தென்னமெரிக்க தமிழர்கள் ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக் மீச�ோ அமெரிக்க நாகரீகம்
நவீனா அலெக்சாண்டர்
Andhazahi Vaitheeswaran Chockalingam, Gajiniganth Gulam Dhasthagir, Arun Kumar, Mahendran Ameeragam, David J Praveen, Karthik Dilli, Surendar Lohia, Aravind Sankar, Rameez Raja, Saravanan, Zahir Ibn Jaffarullah, Amina Mohammed, Varshini Copyright © 2017 by Naveena Alexander All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher/Author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email below. www.andhazahi.in தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக் மீச�ோ அமெரிக்க நாகரீகம் First Edition. July. 2017 Price Rs. 120/Andhazahi 12, Pillayar Koil Street, Durga Nagar,Tambaram-Santorium, Chennai - 47 Printed in Chennai, Tamil Nadu.
ப�ொருளடக்கம் முன்னுரை
1
புது உலக கண்டுபிடிப்பு
3
புது உலகத்தின் த�ொடக்கம்…
6
கடல�ோடிய தமிழன்
18
ஓல்மெக் நாகரீகம்
27
அமெரிக்காவை கண்டுபிடித்தவர்கள் யார்
37
ஓல்மெக் நாகரீகத்தின் வீழ்ச்சி
47
அமெரிக்கா இரண்டாம் கண்டுபிடிப்பு
59
மாயன் நாகரீகம்
70
க�ொலம்பஸ் கைங்கரியம்
81
மாயன் நாகரீகம் – II
90
அமெரிக்காவை மூன்றாம் முறையாகக் கண்டுபிடித்தவர் யார்? 102 டிய�ோடிஹூக்கான், சப�ோடெக், ட�ோல்டெக்.......
108
பின்னிணைப்பு
125
Reference Books
128
IV
அந்தாழையின் பிற வெளியீடுகள் நவீனா அலெக்சாண்டர் உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை: திரைக்கதை உத்தி, கேமிரா உத்தி, எடிட்டிங் உத்தி க�ொரில்லா பிலிம் மேக்கிங்: Handbook For Independent Filmmakers புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு க�ோப்பை ஞானமும் உருகும் பூமி உறையும் உயிர்கள்: ஆன்திரப�ோசீன் பேரழிவு எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல பிடல் காஸ்டிர�ோ: சகாப்தங்கள் கல்லறைக்கு ச�ொந்தம் கிடையாது மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen Screenwriting வர்ஷினி கிளிய�ோபாட்டிரா: சூழ்ச்சிகளின் அடையாளமில்லா அடையாளம் ப�ோதை அடிமைகள்: சமூக ஊடகம், இணையம், ப�ோர்னோ நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி சமையலறையில் கல்லறை: விசமாகும் உணவுகள் குத்தக்கைக்கு ப�ொதுப்புத்தி: புதிய பரிணாம க�ொள்கை கிருமிக்கண்ட மானிடம்
V
முன்னுரை
ஸ்பானியர்கள் அமெரிக்கக் கண்டம் என்கிற புதிய உலகை (New World) கண்டுபிடித்த பிறகே, அதில் ஐர�ோப்பியர்கள் குடியேறிய பிறகே அந்த மண்ணில் கலாச்சாரம் என்பது த�ோன்றியது என்பதைப் ப�ோலவும், அந்த மண்ணின் பூர்வக் குடி மக்கள் காடுகளில் வாழ்ந்த அடிப்படை நாகரீக வளர்ச்சியையும் கூட அடைந்திருக்காத மக்கள் என்பதைப் ப�ோன்ற ப�ொதுப்புத்தி த�ோற்றத்தைத் தலையைச் சுற்றித் தூக்கி எறியவே இந்தப் புத்தகம். அமெரிக்கக் கண்டம் என்று ஒட்டும�ொத்தமாகக் குறிப்பிட்டாலும் அதில் வடக்கு தெற்கு என்று இரண்டு பெரும் கண்டங்கள் இருக்கின்றன. அவைகளை இணைக்கும் இடை நிலப்பகுதியும் உண்டு. வடக்கு கண்டம் இன்றைக்கு அமெரிக்கா என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் இடைநிலை பகுதி மெக்சிக்கோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நிலப்பகுதிகளுக்கும் தனித் தனியே இன, ம�ொழி, கலாச்சார வரலாறுகள் உண்டு. இந்தப் புத்தகத்தில் மீச�ோ அமெரிக்க நாகரீகம் என்று அழைக்கப்படும் இடைப்பகுதி மெக்சிக்க நாகரீகம் குறித்து மாத்திரமே பார்க்க இருக்கிற�ோம். மீச�ோ அமெரிக்கக் நாகரீகமே ஓட்டும�ொத்த அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரும் அதே சமயத்தில் மிகத் த�ொன்மையான நாகரீகம் என்பதால் அதைக் குறித்துத் தெரிந்துக�ொள்ள வேண்டியது மிக அவசியம். சரி மீச�ோ அமெரிக்காவிற்கும் தமிழர்களுக்கும் என்ன த�ொடர்பு? ஏன் இந்தப் புத்தகத்திற்கு அப்படியான ஒரு தலைப்பு என்பதற்கான பதிலைப் புத்தகத்தைப் படிக்கும்போது நீங்களே உணர்ந்துக�ொள்வீர்கள். அமெரிக்கக் கண்டத்தை முதன் முதலில் கண்டுபிடித்தது யார் என்கிற கேள்விக்கான பதிலைத் தேடிய 1
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
படித்தான் இந்தப் புத்தகத்தைத் த�ொடங்கியிருக்கிறேன். அமெரிக்காவை முதலில் கண்டுபிடித்தது யார் என்பதில் சர்ச்சை இருப்பதாலும், அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கில் த�ொடர்ந்து நடந்தபடி இருப்பதாலும் அதையும் இந்தப் புத்தகத்தில் பேசுவது அவசியம் என்று கருதியதால் இந்தச் சர்ச்சைக்கான தேடுதலின் இடைவெட்டாக மீச�ோ அமெரிக்க நாகரீகங்களைக் குறித்துப் பேசியிருக்கிறேன்.
நவீனா அலெக்சாண்டர்
[email protected] 8220855357
2
நவீனா அலெக்சாண்டர்
புது உலக கண்டுபிடிப்பு "படு பிரம்மாண்டமான இந்த கண்டம் இதுவரை யாராலும் அறியப்பட்டிருக்கவில்லை என்கிற முடிவிற்கு வந்து சேர்ந்தேன் – கிறிஸ்டோபர் க�ொலம்பஸ்"
அ
து கி.பி. 1453. அந்த வருடத்தின் மே மாத 29-ஆம் தேதி. மேற்கத்திய நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக அவற்றின் உள்ளூர் சந்தைகளுக்கு பேரிடியை இறக்கிய நாள். ஒட்டமான் துருக்கிய பேரரசு (Ottoman Empire), கிழக்கு ர�ோம பேரரசாக இருந்த பைசாண்டியத்தை (Byzantine) கைப்பற்றிய நாள் அது. பைசாண்டியத்தோடு சேர்ந்து அதன் தலைநகரான கான்ஸ்டான்டிந�ோபிலும் (Constantinople) ஓட்டமான் துருக்கியர்களின் வசம் ப�ோய் சேர்ந்தது.
இன்றைய தினம் ப�ோன்று அன்றைக்கும் மேற்கத்திய நாடுகளில் LED Flash விளக்குகள் மின்னும் பங்குச் சந்தைக் குறியீடுகள் இருந்திருந்தால் அனைத்தும் ஆதாள பாதாளத்திற்கு ப�ோயிருக்கும். பங்குச் சந்தையில் லாப கண்ணாம் பூச்சியாட்டம் ஆடிக்கொண்டிருந்த அனைவருக்கும் கண்களில் கிலி பட்டாம் பூச்சிகள் பறந்திருக்கும். காரணம் அவர்களுடைய பங்குச் சந்தை சூதாட்டத்திற்கு காரணமாக இருந்திருக்க கூடிய மேற்குலகின் கிழக்கு நாடுகளுக்கான வாயில் என்று கருதப்பட்ட கான்ஸ்டான்டிந�ோபில் துருக்கியர்களால் என்றென்றைக்குமாக இழுத்து மூடப்பட்டதுதான். ஆனால் அன்றைய காலகட்டங்களில் இன்றைய நிலைப் ப�ோல இல்லையென்றாலும் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிந�ோபிலை கைப்பற்றியதால் மேற்குலகத்தின் சந்தைகளுக்கு வந்துக�ொண்டிருந்த கிழக்கு நாடுகளின் வணிகப் ப�ொருட்கள் 3
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன. மேற்குலகம் தரை வழியாக கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்ய வேண்டுமென்றால் அது கான்ஸ்டான்டிந�ோபிலின் வழியாகத்தான் சாத்தியப்படும். துருக்கியர்கள் அந்நகரைப் பிடிக்கும் காலத்திற்கு முன்பு வரை மேற்குல நாடுகளின் அனைத்து சந்தைகளுக்கும் கான்ஸ்டான்டிந�ோபிலின் வழியாகவே கிழக்கு நாடுகளின் அதாவது இந்தியா, சீனா, இலங்கை, ஜாவா ப�ோன்ற நாடுகளின் வணிகப் ப�ொருட்கள் வந்துக�ொண்டிருந்தன. கான்ஸ்டான்டிந�ோபிலை விட்டால் மேற்குல நாடுகளின் சந்தைகளுக்கு கிழக்கு நாடுகளுடன் தரைவழியாக த�ொடர்புக�ொள்வதற்கு எந்த மாற்று வழியும் கிடையாது. தரைவழி இல்லையென்றால் கடலில்தான் குதிக்கவேண்டும். கிழக்கு நாடுகளுக்கு வழி கண்டுபிடிக்க. உள்ளூர் சந்தைகள் கிழக்கு நாடுகளின் மசாலா வணிகப் ப�ொருட்கள் இல்லாமல் அசூர இலாபமீட்ட முடியாமல் படுத்துவிட்டதால் மேற்குலக நாடுகளை ஆண்ட அரசர்களுக்கு கடலில் குதித்து கிழக்கு நாடுகளுக்கு வணிக வழி கண்டுபிடித்தேயாக வேண்டிய நிலை உருவாகிப்போனது. இந்த இக்கட்டான நிலைக்குப் பிறகே மேற்குலக நாடுகளில் புதிய உலகம் கண்டுபிடிக்கும் தீப் பற்றிக்கொண்டது. உலகம் தட்டையா குட்டையா என்று குழம்பிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் புதிய உலகைப் பற்றிப் பேசத் த�ொடங்கிவிட்டார்கள். மேற்கிலிருக்கும் அட்லாண்டிக் கடலில் இறங்கிவிட்டாலே புதிய உலகம்தான் என்று நம்பிய அப்பாவிகள் எல்லாம் உண்டு. அவர்களைப் ப�ொறுத்தமட்டில் புதிய உலகம் என்பது வேறு ஒன்றும் இல்லை கிழக்கு நாடுகளான இந்தியா, இலங்கை மற்றும் சீனாதான். இன்றைக்கு அமெரிக்கா என்று அறியப்படும் இரண்டு கண்டங்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் அந்தப் பக்கம் இருக்கிறது என்பதெல்லாம் மேற்குலகத்தினர் அறியாத விசயம். அப்படி இரண்டு கண்டங்கள் இருக்கின்றன என்று அன்றைய நாட்களில் யாராவது அவர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தாலும் இரண்டாம், கண்டமாம், பெருசாம் இன்னாப்பா பேய் கத ச�ொல்ற என்று சிரித்திருப்பார்கள். அன்றைய மேற்குலகத்தினரின் பூல�ோக ஞானம் அப்படி. 4
நவீனா அலெக்சாண்டர்
புதிய உலகை கண்டுபிடிக்கும் ப�ோட்டியில் முதலில் களம் கண்டவர்கள் ப�ோர்ச்சுகீசியர்கள். இவர்களும் அட்லாண்டிக் கடலை குறுக்காக கடந்தால் இந்தியா வந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள்தான். இப்படி இந்தியாவை கண்டுபிடிக்க அட்லாண்டிக் கடலில் முதலில் காலை வைத்தவர் டியாக�ோ காவ�ோ (Diego Cao). இவர் 1483-ல் கடல் களம் கண்டார். இவரால் ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு அருகில் மட்டுமே செல்ல முடிந்தது. இவர் காட்டிய வழியைப் பின்பற்றி 1488-ல் கடலில் இறங்கியவர் பார்தல�ோமேவ�ோ டையாஸ் (Bartholomew Dias). இவரும் ப�ோர்ச்சுகீசியரே. மனிதர் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்றழைக்கப்படும் தென்கோடி முனையை தாண்டிவிட்டு இனி நம்மால் ஆகாது சாமி என்று வீடு திரும்பிவிட்டார். அட்லாண்டிக் கடலில் இறங்கி அந்த கடலை குறுக்கு வெட்டாக கடந்து இந்தியாவை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்றுக் கிளம்பியவர்களில் அடுத்தவர் கிறிஸ்டோபர் க�ொலம்பஸ். க�ொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க அட்லாண்டிக் கடலில் இறங்கியது 1492-ல். இறுதியில் அவர் கண்டு பிடித்தது கரீபியன் தீவுகளை. மேற்கில் நிலைமை இப்படி இருக்க கிழக்கில் இருந்த நாடுகளில் ஒன்றிற்கு மட்டும் அட்லாண்டிக் கடலை குறுக்குவெட்டாக கடந்தால் அமெரிக்கா கண்டம் வரும் என்பது மிக நன்றாகவேத் தெரியும். அதுவும் 1420-களிலேயே. அதாவது மேற்குலகம் அட்லாண்டிக் கடலில் கப்பல் ஓட்டுவது என்று நினைத்துக் கூடப் பார்க்காத ஆண்டுகளிலேயே. க�ொலம்பஸ் கரீபியன் தீவுகளை கண்டுபிடிப்பதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா கண்டம் குறித்து அறிந்துவைத்திருந்த நாட்டுக்கு ச�ொந்தக்காரர்கள் யார்? அமெரிக்கா கண்டங்களைக் கண்டு பிடித்த அந்த மனிதர் யார்?
5
புது உலகத்தின் த�ொடக்கம்…
"எதுவும் ஒன்று கூடி இருக்கவில்லை. எல்லாம் பேரமைதியில் இருக்கிறது. எதிலும் அசைவுகளில்லை. வானில் அனைத்தும் மந்தமாகவும், ஓய்விலும் இருந்தன. நீரையும், கடலையும் தவிர எதுவும் உருவாகியிருக்கவில்லை. காரிருளில் அனைத்தும் அமைதியாக இருந்தன. – ப�ோபல் வு (Popul Vuh)”
மே
ற்கில் பசிபிக் பெருங்கடல், கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், தெற்கில் இந்த இரண்டு பெருங்கடல்களும் சந்தித்துக்கொள்ளும் கடல் பகுதி, வடக்கில் பனி உறைந்த ஆர்டிக் கடல். இவைகளுக்கு நடுவில் அலகுடன் கூடிய கிளியின் தலைப்போன்ற த�ோற்றத்துடன் பரந்துவிரிந்து கிடப்பது அமெரிக்கக் கண்டம். அமெரிக்கா என்று ஒட்டு ம�ொத்தமாக அடையாளப்படுத்தினாலும் அதற்குள் இரண்டு பெரும் நிலப் பிரிவுகள் இருக்கின்றன.
வடக்கு அமெரிக்கக் கண்டம் மற்றும் தெற்கு அமெரிக்கக் கண்டம். இன்றைக்கு வடக்கு கண்டம் அமெரிக்கா (United States of America) என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு கண்டங்களும் ஐர�ோப்பிய இனங்களின் குடியேற்றத்தால் நிறைந்திருக்கிறது. அமெரிக்கா ஆங்கில ம�ொழி பேசுபவர்களால் பெரும்பான்மையாகவும், தென்னமெரிக்கா ஸ்பானிய ம�ொழி பேசுபவர்களைப் பெரும்பான்மையாகவும் க�ொண்டிருக்கிறது. 6
நவீனா அலெக்சாண்டர்
குடியேற்றக்காரர்களால் நிறைந்திருக்கிறது என்றால் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் அவர்கள் இல்லைப�ோலும் என்கிற ப�ொருள்தானே க�ொள்ளவேண்டியிருக்கிறது. நிச்சயமாக அப்படித்தான். ஏனென்றால் அந்த இரண்டு பெரும் கண்டங்களின் பூர்வீக மண்ணின் மைந்தர்கள் ஐர�ோப்பிய இனங்கள் கிடையாது. அவைகளுக்கு என்று தனித்த வரலாறு உண்டு. மண்ணின் மைந்தர்களின் தனித்த நாகரீகங்கள் உண்டு. அந்த மண்ணிற்கே உரிய வரலாறும் மைந்தர்களும் அழிக்கப்பட்டு இரத்தச் சரித்திரமாக வரையப்பட்டதே இன்றைய அந்தக் கண்டங்களின் முகம். இரத்தக் கரையை மறைத்திருக்கும் நவீன முகத்தைவிட மண்ணின் மைந்தர்களின் உண்மை முகத்தை அவர்களின் வரலாற்றைத் தெரிந்துக�ொள்ள வேண்டியது அவசியம்தானே. இப்போதைய புரிதலுக்காக வேண்டி வட மற்றும் தென்னமெரிக்கக் கண்டங்களை ம�ொத்தமாக அமெரிக்கக் கண்டம் என்று வைத்துக்கொள்வோம். ஏப்களும், ஏப்களின் வழி த�ோன்றல்களான ஹ�ோம�ோ குடும்பத்தைச் சேர்ந்த மனித-குரங்கினங்களும் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளையே மையமாக வைத்துத் த�ோன்றியிருக்க வேண்டும் என்பதாக இன்றைய த�ொல்லியல் ஆதாரங்கள் தரவுகளைத் தந்துக�ொண்டிருக்கின்றன. அதன்படி பார்க்கையில் அமெரிக்கக் கண்டம் என்பது மனித உயிரினத் த�ோற்றத்திற்கான எத்தகைய புற ஆதாரங்களையும் க�ொண்டிருந்ததாகத் தெரியவில்லை. வேறு வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் பூமி த�ோன்றிய நாள் முதல் சுமார் கி.மு. 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்கக் கண்டத்தில் மனிதச் நடமாட்டம் என்பதற்கான வாய்ப்பே இல்லாமலிருந்திருக்கிறது. மனித சஞ்சாரம் அற்ற பெரும் கண்டமாக. தென்கிழக்காசியப் பகுதிகளில் இருந்த ஹ�ோம�ோ சேப்பியன்கள் (இன்றைய மனித இனம்) ஆசியக் கண்டத்தின் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் குடியேற்றங்களை நிகழ்த்தியபடி சைபீரியாவை அடைந்து பிறகு வட கிழக்கு சைபீரியா வழியாக இன்றைய அலாஸ்கா பகுதிக்குள் நுழைந்து அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றையலிருந்து ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வட 7
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
கிழக்கு சைபீரியாவையும் அலாஸ்காவையும் பியரிங் நீர் இணைப்பு முனை ஒன்றுடன் ஒன்று இணைத்திருந்தது. அதன் வழியாக ஆசியக் கண்டத்திலிருந்து அமெரிக்கக் கண்டத்திற்குக் கால் நடையாகவே இடம் பெயர்வதற்கான வாய்ப்பு நிலவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. பியரிங் நீர் இணைப்பு வழியாகவே வட கிழக்கு பகுதியிலிருந்த ஹ�ோம�ோ சேப்பியன்கள் ஆசியக் கண்டத்திலிருந்து இடம் பெயர்ந்து அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கிறார்கள். இது நடந்தது சுமார் 70,000 வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. க�ோட்பாடு அளவில் 70,000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்கக் கண்டத்திற்குள் மனிதர்கள் நுழைந்துவிட்டிருக்கலாம் என்று கருதப்பட்டாலும் அமெரிக்கக் கண்டத்தில் முதல் மனிதக் குடியேற்றத்துக்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கி.மு. 25,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கிடைக்கத் த�ொடங்குகிறது. வட அமெரிக்காவின் தற்போதைய விர்ஜீனியா மாவட்டத்தில் கி.மு. 16,000 ஆண்டைச் சேர்ந்த கற்கால மனித இருப்புக்கான எச்சங்களும், வடக்கு பென்செல்வேனியாவில் கி.மு. 15,000 ஆண்டைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தென்னமெரிக்கக் கண்டத்தில் (வடக்கு சிலி) கி.மு. 10,500 ஆண்டைச் சேர்ந்த கற்கால மனித இருத்தலுக்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. சில வரலாற்று ஆய்வாளர்கள் சுமார் ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்பே கற்கால மனிதர்கள் அமெரிக்கக் கண்டத்திற்குள் நுழைந்திருக்கலாம் அலாஸ்கா நிலப்பகுதிக்குள் நுழைந்த கற்கால மனிதர்கள் முதலில் இன்றைய கனடா பிறகு வட அமெரிக்கா அடுத்து மத்திய அமெரிக்கா இறுதியாகத் தென்னமெரிக்கா என்று அமெரிக்கக் கண்டம் முழுவதும் படிப் படியாகப் பரவியிருக்கிறார்கள். புதிய உலகமான (New World) அமெரிக்காவிற்குள் கற்கால மனிதர்கள் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்துவிட்டிருக்கலாம் என்று தெளிவாகத் தெரிந்தாலும் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கின்றன. இதைக் குறித்துப் பார்ப்பதற்கு முன்பாக மனித இனத்தின் முக்கிய இனப் பிரிவுகளைக் குறித்து அறிந்துக�ொள்வது அவசியம். 8
நவீனா அலெக்சாண்டர்
இன்றைக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு மனித இனங்கள், அவைகளுக்கு என்று தனித்த ம�ொழி, கலாச்சாரங்கள் இருந்தாலும் அனைத்தும் நான்கு முதன்மை இனத்திலிருந்து கிளைத்து உருவானவைகளே. நீக்ராய்ட், ஆஸ்டிரலாய்ட், காக்கசாய்ட் மற்றும் மங்கோலாய்ட். நீக்ராய்ட் ஆப்பிரிக்கக் கருப்பின மக்களையும் அவர்களின் கிளைப் பிரிவுகளையும் உள்ளடக்கியது. ஆஸ்டிரலாய்ட் தமிழர்களையும் தென்கிழக்காசிய மக்களினத்தையும் உள்ளடக்கியது. காக்கசாய்ட் ஐர�ோப்பிய வெள்ளையின மற்றும் ஆரிய மக்களினத்தையும் உள்ளடக்கியது. மங்கோலாய்ட் திபேத்திய மற்றும் மங்கோலிய இனத்தைக் க�ொண்டது. மண்டை ஓட்டின் உருவ அமைப்பைக் க�ொண்டு மனித இனங்கள் மேலே பார்த்த நான்கு பிரதான வகைகளுக்குள் க�ொண்டுவரப்படுகிறது. நீக்ராய்ட் மக்களினத்தின் மண்டைய�ோட்டில் கண் மற்றும் மூக்கு பகுதிகள் பெரிய வட்டத் துளைகள் க�ொண்டதாக இருக்கும். கீழ்த் தாடை மண்டை ஒட்டிலிருந்து சற்றே முன்னால் துரத்தியபடி இருக்கும்.
ஆஸ்டிரலாய்ட் மண்டைய�ோட்டில் கண் மற்றும் மூக்கு பகுதிகள் சற்றே சதுர அமைப்பிலும் மேல் தாடை கன்னப் பகுதி இரு புறமும் துருத்திக்கொண்டிருக்கும். மண்டைய�ோட்டின் ம�ொத்த உருவ அமைப்பு சற்றே உருண்டை கலந்த சதுர அமைப்பில் இருக்கும். 9
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
காக்கசாய்ட் மண்டைய�ோடு நீள் சதுரமாகக் கீழ்த் தாடை பகுதியில் உள்ளடங்கியிருக்கும். கண் பகுதி வட்டமாக, மூக்கு பகுதி முக்கோண அமைப்பில் இருக்கும்.
மங்கோலாய்ட் மண்டைய�ோட்டில் கண் பகுதி சிறியதாக இருக்கும். மூக்கு பகுதி சற்றே துருத்திக்கொண்டு நீள் சதுரமாக இருக்கும். கீழ்த் தாடைப் பகுதி சதுர அமைப்பில் இருக்கும். 10
நவீனா அலெக்சாண்டர்
ஆப்பிரிக்கக் கண்டத்தின் மையப் பகுதியில் த�ோன்றிய மாந்த இனம் (ஹ�ோம�ோ சேப்பியன்ஸ் - நீக்ராய்ட்) பூமியின் மற்ற பகுதிகளுக்குப் பரவித் தட்ப வெட்ப நிலை, வாழ்நிலை மற்றும் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக மற்ற மூன்று மாந்த இனங்களாக (ஆஸ்டிரலாய்ட், காக்கசாய்ட் மற்றும் மங்கோலாய்ட்) பிரிந்ததாக ஒரு கருத்தும் (Expansion Theory) இதற்கு எதிரான மற்றொரு கருத்தும் (Replacement Theory – ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வெளியேறிய ஹ�ோம�ோ சேப்பியன்ஸ் பூமியின் மற்ற பகுதிகளில் இருந்த நியாண்டர்தல்களையும், ஹ�ோம�ோ எரகாஸ்டர்களையும் அழித்து அல்லது அவர்களுடன் இனக்கலப்பு செய்து மற்ற மூன்று இனங்களாகப் பிரிந்தார்கள்) ஆய்வு வெளியில் இப்போதைக்குப் பஞ்சாயத்தில் இருக்கிறது. பஞ்சாயத்து எப்படியானதாக இருந்தாலும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஹ�ோம�ோ சேப்பியன்கள் த�ோன்றிய அதே காலக்கட்டத்தில் தென்னிந்தியப் பகுதிகளிலும் ஹ�ோம�ோ சேப்பியன்கள் 11
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
இருந்திருக்கிறார்கள் என்பது கவனத்தில் க�ொள்ள வேண்டிய மிக முக்கிய விசயம். இதற்கு உதாரணம் இன்றைய சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கிடைக்கும் சுமார் இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முற்பட்ட கற்கால மனிதர்களின் கற்கருவிகள். இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிப் பூமியின் மற்ற பகுதிகளுக்குக் கற்கால மனிதர்கள் (ஹ�ோம�ோ சேப்பியன்ஸ்) பரவியதாகக் க�ொண்டால் அவர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வந்து சேர ஐந்திலிருந்து பத்தாயிரம் வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும். ஆனால் தென்னிந்தியப் பகுதிகளில் கிடைக்கும் பழங்கற்கால கருவிகள் (சுமார் இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முந்தையது) ஆப்பிரிக்கப் பழங்கற்கால கருவிகளின் காலத்தை ஒட்டியே இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் ஆப்பிரிக்காவில் ஹ�ோம�ோ சேப்பியன்ஸ் கற்கருவிகளை கண்டுபிடித்த அதே காலக்கட்டத்தில் தென்னிந்தியப் பகுதிகளிலும் கற்கருவிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் கற்கருவிகளை கண்டுபிடித்த பிறகு அங்கிருந்து வெளியேறிய ஹ�ோம�ோ சேப்பியன்களின் கூட்டம் ஒன்று தென்னிந்தியப் பகுதிகளுக்குள் பிற்காலத்தில் பரவியிருக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஹ�ோம�ோ சேப்பிய இனம் த�ோன்றிய அதே காலத்தில் தென்னிந்தியப் பகுதிகளிலும் ஹ�ோம�ோ சேப்பியன்கள் த�ோன்றியிருக்க வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் மாத்திரமே ஒரே காலக்கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் ஆப்பிரிக்காவிலும் தென்னிந்தியப் பகுதிகளிலும் ஒரே சமயத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பரிணாம வளர்ச்சி க�ொள்கையின்படி ஒரே உயிரினம் - அதாவது ஹ�ோம�ோ சேப்பியன்ஸ் – ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் த�ோன்ற வாய்ப்பில்லை. நீக்ராய்ட் இனம் நியாண்டர்தல் ப�ோன்ற மற்ற மனிதக் குரங்கு இனங்களுடன் கலந்து ஆஸ்டிலராய்ட் இனம் (இங்கே தமிழினம்) த�ோன்றியிருக்க வாய்ப்புகள் இல்லை என்கிற கருத்தை ஒதுக்கிவிட முடியாது (இது எனது தனிப்பட்ட கருத்து). 12
நவீனா அலெக்சாண்டர்
இந்தப் பஞ்சாயத்திற்கு வரும் காலங்களில் கிடைக்கக் கூடிய கற்காலத் த�ொல்லியல் ஆதாரங்களே முடிவு ச�ொல்ல முடியும் என்பதால் இப்போதைக்கு ஆஸ்டிலராய்ட் இனம் – தமிழினம் – தென்னிந்தியப் பகுதிக்கே உரியத் தனித்த இனம் என்று க�ொள்வதில் தெய்வக் குத்தம் ஏதும் நிகழ்ந்துவிடப் ப�ோவதில்லை. ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து நீக்ராய்ட் இனம் மற்ற பகுதிகளுக்குப் பரவியதைப் ப�ோலத் தென்னிந்தியப் பகுதிகளில் இருந்து ஆஸ்டிலராய்ட் இனமும் – தமிழினம் – பூமியில் மற்ற பகுதிகளுக்குப் பரவியிருக்கிறது. குறிப்பாகத் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில். தென்கிழக்கு ஆசியப் பகுதிகளான இந்தோனேசியா, ஜப்பான், பப்பு-நியு-கினி தீவுக் கூட்டங்கள், இந்தோனேசியத் தீவுக் கூட்டங்கள், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, ஈஸ்டர் தீவுகள் என்று தென் கிழக்காசியக் கடல் பகுதிகளில் இருக்கும் அனைத்துக் கண்ட மற்றும் தீவுக் கூட்ட நிலங்களுக்கும் சுமார் 1,00,000 வருடங்களுக்கு முன்பே பரவத் த�ொடங்கியிருக்கிறார்கள் ஆஸ்டிலராய்ட் இன – தமிழினம் – ஹ�ோம�ோ சேப்பியன்ஸ். தென் கிழக்காசியப் பரவலின் ஒரு பகுதியாகச் சைபீரியாவின் வழி வட கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்த பியரிங் கால்வாயை அடைந்த ஆஸ்டிலராய்ட் இன – தமிழினம் – மக்கள் பிற் காலத்தில் அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் பரவியிருக்கிறார்கள் (இது எனது கருத்து மாத்திரமே இதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கிடைக்க வேண்டியிருக்கிறது). பிளைய�ோஸ்டோசின் பனி ஊழி காலத்தில் (Ice Age) வட கிழக்கு பசிபிக் கடல் பகுதியின் மீது பனி உறைந்து ஆசியக் கண்டத்திற்கும் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதி தரைப�ோலக் கெட்டிதட்டி இருந்த காரணத்தால் ஆஸ்டிலராய்ட் இன – தமிழினம் – மக்கள் கால் நடையாகவே ஆசியக் கண்டத்திலிருந்து அமெரிக்கக் கண்டத்தை அடைந்து பிறகு அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் பரவியிருக்கிறார்கள். இதை மறுக்கும் மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள் அமெரிக்கக் கண்டத்திற்குள் முதன் முதலில் நுழைந்தது ஐர�ோப்பியக் காக்கசாய்ட் இன மக்களாக இருக்கலாம் என்றும் அமெரிக்கப் பூர்வக் குடி மக்களினம் வெள்ளை காக்கசாய்ட் இன மக்களின் வழி த�ோன்றல்கள் 13
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
என்றும் நிறுவ முயன்று வருகிறார்கள். இதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் இரண்டு. முதலாவது வடகிழக்கு பசிபிக் பெருங் கடல் பகுதியைப் ப�ோலவே வட மேற்கு அட்லாண்டிக் கடல் பகுதியின் மேற்பரப்பும் பனி உறைந்து மக்கள் நடந்து கடப்பதற்கான பாதைப�ோலவே செயல்பட்டிருக்கிறது என்பதும் இரண்டாவது அதன் வழியாகக் காக்கசாய்ட் இனம் ஐர�ோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்திருக்கிறது என்பதும். காக்கசாய்ட் இன மக்களின் மண்டைய�ோடுகள் த�ொல்லியல் சான்றுகளாக அமெரிக்கக் கண்டத்தில் கிடைக்கிறது என்றாலும் அந்தக் கண்டம் முழுவதிலும் பரவலாக அது கிடைப்பதில்லை. மேலும் அமெரிக்கப் பூர்வக் குடிகளின் மண்டைய�ோட்டு அமைப்பு ஆஸ்டிலராய்ட் மக்களின மண்டைய�ோட்டை ஒட்டியே இருக்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்த ஐர�ோப்பியர்கள், மண்ணின் பூர்வக் குடி மக்களுக்குச் சிகப்பிந்தியர்கள் என்று தலையும் புரியாத வாலும் தெரியாத ம�ொன்னையான ஒரு அடையாளப் பெயரை வைத்துவிட்டிருந்தாலும் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தனித்த வட்டார அரசுகளும், நான்கு மிகப் பெரிய பேரரசுகளும் அமெரிக்கக் கண்டத்தில் த�ோன்றி மறைந்திருக்கிறது. ஐர�ோப்பியர்கள் சிகப்பிந்தியர்கள் என்கிற பெயரை வழக்கிற்குக் க�ொண்டு வந்ததற்கான மூலத்தை இப்போது பார்த்துவிடுவ�ோம். பதினைந்தாம் நூற்றாண்டுகளின் இடைப்பகுதியில் ஒட்டமான் பேரரசு துருக்கியின் கான்ஸ்டாண்டிந�ோபில் நகரைக் கைப்பற்றி ஐர�ோப்பியக் கண்டத்திற்கும் தென்னிந்தியாவிற்குமான அதி முக்கிய வணிகப் பாதையை அடைத்துப்போட்டதும் தென்னிந்தியாவிற்கான புதிய வணிகப் பாதையைக் கண்டுபிடித்தேயாக வேண்டிக் கட்டாய நிர்ப்பந்தம் ஐர�ோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அன்றைய ஐர�ோப்பாவின் அனைத்து நாடுகளுக்கும் இந்தக் கட்டாயம் இல்லையென்றாலும் முக்கியமாக இங்கிலாந்து, பிரான்சு, ப�ோர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் டென்மார்க் ப�ோன்ற நாடுகளின் சந்தைகளுக்கு இது அவசரக் கட்டாயமாக இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் அமெரிக்கா என்கிற 14
நவீனா அலெக்சாண்டர்
ஒரு கண்டம் இருப்பதாக யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதாவது மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குச் சுத்தமாகத் தெரியாது. அவர்களின் நாடுகளுக்கு மேற்கு பக்கமிருக்கும் அட்லாண்டிக் கடலைக் குறுக்காகக் கடந்துவிட்டால் இந்தியாவும் அதன�ோடு இணைந்த ஆசியக் கண்டமும் வந்துவிடும் என்பது அவர்களின் அனுமானம். அந்த அனுமானத்துடனேயே ஐர�ோப்பிய நாடுகளைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் அட்லாண்டிக் கடலைக் குறுக்காகக் கடந்து அமெரிக்காவை அடைந்ததும் அதைத் தவறுதலாக இந்தியா என்று அனுமானித்து விட்டார்கள். அந்தக் காலக்கட்டத்து ஏஸ்டெக் மற்றும் இன்கா நாகரீக மக்களைப் பார்த்து இந்தியர்கள் என்கிற நினைப்பிலும், அவர்களின் உடலில் இருந்த சிகப்பு நிறச் சாயத்தின் அடிப்படையிலும் அவர்களைச் சிகப்பு-இந்தியர்கள் என்று அழைத்துத் த�ொலைத்தார்கள். ப�ோகட்டும். விட்ட இடத்திற்கு வருவ�ோம். சுமார் ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்பு த�ொடங்கிப் பல பத்தாயிரம் வருடங்களாகப் பியரிங் பனி பாதை வழியாக ஆஸ்டிலராய்ட் இன மக்கள் – தமிழ் இனம் – அலாஸ்கா வழியாக அமெரிக்கக் கண்டத்திற்குள் குடி பெயர்ந்தபடி இருந்திருக்கிறார்கள். அலை அலையாக. இந்தக் குடிபெயர்வு அலை ஓய்ந்தது இன்றையிலிருந்து சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பாக. பிளைய�ோஸ்டோசின் பனி ஊழிக் காலம் 12,000 வருடங்களுக்கு முன்பு முடிவிற்கு வந்ததும் (அதாவது பூமியின் வெப்ப நிலை சற்றே உயர்ந்ததும்) வட கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடல் பரப்புகளின் மேல் பரவியிருந்த பனி படலங்கள் உருவகத் த�ொடங்கிவிட்டன. இதன் காரணமாக அமெரிக்கக் கண்டம் வட மேற்கில் ஆசியக் கண்டத்திலிருந்தும், வட கிழக்கில் ஐர�ோப்பியக் கண்டத்திலிருந்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுத் தனித்து விடப்பட்டது. வேறு வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் பூமியின் மற்ற பகுதி மக்களுடனான த�ொடர்பு முற்றிலும் அறுந்துப�ோனது அமெரிக்கக் கற்கால மனிதர்களுக்கு. இதன் காரணமாக அவர்களுடைய கற்கருவிகளில் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் அவைகள் பழங்கற்கால காலகட்டத்தைச் சேர்ந்தவைகளாகவே த�ொடர்ந்து வந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தது. 15
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மீச�ோ அமெரிக்க நாகரீகக் காலக்கட்டத்தை ஆறு நிலைகளில் பிரித்துக்கொள்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள். இந்தப் பிரிவுகள் த�ொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பேலிய�ோ இந்தியன் (கி.மு. 35,000 – 7000) ஆர்காயிக் (கி.மு. 8000 – 1500) பிரி கிளாசிக் (கி.மு. 1500 – கி.பி. 150) கிளாசிக் (கி.பி. 150 – 900) த�ொடக்கப் ப�ோஸ்ட் கிளாசிக் (கி.பி. 900 – 1250) பின் ப�ோஸ்ட் கிளாசிக் (கி.பி. 1250 – 1519) மீச�ோ அமெரிக்க நாகரீகம் என்பது பல வட்டாரக் குழுக்களுடைய நாகரீகங்களின் த�ொகுப்பு. அனைத்தும் ஒன்றுடன் ஒன்று த�ொடர்புக்கொண்டவைகள். சில சமயங்களில் அவைகள் முன்னதின் த�ொடர்ச்சியாகவும் கூட அமைந்திருக்கின்றன. மீச�ோ அமெரிக்காவின் நிலவியல் அமைப்பும் அதன் நாகரீக வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. இன்றைய மெக்சிக்கோ, குவாத்தமாலா, ஹ�ோண்டுராஸ், பெல்சி, எல் சால்வட�ோர், நிக்காரகுவா மற்றும் க�ோஸ்டோ ரீக்கா ஆகிய நாடுகள் மீச�ோ அமெரிக்க நாகரீகத்தின் மையப் பகுதிகள்.
