சிகரப் படை வீரர்கள் அங்கிருந்த வரை கழுதை ஒன்றுடன் மலையின் மீது ஏறி இறங்கித் தேவையான ஆயுதங்களையும் 141
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
மருந்துப் ப�ொருட்களையும் க�ொண்டு வந்து க�ொடுத்தவர் இந்த யுஜினியா வர்டேசியா. ஒருமுறை ப�ோராட்ட வீரர்கள் கேட்ட புத்தகங்களையும் கூட நகரில் அலைந்து திரிந்து வாங்கிவந்து க�ொடுத்திருக்கிறார். அடுத்துப் பவுஸ்டினா பெர�ோஸ் மூலம் ஹவானாவில் இருந்த எம்.ஆர்-26-7 இயக்கத்தினருக்குச் செய்தி அனுப்பினார் பிடல். ப�ோராட்டத்திற்கான ஆட்களையும் ஆயுதங்களையும் பணத்தையும் சேகரிக்கும் படி அவர்களுக்குச் செய்தி ச�ொல்லப்பட்டது. இதற்கு அடுத்து ஜனவரி 1957-ல் முதல் தாக்குதலுக்கான திட்டத்தைத் தயாரித்தார் பிடல். இந்தத் தாக்குதல் படிஸ்டாவின் இராணுவத்திற்குப் பலமான ஒரு செய்தியைச் ச�ொல்லவேண்டும் என்று அவர் தீர்மானித்ததால் அதை முழு வெற்றி பெறக் கூடியதாக வடிவமைக்க நினைத்தார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்த இலக்கு லா பிலாட்டா என்கிற சிறிய இராணுவச் சாவடி. இந்த நேரத்தில் பிடலின் படை சியாரா மீஸ்டிராவின் மையப் பகுதிக்கு வந்துவிட்டிருந்தது. லா பிளாட்டா இராணுவச் சாவடி குறித்த தகவல்களை அவர் சேகரித்துக்கொண்டிருந்தப�ோது கிராமத்தார் அவருக்கு ஒரு துப்பு க�ொடுத்தார்கள். அந்தத் துப்பு சிச்சு ஓசாரிய�ோ. சிச்சு ஓசாரிய�ோ அமெரிக்கக் கரும்பு த�ோட்ட நிறுவனம் ஒன்றில் நில மேற்பார்வையாளராக இருந்தவர். இராணுவத்துடன் நெருங்கிய த�ொடர்பில் இருந்த நபர். சிச்சு ஓசாரிய�ோவை தேடத் த�ொடங்கினார்கள் ப�ோராட்டப் படை வீரர்கள். அவர்களின் தேடுதலுக்கு வாட்டமாகச் சிச்சு ஓசாரியாவே அவர்களின் கண்களில் அகப்பட்டார். முழுப் ப�ோதையில் கழுதையின் மீது காட்டுப் பாதையில் சென்றுக�ொண்டிருந்த அவரை மடக்கினார்கள் ப�ோராட்டப் படை வீரர்கள். அவரிடமிருந்த ஆயுதம் பிடுங்கப்பட்டது. ப�ோதையில் இருந்த சிச்சு ஓசாரிய�ோ தன்னை மடக்கியவர்கள் கியூப இராணுவத்தினர் என்று நினைத்துக்கொண்டு தானும் புரட்சிப் படை வீரர்களைத்தான் தேடிக் க�ொண்டிருப்பதாகவும் பிடல் காஸ்டிர�ோவை கண்டால் அந்த இடத்திலேயே சுட்டுக்கொள்ளப் ப�ோவதாகவும் உண்மையை உளறித்தொலைத்துவிட்டார். லா 142
நவீனா அலெக்சாண்டர்
பிளாட்டா இராணுவச் சாவடி குறித்துத் தங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட ப�ோராட்டப் படை தாக்குதல் முடியும் வரை அவரைத் தங்களுடன் கைதியாக வைத்துக்கொண்டார்கள். தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் திட்டம் வடிவமைக்கப்பட்டு அன்று இரவே லா பிளாட்டா இராணுவச் சாவடியைத் தாக்கினார் பிடல். தாக்குதலின் முடிவில் இரண்டு இராணுவ வீரர்கள் இறந்திருந்தார்கள். ஐந்து இராணுவ வீரர்கள் காயம்பட்டிருந்தார்கள் மூன்றுபேர் கைதியாகப் பிடிபட்டார்கள். சாவடியில் இருந்த அனைத்து ஆயுதங்களையும் ப�ோராட்ட வீரர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள். காயம்பட்ட இராணுவ வீரர்களுக்கு மருத்துவம் பார்க்கும்படி பிடல் சே குவேராவிடம் கேட்டுக்கொண்டார். கைதான இராணுவ வீரர்களின் துணிச்சலையும் நாட்டுப்பற்றையும் பாராட்டிய பிடல் அவர்களை விடுதலைச் செய்துவிட்டார். இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியாகப் படிஸ்டாவின் இராணுவத்திற்கும் நாட்டு மக்களும் அவர் ச�ொல்ல நினைத்தது தன்னுடைய புரட்சிகரத் தாக்குதல் நடவடிக்கைகள் படிஸ்டாவின் இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிரானதுதானே ஒழியச் சக கியூப மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை. இந்தத் தாக்குதல் முடிந்ததும் சிச்சு ஓசாரிய�ோ சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுடப்படக் காரணம் ஒரு மாதத்திற்கு முன்பு ப�ோராட்ட வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத்துடன் அவரும் இருந்தார் என்பதும், சிச்சு ஓசாரிய�ோ தான் ப�ோட்டுக்கொண்டிருப்பது தன் கையால் சுட்டு க�ொன்ற ஒரு ப�ோராட்ட வீரனுடையது என்று ச�ொன்னதும்தான்.
143
பிடலிஸ்டா காம்பிளக்ஸ் – சியாரா மீஸ்டிரா நாட்கள் – II
பி
டல் எதிர்பார்த்த மாதரியே லா பிளாட்டா இராணுவச் சாவடி தாக்குதலில் ஏற்றப்பட்ட த�ோல்வியைப் படிஸ்டாவின் அரசாங்கம் அபாயத்தின் அறிகுறியாக எடுத்துக்கொண்டது. பிடல் இறந்துவிட்டார் என்று அது பரப்பிய செய்தி இந்தத் தாக்குதலின் மூலம் ப�ொய் என்று நிருபனமானது. படிஸ்டா இராணுவத்தை முன்னிலும் அதிகமாக முடக்கிவிட்டார். ஆனால் சியாரா மீஸ்டிரா காட்டுப் பகுதிக்குள் படைகளை அனுப்ப இராணுவம் திணறிக்கொண்டிருந்தது. அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த காடு என்பதால் மிகப் பெரும் இராணுவத்தை அதன் பெரிய ஆயுதத் தளவாடங்களுடன் பிடலை தேடி உள்ள அனுப்புவது பெரும் நடைமுறை சிக்கலாக இருந்தது. மிகக் குறைந்த ஆயுதங்களும் வீரர்களும் வைத்திருந்த பிடலுக்கு காட்டுக்குள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் எத்தகைய ப�ோக்குவரத்து சிரமங்களும் ஏற்படவில்லை.
ஆனால் இராணுவத்திற்குக் காட்டுக்குள் ப�ோக்குவரத்து பெரும் பிரச்சனையாக இருந்தது. குறைந்த படை வீரர்களும் ஆயுதங்களும் பிடலின் பலகீனமாகப் பார்க்கப்பட்டாலும் சியாரா மீஸ்டிரா காட்டைப் ப�ொறுத்தவரை அதுவே பிடலின் மிகப் பெரிய பலமாக இருந்தது. படிஸ்டாவின் அரசாங்கத்திடம் மிகப் பெரிய படையும் சக்தி மிக்க ஆயுதங்களும் பெரும் பலமாகப் பார்க்கப்பட்டாலும் சியாரா மீஸ்டிரா காட்டைப் ப�ொறுத்தவரை அதுவே இராணுவத்தின் மிகப் பெரிய பலகீனமாக இருந்தது. ஒருவகையில் எண்ணி இருபது ச�ொச்சப் ப�ோராட்ட வீரர்களையே தன்னிடம் வைத்திருந்த பிடல் ஆயிரக் கணக்கில் படை பலம் க�ொண்ட படிஸ்டா இராணுவத்தைக் க�ொரில்லா ப�ோர் முறை மூலம் அடிபணிய வைத்தற்கு சியாரா 144
நவீனா அலெக்சாண்டர்
மீஸ்டிரா காடும் ஒரு முக்கியக் காரணம். சியாரா மீஸ்டிரா காடு தனக்கான ஒரு முக்கிய யுத்தக் கள ஆதாயத்தைத் தரும் என்பதைப் பிடல் தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே நம்பி வந்தார். அவருடைய புரட்சிகரப் ப�ோராட்டத் திட்டங்கள் அனைத்தும் சியாரா மீஸ்டிரா காடை அடிப்படையாகக் க�ொண்டதே. சியாரா மீஸ்டிரா மலைப் பகுதிகளில் வாழ்ந்த கிராம மக்களின் ஆதரவும் பிடலின் வீரர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. கிராம மக்களின் ஆதரவு படிஸ்டாவின் இராணுவத்திற்குக் கிடைக்காமல் ப�ோனது அது த�ோற்றுப்போனதற்கான அடுத்த மிக முக்கியக் காரணம். முன்பே இராணுவத்தின் அடக்குமுறை ப�ோக்குகளால் ந�ொந்துப�ோயிருந்த மலை கிராம மக்கள் இயல்பாகவே அதற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் இருந்தார்கள். மேலும் பிடலின் புரட்சிகரப் படை அவர்களிடம் நடந்துக�ொண்ட விதமும் அவர்களை மிகவும் ஈர்த்திருந்தது. அதுவரை இராணுவ உடையில் இருப்பவர்கள் தங்களிடமிருக்கும் ப�ொருட்களை மிரட்டி அடித்துப் பிடுங்கிச் செல்வதையே பார்த்திருந்த அவர்கள் முதல் முறையாக இராணுவ உடையில் இருந்த பிடலின் புரட்சிகர வீரர்கள் அவர்களிடமிருந்த ப�ொருட்களை உரிய விலை க�ொடுத்து வாங்கிப் பயன்படுத்தியது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. ப�ோதா குறைக்குப் பிடலை தேடுகிறேன் பேர்வழி என்று அந்த மக்களை அவர்களின் இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி வேறு இடங்களுக்கு நகர்த்திக்கொண்டிருந்த இராணுவத்தின் செயலும் அவர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. இதைவிட முக்கியமாக மலை கிராம விளை நிலங்களில் அடிமை கூலிகளைப்போல நடத்தப்பட்ட விவசாயிகளும் பிடலின் குழுவுடன் சேர்ந்துக�ொண்டு இராணுவத்திற்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கினார்கள். அந்தப் பகுதியில் இருந்த அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் விளை நிலங்களில் கடன் என்கிற பிசாசால் கட்டிப்போடப்பட்டிருந்த அவர்களுக்குப் பிடலின் புரட்சிகர நிலச் சீர்திருத்தக் கருத்துகள் பெரும் ஆறுதலாக இருந்தது. எதற்கு இல்லையென்றாலும் அதற்காக வேண்டியாவது தாங்கள் பிடலுடன் இருப்பது என்று அவர்கள் முடிவு எடுத்திருந்தார்கள். இப்படியான நிலையில் சியாரா மீஸ்டிரா காட்டில் பிடலை பிடிக்கும் 145
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இராணுவத்தின் முயற்சிகள் த�ோற்றுக்கொண்டே இருந்தது. மிகப் பெரிய இராணுவப் பலம் இருந்தும் படிஸ்டாவால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. பிப்ரவரி 16 அன்று மலையில் இருந்த இறங்கி வந்த பிடல், கியூபா முழுவதிலுமிருந்து இரகசியமாக வரவழைக்கப்பட்டிருந்த எம். ஆர்-26-7 இயக்கத் தலைவர்களுடன் அடுத்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்களைக் குறித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் பங்குக�ொண்டவர்கள் பிரான் பையஸ், பவுஸ்டினா பெர�ோஸ், அர்மான்டோ ஹார்ட், ஹைடி சான்டாமரியா, வில்மா எஸ்பின் மற்றும் சிலியா சான்சேஸ். இந்தச் சந்திப்பிலேயே தி மூவ்மென்ட் இயக்கத்தில் பிளவுகள் த�ோன்றுவதற்கான முதல் அறிகுறிகள் த�ோன்றியது. இயக்கத்தின் மற்ற தலைவர்கள் உள்ளூரில் இயக்கத்தின் ஆள் பலத்தையும் ப�ொருளாதாரப் பலத்தையும் பெருக்குவதில் அதிகக் கவனம் செலுத்துவதாகவும் அது தற்போதைய நிலையில் சரியான நடவடிக்கை இல்லை என்றும் பேசினார் பிடல். தன்னுடைய க�ொரில்லா தாக்குதலுக்கான புரட்சிகரப் படைக்கு அதிகம் ஆட்களும் ஆயுதங்களும் பணமும் தேவையாக இருக்கும் சமயத்தில் அவர்கள் இப்படி நடந்துக�ொள்வது அபத்தமானது என்று தன் கருத்தை அழுத்தமாகச் ச�ொன்னார். லாஸ் வில்லாஸ் மாகாணத்தில் இருக்கும் எஸ்காம்ரே மலைப் பகுதியில் மற்றொரு க�ொரில்லா தாக்குதல் படையை உருவாக்கும் தலைவர்களின் ய�ோசனையையும் ஒதுக்கிவிட்டார். பிடல் தரப்பில் இப்படியான செயல்பாடுகள் ப�ோய்க் க�ொண்டிருக்கப் படிஸ்டா தரப்பில் அமெரிக்காவின் உதவிகளைப் பெறும் வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது. அமெரிக்கா உடனடியாகப் படிஸ்டாவின் உதவிக்கு வந்துவிட்டது. படிஸ்டா உதவி கேட்கவில்லை என்றாலும் வலுவிக்க வந்திருக்கும் என்பது வேறு விசயம். பிடல் ப�ோன்ற புரட்சிகரச் சக்திகள் கியூபாவில் தனம் ப�ொருளாதார நலனுக்கு மிக ஆபத்தானது என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்திருந்த காரணத்தால் உடனடியாக ஹவானா துறைமுகத்திற்குத் தனது கப்பல் படைப் பிரிவை அனுப்பியது. மேலும் கப்பல் படைக்குச் ச�ொந்தமான ர�ோந்து விமானப் படையையும் அனுப்பியது. அமெரிக்கத் தூதர் 146
நவீனா அலெக்சாண்டர்
ஏழு ஷெர்மான் பீரங்கிகளைப் படிஸ்டா இராணுவத்திடம் க�ொடுத்தார். அமெரிக்கக் கப்பல் படையின் ர�ோந்து விமானப் படை ஒருபடி மேலே ப�ோய்ப் பிடல் தங்கியிருக்கலாம் என்று சந்தேகித்த அனைத்துக் காட்டுப் பகுதிகளிலும் வான் வழி குண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பதில் தாக்குதல் நடத்தப் பிடல் வேற�ொரு ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அது பத்திரிக்கை ஆயுதம். அமெரிக்கப் பத்திரிக்கைகளுக்குப் புரட்சிகரப் படையின் உண்மையான ந�ோக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் ச�ொல்வதன் மூலம் அமெரிக்க மக்களின் ஆதரவைத் தன் பக்கம் திருப்ப முடிவு செய்தார் பிடல். மேலும் கியூப பத்திரிக்கைகளுக்கு மட்டுமே படிஸ்டாவால் வாயில் பிளாஸ்திரி ஒட்ட முடியும் வெளிநாட்டு பத்திரிக்கைகளிடம் இது செல்லுபடியாகாது என்பதால் உண்மையான செய்தி மக்களை அடைவதற்கு இது உதவியாக இருக்கும் என்றும் அவர் கணக்குப�ோட்டார். லா பிளாஸ்டா தாக்குதலுக்குப் பிறகு ஹவானாவில் இருந்த பவுஸ்டின�ோ பெர�ோசிடம் ஆளை அனுப்பி ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையாளரைச் சியாரா பகுதியில் இருக்கும் தன்னுடைய கேம்ப்பிற்கு இரகசியமாக அழைத்து வரும்படி ச�ொன்னார். இதை அடுத்துப் பவுஸ்டின�ோ, ஒரு மூத்த அமெரிக்கப் பத்திரிக்கையாளரைப் பிடலிடம் அழைத்து வந்தார். அந்தப் பத்திரிக்கையாளர் நியு யார் டைம்சை சேர்ந்த ஹெர்பர்ட் மேத்தியுஸ். பிடலை சந்தித்த ஹெர்பர்ட் மேத்தியுஸ் அவருடைய புரட்சிகரக் கருத்துகளையும் அவருடைய செயல்பாடுகளையும் மலை கிராம மக்களிடைய அவருடைய க�ொரில்லா ப�ோர் முறைக்கு இருந்த ஆதரவையும் நேரில் பார்த்து ஒரு பத்திரிக்கையாளராகத் தன்னுடைய ஆய்வுகளைச் செய்துவிட்டு ஊர் திரும்பி நியு யார் டைம்ஸ் பத்திரிக்கையில் தான் பிடலை சந்தித்தது த�ொடங்கி அங்கே தான் செய்த ஆய்வுகள் வரை அனைத்தையும் எழுதினார். அந்தக் கட்டுரையின் த�ொடக்கமே பிடல் காஸ்டிர�ோ உயிருடன் இருக்கிறார் என்றே த�ொடங்கியது. அந்தக் கட்டுரையை ஜெனரல் படிஸ்டாவால் பிடலின் புரட்சிகரப் ப�ோராட்டத்தை ஒடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்று முடித்திருந்தார் ஹெர்பர்ட் மேத்தியுஸ். பிடல் எதிர்பார்த்ததைப் ப�ோலவே இந்தத் திட்டம் 147
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
அவருக்குப் பெரும் யுத்தகள முன்னெடுப்பு பலத்தைத் தந்தது. ஹெர்பர்ட் மேத்தியுஸ் கட்டுரை உண்டாக்கக் கூடிய தாக்கங்களை உணர்ந்து க�ொண்ட கியூபாவின் பாதுகாப்பு அமைச்சர், ஹெர்பர்ட் மேத்தியுஸ் அருமையான கற்பனை கதை ஒன்றை எழுதியிருப்பதாகவும் உயிருடன் இல்லாத பிடல் காஸ்டிர�ோவை கற்பனை சந்தித்துப் பேட்டி கண்டிருப்பதாகவும் ச�ொன்னார். இப்படிச் ச�ொன்னதன் மூலம் வேலியில் ப�ோன ஓணானைப் பிடித்துச் சட்டைப் பாக்கெட்டுக்குள் ப�ோட்டுக்கொண்ட காரியத்தைப் பார்த்துவைத்தார் பாதுகாப்பு அமைச்சர். இதற்குப் பதிலடி தரும் விதமாக ஹெர்பர்ட் மேத்தியுஸ், பிடலை சந்தித்தப�ோது தான் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஆதாரமாகப் பத்திரிக்கையில் ப�ோட்டுவிட்டார். ஹெர்பர்ட் மேத்தியுஸ்சின் செயலுக்கு வலு சேர்க்கும் விதமாக உடனடியாகக் கியூப மக்களுக்கு ஒரு மெனிபெஸ்டோவையும் வெளியிட்டார் பிடல். இது படிஸ்டாவின் இராணுவத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மே மாதவாக்கில் மீண்டும் ஒரு க�ொரில்லா தாக்குதலுக்குத் திட்டம் ப�ோட்டார் பிடல். இந்த முறை இலக்கு க�ொஞ்சம் பெரிதாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார். இலக்கு பெரிதாக இருக்கும் பட்சத்தில் வெற்றியும் பெரிதாக இருக்கும், வெற்றி பெரிதாக இருக்கும் பட்சத்தில் படிஸ்டாவிற்கு விழும் அடியும் பெரிதாக இருக்கும். இப்போது பிடலின் புரட்சிகரப் படையின் எண்ணிக்கை கூடியிருந்தது. படையில் 120 வீரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் கையிருப்பில் இருந்தன. ச�ொல்லப்போனால் புதிய ஆயுதங்களும் கூட இருந்தது. உதாரணமாக மெசின் கன்கள். ஆட்களையும் ஆயுதங்களையும் பிடலின் படையில் சேர்க்கப் பெரும் உழைப்பைச் செலுத்தியவர் சிலியா சான்சேஸ். லா பிளாட்டாவிலிருந்து இருபது மைல்கள் த�ொலைவில் சான்டியாக�ோ ப�ோகும் திசையில் இருந்தது எல் உவிர�ோ இராணுவச் ச�ோதனை சாவடி. இது சற்றுப் பெரிய அதே சமயத்தில் பலமான ச�ோதனை சாவடி. எல் உவிர�ோ தாக்குதலுக்கான இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் முறையாகச் சிலியா சான்சேசும் இந்தக் க�ொரில்லா தாக்குதலில் சேர்ந்துக�ொண்டார். மலையில் இருந்து க�ொரில்லா படையுடன் கீழே இறங்கி வந்த 148
நவீனா அலெக்சாண்டர்
பிடல் எல் உவிர�ோ சாவடியில் இருந்த இராணுவ வீரர்களை ந�ோக்கி முதலில் சுட்டார். பல மணிநேரம் இரண்டு பக்கத்திற்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இரண்டு தரப்பிலும் பலமான உயிர் இழப்புகள். தாக்குதல் முடிந்து கணக்கு பார்த்தப�ோது புரட்சிகரப் படை தரப்பில் ஆறு உயிரிழப்புகளும் ஒன்பது பேர் காயமும் அடைந்திருப்பது தெரிந்தது. இராணுவத்தின் தரப்பில் பதினான்கு பேர் உயிரிழந்திருந்தார்கள். பத்தொன்பது பேர் காயம்பட்டிருந்தார்கள். பதினான்கு பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தார்கள். காயம்பட்டிருந்த இராணுவ வீரர்களுக்குப் புரட்சிகரப் படையே மருத்துவம் பார்த்தது. பிறகு கைது செய்யப்பட்டவர்கள�ோடு சேர்த்து அவர்களும் விடுதலைச் செய்யப்பட்டார்கள். இராணுவத்தின் இந்தத் த�ோல்வி படிஸ்டாவிற்கு பெரும் அவமானமாகப் ப�ோனது. இராணுவச் ச�ோதனை சாவடிகள் இருந்தால்தனே பிடல் க�ொரில்லா தாக்குதல் நடத்த வசதியாக இருக்கிறது அதனால் அந்தச் ச�ோதனை சாவடிகளையே களைத்துவிட்டால் என்ன என்று முடிவு செய்து சான்டியாக�ோ பகுதியில் இருந்த அனைத்து இராணுவச் ச�ோதனை சாவடிகளையும் களைத்துவிட்டார் படிஸ்டா. படிஸ்டாவின் இந்த நகர்வும் ப�ோர் களத்தில் பிடலுக்கு பெரும் ஆதாய முன்னகர்வைத் தந்துவிட்டது. படிஸ்டாவின் இராணுவச் ச�ோதனை சாவடிகள் உள்ளூர் கிராம மக்களுக்குப் பெரும் த�ொல்லையாக இருந்தவைகள். இராணுவத்தினர் தங்கள் இஷ்டத்திற்குக் கிராமங்களுக்குள் புகுந்து தங்களுக்குத் தேவை என்று எதெல்லாம் கண்ணில் படுகிறத�ோ அதையெல்லாம் கிராம மக்களிடமிருந்து அடாவடியாகப் பிடுங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது. எந்த மக்களைக் காக்க இராணுவம் இருக்கவேண்டும�ோ அந்த மக்களையே சூறையாடும் வேலையில் முனைப்பாக இருந்தது படிஸ்டாவின் இராணுவம். இராணுவத்தின் இந்த அடாவடி தனங்களுக்கு யார்தான் முடிவு கட்டுவது என்று கிராம மக்கள் குமைந்துக�ொண்டிருந்த சமையத்தில்தான் பிடலின் க�ொரில்லா தாக்குதலுக்குப் பயந்துக�ொண்டு படிஸ்டா இராணுவச் ச�ோதனை சாவடிகள் அனைத்தையும் களைத்துவிட்டார். இனி இராணுவத்தின் த�ொல்லை 149
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