தாழ் நிலப் பகுதி (Low Land), மேட்டு நிலப் பகுதி (High Land) என்று இரண்டு பெரும் நிலப் பிரிவுகளைக் க�ொண்டது மீச�ோ அமெரிக்க நிலப்பகுதி. முன்பே பார்த்ததைப் ப�ோல முப்பதிற்கும் 16
நவீனா அலெக்சாண்டர்
குறையாத வட்டார நாகரீகங்கள் மீச�ோ அமெரிக்காவில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவைகள் அனைத்தைக் குறித்தும் தெரிந்துக�ொள்வது முடியாது என்பதுடன் அது அவசியமும் இல்லை. மீச�ோ அமெரிக்க வட்டார நாகரீகங்கள் ஒன்றுடன் ஒன்று த�ொடர்புக்கொண்டவைகள் என்பதால் அவைகளின் பிரதான அதே சமயத்தில் பல ஆண்டுகள் – ச�ொல்லப்போனால் ஆயிரம் ஆண்டுகள் கூட – த�ொடர்ந்து நீடித்த ஓல்மெக், மாயன், ஏஸ்டெக் நாகரீகங்கள் குறித்துத் தெரிந்துக�ொள்வது ப�ோதுமானதாக இருக்கும்.
17
கடல�ோடிய தமிழன்
"கூம்பொடு மீப்பாய் களையாது மிசைபரந் த�ோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலத் தகாஅர் இடைப்புலப் பெருவழி ச�ொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழ வ�ோய! - புறநானூறு, 30, வரி: 10-15”
க
டலை ஆளும் மனிதனின் கனவு பழைய கற்காலம் முதலே த�ொடங்கிவிட்டது. கற்கருவிகளை செய்யத் த�ொடங்கிய மனிதன் அதைக் க�ொண்டு தனக்கான மரக் கலத்தையும் செய்யத் த�ொடங்கினான். அதுவரை கடலைக் கரையிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். அது அவனுக்கான உணவு கடலிலும் கிடைக்கும் என்பது.
மரத்தை வெட்டி அதன் தண்டுப் பகுதியில் குடுவை ப�ோலக் குடைந்து ஆற்றில் விட்டு மனிதன் தன்னுடைய நீர் வழிப் பயணத்தைத் த�ொடங்கினான். அந்தப் பயணம் மனிதனின் பரிணாம வளர்ச்சிய�ோடு சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. நீரில் கிடைக்கும் உணவிற்காக முதலில் படகைச் செய்த மனிதன் அதன் மற்ற பயன்களைப் புரிந்துக�ொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை. மூன்று கற்காலப் பகுதிகளிலும் பெரும் அளவில் பயணத்திற்கும் உணவுத் தேடலுக்கும் படகு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விவசாய நாகரீகக் காலத்தில் உற்பத்திப் ப�ொருட்களை மற்ற நாகரீக மக்களிடம் க�ொண்டு சேர்க்க ஆறுகளும், ஆறுகள் ப�ோய்ச் சேரும் கடலும் மனிதனுக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன. பல ஆயிரமாண்டு காலப் பயண அனுபவம் மனிதனுக்குப் பெரிய கப்பல்களைக் கட்டும் த�ொழில் நுட்பத்தைக் கற்றுக் க�ொடுத்திருக்கிறது. மனித இனம் ஒரு நிலைப்படுத்தப்பட்ட மைய 18
நவீனா அலெக்சாண்டர்
அரசு சமூகமாக மாறிய ப�ோது நீர் வழிப் பயணம் என்பது உணவு மற்றும் வணிகத் தேவைகளுக்கு என்பதையும் தாண்டிப் புதிய நிலப் பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவியாகவும் மாறிப்போனது. அது த�ொடங்கி அன்றைய முக்கிய நாகரீகங்களான திராவிடச் சிந்து, எகிப்து மற்றும் சுமேரியா ஆகியவைகளின் மிகப் பெரும் புதிய நிலப் பகுதிகளைத் தேடும் களங்கள் கடலில் பயணித்தபடியே இருந்திருக்கிறது. இந்த நாகரீகங்களின் இத்தகைய செயல்பாடுகளின் வரலாற்று பதிவுகள் அவற்றின் அழிவ�ோடு சேர்ந்து அழிந்துப�ோய்விட்டன. இதன் காரணமாக உலகின் அறியப்படாத நாடுகளைத் தேடும் பணி என்பது ஒரு முற்று பெறாத மீண்டும் மீண்டும் தேடிப் புதுப்பிக்கக் கூடிய காரியமாக மாறிப்போனது. மனித நாகரீகத்தின் த�ொடக்கக் காலத்திலிருந்தே தென் கிழக்காசிய மக்களான தென்னிந்தியர்களும் சீனர்களுமே கடல் வழிப் பயணத்தில் முன்னிலையில் இருந்தார்கள். உலகின் மற்ற கண்டங்களைத் தங்களுடைய மிகப் பெரிய வணிகக் கப்பல்களின் மூலம் சென்று அடைந்து அந்தக் கண்டங்களின் உற்பத்திப் ப�ொருட்களைத் தங்களுடைய நாட்டின் உள் நாட்டுச் சந்தைகளுக்குக் க�ொண்டுவந்து சேர்த்தார்கள். இதனுடன் சேர்த்துத் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தையும் தாங்கள் சென்று சேரும் நாடுகளில் பரப்பினார்கள். தென் கிழக்காசிய மக்களின் இந்தக் கடல�ோடும் அனுபவம் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டபடி இருந்தது. தென்னிந்தியர்கள் அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் கடல�ோடும் அனுபவத்தில் மிகச் சிறந்து விளங்கினார்கள் என்றாலும் தங்களின் கடல�ோடும் அனுபவங்களை வரலாற்று ஆவணங்களாகப் பதிவு செய்யத் தவறிவிட்டார்கள். தவறிவிட்டார்களா அல்லது அவைகள் பல ஆயிரம் ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்துவிட்டனவா அல்லது அவைகள் திட்டமிட்டே வந்தேறிய இனத்தால் அழிக்கப்பட்டதா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய விசயங்கள். அதே வேலையில் சீனர்கள் தங்களுடைய கடல�ோடும் அனுபவத்தை வரலாற்று ஆவணமாகப் பதிவு 19
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
செய்திருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவைகள் இன்றைக்கும் தப்பிப் பிழைத்துமிருக்கின்றன. வரலாற்று காலத் த�ொடக்கத்தில் கிரேக்கர்களும் இந்தக் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் தங்களுடைய பங்கைச் செலுத்தத் த�ொடங்கினார்கள். கிரேக்கத்தின் குட்டித் தீவுகள் ஒரு பேரரசாக உருவெடுத்தபின் தென் கிழக்கு ஆசிய நாடுகளான தென்னிந்தியாவுடனும் சீனாவுடனும் கடல் வழி வணிகத்தில் இறங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதுவரை மத்தியக் கிழக்கு பகுதியில் இருந்த சுமேரிய நாகரீக நாடுகளுடன் கடல் வணிகத் த�ொடர்பு க�ொண்டிருந்த தமிழர்களும் சீனர்களும் கிரேக்கப் பேரரசின் உருவாக்கத்திற்குப் பிறகு மத்தியத் தரைக் கடல் பகுதிகளுடனும் தங்களின் வணிகத்தை விரிவாக்கினார்கள். தங்களின் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தையும் அது குறித்த வரலாற்று ஆதாரங்களையும் சீனர்களைப் ப�ோலவே கிரேக்கர்களும் ஆவணமாகப் பதிந்து அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தியிருக்கிறார்கள். அதன் த�ொடர்ச்சியாகவே ர�ோமப் பேரரசு காலத்தில் கிரேக்கர்களின் கடல�ோடும் அனுபவம் பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. ர�ோமானியர்கள் கிரேக்கர்களிடமிருந்து பெற்ற கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் தங்களுடைய பங்களிப்பையும் செலுத்தினார்கள். கிருத்தவ சகாப்தத்தின் பிறகான – அதாவது கி.பி. 100 – 200 – நூற்றாண்டுகளில் தமிழர்கள், சீனர்கள் மற்றும் ர�ோமானியர்களே கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் முன்னனியில் இருந்தார்கள். தமிழர்கள் கடல�ோடும் த�ொழில் நுட்பம் என்பது மாத்திரம் இல்லாமல் கடல் வணிகத்திலும் உலகச் சந்தையை நிர்ணயிக்கும் சக்தியாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தென்னிந்தியப் பகுதியான சேர மற்றும் ச�ோழர்களின் கடற்கரைப் பகுதிகள் ர�ோமானிய, பெர்சிய மேற்கும், சீன ஆஸ்திரேலியக் கிழக்கும் கடல் வணிகம் ப�ொருட்டுச் சந்திக்கும் இடமாகப் பல நூற்றாண்டுகள் திகழ்ந்திருக்கிறது. தமிழர்களின் கடல் வணிகப் பேராயங்கள் (Conglomerates – பெரு நிறுவனங்களின் கூட்டு) உலகின் பல பாகங்களிலும் செயல்பட்டிருக்கிறது. உதாரணமாகத் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்கிற குழுவைச் ச�ொல்லலாம். இன்றைய நவீன காலத்தில் Fortune 20
நவீனா அலெக்சாண்டர்
500 கம்பெனிகள் என்று அழைக்கப்படும் பன்னாட்டு கம்பெனிகள் எப்படி உலக மக்களின் ப�ொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனவ�ோ மிகச் சரியாக அதே ப�ோல 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் கடல் வணிகக் குழுவில் இருந்த 500 அல்லது 1000 நிறுவனங்கள் அன்றைய உலக மக்களின் ப�ொருளாதாரத்தைத் தீர்மானித்திருக்கின்றன. தமிழர்கள் திட்டமிட்ட வலைப் பின்னலுடன் அன்றைய கடல�ோடும் த�ொழில் நுட்பத்தைத் தங்களின் கைகளில் வைத்திருந்திருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் உள்ளூர் உற்பத்தி ப�ொருட்களை ஏற்றுமதி இறக்குமதி வணிகத்திற்குச் சேமிக்கும் நிறுவனத்தையும், அப்படி உள்ளூரில் திரட்டப்பட்ட வணிகப் ப�ொருட்களைத் துறைமுகங்களுக்குக் க�ொண்டுவந்து அவைகள் செல்ல வேண்டிய நாடுகளுக்கான சுங்க அனுமதிகள் பெறப்பட்டு, அவைகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதிய�ோ இறக்குமதிய�ோ செய்யப்பட்டிருக்கிறது. மணி கிராமத்தார் என்பது உள்ளூரில் உற்பத்தியாகும் ப�ொருட்களை ஏற்றுமதிக்குச் சேகரிக்கும் நிறுவனம். அந்தக் குறிப்பிட்ட ஊரில் இருப்பவர்கள் ஏற்றுமதி வணிகம் செய்ய நினைத்தால் முதலில் இந்த நிறுவனத்தைத்தான் அணுகுவார்கள். எந்த நாடுகளில் எந்த எந்த ஏற்றுமதிப் ப�ொருட்களுக்கு வாய்ப்பிருக்கிறது, அந்த நாடுகளின் இறக்குமதி முகவர்களின் த�ொடர்பு குறிப்புகளும் இந்த நிறுவனத்திடமே இருந்திருக்கிறது. இந்த நிறுவனத்திடம் முன்பணம் செலுத்தி ஏற்றுமதி ப�ொருட்களை இவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ப�ொருட்கள் குறிப்பிட்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு அந்தப் ப�ொருளுக்கான பணம் ஓராண்டுகளில் ப�ொருளை ஏற்றுமதி செய்தவருக்கு இந்த நிறுவனத்தின் மூலமே வழங்கப்படும். இந்த நிறுவனத்தின் மூலம் பெரு முதலாளிகளின் இடைத்தரகர்களும் கிராமப் புறங்களுக்கு வந்து உற்பத்தியாகும் ப�ொருட்களில் ஏற்றுமதிக்கு வாய்ப்பிருக்கும் ப�ொருட்களை வாங்கிச் செல்வதும் உண்டு. உள்ளூரில் சேகரிக்கப்பட்ட ஏற்றுமதிப் ப�ொருட்களைத் துறைமுகங்களுக்கு எடுத்துவருவது இந்த நிறுவனத்தின் கடமை. அஞ்சுவண்ணத்தார் என்பது பல நாடுகளைச் சேர்ந்த சுங்கவரி 21
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
நிறுவனம். இந்த நிறுவனம் தமிழர்களின் தலைமையில் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட ப�ொருள் எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவேண்டும�ோ அந்த நாட்டின் சுங்க இலாக்கா அதிகாரிகென்ற அலுவலகத்தை இந்த நிறுவனம் எல்லா நாட்டின் துறைமுகத்திலும் அமைத்துக்கொடுத்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்படும் ப�ொருட்களுக்கும் இறக்குமதி செய்யப்படும் ப�ொருட்களுக்கும் சுங்கவரி விதிக்கப்படவேண்டியிருந்தால் அது இந்த நிறுவனத்தின் மூலமே நடைபெறும். சித்திரமேழி பெரிய நாட்டவர் இந்த நிறுவனத்தின் பணி ஏற்றுமதி இறக்குமதி ப�ொருட்களின் மீது முத்திரையிடுவது. அந்த முத்திரையில் சுங்க வரி ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் இறக்குமதியாளரின் பெயர்கள் இருக்கும். மேலும் தமிழர்களின் எண்பேராயக் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா நாட்டுத் துறைமுகக் கல்வெட்டுப் பணிகளுக்கும் இந்த நிறுவனத்தின் ஆட்களே அமர்த்தப்படுவார்கள். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் இது நிறுவனம் என்பதைவிடப் பெரு முதலாளிகளின் குழு என்று ச�ொல்லலாம். கடல�ோடும் கப்பல்களின் ச�ொந்தக்காரர்கள். எண்பேராயம் இந்த அனைத்துச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நிறுவனம். கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் எடுக்கப்படும் புதிய முயற்சிகளுக்கும், புதிய நாடுகளின் கண்டுபிடிப்புகளுக்கும் ப�ொருள் உதவி செய்வது இந்த நிறுவனம்தான். பெரும் முதலாளிகளின் குழு இது. கடலில் இருக்கும் பெரும்பான்மையான கப்பல்கள் இவர்களுடையது. ஏற்றுமதி நாடுகளுடன் அரசியல் உறவுகளைப் பேணுவது இந்தக் குழுவின் வேலை. இந்தக் குழுவிற்கு ஏற்றுமதி நாடுகளில் குடியேற்ற ஊர்களை அமைக்கும் உரிமை எல்லா நாடுகளிலும் வழங்கப்பட்டிருந்தது. இவர்களின் கல்வெட்டுகளை இன்றைக்கும் உலகின் பல பகுதிகளிலும் த�ொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். இலங்கை கடல் பகுதி, சீனாவின் காண்டன், ஜாவா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் கேப் வெர்டி ஆகிய பகுதிகளில் 22
நவீனா அலெக்சாண்டர்
இவர்களின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி மிகப் பெரும் சக்தியாக இருந்த தமிழர்களின் வணிகக் குழுக்கள் நிச்சயம் தங்களின் உலகப் பெரும் சக்திக்கு உதவியாக இருந்துவரும் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தைப் ப�ொருட் செலவு செய்து மேலும் மேலும் உச்ச நிலைக்குக் க�ொண்டு செல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இன்றையிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் கடல�ோடும் த�ொழில் நுட்பமே தமிழர்களின் உலகச் சாம்பவான் என்கிற பெருமைக்குக் காரணம் என்பதால் பல்லாயிரம் ஆண்டுகளாக அதை மெருகேற்றியபடியே இருந்திருக்கிறார்கள். வெற்றிகரமான கடல் பயணத்திற்கு முக்கியத் த�ொழில் நுட்பமாகக் கருதப்படும் நட்சத்திரங்களை வைத்துக் கடலில் திசை அறியும் வானியலைத் தமிழர்கள் தங்களின் வானியல் அறிவின் மூலம் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று அன்றைய உலக நாகரீக மக்கள் அறிந்திராத உலகின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் சர்வச் சாதாரணமாகச் சென்று வந்திருக்கிறார்கள். கடலின் உள் நீர�ோட்டம் (sea currents) குறித்த புரிதலும் தமிழர்களுக்கு இதற்கு உதவி செய்திருக்கிறது. 23
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
இன்றையிலிருந்து 6000 ஆண்டுகளுக்கு முன்பே கடலில் ஓடும் இந்த நீர�ோட்டத்தைப் பற்றி அறிந்துவைத்திருந்தவர்கள் தமிழர்கள் தங்களின் வானியல் அறிவின் மூலம் உலகின் மற்ற பகுதிகளில் தாங்கள் கண்ட நாடுகளின் வரைப் படத்தைய�ோ அல்லது அவைகளைப் பற்றிய குறிப்புகளைய�ோ தமிழர்கள் தங்களின் வரலாற்று ஆதாரமாகப் பதிவு செய்யாமல் விட்டது நமது துர்பாக்கியமே. ஆனால் அன்றைக்குத் தமிழர்களின் சமக் காலத்திய நாகரீகங்களாக இருந்த கிரேக்கர்களும் சீனர்களும் நிச்சயம் தமிழர்களின் இத்தகைய கடல�ோடும் செயல்பாடுகளின் அனுபவத்தை வணிகப் பரிமாற்றங்களின் மூலம் பெற்று இருக்கவேண்டும். கடலில் நாம் ப�ோகும் திசையறிந்து வெற்றிகரமாகப் பல இடங்களுக்கும் ப�ோய்வர வட துருவ மற்றும் தென் துருவ நட்சத்திரங்களின் உதவி வேண்டும். வட துருவ நட்சத்திரமான ப�ோலாரிஸ் (Polaris) மற்றும் தென் துருவ நட்சத்திரங்களான கேன�ோபஸ் (Canopus), சைரஸ் (Sirius)-யின் உதவி இல்லாமல் பூமியின் தீர்க்கரேகை (longitude) மற்றும் அட்சரேகை (latitude)-யை அளப்பது மிகக் கடினம். (இதில் தீர்க்கரேகை என்பது பூமியின் மேலிருந்து கீழாகச் செல்லும் க�ோடு, அட்சரேகை என்பது பூமியின் குறுக்காகச் செல்லும் பக்கவாட்டுக் க�ோடு. தீர்க்கரேகையின் 0 டிகிரிக் க�ோட்டை பிரைம் மெரிடியன் (Prime Meridian) என்பார்கள். அட்சரேகையின் 0 டிகிரிக் க�ோட்டை ஈகுவேடார் (Equator) என்பார்கள்). வட துருவ மற்றும் தென் துருவ நட்சத்திரங்கள் கடலில் வழிகாட்டியாக (compass) பயன்படக் கூடியவைகள். தமிழர்களுக்கு வட துருவ நட்சத்திரமான Polaris அவ்வளவாக அறிமுகம் இல்லையென்றாலும் – காரணம் தமிழ் நாட்டின் அடி வானிற்கும் (horizon) கீழே அது இருப்பதால் - தென் துருவ நட்சத்திரங்களான கேன�ோபசும் சைரசும் அத்துப்படி. (அதே வேலையில் சீனர்களாலும் கிரேக்கப் பெர்சியர்களாலும் தென் துருவ நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது. அவைகள் அந்த நாடுகளின் அடி வானிற்கும் கீழே இருப்பதால்). இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்த தமிழர்கள் வட துருவ நட்சத்திரமான Polaris-யை பற்றி அறிந்திருக்கவேண்டும். இந்த இரண்டு துருவ நட்சத்திரங்களின் 24
நவீனா அலெக்சாண்டர்
துணை க�ொண்டே தமிழர்கள் இந்தியப் பெருங்கடல், சீனக் கடல், அட்லாண்டிக் கடல் மற்றும் பசிபிக் கடல்களில் பயணம் செய்திருக்கவேண்டும். இன்றையிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அமெரிக்கக் கண்டங்கள் குறித்தும் ஆஸ்திரேலியக் கண்டம் குறித்து அறிந்திருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தின் மற்ற நாகரீகங்கள் அறிந்திராத இந்த விசயத்தைக் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் முன்னிலையில் இருந்த தமிழர்கள் கண்டத�ோடு நிறுத்திக்கொண்டதுதான் நம்முடைய சாபக்கேடு. இவைகளைப் பற்றி தமிழர்கள் அடுத்த தலைமுறைகளுக்கான வரலாற்று ஆவணங்களாகப் பதிவு செய்திருந்தால் இன்றைக்குத் தமிழர்களின் நாகரீகம் என்பது உலகின் அனைத்துப் பல்கலைக் கழகங்களின் பேசு ப�ொருளாக இருந்திருக்கும். ஒருவேளை பதிவு செய்யப்பட்டிருந்து வந்தேறிய இனத்தால் சமயக் குருட்டுத்தனத்திற்குள் சென்று சிக்கிய தமிழினம் அந்தக் குருட்டுத் தனம் ஏவிய செயல்களில் ஒன்றான தமிழின வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் செயலில் இத்தகைய அதி முக்கியமான வரலாற்று ஆதாரங்களையும் அழித்துவிட்டார்களா என்பதும் கேள்விக்குரிய விசயம். இன்றையிலிருந்து 3000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்களுக்கான கடல் வழியைக் கண்டுவிட்ட தமிழர்கள், தங்களின் கடல�ோடும் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவற்றை உலகின் மற்ற நாகரீகங்களிடமிருந்து மிக இரகசியமாகப் பாதுகாத்தது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். தனக்குள்ளேயே அந்த இரகசியத்தைப் பதுக்கிவைத்திருந்த தமிழினம் சமயக் குருட்டுத்தனக் காலத்தில் அந்த இரகசியத்தைத் த�ொலைத்தும் விட்டது. என்றென்றைக்குமாக. மீட்டே எடுக்க முடியாத வகையில். இவைகளுக்கு நம்மிடம் வரலாற்று ஆதாரங்கள் இல்லையென்றாலும் உண்மைக்கு மிக நெருங்கிய அளவிற்கு அனுமானம் செய்யப் பெரிய முயற்சியெல்லாம் தேவையில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்கள் தமிழர்களின் சாபக்கேட்டு நடத்தையால் மீண்டும் 25
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
ஒருமுறை மனிதர்களால் அறியப்படாத கண்டங்களாக இருளில் மறைந்துப�ோய்விட்டன. அடுத்து வந்த 1800 ஆண்டுகள் அந்தக் கண்டங்கள் உலக மனிதர்களின் கண்களில் படாமல் இருளில் மறைந்திருக்கவேண்டிய நிலைமை. மீண்டும் ஒருமுறை அந்தக் கண்டங்களைக் கண்டுபிடிக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது. இரண்டாம் முறையாக அமெரிக்க கண்டங்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்?
26
ஓல்மெக் நாகரீகம்
"பிறகு அவனுடைய வார்த்தை வந்தது. வானின் இதயமும், குவட்சால் நாகமும் இரவின் கருமையினூடே வந்து சேர்ந்தார்கள். அவன் குவட்சால் நாகத்துடன் பேசினான். அவர்கள் இருவரும் ஒன்று கூடிப் பேசினார்கள். பிறகு ஒரு முடிவிற்கு வந்தார்கள். - ப�ோபல் வு (Popul Vuh)”
இ
ன்றைய நிலையிலும் மீச�ோ அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி யார் இந்த ஓல்மெக்குகள்? ஓல்மெக் நாகரீகம் எப்படி முதிர்ச்சி அடைந்தது? இரண்டாவது கேள்விதான் ஆய்வாளர்களின் மண்டையை அதிகமாகக் குடைந்து க�ொண்டிருக்கும் கேள்வி. முதல் கேள்விக்காவது ஒரு பாதி உறுதியான பதில் இருக்கிறது. அதாவது ஓல்மெக்குகள், மத்திய அமெரிக்காவின் (மீச�ோ என்றால் மத்திய என்று ப�ொருள்) ஆஸ்டிலராய்ட் ஹ�ோம�ோ சேப்பின்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் மீச�ோ அமெரிக்காவின் முதல் நாகரீகத்தை அவர்களால் எப்படித் த�ோற்றுவிக்க முடிந்தது என்பதே மூளையைத் தெறிக்கவிடும் புதிர் கேள்வி.
ஓல்மெக்குகள் யார், அவர்கள் எப்படி மீச�ோ அமெரிக்காவின் முதல் நாகரீகத்தை அதாவது முதல் பேரரசை உருவாக்கினார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாகப் புதிர் கேள்விக்கான மூலக் காரணத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுவ�ோம். இதற்குத் தென்னிந்தியாவையும், எகிப்தையும், மத்தியக் கிழக்கு பண்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ், எகிப்திய மற்றும் மெசப்பட்டோமிய நாகரீகங்கள் வேட்டை நாகரீகத்திலிருந்து விவசாய நாகரீகத்திற்கு மாற்றமடைந்து நிலையான கிராமக் 27
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
குடியிருப்புகளையும், அதைத் த�ொடர்ந்து பெரிய வணிக நகரங்களையும், அவைகளுக்கான தலை நகரங்களையும் அதன் வழி நாடுகளையும் உருவாக்கியவைகள். அதாவது பழைய மற்றும் இடை கற்காலங்களில் (சுமார் கி.மு. 2,00,000 – 11,000) வேட்டை நாகரீகத்திலிருந்த – தேடித் திரிந்து உணவைச் சேகரித்து வேட்டையாடிப் பெறும் கலாச்சாரம் – மூன்று (தமிழ், எகிப்து, மெசப்போட்டோமியா) நாகரீகங்களும் கி.மு. 10,000 வாக்கில் கால்நடை மற்றும் விவசாயத் த�ொழில் நுட்பங்களைக் கண்டடைந்து வேட்டை நாகரீகத்திலிருந்து முற்றிலுமாக விவசாயம் சார்ந்த நகர நாகரீகத்திற்கு மாற்றமடையத் த�ொடங்கின. அலைந்து திரிந்து வேட்டையில் ஈடுபட்டு உணவு ப�ொருட்களைச் சேகரித்துக் க�ொண்டிருந்த இந்த மூன்று நாகரீக மக்களும் சிறிது சிறிதாகக் கால்நடை வளர்ப்பையும், வட்டாரத் தானிய மற்றும் தாவர வகைகளையும் ஓரிடத்தில் உணவிற்காக வளர்த்தெடுக்கும் த�ொழில் நுட்பங்களைத் தெரிந்துக�ொண்டு, உணவிற்காக வேண்டி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் வாழ்கை முறையைக் கைவிட்டு விட்டு நிலையான குடியிருப்புகளை உருவாக்கத் த�ொடங்கினார்கள். கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே அவர்களுடைய குடியிருப்புகள் கட்டப்பட்டன. இது சுமார் த�ொடர்ந்து மூன்றாயிரம் வருடங்களுக்கு நீடித்தது. திட்டு திட்டாக உருவான குடியிருப்புகள் ஒன்றிணைந்து சிறிய அளவிலான கிராமங்களாக மாற்றமடைந்தன. மூன்று நாகரீகங்களிலும் கிராம உருவாக்கத்திற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கி.மு. 8000 முதல் கிடைக்கத் த�ொடங்கிவிடுகிறது. கிராமங்களின் உருவாக்கம் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குத் த�ொடர்கிறது. எகிப்து, மெசப்பட்டோமிய பகுதியின் முதல் நாகரீகமான சுமேரியா மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் கி.மு. 7000 வாக்கில் பெரும் வணிக நகரங்கள் உரு பெற்றுவிட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாகவே இருக்கின்றன. பெரும் அளவிலான வணிக நகரங்களின் உருவாக்கம் நாடுகளையும் அதன் தலைநகரங்களையும் உருவாக்கியதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கி.மு. 6000 த�ொடங்கி மிகத் தெளிவாகவே கிடைக்கத் 28
நவீனா அலெக்சாண்டர்
த�ொடங்கிவிடுகிறது. தமிழ், எகிப்து, மெசப்பட்டோமிய நாகரீகங்களில் நாடு மற்றும் அது சார்ந்த சமூக வாழ்க்கை உருப்பெற்ற பிறகு அலைந்து திரிந்து வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்திற்கான வழக்கமே இல்லாமல் ப�ோய்விட்டது. அதற்கான அவசியமும் இல்லை என்பதால். ஆனால் இதற்கு முற்றிலும் எதிரானது மீச�ோ அமெரிக்க நாகரீகம். அலைந்து திரிந்து வேட்டையாடி உணவு ப�ொருட்களைச் சேகரிக்கும் வேட்டை நாகரீகமும், கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும் உருவாக்கிய விவசாய நாகரீகமும் சரி நிகராக வழக்கிலிருந்தது மீச�ோ அமெரிக்க நாகரீகத்தில். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு. அதாவது கி.மு. 10,000 த�ொடங்கி ஸ்பானியப் படையெடுப்பு காலக்கட்டமான கி.பி. 1500-கள் வரை மீச�ோ அமெரிக்காவில் வேட்டை நாகரீகமும் விவசாய நாகரீகமும் சம அளவில் கலந்தே இருந்தன. மீச�ோ அமெரிக்காவின் விவசாயத் த�ொழில் நுட்ப வளர்ச்சி என்பதும் மற்ற மூன்று நாகரீகங்களுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய அளவிலானது என்றும் ச�ொல்லிவிட முடியாது. ச�ொல்லப்போனால் மீச�ோ அமெரிக்க நாகரீகங்களிடம் சக்கரம் (wheel) மற்றும் எழுத்து ப�ோன்ற அடிப்படை த�ொழில் நுட்பங்கள் கூட இருக்கவில்லை. ஸ்பானியப் படையெடுப்பு காலம் வரைக்கும். ஆனால் சுமார் கி.மு. 1200 வருடங்கள் த�ொடங்கித் திடும் என்று ஓல்மெக் நாகரீகம், மெக்சிக்கோவின் வெராக்ரஸ் (Veracruz) மற்றும் டபாஸ்கோ (Tabasco) நிலப்பகுதிகளில் பெரும் நகரங்களையும், வழிபாட்டு கட்டிடங்களையும் (பிரமிட்கள்) உருவாக்கத் த�ொடங்கியது. நேற்று மழையில் தடித்த காளான் ப�ோலத் திடுதிப்பென்று எழுந்த நின்ற ஓல்மெக்குகளின் கட்டிடக் கலையும் நகர உருவாக்கலும்தான் இன்றைய மீச�ோ அமெரிக்க ஆய்வாளர்களின் மண்டை காய்ச்சலுக்கு மூலக் காரணம். மீச�ோ அமெரிக்காவின் முதல் நாகரீகமும், பேரரசும் ஓல்மெக்குகளுடையதுதான். பிற்காலத்தில் தலையெடுத்த மீச�ோ அமெரிக்க மற்றும் தென்னமெரிக்க நாகரீகங்களான மாயன், ஏஸ்டெக், இன்கா, ஸப�ோடக் என்று அனைத்திற்கும் முன்னோடி ஓல்மெக் நாகரீகம்தான். ஓல்மெக் நாகரீகத்தின் சமூக, அரசியல், இராணுவ, விளையாட்டு, சமயம் மற்றும் கலாச்சாரம் என்று 29
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
அனைத்து விதக் கூறுகளையும் மாயன், ஏஸ்டெக், இன்கா, ஸப�ோடக் நாகரீகங்களில் காண முடியும். வேட்டை நாகரீகம் மற்றும் த�ொடக்க நிலை விவசாய நாகரீகங்களின் த�ொழில் நுட்பங்களைக் க�ொண்டிருந்த ஓல்மெக்குகள் எங்கிருந்து பிரமிடுகளையும், ஆள் உயரக் கற்சிலைகளையும், நகரக் கட்டுமான அமைப்புகளையும் பெற்றார்கள் என்பதைக் குறித்த ஆய்வுகளே இன்றைய நிலையில் மீச�ோ அமெரிக்க நாகரீக ஆய்வுகளில் விறுவிறுப்பு கலைக்கட்டும் தலைப்பு. அதிலும் முக்கியமாக ஓர் ஆள் உயரத்திற்கு எழுந்து நிற்கும் முழுக் கல்லால் ஆன மனித முகத்தைச் சித்தரிக்கும் கற்சிலைகள் உலகின் பல வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆய்வுலகப் புதையல் வேட்டை. ஓல்மெக் நிலப் பகுதி முழுவதிலும் இதுப�ோலப் பதினேழு கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
ஓல்மெக் மீச�ோ அமெரிக்க நிலப்பகுதியின் ஏன் ஒட்டும�ொத்த வட மற்றும் தென்னமெரிக்கக் கண்டத்தின் முதல் பேரரசு என்றாலும் அதன் நிலப்பரப்பளவு என்பது மிகக் மிக குறைவானது. முன்பே பார்த்ததைப் ப�ோல வெராக்ரஸ் மற்றும் டபாஸ்கோ ஆகிய இரு 30
நவீனா அலெக்சாண்டர்
நிலப்பரப்புகளுக்குள் முடிந்துவிட்ட ஒன்று ஓல்மெக் பேரரசு. மெக்சிக்கோவின் தென் கிழக்கு வளைகுடா தாழ் நிலப் பகுதியில் இருக்கிறது இந்த இரண்டு மாநிலங்களும். சுமார் கி.மு. 7000 த�ொடங்கிக் கி.மு. 2000 வரையிலான காலக்கட்டங்களில் வடக்கு மற்றும் மத்திய மெக்சிக்கோ நிலப்பகுதிகளில் இருந்த கற்கால மனிதர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயக் குடியிருப்புகளை உண்டாக்கிச் ச�ோளம், க�ொக்கோ, அவக்காடா, ஸ்குவாஷ் பழ வகைகளை விவசாயம் மூலம் உற்பத்தி செய்ததற்கான அடையாளம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் கி.மு. 7000 வாக்கில் ச�ோளம், க�ொக்கோ, அவக்காடா மற்றும் ஸ்குவாஷ் பழ வகைகளைத் தேவையான அளவிற்கு ஓரிடத்தில் சிறிய அளவில் விளைவித்திருக்கிறார்கள் என்பதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் இருக்கின்றன. ச�ோளம், அவக்காடா, க�ொக்கோ, ஸ்குவாஷ் பழ வகைகளைப் பருவக் காலங்களில் விளைவித்து உணவு ப�ொருளாகப் பயன்படுத்திவிட்டு வருடத்தின் மற்ற நாட்களில் இடம் பெயர்ந்து வேட்டையின் மூலம் கிடைக்கும் உணவுப் ப�ொருட்களைப் பயன்படுத்தும் பாதி நிலையாகத் தங்குதல் மீதி இடம் பெயர்ந்து செல்லுதல் என்கிற வாழ்கை முறையே கி.மு. 2000 வரை நிலைத்திருந்தது. நிலையான விவசாயக் கிராமக் குடியிருப்புகளுக்கான எத்தகைய த�ொல்லியல் ஆதாரங்களும் கி.மு. 2000 காலக்கட்டப் பகுதிவரை மெக்சிக்கோவின் எந்த ஒரு நிலப்பகுதியிலும் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் திடீரென்று கி.மு. 1200-ல் ஓல்மெக் பேரரசின் முதல் தலைநகரான சான் ல�ோரன்சோ (San Lorenzo) வரலாற்றின் வெளிச்சத்திற்கு வருகிறது. நிலையான குடியிருப்புகள், குடியிருப்புகளின் த�ொகுப்பாகக் கிராமங்கள், கிராமங்களின் த�ொகுப்பாக வணிக நகரங்கள் பிறகு தலைநகரம் என்கிற விவசாய நாகரீகத்திற்கே உரியப் படி நிலை வளர்ச்சியில் இல்லாமல் வானத்திலிருந்து உருண்டு வந்ததைப்போலச் சான் ல�ோரன்சோ உருப்பெற்றது இன்றைக்கு வரை வரலாற்று புதிர்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தப் புதிரை அவிழ்க்கக் கூடிய அனைத்துப் புறக் காரணிகளும் 31
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மற்ற நாகரீகங்களிடமே இருக்கிறது. அதாவது தமிழ், எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களிடம். இதே காலக்கட்டத்தில் அதாவது கி.மு. 1200 வாக்கில் இந்த மூன்று நாகரீகங்களும் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் இருந்தன. தமிழ், எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களிடையே வணிகத் த�ொடர்புகளும் இருந்தன. அதிலும் தமிழ் நாகரீகத்தின் கை ஓங்கியே இருந்தது. அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று கடல் வழி பயண அறிவு மற்றும் அனுபவம். எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களை விடத் தமிழ் நாகரீகமே கடல் வழி வணிகத்தில் முன்னிலையில் இருந்தது. தமிழ் நாகரீகத்தின் கடல�ோடும் அனுபவத்திற்கு உதாரணம் மணி கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், சித்திரமேழி பெரிய நாட்டவர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், எண்பேராயம் ப�ோன்ற தமிழர்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிக அமைப்புக்கள். (இந்த அமைப்புக்கள் குறித்துப் ப�ோன அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்திருக்கிற�ோம்). எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களிடம் இப்படியான கடல�ோடும் வணிக அமைப்புக்கள் இருந்ததற்கான எத்தகைய ஆதாரங்களும் இல்லை. ஆக நடு கடலில் பயணம் செய்து கண்டங்களைக் கடக்கும் திறமை என்பது தமிழ் நாகரீகத்திற்கு மாத்திரமே உரிய ஒன்று. தமிழ் நாகரீகம் தன்னுடைய உற்பத்தி ப�ொருள் விற்பனைக்கான வணிகச் சந்தைக்காக வேண்டி எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களுடன் த�ொடர்பில் இருந்ததும், தன்னுடைய வணிக நடவடிக்கைகளுக்காக வேண்டிச் சுமேரியாவில் ஊர் மற்றும் ஊர் என்கிற இரண்டு பழங்கால நகரங்களை (சுமேரிய நாகரீகத்தின் முதல் இரண்டு முக்கிய நகரங்கள் இவைகள் என்பதும் இங்கே மிக முக்கியமாகக் கவனத்தில் க�ொள்ள வேண்டியிருக்கிறது. கி.மு. 3000 வாக்கில் உருவாக்கபட்டவைகள்.) உருவாக்கியிருக்கிறது என்பதும் த�ொல்லியல் ஆதாரங்களின் வழி வரலாற்று உண்மையாக நிறுவப்பட்ட ஒன்று. உற்பத்திப் ப�ொருள்களை விற்பனை செய்வதற்கான வணிகச் சந்தைகளைத் தேடி அலைந்த தமிழர்களின் வணிகக் கப்பல்கள் எகிப்து மற்றும் சுமேரிய நாகரீக நிலப்பகுதிகளை அடைந்ததுடன் மாத்திரம் நின்றுவிடாமல் இந்திய மற்றும் அட்லாண்டிக் பெருங் 32
நவீனா அலெக்சாண்டர்
கடல்களைக் கடந்து மீச�ோ அமெரிக்க நிலப்பகுதிகளுடனும் தன்னுடைய வணிகத் த�ொடர்பை விரிவுபடுத்தியிருந்திருக்கிறது. தமிழ் நாகரீகத்தின் வணிகக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து தென் கிழக்கு மெக்சிக்கோ வளைகுடாவை அடைந்ததற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும் எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களை விடத் தமிழ் நாகரீகம் கடல் ப�ோக்குவரத்தில் உச்சத்திலிருந்தது என்கிற வரலாற்று உண்மையை மறுப்பதற்கில்லை. சரி தமிழர்களின் கடல�ோடும் அனுபவத்திற்கும் ஓல்மெக் பேரரசின் சான் ல�ோரான்சோ நகரத்திற்கும் என்ன த�ொடர்பு இருக்கிறது என்றால் சுமேரியாவின் ஊர் மற்றும் ஊர் நகரங்களுக்கும் தமிழர்களின் கடல�ோடும் அனுபவத்திற்கும் உள்ள த�ொடர்பே காரணம் என்பது பதிலாக இருக்கும். சுமேரிய நாகரீகத்தின் முதல் பெரு நகரங்களாகக் கருதப்படும் இரண்டிலும் தமிழ் வாடை இருப்பதை எந்த ஒரு ம�ொழியியலாளரும் மறுத்துவிட முடியாது. இதைத் தற்செயலானது என்றும் எந்த ஆய்வாளராலும் ஒதுக்கிவிடவும் முடியாது. சுமேரிய மண்ணில் கி.மு. 3500 வாக்கில் காலடி எடுத்து வைத்த தமிழர்கள் (அதாவது தமிழ் வணிகர்கள்) தங்களின் வணிகப் ப�ோக்குவரத்து மற்றும் சந்தை அலுவல்களுக்காக உருவாக்கியது ஊர் மற்றும் ஊர் நகரங்கள். இரண்டுமே வணிக நகரங்களாகக் கட்டமைக்கப்பட்டவைகள். கடல் கடந்த நாடுகளில் தங்களுக்கான சந்தை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காகத் தமிழர்கள் புதிய நகரங்களை உருவாக்கும் வழக்கம் க�ொண்டவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறதுதானே. ஓல்மெக் நாகரீகத்தின் சான் ல�ோரான்சோவும் வணிக நகரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்க அனைத்து விதமான வரலாற்று வாய்ப்புகளும் இருக்கின்றன. அதிலும் தமிழ் நாகரீகக் கடல�ோடிகளால். சான் ல�ோரான்சோ நிலையான கிராமக் குடியிருப்புகளின் வழி உருவான நகரமில்லை என்பது ஒருபுறம் இதற்கான வலு சேர்க்கக் கூடிய காரணமாக இருக்கும் அதே வேலையில் சான் ல�ோரான்சோவின் அமைவிடமும் இதற்கான வலுவான புறக் காரணிகளில் ஒன்று. படிப்படியாக
முதிர்ச்சியடைந்த
நாகரீகங்கள்
தேர்ந்தெடுக்க 33
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
விரும்பாத சேறும் சகதியும் நிறைந்த நிலப்பகுதியே சான் ல�ோரான்சோ நகரம் உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய மற்றும் பெரிய ஆறுகளால் சூழப்பட்ட சேறும் சகதியும் நிறைந்த பகுதி. அதாவது கடலில் பயணம் செய்துவரும் கப்பல்கள் ஆறுகளின் வழி மிக எளிதாக வந்தடையக் கூடிய நிலப்பகுதி. கடற்கரைய�ோரமாக இயற்கை துறைமுகத்தைத் தேடியலைய வேண்டியதற்கான அவசியமே இல்லாமல் ஆறுகளின் வழி உள் நாட்டுப் பகுதிக்கே செல்லக் கூடிய வசதி படைத்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது சான் ல�ோரான்சோ. சான் ல�ோரான்சோவின் நகர அமைப்பைக்கொண்டு சுமார் 6000 மக்கள் அந்த நகரில் வசித்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சான் ல�ோரான்சோ உருவாக்கப்பட்ட கி.மு. 1200 த�ொடங்கி அது முற்றிலும் கைவிடப்பட்ட கி.மு. 900 ஆண்டு வரை ம�ொத்தமாகவே ஆறாயிரம்தான் அந்த நகரின் சனத்தொகையாக இருந்திருக்கிறது. மற்ற மூன்று நாகரீகங்களின் முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நகரச் சனத்தொகை என்பது மிகக் குறைவு. இதற்கான முக்கியக் காரணம் சான் ல�ோரான்சோ நகரம் இயல்பான குடியிருப்பு நகரமாக உருவாகாமல் வணிக நகரமாக வலிந்து உருவாக்கப்பட்டதே. கடல் வணிகத்துடன் த�ொடர்புடைய மெக்சிக்க பூர்வக் குடிகளாலும் வணிகத்திற்காக அங்கு வந்து செல்லும் தமிழ் கடல�ோடிகளாலும் மாத்திரமே சான் ல�ோரான்சோ நகரம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வணிகம் சார்ந்த நடவடிக்கைகளின் காரணமாகவும், அங்கு நிலையாக வசித்த மக்களின் சமய நம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளின் காரணமாகவும் சான் ல�ோரான்சோ அரசியல் மற்றும் சமயத் தலைநகராகவும் விளங்கியிருக்கிறது. மீச�ோ அமெரிக்க நிலப்பகுதியின் முதல் அரசியல் மற்றும் சமயத் தலைநகரமாக. ஓல்மெக் பேரரசில் உள்ளூர் மக்கள் மேற்கொண்ட அரசியல் மற்றும் சமூக வாழ்கை நடைமுறைகளைக் குறித்துத் தெரிந்துக�ொள்வதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. சான் ல�ோரான்சோ என்ன காரணத்திற்கு என்று ஊகிக்க முடியாத வகையில் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருப்பதும் அந்த நகரம் குறித்த ப�ோதுமான த�ொல்லியல் ஆதாரங்கள் கிடைக்காமல் இருப்பதற்கான 34
நவீனா அலெக்சாண்டர்
காரணங்களில் ஒன்று. சான் ல�ோரான்சோ திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்பதற்கான உறுதியான ஆதாரம் அது மனிதர்களால் செயற்கையாக உண்டாக்கப்பட்ட சிறிய மலைப்போன்ற நிலப்பரப்பின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பது. நிலையான குடியிருப்புகள், கிராமங்களின் கூட்டிணைவு என்கிற அடிப்படைகளுக்கான ஆதாரமே இல்லாத அன்றைய மீச�ோ அமெரிக்காவில் இவ்வளவு பிரம்மாண்டமான திட்டமிட்ட நகர உருவாக்கம் என்பது துருத்திக்கொண்டு நிற்கும் புதிர். சுமார் இரண்டு மில்லியன் கியூபிக் மீட்டர்களுக்கு நிலம் செயற்கையாக உயர்த்தப்பட்டு இது நடந்திருக்கிறது. அரசு என்கிற அமைப்பின் அல்லது நிறுவனம் என்கிற அமைப்பின் வழியாகவேத்தான் இப்படியான பிரம்மாண்டக் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க முடியும். அவைகளால் மாத்திரமே இதற்குத் தேவையான மனித உழைப்பையும், ப�ொருளாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கிராமங்களின் உருவாக்கமே இல்லாத கி.மு. 1200 வருடத்திய சான் ல�ோரான்சோவில் அரசு என்பதற்கான பேச்சிற்கே இடமில்லை. பெரும் அளவில் மனித உழைப்பைத் திரட்டக் கூடிய ப�ொருளாதாரப் பலம் மிக்க நிறுவனம் எதாவது ஒன்று இதற்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டிருக்க வேண்டும். இன்றையலிருந்து நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு அன்னிய மண்ணில் பெரும் வணிக நகரங்களை உருவாக்கக் கூடிய கடல�ோடும் அனுபவம், வணிகத் த�ொடர்புகள் மற்றும் ப�ொருளாதாரப் பின் புலத்துடன் இருந்தவைகள் தமிழர்களின் கடல் வழி வணிக நிறுவனங்கள் மாத்திரமே. தமிழர்களின் கடல் வணிக நிறுவனங்கள் அன்னிய நாகரீகங்களில் தங்களுக்கான வணிக நகரங்களை உருவாக்கினாலும் அவைகள் அந்த மண்ணின் சமூக மற்றும் அரசியல் அமைப்பிற்கு ஏற்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சுமேரியாவின் ஊர் மற்றும் ஊர் இதற்கான மிகச் சிறந்த உதாரணங்கள். ஓல்மெக்கின் சான் ல�ோரான்சோவையும் இந்த உதாரணப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள முடியும். 35
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
சான் ல�ோரான்சோவின் நிலவியல் அமைப்பு மற்றும் கிடைக்கும் ஒன்றிரண்டு த�ொல்லியல் ஆதாரங்களை வைத்துப் பார்க்கின்றப�ோது சான் ல�ோரான்சோவின் ஆட்சி அதிகாரம் மேட்டுக் குடி வகுப்பினரிடம் இருந்திருப்பது தெரிகிறது. ஓல்மெக் நாகரீகம் வகுப்பு (மேட்டுக் குடி மற்றும் சாதாரண உழைப்பு குடி) பிரிவினை க�ொண்ட சமூகமாக இருந்திருக்கிறது என்பது உறுதி. ஓல்மெக் நாகரீகத்தின் திடீர் மேட்டுக் குடி த�ோற்றமும் காரணக் காரியங்களுடன் விளக்க முடியாது வரலாற்று புதிராக இருக்கிறது. ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் இடம் பெயர்ந்து வேட்டையாடி உணவுப் ப�ொருட்களைச் சேகரிப்பது பாதி என்றும் மீதி பருவ நிலைக்கு ஏற்ப ஓரிடத்தில் தங்கித் த�ோட்ட வேலையாகத் தானியங்கள் மற்றும் பழ வகைகளை விளைவித்து உண்பதுமாக இருந்த மீச�ோ அமெரிக்கக் கற்கால வேட்டை நாகரீக இனக் குழுக்களிடம் குழுக்களுக்கான இனக் குழு தலைவர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஓல்மெக் ப�ோன்ற பேரரசு ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் மிக குறைவு. அதற்குக் காரணம் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரியும் வாழ்கை முறை. பிறகு எங்கிருந்து முளைத்தது ஓல்மெக் பேரரசின் மேட்டுக் குடி (Elite Class) வர்கம்?
36
அமெரிக்காவை கண்டுபிடித்தவர்கள் யார்
"அவர்களின் வாழ்கை முறை காட்டு மிராண்டித்தனத்தை ஒத்திருந்தது. ஏற்ற வேலைக்கு என்று சாப்பிடாமல் நினைத்த நேரத்திற்குச் சாப்பிடும் பழக்கம் க�ொண்டவர்களாக இருக்கிறார்கள். – அமெரிக்கோ வெஸ்பூக்கி"
எ
கிப்தியர்களும் சுமேரியர்களும் வானியலில் சிறந்து விளங்கினாலும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தின் காரணமாகக் கடல் வழி வணிகத்தில் அவ்வளவாக வெற்றி பெற முடியவில்லை. கிரேக்கர்கள் ஏஜியன் (Aegean Sea) கடல் – ஏஜியன் கடல் என்பது மத்தியத் தரைக் கடலின் (Mediterranean Sea) வட கிழக்குப் பகுதி - பகுதியில் மாத்திரமே சுற்றித் திரிந்ததால் அவர்களுக்குப் பெருங் கடல்களைக் குறித்த அனுபவ அறிவு கிடையாது. கிருத்தவ சகாப்தத்திற்கு முன்னான ர�ோமப் பேரரசு காலத்திலேயே மேற்குலகத்தினர் அரேபியப் பெருங்கடலிலும் இந்தியப் பெருங் கடலிலும் பயணம் செய்யும் த�ொழில் நுட்பத்தைப் பெறுகிறார்கள்.
அதிலும் நடுக் கடல் பயணமெல்லாம் ர�ோமக் கிரேக்க மாலுமிகள் அறியாத ஒரு விசயம். அரபி மற்றும் இந்தியக் கடற்கரைய�ோரமாகவே பயணம் செய்யவே அவர்களுக்குத் தெரியும். இத்தகைய பயணங்களில் ஒன்றைப் பற்றி பெரிப்புளூஸ் (Periplus of the Erythraean Sea) என்கிற கி.பி. 1 – 2 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட கிரேக்க மாலுமி ஒருவரின் பயணக் குறிப்பு தெளிவாகச் ச�ொல்கிறது. அதற்குக் காரணம் கடலின் மேல் சுழன்று வீசும் பருவக் காற்றின் ப�ோக்கு தெரியாததும், கடலின் நீர�ோட்டம் குறித்த அனுபவ அறிவும் இல்லாததுமே. மேலும் துருவ நட்சத்திரங்களை 37
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
வைத்துப் பூமியின் தீர்க்கரேகை (longitude) மற்றும் அட்சரேகை (latitude) அளவுகளைத் தீர்மானிக்க முடியாததும்தான். ர�ோமானியக் கப்பல்கள் கரைய�ோரமாகவே பயணித்துக்கொண்டிருக்கத் தமிழர்களின் வணிகக் கப்பல்கள் மிகப் பிரம்மாண்டமாக நடுகடலில் பாய்விரித்து பயணித்துக்கொண்டிருந்தன. நடுக்கடலில் பயணிக்கத் தேவையான த�ொழில் நுட்ப அறிவைத் தமிழர்கள் ர�ோமானியர்களுடன் பகிர்ந்துக�ொண்டதாகத் தெரியவில்லை. இப்படி அரைகுறையாகப் பெற்ற கடல�ோடும் த�ொழில் நுட்பத்தைக் குறித்தும் அந்தக் காலத்தில் தாங்கள் பயணம் செய்த கடற்கரைய�ோர நாடுகள் குறித்தும் ர�ோமானியர்கள் குறிப்புகளாகவும் வரைப் படங்களாகவும் அடுத்த தலைமுறையினருக்குப் பதிவு செய்து வைத்திருந்தார்கள். ர�ோமானியப் பேரரசு கிருத்தவப் பேரரசான கி.பி. 4-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேற்குலகமும் சமூகச் செயல்பாடுகளான கலை, இலக்கியம், த�ொழில் நுட்பம் என்று எல்லாத் துறைகளிலும் மந்த நிலைக்குச் சென்று விட்டது. மேற்குலகத்தின் இந்த நிலை பின்நவீனத்துவ (Reniassance) காலம் என்று அழைக்கப்படும் மத்தியக் காலப் பகுதியிலேயே அதாவது கி.பி. 15-ஆம் நூற்றாண்டுகளிலேயே மாறத் த�ொடங்கி மேற்குலகம் சமூகத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் புதிய வெளிச்சத்தைக் காணத் த�ொடங்கியது. இதற்குப் பின்பே மேற்குலகம் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தியது. இப்படியான நீண்ட தூக்கத்திலிருந்து விழித்த மேற்குலகம் திடீரென்று 15-ஆம் நூற்றாண்டில் தாங்கள்தான் முதன் முதலில் புதிய உலகங்களான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்களைக் கண்டுபிடித்து இந்த உலகத்திற்கு அறிவித்ததாக வரலாற்று புரட்டு பேசத் த�ொடங்கினார்கள். தமிழர்களின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இந்த உலகம் அறியாமல் இருளில் மூழ்கிய அமெரிக்க ஆஸ்திரேலியக் கண்டங்களை மேற்குலகத்தினர் மந்த நிலையில் இருந்த காலத்திலேயே ஒரு மக்களினம் கண்டுபிடித்து அது பற்றிய குறிப்புகளை வரைப் படங்களாகவும் வரைந்து வைத்திருந்தது. பெர்சிய, கிரேக்க, ர�ோமானி, சீனர்களின் வானியல் அறிவைப் பெற்றுக்கொண்டு அதில் தங்களுடைய கண்டுபிடிப்புகளையும் சேர்த்து வானியல் விஞ்ஞானத்தைப் பலபடிகள் முன்னுக்குச் 38
நவீனா அலெக்சாண்டர்
செலுத்தி அதைக்கொண்டு அரேபிய, அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங் கடல்களில் களம் செலுத்திப் புதிய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்களை வரைப் படங்களாக வரைந்து வைத்த அந்த இனத்தின் ச�ொந்தக்காரர்கள் யார்? தென்னிந்தியத் தமிழர்கள் தங்களின் கடலாதிக்கத்தை இழந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. மேற்கில் ர�ோமானியர்களும் கிருத்தவ பேரரசான பிறகு ப�ோப்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் அங்கும் சமூக வளர்ச்சியானது மந்த நிலைக்குப் ப�ோனது. கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் பெரும் முயற்சிகளெல்லாம் சாத்தியமில்லாத நிலையிருந்தது. இந்தக் காலகட்டம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டுத் த�ொடங்கிக் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுகள் வரை நானூறு வருடங்கள் நீடித்தது. இந்தக் காலகட்டங்களில் வணிக அளவில் மட்டுமே கடல் பயணங்கள் செய்துக�ொண்டிருந்தவர்கள் தமிழர்களும் சீனர்களும் மட்டுமே. புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் திட்டமெல்லாம் அப்பொழுது இவர்களிடையே இருக்கவில்லை. சீனர்கள் தங்களின் கடல�ோடும் த�ொழில் நுட்பத்திற்குச் சிறிது தமிழர்களையும் சார்ந்திருக்கவேண்டிய நிலை. இந்த நிலையில் மத்தியக் கிழக்கில் ஒரு புதிய எழுச்சிக்கான மாற்றம் த�ொடங்கியது. முகமது நபிகளால் த�ோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் ஒரு புதிய அலையென மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி மிகக் குறுகிய நூற்றாண்டுகளிலேயே சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைக் க�ொண்டுவந்தது. பெர்சிய பகுதியைப் பிடித்து மத்தியக் கிழக்கின் புதிய சக்தியாக உருவான அப்பாசி கலிப்பாக்களின் (Abbasid Caliphate) பேரரசு (காலம் கி.பி. 750 – 1258) அறிவியல், கலை, இலக்கியம், ப�ொருளாதாரம், வணிகம் என்று சமூக வளர்ச்சியின் அனைத்துத் துறைகளிலும் புதிய பாய்ச்சலுக்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்தது. இரானிய பெர்சிய மற்றும் பைசாண்டிய மேற்குலகின் சமூக வளர்ச்சி செயல்பாடுகள் (கலை, இலக்கியம், அறிவியல், த�ொழில் நுட்பம், வானியல் மற்றும் வரலாறு, தத்துவம்) அனைத்தையும் உள்வாங்கிக்கொண்ட இஸ்லாமிய அறிஞர்கள் அவைகளை அடுத்த 39
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பெற்றார்கள்.
அறிவையும்
சுதந்திரத்தையும்
தேக்க நிலைக்குச் சென்றுவிட்ட பைசாண்டிய மேற்குலகின் அறிவியலையும் வானியலையும் அரேபிய இஸ்லாமிய அறிஞர்கள் தூசித் தட்டி எடுத்து அதில் புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யத் த�ொடங்கினார்கள். இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள். வானியலில் இஸ்லாமியர்கள் செய்த கண்டுபிடிப்புகள் கடல�ோடும் த�ொழில் நுட்பத்திலும் அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கியது. கடல் வணிகத்தில் அரேபியர்கள் முதலில் த�ொடர்புக�ொண்டது தென்னிந்தியத் தமிழர்களை. அடுத்து அவர்கள் கடல் வணிகத் த�ொடர்பு க�ொண்ட நாடு சீனா. தமிழர்களுக்கும் அரேபிய இஸ்லாமியர்களுக்குமான த�ொடர்புகள் குறித்த வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் இல்லை ஆனால் சீனர்கள் இஸ்லாமியர்களுடன் தாங்கள் க�ொண்டிருந்த த�ொடர்புகளைப் பற்றி பெரும் அளவிலான வரலாற்று ஆவணங்களையும் ஆதாரங்களையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். சீன வரலாற்று அறிஞர் டு யூ (இவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் 735 - 812) தன்னுடைய Encyclopedic History of Institutions (Tongdian) என்கிற வரலாற்று நூலில் முதன் முறையாக இஸ்லாமியர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவர் அரேபியர்களை டாஷி (Dashi) என்று அழைக்கிறார். முகமது நபி அவர்கள் குறித்தும் அவருடைய அரசியல் எழுச்சி குறித்தும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அதாவது எட்டாம் நூற்றாண்டில் சீனாவின் பேரரசாக இருந்தது டாங் (Tang) அரசப் பரம்பரை. சீனாவின் ப�ொற்காலங்களில் ஒன்று டாங் அரசப் பரம்பரை காலகட்டம். அன்றைக்குச் சீனர்களின் ப�ொருளாதாரம் உச்சநிலையில் இருந்ததால் அவர்களுக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் வரும் இறக்குமதி ப�ொருட்களின் மீது ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் அரேபிய உற்பத்திப் ப�ொருட்களின் மீதும் இருந்தது. சீனாவின் வடமேற்குப் 40
நவீனா அலெக்சாண்டர்
பகுதியில் எல்லை விரிவாக்கப் ப�ோர்களில் அப்பாஸித் பேரரசிற்கும் சீன டாங் பேரரசிற்கும் உரசல்கள் இருந்தாலும் தெற்கில் கடல் வணிகத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அற்புதமான உறவு த�ொடங்கியது. இஸ்லாமிய அறிஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் அறிவியல் த�ொழில் நுட்பத்திலும் வானியலிலும் சிறந்து விளக்கிய அரேபிய வணிகர்களின் செயல்பாடுகள் சீனர்களைப் பெரும் அளவில் இஸ்லாமிய நாடுகளை ந�ோக்கித் திருப்பியது. சீன அறிஞர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைத் தெரிந்துக�ொள்ள ஆர்வம் காட்டத் த�ொடங்கினார்கள். அதுவரை கடல�ோடும் த�ொழில் நுட்பத்திலும் வானியலிலும் தமிழர்களையே பெரிதும் நம்பியிருந்த சீனர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் கண்டுபிடிப்புகளின் பக்கம் திரும்பினார்கள். சீன அறிஞர்களுக்கு உதவும் வகையிலேயே இஸ்லாமியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த வகையில் முக்கியமான ஒன்றுதான் டு யூ புத்தகம். அரேபியர்களைப் பற்றி குறிப்பிடும் அவர் நமக்கு வேண்டிய முக்கியத் தகவல் ஒன்றையும் குறிப்பிடுகிறார். அது இஸ்லாமிய அப்பாசி கலிப்பாக்களின் கடல�ோடும் முயற்சிகளின் மீதான ஆர்வம் குறித்த தகவல். அப்பாசி கலிப்பாக்கள் உள் நாட்டில் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் த�ொழில் நுட்பம் என்று சமூக வளர்ச்சிக்கான அனைத்து விசயங்களிலும் பெரும் ஆர்வமும் கவனமும் செலுத்தியிருக்கிறார்கள். அத்தகைய வளர்ச்சிக்குத் தேவைப்படும் பணத் தேவையையும் சுதந்திரத்தையும் தடையின்றிப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வங்களில் ஒன்று கடலில் பயணித்து அதுவரை உலகம் அறிந்திராத புதிய நாடுகளையும் நிலப்பரப்புகளையும் கண்டுபிடிப்பது. கலிப்பாக்களின் இந்த ஆர்வத்தைப் பற்றித்தான் Du You தன்னுடைய புத்தகத்தில் கீழ்வரும்படி குறிப்பிடுகிறார். It is also said that their king [of the country of Dashi] always sends men on ships with clothing and provisions, and they cross the sea for eight years but do not reach the western shore. In the sea is a square rock on which are trees with red branches and green leaves. On the trees are born many young children 6–7 cun [Approximately 15 cm (1 cun = 2.25 cm)] long. When they see people, they do not speak but all can laugh and move their hands and feet. Their heads are attached 41
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
to the branches of the tree. When people pick them from trees, the [heads] come off in their hands, then dry up and turn black. The envoy took one branch and returned with it. It is now in the residence of the Arabian king. இதில் டு யூ ச�ொல்வது கலிப்பாக்கள் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் ந�ோக்கில் கடலில் மாலுமிகளை அனுப்பிவைப்பதை. மாலுமிகளுக்குத் தேவையான கப்பல்கள் மற்றும் அவர்கள் கடலில் பயணம் செய்யும் காலம் வரைக்குமான உணவு, உடை தேவைகளையும் கலிப்பாக்கள் தங்களுடைய நேரடி கண்காணிப்பில் வைத்துக் கவனித்திருக்கிறார்கள். இந்த முயற்ச்சி பல ஆண்டுகளாகத் த�ொடர்ந்தபடி இருந்திருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கண்டுபிடித்து ஆனால் அதை வெளி உலகத்திற்குக் காட்டிக்கொள்ளாமல் வைத்திருந்த அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்கள் குறித்த தகவல்கள் வதந்தி என்கிற அளவில் அரசல் புரசலாக மற்ற நாகரீகங்களான எகிப்து, சுமேரியா மற்றும் சீனாவில் பரவியபடி இருந்திருக்கிறது. கிரேக்க ர�ோமானியர்களும் கூட இந்த வதந்தி குறித்து அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். மேற்கு கடலில் வளம் க�ொழிக்கும் நிலப்பகுதி ஒன்று இருக்கிறது என்பது மாத்திரம் அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அதை அடையும் கடல�ோடும் த�ொழில் நுட்பமும் பாதையும் மாத்திரம் அவர்களுக்கு எட்டா கனியாகவே ப�ோய்விட்டது. தாங்கள் கண்டுபிடித்த நிலப்பகுதி குறித்த தகவல் வெளியே கசிந்துவிட்டதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத தமிழர்கள் அந்த நிலப்பகுதியை அடையும் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தை மாத்திரம் மிகக் கச்சிதமாகத் தங்களுக்குள்ளேயே மறைத்துவிட்டார்கள். தாங்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்ட மேற்கில் இருக்கும் இந்த நிலப் பகுதி குறித்துச் சீனர்கள் தங்களுடைய வரலாற்று ஆவணங்களில் பதிந்துவைத்திருக்கிறார்கள். கி.மு. 3-ஆம் நூற்றாண்டுகள் த�ொடங்கிச் சீனர்கள் இந்த நிலப்பகுதியை ஷிஹாய் என்று குறிப்பிடுகிறார்கள். சீனர்களின் வரலாற்று துறை தந்தையாகக் கருதப்படும் சீமா குயான் (Sima Qian)-னும் இது பற்றி 42
நவீனா அலெக்சாண்டர்
குறிப்பிடுகிறார். ஷிஹாய் என்றால் மேற்கு கடல் என்று அர்த்தம். கிரேக்க ர�ோமானியச் சீனர்களைத் த�ொடர்ந்து இஸ்லாமிய நாகரீகத்தை உச்சத்திற்குக் க�ொண்டு ப�ோன அப்பாசி கலிப்பாக்களும் மேற்கு கடலில் இருக்கும் நிலப்பகுதி குறித்த வதந்திகளைக் கேள்விப்பட்டுத்தான் அதற்கான தேடல் முயற்சிகளில் இறங்கியது. இதைத்தான் டு யூ குறிப்பிடுகிறார். கலிப்பாக்களின் இந்த முயற்சியைக் குறித்த தகவலை டு யூ எங்கிருந்து பெற்றார் என்றால் ஒரு சிறைக் கைதியிடமிருந்து. டு ஹூஆன் (Du Huan) என்கிற அந்தக் கைதி டு யூவின் உறவினர். சீன இராணுவத்தில் ப�ோர் வீரராகப் பணியாற்றியவர். சீனாவிற்கு வட மேற்கில் கி.பி. 751-ல் அப்பாசி பேரரசிற்கும் சீன டாங் பேரரசிற்கும் டாலாஸ் என்கிற ப�ோர்க்களத்தில் (இது இன்றைய கஜகஸ்தானின் டசாம்புல் பகுதி) நடந்த சண்டையில் சீனா த�ோற்றதின் காரணமாக டு ஹூஆன் சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்டு அப்பாசி பேரரசின் தலைநகராக இருந்த கூபா நகரத்திற்குக் க�ொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பத்து ஆண்டுகளுக்குச் சிறைக் கைதியாக வைக்கப்பட்டுப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். இவர் சீனாவிற்குத் திரும்பியதும் தன்னுடைய சிறை நாட்களைக் குறித்து எழுதிய புத்தகத்திலிருந்தே டு யூ தன்னுடைய புத்தகத்திற்கான தகவலையும் பெற்றது. ப�ோர் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட சீனர்களிடம் இருந்து காகிதம் தயாரிக்கும் த�ொழில் நுட்பம் இஸ்லாமிய உலகத்திற்கு அறிமுகமானது. இதனைத் த�ொடர்ந்து பாக்தாதில் கி.பி. 794-ல் முதல் காகிதம் தயாரிக்கும் த�ொழிற்சாலை நிறுவப்பட்டது. காகிதத்தின் வரவானது இஸ்லாமிய அறிஞர்களின் செயல்பாடுகளை மேலும் அதிகப்படுத்துவதில் ப�ோய் நின்றது. அந்தச் செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது கார்டோகிராப்பி (Cartography). உலக வரைபடங்களை அறிவியல் ஆய்வுகளின் படி அணுகுவது கார்டோகிராப்பி. அன்றைய நிலையில் உலக மக்களால் அறியப்பட்ட நிலப்பகுதிளையும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் நிலப்பகுதிகளையும் வரைப்படங்களாக வரைவதும் இந்தத் துறையின் முக்கியப் பணி. அப்பாசி கலிப்பாக்களின் பேரரசு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் கடல�ோடும் முயற்சிகளுக்கும் பெரும் துணையாக இருந்தது இந்தத் துறை. 43
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
அரேபியர்களின் வரைப்பட துறை வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் கலிப்பா அல் மாமுன் (கி.பி. 813–33). இவர் பதவிக்கு வந்ததும் உலகின் மற்ற ம�ொழிகளில் இருக்கும் அனைத்துத் துறை புத்தகங்களையும் அரேபிய ம�ொழிக்கு ம�ொழி மாற்றம் செய்யும் திட்டத்திற்கு முன்னுரிமை க�ொடுத்தார். துல்லியமான உலக வரைபடம் ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்திற்கும் ப�ொருளுதவியைத் த�ொடங்கிவைத்தார். இஸ்லாமிய உலகத்தின் சிறந்த வானியலாளர்களும் நிலவியல் அறிஞர்களும் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் மிகப் பெரிய நில அளவை (Geodetic survey) திட்டத்தை மேற்கொண்டார். இதன் முக்கிய ந�ோக்கம் பாக்தாத் மற்றும் மேக்கா நகரத்தின் நில அளவுகளைத் துல்லியமாகக் கணிப்பது என்றாலும் இந்த நில அளவைத் திட்டம் உலக வரைப் படம் வரைவதற்கும் பெரும் உதவி செய்தது. (அன்றைய காலங்களில் உலக வரைப் படம் என்பது ஆசியக் கண்டத்தை மட்டுமே க�ொண்டிருக்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந் நாடுகள் இருக்காது). கலிப்பா அல் மாமுன் காலத்தில் தயாரிக்கப்பட்ட உலக வரைபடம் மிகத் துல்லியமாக மத்தியக் கிழக்கு, இந்தியா மற்றும் சீன நாடுகளைக் குறித்திருந்தது. மேலும் பூமியின் சுற்றளவையும் சில நூறு கில�ோ மீட்டர்கள் தவறுகளுடனே கணித்திருந்தது. இன்றைய நவீன கால அறிவியலின் முறைப்படிப்பார்த்தாலும் அந்த உலக வரைபடம் மிகத் துல்லியமானது என்றே ச�ொல்லக் கூடிய தரத்திலிருந்திருக்கிறது. சாபக்கேடாக இந்த உலக வரைபடம் இன்றைக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதன் பிரதியாகக் கருதப்படும் கி.பி. 1000 வருடத்திய உலக வரைபடம் இன்றைக்கும் இருக்கிறது. கலிப்பா அல் மாமுன் ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இத்தகைய அறிவியல் செயல்பாடுகளைக் குறித்த வரலாற்று ஆதாரமாக அல் காவர்சிமி என்பவரின் துண்டு அறிக்கை ஒன்று கிடைத்திருக்கிறது. அதன் பெயர் சூரத்-அல்-ஆர்த் (Surat al-ard). இவர் கலிப்பா அல் மாமுன் ஏற்படுத்திய அறிஞர்களின் குழுவில் கணிதம், வானியல் மற்றும் நிலவியல் அறிஞராகத் தன்னுடைய பங்களிப்பைச் செய்தவர். அரேபியத் துறைமுகங்கள் த�ொடங்கித் தென்னிந்தியா வழியாக 44
நவீனா அலெக்சாண்டர்
மலாக்கா த�ொட்டுச் சீனாவின் துறைமுகங்களுக்குச் செல்லும் கடல் வழிகள் துல்லியமாகக் குறிக்கப்பட்ட வரைப் படங்கள் அரேபிய மாலுமிகளிடம் புழக்கத்திற்கு வந்தது. இந்தத் துல்லியக் கடல் வழி வரைபடங்களை அரேபிய மாலுமிகள் சீன மாலுமிகளுடனும் பகிர்ந்துக�ொண்டிருக்கிறார்கள். இது குறித்துக் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜியா டான் என்பவர் தன்னுடைய குவாங்சு டாங் ஹாயி டாவ�ோ (Guangzhou Tong Haiyi Dao - The Route to the Foreign Countries across the Sea from Guangzhou) புத்தகத்தில் குறிப்பிடுகிறார். குவாங்சு சீனாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்று. வரைபடங்களைத் தவிர்த்துத் துல்லியமான நிலவியல் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களும் இஸ்லாமிய உலகத்தில் எழுதப்பட்டது. அதில் முக்கியமான மற்றும் மிகவும் பழமையான ஒன்று கித்தாப்அல்-மசாலிக் வா அல் மமாலிக் (Kitab al-Masalik wa l mamalik - The Book of Routes and Realms). எழுதியவர் கலிப்பா அல் முட்டாமிட் (கி.பி. 869– 92) ஆட்சிக் காலத்தில் தபால் மற்றும் உளவுத் துறையின் தலைமைச் செயலராக இருந்த இபின் குர்ரதாயிப். இந்தப் புத்தகம் அன்றைய பூமியின் நிலவியலை அட்சரச் சுத்தமாக விளக்கிச் ச�ொல்கிறது. அப்பாசி கலிப்பாக்களின் உள் நாட்டு ஆட்சி முறையை வலுப்படுத்த இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும் இஸ்லாமியர்களின் கடல் வணிக வழிகள் குறித்த மிக விரிவான தகவல்களையும் தருகிறது. இஸ்லாமியர்களின் கடல் வழி வணிகப் பாதையைப் பெர்சிய வளைகுடாவில் இருக்கும் பாஸ்ரா (Basra) துறைமுகத்திலிருந்து த�ொடங்கிக் கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்கள், தென்னிந்தியாவின் துறைமுகங்கள், மலாக்காவின் துறைமுகங்கள் இறுதியாகச் சீனாவின் துறைமுகங்கள் என்று இடையில் ஒருத் துறைமுகம் கூட விடுபடாமல் அனைத்துத் துறைமுகங்கள் வழியாகவும் விளக்கிச் ச�ொல்கிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகம் இத்தோடு நின்றுவிடுவதில்லை அல் வாக்வா (alWaqwaq) என்று ஒரு நாட்டைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இந்த நாடு சீனாவிற்கும் கிழக்கில் இருப்பதாகச் ச�ொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் தங்கம் அபரிதமாகக் கிடைக்கும் என்கிற குறிப்பையும் இபின் குர்ரதாயிப் தன்னுடைய புத்தகத்தில் தருகிறார். சீனர்கள் குறிப்பிடும் ஷியாகி என்கிற நாடும் இவர் குறிப்பிடும் 45
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
அல் வாக்வா நாடும் எங்கே இருக்கின்றன? இன்றைய வரைப் பட ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த இரண்டும் கற்பனை கதைகள் என்று சுலபமாக முடித்துவிடுகிறார்கள். இவைகள் கற்பனைக் கதைகளாக இருந்தாலும் மிகச் சரியாகத் தமிழர்கள் கண்டுபிடித்து வெளி உலகத்திற்குச் ச�ொல்லாமல் விட்ட அமெரிக்கா கண்டம் இருக்கும் திசையில் இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி குறிப்பிட்டுச் ச�ொல்வதன் காரணமென்ன?