இல்லை என்றதும் கிராம மக்களுக்குப் பெரும் நிம்மதியாகப் ப�ோய்விட்டது. பிடலால் தங்களுக்கு நன்மை செய்ய முடியும் என்கிற எண்ணம் அவர்கள் மத்தியில் த�ோன்ற த�ொடங்கிவிட்டது. இந்த எண்ணப்போக்கு மேலும் அதிகமாகப் புரட்சிகரப் படைக்கு அவர்களிடையே ஆதரவைத் தேடித்தந்தது. எல் உவிர�ோ வெற்றி பிடலை கியூபாவின் கதாநாயகன் என்கிற அளவிற்கு உச்சத்திற்குக் க�ொண்டு ப�ோனது. பிடலும் அவருடன் இருப்பவர்களும் சிறு பிள்ளை விளையாட்டுப�ோல ஓடி ஒளிந்து தாக்குதல் நடத்தி விளையாட்டுக் காட்டக் கூடியவர்கள் அல்லத் தெளிவாகத் திட்டம் ப�ோட்டு இலக்கைத் தகர்க்கும் உண்மையான க�ொரில்லாக்கள் என்கிற பிம்பம் நாடு முழுவதும் பரவத் த�ொடங்கிவிட்டது. முன்னிலும் அதிகமாக நாட்டுக்காக உயிரைத் துச்சமாக மதிக்கும் இளைஞர்கள் இரகசியமாக எம்.ஆர்26-7 இயக்கத்தில் சேரத் த�ொடங்கினார்கள். இதனால் புரட்சிகரப் படைக்கு ஆள் சேர்ப்பது என்பது இனியும் கடினமான காரியமாக இருக்கவில்லை பிடலுக்கு. எல் உவிர�ோ தாக்குதல் முடிந்த அடுத்த மாதத்திலேயே அவருடைய படையின் எண்ணிக்கை 200 தாண்டிவிட்டது. இதனால் படையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். ஒன்றைத் தனது தலைமையின் கீழும் மற்ற இரண்டை ரவுல் கேஸ்டிர�ோ மற்றும் சே குவேராவின் தலைமையில் இயங்கும்படி செய்தார். நாட்டு மக்களையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி நாட்டில் இருந்த அரசியல் வாதிகளை மாத்திரம் விட்டுவைத்துவிடுமா என்ன. எந்தக் கட்சி இனி உருப்படாது என்று ச�ொல்லிவிட்டுப் பிடல் வெளியேறி வந்தார�ோ அதே கட்சியான ஆர்தோட�ோக்சாஸ் கட்சியிலிருந்து பிடலுக்கு ஆதரவு கரம் நீண்டது. தங்களின் முழு ஆதரவைப் பிடலுக்கு தெரிவிக்கும் விதமாக அந்தக் கட்சியின் நான்கு முக்கியத் தலைவர்கள் பிடலை இரகசியமாகச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார்கள். அந்த நான்கு பேரில் ரவுன் சிபாசும் (இவர் எட்டி சிபாசின் சக�ோதரர்) பிலிபி பாச�ோசும் (இவர் கியூபாவில் பெயர் பெற்ற வங்கியாளர் மற்றும் ப�ொருளாதார நிபுணர்) அடக்கம். பிடல் அவர்களைச் சியாராவில் இரகசிய இடத்தில் சந்தித்தார். சந்திப்பின் முடிவில் ஐந்து பேரும் சேர்ந்து சியாரா மீஸ்டிரா 150
நவீனா அலெக்சாண்டர்
மெனிபெஸ்டோவை கியூப மக்களுக்காகத் தயார் செய்தார்கள். அதில் ஐவரும் கைத�ொழுதுப�ோட்டார்கள். அந்த மெனிபெஸ்டோ, உடனே ஜனநாயகப் பூர்வத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் எத்தகைய அதிகார முறைகேடுகளும் இல்லாமல் நடக்கவேண்டுமானால் அதற்குப் படிஸ்டா பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்றும் அறிவித்ததது. க�ொரில்லாக்கள் தேர்தலுக்கு எதிரானவர்கள் என்று படிஸ்டா அரசாங்கம் பரப்பிக்கொண்டிருந்த ப�ொய்களுக்கு இதன் மூலம் முடிவுகட்டப்பட்டது. மேலும் அந்த அறிக்கை தங்களுக்கு எதிராகப் படிஸ்டா அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் க�ொடுத்துவரும் காரியத்தையும் அமெரிக்கா உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அரசியல் விசயங்கள் சுமுகமாகப் ப�ோய்க்கொண்டிருந்த வேலையில் இயக்கத்திற்குள் ஒரு தர்மச் சங்கட நிலை உருவாகி நின்றது. இந்தச் சமயத்தில் புரட்சிகரப் படையின் மூலம் பிடல் படிஸ்டாவிற்கு எதிராகக் க�ொரில்லா தாக்குதலில் இருக்க ஹவானாவில் பிரான் பையஸ் மற்றும் அர்மான்டோ ஹார்ட் தலைமையில் தி மூவ்மென்ட்டு மற்றும் எம்.ஆர்-27-6 இயக்கங்களின் அரசியல் பிரிவுகள் இயங்கிக்கொண்டிருந்தன. எல்லாம் தலைமறைவாகத்தான். இந்த இரண்டு இயக்கங்களின் வடிவமைப்பையும் அடி முதல் முடிவரை முற்றிலுமாகப் புதுப்பித்து மாற்றி அமைக்கவேண்டும் என்று பேசத் த�ொடங்கினார் பிரான் பையஸ். ஹவானாவில் பிடலின் மிக மிக நம்பகமான அதே சமயத்தில் பிடலின் வலதுகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தவர் பிரான்க். க�ொரில்லா தாக்குதலில் முனைப்பாக இருக்கும் இந்த நேரத்தில் அப்படியான சீர்திருத்தமெல்லாம் வேண்டாம் என்று ச�ொல்லிவந்தார் பிடல். இதுவே புரட்சிகரப் படைக்கும் தி மூவ்மென்ட் இயக்கத்திற்குமான உரசலின் மூலக் காரணம். பிடலின் புரட்சிகரப் படை கிரான்மா தரையிறக்கம் செய்த அடுத்த எட்டு மாதங்களில் அதாவது ஜூலையில் பிரான் தான் பேசி வந்த சீர்திருத்தங்களைச் செய்து அது குறித்த அறிக்கையைப் பிடலுக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையில் பிடலிடம் அனுமதி இல்லாமல் தானே இந்தக் காரியத்தைப் பார்த்துவிட்டதாகவும் இதற்கு நிச்சயம் பிடல் அனுமதி அளிப்பார் 151
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
என்று தான் நம்புவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்தச் செயல் பிடலுக்கு லேசான க�ோபத்தை உண்டு பண்ணிவிட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் பிரான் செயல்பட்டுவிட்டதாக நினைத்தார். இருந்தாலும் அவர் பிரான் மீது வெளிப்படையாகக் க�ோபத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி யார் நடந்தாலும் அது அவருடைய தம்பி ரவுல் காஸ்டிர�ோவாக இருந்தாலும் கூப்பிட்டு வைத்து வார்த்தைகளால் விளாசித் தள்ளிவிடக் கூடியவர் பிடல். ஆனால் பிரான் விசயத்தில் அவர் அப்படி நடந்துக�ொள்ளவில்லை. அமைதியாகவே இருந்துவிட்டார். காரணம் அவர் பிரான் மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையும். பிடல் இந்த அளவிற்கு மற்றொருவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்றால் அது சே குவேராத்தான். அவருக்கும் பிரான் பையசிற்கும் இந்த மெளன யுத்தம் ப�ோய்க் க�ொண்டிருந்த சமயத்தில் அந்தத் துயரம் நடந்தது. பிடலுமே கூட ஆடித்தான் ப�ோய்விட்டார். வலது காரம் ப�ோனால் யாரும் ஆடிப்போகத்தான் செய்வார்கள். பிடலும் மனிதர்தானே. சான்டியாக�ோவில் தலைமறைவாக இருந்த காரியங்கள் பார்த்துக்கொண்டிருந்த பிரான் பையசை ப�ோலிஸ் கண்டுபிடித்துச் சுட்டுக்கொன்றுவிட்டது. பிரான் பையசின் மறைவைக் கேட்டுச் சான்டியாக�ோ நகரமே கலங்கித்தான் ப�ோனது. அதற்குச் சாட்சியாக அவருடைய இறுதி ஊர்வலத்தின் ப�ோது சான்டியாக�ோ நகரத்தில் நிற்கக் கூட இடமில்லாமல் எங்கும் மனிதக் கூட்டம். மக்களின் பூரணக் கண்ணீர் அஞ்சலியுடன் வழி அனுப்பிவைக்கப்பட்டார் பிரான்க். பிடலின் எல் உவிர�ோ வெற்றிக்குப் பிறகு படிஸ்டாவின் செல்வாக்கும் அதிகாரமும் கியூபா முழுவதிலும் சந்தி சிரித்துவிட்டதால் இனியும் படிஸ்டாவை நம்பிக்கொண்டிருந்தால் கியூபாவில் த�ொழில் பார்த்துக்கொண்டிருக்கும் தன் நாட்டு முதலாளிகளுக்கு ஆபத்தாகப் ப�ோய்விடலாம் என்று நினைத்த அமெரிக்கா ஒரு சமாதான உடன்பாட்டை முன்னெடுத்தது. அதற்காக வேண்டி ஒரு கூட்டத்தை மையாமியில் ஏற்பாடு செய்தது. இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தவர் கியூபாவின் முன்னால் ஜனாதிபதி பிரைய�ோ. கியூபாவில் இருந்த ஏழு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் படிஸ்டாவின் அரசாங்கத்திற்கு 152
நவீனா அலெக்சாண்டர்
எதிராகப் ப�ோராடி வரும் இயக்கங்களின் தலைவர்களையும் மையாமிக்கு அழைத்தது. எம்.ஆர்-27-6 சார்பில் பிலிப்பி பாச�ோசும் லெஸ்டர் ர�ோட்ரிகியூசும் இதில் கலந்துக�ொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் மையாமி பேக்ட் என்கிற உடன்படிக்கை தயாரானது. அந்த உடன்படிக்கையின்படி படிஸ்டாவின் அரசைக் கலைத்துவிட்டுக் கியூபாவில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது என்றும் அதற்குக் கியூபாவில் இருக்கும் அரசியல் கட்சிகளும் ப�ோராட்ட இயக்கங்களும் ஒரு அணியில் திரள்வது என்றும் அந்த அணிக்கு லிபரேசன் கவுன்சில் என்று பெயர் வைப்பது என்றும் தேர்தல் முடிந்த பிறகு ப�ோராட்டக் குழுக்கள் எல்லாம் கியூபாவின் இராணுவத்துடன் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் முடிவானது. கியூபாவின் அனைத்து இயக்கங்களின் பெயர்களையும் பட்டியலிட்டிருந்த அமெரிக்கா மிகக் மிக கவனமாகப் பிடலின் புரட்சிகரப் படையின் பெயரை மாத்திரம் தவிர்த்துவிட்டது. கிரான்மா தரையிறக்கம் த�ொடங்கிப் பிடல் ச�ொல்லி வருவது படிஸ்டாவின் அரசைத் தூக்கியடித்த பிறகு அவர் வைத்திருந்த ஊழல் மலிந்த இராணுவத்தைக் களைத்துவிட்டுத் தன்னுடைய புரட்சிகரப் படையில் இருந்து புதிதாக ஒரு இராணுவத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது. ஊழல் மலிந்து கிடந்த இராணுவம்தான் படிஸ்டாவின் சதிக்கே காரணம் என்பது பிடலின் வாதம். பிடலின் இந்த வாதத்தைத்தான் மையாமி பேக்டில் செல்லாமல் ஆக்கியிருந்தது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த உள்குத்தைப் புரிந்துக�ொள்ள முடியாமல் எம்.ஆர்-27-6 சார்பில் கலந்துக�ொண்ட இருவரும் உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துக் கைத�ொழுதுப�ோட்டுவிட்டார்கள். லிபரேசன் கவுன்சிலின் மையாமி பேக்ட் உடன்படிக்கையின் நகல் பிடலின் கைக்கு வந்து சேர்ந்தது. உடன்படிக்கையின் மற்ற அம்சங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத அவர் புரட்சிகரப் படையை இராணுவத்துடன் சேர்க்கும் விசயத்தையும் புரட்சிகரப் படையின் பெயர் அந்த உடன்படிக்கையில் சேர்க்கப்படாத விசயத்தையும் கவனித்துவிட்டு உடன்படிக்கை நகலை ரவுல் காஸ்டிர�ோவிடமும் சே குவேராவிடமும் க�ொடுத்தார். இருவரும் க�ொந்தளித்துவிட்டார்கள். எம்.ஆர்-27-6 சார்பில் கையெழுத்துப்போட்ட இருவரையும் 153
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
கடிந்துக�ொண்டார்கள். இது விசயமாகப் பிடல் சில நாட்களுக்குத் தன்னுடைய பதிலைச் ச�ொல்லவேயில்லை. பிடலின் மெளனம் சே குவேராவை இருப்பு க�ொள்ளாமல் ஆக்கியது. இறுதியில் அவரும் புரட்சிகரப் படை இராணுவத்தில் இணைத்துக் க�ொள்வதற்கு எதிராகக் கருத்து தெரிவித்தார். லிபரேசன் கவுன்சில் படிஸ்டாவின் அரசை தூக்கியடித்துவிட்டு நடத்த இருந்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக பிலிப்பி பாச�ோசை முன்னிறுத்தியது. பிடல் உருஷியா வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
154
சுதந்திரக் காற்றின் சிரிப்பில் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி – சியாரா மீஸ்டிரா நாட்கள் – III
ப
ன்னாட்டு பத்திரிக்கையாளர்களின் குழுவைத் தன்னுடைய சியாரா மீஸ்டிரா க�ொரில்லா கேம்ப்களுக்கு இரகசியமாக அழைத்து வரச் செய்தார் பிடல். தனது க�ொரில்லா தாக்குதலின் உண்மையான ந�ோக்கம் அதிகம் அதிகம் மக்களைச் சென்று அடையவேண்டும் என்பதே பிடலின் இந்த நகர்விற்குக் காரணம். படிஸ்டா அரசாங்கத்தால் தினமும் கிளப்பிவிடப்படும் ப�ொய்களை முறியடிக்க அவருக்கு இந்த நகர்வு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் இந்த நகர்வையும் பயன்படுத்திக்கொள்ளப் படிஸ்டாவும் அமெரிக்க உளவு நிறுவனமும் முயற்சியில் இறங்கியது. பத்திரிக்கையாளர் ப�ோர்வையில் ஒரு உளவு துறை ஏஜன்டை ஏற்பாடு செய்தார்கள். பிடல் பன்னாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தப�ோது இந்த ஏஜன்டையும் அனுப்பிவைத்தார்கள்.
பத்திரிக்கையாளர் ப�ோர்வையில் வந்திருந்த அந்த ஏஜன்டின் செயல்பாடுகளும் பார்வைகளும் த�ொடக்கத்திலிருந்தே பிடலுக்கு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது. அந்த நபர் தங்களுடன் இல்லாத சமயங்களில் பிடல் தன் சகாக்களிடம் அவன் ஒரு உளவாளி என்றும் நிச்சயம் நாம் இருக்கும் இந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று ச�ொன்னார். அந்த உளவு ஏஜன்டை பிடல் ஒன்றும் செய்யவில்லை. பத்திரிக்கையாளர் என்கிற பெயரில் வந்திருக்கும் அவன் மீது நடவடிக்கை எடுத்தால் அது தனக்குப் பெரும் பின்னடைவாகிவிடும் என்பதால் அவர் அவனைத் திரும்பப் ப�ோகவிட்டுவிட்டார். அன்று இரவே அவர்கள் அந்த இடத்தை விட்டுக் காலி செய்துவிட்டார்கள். பிடல் எதிர்பார்த்ததைப் ப�ோலவே இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் முன்பு இடத்தின் மேலாக ர�ோந்து விமானங்கள் பறப்பதைக் கண்டார். அந்த விமானம் 155
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
சில குண்டுகளையும் ப�ோட்டுவிட்டுப் ப�ோனது. இந்தச் சமயத்தில்தான் என்ரிக் மெனிசஸ் என்கிற ஸ்பானியப் பத்திரிக்கை நிருபர் பிடலின் க�ொரில்லா குழுவுடன் நான்கு மாதங்கள் தங்கி அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்த கட்டுரையைப் பிரான்சு பத்திரிக்கையான பாரிஸ் மேட்ச்க்கு எழுதி அனுப்பினார். தன்னுடன் பல இரவுகள் பிடல் நடத்திய விவாதங்களைத் த�ொகுத்து மென்சிஸ் அந்தப் பத்திரிக்கையில் எழுதினார். அந்த வருடத்தின் முடிவில் (1957) சே குவேரா கமாண்டராகப் பதவி உயர்த்தப்பட்டுப் பிடலின் அணிக்குக் கிழக்கில் இருந்த மலை பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார். சே குவேரா அவருடைய எந்தத் தாக்குதலுக்கும் பிடலின் அனுமதியைப் பெறவேண்டியதில்லை என்றானது. தேவைப்பட்டால் சே குவேராவே தனிப்பட்ட முறையில் இராணுவத்திற்கு எதிராகத் தாக்குதலில் இறங்கலாம். இவ்வளவு பெரிய ப�ொறுப்பைப் பிடல் கண்ணி மூடிக்கொண்டு சேவிற்குக் க�ொடுத்துவிடவில்லை. சே குவேரா தன்னைவிடக் க�ொரில்லா ப�ோர் முறையிலும் யுத்தக் களத் தந்திரம் வகுப்பதிலும் மேம்பட்டவர் என்பது பிடலுக்கு நன்றாகவே தெரியும். இதை அவர் தனது குழுவிடம் பலமுறை நேரடியாகவே ச�ொல்லியிருக்கிறார். ஆகச் சே குவேரா தாக்குதலில் இறங்குவாரேயானால் அது நிச்சயம் புரட்சிகரப் படையின் வெற்றிக்காத்தான் இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஓரியண்ட் மாகாணத்தில் இருந்த அனைத்து மலை பகுதிகளும் 1958 வசந்தக் காலத்தில் பிடலின் புரட்சிகரப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. இந்த இடங்களில் படிஸ்டாவின் இராணுவம் முற்றிலுமாகத் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. புரட்சிகரப் படைக்குச் ச�ொந்தமான மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், அச்சகம், வான�ொலி நிலையம் இந்தப் பகுதிகளில் இயங்கத் த�ொடங்கிவிட்டது. ச�ொல்லப்போனால் ஒரு சிகரெட் தயாரிக்கும் த�ொழிற்சாலையைக் கூடப் புரட்சிகரப் படை இங்கே நிறுவியிருந்தார்கள். வான�ொலி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் புரட்சிகரப் படையின் எதிர்காலத் திட்டங்களையும் ந�ோக்கங்களையும் பேசி வந்தாலும் நடுநிலையான செய்திகளையும் ஒலிபரப்பி வந்தது. படிஸ்டா அரசாங்கத்தில் இருந்த வான�ொலி நிகழ்ச்சிகளைப் ப�ோல் இல்லாமல். 156