46
ஓல்மெக் நாகரீகத்தின் வீழ்ச்சி
"முதலாவது பேரிடி ஹூரக்கான், இரண்டாவது இளைய பேரிடி, மூன்றாவது திடீர்ப் பேரிடி. இவர்கள் மூவரும்தான் நீள் வானின் இதயம் ப�ோன்றவர்கள். ப�ோபல் வு (Popul Vuh)”
இ
னக் குழு கலாச்சாரத்திற்கே உரிய மந்திரச் சடங்கு மந்திரவாதிகள் (ஷாமேன்ஸ்) ஓல்மெக் பேரரசின் மேட்டுக் குடியைத் த�ோற்றுவித்திருக்கலாம் என்பது இன்றைய ஆய்வாளர்களின் முடிவு. பிறகு அது இனக் குழு கூட்டத்தின் பலம் ப�ொருந்திய தனி நபர்களிடம் சென்று பேரரசு ஒன்றை இயங்க வைக்கக் கூடிய அதிகார வர்கமாக மாற்றமடைந்திருக்க வேண்டும் என்பதும் அவர்களின் கருத்து. பலமிக்கவர்கள் பேரரசர்களாக உருவெடுத்து அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் பேரரசிற்கான வாரிசுரிமைகளைப் பெற்றுக்கொண்டன.
ஓல்மெக் பேரரசராகத் தங்களை முடி சூட்டிக்கொண்டவர்கள் மீச�ோ அமெரிக்க நிலத்தின் கடவுளர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். கடவுளர்களுக்கும் தங்களுக்கும் இடையிலான த�ொடர்பைப் பிறப்புரிமையாக்கவும் அதை மீச�ோ அமெரிக்க நிலப்பகுதி முழுவதற்கும் பரப்பும் விதமாகவும் பிரம்மாண்டமான கல் கட்டிடங்களைக் கட்டியெழுப்பினார்கள். எகிப்திய நாகரீகத்தின் பிரமிடுகளை (ஸ்டெப் பிரமிட்) ப�ோன்ற ஸ்டெப் பிரமிடுகளை வெராக்ரஸ் மற்றும் டபாஸ்கோ நிலப்பகுதி முழுவதிலும் எழுப்பி நிறுத்தினார்கள். சான் ல�ோரான்சோ தலைநகரமாக இருக்க மீச�ோ அமெரிக்காவின் மற்ற இனக் குழுக்களுடன் உள்ளூர் வணிகத் த�ொடர்புகளை 47
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
விரிவாக்கினார்கள் ஓல்மெக் பேரரசர்கள். மீச�ோ அமெரிக்க நாகரீகங்களின் மூத்த ம�ொழியாக இருக்கும் ப்ரோட்டோ-மெக்சி (proto-Mixe) ம�ொழியைப் பேசி ஹிகிர�ோகிளிப் (சித்திர வடிவ எழுத்து உருவங்கள்) எழுத்துகளைக் க�ொண்டு பேசியவைகளை எழுதியிருந்தாலும் ஓல்மெக் பேரரசர்களின் பெயர்களை, அவர்களின் ஆட்சி ஆண்டு வரிசைகளை மீட்டு எடுப்பதற்கு வசதியான த�ொல்லியல் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. மீச�ோ அமெரிக்க நாகரீகத்திற்கு எழுத்து வடிவை அறிமுகப்படுத்திய முதல் பேரரசும் ஓல்மெக்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஓல்மெக் பேரரசும் அதன் பேரரசர்களும் என்ன பெயரில் தங்களை அழைத்துக்கொண்டார்கள் என்பதும் இன்றைக்கு வரைக்கும் வெளிப்படாத ஒரு சங்கதி. ஓல்மெக் என்கிற வார்தை ஏஸ்டெக் நாகரீக மக்களின் ம�ொழியான நாவடுல் (Nahuatl)-லில் இருந்து பெறப்பட்ட ஒன்று. நாவடுல் ம�ொழியில் ஓல்மெக் என்றால் “இரப்பர் மக்கள் (Rubber People)” என்று ப�ொருள். இரப்பரினால் தயாரித்த பந்தை வைத்து முதன் முதலாக “பந்து விளையாட்டு (Ball game)” ஒன்றை ஓல்மெக் நாகரீக மக்கள் தேசிய விளையாட்டாக அறிமுகப்படுத்தியதால் இந்தப் பெயரை அவர்களுக்குப் பின்னால் வந்த ஏஸ்டெக் நாகரீக மக்கள் வழங்கியிருக்கிறார்கள். மீச�ோ அமெரிக்காவின் அனைத்து நாகரீகங்களும் பந்து விளையாட்டைத் தங்களின் தேசிய அடையாளமாகப் பிற்காலத்தில் பாவித்துக்கொண்டன. மாயன்கள் ஓல்மெக்குகளின் பந்து விளையாட்டைப் ப�ோக்-டா-ப�ோக் (pok ta pok) என்றும் ஏஸ்டெக்குகள் அதை உலமா-இட்சி (ulama itzi) என்றும் அழைத்தார்கள். நாவடுல் ம�ொழியில் இருக்கும் மிகப் பழமையான கவிதை த�ொகுப்பு ஒன்று ட�ோம�ோவன்ச்சன் (Tamoanchan) என்கிற த�ொல் பழங்கால நிலப்பகுதி குறித்தும் அதன் பேரரசு குறித்தும் ஒரு சில வார்த்தைகளில் குறிப்பிட்டுவிட்டுக் கடந்து சென்றுவிடுகிறது. ட�ோம�ோவன்ச்சன் என்பது நாவடுல் ம�ொழி வார்த்தையாக இருந்தாலும் அதற்கான மாயன் ம�ொழி அர்த்தம் “மழை நிலம்” என்பது. ஆய்வாளர்கள் ட�ோம�ோவன்ச்சன் என்கிற வார்த்தை ஓல்மெக்குகளையும் அவர்களின் பேரரசையுமே குறிப்பதாகக் கருதுகிறார்கள். ஓல்மெக் என்கிற பெயரே பரவலாக 48
நவீனா அலெக்சாண்டர்
அறியப்பட்டிருப்பதால் நாமும் ஓல்மெக் என்கிற பெயரையே த�ொடர்வோம். ஓல்மெக்குகளுக்கு பின்பு வந்த மாயன்களும் ஏஸ்டெக்குகளும் கூட மறந்துவிட்ட, தென் கிழக்கு மெக்சிக்கோவின் வளைகுடா தாழ்நில காடுகளில் மறைந்து காணாமல் ப�ோய்விட்ட – அதாவது சுமார் 3000 வருடங்களாக – வேறு வார்த்தைகளில் ச�ொல்வது என்றால் மழைக்காடுகளால் ஏப்பம் விடப்பட்டுவிட்ட ஓல்மெக் நாகரீகச் சிதிலங்களை உயிர்பிக்க செய்தவர் மேத்திவ் ஸ்டிர்லிங். இது நடந்தது 1930 மற்றும் 1940-களில். பின்னால் வந்த மீச�ோ அமெரிக்க நாகரீக (மாயன், ஏஸ்டெக், சப�ோடெக்) தலை நகரங்களின் பிறப்பிடமாக இருந்த சான் ல�ோரான்சோ முன்பே பார்த்ததைப் ப�ோலக் கி.மு. 900 ஆண்டு வாக்கில் அழிவை ந�ோக்கிச் சென்றுவிட்டது. இயற்கையின் சீற்றம் காரணமாகவ�ோ அல்லது பஞ்சம் ப�ோன்ற பேரிடர் காரணமாகவ�ோ அது அழிந்திருக்கவில்லை. அயல் அண்டையில் நடைப்பெற்ற படையெடுப்புகளின் காரணமாகவும் அது அழிவிற்குச் சென்றிருக்கவில்லை. திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது அது. பிற்காலத் தலைமுறைகளுக்கு அந்த நகரம் குறித்த எத்தகைய தடயமும் கிடைத்துவிடக் கூடாது என்கிற உள் ந�ோக்கத்துடன் பார்த்துப் பார்த்து அழிக்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்தவர்கள் ஓல்மெக் பேரரசர்கள். சமதளத்திலிருந்து 150 அடிகள் உயர்த்தி, வடக்கு-தெற்காகச் சுமார் ஒன்றரை கில�ோ மீட்டர்கள் த�ொலைவிற்குத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு (சிறிய குன்றுப்போல), பெரும் மனித உழைப்பைக் க�ொடுத்து உருவாக்கிய சான் ல�ோரன்சோ நகரத்தை அதன் பேரரசர்களே திட்டமிட்டு அழித்ததற்கான காரணம் மற்றொரு ஓல்மெக் வரலாற்று புதிர். சான் ல�ோரான்சோ அழிக்கப்பட்ட ஒரு சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே அதாவது கி.மு. 850-ல் லா வேன்டா (La Venta) நகரம் ஓல்மெக் நாகரீகத்தின் மிக முக்கிய நகரமாக – தலைநகரம் என்றும் கூடச் ச�ொல்லத் தகுதியானது – மாற்றமடைந்தது. மாற்றமடைந்தது என்பதைவிட உருவாக்கப்பட்டது என்றால் அது ப�ொருத்தமாகத்தான் இருக்கும். லா வேன்டாவும், தென் கிழக்கு மெக்சிக்க வளைகுடா பகுதியிலேயே அமைந்திருக்கிறது. இன்றைய ட�ோன�ோலா ஆற்றை ஒட்டிய சதுப்பு 49
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
நிலப்பகுதியில் அமைந்திருக்கும் தீவுப�ோன்ற நிலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. சான் ல�ோரான்சோவைப் ப�ோல இந்த நகரிலும் மேட்டுக் குடிக்கு என்று தனித்த பகுதி ஒதுக்கப்பட்டு அதில் பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேட்டுக் குடி சனத்தொகை வசித்திருக்கவேண்டும் என்று த�ொல்லியல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆட்சி அதிகார வர்க குடும்பங்கள் அவர்கள் சார்ந்த வசிப்பிடங்கள் என்று ஏகப�ோகப் பகட்டாக இருந்திருக்கிறது இந்த நகரம். சிகப்பு, மஞ்சள், ஊதா என்று வண்ணமையமான பிரம்மாண்டக் கட்டிடங்களுக்குக் குறைவில்லை. லா வேன்டா நகரை ஆட்சி செய்த பேரரசர்களைக் குறித்தும் அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் அதன் தினசரி வாழ்வியல் அமைப்பு குறித்தும் தெரிந்துக�ொள்ள எத்தகைய த�ொல்லியல் மற்றும் எழுத்து வரலாற்று ஆதாரங்களுக்கும் வழியில்லாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் சான் ல�ோரான்சாவைப் ப�ோலவே இதுவும் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கிறது. அழிவு நிகழ்த்தப்பட்டது கி.மு. 400-ல். லா வேன்டா நகரம் ஆட்சியதிகாரத்தில் உச்சத்தில் இருந்த அதே காலக்கட்டத்தில் மற்றொரு ஓல்மெக் நகரமும் உச்சி நிலையில் இருந்தது. லா வேன்டாவிற்கு வடமேற்கே 160 கில�ோ மீட்டர் த�ொலைவில் அமைந்திருந்த அந்த நகரம் ட்ரெஸ் சப்போட் (Tres Zapotes). இதற்கும் அதே முடிவைத்தான் க�ொடுத்தார்கள் அதன் ஆட்சியாளர்கள். திட்டமிட்ட அழிப்பு அதுவும் கி.மு. 400-லேயே நிகழ்ந்தது. சான் ல�ோரான்சோ, லா வேன்டா மற்றும் ட்ரெஸ் சப்போட் நகரங்களைப் ப�ோலச் செல்வச் செழிப்பும், சமய முக்கியத்துவமும், அரசியல் பலமும் ப�ொருந்திய நகரங்களாக இல்லாவிட்டாலும் ஓல்மெக் நாகரீகத்தின் குறிப்பிடும்படியான நகரங்களாக இருந்தவைகள் லகுனா டே லாஸ் சிர�ோஸ் (Laguna de los Cerros) மற்றும் லாஸ் லிமாஸ் (Las Limas). இவைகளும் கி.மு. 400ல் முடிவிற்கு வந்துவிட்டன. மீச�ோ அமெரிக்காவின் முதல் நாகரீகமாகத் த�ோன்றிய (கி.மு. 1200) ஓல்மெக் கி.மு. 400-ல் ஒட்டும�ொத்தமாக முடிவிற்கு வந்துவிட்டது. சுமார் எண்ணூறு வருடங்கள் நீடித்த ஓல்மெக் நாகரீகம் மீச�ோ அமெரிக்க மண்ணின் தாய் நாகரீகமாகவே பார்க்கப்படுகிறது. 50
நவீனா அலெக்சாண்டர்
கட்டிடக் கலை, சமயம், சமூக அமைப்பு, இராணுவம், விளையாட்டு, வணிகம், ஆட்சியதிகாரம் என்று மீச�ோ அமெரிக்க மண்ணின் கலாச்சாரத்தைப் பல தளங்களில் முதன் முதலாகக் கட்டுமானம் செய்தவர்கள் ஓல்மெக்குகள். அந்தக் கட்டுமானத்தை அடிப்படையாகக் க�ொண்டே மாயன், ஏஸ்டெக் மற்றும் சப்போட்டெக் நாகரீகங்கள் தங்களின் பேரரசுகளை மேலும் வளர்த்தெடுத்தன. ஓல்மெக் நாகரீகத்தின் பிரம்மாண்டக் கட்டிடங்கள், அது சார்ந்த கலைகள் அனைத்தும் சமய நம்பிக்கைகளை அடிப்படையாகக் க�ொண்டவைகளாகவே இருந்தது. கடவுளர்களுடன் இணைத்துக்காட்டித் தங்களின் அதிகாரத்தைக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவைகளாக நிலை நிறுத்திக்கொண்டார்கள். தங்களின் கடவுள் நிலையை மீச�ோ அமெரிக்க நிலப்பகுதி முழுவதிலுமிருந்த மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகப் பல பிரம்மாண்டக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. எகிப்திய ஸ்டெப் பிரமிடுகளை ஒத்த பிரமிட் கட்டிடங்கள் அவை. வானை முட்டிக்கொண்டு அவர்களின் கடவுள் தன்மையை எடுத்துக்காட்டின. ஓல்மெக்குகளின் முக்கியக் கடவுளர்களாகத் தற்போது அறியக் கிடைப்பது மெயிஸ், ஜாகுவார், ஊனப்பு மற்றும் பலான்கு, இட்ஸ்சேம்னா, இட்ஸம்யே, காவில், இக்ஸ்செல், சாக், லார்ட்ஸ் ஆ டெத் மற்றும் விட்ஸ் மான்ஸ்டர். மற்ற மூன்று பெரும் நாகரீகங்களைத் (தமிழ், எகிப்து, மெசப்பட்டோமியா) ப�ோலவே ஓல்மெக்குகளிடமும் உலகத் த�ோற்றம், பிறப்பு இறப்பு, இறப்புக்குப் பிறகான வாழ்கை ப�ோன்ற தத்துவத் தேடல்கள் கடவுளர்களின் பிறப்பு மற்றும் இருத்தலுக்கான த�ொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஓல்மெக்குகளின் உலகத் த�ோற்ற க�ோட்பாடு, ஹூன்-நல்-யே (மெயிஸ் கடவுள். மெயிஸ் கடவுள் சூரியனுடனும் ஒப்பிடப்படுகிறார்) மற்றும் நிலவுடன் த�ொடர்புடையது. ஹூன்நல்-யே (ஆண்)-வுக்கும் நிலவு (பெண்)-க்கும் பிறந்தவர்களே மற்ற கடவுளர்கள். இறக்கைகள் க�ொண்ட பாம்பின் உருவில் இருக்கும் ஹூன்-நல்-யேவே இந்த அகிலத்தின் அதிபதி. ஓல்மெக்குகளை ப�ொறுத்தமட்டில். ச�ோளம் (மெயிஸ் – maize) மீச�ோ அமெரிக்க மக்களினத்தின் அதி 51
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
முக்கிய முதன்மையான விசயம் என்று அடையாளம் காணக் கூடிய அளவிற்குப் ப�ோற்றுதலுக்குரிய ஒரு ப�ொருள். ஓல்மெக்குகளுக்கு அது வெறும் உணவுப் ப�ொருள் அல்ல அது கடவுள். தந்தைக் கடவுள். நிறைந்து வழியும் ச�ோளத் தானிய விளைச்சலுக்கு உத்திரவாதம் க�ொடுப்பவர் மெயிஸ் கடவுள். ச�ோளப் பயிரின் செழுமையை உத்திரவாதப்படுத்துவத�ோடு பிறப்பு மற்றும் இறப்புக்கும் ப�ொறுப்பானவர். அங்கொன்றும் இங்கன்றுமாக அரிதாகக் கிடைக்கும் ஓல்மெக் கலை வெளிப்பாடுகளில் மெயிஸ் கடவுள் மனித உருவில் இருக்கும் ச�ோளப் பயிராகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய தலைப்பகுதியில் ச�ோளப் பயிர் விளைந்து துருத்திக்கொண்டு வெளிவந்திருப்பதைப்போலக் காட்டப்பட்டிருக்கும். ஓல்மெக் பேரரசர்கள் தங்களின் பதவியேற்பு நிகழ்வுகளில் ச�ோளப் பயிர் வடிவில் இருக்கும் கிரீடத்தையே அணிந்துக�ொண்டார்கள்.
மீச�ோ அமெரிக்க மற்றும் தென்னமெரிக்கக் காடுகளில் அதிகளவில் இருக்கும் ஜாக்குவார் (முழுக் கரு நிறத்திலிருக்கும் வேங்கை குடும்பத்தைச் சேர்ந்தது) அடுத்த மிக முக்கியக் கடவுள். வேர்52
நவீனா அலெக்சாண்டர்
ஜாக்குவார் (were-jaguar) என்கிற மற்றொரு பெயரும் இந்தக் கடவுளுக்கு உண்டு. பூனைக்கும் மனிதப் பெண்ணுக்கும் பிறந்தது வேர்-ஜாக்குவார் என்பது ஓல்மெக்குகளின் திடமான நம்பிக்கை. மிரட்சிய�ோடும் அச்சத்தோடுமே இந்தக் கடவுளை அணுகியிருக்கிறார்கள். ஆண் தன்மையும் பெண் தன்மையும் அற்ற சிறிய குழந்தை உருவத்திலேயே வேர்-ஜாக்குவாரை சித்தரிக்கின்றன ஓல்மெக் கலைகள். தலையிலும் உடலிலும், மெயிஸ் கடவுளின் உருவமாக இருக்கும் ச�ோளப் பயிரின் இலைகளைக் க�ொண்டு தங்களை அலங்கரித்துக்கொள்ளும் ஓல்மெக் பேரரசர்கள் முகத்தில் வேர்-ஜாக்குவாரின் முகமூடியை அணிந்துக�ொள்வதும் நடந்திருக்கிறது. வேர்-ஜாக்குவார் முகமுடி சிற்பங்களும், அந்த முகமுடி அணிந்த சிற்பங்களும், புடைப்புச் சிற்பங்களும் சான் ல�ோரான்சோவிலும், லா வேன்டாவிலும் த�ொல்லியல் ஆதாரங்களாகக் கிடைத்திருக்கின்றன. முக்கியச் சடங்கு நிகழ்வுகளிலும், படையெடுப்பு நிகழ்வுகளிலும் ஓல்மெக் பேரரசர்கள் வேர்-ஜாக்குவார் முகமூடியை அணிந்து தங்களின் பலத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஓல்மெக்குகளின்
53
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
பிரமிட் கட்டுமானங்கள் இன்றைக்குத் தரைமட்டமான க�ோலத்தில் இருந்தாலும் அவர்களைத் த�ொடர்ந்து மாயன்கள் கட்டிய பிரமிடுகளில் வேர்-ஜாக்குவார் முகமுடி அணிந்த மனிதர்களின் புடைப்பு சிற்பங்களை அதிகமாகவே காண முடிகிறது. ஓல்மெக்குகளின் ஸ்டெப் பிரமிடுகளை அலங்காரம் செய்த மற்றொரு கடவுள் இட்ஸம்யே. இதற்குப் பாம்பு பறவை (serpent bird) மற்றும் செவன் மெக்காவ் (seven macaw) என்கிற வேறு பெயர்களும் உண்டு. உலகின் நான்கு மூலைகளையும் காப்பது இட்ஸம்யே என்பது ஓல்மெக்குகளின் நம்பிக்கை. இதன் காரணமாக அவர்கள் கட்டிய ஸ்டெப் பிரமிட் கட்டிடங்களின் நால் திசை காவலர்களாக இந்தக் கடவுளின் உருவத்தைச் செதுக்கி வைத்தார்கள். சாக், விண்ணுலகக் கடவுள். முதலையை ஒத்த த�ோற்றம் க�ொண்டது. மண்ணுலகிற்கும் அமானுஷ்ய உலகிற்குமான த�ொடர்பை நிலை நிறுத்திப் பாதுகாப்பது இந்தக் கடவுளின் வேலை. இதன் புடைப்பு சிற்பங்களையும் கூட ஸ்டெப் பிரமிடுகளில் காண முடியும். ஆனால் மாயன்களுடைய பிரமிடுகளில்.
மீச�ோ அமெரிக்காவின் பிரமிடு கலாச்சாரத்தை மாயன்களும், ஏஸ்டெக்குகளும், இன்காக்களும் அடுத்த நிலைக்குக் க�ொண்டு சென்றிருந்தாலும் மீச�ோ அமெரிக்க நிலப்பகுதியில் பிரமிடுகளின் 54
நவீனா அலெக்சாண்டர்
ஊற்றுக்கண் என்பது ஓல்மெக்குகளின் பிரமிடுகளே. ஓல்மெக்குகள் பிரமிடுகளை மூன்று தேவைகளுக்காக - இறந்த பேரரசர்களை அடக்கம் செய்வதற்கு, சமயச் சடங்குகளை நிகழ்த்துவதற்கு, இராணுவத்திற்கு - கட்டியெழுப்பிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். முதல் நகரமான சான் ல�ோரான்சோவில் பிரமிடுகளுக்கான
த�ொல்லியல் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும் லா வேன்டாவில் அதற்கும் சேர்த்துக் க�ொடுப்பதைப்போல மிகப் பெரிய பிரமிடு ஒன்று நின்றிருந்ததற்கான மணல் மேடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இது களிமண் குன்றுப்போலக் காட்சியளித்தாலும் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு 110 அடி உயரம் க�ொண்ட ஸ்டெப் பிரமிடாக உயர்ந்து நின்றிருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிரே மேலும் இரண்டு சிறிய பிரமிடுகள் இருக்கின்றன. இப்போது அவைகளும் களிமண் குவியலாகத்தான் காட்சியளிக்கின்றன. எகிப்திய மற்றும் சுமேரிய பிரமிடுகளைப் ப�ோல அல்லாமல் மீச�ோ அமெரிக்கப் பிரமிடுகள் சில வேலைகளில் நரபலி க�ொடுப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது 55
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
ஒரு சில ஆய்வாளர்களின் அசைக்க முடியாத கருத்தாக இருக்கிறது. ஆதாரமற்ற கருத்து என்று அதை ஒதுக்கித் தள்ளிவிடுவதற்குமில்லை. மாயன் மற்றும் ஏஸ்டெக் பிரமிடுகளில் நரபலிகள் க�ொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஒரு சில பிரமிட் வளாகங்களில் கை குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் கூடக் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கடவுளுக்குப் படைப்பதைப் ப�ோன்ற பூசை ப�ொருட்கள் சூழ இந்த எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது நரபலிக்கான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. நரபலி என்றதும் ஓல்மெக்குகள் காட்டுமிராண்டி கலாச்சாரத்தைக் க�ொண்டிருந்திருப்பார்கள் என்று அவசரப்பட்டுவிட வேண்டாம். சிற்பக் கலை, கட்டிடக் கலை, நாள்காட்டி, எழுத்து வடிவம், இராணுவம் என்று முதிர்ந்த நகரக் கலாச்சாரம் ஒன்றிற்கான அனைத்து அடையாளங்களையும் க�ொண்டிருந்தது ஓல்மெக் கலாச்சாரம். ஒன்பதிலிருந்து பதின�ொரு அடி உயரமும் சுமார் இருபது டன் எடையும் க�ொண்ட தலைச் சிற்பங்கள் (Olmec
56
நவீனா அலெக்சாண்டர்
colossal heads) ஓல்மெக் நாகரீகத்தின் சிற்பக் கலை நேர்த்திக்கும் முதிர்ச்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஓல்மெக் நாகரீகம் பரவியிருந்த நிலப்பகுதி முழுவதிலுமிருந்து இதுவரை பதினேழு தலைச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பாசால்ட் பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் இவைகள் உருவாக்கப்பட்டதற்கான ந�ோக்கமும் காரணமும் இதுவரை பிடிபடவில்லை. ஓல்மெக் நாகரீக மர்மங்களின் பட்டியலில் இதையும் இணைத்துக்கொள்வதைத் தவிர இப்போதைக்கு ஆய்வாளர்களுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. தலைச் சிற்பங்களின் உருவ அமைப்புகளைக் க�ொண்டு அவைகள் ஆப்பிரிக்க நீக்ராய்ட் இன மக்களைக் குறிக்கிறது என்று ஒரு பிரிவு ஆய்வாளர்களும், ஆஸ்டிலராய்ட் (தமிழ்) இன மக்களின் மண்டைய�ோட்டு தன்மைகளைக் க�ொண்டிருப்பதாக மற்றொரு பிரிவு ஆய்வாளர்களும் இரு வேறு கருத்துக்களை முன் வைக்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த எந்த ஒரு ஆப்பிரிக்க இனமும், எகிப்தியர்கள் உட்படப் பெருங் கடல்களைக் கடக்கும் கடல் பயண அனுபவத்தில் தேர்ச்சிபெற்றவர்களாக இருக்கவில்லை. அதிலும் நடுக்கடல் பயணம் என்பதை அன்றைய ஆப்பிரிக்கக் கண்ட மக்களால் நினைத்தும் பார்க்க முடியாது சங்கதி. அப்படியிருக்க ஆப்பிரிக்க இன மக்கள் கி.மு. 1200 வாக்கில் ஓல்மெக் நிலத்தில் கால்பதித்திருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இல்லை. சுமார் கி.மு. 3000 த�ொடங்கிக் கி.பி. 700-கள் வரை கடல் பயணத்தில் – முக்கியமாக நடுக்கடல் பயணத்தில் – க�ொடிகட்டிப் பறந்தவர்கள் தமிழர்கள் மாத்திரமே. ஓல்மெக் தலைச் சிற்பங்கள் தமிழ் மாலுமிகளைச் சித்தரிப்பதற்கும் வரலாற்று ரீதியிலான வாய்ப்புகள் மிக அதிகம். ஓல்மெக் நாகரீகத்தின் அடுத்த மிக முக்கியக் கண்டுபிடிப்பு மற்றும் பங்களிப்பு நாள்காட்டி. லாங் கவுன்ட் (Long Count), ஹாப் (Haab), ச�ோல்கின் (Tzolkin), கேலண்டர் ரவுண்ட் (Calendar Round) மற்றும் வீனஸ் ரவுண்ட் (Venus Round) என்று ஐந்து விதமான நாள்காட்டி முறையைப் பின்பற்றியிருக்கிறார்கள் ஓல்மெக்குகள். இவைகளையே பின்னால் வந்த மாயன்களும், ஏஸ்டெக்குகளும், 57
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
ச�ோப்போடெக்குகளும் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்ற இரண்டு (எகிப்து மற்றும் மெசப்பட்டோமியா) நாகரீகங்களின் நாள்காட்டி முறையிலிருந்து வேறுபட்டது ஓல்மெக் நாள்காட்டி முறை. இது குறித்து விரிவாக மாயன் நாகரீகத்தில் பார்ப்போம். ஓல்மெக் நாள்காட்டி 11 ஆகஸ்ட் 3114 கி.மு. (சில ஆய்வாளர்கள் 13 ஆகஸ்ட் என்று அனுமானம் செய்கிறார்கள்)-விலிருந்தே உலகக் கணக்கைத் த�ொடங்குகிறது. இதற்குக் காரணம் என்ன என்பது வழமைப�ோல மற்றொரு ஓல்மெக் புதிர். மிகச் சரியாக இதே காலக்கட்டத்தில் அதாவது கி.மு. 4000-3500-களில் சுமேரியாவின் ஊர் மற்றும் ஊர் நகரங்களைத் தமிழ் கடல�ோடிகள் தங்களுக்கான வணிக நகரங்களாக உருவாக்கினார்கள் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஓல்மெக் நாகரீகத்தின் சான் ல�ோரான்சோவை தமிழ் கடல�ோடிகள் தங்களுக்கான வணிக நகரமாக - அதாவது கிராமமாக – கி.மு. 3114 ஆகஸ்ட், 11-ல் உருவாக்கியிருந்திருக்க வேண்டும். தென்னிந்தியாவுடன் த�ொடர்ந்த இரண்டாயிரம் ஆண்டு கால வணிகத் த�ொடர்பின் காரணமாகக் கி.மு. 1200 சான் ல�ோரான்சோ ஓல்மெக் நாகரீகத்தின் முதல் நகரமாகப் பரிணமித்திருக்க வேண்டும். இப்படி நிகழ்வதற்கான வரலாற்று முன்னுதாரணங்கள் இல்லை என்று யாராலும் மறுத்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகாலத் தென்னிந்திய வணிகத்தின் காரணமாக எகிப்திய நாகரீகத்திலும், மெசப்பட்டோமிய மற்றும் கிரேக்க, ர�ோமானிய நாகரீகங்களிலும் தமிழர்களின் வணிக நகரங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும், அதேப�ோலத் தென்னிந்தியப் பகுதிகளில் கிரேக்க மற்றும் ர�ோமானிய வணிகக் குடியிருப்புகள் இருந்தமையும் தமிழ் கடல�ோடிகளின் க�ொண்டு க�ொடுத்த (நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும்) செயல்பாட்டிற்கான உதாரணங்கள். உருவாக்கியவர்களே அழித்துவிட்ட புதிர�ோடு ஓல்மெக் நாகரீகம் முடிவிற்கு வந்துவிட்டாலும் மீச�ோ அமெரிக்க மண்ணில் நாகரீகங்களுக்குக் குறைவே கிடையாது. ஓல்மெக் நாகரீகத்துடன் சமக் காலத்தில் தலையெடுத்த மற்றொரு நாகரீகம் மாயன் நாகரீகம். யார் மாயன்கள்? 58
அமெரிக்கா இரண்டாம் கண்டுபிடிப்பு
"உண்மையான பலசாலி மல்யுத்த வீரனாக இருக்க வேண்டும் என்பதில்லை. க�ோபம் வரும் வேலையில் அதை அடக்கிக்கொள்ளத் தெரிந்தவனே உண்மையான பலசாலி – அல் புகாரி"
க
லிப்பா அல் மாமுன் (al-Mamun) ப�ோன்றவர்களின் முயற்சிகளின் காரணமாகப் பெரிதும் வளர்ந்த இஸ்லாமிய உலகத்தின் வானியல் அறிவும் கடல�ோடும் த�ொழில் நுட்பமும் அதுவரை யாரும் முயற்ச்சி செய்யக் கூடத் துணியாத (முடியாத) அட்லாண்டிக் கடல் பயணத்தில் அரேபியர்களை வெற்றிகளைக் காணச் செய்தது. அரேபிய வானியல் அறிஞர்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வாக்கில் காந்த முள் திசை காட்டியை (compass) பல படிகள் மேம்படுத்தி அரேபிய மாலுமிகளுக்குக் க�ொடுத்தார்கள். தீர்ரேகையையும் மத்தியரேகையையும் ஏற்கனவே மிகத் துல்லியமாகக் கணிக்கத் த�ொடங்கிவிட்ட இஸ்லாமிய மாலுமிகளுக்குத் திசை காட்டியும் பெரிய வரமாக வந்து சேர்ந்தது.
இஸ்லாமிய மாலுமிகள் கி.பி. 9 – 10-ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றி மேலும் வட மேற்கில் பயணம் செய்து பிற்பாடு அட்லாண்டிக் கடலைக் குறுக்காகக் கடக்கும் கடல் வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இதற்கு இயற்கையும் சிறிது அரேபிய மாலுமிகளுக்கு உதவியிருக்கிறது. இன்றைக்கு நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனையில் த�ொடங்கும் கடல் நீர�ோட்டங்களில் ஒன்று வடக்கில் நகர்ந்து ஆப்பிரிக்காவின் வட மேற்கில் இருக்கும் கேப் வெர்டி (Cape Verde) என்று அழைக்கப்படும் தீவுக் கூட்டங்களுக்கு அருகில் வட 59
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மேற்காகத் திரும்பி, அட்லாண்டிக் கடலில் வட மேற்கிலேயே நகர்ந்து பிறகு தென் அமெரிக்கப் பிரேசில் நாட்டுக் கடலில் தெற்கில் திரும்பி மேலும் தென் மேற்காகச் சென்று இறுதியில் பால்க்லேண்ட் (Falkland) தீவுக் கூடத்தில் சுழன்று திரும்பி மீண்டும் தென் கிழக்கில் பயணித்து ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை வந்தடைகிறது. (கீழே படம் – 1 ஒன்றில் இதைப் பார்க்கலாம்).