நவீனா அலெக்சாண்டர்
அமெரிக்கா தன் மீது நம்பிக்கை இழந்துவருவதைக் கண் கூடாகக் கண்டுவிட்ட படிஸ்டா இறுதியான ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாரானார். இந்த முறை கியூப இராணுவத்தின் அனைத்துச் சக்திகளையும் ஒன்று திரட்டி பிடலுக்கு அடி க�ொடுப்பது என்று முடிவு செய்தார். ஜெனரல் இல�ோஜிய�ோ கான்டில�ோ பத்தாயிரம் வீரர்களைக் களத்தில் இறக்கினார். அமெரிக்காவிடம் இருந்து பெற்ற அனைத்துவிதமான நவீன ப�ோர் தளவாடங்களையும் அந்த வீரர்களின் கையில் க�ொடுத்தார். அவர் பதிலுக்குக் கேட்டதெல்லாம் பிடலின் மரணம் அல்லது த�ோல்வி. அவ்வளவே. ஜெனரல் கான்டில�ோ சியாரா மீஸ்டிரா பகுதியை முதலில் சுற்றி வளைத்துப் பிடலின் க�ொரில்லா படைக்கு ஒரு ப�ொறியை உண்டாக்கிப் பிறகு அதைச் சுருக்கிக்கொண்டே வந்து பிடலை வடக்கு பக்கம் துரத்திப் பிறகு அவர் கதையை முடிப்பது என்று திட்டம் உருவானது. மலையை விட்டுக் கீழே இறங்கித் தாக்கிவிட்டுப் பிறகு மீண்டும் மலைக்கு மேல் ஏறிவிடுவது பிடலின் க�ொரில்லா தாக்குதல் ப�ோர் முறையின் ஒரு அம்சமாக இருந்தது. மேலும் ஒரே இடத்தில் ஒரே நாளைக்கு மேல் தங்காமல் இடம் மாற்றிக்கொண்டே இருப்பதும் பிடலின் தந்திரங்களில் ஒன்று. இந்த முன்னும் பின்னுமான மேலும் கீழுமான பிடலின் நகர்வு ஒரு தெளிவான உறுதியான இலக்கை நிர்ணயிக்க விடாமல் ஜெனரல் கான்டில�ோ குழப்பியது. ப�ோதா குறைக்கு ஜூலை 1958 நடந்த சண்டையில் ஜெனரல் கான்டில�ோவின் ம�ொத்தப் படையும் ஒரு நீண்ட குறுகலான சமவெளியில் பிடலின் க�ொரில்லா படையிடம் அகப்பட்டுக்கொண்டது. பிடலின் க�ொரில்லா தாக்குதல் முறையைக் குறைவாக எடைப�ோட்டது எவ்வளவு தவறு என்பதை அப்போதுதான் உணர்ந்துக�ொண்டார் ஜெனரல் கான்டில�ோ. இதில் 220 இராணுவ வீரர்கள் பிடலின் புரட்சிகரப் படையால் கைது செய்யப்பட்டுப் பிறகு அவர்கள் அனைவரும் ரெட் கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அடுத்த மாதத்திலும் இதே ப�ோலப் பல நூறு இராணுவ வீரர்கள் ப�ோர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு ரெட் கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். பிடலின் இந்தச் செயல் படிஸ்டா இராணுவத்திற்கும் ஜெனரல் கான்டில�ோவிற்கும் பெரும் அவமானத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. படிஸ்டா உடனடியாக ஜெனரல் கான்டில�ோவை 157
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
பதவியிலிருந்து நீக்கிவிட்டார். வெறும் இருநூறு புரட்சிகரப் படை வீரர்களை வைத்துக்கொண்டு ஆயிரக் கணக்கில் பலம் க�ொண்ட இராணுவத்தின் கண்களில் பிடல் விரலை விட்டு ஆட்டுவது க�ொரில்லா ப�ோர் முறையை ந�ோக்கி உலகத்தின் கவனத்தை ம�ொத்தமாகத் திருப்பியது. இதற்கு முன்பே இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பலர் க�ொரில்லா ப�ோர் முறையில் அரசாங்கங்களை எதிர்த்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தாலும் பிடல் அளவிற்கு ஒரு பெரும் இராணுவத்தைக் க�ொரில்லா ப�ோர் முறையில் திணறவிட்டது கிடையாது. செப்டம்பரின் (1958) இடை பகுதியில் ஓரியன்ட் பகுதியின் மேற்கில் இருந்த தாழ் நிலங்களுக்குத் தன்னுடைய பிரதானத் தாக்குதல் படையுடன் நகர்ந்தார் பிடல். சான்டியாக�ோவில் முகாமிட்டிருந்த படிஸ்டாவின் படையைச் சுற்றிவளைப்பது திட்டம். பிடல் தன்னுடைய நகர்வில் அவசரமே காட்டாமல் மெதுவாக நகர்ந்து வழியில் தென்பட்ட சில இராணுவ நிலையங்களைத் தாக்கிக் கைப்பற்றுவதும் சிலவற்றைத் தாக்காமல் அப்படியே விட்டுவிட்டு நகர்ந்துவிடுவதுமாக இருந்தார். தன்னுடைய இந்தக் க�ொரில்லா உத்தியைக் குறித்து அவர் மெல்பாவிடம் இப்படிச் ச�ொன்னார். பிங்பாங் ப�ோல எதிரி எதிர்பாராத இடத்தில் பந்தைத் திருப்புவதையே நான் செய்துக�ொண்டிருக்கிறேன். அவருக்குக் கிழக்கில் இருந்து ரவுல் காஸ்டிர�ோவும் ஜுவான் அல்மிடாவும் தங்களின் க�ொரில்லா தாக்குதல்களின் மூலம் இராணுவத்தை நெருக்கிக்கொண்டிருந்தார்கள். நவம்பர் மாதத்திற்கெல்லாம் ஓரியன்ட் மற்றும் லாஸ் வில்லாஸ் மாகாணங்கள் முழுதுமாகப் பிடலின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. டிசம்பரில் உருஷியா பிடலை சந்தித்து வெனிசுவேலா அதிபர் லரசபால் க�ொடுத்த ஆயுதங்களைப் பிடலின் கைகளில் ஒப்படைத்தார். வெனிசுவேலாவின் இந்த நகர்வு அதாவது பிடலுக்கு ஆயுதங்கள் க�ொடுத்து உதவியது அமெரிக்காவின் மூக்கில் அபாய வியர்வையைத் துளிர்க்க வைத்தது. அமெரிக்கப் பிரதமர் ஐசன்ஹோவரின் தூதுக் குழு உடனடியாக ஹவானாவிற்கு வந்து இறங்கியது. படிஸ்டாவை ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிவிடும் படி அழுத்தம் க�ொடுத்தது அந்தத் தூது குழு. 158
நவீனா அலெக்சாண்டர்
படிஸ்டா முடித்தவரை அந்தத் தூது குழுவிடம் மல்லுக்கட்டினார். தான் இன்னுமும் கியூபாவை முழுக் கட்டுப்பாட்டில்தான் வைத்திருப்பதாக அவர்களிடம் எடுத்துச் ச�ொல்லி மன்றாடினார். கடைசி முறையாகப் பிடலின் மீது ஒரு தாக்குதலை நிகழ்த்த நினைத்த அவர் ஜெனரல் கான்டில�ோ மீண்டும் ஓரியன்ட் இராணுவப் படையின் கமாண்டராக நியமித்தார். கான்டில�ோவுடன் இது குறித்து ஆல�ோசனை நடத்தியது அமெரிக்கத் தூது குழு. அதன்படி டிசம்பர் 28-ல் பிடலுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இவரின் சந்திப்பும் ஓரியன்ட் மாகாணத்தில் நடந்தது. ஜெனரல் கான்டில�ோ பதவி நீக்கப்பட்டுவிட்டு மீண்டும் பதவிக்குக் க�ொண்டுவரப்பட்டிருப்பதும், அமெரிக்கத் தூது குழு கியூபாவிற்கு வந்து இறங்கியிருப்பதையும் அவதானித்த பிடல் இதில் ஏத�ோ சதி இருக்கவேண்டும் என்று ஊகித்தார். இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு சுமார் நான்கு மணி நேரம் நீண்டது. சான்டியாக�ோவில் இருக்கும் பாதுகாப்பு படை இராணுவம் பிடலின் புரட்சிகரப் படையுடன் இணைந்து படிஸ்டாவின் ஆட்சியைத் தூக்கியெறியத் தயாராக இருப்பதாகச் ச�ொன்னார் ஜெனரல் கான்டில�ோ. தான் எத்தகைய இராணுவச் சதிக்கும் தயாராக இல்லை என்று பிடல் மறுக்க, பிடலும் இராணுவமும் ஹவானாவிற்கு சென்று முறைப்படி படிஸ்டாவை இராஜினாமா செய்யவைக்கலாம் என்றும் ச�ொன்னார் கான்டில�ோ. அப்படிச் செய்வது என்றால் இராஜினாமா செய்த பிறகு படிஸ்டா ப�ோர் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும் என்று கேட்டார் பிடல். அது மாத்திரம் தன்னால் முடியாது என்றும் படிஸ்டா ஹவானாவை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் சக்தி தனக்கு இல்லை என்றும் ச�ொன்னார். இறுதியாகப் படிஸ்டாவிற்கு எதிரான இராணுவ எழுச்சி டிசம்பர் 31 அன்று மதியம் 3 மணிக்கு நடத்தப்படவேண்டும் என்று இரண்டு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் சந்திப்பு முடிந்தது. டிசம்பர் 30 அன்று சே குவேராவின் தலைமையில் இருந்த க�ொரில்லா படை முன்னேறி வந்து லாஸ் வில்லாசின் தலைநகரான சான்டா கிளாராவை சுற்றி வளைத்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்தது. ஜெனரல் கான்டில�ோ படிஸ்டாவிற்கு நாட்டை விட்டுத் தப்பிவிடும்படி செய்தி அனுப்பினார். இந்தச் 159