அட்லாண்டிக் கடலில் த�ொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கடல் நீர�ோட்டம் இஸ்லாமிய மாலுமிகளை அமெரிக்கக் கண்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இது நடந்தது கி.பி. 10-ஆம் நூற்றாண்டுகளில் இருக்கலாம். இதற்கான வரலாற்று ஆதாரங்கள் இன்றைக்கு இல்லையென்றாலும் இஸ்லாமிய மாலுமிகள் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்ததற்கான பிற மறைமுக ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தபடி இருக்கின்றன. அவைகளில் ஒன்று கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலக 60
நவீனா அலெக்சாண்டர்
வரைப் படம். இதை வரைந்தவர் சுவேன் பிசிகான�ோ (Zuane Pizzigano). இந்த உலக வரைப் படம் வரையப்பட்ட ஆண்டு 1424 என்று அந்த வரைப் படத்திலேயே குறிக்கப்பட்டிருக்கிறது. பிசிகான�ோவிற்கு முன்பே மேற்குலகில் 14-ஆம் நூற்றாண்டுத் த�ொடங்கி உலக வரைப் படங்கள் வரையப்பட்டன. இதில் முக்கியத் த�ொடக்கமாக அமைவது பியட்ரோ வெஸ்கோன்ட் (Pietro Vesconte)-யின் 1321-ஆம் வருடத்திய வரைப் படம். இதற்கு அடுத்து முக்கியம் இடம் பெறுவது சுவேன் பிசிகான�ோ வரைபடம். இதற்குப் ப�ோர்டோலன் சார்ட் (Portolan chart) என்று பெயர். இந்த வரைப் படமே முதலில் இஸ்லாமியர்களின் அட்லாண்டிக் கடல் பயணத்தைக் குறித்த சர்ச்சையை இன்றைய வரைப் பட மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே த�ொடங்கிவைத்தது. இந்த வரைபடம் வடக்கு அட்லாண்டிக் கடலில் அன்டீலியா (Antillia) என்கிற பெயர் க�ொண்ட தீவுக் கூட்டங்களைக் குறிப்பிடுகிறது. கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் த�ொடக்கக் காலகட்டம் வரைக்கும் மேற்குலகின் எந்த ஒரு நாடும் அட்லாண்டிக் கடலைக் கடந்ததாக வரலாறு கிடையாது. நிலைமை அப்படியிருக்கையில் வெனிஸ் நகரைச் சேர்ந்தவரான பிசிகான�ோ எங்கிருந்து அட்லாண்டிக் கடலின் வடக்குப் பகுதியில் இருக்கும் அன்டீலியா தீவுகளைக் குறித்த தகவலைப் பெற்றார் என்கிற கேள்வி இன்றைய ஆராய்ச்சி உலகத்தைத் திணறடித்துக்கொண்டிருக்கிறது. மேற்குலகமே அனைத்துப் புதிய உலகக் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருக்க முடியும் என்று நிறப் பாகுபாடுக�ொண்ட அறிவு சீவிகளில் சிலர் பிசிகான�ோ இந்தத் தகவலைப் ப�ோர்ச்சுகீசியர்களின் கடல் பயண அனுபவங்களின் வழியாகப் பெற்றுக்கொண்டார் என்று நிறுவுவதில் தலையால் தண்ணிக் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு மேற்குலக அறிவு சீவிக் கூட்டம் அன்டீலியா தீவுக் கூட்டம் பிசிகான�ோவின் கற்பனை என்று கதையை முடித்துவிடுகிறது. இவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் மேற்குலகம் அறிவு மங்கித் தூங்கிக் கிடந்த காலங்களில் கடல�ோடும் த�ொழில் நுட்பத்தில் முன்னனியில் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று. அப்பாசி கலிப்பாக்களின் காலத்தில் எடுக்கப்பட்ட வானியல் மற்றும் கடல�ோடும் த�ொழில் நுட்ப முயற்சிகளின் காரணமாகக் கி.பி. 10-ஆம் 61
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
நூற்றாண்டுகளிலேயே இஸ்லாமியர்கள் அமெரிக்காவைக் கண்டு பிடிக்க அனைத்துவிதமான சாத்தியக் கூறுகளும் இருந்திருக்கின்றன என்பதும் அவர்கள் அறிந்ததே. இருந்தும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மேற்குலகத்தினிருடையதாகவே இருக்க வேண்டும் என்கிற பாராபட்சம் அவர்களை இந்த உண்மையை மறைக்கும்படியும் திரிக்கும்படியும் செய்ய வைக்கிறது. இஸ்லாமியர்களே இரண்டாம் முறையாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்கள் என்பதற்கான அடுத்த ஆதாரத்தைத் தருவது மாப்பா முண்டி (Mappa mundi). இதுவும் ஒரு உலக வரைபடம்தான் இதை வரைந்தவர் ப்ரா மவுரா, வரையப்பட்ட ஆண்டு கி.பி. 14571459. ப�ோர்ச்சுக்கல் நாட்டின் பண உதவியின் பேரில் இதை அவர் ப�ோர்ச்சுக்கல் அரசருக்கு வரைந்துக�ொடுத்திருக்கிறார். இதில் அவர் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையான இன்றைய நன்னம்பிக்கை முனையையும் தென் அமெரிக்காவின் தெற்கு முனையான மெகாலன் கால்வாயையும் குறித்திருக்கிறார். ப்ரா மவுரா இந்த வரைபடத்தை வரைந்த ஆண்டுகளிலும் கூட மேற்குலகின் ஒரு நாடும் அட்லாண்டிக் கடலைக் குறுக்காகக் கடந்திருக்கவில்லை. அப்படியிருக்கையில் ப்ரா மவுரா எங்கிருந்து இந்தத் தகவல்களைப் பெற்றார் என்கிற கேள்வி இயல்பாகவே ஒருவரை இஸ்லாமிய உலகத்தின் கடல�ோடும் சாதனைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆனால் மேற்குல அறிவு சீவிகள் ப�ோர்ச்சுகீசியர்கள் 1421-ஆம் ஆண்டுகளில் அட்லாண்டிக் கடலில் மேற்கொண்ட கடற் பயண அனுபவங்களின் மூலமே ப்ரா மவுரா இந்தத் தகவலைப் பெற்றதாகச் சப்பைக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ப்ரா மவுரா தன்னுடைய வரைப் படத்திற்கான தகவல்களைச் சேகரித்ததைப் பற்றி பேசும்போது மிகத் தெளிவாக இப்படிக் குறிப்பிடுகிறார், . . . who with their own hands had drawn for me all these provinces and cities, rivers and mountains, with their names all of which I have not been able to set down in proper order from lack of space அவர் இங்கே who என்று குறிப்பிடுவது இஸ்லாமியர்களை. ப்ரா மவுரா அவருடைய இளமைக் காலத்தில் மத்தியக் கிழக்கு நாடுகளில் மிக விரிவாகச் சுற்றுப் பயணம் செய்தவர். அந்த வகையில் இஸ்லாமிய 62
நவீனா அலெக்சாண்டர்
உலகமும் அதன் சாதனைகளும் அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. ஆப்பிரிக்காவின் தெற்கு முனையைக் கடந்து வடமேற்கு திசையில் கப்பல் ஓட்டிச் செல்லும் அரேபிய மாலுமிகளுடன் தான் நேரடியாகப் பேசித் தனக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றதாகச் ச�ொல்கிறார். மேலும் இஸ்லாமியர்களே இரண்டாம் முறையாக அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவிற்குச் சென்றவர்கள் என்பதற்கான மிக முக்கியமான ஆதார விளக்கம் ஒன்றையும் ப்ரா மவுரா தரத் தவறவில்லை. கீழ் வரும் ப்ரா மவுரா-வின் விளக்கம் வரலாற்று ஆய்வுலகத்தில் மிகவும் பெயர் பெற்றது. About the year of Our Lord 1420 a ship, what is called an Indian junk [Zoncho de India], on a crossing of the Sea of India towards the Isle of Men and Women, was driven by a storm beyond the Cape of Diab, through the Green Isles, out into the Sea of Darkness on their way west and southwest, in the direction of Algarve. Nothing but air and water was seen for forty days and by their reckoning they ran 2,000 miles and fortune deserted them. When the stress of the weather had subsided they made the return to the said Cavo de Diab in seventy days and drawing near to the shore to supply their wants the sailors saw the egg of a bird called roc, the egg being as big as a seven gallon cask, and the size of the bird is such that from the point of one wing to another was sixty paces and it can quite easily lift an elephant or any other large animal. It does great damage to the inhabitants and is very fast in its flight இங்கே ப்ரா மவுரா, இண்டியன் ஜன்க் (indian junk) என்று குறிப்பிடுவது அரேபிய வணிகக் கப்பலை. கேப் ஆ டையா என்பது இன்றைய மடகாஸ்கராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரேபிய மாலுமிகள் அட்லாண்டிக் கடலைச் சீ ஆ டார்க்னெஸ் (Sea of Darkness) என்றுதான் அழைத்திருக்கிறார்கள். கிரீண் ஐல்ஸ் (Green Isles) என்பது இன்றைய கேப் வெர்டிஸ். இது இஸ்லாமிய மாலுமிகளுடன் ப்ரா மவுரா கலந்துரையாடிப் பெற்ற நேரடி தகவல்கள். இதில் மிகத் தெளிவாக இஸ்லாமிய மாலுமிகள் கேப் வெர்டிசைத் தாண்டினால் சீ ஆ டார்க்னெஸ் (அட்லாண்டிக் கடல்) கடலில் 40 நாட்கள் 2,000 மைல்கள் பயணம் செய்து அமெரிக்காவை அடைந்து மீண்டும் கடல் நீர�ோட்டத்தின் காரணமாக 70 நாட்களில் நன்னம்பிக்கை முனைக்கு வந்துவிடலாம் என்று தன்னிடம் ச�ொன்னதாகச் ச�ொல்கிறார். 63
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
இஸ்லாமியர்களின் அமெரிக்கக் கண்டுபிடிப்பை வலுசேர்க்க அடுத்து நமக்குக் கிடைக்கும் ஆதாரம் கான்கின்டோ (Kangnido) உலக வரைப் படம். இந்த வரைப் படம் 1402-ல் க�ொரியாவில் வரையப்பட்டது. அது க�ொரிய அரசர் டைஜ�ோங் ஆட்சியின் இரண்டாம் வருடம். இதன் மூலவடிவம் இன்றைக்கு இல்லையென்றாலும் இதன் மூன்று படிகள் ஜப்பானில் இருக்கின்றன. அதில் கைய�ோட்டோவில் இருக்கும் ரைக�ோக்கு பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கும் படி இன்றைக்கும் நல்ல நிலையில் இருக்கிறது. கான்கின்டோ வரைப் படம். தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை தவறு காரணமாக இந்த வரைபடத்தில் நாடுகள் சரியாகச் சித்தரிக்கப்படவில்லை. இந்த வரைபடம் சீனாவில் புழக்கத்திலிருந்த வரைப் படத்தைப் பார்த்துக் க�ொரிய அரசருக்காகப் படியெடுக்கப்பட்டது. இந்த வரைபடத்தில் இருக்கும் ஒரு ஆச்சரியமான விசயம் ஆப்பிரிக்கா கண்டம். அதிலும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏறத்தாழ முழு உருவத்தையும் இந்த வரைப் படம் சித்தரிக்கிறது. ஆப்பிரிக்காவின் தென் முனையைக்
கடந்து ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளும் இதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 64
நவீனா அலெக்சாண்டர்
நாம் முன்பே பார்த்தது ப�ோல 1480-களுக்கு முன்பு வரை மேற்குலகின் எந்த நாடும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனையைக் குறித்தோ அல்லது ஆப்பிரிக்காவின் மேற்கு கரை குறித்தோ உறக்கத்தில் கூடக் கனவாகப் பார்த்தது கிடையாது. அதே வேளையில் சீனர்களுக்கும் அரேபியக் கடல் பகுதித் துறைமுகங்கள் வரை மட்டும்தான் கடல் வழி பயணப் பாதை தெரியும். அன்றைய காலகட்டத்தில் சீனர்களுக்கு ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் கூட அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது. பிறகு எப்படி 1400-களில் சீனர்களிடம் இருந்த ஒரு வரைப் படத்தில் ஆப்பிரிக்கக் கண்டம் முழுமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்க முடியும்? இந்தக் கேள்வி மீண்டும் நம்மை இஸ்லாமிய உலகத்திடமே அழைத்துச் செல்கிறது. சீனர்கள் இத்தகைய உலக வரைப் படத்தைக் குறித்து அரேபிய இஸ்லாமியர்களிடமிருந்து அறிந்துக�ொண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கின்றன. சீனாவின் Yuan அரசப் பரம்பரை பேரரசு காலத்தில் ச�ோங் லியான் (கி.பி. 1310–1381) என்பவரால் எழுதப்பட்ட ரிகார்ட்ஸ் ஆ தி யுவான் டைனாஸ்டி (Records of the Yuan-Dynastie - Yuan Shi) என்கிற வரலாற்று புத்தகம் இஸ்லாமியர் ஒருவரால் 1267-ஆம் ஆண்டு கூப்லாய் கானின் அரசவைக்குக் க�ொண்டுவரப்பட்ட அரேபிய நாட்டு வானியல் உபகரணங்களைப் பற்றி பேசுகிறது. வானியல் உபகரணங்களைச் சீனாவிற்குக் க�ொண்டுவந்தவரின் பெயர் ஜமால் அல்-டின் என்கிறது அந்தப் புத்தகம். கூப்லாய் கானின் விருப்பத்திற்கு இணங்க ஜமால் அல்-டின் மங்கோலியப் பேரரசை உள்ளடக்கிய உலக வரைப் படம் ஒன்றை வரைந்து க�ொடுத்ததாகச் ச�ோங் லியான் குறிப்பிடுகிறார். நாம் முன்பே பார்த்தபடி கலிப்பா அல் மாமுன் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலக வரைபட முறையை அடிப்படையாகக் க�ொண்டே ஜமால் அல் டின் சீனர்களுக்கான உலக வரைப் படத்தை வரைந்துக�ொடுத்திருக்கிறார். ஜமால் அல் டின்-க்கு ஆப்பிரிக்கக் கண்டம் குறித்து மிக நன்றாகவே தெரியும் என்பதால் அவர் வரைந்து க�ொடுத்த உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டம் முழுமையாக இடம்பிடித்துக்கொண்டது. இஸ்லாமியர்களின் தீர்க்கரேகை அட்சரேகை அளவீடுகளை அடிப்படையாகக் க�ொண்ட உலக வரைப் படத்தைச் சீனர்களால் புரிந்துக�ொள்ள முடியாத 65
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
காரணத்தாலும் வரைப் படத்தில் மங்கோலியப் பேரரசு நிலப் பகுதியையே மற்ற நாடுகளைவிடப் பெரிதாகக் காட்டவேண்டும் என்பதாலும் பின்னால் வந்த சீன வரைப் படக் கலைஞர்கள் ஜமால் அல் டின் வரைந்த வரைபடத்தைத் தங்களுக்குப் புரியும் விதத்தில் தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை அளவீடுகளை எடுத்துவிட்டு மாற்றியமைத்துக்கொண்டார்கள். இதன் காரணமாகவே வரைப் படத்தில் மற்ற நாடுகளின் உருவம் மாற்றமடைந்து காணப்படுகிறது. இத்தகைய ஒரு சீன வரைபடத்திலிருந்து படியெடுக்கப்பட்டதே கான்கின்டோ உலக வரைப் படம். இந்த வரைப் படம் ஒன்றைத் தெளிவாக்குகிறது. அது இஸ்லாமியர்களுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் முழு உருவம் பற்றியும் அதற்கு மேற்கில் இருக்கும் அட்லாண்டிக் கடலைப் பற்றியும் அதைத் தாண்டி அமெரிக்கா கண்டத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருந்தது என்பதை. அப்படியிருந்தும் ஏன் ஜமால் அல் டின் சீனர்களுக்கு வரைந்துக�ொடுத்த உலக வரைபடத்தில் அமெரிக்கக் கண்டத்தைக் காணவில்லை என்கிற கேள்வி எழாமல் ப�ோகாது. இதற்கான பதில் சீனர்களின் வானியல் அறிவில்தான் இருக்கிறது. ஜமால் அல் டின் தன்னுடைய வரைப் படத்தைத் துல்லியமான வானியல் முறைப்படி வரைந்து க�ொடுத்த அதாவது அமெரிக்கக் கண்டத்தையும் சேர்த்து வரைந்து க�ொடுத்த வரைபடத்தைப் புரிந்துக�ொள்ள முடியாத சீனர்கள் தீர்க்கரேகை அட்சரேகை அளவுகளை எடுத்துவிட்டு எல்லாக் கண்டங்களையும் ஒரே கண்டமாக மாற்றிவிட்டதால் மேற்கு கடலில் இருக்கும் அமெரிக்கக் கண்டங்கள் சீனர்களின் வரைப் படத்தில் விடுப்பட்டுவிட்டிருக்கவேண்டும். அமெரிக்காவை இஸ்லாமியர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்பதற்கான அடுத்த வரலாற்று ஆதாரமும் ஒரு உலக வரைப் படத்திலிருந்துதான் கிடைக்கிறது. துருக்கிய ஓட்டமான் பேரரசில் தளபதியாக இருந்த பைரி ரெயிஸ் (பைரி ரெயிஸ்) என்பவரால் வரையப்பட்ட உலக வரைபடம் இது. இந்த வரைபடம் எவ்விதச் சந்தேகங்களுக்கும் இடமின்றி அமெரிக்காவின் இரண்டு கண்டங்களையும் ப�ோதாததிற்கு வட துருவம் மற்றும் தென் 66
நவீனா அலெக்சாண்டர்
துருவப் பனிப் பகுதிகளான ஆர்டிக்கையும் அண்டார்டிக்கையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. பைரி ரெயிஸ் இந்த வரை படத்தை ஓட்டமான பேரரசிற்கு வரைந்த காலகட்டங்களில் அமெரிக்கா கண்டம் க�ொலம்பசால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வாஸ்கோடகாமா ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக்கொண்டு இந்தியாவிற்கான கடல் வழிப் பாதையையும் கண்டுபிடித்துவிட்டிருந்தார். அப்படி இருக்கையில் பைரி ரெயிஸ்யின் வரைபடம் எப்படி இஸ்லாமியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததற்கான வரலாற்று ஆதாரமாக முடியும் என்கிற கேள்வி எழும்.
இஸ்லாமியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததற்கான ஆதாரம் இந்த வரைப் படம் வரையப்பட்ட ஆண்டில் இல்லை இந்த வரைபடத்திற்கான மூலத்தைப் பைரி ரெயிஸ் எங்கிருந்து பெற்றார் என்பதில்தான் இருக்கிறது. துருக்கி ஓட்டமான் பேரரசிற்கும் ப�ோர்ச்சுக்கல் நாட்டிற்கும் நடந்த கடல் ப�ோர்களின் ப�ோது தளபதியாக இருந்த பைரி ரெயிஸ்-யிடம் ப�ோர்ச்சுக்கல் ப�ோர் கைதி 67
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
ஒருவர் பிடித்துவரப்பட்டார். அந்தக் கைதியிடம் இருந்த உலக வரைப் படமே அவரைப் பைரி ரெயிஸ் முன் க�ொண்டுவந்து நிறுத்த காரணம். அந்த உலக வரைப் படத்தில் அமெரிக்கக் கண்டம் மிகத் துல்லியமாக வரையப்பட்டிருந்தது. அந்தக் கைதியை மேற்கொண்டு விசாரித்ததில் தெரியவந்தது அவர் க�ொலம்பசின் அமெரிக்கக் கடல் பயணங்களின் ப�ோது க�ொலம்பசுடன் சென்றவர் என்பது. ஒருவேளை க�ொலம்பஸ் தான் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டங்களை வரைபடமாக வரைந்துவைத்திருந்ததை இந்தக் கைதி பிரதியெடுத்துத் தன்னிடம் ஒன்றை வைத்திருந்திருக்கலாம் என்றுதான் முதலில் பைரி ரெயிஸ் நினைத்தார். ஆனால் அந்தக் கைதி மேற்கொண்டு ச�ொன்ன ஒரு தகவல் பைரி ரெயிஸ்-யை தூக்கிவாரிப் ப�ோட வைத்தது. அது க�ொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கக் கிளம்புவதற்கு முன்பே அதாவது 1490-களிலேயே தன்னிடம் இருப்பது ப�ோன்ற அமெரிக்கக் கண்டங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான உலக வரைபடத்தை வைத்திருந்தார் என்பது. அப்படியானால் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது க�ொலம்பஸ் இல்லை என்றாகிறது. இஸ்லாமிய மாலுமிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மிகத் துல்லியமாக வரையப்பட்ட அமெரிக்கக் கண்டம் மற்றும் வட துருவத் தென் துருவப் பகுதிகளை உள்ளடக்கிய உலக வரைபடம் இஸ்லாமிய மத்தியக் கிழக்கில் மாலுமிகளிடையே புழக்கத்திலிருந்திருக்கிறது. துருக்கியர்கள் கான்ஸ்டான்டிந�ோபிலை பிடிப்பதற்கு முன்புவரை மத்தியக் கிழக்கில் த�ொடர்பு வைத்திருந்த இத்தாலிய வரைபடக் கலைஞர்கள் மத்தியக் கிழக்கிலிருந்த உலக வரைப் படத்தைப் படியெடுத்து வரைந்து வைத்திருக்கிறார்கள். இத்தகைய உலக வரைப் படத்தின் அருமை அப்பொழுது பெரிதாக உணரப்படாததால் இத்தாலியில் இந்த வரைபடம் அவ்வளவாக உலகக் கவனத்தை ஈர்க்கவில்லை. மத்தியக் கிழக்கில் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிந�ோபிலை பிடித்ததால் அரசியல் சூழ்நிலை தலைக் கீழானதும் இந்தியாவிற்கான கடல் வழி வணிகத்திற்கான இன்றியமையாத தேவை உண்டானது. அதுவரை கண்டுக�ொள்ளப்படாமல் 68
நவீனா அலெக்சாண்டர்
இருந்த இத்தாலியர்கள் இஸ்லாமியர்களிடமிருந்து படியெடுத்த உலக வரைப் படத்தின் அதி முக்கியத்துவம் உணரப்பட்டது. இத்தாலியில் புழக்கத்திலிருந்த அனைத்து இஸ்லாமிய உலக வரைபடங்களும் பதுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய உலக வரைப் படத்தின் பிரதியைப் பெரும் செல்வந்தர்கள் கூட நெருங்க முடியாத நிலை உருவாகிப்போனது. பதுக்கப்பட்ட இஸ்லாமிய உலக வரைப் படத்தை முதன் முதலில் இரகசியமாகக் கைப்பற்றியவர்கள் ப�ோர்ச்சுகீசியர்கள். ப�ோர்ச்சுகீசியர்களின் வழி க�ொலம்பஸ் தனக்கான ஒருப் பிரதியைப் பெற்றுக்கொண்டார் திருட்டுத்தனமாகத்தான். அன்றைய காலகட்டத்தில் அதாவது 15-ஆம் நூற்றாண்டுகளில் உலக வரைப்பட இரகசியம் எப்படியெல்லாம் திருடப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணம் அல்பர்டோ கான்டின�ோ என்கிற உளவாளி ப�ோர்ச்சுக்கலில் இருந்து கடத்தி சென்ற உலக வரைப் படம். இந்த உலக வரைப் படத்தை வேர்ல்ட் மேப் ஆ அல்பர்டோ கான்டின�ோ (World Map of Alberto Cantino) என்று அழைக்கிறார்கள். இதன் ஆண்டு கி.பி. 1502. இந்த உலக வரைப் படத்தை வரைந்தவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த உலக வரைப் படம் அல்பர்டோ கான்டின�ோவிற்காக வரையப்பட்டது என்பது மாத்திரம் அதன் பின்புறத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. அல்பர்டோ கான்டின�ோ இத்தாலியில் இருக்கும் ப்பெராரா நகரின் பிரபுவிற்காகப் ப�ோர்ச்சுகல் நாட்டில் உளவாளியாக வேலைப் பார்த்தவர். ப�ோர்ச்சுக்கலின் அரசப் பீடம் வரைக்கும் நெருக்கம் க�ொண்டிருந்தவர். அதைப் பயன்படுத்தி இராணுவ இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய உலக வரைப் படங்களில் ஒன்றைப் பிரதியெடுக்க வைத்து அதை இத்தாலிக்கே கடத்தி சென்றார். கி.பி. 14-ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய உலக வரைப் படம் சுதந்திரமாக உலவிய இத்தாலி நாட்டிலேயே பிற்காலத்தில் இஸ்லாமிய உலக வரைப் படம் கிடைப்பது அப்படி ஒரு குதிரைக் க�ொம்பாகிப்போனது. உளவாளியை வைத்துக் கடத்தும் அளவிற்கு நிலை.
69
மாயன் நாகரீகம்
"பிறகு பூமி அவர்களால் படைக்கப்பட்டது. பூமியைப் படைக்க அவர்களின் வார்தை ஒன்றே ப�ோதுமானதாக இருந்தது. பூமியை உண்டாக்க அவர்கள் ‘பூமி’ என்று கூறினார்கள் பூமி உண்டாகிவிட்டது. மேகமும், பனியும் உருவாவதைப்போலப் பூமி உருவாகிவிட்டது. – ப�ோபல் வு (Popol Vuh)”
மீ
ச�ோ அமெரிக்கா, தென்னமெரிக்கா ப�ோன்ற பெயர்களைக் கேள்விப்பட்டிராதவர்களும் கூட அரசல் புரசலாக அறிந்துவைத்திருக்கும் பெயர் மாயன். மாயன் என்பது நாகரீகம் என்கிற அளவிற்கு அறிந்திருக்காவிட்டாலும் அது ஒருவிதமான நாள்காட்டி என்று ப�ோகிற ப�ோக்கில் காதில் வாங்கிச் சென்றிருப்பதும் நடந்திருக்கும். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நன்றி. மாயன் நாள்காட்டி புதிரைக் கருவாக வைத்து வணிகத் திரைப்படங்களை எடுத்து உலகம் முழுவதிலும் திரையிட்டுப் பெரும் இலாபம் பார்த்ததுடன் மாயன் நாள்காட்டி குறித்த ப�ொதுப்புத்தி கட்டுமானத்தையும் செவ்வனே செய்துவிட்டிருந்தது ஹாலிவுட்.
மாயன் நாள்காட்டி என்பது ஓல்மெக் நாகரீகத்திடமிருந்து பெறப்பட்ட ஒன்று என்பதை முன்பே பார்த்திருக்கிற�ோம். ஓல்மெக் நாள்காட்டியின் படி கி.பி. 2012-ல் உலகம் அழிந்துவிடும் என்பது கணக்கு. சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பூமி அழிந்து மீண்டும் உருவாகும் என்பது ஓல்மெக்குகளின் நம்பிக்கை. அதை அவர்கள் வானியலை அடிப்படையாகக் க�ொண்ட தீர்க்கதரிசனமாகத் தங்களின் நாள்காட்டியில் ச�ொல்லி வைத்தார்கள். 70
நவீனா அலெக்சாண்டர்
ஓல்மெக்குளின் நம்பிக்கைப்படி கி.மு. 3114 பூமி த�ோன்றியது. அதிலிருந்து ஐந்தாயிரம் வருடங்களைச் சேர்த்தால் கி.பி. 2012-ல் பூமி அழிந்துவிட வேண்டும். பிறகு மீண்டும் த�ோன்றும். இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலாண்டில் ஓல்மெக்மாயன்களின் இந்த நாள்காட்டி தீர்க்கதரிசனத்தைப் ப�ொதுப்புத்தி பரபரப்பிற்கான மூலதனமாக வைத்துப் புத்தக விற்பனையும், திரைப்பட வணிகமும் திட்டமிட்டு அறுவடை செய்யப்பட்டது. இதன் வழியே மாயன் குறித்த பெயர் ப�ொது வெளியில் பரவலாக அடிபட்டுப் ப�ொதுப்புத்தியின் கவனத்தைப் பெற்றது. அது ப�ோகட்டும். நாம் விசயத்திற்கு வருவ�ோம். மாயன் நாகரீகம் மீச�ோ அமெரிக்காவின் மிகப் பெரும் நாகரீகம். மீச�ோ அமெரிக்கா என்றில்லை வடக்கு தெற்கு என்று ஒட்டும�ொத்த அமெரிக்கக் கண்டத்தின் நாகரீகமாகத் தவறுதலாக அடையாளப்படுத்தப்படக் கூடிய அளவிற்கு முதன்மையான வலிமையான நாகரீகம் மாயன். சுமார் 2000 வருடங்கள் நீடித்த மிக நீண்ட மாயன் நாகரீக நிலப்பகுதிக்குள் ஏறத்தாழ 60 பேரரசுகள் த�ோன்றி மறைந்திருக்கின்றன. மீச�ோ அமெரிக்காவின் கலை, இலக்கியம், ம�ொழி, கட்டிடக் கலை, அரசியல், இராணுவம், சமூகம், கலாச்சாரம் என்று அனைத்திலும் உச்சத்தைத் த�ொட்டது மாயன் நாகரீகம். இரண்டாயிரம் ஆண்டுகளின் பயணத்தில் உச்சம் த�ொட்ட நாகரீகத்தை மிச்சம் மீதியாகத் தேடி எடுக்க வேண்டிய நிலைதான் இருந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில். ஸ்பானியப் படையெடுப்பாளர்களின் (நிலவெறிப் பிடித்த) வஞ்சமும், சூழ்ச்சியும், இரத்த வெறியும் படிந்த ப�ோர்களால் (கி.பி. 1500-கள்) முற்றிலும் வீழ்ச்சியடைந்து யுகட்டான் (Yucatan) மற்றும் பெலிசி (Belize) நிலப்பகுதிகளின் அடர் மழைக் காடுகளுக்குள் காணாமல் ப�ோய்விட்ட மாயன் நாகரீகத்தின் கட்டிட அழிவுகளை இனம் கண்டு வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டியவர்கள் ஜான் லாய்ட் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரெட்டிரிக் கேதர்வுட். இது நிகழ்ந்தது கி.பி. 1839-ல். இன்றைய மெக்சிக்கோவின் தென் கிழக்கு பகுதி (யுகட்டான்), குவாத்தமாலா, பெலிசி, ஹ�ோண்டுராஸ் (Honduras) மற்றும் எல் சால்வடார் (El Salvador) நாடுகளில் பரவிக்கிடந்தது மாயன் நாகரீகம். 71
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
ஓல்மெக் நாகரீகத் த�ோற்றத்திற்கும் சற்று முன்பே மாயன் நாகரீகம் த�ோன்றிவிட்டதாக இரு வேறு கருத்துகள் ஆய்வுலகில் உலா வந்துக�ொண்டிருக்கிறது. இருந்தும் மாயன் நாகரீகத்தின் முதல் பெரும் நகரங்கள் கி.மு. 500 த�ொடங்கியே த�ோற்றம் பெறுகின்றன. அதாவது ஓல்மெக் நாகரீகத்தின் ஒட்டும�ொத்த அழிவிற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக. மீச�ோ அமெரிக்க நாகரீகங்களின் த�ோற்ற மற்றும் வீழ்ச்சிக் காலக்கட்டங்களை ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருப்பதை இரண்டாம் அத்தியாயத்தில் பார்த்திருக்கிற�ோம். அந்தப் பிரிவுகளின் படி பிரி கிளாசிக் காலக்கட்டத்தின் (கி.மு. 1500 – 150) முடிவில் த�ோன்றிய மாயன் நாகரீகம் கிளாசிக் (கி.பி. 250 – 900) காலக்கட்டத்தில் உச்சத்தைத் த�ொட்டு, ப�ோஸ்ட் கிளாசிக் (கி.பி. 900 – 1600) காலக்கட்டத்தில் வீழ்ச்சியடைந்தது. மாயன் நாகரீகத்தை அதன் முழுப் பரிமாணத்துடன் தெரிந்துக�ொள்ள முதலில் அதன் நிலவியல் அமைப்பைக் குறித்து அறிமுகம் செய்துக�ொள்வது அவசியம். வடக்கு, மத்திய, தெற்கு என்று மூன்று பெரும் நிலப்பிரிவுகளை உள்ளடக்கியது மாயன் பேரரசு. தெற்கு நிலப்பகுதி மலை த�ொடர்களைக் க�ொண்ட உயர் நிலம். அதன் தெற்கு கரையில் பசிபிக் பெருங்கடல். மத்தியத் தாழ் நிலப்பகுதி ஈரப்பதம் மிகுந்த வெப்பமண்டலக் காடுகளால் சூழப்பட்டது. வடக்கு வரண்ட தாழ் நிலக் காடுகளைக் க�ொண்டது. மத்தியப் பகுதியைச் சேர்ந்த நக்பே (Nakbe) கி.மு. 500-ல் முதல் மாயன் நகரமாகத் த�ோற்றம் பெற்றது. பிற்பாடு அருகில் இருந்த எல் மிரட�ோர் (El Mirador) நகரம் முழுச் சிறப்பைப் பெற்று மிக முக்கிய மாயன் நகரமாக மாற்றமடைந்தது.
72
நவீனா அலெக்சாண்டர்
அரசு உருவாக்கம், அரசர்கள், அரசுடமை என்கிற செயல்பாடுகள் தெற்கு நிலப்பகுதி நகரங்களில் இருந்து முதன் முதலாக வடிவம் பெற்றது. எல் பவுல் (El Baul) மற்றும் டக்காலிக் அபாஜ் (Takalik Abaj) நகரங்களில் கி.பி. 37 – 126 காலக்கட்டத்தில் மாயன் நாகரீகத்தின் முதல் அரசர்கள் த�ோன்ற த�ொடங்கினார்கள். மாயன் அரசுகள் த�ோன்றிய கைய�ோடு வீழ்ச்சிக்கும் சென்றுவிட்டன. அதாவது கி.பி. 150 – 200 ஆண்டுகளின் இடைவெளியில் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தலையெடுத்த அனைத்து அரசுகளும் காணாமல் ப�ோய்விட்டன. செல்வச் செழிப்பும், உச்ச அதிகாரமும், விண் முட்டும் மிரட்டலான பிரமிட் கட்டிடங்களும் க�ொண்ட நகரங்களை அப்படி அப்படியே ப�ோட்டுவிட்டு மாயன் மக்கள் வெளியேறிவிட்டார்கள். இதற்கான காரணம் தெரியவில்லை. எரிமலை வெடிப்பு அல்லது நிலநடுக்கம் ப�ோன்ற இயற்கை சீற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மீச�ோ நாகரீகத்தின் கிளாசிக் காலக்கட்டத் த�ொடக்கம் என்று வகைப்படுத்தப்படும் கி.பி. 200-ல் மீண்டும் மாயன் அரசுகள் (இம்முறை மத்திய நிலப்பகுதியிலிருந்து அரசுகள் த�ோன்றின) த�ோன்றி அடுத்து வந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு மாயன் நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தின் உச்சம் என்று வகைப்படுத்தக் கூடிய அனைத்துக் காரியங்களையும் நிகழ்த்தின. எந்த ஒரு மீச�ோ அமெரிக்க நிலப்பகுதியும் அதற்கு முன்பு கண்டிராத அளவிற்குக் க�ோடி கணக்கிலான சனத்தொகையுடன் வளர்ச்சி மேல் வளர்ச்சியை ந�ோக்கிச் சென்றன மத்திய நிலப்பகுதி அரசுகள். த�ோன்றினால் அடுத்து மறைந்தே தீரவேண்டும் என்பது இயற்கையின் விதி மாத்திரமல்ல மாயன் அரசுகளின் தலையெழுத்தும் கூட. ஒன்பதாம் நூற்றாண்டின் த�ொடக்கத்தில் மீண்டும் மாயன் அரசுகள் ஆதாள பாதாளத்திற்குச் சென்றன. சுமார் கி.பி. 830-ல் ஏறத்தாழ அனைத்து மத்திய நிலப்பகுதி மாயன் நகரங்களும் மக்கள் இல்லாமல் வெறிச்சோடிவிட்டன. ஒரு சில பத்தாண்டுகளுக்குள்ளாகக் க�ோடிகளில் இருந்த சனத்தொகை வண்டி வண்டியாக நகரங்களைக் காலி செய்துக�ொண்டு வெளியேறியதற்கான வரலாற்று பின் புலத்தை அறிந்துக�ொள்ள முடியவில்லை. இதைத் த�ொடர்ந்து மீச�ோ அமெரிக்காவின் ப�ோஸ்ட் கிளாசிக் காலக்கட்டம் (கி.பி. 900 – 1200) த�ொடங்குகிறது. இம்முறை மாயன் நிலப்பகுதியின் வடக்கிலும் தெற்கிலும் புதிய மாயன் அரசுகள் வலிமை பெறுகின்றன. 73
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
வடக்கின் சிச்சன் இட்சா (Chichen Itza) நகரம் மாயன் அதிகாரத்தின் அடையாளமாக வளர்ந்தது. அதே காலக்கட்டத்தில் மெக்சிக்கோவின் மத்திய நிலப்பகுதியில் பேரரசாக இருந்த ட�ோல்டெக்குகளுடன் சிச்சன் இட்சா மாயன்களுக்குக் கலை, அரசியல், சமூகம் என்று அனைத்து நிலைகளிலும் த�ொடர்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக மாயன் நாகரீக வட நிலப்பகுதியில் மாயன்-மெக்சிக்கோ த�ொடர்பில் உருவான புதிய வகையான கலை வெளிப்பாடுகளைப் பார்க்க முடிகிறது. இந்த நிலை அடுத்து முன்னூறு வருடங்களுக்கே நீடித்தது. ப�ோஸ்ட் கிளாசிக் என்று அறியப்படும் (கி.பி. 1200 – 1697) காலக்கட்டத்தில் சிச்சின் இட்சா அரசின் வீழ்ச்சி த�ொடங்கிவிட்டது. சிச்சின் இட்சா அரசை மூட்டை கட்டி அனுப்பிவிட்டு அந்த இடத்தில் மாயப்பான் அரசு வந்து சேர்ந்தது. மத்திய நிலப்பகுதி கிளாசிக் காலக்கட்டத்திலேயே மக்களின்றி வெறுமையாகிவிட்டிருந்ததால் அங்கே எப்படியான புதிய மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. தெற்கில் நிலை வேறு மாதிரியாக இருந்தது. மேற்கிலிருந்து த�ொடர்ச்சியாக மக்களின் இடப்பெயர்வு நிகழ்ந்தபடி இருந்தது தெற்கு மாயன் அரசுகளுக்குப் பெரும் குடைச்சலைக் க�ொடுத்துக்கொண்டிருந்தது. கிளாசிக் மற்றும் ப�ோஸ்ட் கிளாசிக் காலக்கட்டங்களில் வலிமையாக இருந்த தெற்கு மாயன் அரசான க்குவிச்சி (Quice), கக்சிக்குவல் (Cakchiquel) அரசால் வீழ்த்தப்பட்டது. இறுதியாக ஸ்பானியப் படையெடுப்பின் விளைவாகக் கி.பி. 1697-ல் ம�ொத்த மாயன் நாகரீகமும் ஒரேயடியாக அழித்தொழிக்கப்பட்டது. மீண்டும் எழுந்தே வர முடியாத அளவிற்கு. மாயன் என்கிற வார்த்தைக்கும் மாய�ோன் என்கிற தமிழ் வார்த்தைக்குமான த�ொடர்பைக் காக்கைகளுக்குப் படைத்துவிடுவ�ோம். நிச்சயமாக நாம் அப்படியான ம�ொழி ஆராய்ச்சிகளில் எல்லாம் ஈடுபட்டு நம்முடைய நேரத்தை வீணடிக்கக் கூடிய மூடர்கள் இல்லை என்பதாலும் நமக்குச் சினிமா பாடல் கவிகளின் வார்தை ஜாலங்களைத் தூர் வாருவதற்கே நூற்றாண்டுகள் ப�ோதாமல் இருப்பதின் காரணமாகவும் வரலாற்று ஆய்வுகளைக் காக்கைகளுக்குத் திண்ணக் க�ொடுத்துவிடுவதே சான்றோர் செயலாக இருக்கும். பாதி வேட்டை மீதி த�ோட்ட 74
நவீனா அலெக்சாண்டர்
உணவு உற்பத்தி என்று மாயன் நிலப்பகுதிகளில் சுற்றி அலைந்த மாயன்களின் த�ொடக்கக் காலக் கிராமக் குடியிருப்புகளைக் கி.மு. 1800 த�ொடங்கிப் பார்க்க முடிகின்றது. கிராமக் குடியிருப்புகள் என்றால் குறிப்பிட்ட பகுதியில் நானூறு ஐந்நூறு வீடுகள் இருக்கும் என்கிற ப�ொருளுக்குள் சென்றுவிட வேண்டாம். ஒரு கில�ோ மீட்டருக்கு ஒரு வீடு என்கிற அளவிலேயே த�ொடக்கக் கால மாயன் கிராமக் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. மாயா என்கிற இனக் குழு பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. சில ஆய்வாளர்கள் மாயா என்பது யுகட்டான் நிலப்பகுதியைக் குறிக்கும் ச�ொல் என்றும் மற்றும் சிலர் ம�ொழியை அடையாளப்படுத்தும் ச�ொல் என்றும் கருதுகிறார்கள். எந்த ஆய்வு எப்படிக் குடி முழுகினால் நமக்கென்ன மாய�ோனுக்கும் மாயனுக்கும் இருக்கும் நெருங்கிய த�ொடர்பைக் கண்டும் காணாமல் ப�ோய்விடுவதுதானே நம்முடைய வரலாற்று கடமையாக இருக்கும். மாய�ோன் மேயக் காடுறை உலகமும் என்று த�ொல்காப்பியம் முல்லை நில மக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டுகிறது. முல்லை நில வாழ்கை என்பது கால் பகுதி, குறிப்பிட்ட காலம் வரை ஓரிடத்தில் தங்கியிருப்பது, அடுத்த கால் பகுதி அலைந்து திரிந்து வேட்டையாடி உணவுகளைச் சேகரிப்பது, மற்றொரு கால் பகுதி கால் நடைகளைப் பழக்கி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, இறுதி கால் பகுதி பருவ நிலை விவசாயத்தில் ஈடுபடுவது. மிகச் சரியாக இந்த வாழ்கை முறையைத்தான் பிரி கிளாசிக் காலக்கட்ட மாயன் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். சரி இதற்கும் மேல் நாம் என்னத்தான் உறைத்து ஊற்றினாலும் த�ொல்காப்பிய மாய�ோனுக்கும் மாயனுக்குமான த�ொடர்பைக் கண்டுக�ொள்ள ஆள் இருக்கப்போவதில்லை என்பதால் மாயன் நாகரீகப் பேரரசுகளையும் அதன் பேரரசர்களையும் குறித்துத் தெரிந்துக�ொள்ளும் வேலையைப் பார்ப்போம். அதற்கு முன்பாக ஒன்றைத் தெரிந்துக�ொள்வது அவசியம், அது சில மாயன் பேரரசர்களின் பெயர்களிலும் கூடத் தமிழ் வாடைத் தெளிவாகவே அடிக்கும் என்பது. டாஸ்மாக் வாடை அடித்தால் என்ன ஏது என்று 75
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
எட்டி பார்ப்பதில் ஒரு உபய�ோகம் இருக்கிறது இந்த வாடையை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம் என்று ஆதங்கப்பட்டால் அதுவும் சரிதான். டிக்கால், ட�ோஸ் பிலாஸ், நரன்ஜோ, கரக�ோல், கலாக்முல், யாக்ஸ்சிலான், பெயிட்ராஸ் நெக்ராஸ், பலான்கியூ, ட�ோனினா, க�ோபான், குயிரிகுவா இவைகள் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகால மாயன் நாகரீகத்தின் மிகப் பெரும் கலை, இராணுவ, கலாச்சார நகரங்களாகத் திகழ்ந்தவைகள். இந்த நகரங்களின் தனிச் சிறப்புகளையும் அதன் அரசர்களையும் அவர்களின் சுவாரசியமான அரசியல் முடிவுகள் மற்றும் நகர்வுகளையும், அவர்களின் உயிர்களைக் காவு வாங்கிய ப�ோர்களையும் குறித்து ஒவ்வொன்றாகப் பார்ப்போம். டிக்கால் (Tikal). மத்திய நிலப்பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய நகரம். உச்ச நிலைகளையும், வெற்றிகளையும், த�ோல்விகளையும், பேரழிவுகளையும் சந்தித்த இந்த நகரம் சுமார் 800 ஆண்டுகள் மத்திய மாயன் நிலப்பகுதியின் அதிகாரக் குவியல் க�ொண்ட நகரமாக இருந்திருக்கிறது. எட்டு நூற்றாண்டுகளில் 33 பேரரசர்கள் இதை ஆட்சி செய்து மறைந்திருக்கிறார்கள். கிருத்தவ சகாப்தத்தின் முதலாம் நூற்றாண்டுத் த�ொடங்கி டிக்கலில் பேரரசுக்கான அரசியல் சூழ்நிலைகள் உருவாகிவிட்டதற்கான எழுத்து ஆதாரங்கள் கிடைக்கின்றன. டிக்காலின் முதல் அரசரைப் பற்றி தெரிந்துக�ொள்வதற்கு முன்பாக மாயன் ஆட்சி அமைப்பைக் குறித்துச் சிறிதாக ஒன்றை உள்வாங்கிக்கொள்வது அவசியம். நம்முடைய வரலாற்றில் சிற்றரசர்கள் என்று அடையாளப்படுத்தக் கூடியவர்களையே மாயன் நாகரீகத்தில் பேரரசர்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். பல நகரங்களை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்புகள் க�ொண்டதல்ல மாயன் பேரரசர்களின், பேரரசு. ஒன்று அல்லது இரண்டு முக்கிய நகரங்களை அது சார்ந்த விவசாய உற்பத்தி நிலங்களை மட்டுமே க�ொண்டது மாயன் பேரரசு என்பது. டிக்காலின் முதல் அரசராகக் கருதப்படுபவர் யாக்ஸ் எப் சூக் (Yax Ehb Xook). இவருடைய ஆட்சியாண்டு குறித்து மிகச் 76
நவீனா அலெக்சாண்டர்
சரியாகத் தெரியவில்லை. யாக்ஸ் எப் சூக் என்கிற பெயர் மாத்திரமே கல்வெட்டுகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. (மாயன் நாகரீகப் பேரரசர்களின் பெயர் பட்டியல் பின்னிணைப்பில் க�ொடுக்கப்பட்டிருக்கிறது). அரசர்களை அஜாவ் (ajaw) என்கிற வார்த்தையில் குறிப்பிடுவது மாயன் வழக்கு. அதேப்போலச் சக் ட�ோக் இச்சா (Chak Tok Ich’aak) என்கிற பெயர் அரசர்களின் சிறப்பு பெயராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அஜாவ் யாக்ஸ் எப் சூக்க்கு அடுத்து யார் ஆட்சிக்கு வந்தது டிக்கலில் என்ன மாதரியான அரசியல் நிலை என்பது குறித்தெல்லாம் அறியக் கிடைக்கவில்லை. சுமார் கி.பி. 292 த�ொடங்கி டிக்கால் அஜாவ்களின் ஆட்சியாண்டுகளுக்கு உரியக் கல்வெட்டுகள் கிடைக்கத்தொடங்கிவிடுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் டிக்கலில் இருக்கும் 24 பிரமிட் கட்டிடங்களில் இருந்து நமக்குக் கிடைக்கின்றன. சிவாஜ் சான் காவில் I (Sihyaj Chan K’awiil I) பதின�ோராவது அஜாவாக பதவியேற்றுக்கொண்டதில் இருந்து த�ொடர்ச்சியான அஜாவ் பெயர்களை அடையாளம் காண முடிகிறது. சிவாஜ் சான் காவில் I-ன் ஆட்சி காலத்தில் ச�ொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லையென்றாலும் அவருடைய பெயர் தமிழ் வார்த்தையான ‘க�ோ’-வுடன் ஒப்பு ந�ோக்கத்தக்கது. கா மற்றும் க�ோ என்கிற தமிழ் வார்த்தைகள் அரசனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது. க�ோவில் என்பது அரசன் வாழும் இடத்தைக் குறிப்பது என்பதையும், க�ோவில் என்பது காவில் என்பதாகத் திரியக் கூடிய வாய்ப்புகள் இருப்பதையும், மாயன் ம�ொழியிலும் கா (க�ோ-வின் மருவிய வடிவமாக இருக்கலாம்) என்பது அரசனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதையும் நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிட முடியாது. இருந்தாலும் சென்றுதான் ஆக வேண்டும். காரணம் நம்முடைய வரலாற்று தேடலும், ஆய்வுத் திறனும் அப்படியானது என்பதால். சக் ட�ோக் இச்சா I, கி.பி. 360-ல் பதிநான்காவது அஜாவாக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய மாயன் சிறப்பு பெயர் மாத்திரமே அறியக் கிடைக்கிறது. உண்மை பெயர் என்னவென்பது தெரியவில்லை. பிரி கிளாசிக் காலகட்டத்தைய டிக்காலின் சிறப்பு இவரிலிருந்தே த�ொடங்குகிறது. மேற்கில் (630 மைல் த�ொலைவில்) 77
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மெக்சிக்கோவின் மையப் பகுதியில் சமகாலத்தில் வலிமைய�ோடு இருந்த டிய�ோடியுஹாக்கான் (Teotihuacan) பேரரசுடன் டிக்காலுக்கு நெருங்கிய வணிக மற்றும் அரசியல் த�ொடர்புகள் ஏற்பட்டது சக் ட�ோக் இச்சா I-யின் ஆட்சி காலத்தில். அந்தத் த�ொடர்பே அவருக்கும் டிக்காலுக்கும் வினையாகவும் முடிந்துவிட்டது. மாயன் டிக்காலின் அனைத்துக் கலைகளிலும் மத்திய மெக்சிக்க (டிய�ோடியுஹாக்கான்) நிலப்பகுதியின் அம்சங்கள் கலக்கத் த�ொடங்கியது இந்தக் காலக்கட்டத்தில்தான். இரண்டு பேரரசுகளுக்கும் வணிக மற்றும் கலை த�ொடர்புகளையும் தாண்டிப் பெண் க�ொண்டு க�ொடுக்கும் திருமண உறவுகளும் கூட இருந்திருக்கிறது. மாயன் வாழ்கை முறை மற்றும் கலாச்சாரத்தை முழுங்கிவிட்டு மெக்சிக்க டிய�ோடியுஹாக்கான் கலாச்சாரத்தின் கை எங்கும் ஓங்கியிருக்கும் அளவிற்கு வெளிநாட்டு ஆதிக்கம் டிக்கலில் அதிகரித்துவிட்டிருந்தது. மரணத்தைத் தழுவிக் க�ொள்வதற்கு முன்பாகச் சக் ட�ோக் இச்சா I செய்த மிக முக்கியக் காரியங்களில்
ஒன்று முண்டோ பெர்டிட�ோ (Mundo Perdido) என்கிற மிகப் பெரும் பிரமிட் வளாகத்தைப் புதுப்பித்ததாகும். அந்தப் பிரமிடைப் புதுப்பித்த கைய�ோடு அவருடைய தலைக் 78
நவீனா அலெக்சாண்டர்
காவு வாங்கப்பட்டது. டிய�ோடியுஹாக்கான் பேரரசுடன் திருமண உறவு வைத்திருந்தும் கூட அதன் படையெடுப்பிலிருந்து மாயன் டிக்கலால் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. டிய�ோடியுஹாக்கான் அரசன் சியாஜ் காஹாக் (Sihyaj K’ahk) 13 ஜனவரி, கி.பி. 378-ல் டிக்கால் நகருக்குள் வெற்றி பவனி வந்ததாக டிக்கால் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதே நாளில் சக் ட�ோக் இச்சா I நீருக்குள் அமிழ்ந்துவிட்டதாகவும் கல்வெட்டுகள் ச�ொல்கின்றன. மாயன் ச�ொல்லாடலில் நீருக்கும் அமிழ்வது என்றால் பரல�ோகம் செல்வது என்று ப�ொருள். சியாஜ் காஹாக்கின் படையெடுப்பு டிக்காலுடன் நின்றுவிடாமல் அதனைச் சுற்றியிருந்த மற்ற சிறிய நகரங்களையும் (எல் என்கான்டா, க�ோர�ோசால், எல் டெம்பிள�ோர் மற்றும் உக்சாக்டுன்) முழுங்கியது. நிற்க. மெக்சிக்க டிய�ோடியுஹாக்கான் இனக் குழு மக்கள் மாயன் இனக் குழுவிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். அவர்களுடைய பெயர்கள் த�ொடங்கி இந்த வித்தியாசத்தை மிகத் தெளிவாக அறிய முடியும். அப்படியிருக்கையில் படு தெளிவாகப் பெயரிலேயே மாயன் இனக் குழு வாடை அடிக்கும் சியாஜ் காஹாக்கை மெக்சிக்க டிய�ோடியுஹாக்கான் என்று குறிப்பிடுவது எப்படிப் ப�ொருந்தும் என்று இன்றைய ஆய்வாளர்கள் முழித்துக்கொண்டிருந்த சமயத்தில் கிடைத்தது ஜேட் (jade) கல் ஆபரணம் ஒன்று. அதில் ஸ்பியர்த்தோரவர் ஹவுல் (Spearthrower Owl) என்கிற பெயர் சியாஜ் காஹாக் பெயருடன் குறிப்பிடப்படுகிறது. அத�ோடு மாத்திரமல்லாமல் அடுத்த டிக்கால் அஜாவான யாக்ஸ் நுன் ஆஹின் (Yax Nuun Ahiin I - கி.பி. 379 – 404) தந்தையாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதும் ஸ்பியர்த்தோரவர் ஹவுலே. இதிலிருந்து நமக்கு அறியக் கிடைக்கும் சங்கதி சியாஜ் காஹாக் மாயன் டிக்கால் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். டிக்காலின் அடுத்த பேரரசு வாரிசுப் ப�ோட்டியில் வெற்றிபெற முடியாமல் டிக்காலில் இருந்து வெளியேறி மெக்சிக்கோவின் டிய�ோடியுஹாக்கான் பேரரசில் தஞ்சமடைந்திருக்க வேண்டும். மாயன் பேரரசைப் ப�ொறுத்தவரையில் மூத்த ஆண் மகனுக்கே பேரரசு வாரிசுரிமை. மற்றவர்கள் அதில் ப�ோட்டியிட முடியாது. கனவிலும் கூட அது நடக்க முடியாது. 79
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
பேரரசர் சக் ட�ோக் இச்சா I-க்கும் சியாஜ் காஹாக்குக்கும் என்ன விதமான உறவு முறை த�ொடர்பு என்பதை அறிய முடியவில்லை. டிக்கால் கல்வெட்டுகள் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால் சியாஜ் காஹாக் டிக்காலை காட்டிக்கொடுத்திருப்பதும் மட்டும் தெளிவாகவே தெரிகிறது. டிய�ோடியுஹாக்கான் பேரரசிற்குத் தப்பிய�ோ அல்லது வெளியேறிய�ோ ப�ோய்த் தஞ்சம் புகுந்திருந்த சியாஜ் காஹாக் டிக்கால் பேரரசின் இராணுவப் பலங்களையும் பலகீனங்களையும் டிய�ோடியுஹாக்கான் அரசன் ஸ்பியர்த்தோரவர் ஹவுலிடம் விலாவாரியாகக் கக்கியிருக்க வேண்டும். அப்போது நான்கு திசையிலும் பேரரசை விரிவாக்கும் முயற்சியில் இருந்த டிய�ோடியுஹாக்கான் பேரரசு வராது வந்த மாமணியாகச் சியாஜ் காஹாக்கை வைத்துக் காரியத்தை முடித்துக்கொண்டுவிட்டது. அவனைக் கேடயமாக முன்னிறுத்தி டிக்காலுக்குள் நுழைந்த டிய�ோடியுஹாக்கான் இராணுவத்திற்குத் தலைமை தாங்கி வந்தது ஸ்பியர்த்தோரவர் ஹவுல். டிக்காலை வீழ்த்திய பிறகு அதன் பேரரசு மணி முடி தனக்குத்தான் என்று திட்டமிட்டிருந்த சியாஜ் காஹாக்கின் தலையில் இடிதான் இறுதியில் இறங்கியிருக்க வேண்டும் காரணம், ஸ்பியர்த்தோரவர் ஹவுலின் மகனான யாக்ஸ் நுன் ஆஹினுக்கு டிக்காலின் பேரரசாக முடி சூட்டியது சியாஜ் காஹாக். ஸ்பியர்த்தோரவர் ஹவுலுக்கும் டிக்கால் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் (அந்தப் பெண் யார் என்பது தெரியவில்லை) பிறந்தவன் யாக்ஸ் நுன் ஆஹின். இது நிகழ்ந்து அடுத்த நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு வாரிசுரிமை சண்டை டிக்கால் பேரரசில் நிகழ்ந்தது. இந்தச் சண்டையின் காரணமாக முதன் முறையாக டிக்கால் நகரின் பேரரசாக ஒரு பெண் பதவிக்கு வந்தது நடந்தது. அது குறித்து அடுத்துப் பார்ப்போம்.
80
க�ொலம்பஸ் கைங்கரியம்
"நம் கனவுகளில் வரும் கற்பனைகளைவிட நிஜ வாழ்க்கையிடம் நிறையக் கனவுகள் இருக்கின்றன. – கிறிஸ்டோபர் க�ொலம்பஸ்"
உ
லகம் த�ொடங்கிய காலம் முதல் 15-ஆம் நூற்றாண்டின் த�ொடக்கம் முடியக் கடலில் அதாவது அட்லாண்டிக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்கள் த�ொடர்பாக அரிதான வரலாற்று ஆவணம் ஒன்றை 15-ஆம் நூற்றாண்டுகளில் புத்தகமாக வெளியிட்டவர் அண்டோனிய�ோ கால்வான�ோ. இந்தப் பெயரில்தான் அவரை ஆங்கிலேயர்களுக்குத் தெரியும். அவருடைய பெயர் அண்டோனிய�ோ கால்வோ. அந்தப் புத்தகத்தின் பெயர் டிரிட்டி ஆ டிஸ்கவரி (Treaty of Discovery).
ப�ோர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர். ப�ோர்ச்சுகீசிய படை வீரராகத் தன் வாழ்வைத் த�ொடங்கிப் ப�ோர்ச்சுகீசிய அரசாங்கத்தின் சார்பில் மலுக்கு (Maluku) தீவுகளின் அதிகாரியாக உயர்ந்தவர். சிறந்த வரலாற்று தேடல் மற்றும் அறிவு படைத்தவர். இதன் வெளிப்பாடே அன்றைய கடற் பயணங்கள் குறித்த மிக விரிவான அதே சமயத்தில் ஒரு முழுமையான வரலாற்று புத்தகத்தை இவரால் வெளியிட முடிந்தது. பின்நவீனத்துவக் காலத்தின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இவருக்கும் க�ொலம்பசுக்கும் என்னத் த�ொடர்பு? இருவருக்கும் நேரடி த�ொடர்பு என்று எதுவும் இல்லை. க�ொலம்பஸ் புதிய உலகம் தேடிப் புறப்பட்ட 1492-ல் கால்வன�ோ இரண்டு வயது சிறுவன். விசயம் கால்வன�ோ எழுதிய புத்தகத்தில்தான் இருக்கிறது. கால்வான�ோ தன்னுடைய வரலாற்று புத்தகத்தில் உலக வரைப் 81
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
படம் ஒன்றைப் பற்றி ப�ோகிற ப�ோக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார். ப�ோகிற ப�ோக்கில் என்று நாம் ச�ொல்லிவிட்டாலும் உண்மை நிலவரம் அதுவல்ல. அன்றைய மேற்குலகின் ப�ொக்கிசம் அந்த உலக வரைப் படம். துருக்கியர்கள் கான்ஸ்டான்டிந�ோபிலை இழுத்து மூடிய பிறகு மேற்க்குலகம் இந்தியாவிற்கான கடல் வழியைத் தேடி நாயாய்ப் பேயாய் அடித்துக்கொண்டு திரிந்த காலகட்டங்களில் இத்தகைய ஒரு உலக வரைப் படம் ப�ொக்கிசமாகத்தானே இருக்க முடியும். அதிலும் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையான நன்னம்பிக்கை முனைக்கும் தென் அமெரிக்காவின் தென் க�ோடி முனையில் இருக்கும் ஸ்டிரெய்ட் ஆ மெகாலன் (Strait of Megalla)n-க்குமான கடல் வழிப் பயணப் பாதையை அந்த வரைப் படம் துல்லியமாகக் க�ொடுத்தால் கேட்கவா வேண்டும். கால்வான�ோ குறிப்பிடும் இந்த உலக வரைப் படத்தின் அதி முக்கியத்துவத்தையும் க�ொலம்பசின் புதிய உலகக் கண்டுபிடிப்பு திட்டம் உண்மையில் அவருடையதுதானா என்பதைப் பற்றியும் முழுதும் புரிந்துக�ொள்ள நமக்கு அன்றைய மேற்குலகின் வரலாற்றைப் பற்றி தெரிந்து க�ொள்வது அவசியமாகிறது. வரலாறு என்றால் வாயைப் பிளந்து க�ொட்டாவி விடும் அளவிற்கான நீண்ட நெடிய வரலாறெல்லாம் இல்லை. ஒரு சில விசயங்களைத் தெரிந்துக�ொண்டால் ப�ோதுமானது. மேற்குலகம் இந்தியாவுடன் தரைவழியாக வணிகம் செய்யப் பெரிதும் நம்பியிருந்தது கான்ஸ்டாண்டிந�ோபிலை. இன்றைக்கு இது துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகரம். துருக்கியர்கள் இந்த நகரைப் பிடிப்பதற்கு முன்பு வரை அதாவது 1453-களுக்கு முன்பு வரை மேற்குலகத்தினர் இந்தியாவிற்கான கடல் வழிப் பற்றிப் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அப்படி ஒன்று இருக்கக் கூடம் என்கிற எண்ணம் கூட அவர்களைப் ப�ொறுத்தவரை வேலையெத்த வேலை. இத்தகைய ஆண்டுகளில் எந்த உலக வரைப் படம் எந்த நாட்டிற்கான கடல் வழியைப் பற்றி குறித்தாலும் மேற்குலகத்தினரைப் ப�ொறுத்த வரைக்கும் அது ஒப்புக்குப் பெறாத விசயம். அதை 82
நவீனா அலெக்சாண்டர்
வைத்துக்கொண்டு நாக்கைக் கூட வழிந்துக�ொள்ள முடியாது என்றே அவர்கள் பெரும்பாலும் ச�ொல்லியிருப்பார்கள். ஆனால் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிந�ோபிலை கைப்பற்றி மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்குமான வணிக வழியை அடைத்துவிட்ட பிறகு நாக்கு வழிக்க கூடப் பயன்படாது என்று கருதிய சிறு சிறு கடல் வழி பயண வரை படங்களுக்கு எல்லாம் நாக்கைத் த�ொங்கப் ப�ோட்டுக்கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தியாவிற்கான கடல் வழிப் ப�ோட்டியில் முதலில் காலை வைத்து வெற்றி பெற்றது ப�ோர்ச்சுகீசிய நாடு. ஸ்பெயின் நாட்டிற்குள் இருக்கும் தம்மாத்துண்டு நாடு ப�ோர்ச்சுக்கல். பெரிய பெரிய சாம்பவான் நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி ப�ோன்றவைகள் கண்ணைக் கட்டிக் கடலில் விட்டக் கதையாக இந்தக் கடல் வழி இந்தியாவுக்குப் ப�ோகும�ோ, அந்தக் கடல் வழி சீனாவுக்கும் ப�ோகும�ோ என்று தடவிக்கொண்டு இருக்கப் ப�ோர்ச்சுகீசிய மாலுமிகள் மட்டும் கடலில் இறங்கி இந்தியாவிற்கான கடல் வழித் தேடலில் கில்லியாக வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார்கள். ப�ோர்ச்சுகீசிய மாலுமிகள் கடல் வழிப் பயணங்களில் ச�ொல்லியடித்த கில்லி வெற்றிகளுக்குக் காரணம் கால்வான�ோ குறிப்பிடும் அந்த உலக வரைப் படம். துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிந�ோபிலை மூடுவதற்கு முன்பே அதாவது 1453-களுக்கு முன்பே இந்த உலக வரைப் படம் ப�ோர்ச்சுகீசியர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இந்த வரைப் படத்தின் முக்கியத்துவம் நாம் மேலே பார்த்தபடி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த அதி முக்கிய உலக வரைப் படத்தைப் ப�ோர்ச்சுக்கலுக்குக் க�ொண்டு வந்து சேர்த்தவர் ட�ோம் பெட்ரோ. இவர் ஹென்ரி தி நேவிகேட்டர் என்று புகழ்பெற்ற ப�ோர்ச்சுகீசிய இளவரசரின் தம்பி. பெட்ரோ ஊர் சுற்றித் திரிவதில் விருப்பம் உடையவர். அதே ப�ோல ஹென்ரிக்கு கடலில் சுற்றுவது என்றால் விருப்பம். பெட்ரோ இப்படி இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ர�ோம் என்று ஊர் சுற்றித் திரும்பும் வழியில் இந்த உலக வரைப் படத்தைப் 83
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
பார்த்திருக்கிறார். (இவைகளைக் கால்வான�ோ வரலாற்று புத்தகத்தில் குறிப்பிடுகிறார்).
தன்னுடைய
அவர் இந்த வரைப் படத்தை எங்குப் பார்த்தார் என்பதைப் பற்றிய தகவல் இல்லை. ஆனால் இந்த உலக வரைப் படத்தில் பல புதிய நாடுகளுக்கு அதுவரை மேற்குலகம் அறிந்திராத நாடுகளுக்கு எல்லாம் பெயரும் கடல் வழியும் குறிக்கப்பட்டிருந்ததால் தன் சக�ோதரனுக்கு இந்த வரைப் படம் மிகவும் பிடிக்கும் என்று பெட்ரோ இந்த வரைப் படத்தை Henry-க்காக எடுத்து வந்தார். இந்த உலக வரைப் படம் ப�ோர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்த பிறகே ப�ோர்ச்சுகீசியர்களின் கடல் பயணங்களில் புதிய மாற்றம் த�ொடங்கிவிட்டது. ஒருவேளை இந்த உலக வரைப் படமே ஹென்ரிக்கு தி நேவிகேட்டர் என்கிற பட்டத்தையும் வாங்கிக் க�ொடுத்திருக்கலாம். கான்ஸ்டாண்டிந�ோபில் மூடப்பட்டதும் உடனடியாக இந்த உலக வரைப் படத்தின் முக்கியத்துவம் ப�ோர்ச்சுகீசிய அரசப் பீடத்திற்குப் புரிந்துவிட்டது. மிகப் பெரிய புதையல் ப�ொக்கிசமே தங்களின் கைகளில் சர்வச் சாதாரணமாக இருப்பதை அவர்கள் உணர்ந்துக�ொள்ள அவர்களுக்குக் கிளி ச�ோசியமெல்லாம் பார்க்கவேண்டியிருந்திருக்காது. ப�ோர்ச்சுகீசிய அரசு உடனடியாக இந்த வரை படத்தை அரசாங்க இரகசியங்களில் ஒன்றாக்கிவிட்டது. ப�ோர்ச்சுகீசிய அரசர்களின் இரகசிய நூலகத்திற்குக் க�ொண்டு செல்லப்பட்டுவிட்டது. கான்ஸ்டாண்டிந�ோபில் மூடப்படும் காலத்திற்கு முன்பு வரை இந்த வரைப் படத்தை வைத்துக்கொண்டு கடலில் உல்லாசப் பயணம் ப�ோய் வந்துக�ொண்டிருந்த மாலுமிகளுக்கு எல்லாம் வாய்ப்பூட்டு ப�ோடப்பட்டுவிட்டது. இந்த வரைப் படத்தைப் பற்றி வாயைத் திறந்தால் ஒரேயடியாக வாயைப் பிளந்துக�ொண்டுவிடவேண்டியதுதான். அப்படி மீறிச் செய்தால் செய்பவருக்குப் ப�ோர்ச்சுகீசிய அரசாங்கமே அதன் ச�ொந்தச் செலவில் மூன்றாம் நாள் பாலை ஊற்றிவிடும். ப�ோர்ச்சுகீசிய அரசாங்கமே நம்பகமானவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த வரைப் படத்தில் கண்டிருக்கும் நாடுகளின் வழியாக 84
நவீனா அலெக்சாண்டர்
இந்தியாவிற்கான கடல் வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் ப�ொறுப்பை ஒப்படைத்தது. ப�ோர்ச்சுகீசிய மாலுமிகளுக்கு இருந்த வேலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அந்த வரைப் படம் சுட்டிக்காட்டும் வழியாக எப்படியாவது செல்வது. புதிதாக எதையும் கண்டுபிடிக்கவேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இங்கேதான் க�ொலம்பஸ் வருகிறார். க�ொலம்பஸ் பிறந்தது இத்தாலியில் உள்ள ஜெனிவாவில். ஆனால் அதுவே சர்ச்சைக்குரிய விசயம் என்பது வேறு விசயம். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் இப்பொழுது புதிதாகக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். நமக்குக் க�ொலம்பசின் பிறப்பு குறித்த அவசியம் இந்தக் கட்டுரையில் இல்லாததால் அதைவிட்டுக் விட்டு க�ொலம்பசின் விருப்பத்தைப் பற்றி பார்ப்போம். க�ொலம்பசுக்கு கடலில் சுற்றித் திரிவது என்றால் க�ொல்லை ஆசை. கடலே அவரது வீடு. கடலின் மீதிருந்த அவருடைய காதலே அவருக்கு மிக இளம் வயதிலேயே மிகச் சிறந்த கடல�ோடி என்கிற புகழைப் பெற்றுத் தந்தது. இந்தப் புகழை வைத்துக்கொண்டு எப்படிப் பணம் ஈட்டுவது என்பதிலும் க�ொலம்பசுக்கு ஒரு தெளிவு அந்த வயதிலேயே வந்துவிட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் சிறந்த கடல�ோடி ஆக வேண்டும் என்றால் கடலின் ப�ோக்கை மிகத் துல்லியமாக உள் உணர்வின் மூலம் கணிக்கும் இயல்பு பெற்றிருக்கவேண்டும். அவர் இந்தப் புகழுடன் ப�ோர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பேனில் (Lisbon) 25 வயதில் தன்னுடைய சக�ோதரனுடன் வந்து குடியேறினார். லிஸ்பேனில் அவருக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா உலக வரைப் படங்களைப் படியெடுப்பது. ப�ோர்ச்சுகல் அரசாங்கம் தன் கையிருப்பில் வைத்திருக்கும் உலக வரைப் படங்களைப் படியெடுத்து மாலுமிகளுக்குக் க�ொடுத்துக்கொண்டிருந்தது. அந்த வேலையில்தான் க�ொலம்பஸ் ப�ோய் உட்கார்ந்தார். ஆனால் க�ொலம்பஸ் இந்த வேலைக்கு வரும் காலத்திற்கு முன்பே ப�ோர்ச்சுகல் அரசாங்கம் அந்த அதி முக்கியமான உலக வரைபடத்தை இராணுவ இரகசிய ஆவணமாகப் பதுக்கிவிட்டிருந்தாலும் க�ொலம்பஸ் அதை ம�ோப்பம் பிடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் இள வயதும், திறமையும், 85
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
அறிவும் ஒன்றாகப் பெற்றிருந்த க�ொலம்பஸ் ப�ோன்ற ஒருவருக்கு அதுவரையில் புழக்கத்திலிருந்து திடீரென்று பதுக்கப்பட்டுவிட்ட ஒரு வரைப் படத்தின் முக்கியத்துவம் குறித்து அனுமானிப்பது பெரிய விசயமாக இருந்திருக்காது. அதுவும் அந்தத் துறையிலேயே வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவருக்கு. க�ொலம்பசுக்கும் அது பெரிய விசயமாக இல்லை. ஆனால் அந்த அதி முக்கியமான வரைப் படத்தின் பிரதியைக் க�ொலம்பஸ் பெற்றுக்கொண்டதில்தான் அவருடைய சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. இது சாமர்த்தியமா ம�ோசடியா என்பது வாசகரின் ப�ொறுப்பிற்கே விடப்படுகிறது. அந்த வரைப் படத்தைக் க�ொலம்பஸ் எப்படிப் பெற்றார் என்பது இன்றைக்கும் நீடிக்கும் மர்மங்களில் ஒன்று. கால்வன�ோவின் வரலாற்று புத்தகம் அந்த வரைப் படம் ப�ோர்ச்சுகீசியர்களிடம் எப்படி வந்து சேர்ந்தது என்பதை மட்டுமே ச�ொல்கிறதே தவிர இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதில் உச்சம் ப�ோர்ச்சுகீசிய அரசாங்கம் பதுக்கிய கடல் வழி பயணத்தின் வரைப் படத்தைப் பின் பக்க வழிகளில் பெற்றுக்கொண்ட க�ொலம்பஸ் அதில் தன்னுடைய சரக்கையும் சேர்த்துக்கொண்டு - அதாவது அட்லாண்டிக் பெருங்கடலைக் குறுக்காகக் கடந்தால் மலாக்கா (Malacca இன்றைய Malaysia தீவுக் கூட்டங்கள்) வழியாக இந்தியாவிற்குச் சென்றுவிடலாம் என்பது – ப�ோர்ச்சுக்கீசிய அரசாங்கத்திடமே ப�ோய் நின்றதுதான். ப�ோர்ச்சுகீசிய அரசு குழம்பிப் ப�ோய்விட்டது. க�ொலம்பஸ் ச�ொல்லும் இந்தியாவிற்கான கடல் வழிப் பயணம் ஏறத்தாழத் தாங்கள் பதுக்கிவைத்திருக்கும் வரைப் படத்தை ஒத்திருந்தாலும் க�ொலம்பஸ் தன்னுடைய திட்டத்திற்குள்ளே சேர்த்திருந்த அவருடைய கை சரக்கு அவர்களைத் தலைச் சுற்றவிட்டது. அவர் தங்களுடைய வரைப் படத்தைத் திருடிவிட்டார் என்று தண்டிக்கவும் முடியாதபடி இருந்தது க�ொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம். இதில் மேலும் ந�ோண்டினால் மேற்குலகின் மற்ற நாடுகளின் கவனத்தையும் அது ஈர்த்துவிடும் என்பதால் க�ொலம்பசின் திட்டத்திற்கு ஆதரவு தர முடியாது என்று ச�ொல்லிக் க�ொலம்பசை 86
நவீனா அலெக்சாண்டர்
அனுப்பிவைத்துவிட்டது ப�ோர்ச்சுகீசிய அரசு. க�ொலம்பசின் அடுத்த சாமர்த்தியம் அவர் ஸ்பெயின் நாட்டை அணுகியதிலிருக்கிறது. ஸ்பெயின் அன்றைய நாட்களில் ப�ோர்ச்சுகலின் கடல் பயண வெற்றிகளைக் கண்டு லேசான வயிற்றெரிச்சலில் இருந்தது. க�ொலம்பஸ்தான் சூழ்நிலைகளை ம�ோப்பம் பிடிப்பதில் வல்லவராயிற்றே ஸ்பெயினின் ப�ொறாமை புகைச்சல் வாடையை ம�ோப்பம் பிடித்து ஸ்பெயின் நாட்டு இளவரசர் (பெர்டினான்ட்) மற்றும் இளவரசிக்கு (இசபெல்லா) முன்பு ப�ோய் நின்றுவிட்டார். இளவரசரைவிட இளவரசி இசபெல்லாவிற்கு க�ொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம் பிடித்துப்போய்விட்டது. க�ொலம்பசின் பயணத்திற்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. க�ொலம்பஸ் தர்மத்திற்காக இந்தக் காரியத்தை ஸ்பெயினுக்குப் பண்ணித்தர ஒப்புக்கொள்ளவில்லை. பெரும் பணத்திற்குத்தான். தான் கண்டுபிடிக்கும் நாடுகளில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்குப் பெறப்படும் தங்கம், வெள்ளி மற்றும் இதர ப�ொருட்களின் வருவாயில் பத்தில் ஒருப் பங்கை அவருக்குக் க�ொடுத்துவிட வேண்டும், அவர் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு ஆளுநர் என்கிற வகையில் அவருடைய பெயரைச் சூட்டவேண்டும், இனி வரும் காலங்களில் அவர் கண்டுபிடித்த கடல் வழிப் பயணத்தை உபய�ோகப்படுத்தி ஸ்பெயின் எந்த வகையில் ப�ொருள் ஈட்டினாலும் அதிலும் பத்தில் ஒரு பங்கை ராயல்டியாக அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்கும் தந்துவிட வேண்டும் இவைகள் அவர் கடல் வழிப் பயணத்திற்குப் புறப்படுவதற்கு ஸ்பெயின் நாட்டுடன் செய்துக�ொண்ட ஒப்பந்தங்கள். யார�ோ உயிரைப் பணயம் வைத்து உழைப்பைக் க�ொட்டிக் கண்டுபிடித்த இந்தியாவிற்கான கடல் வழிப் பயண வரைப் படத்தை வைத்துக்கொண்டு ப�ோர்ச்சுகீசியர்களும் க�ொலம்பசும் பணம் பார்த்ததும் புகழைத் தேடிக் க�ொண்டதும் சாமர்த்தியமா ம�ோசடித்தனமா என்கிற தார்மீக விவாதங்கள் மறைக்கப்பட்டுச் சாதனைகளாகப் ப�ொதுச் சனப் புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. இந்த அழகில் தன்னம்பிக்கை கட்டுரைகளிலெல்லாம் க�ொலம்பஸ் ப�ோன்றவர்களின் வாழ்க்கை 87
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
குறிப்புகள் உதாரணங்களாக வேறு எடுத்தாளப்படுகிறது. அது சரி இந்தத் தகவல்களையெல்லாம் கால்வன�ோ எங்கிருந்து பெற்றுத் தன்னுடைய வரலாற்று நூலில் எழுதினார் என்றால், கால்வன�ோ இந்தத் தகவல்களைப் பிரான்சிஸ் டே ச�ோசா டவேரஸ் (Francis de Sousa Tavares) என்பவரிடமிருந்து 1528-ல் பெற்றதாகச் ச�ொல்கிறார். டவேரஸ் 1520-களில் ப�ோர்ச்சுகீசிய அரசரின் வாரிசான ட�ோம் பெர்னான்டோவின் நெருங்கிய நண்பராக இருந்தவர். ட�ோம் பெர்னான்டோவே இரகசிய நூலகத்திலிருந்து அந்த உலக வரைப் படத்தைத் தன்னிடம் எடுத்துக்காட்டியதாக டவேரஸ் கால்வின�ோவிடம் ச�ொல்லியிருக்கிறார். ஆனால் பெர்னான்டோ, டவேரஸ்க்கு அந்த இரகசிய வரைப் படத்தைக் காட்டிய 1520-களில் அந்த வரைப் படம் தன்னுடைய சிறப்பை இழந்துவிட்டிருந்தது. காரணம் 1498-ல் அந்த வரைப் படத்தின் துணை க�ொண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்ததும் அந்த இரகசியம் மேற்குலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்தியாவிற்கான கடல் வழி ப�ொதுச் ச�ொத்தாகிப்போனது. த�ொடக்கத்தில் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தோம் ட�ோம் பெட்ரோ ப�ோர்ச்சுகலுக்குக் க�ொண்டுவந்த கடல் வழி வரைப் படத்தில் நன்னம்பிக்கை முனை மற்றும் ஸ்டிரெய்ட் ஆ மெகாலன் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக. வரலாற்று விழிப்புணர்வு உள்ளவர்களுக்கு அங்கேயே ஒரு சந்தேகம் தட்டியிருக்கும். இந்தப் பெயர்கள் அந்த இடங்களுக்கு அந்த வரைப் படம் வரையப்பட்ட (1420-களில்) அடுத்த நூறாண்டுகள் கழித்துத்தான் சூட்டப்பட்ட பெயர்கள். அந்த வரைப் படம் வரையப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்து 1520-களில்தான் அந்தப் இடங்களுக்கு அந்த பெயர்கள் சூட்டப்படுகின்றன. அப்படியானால் அந்தப் பெயர்கள் எப்படி நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரைப் படத்தில் இடம்பெற்றிருக்க முடியும்? சிறந்த கேள்விதானே! ஆனால் அந்த வரைப் படத்தில் இருந்த பெயர்கள் ப�ோ எஸ்பரான்கா (Boa Esperanca) மற்றும் டிராகன்ஸ் டெய்ல் (Dragon’s Taile). ஆப்பிரிக்கத் தென் க�ோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் நன்னம்பிக்கை முனை அந்த வரைப் படத்தில் ப�ோ எஸ்பரான்கா என்று 88
நவீனா அலெக்சாண்டர்
குறிக்கப்பட்டிருந்தது. தென் அமெரிக்காவின் தென் க�ோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் ஸ்டிரெய்ட் ஆ மெகாலன் அந்த வரைப் படத்தில் டிராகன்ஸ் டெய்ல் என்று குறிக்கப்பட்டிருந்தது.