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
செய்திக்கு விலையாக அவர் முன்பே படிஸ்டாவிடம் பேசிய பேரம் படிஸ்டா நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு அடுத்த ஜனாதிபதி கான்டில�ோதான், அவருக்குக் கட்டுபடும்படி இராணுவத்திற்குக் கடிதம் எழுதிவிட்டுச் செல்லவேண்டும் என்பது. அவரும் அதன்படியே செய்துவிட்டுக் கியூபாவை விட்டு வெளியேறிவிட்டார். அவரைப் பத்திரமாக வழியனுப்பி வைத்த கான்டில�ோ தன்னைக் கியூபாவின் அடுத்த ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார். ஓரியன்டிலிருந்த பிடல் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுக் க�ொந்தளித்தார். தன்னுடைய படைகளை ஹவானா ந�ோக்கி முன்னேறும்படி ரேடிய�ோ ரிபல்டே வான�ொலி மூலம் கட்டளையிட்டார். அடுத்த ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக்கொள்ளும் தயாரிப்புகளில் இருந்த கான்டில�ோவை எம்.ஆர்-27-6 இயக்கத்தின் சார்பில் கானல் பார்குயின் வீட்டுக் காவலில் வைத்தார். பிறகு கேம்ப் க�ொலம்பியாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்தார். ஜனவரி 2 1959 குவேராவின் க�ொரில்லா படையும் கன்பிக�ோசின் க�ொரில்லா படையும் ஹவானாவிற்குள் நுழைந்து கேம்ப் க�ொலம்பியாவையும் லா கபானாவையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்தார்கள். பிடல் சான்டியாக�ோவிற்கு நகர்ந்தார். கானல் ரிக�ோ அவரிடம் மான்கடா இராணுவக் கேந்திரத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைத்தார். படிஸ்டா நாட்டை விட்டு ஓடிவிட்டதை அறிந்திருந்த மக்கள் பெரு வெள்ளமாக மான்கடா கேந்திரத்திற்குள் புகுந்தார்கள். எந்த மான்கடா கேந்திரத்திலிருந்து துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் பின்வாங்கிச் சென்றார�ோ அதே மான்கடா கேந்திரத்தில் வெற்றிபெற்ற மக்களின் தலைவனாக நின்றுக�ொண்டிருந்தார் பிடல். மக்களை ந�ோக்கிப் பேசத் த�ொடங்கினார். பிறகு அவர் சான்டியாக�ோவிலிருந்து ஹவானாவிற்கு சென்றார். அந்தப் பயணம் ஐந்து நாட்கள் பிடித்தது. வழியெங்கும் மக்கள் வெள்ளம். ஒவ்வொரு இடமாக நின்று அவர் மக்களைச் சந்தித்தபடி ஹவானா வந்து சேர்ந்தார். ஹவானாவில் மற்றொரு மக்கள் வெள்ளம் கூடியிருந்தது அவரை வரவேற்க. கூட்டத்தில் இருந்த தாய்மார்கள் எல்லாம் உணர்ச்சி பெருக்கில் கண்களில் நீர் முட்ட நின்றுக�ொண்டிருந்தார்கள். சிக்காக�ோ டிரிபியூன் பத்திரிக்கையின் ஜூல்ஸ் டுப�ோயிஸ் அந்த இடத்தில் தான் நேரில் கண்டவைகளை 160
நவீனா அலெக்சாண்டர்
எழுதியிருக்கிறார். அவருடைய வார்த்தைகளை அப்படியே இங்கே ச�ொல்வது ப�ொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ‘நான் அவரைப் பார்க்கவேண்டும். பார்த்தே ஆகவேண்டும்’ அந்த நடுத்தர வயது பெண் உணர்ச்சி பெருக்கில் கண்களில் நீர்வழி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘அவர் எங்களைக் காப்பாற்றிவிட்டார். குண்டர்களிடமிருந்தும் க�ொலைகாரர்களிடமிருந்தும்’. பிடல் கேஸ்டிர�ோவை வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவராக இருந்த அந்தப் பெண்மணி என்னிடம் இப்படிக் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து கிடையாது. தன்னியல்பாக அங்கே கூடியிருந்த ஆயிரக் கணக்கான ஒருமித்த கருத்து இது. இவ்வளவு ஆண்டுகள் இலத்தீன் அமெரிக்க நிருபராக இருக்கும் என்னுடைய அனுபவத்தில் மற்ற யாருக்கும் இப்படி ஒரு பெரும் வரவேற்பை மக்கள் திரள் க�ொடுத்து நான் கண்டதில்லை.’ பிடல் ஹவானாவிற்குள் நுழைந்தப�ோது வெள்ளை புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பல புறாக்கள் அவர் தலைமீது பறந்து செல்ல ஒரு புறா நேராகச் சென்று அவருடைய த�ோளில் அமர்ந்தது. இதைக் கண்டு அங்கே கூடியிருந்த மக்கள் வெள்ளம், ‘பிடல்……பிடல்’ என்று ஏகாதிபத்தியத்தின் காதுகளில் உறைக்கும் வரை உணர்ச்சி பெருக்கில் முழக்கங்களை எழுப்பினார்கள். எதிரிகள் வெறுமையை உணரத் த�ொடங்குவார்கள் பிடல் காஸ்டிர�ோ அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர் மீது பல விமர்சனங்கள் த�ொடர்ச்சியாக வைக்கப்பட்டது. அந்த விமர்சனங்களைக் குறித்து அவர் பலமுறை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவர் மீது இருக்கும் விமர்சனங்களில் மிக முக்கியமானது அவர் ஒரு சர்வாதிகாரியைப் ப�ோல நடந்துக�ொள்கிறார் என்பது. இந்தக் குற்றச்சாட்டைக் குறித்து அவர் என்ன ச�ொல்கிறார் என்பதை அவர் வார்த்தைகளிலேயே கேட்பது சிறப்பாக இருக்கும். ‘ஏன் என்னைச் சர்வாதிகாரி என்று சிலர் அழைக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. சர்வாதிகாரி என்றால் என்ன? 161
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
தன்னிச்சையாக, தன்னை மாத்திரமே முன்நிறுத்தி, எவ்விதச் சட்டத் திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் அதிகாரத்தைப் பயன்படுத்துபவரே சர்வாதிகாரி. நான் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பவன் கிடையாது. எங்களுடையது ஜனாதிபதி அமைப்பு முறை க�ொண்ட அரசாங்கம் கிடையாது. இங்கே மாநிலங்களின் கூட்டமைப்பு இருக்கிறது. பலரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு உள்ளே தான் ஒரு தலைவராக எனது செயல்பாடுகள் இருக்கிறது. எங்களுடைய நாட்டில் மிக முக்கிய மற்றும் அடிப்படையான முடிவுகள் அனைத்தும் பலர் ஒன்று கூடி உட்கார்ந்து விவாதம் செய்து, ஆராய்ந்த பின்னரே எடுக்கப்படுகிறது. என்னால் மந்திரிகளைய�ோ வெளிநாட்டுக்கான தூதர்களைய�ோ நியமனம் செய்ய முடியாது. இந்த நாட்டில் கடைநிலை அரசாங்க ஊழியர்களையும் கூட நான் நியமனம் செய்வது கிடையாது. நிச்சயமாக எனக்கு அதிகாரம் இருக்கிறது, செல்வாக்கும் இருக்கிறது அவைகளுக்கு வரலாற்று பின்னணி உண்டு ஆனால் நான் உத்தரவுகளை வழங்குவது கிடையாது. அரசாணைகளின் மூலம் ஆட்சி செய்வதும் கிடையாது.’ பிடல் குறிப்பிட்டதைப்போல அவர் ஒரு வரலாறு. புரட்சிகரப் ப�ோராட்டத்தின் வரலாறு. கியூப புரட்சியைக் கண்டு அலறும் அருவருக்கும் ஆசாமிகள் பிடலின் புரட்சி கியூபாவைப் பின்தங்கிய நாடாக மாற்றிவிட்டது என்கிற குற்றச்சாட்டையும் வைக்கத் தவறுவதில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பிடல் தரும் பதில், ‘கியூபாவில் நிலங்கள் எல்லாம் விவசாயக்ிகளிடமும் விவசாய கூலி த�ொழிலாளிகளிடமும் திருப்பிக் க�ொடுக்கப்பட்டுவிட்டது. இயற்க்கை வளங்கள் அனைத்தும், அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் த�ொழில்களும் சேவைகளும் கியூப மக்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. புரட்சி முடிந்து அடுத்து வந்த ஒரே வருடத்தில் த�ொண்ணூறு சதவிகிதக் கல்வியறிவைச் சாதித்திருக்கிறது கியூபா. இந்தச் சாதனையை வல்லரசாக இருக்கும் அமெரிக்காவால் கூட நெருங்க முடியவில்லை.’ ‘ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர், ஒரு வகுப்பிற்குக் குறைந்த மாணவர்கள் என்று இருக்கும் முதல் நாடும் எங்களுடையதுதான். 162
நவீனா அலெக்சாண்டர்
ஆரம்பக் கல்வி த�ொடங்கி மருத்துவம் வரை எங்கள் நாட்டில் ஒரு மாணவன் ஒரு பைசா செலவில்லாமல் படித்து முடித்துப் பட்டம் பெற்று வெளியே வரலாம். புரட்சிக்கு முந்தைய கியூபாவில் இருந்ததைவிட இப்போது முப்பது மடங்கு அதிகமாகப் பட்டப்படிப்பு படித்தவர்களும், பல்கலைக்கழக அறிஞர்களும் உருவாகியிருக்கிறார்கள். கியூபாவில் இருக்கும் ஒவ்வொரு நகராட்சியிலும் பல்கலைக்கழக வசதிகள் இருக்கின்றன. புரட்சிக்கு முன்பு 1000 குழந்தை பிறப்பிற்கு 60 குழந்தை பிறப்பு மரணங்கள் என்று இருந்த நிலை இன்றைக்கு 6 என்கிற அளவில் இருக்கிறது. இது கனடா மற்றும் அமெரிக்க நாட்டிற்கு நிகரான கணக்கு.’ ‘கியூப குடிமகனின் சராசரி ஆயுளில் பதினைந்து வருடங்கள் அதிகரித்திருக்கிறது. மனிதனின் ஆயுள் அதிகரிப்பு அவனுடைய ஆர�ோக்கியமான மன மற்றும் உடல் நிலையைக் குறிக்கிறது என்பதைச் ச�ொல்லத் தேவையில்லை. உயிரைக் குடிக்கும் த�ொற்று ந�ோய்கள் அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது. கடைக்கோடியில் இருக்கும் குடிமகனுக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் மருத்துவச் சேவைகளை மாற்றம் செய்திருக்கிற�ோம். ஒரு ந�ோயாளிக்கு ஒரு மருத்துவர் என்கிற விகிதாச்சாரத்தில் முன்னிலையில் இருக்கும் நாடு கியூபா. இந்த மருத்துவச் சேவைகள் அனைத்தும் அவனுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கியூப மக்கள் த�ொகையில் 85% பேர் அவர்களின் ச�ொந்த வீடுகளில் வசிக்கும் அளவிற்கு அவர்களின் ப�ொருளாதார நிலை முன்னேறியிருக்கிறது. மக்களின் பணத்தைக் குறித்து வைத்து நடத்தப்படும் அனைத்துவிதமான சூதாட்டத் த�ொழில்களும் இங்கே தடை செய்யப்பட்டிருக்கிறது.’ ‘எங்களின் த�ொலைக்காட்சிகளிலும், வான�ொலிகளிலும், பத்திரிக்கைகளிலும் வணிக விளம்பரங்களுக்கு இடமே இல்லை. எங்களின் ஊடகங்கள் மக்களுக்கு ஒருப�ோதும் உண்மைக்குப் புறம்பான தவறான செய்திகளைத் தருவதில்லை. ஒட்டும�ொத்த நாடாக நாங்கள் சுற்றுச்சூழலை மிகுந்த அக்கறையுடன் அணுகுகிற�ோம். ஊடகங்கள் மக்களிடையே சூழலியல் குறித்த விழிப்புணர்வுகளைச் செய்கின்றன. எங்களின் கலாச்சாரத்தைப் ப�ோற்றுகிற�ோம். அதே நேரத்தில் மற்றவர்களின் கலாச்சாரத்தையும் மதிக்கிற�ோம். எங்கும் வெறுப்பு அரசியலைச் செய்வதில்லை. 163
பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது
எங்களின் அறிவியல் ஆராய்ச்சிகள் முன்னிலும் இப்போது பல மடங்கு முன்னிலையில் இருக்கிறது. எங்களுடைய அறிவியல் அறிவை மற்ற நாடுகளுக்கும் பயன்படும் வகையில் உதவுகிற�ோம்.’ ‘எங்களின் ப�ொருளாதார நலன்கள் பாதிக்கப்பட்டாலும் பிரச்சனைகளுக்கு உள்ளானாலும் சுரண்டப்படும் ஆப்பிரிக்க ஏழை நாடுகளுக்கு உதவி செய்கிற�ோம். அவர்களின் விடுதலைப் ப�ோராட்டங்களுக்கு ஆதரவும் மற்ற உதவிகளையும் செய்கிற�ோம். பல ஆப்பிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ப�ோராட்டங்களில் சுதந்திரப் ப�ோராட்டங்களில் கியூப இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. இதை நான் பெருமைக்காகச் ச�ொல்லவில்லை மற்ற நாட்டு மக்களின் சுதந்திர உரிமைகளுக்கு நாங்கள் எவ்வளவு தூரம் மதிப்பும் மரியாதையும் தருகிற�ோம் என்பதற்கான உதாரணமாகச் ச�ொல்கிறேன். இப்படி நாங்கள் உதவி செய்த நாடுகளில் ஒரு துண்டு நிலத்தைக் கூட நாங்கள் அபகரித்துக்கொள்ளவும் இல்லை கைப்பற்றிக்கொள்ளவும் இல்லை.’ ‘பல இலட்சம் கியூப குடிமக்கள் ப�ோராளிகளாகவும், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், த�ொழில் நுட்ப வல்லுநர்களாகவும், சமூகச் சேவகர்களாகவும் உலகின் பல நாடுகளுக்கும் சென்று சேவை செய்திருக்கிறார்கள். இப்போதும் செய்கிறார்கள். பதினெட்டிற்கும் மேற்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் கியூபாவைச் சேர்ந்த 3000-த்திற்கும் அதிகமான மருத்துவச் சேவகர்கள் தேவையான மருத்துவ உதவிகளையும் சேவைகளையும் செய்துக�ொண்டிருக்கிறார்கள். இந்த உதவிகளுக்கும் சேவைகளுக்கும் அவர்கள் ஒரு பைசாவும் கட்டணமாக வாங்குவதில்லை. கியூப மருத்துவர்களின் உதவி இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையால் மூன்றாம் உலக நாடுகளில் எய்ட்ஸ் ந�ோய்க்கு எதிராகப் ப�ோராடி இருக்க முடியுமா?’ ‘வான�ொலியைப் பயன்படுத்தி ஐந்து ம�ொழிகளைக் கற்றுக்கொடுக்கும் த�ொழில் நுட்பத்தை நாங்கள் கண்டுபிடித்திருக்கிற�ோம். இந்தத் த�ொழில் நுட்பத்திற்கு நாங்கள் எந்த விதமான காப்பி ரைட் உரிமையும் பேடண்ட் உரிமையும் வாங்கப் ப�ோவதில்லை. இலவசமாகவே மற்ற நாடுகளுக்குக் 164
நவீனா அலெக்சாண்டர்
க�ொடுக்கத் தயாராக இருக்கிற�ோம். மிக முக்கியமாகக் கல்வியறிவு இல்லாமல் பின்தங்கி இருக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு. இதன் மூலம் ஐந்து வருடங்களில் மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் 800 க�ோடி மக்கள் கல்வியறிவைப் பெற முடியும் இலவசமாக. இன்னும் என்னால் புரட்சிக்குப் பிறகான கியூபாவின் சாதனைகளைச் ச�ொல்லிக்கொண்டே ப�ோக முடியும் ஆனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.’
165
Reference Books
1. The Real Fidel Castro by Leycester Coltman 2. My Life: A Spoken Autobigraphy by Fidel Castro with Ignacio Ramonet 3. The Second Declaration Of Havana 4. Myths Of The Enemy 5. The Machadato and Cuban Nationalism 1928-1932 by Jules R Benjamin
166
167
168