89
மாயன் நாகரீகம் – II
"உரையாடுங்கள், ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக்கொள்ளுங்கள். அது புலம்பலாகவ�ோ அழுகையாகவ�ோ இருக்க வேண்டாம். உங்களின் வகைகளுக்கு ஏற்ப, குழுக்களுக்கு ஏற்ப உங்களுக்குள் பேசிக்கொள்ளுங்கள்’ என்று பறவைகளுக்கு, மான்களுக்கு, சிறுத்தைகளுக்கு, ஜாகுவார்களுக்கு, பாம்புகளுக்குச் ச�ொல்லப்பட்டது. – ப�ோபல் வு (Popol Vuh)”
ச
க் ட�ோக் இச்’ஆக் II (Chak Tok Ich’aak II கி.பி. 488 – 508) பேரரசருக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் வ சான் கா’ ஆவில், மகள் லேடி ஆ டிக்கால் (Lady of Tikal). சக் ட�ோக் இச்’ஆக் II ஆட்சியின் ப�ோது டிக்கால் பலமிழந்திருந்தது. இதற்குக் காரணம் வாரிசுரிமை சண்டையாக இருக்கலாம் என்று தெரிகிறது. மாயன் பேரரசில் மாற்று கருத்துகளுக்கு இடமேயில்லாமல் மகனுக்குத்தான் அடுத்த பேரரசர் பதவி என்றாலும் இங்கே வ சான் கா’ ஆவிலுக்கு அந்த ஏக ப�ோக உரிமை மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கான காரணம் தெரியவில்லை. டிக்கால் நகரக் கல்வெட்டுகள் இது குறித்து எதுவும் பேசாமல் மெளனமாகவே இருக்கின்றன. வ சான் கா’ ஆவில் பல ஆண்டுகளுக்கு டிக்காலில் இருக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஒருவேளை நாடு கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரே நகரத்தை விட்டு வெளியேறியிருந்திருக்கலாம். சக் ட�ோக் இச்’ஆக் II-ன் மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆறு வயது மகள் லேடி ஆ டிக்கால் அஜாவாக கி.பி. 511-ல் முடி சூட்டப்பட்டாள். அவள் சிறு குழந்தையாக இருந்த காரணத்தால் 90
நவீனா அலெக்சாண்டர்
பெயருக்கு அவளைப் பேரரசியாக நியமித்துவிட்டு ஆட்சியைக் கவனித்துக்கொண்டது கலூம்டே பாலம் (Kaloomte Bahlam) என்கிற தளபதி. அதே காலக்கட்டத்தில் டிக்காலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாகப் பேர்ட் கிளா (Bird Claw) என்பவரின் பெயரும் கல்வெட்டுகளில் அடிபடுகிறது. ஆகப் பெயருக்குப் பேரரசியாக லேடி ஆ டிக்கால் த�ொடர ஆட்சியதிகாரம் முழுவதும் இரண்டு தளபதிகளின் கைகளில் இருந்திருக்கிறது. அடுத்த 27 ஆண்டுகளுக்கு இதுதான் டீக்காலின் அரசியல் நிலைமை. வர இருந்த நூறாண்டுள்ள டிக்காலின் வீழ்ச்சிக்கு இந்த அரசியல் சூழல் முன்னோட்டமாக இருந்திருக்கிறது. இரண்டு தளபதிகளும் அவர்களின் விருப்பத்திற்கு விளையாடி இருப்பார்கள் ப�ோலும். அந்தக் காலக்கட்டத்தில் நரன்ஜோ மற்றும் கலக்மூல் நகரங்கள் பாம்பு பேரரசின் (Snake Kingdom) ஆளுகைக்குள் வந்துவிட்டிருந்தது. இந்த இரண்டு நகரங்களும் டிக்கால் நகரத்தின் நட்பு நகரங்களாகும். ஒருபுறம் பலமான எதிரி பேரரசு உருவாகிக்கொண்டிருக்க டிக்காலில் இரண்டு தளபதிகளின் ஆட்சியால் குழப்பம் உச்சத்திற்குப் ப�ோய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் கி.பி. 537-ல் வ சான் கா’ ஆவில் டிக்காலை கைப்பற்றித் தன்னை அடுத்த அஜாவாக முடி சூட்டிக்கொண்டது நடந்திருக்கிறது. லேடி ஆ டிக்காலுக்கும், மற்ற இரண்டு தளபதிகளுக்கும் அதன் பிறகு என்ன கதி நேர்ந்தது என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை என்றாலும் அனுமானம் செய்வதற்கான தடை இருக்கப்போவதில்லை. நரபலி (human sacrifice). மீச�ோ அமெரிக்க நாகரீகத்திற்கும் நரபலிக்கும் த�ொடர்பு க�ொஞ்சம் அதிகமாகவே உண்டு. சமயச்சடங்கின் ஒரு பகுதியாக இருந்தது நரபலி. நல்ல மழை மற்றும் தானிய விளைச்சல் த�ொடங்கி மந்திரச் சடங்குகள் மற்றும் அரசியல் காரணங்கள் வரை மீச�ோ அமெரிக்க நாகரீகத்தில் நரபலி க�ொடுக்கப்பட்டிருக்கிறது. மாயன் நாகரீகமும் அதற்கு விதிவிலக்கு கிடையாது. நரபலிகளைப் ப�ொறுத்தமட்டில் மீச�ோ அமெரிக்க நாகரீகம் சற்று வித்தியாசமானது. சாமானியன் த�ொடங்கி அரசக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகாரம் மிக்க நபர்கள் வரை எத்தகைய வித்தியாசமும் சலுகையும் இல்லாமல் நரபலி க�ொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு ஏன் 91
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மாயன் பேரரசர்களும் அவர்களின் மனைவிகளும் கூட நரபலிக்கு விலக்கானவர்கள் கிடையாது. தேவை ஏற்பட்டால் அவர்களும் கூட நரபலி க�ொடுக்கப்படுவார்கள். மாயன் நாகரீகத்தில் நரபலி என்பது பல வழி முறைகளில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இரத்தத்தை வெளியேற்றுதல் (bloodletting), தலையைத் துண்டித்தல், மார்பைக் கிழித்து இதயத்தை அகற்றுதல் என்று இவை அனைத்தும் நரபலி க�ொடுக்கப்படும் நபருக்கு எப்படியான மயக்க மருந்துகளும் க�ொடுக்கப்படமால் அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சில வேலைகளில் அவர்களே அதைச் செய்துக�ொள்ளும்படியும் இருக்கும். உதாரணமாக இரத்தத்தை வெளியேற்றும் நரபலி முறையில், நரபலிக்கு உள்ளாகும் நபர் ஆணாக இருந்தால் அவர், அவருடைய பிறப்புறுப்பை அறுத்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். பெண்ணாக இருந்தால் நாக்கை அறுத்துக்கொண்டு இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும். காதை அறுத்தும் இரத்தத்தை வெளியேற்றும் முறை உண்டு. உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தை அதற்கென்று தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் மண் சட்டியில், மழை நீரைச் சேகரிப்பதைப்போல நரபலிக்கு உள்ளாகும் நபரே சேகரிக்கவேண்டும். இந்த முறையில் நரபலிக்கு உள்ளாகும் நபரின் உயிர், க�ொஞ்சம் க�ொஞ்சமாக இரத்தம் உடலை விட்டு முழுதுமாக வெளியேற, துள்ளத் துடிக்க உடலை விட்டுப் பிரியும்படி இருக்கும். அரசர்களும், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நரபலிக்கு உள்ளாகும்போது இந்த முறையையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பிறப்புறுப்பு, நாக்கு, காது ப�ோன்ற உடல் பகுதிகளைத் தவிர உடல் முழுவதும் கிழித்துக்கொண்டு இரத்தத்தை வெளியேற்றுவதும், கீழுதட்டை வெட்டி இரத்ததை வெளியேற்றுவதும், கீழ்தாடை பகுதியைக் கிழித்து, உடல் அங்கங்களை அறுத்து என்று பல உட்பிரிவுகளாக இரத்தத்தை வெளியேற்றும் நரபலி சடங்கு நடந்திருக்கிறது. பேரரசர்களைப் ப�ொறுத்தவரையில் இரத்தத்தை வெளியேற்றும் சடங்கு என்பது நரபலியையும் தாண்டி அவர்களுடைய பராகிரமத்தையும், ஆட்சி அதிகாரத்தையும், வாரிசுரிமையையும் 92
நவீனா அலெக்சாண்டர்
நாட்டு மக்களுக்கும், எதிரிகளுக்கும் வெளிப்படுத்தும் அரசியல் சடங்கும் ஆகும். அடுத்த வாரிசு என்று கருதப்படும் நபர் பிறந்தது முதல் ஒவ்வொரு இருபது ஆண்டுகளின் முடிவிலும் (இருபது ஆண்டு முடிவை மாயன்கள் கா’ அடுன் (K’atun) விழாவாகக் க�ொண்டாடியிருக்கிறார்கள்.) பிரமிடு க�ோயிலில் வைத்து நாட்டு மக்களின் முன்னிலையில் தன்னுடைய இரத்தத்தைச் சிறிதாக வெளியேற்றித் தன்னுடைய உரிமையை, பலத்தை, அதிகாரத்தை வெளிப்படுத்த வேண்டும். இரத்தம் வெளியேற்றும் முறைக்கும், மார்பைக் கிழித்து இதயத்தை வெளியே எடுக்கும் சடங்கிற்கும் ஸ்டிங்ரே ஸ்பைன்ஸ் (stingray spines), கற்களால் உருவாக்கப்பட்ட கைப்பிடிக�ொண்ட கத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நரபலிக்கான ஆதாரங்கள் சித்திரங்களாகவும், நரபலிக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் த�ொல்லியல் ஆதாரங்களாகவும் இன்றைக்குக் கிடைத்தபடி இருக்கிறது. நரபலி க�ொடுக்கப்படும் நபருக்கு எப்படிச் சமூக ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படுவதில்லைய�ோ அதேப�ோன்று வயது வித்தியாசமும் பார்க்கப்படுவதில்லை. கை குழந்தை த�ொடங்கி ஐம்பது வயது தாண்டியவர்கள் வரை நரபலி க�ொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பெரும்பான்மை நரபலிக்கு உள்ளானவர்கள் கைக் குழந்தைகளும், இளம் பெண்களுமே. கைக் குழந்தைகளும், இளம் பெண்களும் புனிதமானவர்கள் என்றும் அவர்களைப் பாதாள உலகின் கடவுளர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதும் ப�ொதுவான மீச�ோ அமெரிக்க நம்பிக்கைகளில் ஒன்று. வ சான் கா’ ஆவில், டிக்காலுக்கு திரும்பி அஜாவ் பதவியைப் பறித்துக்கொண்டதும் லேடி ஆ டிக்காலுக்கும், கலூம்டே பாலமுக்கும், பேர்ட் கிளாவுக்கும் நேர்ந்த கதி இரத்தம் வெளியேற்றும் நரபலியாகத்தான் இருந்திருக்க வேண்டும். இது டிக்காலில் இருக்கும் 24 பிரமிடுகளில் எதாவது ஒன்றின் மீது நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். எது எப்படிய�ோ வ சான் கா’ ஆவிலின் ஆட்சி த�ொடங்கியது. த�ொடங்கிய இருபது ஆண்டுகளுக்குள்ளேயே முடிவிற்கும் வந்துவிட்டது. டிக்கால் நகரைச் சுற்றியிருந்த பல முக்கிய நகரங்களைக் காவு 93
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
வாங்கிக்கொண்டிருந்த பாம்பு பேரரசு கி.பி. 562-ல் டிக்கால் நகரையும் முழுங்கிவிட்டது. லேடி ஆ டிக்காலுக்கு நிகழ்ந்த அதே கதி வ சான் கா’ ஆவிலுக்கும் நிகழ்ந்திருக்கவேண்டும். வ சான் கா’ ஆவிலின் முடிவிற்குப் பிறகு வந்த சுமார் 130 ஆண்டுகள் டிக்காலின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. டிக்காலின் பழைய பெருமையையும் பலத்தையும் மீட்டுக்கொண்டுவந்தது ஜாசாவ் சான் கா’ ஆவில் I (Jasaw Chan K’awiil I). இவர் ஆட்சிக்கு வந்த ஆண்டாகக் கல்வெட்டுகளில் பதிவாகியிருப்பது கி.பி. 682. கலக்மூலை வென்ற ஜாசாவ் சான் கா’ ஆவில் I அதன் மூலம் பாம்பு பேரரசை ஒரேயடியாக முடிவிற்குக் க�ொண்டுவந்தார். அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு டிக்காலுக்கு எப்படியான புறத் தாக்குதலும் வந்துவிடாத அளவிற்குப் பலமான இராணுவ அடித்தளத்தை ஏற்படுத்திவிட்டுப் ப�ோய்ச் சேர்ந்தார் ஜாசாவ் சான் கா’ ஆவில் I. பத்தாம் நூற்றாண்டின் த�ொடக்கத்தில் அதாவது கி.பி. 900-களின் த�ொடக்கத்தில் டிக்கால் மயானச் சரிவை ந�ோக்கிச் செல்லத் த�ொடங்கியது. இதற்குக் காரணம் மற்ற மாயன் பேரரசுகளின் அல்லது மெக்சிக்க பேரரசுகளின் படையெடுப்புக்கள�ோ அல்ல. க�ொஞ்சம் க�ொஞ்சமாக டிக்கால் வாசிகள் நகரத்தை விட்டு வெளியேறத் த�ொடங்கிவிட்டார்கள். வேறு வார்தைகளில் ச�ொல்வது என்றால் நகரம் கைவிடப்பட்டுவிட்டது. இது டிக்கால் நகரத்திற்கு மாத்திரம் நேர்ந்த கதியல்ல அதன் சமக் காலத்தில் உச்சத்தில் இருந்த வடக்கு மற்றும் தெற்கு மாயன் பேரரசுகளுக்கும் நேர்ந்த கதி. மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள். இதற்கான காரணத்தை விளக்கக் கூடிய எத்தகைய வரலாற்று ஆதாரங்களும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அளவுக்கு அதிகமான சனத்தொகை பெருக்கமும், அதற்கு ஈடுக�ொடுக்கக் கூடிய அளவிற்கான உணவு உற்பத்தி இன்மையும், பருவ நிலை மாற்றங்களும், மக்கள் மாயன் நகரங்களைக் கைவிடவைத்திருக்கவேண்டும் என்பது இன்றைய ஆய்வாளர்களின் அனுமானம். இந்தக் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள்தான் என்றாலும் முழுமையாக இவைகள் மாத்திரமே காரணங்களாக இருக்க முடியாது என்பது மற்றொரு பிரிவு ஆய்வாளர்களின் கருத்து. 94
நவீனா அலெக்சாண்டர்
மாயன் நாகரீகக் கட்டிடக் கலையின் உச்சம் டிக்கால் நகரிலிருந்தே வருகிறது. மற்ற மூன்று நாகரீகங்களின் (தமிழ், எகிப்து, மெசப்பட்டோமியா) கட்டிடக் கலைக்கு எந்த வகையிலும் குறைவில்லாததுமாயன்கட்டிடக் கலை. வழிபாடுமற்றும்அரசுவிழா க�ொண்டாட்டங்களுக்கு, நரபலி சடங்கிற்கு மற்றும் பேரரசர்களின் வசிப்பிடத்திற்கு என்று மூன்று தனித் தனிப் பயன்பாடுகளுக்கு டிக்காலில் கல் கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மீச�ோ அமெரிக்க நாகரீகம் முழுவதிலும் இந்த மூன்று பயன்பாடுகளுக்காகவே பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வழிபாட்டிற்கான இடம் என்பதையும் தாண்டிப் பிரமிடுகள்
பேரரசர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ப�ொதுவாக மீச�ோ அமெரிக்கப் பிரமிடுகள் தாலுத்-டேப்லிர�ோ (Talud-Tablero style) பாணியில் கட்டப்பட்டவைகள். பேரரசுகளின் கடவுள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப இதன் கட்டுமான அமைப்பும், விரிவும் மாறுபடும். டிக்கால் நகரின் நார் அக்ரோப�ோலிஸ் (North Acropolis) பிரமிட் வழிபாட்டு தளங்களும், முன்டோ பெர்டிட�ோ (Mundo Perdido) பிரமிட் வளாகமும் டிக்கால் பேரரசு காலம் முழுவதும் திருத்தி கட்டப்பட்டுத் த�ொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டவைகள். மாயன் பிரமிடுகள் (மீச�ோ அமெரிக்க நாகரீகப் பிரமிடுகள் முழுவதும்) இரண்டு அமைப்புகளைக் க�ொண்டது. 95
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
அடித்தளம் மற்றும் க�ோயில். அடித்தளம் தாலுத்-டேப்லிர�ோ பாணியில் நால் பக்கமும் மேல் ந�ோக்கி உயர்ந்து செல்லும் அதே சமயத்தில் சாய் க�ோணத்திலும் அமைக்கப்படும். மேலும் அடித்தளம் ஒன்பது அடுக்குகள் க�ொண்டதாக இருக்கும். அடித்தளத்தின் உயரமும், அகலமும் பிரம்மாண்டமானதாக வடிவமைக்கப்பட்டாலும் அதன் ஒன்பது அடுக்குகளில் எத்தகைய மாற்றமும் இருக்காது. அடித்தளத்தின் உச்சியிலிருக்கும் க�ோயில் நகரின் முக்கியக் கடவுளின் உறைவிடமாக இருக்கும். அடித்தளத்தின் உச்சியில் க�ோயிலுக்கு முன்பாக நரபலி க�ொடுப்பதற்கான மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதே ப�ோல ஒவ்வொரு கா’அடுன் (இருபது ஆண்டுகளின் முடிவு) விழாவின் ப�ோதும் பேரரசர் உடல் உறுப்பைக் கிழித்துச் சிறிதாக இரத்தம் வெளியேற்றும் சடங்கு செய்வதற்கான மேடையும் இருக்கும். டிக்காலின் நார் அக்ரோப�ோலிசில் முன்பே பார்த்ததைப் ப�ோல இருபத்தி நான்கிற்கும் மேற்பட்ட பிரமிடுகள் மற்றும் க�ோயில்கள் இருக்கின்றன. பிரமிடுகளுக்குக் கீழே (அடித்தளப் பகுதியில்) முக்கியமான டிக்கால் பேரரசர்களின் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிரமிட் சமாதி கண்டுபிடிப்புகள் த�ொடர்ந்துக�ொண்டுமிருக்கிறது. 96
நவீனா அலெக்சாண்டர்
மாயன் பிரமிடுகள் (மீச�ோ அமெரிக்கப் பிரமிடுகள்) பயன்பாட்டளவில் எகிப்திய நாகரீகப் பிரமிடுகளையும், மெசப்பட்டோமிய சிக்ரத்களையும் ஒத்தது. பேரரசர்களை அடக்கம் செய்யும் வகையில் (மம்மிபிகேசன் செய்யாமல்) எகிப்தியப் பிரமிடுகளையும், பிரமிடின் உச்சியில் க�ோயில் கட்டி வழிபாடு செய்யும் தன்மையில் மெசப்பட்டோமிய சிக்ரத்களையும் பிரதிபலிக்கின்றன. எகிப்திய மற்றும் மெசப்பட்டோமிய பிரமிடுகளைப்போல அல்லாமல் மாயன் பிரமிட் கட்டிட அமைப்பு என்பது பல சிறு க�ோயில்களையும் பல பிரமிடுகளையும், விளையாட்டு மைதானத்தையும் (Ball Court) உள்ளடக்கியதாக இருக்கும். இனி ட�ோஸ் பிலாஸ் பேரரசு குறித்துப் பார்ப்போம். இது டிக்கால் ப�ோன்று மிகப் பெரியது இல்லையென்றாலும் டிக்காலுக்கு அருகில் இருந்த சிறிய பேரரசு. ச�ொல்லப்போனால் டிக்கால் பேரரசுடன் நெருங்கிய த�ொடர்புகள் க�ொண்டிருந்த ஒன்று. டிக்கால் பேரரசின் இருண்ட காலப்பகுதியில் ட�ோஸ் பிலாஸ் பேரரசு உருப்பெறுகிறது. முதல் பேரரசனாகக் கல்வெட்டுகளின் மூலம் 97
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
நமக்குத் தெரியவருவது பஜ்லாஜ் சான் கா’ ஆவில் (Bajlaj Chan K’awiil). ஏழாம் நூற்றாண்டுகளில் டிக்கால் பேரரசில் தலையெடுத்த வாரிசுரிமை சண்டையின் காரணமாக ட�ோஸ் பிலாஸ் நகரம் முக்கியத்துவம் க�ொண்ட ஒன்றாக மாற்றமடைந்திருக்க வேண்டும் என்பது இன்றைய ஆய்வுலகின் அனுமானம். பஜ்லாஜ் சான் கா’ ஆவிலுக்கும் அப்போதைய டிக்காலின் அஜாவாக இருந்த நுன் உஜால் சக்கிற்கும் த�ொடர்ச்சியான வாரிசுரிமை சண்டைகள் நடந்திருக்கிறது. இருவருக்கும் தந்தை ஒருவராக இருந்திருக்கவேண்டும். மாயன் நாகரீகத்தைப் ப�ொறுத்த வரையில் வாரிசுரிமை சண்டையாக இருந்தாலும் சரி பேரரசுகளுக்கு இடையிலான சண்டையாக இருந்தாலும் சரி அந்த டிக்கால் பேரரசர் யார் என்பது தெரியவில்லை. வாரிசுரிமை சண்டையின் இறுதியில் பஜ்லாஜ் சான் கா’ ஆவில் டிக்காலின் பேரரசராக வந்து சேருகிறான். இது நடந்தது கி.பி. 648-ல். டிக்காலின் குடும்பக் குடுமி பிடி சண்டையைப் பயன்படுத்திக்கொண்டு கலக்மூல் நகரைச் சேர்ந்த பேரரசன் யுக்நூம் (Yuknoom) – பாம்பு பேரரசு - ட�ோஸ் பிலாசை தாக்கினான். சிக்கினால் தான் கட்டியெழுப்பிய பிரமிடுக்கு மேலேயே நிற்கவைத்து இதயத்தைய�ோ அல்லது இரத்தத்தைய�ோ உருவி நரபலி க�ொடுத்துவிடுவார்கள் என்பதால் பஜ்லாஜ் சான் கா’ ஆவில் ட�ோஸ் பிலாசை விட்டுத் தப்பிய�ோடிவிட்டான். யுக்நூம், ட�ோஸ் பிலாசை கதறவிட்டுவிட்டு டிக்காலுக்கு வந்து சேர்ந்து நுன் உஜால் சக்கையும் டிக்காலை விட்டுக் கதறிய�ோடும்படி செய்தான். அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார்கள். கலக்மூல் பேரரசின் ஆதிகத்திற்கு எதிராக டிக்காலில் உள்நாட்டு கலவரம் எழு த�ொடங்கியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட நுன் உஜால் சக் முதலில் பஜ்லாஜ் சான் கா’ ஆவிலின் கதையை முடித்துவிடுவது என்கிற முனைப்புடன் ட�ோஸ் பிலாசை தாக்கினான். இந்தத் தாக்குதல் கி.பி. 672-ல் நடந்ததாக ட�ோஸ் பிலாஸ் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவன் கையிலும் சிக்காமல் பஜ்லாஜ் சான் கா’ ஆவில் தப்பி வெளியேறிவிட்டான். தப்பிய�ோடி மறைவதில் ஜாகுவாரான பஜ்லாஜ் சான் கா’ ஆவிலை விடாமல் அவன் எங்குச் சென்றாலும் பின் த�ொடர்ந்து சென்றிருக்கிறான் நுன் உஜால் சக். இந்த ஓடிப் பிடி விளையாட்டு ஐந்து ஆண்டுகளுக்குத் த�ொடர்ந்து நடந்திருக்கிறது. 98
நவீனா அலெக்சாண்டர்
ஒன்று சமாதானமாகப் ப�ோகவேண்டும் அல்லது வெட்டிக்கொண்டு சாக வேண்டும் இது என்ன சிறு பிள்ளைகளைப் ப�ோல ஓடிப் பிடித்து விளையாடுவது என்று கடுப்பாகிப்போன கலக்மூல் பேரரசு கி.பி. 677-ல் இருவருக்கும் இடையில் தலையிட்டு நுன் உஜால் சக்கை இந்த விளையாட்டிலிருந்து தடுக்கும் விதமாக அவனை ஒரு சிறிய ப�ோரில் தட்டிவைத்தது. பிரச்சனை இத்துடன் முடிந்துவிடும் என்று கலக்மூல் பேரரசு எதிர்பார்த்திருக்கவேண்டும் ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் பஜ்லாஜ் சான் கா’ ஆவில் கலக்மூல் பேரரசை எதிர்த்து டிக்காலின் மீது படையெடுத்து வந்துவிட்டான். கலக்மூல் பேரரசும் நுன் உஜால் சக்கும் ஓரணியில் இருக்க இருவரையும் எதிர்த்துச் சண்டையிட்டான் பஜ்லாஜ் சான் கா’ ஆவில். இந்தப் ப�ோரின் விளைவாக டிக்காலில் மனிதத் தலைக் குவியலும், இரத்தக் குலங்களும் சர்வச் சாதாரணக் காட்சியாக இருந்ததாகக் கல்வெட்டுகள் பதிவு செய்திருக்கின்றன. நுன் உஜால் சக்கின் தளபதியான நுன் பாலம் ப�ோர் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகப் பதிவுகள் ச�ொல்கின்றன. நுன் உஜால் சக்கிற்கும், கலாக்மூல் பேரரசன் யுக்நூமுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது தெரியவில்லை. ப�ோரின் இறுதியில் அவர்களின் கதி குறித்துக் கல்வெட்டுகள் வாய் மூடி மெளனமாக இருக்கின்றன என்றால் நிச்சயம் அவர்கள் எதாவது ஒரு பிரமிடின் உச்சியில் நிற்க வைக்கப்பட்டு நரபலிக்கு ஆளாகியிருக்க வேண்டும் என்பது ச�ொல்லாமல் ச�ொல்லப்படும் செய்தி. தப்பித்து ஓடக் கூடியவனாகவே அறியப்பட்ட பஜ்லாஜ் சான் கா’ ஆவிலின் இந்த மிகப் பெரும் வெற்றி ட�ோஸ் பிலாஸ் நகரை மிக முக்கிய அதே சமயத்தில் பலம் வாய்ந்த நகரமாக மாற்றிப்போட்டது. பஜ்லாஜ் சான் கா’ ஆவில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மற்றொரு மாயன் பேரரசின் அதிகார விரிவாக்கத்திற்கும் காரணமாக இருந்தான். அவனுடைய மகள் லேடி சிக்ஸ் ஸ்கை (Lady Six Sky) நரன்ஜோ பேரரசின் பலமிக்க அதே சமயத்தில் துணிச்சல் மிக்க பேரரசியாக இருந்தாள். டிக்கால் நகரத்திற்குத் தென் கிழக்கில் இருந்தது நரன்ஜோ பேரரசு. டிக்கால் பேரரசைப் ப�ோன்று மிகப் பழமையானதும் பலம் மிக்கதும் நரன்ஜோ. 99
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
நரன்ஜோ பேரரசை நிறுவிய த�ொடக்கக் கால அஜாவ்களை குறித்து உறுதியாகத் தெரியவில்லை ஆனால் அவர்களுக்கும் கரக்கோல் பேரரசிற்கும் இணக்கமான த�ொடர்பு இருந்திருப்பது உறுதியாகத் தெரிகிறது. மாயன் நாகரீக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் (அதற்கு அடுத்தும் இல்லை) பெண் ஆளுமை ஒருவர் பிற மாயன் பேரரசுகளைத் தூசியாகப் பறக்கவிட்டார் என்றால் அது நரன்ஜோவின் லேடி சிக்ஸ் ஸ்கைதான். முன்பே பார்த்ததைப் ப�ோன்று பஜ்லாஜ் சான் கா’ ஆவிலின் மகளான இவர் நரன்ஜோ நகருக்குள் நுழைந்த தினத்தை நரன்ஜோ கல்வெட்டுகள் பதிவு செய்திருக்கின்றன. அது கி.பி. 682, ஆகஸ்ட் 27. நரன்ஜோ பேரரசில் டிக்காலின் வம்சாவளியைத் த�ொடங்கி வைத்தவரும் லேடி சிக்ஸ் ஸ்கைதான். மகன் பிறந்து அவனுக்கு ஐந்து வயதில் முதல் கா’டுன் சடங்கு நிகழ்த்தி வைக்கும் வரை அமைதியாக இருந்தார் லேடி சிக்ஸ் ஸ்கை. (அடுத்துப் பேரரசராக வந்த கா’ஆக் டிலிவ் சான் சாக் K’ahk’ Tiliw Chan Chaak அவருடைய மகனாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.) பிரமிட் க�ோயில் ஒன்றின் மீது மகனுடைய முதல் கா’டுன் சடங்கு நிகழ்ந்த அடுத்த இருபது நாட்களில் அதிரடிகளைத் த�ொடங்கிவிட்டார் லேடி சிக்ஸ் ஸ்கை. நரன்ஜோ நகரக்கு அருகில் இருந்த பிடால் மற்றும் டுபால் ஆகிய நகரங்கள் அடித்து ந�ொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன. அடுத்த அடி டிக்கால் நகரின் மேல். வாரிசுரிமை சண்டையின் ஒரு பகுதியாக டிக்கால் மேல் லேடி சிக்ஸ் ஸ்கை தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும். அடுத்து நான்கு நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது லேடி சிக்ஸ் ஸ்கையின் நரன்ஜோ படை. அந்த நான்கு நகரங்களின் பெயர்களை அறிய முடியவில்லை. அவைகள் எரித்து மண்ணோடு மண்ணாகப் ப�ொசுக்கப்பட்டிருக்கின்றன. இப்படிச் சில பெயர் தெரியாத நகரங்களின் பெயர்களுடன் பட்டியில் நீண்டு செல்கிறது. உக்கானல் நகரத்துடன் இது முடிவிற்கு வருகிறது. மீச�ோ அமெரிக்கப் பேரரசர்களின் வரலாறு ஆண்களால் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருக்க அதில் தணித்து நிற்பவர் லேடி சிக்ஸ் ஸ்கை. ஆண் பேரரசர்களின் உருவங்களால் மாத்திரமே 100
நவீனா அலெக்சாண்டர்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளும் புடைப்பு சிற்பங்களுக்கும் மத்தியில் லேடி சிக்ஸ் ஸ்கையின் உருவம் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன. இவருடைய ஆற்றல் தெரிந்தேதான் அப்போதைய மாயன் நாகரீகத்தின் அச்சுறுத்தல் மிகுந்த பேரரசாக இருந்த கலாக்மூலும் கூட இவரிடம் அடக்கியே வாசித்தது. பாம்பு பேரரசு என்று அறியப்பட்ட கலக்மூல் குறித்து இனிப் பார்ப்போம். மற்ற மாயன் நகரங்களைப் ப�ோலக் கலாக்மூலின் த�ோற்றம் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. தவிர்க்க முடியாத முக்கியப் பேரரசாக அது உருவெடுத்தது ஆறாம் நூற்றாண்டுகளிலேயே. அடுத்த நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே அது அதன் ப�ொற்காலத்தைத் த�ொட்டுவிட்டது. பாம்பு பேரரசு என்கிற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் மத்திய மாயன் நிலப்பகுதி பேரரசுகள் அனைத்தும் சப்த நாடியும் ஓடுங்கி உட்கார்ந்து விடும் அளவிற்குப் படை பலத்திலும், ப�ோர் திறத்திலும் உச்சத்தைத் த�ொட்டது. பாம்பு பேரரசின் அகச் சிறந்த பேரரசாகப் பார்க்கப்படுபவர் யுக்நூம் தி கிரேட் (Yuknoom The Great) கி.பி. 636 – 686. மற்ற மாயன் பேரரசுகளைப் ப�ோலக் கலாக்மூலும் பத்தாம் நூற்றாண்டில் வீழ்ச்சியையும் அழிவையும் சந்தித்தது.
101
அமெரிக்காவை
மூன்றாம் முறையாகக் கண்டுபிடித்தவர் யார்?
சீ
னாவின் தென்மேற்கில் இருக்கும் கூமிங் (இன்றைய யுனான் மாகாணம்) நகரில் இருக்கும் அனைத்து ஆண் பிள்ளைகளின் பிறப்புறுப்பையும் சிதைத்துவிடும்படி இளவரசர் சு டீ-க்குக் கி.பி. 1382-ல் உத்தரவு கிடைக்கிறது. கிடைத்த உத்தரவு உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. அந்த நகரில் உள்ள ஆண் பிள்ளைகளின் சிதைக்கக் காரணம் அது மங்கோலியர்கள் பெரும்பான்மையாக இருந்த நகரம். பெரும்பான்மை என்பதைவிட அந்த நகரம் மங்கோலியர்களின் நகரம் என்றே ச�ொல்லலாம். சு டீ-யின் தந்தை ஹ�ோங் வு சீனாவில் யுவான் அரசப் பரம்பரை பேரரசை முடிவிற்குக் க�ொண்டுவந்துவிட்டு மிங் அரசப் பரம்பரை பேரரசைத் த�ொடங்கிவைத்தவர்.
மங்கோலிய எதிர்ப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கும் விதமாக மங்கோலிய யுவான் அரசப் பரம்பரையின் ப�ோது சீனாவில் குடியேறியிருந்த மங்கோலியர்களை வேர் அறுக்கும் விதமாக இளவரசர் சு டீ சீனாவின் தென்மேற்கில் இருக்கும் கூமிங் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். சு டீ-யின் கட்டளைப் படி ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவன் மா ஹி. இவன் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியச் சிறுவன். சிறுவனான மா ஹி-யின் ஆஜானுபாகுவான உடல் த�ோற்றமும் அறிவுக் கூர்மையும் சு டீ- யைக் கவர்ந்ததால் தான் அழிக்க வந்த இனத்தைச் சேர்ந்த சிறுவனுக்கே தன்னுடைய அரண்மனையில் அடைக்கலம் க�ொடுத்தார். அரண்மனையில் அந்த இஸ்லாமியச் சிறுவனின் பெயர் செங் ஹீ என்று மாற்றப்பட்டது. அரண்மனையில் இருந்தவர்கள் அவனைச் சான் ப�ோ என்றும் அழைப்பார்கள். சிறிது நாட்களிலேயே செங் 102
நவீனா அலெக்சாண்டர்
ஹீ, மா ஹி-க்கு மிகவும் பிடித்த நம்பிக்கைக்கு உரியச் சேவகனாக மாறிப்போனான். சிறுவன் சிறு பிள்ளையாகவே இருந்துவிடுவானா என்ன. இளமை காலத்திய செங் ஹீ பிரம்மாண்டமான த�ோற்றம் க�ொண்டவனாக இருந்தான். இளவரசர் மா ஹி-யுடன் வந்தால் அவனுடைய த�ோற்றமே துருத்திக்கொண்டு பார்ப்பவர்களின் கண்களைக் கவரும். இளமையில் செங் ஹீ இளவரசரின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாகிப்போனான். பேரரசர் ஹ�ோங் வு இறந்ததும் சீனப் பேரரசர் பதவிக்கு நடந்த குடும்பச் சண்டையில் மா ஹி-யைக் க�ொல்ல அவருடைய அண்ணன் மகனான சு யுன்வென் கூலிப் படை ஒன்றைக் கூமிங் அனுப்பிவைத்தான். கூலிப் படை ஏற்பாட்டை அறிந்துக�ொண்ட மா ஹி அரண்மனையைவிட்டு நாட�ோடியாக வெளியேறிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு மிகவும் உதவியாக இருந்து செயல்பட்டது அவருடைய நம்பிக்கைக்குரிய செங் ஹீ. அனுப்பிவைக்கப்பட்ட கூலிப்படையைச் செங் ஹீ ஏற்பாடு செய்த படையுடன் மா ஹி குழித�ோண்டிப் புதைத்துவிட்டார். கூலிப்படை வேலைக்கு ஆகாது என்று தாமதமாகத் தெரிந்துக�ொண்ட சு யுன்வென் இம்முறை ஒரு சிறிய படையை அனுப்பிவைத்தார். அதற்குள் மா ஹி தலைநகரின் மீது படையெடுத்துவிடச் சு யுன்வென் தலைமறைவாகிவிட்டார். அதற்குப் பிறகு இன்றுவரை சு யுன்வென் என்னவானார் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. மா ஹி கி.பி. 1402-ல் ய�ோங்லி என்கிற பட்டப் பெயருடன் சீனாவின் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார். பேரரசரின் நம்பிக்கைக்கு உரியச் செங் ஹீ-க்கு தலைமை தளபதி பதவி தந்து அழகு பார்க்கப்பட்டது. சீனாவின் பேரரசராக வந்தவர்களின் பெரும் கனவுகளைக் க�ொண்டிருந்தவர் மா ஹி. அவருடைய கனவுகளில் ஒன்று உலகின் மிகப் பெரும் வணிகக் கப்பல்களைக் கட்டி அதுவரை உலகம் அறிந்திராத நாடுகளையும் கண்டுபிடிக்கவேண்டும் என்பது. அதற்கு வேண்டி டிரஷர் ஷிப்ஸ் என்கிற பெயரில் 250 பெரும் கப்பல்களைக் கட்டினார். ப�ோதாததிற்கு 3500 சிறிய இரகக் கப்பல்களும், 1350 ர�ோந்து கப்பல்களும், 400 பெரிய இரகப் ப�ோர் கப்பல்களும், 400 சிறிய இரகப் ப�ோர் கப்பல்களையும் கட்டி முடிக்கக் கட்டளையிட்டார். ம�ொத்தமாகச் சேர்த்து 5900 கப்பல்கள். உலகம் அதுவரை கண்டிராத 103
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மிக மிகப் பெரும் வணிகக் கப்பல் ஊர்வலத்திற்கான ஏற்பாடு. இத்தகைய உலகம் கண்டிராத மாபெரும் கடல் வணிக வழி கப்பல் படைக்குத் தலைவராக (Commander-in-Chief) நியமிக்கப்பட்டவர் செங் ஹீ. செங் ஹீ-ன் சிறப்புகளுக்கு மேலும் ஒரு சிறப்பு. ஏறக்குறைய 6000 கப்பல்களைக் கட்டச் சீனா முழுவதிலிருந்தும் ஆயிரக் கணக்கில் கப்பல் கட்டும் த�ொழில் தெரிந்த தச்சர்கள் லாங்ஜியாங் கப்பல் கட்டும் தளத்திற்குக் க�ொண்டுவரப்பட்டு இரண்டே ஆண்டுகளில் கடல் பயணத்திற்குத் தேவையான அனைத்துக் கப்பல்களும் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. மா ஹி பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் உலகின் மிகப் பெரும் கடல் வழி வணிகக் குழு உலகை அளந்துவரவேண்டிப் புறப்படத் தயாராகி நின்றது. தலைமை தாங்கியவர் செங் ஹீ. இந்த மிகப் பெரும் வணிகக் குழு கி.பி. 1405-ல் தன்னுடைய முதல் உலகப் பயணத்தைத் த�ொடங்கியது. இந்தக் கடற் பயணத்திற்கான பெயர் தி வாயேஜஸ் ஆ டிரஷர் பிளீட்ஸ் (The Voyages of Treasure Fleets). மங்கோலிய இஸ்லாமியரான செங் ஹீ தன் கையில் வைத்திருந்தது 400 வருடங்களுக்கு முன்பு அரேபிய இஸ்லாமிய மாலுமிகளின் கடல் வழிப் பயணங்களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உலக வரைப் படத்தில் சேர்க்கப்பட்டிருந்த அமெரிக்க ஆஸ்திரேலியத் துருவப் பகுதிகளை உள்ளடக்கிய முழுமையான உலக வரைபடம். தன்னுடைய முதல் கடல் பயணத்திலேயே செங் ஹீ உலகம் முழுவதையும் சுற்றி வந்துவிட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இஸ்லாமிய மாலுமிகளால் இரண்டாம் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டு மறக்கப்பட்ட அமெரிக்கக் கண்டத்திற்குச் சென்ற முதல் சீன இஸ்லாமியர் செங் ஹீ. இந்த வகையில் அமெரிக்கக் கண்டம் மூன்றாம் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கண்டத்தின் தலையில் குறுக்கு வழியில் புகழைத் தேடும் நபர்களின் மூலம்தான் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்படவேண்டும் என்று எழுதியிருந்தது ப�ோலும். செங் ஹீ தன் வாழ் நாளில் 1405 த�ொடங்கி 1433 வரை ம�ொத்தம் ஏழு கடல் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கடற் பயணமும் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் நீடிக்கக் கூடியவைகள். அந்த வகையில் தன் ஆயுளில் ஏறக்குறைய 10 104
நவீனா அலெக்சாண்டர்
வருடங்களுக்கும் மேல் செங் ஹீ கடலிலேயே வாழ்ந்திருக்கிறார். இந்த ஏழு பயணங்களின் ப�ோது எந்தப் எந்த பயணங்களில், ஆண்டுகளில் அவர் அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ப�ோய் வந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் இன்றைக்குக் கிடைக்கவில்லை. இந்தப் பயணங்களின் மூலம் பல விசயங்களை அவர் கற்றுக்கொண்டார் என்பது மற்றும் தெளிவாகிறது. இதற்கு ஒரு உதாரணம் தன் முதல் கடற் பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பிய செங் ஹீ, 1407-ல் நான்ஜிங் நகரில் அன்றைய உலகின் முக்கிய ம�ொழிகளைக் கற்றுக்கொடுக்க வசதியான ம�ொழிக் கல்லூரியை நிறுவினார். தான் சென்று இறங்கும் நாட்டு மக்கள�ோடு த�ொடர்பு க�ொள்ளவே இந்த ஏற்பாடு. அவர் தன்னுடைய முதல் கடற் பயணத்திலேயே இதற்கான தேவையை உணர்ந்திருக்கவேண்டும். அவருடைய கல்லூரியில் ச�ொல்லிக்கொடுக்கப்பட்ட ம�ொழிகள் அராபிக், பெர்சியன், ஸ்வாஹிலி மற்றும் தமிழ். செங் ஹீ-யின் கல்லூரியின் மூலம் நமக்குக் கிடைக்கும் வரலாற்று தகவல் அன்றைய உலகில் தமிழ் ம�ொழியைக் கற்றுக்கொண்டால் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம் என்பது. இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் அதே சிறப்பு அன்றைக்குத் தமிழுக்கும் இருந்திருக்கிறது. இன்றைக்குச் செம்மொழியான தமிழ் ம�ொழி என்று பாட்டு எழுதியும் கூட உலகின் பல முக்கியப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு என்று தனி இடம் இல்லை. தன்னுடைய 1418-ஆம் ஆண்டின் கடற் பயணத்திற்குப் பிறகு தான் பயன்படுத்திய இஸ்லாமியர்களின் உலக வரைப் படத்தைத் தன்னுடைய பயண அனுபவங்களின் மூலம் மேலும் முழுமையானதாக மாற்றினார். உலகம் அதுவரை அறிந்திராத அமெரிக்க ஆஸ்திரேலியக் கண்டங்களின் முழுமையான நிலவியல் அமைப்புகளைக் க�ொண்ட உலக வரைப் படத்தைச் செங் ஹீ தன் கைகளில் வைத்திருந்தார். செங் ஹீ-யின் இத்தகைய சாதனைகள் அனைத்தும் பேரரசர் மா ஹி-யின் மரணத்தோடு முடிவிற்கு வந்தது. செங் ஹீ 1421-ஆம் ஆண்டில் தன்னுடைய ஆறாவது கடற் பயணத்தை முடித்த அடுத்த மூன்று ஆண்டுகளில் 1424-ல் பேரரசர் மா ஹி மரணமடைந்தார். அடுத்த பேரரசராக வந்த அவருடைய மகன் சு காவுசி தன் தந்தையைப் ப�ோலப் பெரிய கனவுகள் 105
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
க�ொண்டவர் கிடையாது. பழமைவாதச் சிந்தனைகள் உடையவர். சீனாவின் பழமைவாதம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பெரும் ஆடம்பரங்களை அனுமதிக்காத ஒன்று. பேரரசர் சு காவுசி, செங் ஹீ மேற்கொண்ட கடற் பயணங்கள் அனைத்தும் பெரும் ஆடம்பரமானது என்று கருதியதால் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்துக�ொள்ளாமல் செங் ஹீ கடற் பயணங்களுக்குத் தடை ப�ோட்டுவிட்டார். அத்துடன் மட்டுமாவது நிறுத்தியிருந்தால் வரலாற்றுக்குப் புண்ணியமாகப் ப�ோயிருக்கும் ஆனால் மனிதர் கடல் கடல் சார்ந்த ப�ொருள் என்று எது கண்ணில் பட்டாலும் அழித்துவிடும்படி கட்டளையிட்டுவிட்டார். சீனாவில் இருந்த அனைத்துக் கப்பல் கட்டும் தளங்களும் இழுத்து மூடப்பட்டன. இழுத்து மூடப்பட்டன என்பது தடவிக் க�ொடுக்கும் வார்த்தை உண்மையில் நடந்தது சீன இராணுவமே தன் நாட்டின் சிறப்புகளில் ஒன்றான கப்பல் கட்டும் தளங்களை நிர்மூலமாக்கிவிட்டது. செங் ஹீ-யைத் தவிர மற்ற அனைத்துக் கடற் பயணத் தளபதிகளும் அவமானப்படுத்தப்பட்டு அரசாங்கச் சேவையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். செங் ஹீ தன் தந்தையின் அன்புக்குரியவர் என்பதால் அவர் மட்டும் பேரரசரால் கண்ணியமாக நடத்தப்பட்டார். நான்ஜிங் நகரில் இருந்த அவருடைய அரண்மனையில் சகலவித அதிகாரங்களுடன் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார். அந்த நகரில் அவர் கட்டி வந்த மசூதி ஒன்றிற்கும் த�ொடர்ந்து ப�ொருளுதவி செய்யப்பட்டது. ஆனால் செங் ஹீ-யின் ஆறு கடற் பயணங்களையும் அவர் எந்த எந்த நாட்டிற்குச் சென்று என்ன என்ன ப�ொருட்களைக் க�ொண்டுவந்தார் என்பவைகளைப் பற்றி ஒன்றுவிடாமல் ஆவணமாகப் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த அரசாங்க ஆவணங்கள் அனைத்தும் சீன அரசாங்க ஊழியர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. இது த�ொடர்பாக ஒரு அரசாங்க அதிகாரியின் வரலாற்று குறிப்பு இன்றைக்குக் கிடைக்கிறது. ப�ோர் மந்திரி சபையில் முத்த அதிகாரியான லியு டாக்சியா, செங் ஹீ-யின் கடற் பயணச் சாதனைகள் குறித்த அரசாங்க ஆவணங்களை அழிக்க வேண்டியதின் அவசியத்தைக் குறித்து எழுதியது…. the expeditions of San Bao (செங் ஹீ) to the Western ocean wasted myriads of money and grain, and moreover the people who met their deaths may be counted 106
நவீனா அலெக்சாண்டர்
in the myriads.......betel, bamboo staves, grape-wine, pomegranates and ostrich eggs and such like things.....deceitful exaggerations of bizarre things far removed from the testimony of people’s eyes and ears மிக முக்கிய அரசாங்க அதிகாரிகளின் குறிப்பே தெளிவாகச் ச�ொல்கிறது செங் ஹீ-யின் கடற் பயணச் சாதனைகள் என்றென்றுமாகச் சீன மக்களின் நினைவுகளில் இருந்து அழிக்கப்படவேண்டும் என்று. இந்த நடவடிக்கையின் மூலம் மூன்றாம் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்கக் கண்டம் மீண்டும் ஒருமுறை வரலாற்றில் இருந்து முற்றிலுமாகத் துடைத்து அழிக்கப்பட்டது. இந்தத் துடைத்தழிப்போடு சேர்த்து ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியுசிலாந்தில் செங் ஹீயால் குடியேற்றப்பட்ட சீன மக்களும் என்றென்றைக்குமாகக் கைவிடப்பட்டு மறக்கப்பட்டுப்போனார்கள்.
107
டிய�ோடிஹூக்கான், சப�ோடெக், ட�ோல்டெக், ஏஸ்டெக் நாகரீகங்கள்
"ஆணின் உடல் டிஸ்டி மரத்திலிருந்து வடிக்கப்பட்டது. புற்களைக் க�ொண்டு உருவாக்கப்பட்டது பெண்ணின் உடல். – ப�ோபல் வு (Popol Vuh)”
டி
ய�ோடிஹூக்கான் நாகரீகம்
மீச�ோ அமெரிக்க நாகரீகத்தைக் கட்டமைப்பதில் தென் கிழக்கு மெக்சிக்கோ, குவாத்தமாலா, பெல்சி, ஹ�ோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் நிலப்பகுதிகளைத் தவிர்த்து வட கிழக்கு மற்றும் மத்திய மெக்சிக்க நிலப்பகுதிகளுக்கும் மிகப் பெரிய பங்குண்டு. வட கிழக்கு மத்திய மெக்சிக்க நிலப்பகுதி தாழ்நில சமவெளி நிலப்பகுதிகளைக்கொண்டது. தற்கால மெக்சிக்கோ சிட்டியின் வடக்கில் இருந்த நகரம் ஒன்று இன்றையிலிருந்து 3000
108
நவீனா அலெக்சாண்டர்
வருடங்களுக்கு முன்பு வடக்கு மெக்சிக்கோவின் மிகப் பெரும் பேரரசாக மாற்றமடையும் அடையாளங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது. அது டிய�ோடிஹூக்கான் நகரம். இந்தப் பெயரை நாம் மாயன் நாகரீகத்தைக் குறித்துப் பார்த்தப�ோதே அறிமுகப்படுத்திக்கொண்டோம்தானே. தெற்கில் மாயன் நகரங்கள் தனித் தனியாகப் பேரரசுகளை உருவாக்கிக்கொண்டிருந்த சமக் காலத்தில் வடக்கில் ஒற்றை நகரமாகப் பேரரசாக மாறிக்கொண்டிருந்தது டிய�ோடிஹூக்கான். கிருஸ்துவுக்கு பின்பான ஆறாம் நூற்றாண்டளவில் உலகின் அதிக மக்கள் த�ொகை க�ொண்ட ஆறு மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது டிய�ோடிஹூக்கான். சுமார் கி.பி. 550-கள் வாக்கில் அந்த நகரில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் த�ொகை இருந்திருக்கவேண்டும் என்று அனுமானிக்கப்படுகிறது. மீச�ோ அமெரிக்காவின் மிக உன்னதக் கலைகள், ஆளை மிரட்டும் பிரம்மாண்டமான பிரமிட் கட்டிடங்கள், பிற பயன்பாடுகளுக்கான கட்டிடங்களை உருவாக்கியது டிய�ோடிஹூக்கான் நாகரீகம். மாயன் நாகரீகத்தின் கலைகளும், பிரமிட் கட்டிடக் கலைகளும் ஒப்பீட்டளவில் டிய�ோடிஹூக்கானுக்கு ஒரு படி கீழ்தான். டிய�ோடிஹூக்கான் நாகரீகத்தின் செல்வாக்கை மாயன் நாகரீகக் கலைகள் மற்றும் பிரமிட் கட்டிடக் கலைகளிலும் காண முடியும். டிய�ோடிஹூக்கான் நகரம் ஏறத்தாழ 20 சதுரக் கில�ோமீட்டர்களை உள்ளடக்கியது. நிறுத்தி நிதானமாக நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். வடக்கு தெற்காகச் செல்லும் இறந்தவனின் தெரு (The Street of the Dead) என்கிற மிக நீண்ட சாலை நகரை மேற்கு கிழக்காகப் பிரிக்கிறது. சாலையின் வடக்கு பகுதியில் மீச�ோ அமெரிக்காவின் மிகப் பெரிய கட்டிடங்களான நிலவு க�ோயிலும், சூரியக் க�ோயிலும் இருக்கின்றன. இரண்டும் பிரம்மாண்டமான பிரமிடுகளைக்கொண்ட க�ோயில் வளாகங்கள். சூரியக் க�ோயிலின் பிரமிட் இயற்கையாக அமைந்த நிலத்தடி குகை ஒன்றின் மீது கட்டப்பட்டது. அந்தக் குகையின் மையப் பகுதியில் இயற்கையாக அமைந்த நான்கு அறைகளும் இருக்கின்றன. மிகச் சரியாக இதற்கு மேல்தான் சுமார் இருபது 109
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மாடிகள் உயரம் க�ொண்ட சூரியப் பிரமிட் கட்டப்பட்டிருக்கிறது. டிய�ோடிஹூக்கான் நாகரீகத்தின் ப�ொற்காலக்கட்டத்தில் (கி.பி. 400-500) டிய�ோடிஹூக்கான் நகருக்குள் சுமாராக 200 மேற்பட்ட சிறிய பிரமிடுகள் இருந்திருப்பதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
பிரமிடுகளைத் தவிர்த்து நகருக்குள் பேரரசர்களுக்கான அரண்மனை கட்டிடங்களும் (நகரின் வடமேற்கு பகுதியில்), குடிமக்களுக்கான அடுக்குமாடி வீடுகளும் (நகரின் வடகிழக்கு பகுதியில்), மிகப் பெரும் சந்தை வளாகமும் (நகரின் தென்மேற்கு பகுதியில்) இருந்திருக்கிறது. குடியிருப்பு பகுதியில் மூவாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் வீடுகள் இருந்திருக்கின்றன. நகருக்குள் பல வெளிநாட்டைச் சேர்ந்த மக்களும் வசித்ததற்கான ஆதாரங்களும் கிடைக்கின்றன. வணிகம் மற்றும் இராணுவம் இது இரண்டும்தான் டிய�ோடிஹூக்கான் பேரரசின் மிகப் பெரும் பலங்கள். பல பேரரசுகளுடனான வணிகத்தை வளர்த்தெடுப்பதற்காகவும் அதைப் பலப்படுத்துவதற்காகவும், தக்கவைத்துக்கொள்வதற்காகவும் பெரும் இராணுவத்தைக் கட்டியாண்டிருக்கிறது டிய�ோடிஹூக்கான் பேரரசு. முதலில் தூர நாடுகளுடனான 110
நவீனா அலெக்சாண்டர்
வணிகத் த�ொடர்பை ஏற்படுத்திக்கொள்வது பிறகு தன்னுடைய இராணுவப் பலத்தைக்கொண்டு அந்த நாடுகளைத் தன்னுடைய பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவந்துவிடுவது இதுதான் டிய�ோடிஹூக்கான் பேரரசர்களின் வெளிநாட்டுக்கொள்கை. தென் கிழக்கில், சில நூற்றாண்டுகளுக்கு மாயன் நாகரீகம் முழுக்க (பீட்டன் மற்றும் யுக்கட்டான் நிலப்பகுதி உட்பட) டிய�ோடிஹூக்கான் பேரரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. டிய�ோடிஹூக்கான் வம்சாவளி பேரரசர்கள் மாயன் பேரரசுகளை ஆட்சி செய்ததும் நடந்திருக்கிறது. தென் மேற்கில் சப�ோடெக் பேரரசை அடக்கி ஆட்சி செய்யவில்லை என்றாலும் டிய�ோடிஹூக்கான் இராணுவம் த�ொடர்ச்சியாகச் சப�ோடெக் பேரரசில் இருந்திருக்கிறது. டிய�ோடிஹூக்கான் நகரின் வணிகச் செயல்பாடுகளைச் சுமூகமாக நடத்திச் செல்ல வேண்டி. சப�ோடெக் பேரரசு நிலவியல் ரீதியில் இயற்கையாகவே அதிகப் பாதுகாப்பு அரண்களுடன் இருந்ததால் டிய�ோடிஹூக்கான் இராணுவத்தின் நாடு பிடிக்கும் வெறி அங்குப் பலிக்கவில்லை. அதற்காக டிய�ோடிஹூக்கான் இராணுவத்தைக் குறைவாக எடைப�ோட்டுவிடுவது கூடாது. மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் டிய�ோடிஹூக்கான் பேரரசில், அந்த நகருக்குள் குடிபெயர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது மிகவும் மதிப்பிற்கு உரியச் சங்கதி. பல நூறு மையல்களுக்கு அப்பாலிருந்தும் கூட டிய�ோடிஹூக்கான் நகரில் ‘புதிய வளமான வாழ்க்கையை’ த�ொடங்க மீச�ோ அமெரிக்கப் பழங்குடிகளில் பலர் நகருக்குள் வந்த வண்ணமிருந்திருக்கிறார்கள். டிய�ோடிஹூக்கான் நகருக்குள் குடியுரிமை பெறுவது என்பது அவ்வளவு எளிமையான கதை கிடையாது. வெளியாட்களுக்கு அல்லது மற்ற பழங்குடிகளைச் சேர்ந்தவர்களுக்கு நகருக்குள் இடம் வேண்டுமென்றால் அந்தக் குழுவைச் சேர்ந்த ஆண்கள் டிய�ோடிஹூக்கான் இராணுவத்தில் சேர்ந்து பேரரசிற்குப் பணி செய்தாக வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நகருக்குள் குடியுரிமை கிடைக்கும். மற்ற நிலப்பகுதிகளின் இயற்கை வளங்களைக் கைப்பற்றத் த�ொடர்ச்சியாகப் பல பேரரசுகளுடன் ப�ோரில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும் 111
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
டிய�ோடிஹூக்கான் இராணுவத்தில் சேர்வதும் ஒன்றுதான் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொள்வதும் ஒன்றுதான். ஆனால் வேறு வழி கிடையாது. தன் குடும்பத்திற்கு டிய�ோடிஹூக்கான் பேரரசில் மதிப்பிற்குரிய, வசதியான, வளமான வாழ்கை அமைத்துக்கொடுக்கவேண்டுமென்றால் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொள்ளத்தானே வேண்டும். இதன் காரணமாக டிய�ோடிஹூக்கான் இராணுவத்தில் மீச�ோ அமெரிக்காவைச் சேர்ந்த பல பழங்குடி இன வீரர்கள் ப�ோர் வீரர்களாகச் சேவை செய்திருக்கிறார்கள். அது மாத்திரமல்ல அவர்கள் ஈடுபட்ட ப�ோர்களில் எத்தனை எதிரிகளின் தலைகளைக் காவு வாங்கினார்கள் என்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் க�ொன்ற மனிதர்களின் கீழ்த் தாடை எலும்புகளை மாலையாகக் க�ோர்த்துக் கழுத்திலும் அணிந்து உலாவந்திருக்கிறார்கள். என்ன செய்து என்ன… இறுதியில் டிய�ோடிஹூக்கானை சேராத இராணுவ வீரர்கள் டிய�ோடிஹூக்கான் பேரரசர்களுக்காக நிகழ்த்தப்படும் விழா சடங்குகளின் ப�ொழுது இரண்டு கைகளும் கால்களும் பின்னால் கட்டப்பட்டு உயிருடன் குழிக்குள் புதைக்கப்பட்டு நரபலி க�ொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான த�ொல்லியல் ஆதாரங்கள் டிய�ோடிஹூக்கானில் காணக் கிடைக்கின்றன. பேரரசாக உருவெடுக்கும் அனைத்து நாகரீகங்களும் இறுதியில் தலைகுப்புறச் சரிந்துவிடும் காட்சிகளை வரலாறு த�ொடர்ந்து தனக்குள் மெளனச் சாட்சியாகப் பதிவு செய்தபடி வருகிறது. டிய�ோடிஹூக்கானும் அதற்கு விதிவிலக்காகவில்லை. சுமார் கி.பி. 530-களில் மாயன் பேரரசுகளில் இருந்த தனது ஆதிக்கத்தையும் அரசியில் த�ொடர்புகளையும் மெல்லப் பின் வாங்கிக்கொண்டது டிய�ோடிஹூக்கான். சப�ோடெக் பேரரசிலிருந்தும் தன்னுடைய இராணுவத்தைப் பின் வாங்கிக்கொண்டுவிட்டது. அதற்கான காரணம் உள் நாட்டில் த�ொடங்கிய அரசியல் குழப்பங்கள். தன்னுடைய ச�ொந்த இராணுவத்தைத் தாண்டி மற்ற மீச�ோ அமெரிக்க உதிரி பழங்குடிகளைச் சேர்ந்த வீரர்களைக் கூலிப்படைகளாக அமர்த்திக்கொண்டது டிய�ோடிஹூக்கானுக்கு வினையாகிப்போனது. காசுக்கு மாரடிக்கும் கூலிப்படைகளும் 112
நவீனா அலெக்சாண்டர்
அதன் தலைவர்களும் எவ்வளவு நாட்களுக்குத்தான் டிய�ோடிஹூக்கான் பேரரசர்களுக்காகப் ப�ோர் களங்களிலும், விழா சடங்குகளிலும் தங்களைப் பலிக�ொடுத்துக்கொண்டே இருப்பது. அவர்களுக்கும் பேரரசு பதவியை ருசி பார்க்க ஆவல் இருக்காதா என்ன. இருந்தது. அதுவே டிய�ோடிஹூக்கானின் முடிவிற்கும் காரணமாகிப்போனது. சுமார் கி.பி. 650 வாக்கில் டிய�ோடிஹூக்கான் நகரில் இருந்த அனைத்துப் பிரம்மாண்டக் கட்டிடங்களும் (பிரமிட் த�ொடங்கி எதுவும் விட்டு வைக்கப்படவில்லை) அடித்து ந�ொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. மிகக் குறிப்பாகப் பேரரசர்களின் அரண்மனை கட்டிடங்கள் குறிவைத்துச் சிதைக்கப்பட்டிருக்கிறது. எதிரில் தென்பட்டவர்கள் அனைவரும் தலையில் அடித்து மண்டைய�ோடு ந�ொறுக்கப்பட்டுச் சாகடிப்பட்டிருக்கிறார்கள். சிதறு தேங்காயாக ந�ொறுக்கப்பட்ட மண்டைய�ோடுகளுடன் கூடிய உடல்கள் அரண்மனை கட்டிட இடிபாடுகளில் இருந்து த�ொல்லியல் ஆதாரங்களாகக் கிடைக்கின்றன. திட்டமிட்ட இந்த டிய�ோடிஹூக்கான் நகர அழித்தொழிப்பு ஒரு நாள் இரவில் நடத்தி முடிக்கப்பட்ட கையுடன் ஓய்ந்துவிடவில்லை. பலநாட்களுக்குத் த�ொடர்ந்து அந்த நகரம் சிதைக்கப்பட்டிருக்கிறது. எரியூட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்கான பேரரசுகளை உருவாக்கிக்கொள்ளக் கூலிப் படை தலைவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருப்பதற்கான அனைத்து வரலாற்று சாத்தியங்களும் தெளிவாகவே இருக்கின்றன. டிய�ோடிஹூக்கான் நகரம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டு அதில் வசித்த இலட்சக்கணக்கான மக்கள் அதைக் கைவிட்டு வெளியேறிய பிறகு அதற்கு அருகில் கக்கஸ்ட்லா (Cacaxtla) மற்றும் ச�ோச்சிகால்கோ (Xochicalco) நகரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு நகரங்களும் அமைப்பிலும் கலை பண்பாட்டிலும் டிய�ோடிஹூக்கானை அப்படியே படியெடுத்ததைப் ப�ோலவே இருந்திருக்கிறது. இந்த இரு நகரங்களையும் உருவாக்கியது உதிரியாக இருந்த கூலிப் படை தலைவர்களும் அவர்கள் சார்ந்த இனக் குழுக்களும் என்பது தெரிகிறது.
113
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
சப�ோடெக் நாகரீகம் மெக்சிக்கோவின் தென் மேற்குப் பகுதியில் (பசிபிக் பெருங்கடலை ந�ோக்கிய பகுதி) இருப்பது ஓக்சாக்கா (Oaxaca). இந்தப் பகுதியில் கி.மு. 1400-கள் த�ொடங்கி மீச�ோ அமெரிக்கத் த�ொல் பழங்குடிகளின் கிராமக் குடியிருப்புகள் த�ோன்றியிருக்கிறது. இவைகள் நகரங்களாக உருவெடுக்கவில்லை என்றாலும் அப்போதைய சமகால ஓல்மெக் நாகரீக நகரங்களுடன் த�ொடக்க நிலை வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. சுமார் கி.மு. 500-களில் மெல்ல மெல்ல வணிக நகரங்களும் அது சார்ந்த குடியிருப்புகளும் இந்த நிலப்பகுதியில் உருவெடுத்தது. கி.மு. 100 வாக்கில் ஓக்சாக்கா நிலப்பகுதியில் ஏழு பெரு நகரங்கள் த�ோன்றிவிட்டிருந்தன. அவைகளுக்கு என்று தனித்த தலைநகரங்களும் அரசர்களும் இராணுவக் கட்டமைப்பு இருந்தது. ஓக்சாக்கா நிலப்பகுதியின் ஒட்டும�ொத்தக் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ஏழு நகரங்களும் ஒன்றுடன் ஒன்று அடித்துக்கொண்டன. இறுதியில் ம�ோன்டே அல்பான் (Monte Alban) நகரம் ஓக்சாக்கா நிலப்பகுதியின் பேரரசு அதிகாரப் பீடமாக மாறியது. இது நடந்தது கி.பி. 200-களில். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஓக்சாக்கா நிலப்பகுதியைச் சுற்றியிருந்த (50 கில�ோமீட்டர்கள் சுற்றளவில்) நாற்பதுக்கும் மேற்பட்ட மற்ற மீச�ோ அமெரிக்கப் பழங்குடிகளின்
114
நவீனா அலெக்சாண்டர்
கிராம-நகரங்களை கைப்பற்றிக்கொண்டு தன்னுடைய பேரரசு மேலாண்மையை நிலைநிறுத்தியது சப�ோடெக். நகரக் கட்டுமானத்தில் ஏறக் குறைய ம�ோன்டே அல்பான், டிய�ோடிஹூக்கான் நகரையே ஒத்திருந்தது. ட�ோல்டெக் நாகரீகம் கடவுளர்களின் நிலம் (The Land Of The Gods) இதுதான் ட�ோல்டெக் பேரரசின் தலைநகரான ட�ோலான் (Tollan) நகரின் பெயருக்கான ப�ொருள். ட�ோல்டெக் பேரரசு டிய�ோடிஹூக்கான் நகருக்கு அருகிலிருந்த டூலா (Tula) நிலப்பகுதியில் த�ோற்றம் பெற்ற பேரரசு. டிய�ோடிஹூக்கான் பேரரசு உச்சத்திலிருந்த சமயத்தில் டூலாவில் சிறிய அதிகாரப் பீடத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் டிய�ோடிஹூக்கானின் வீழ்ச்சி த�ொடங்கிய பிறகு கி.பி. 650-களில் அதன் அதிகாரத்திலிருந்து விடுபட்டுவிட்ட டூலா தனிப்பெரும் நகரமாக வளர்ந்தது.
டிய�ோடிஹூக்கானின் முழுமையான வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 800ல் ட�ோலானை தலைநகராகக் க�ொண்டு ட�ோல்டெக் பிராந்தியப் பேரரசாக வளரத் த�ொடங்கியது. சமயம், கலை, கட்டிடக் கலை, அரசியல், இராணுவம் என்று பல வகைகளில் ட�ோல்டெக் பேரரசு மற்ற முந்தைய மீச�ோ அமெரிக்கப் பேரரசுகளை ஒத்திருந்தாலும் 115
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
அதுவரை மீச�ோ அமெரிக்க மண் கண்டிராத ஒரு புதிய சமயச் சடங்கை முதன் முதலாக மீச�ோ அமெரிக்க நாகரீகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. நரபலி. நரபலி என்கிற விசயம் முந்தைய மீச�ோ அமெரிக்க நாகரீகங்களுக்குப் புதுமையானது இல்லை என்றாலும் ட�ோல்டெக்குள் முன்னெடுத்த நரபலிக்குப் பின்னால் இருந்த சமய விளக்கம் என்பது புதுமையானது. மண்ணில் மனிதர்களின் நலனுக்காக விண்ணில் கடவுளர்கள் மிகவும் குறிப்பாகச் சூரியன் கெட்ட சக்திகளுடன் செய்யும் த�ொடர்ச்சியான ப�ோர்களில் மனிதர்கள் சூரியனுக்கு உதவும் விதமாகத் தங்களைத் தாங்களே முன் வந்து நரபலி க�ொடுத்துக்கொள்வது. நரபலி க�ொடுக்கப்படுபவரின் ஆன்மா விண்ணுலகம் சென்று சூரியனுடன் சேர்ந்துக�ொண்டு அந்தகாரத்தின் கெட்ட சக்திகளுடன் ப�ோர் புரியும் என்பது அவர்கள் நீட்டி முழக்கிய நரபலி க�ொள்கை விளக்கப் பிரச்சாரமாக இருந்தது. இப்படிச் சூரியக் கடவுளுக்கு உதவ நரபலி க�ொடுப்பதற்காக வேண்டி ட�ோல்டெக் பேரரசைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து உதிரி மீச�ோ அமெரிக்க இனக் குழு மக்களை அடிமைகளாகப் பிடித்து வரும் பழக்கம் த�ொடங்கியது. ட�ோல்டெக் நாகரீக வீழ்ச்சிக்குப் பிறகு டூலா பகுதியில் ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் ஏஸ்டெக் நாகரீகத்தை உருவாக்கிய மக்கள் சூரியக் கடவுளுக்கு உதவும் நரபலி பழக்கத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்தார்கள். இப்பொழுது கிடைக்கும் ட�ோல்டெக் எழுத்து ஆதாரங்கள் குவாட்ஸ்சல்குவாட்டல் (Quetzalcoatl) என்பவரே ட�ோல்டெக் நாகரீகத்தையும் அதன் முதல் நகரத்தையும் உருவாக்கியதாகக் குறிப்பிடுகின்றன. குவாட்ஸ்சல்குவாட்டல் (பாம்பின் உடலில் பறவையின் இறக்கை க�ொண்ட ஒரு உருவம்) மீச�ோ அமெரிக்க மண்ணின் பிரசித்திபெற்ற காற்று மற்றும் மழை கடவுள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குவாட்ஸ்சல்குவாட்டல் டூலா நகரை உருவாக்கியிருந்தாலும் அங்கே ஏற்பட்ட சமயச் சண்டையில் (கடவுளர்களுக்கு உதவி செய்ய மனிதர்களைப் பலி க�ொடுப்பதைக் குவாட்ஸ்சல்குவாட்டல் தடுத்ததாகவும் அதன் காரணமாகச் சூழ்ச்சிக்கு இறையாகி டூலாவை விட்டு வெளியேற்றப்பட்டார் என்றும் எழுத்து ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன) வெளியேற்றப்பட்டு நாடற்றவராக 116
நவீனா அலெக்சாண்டர்
அலையவிடப்பட்டார். பல நூறு கில�ோ மீட்டர்கள் தெற்கே பயணம் செய்து வந்த அவர் யுகட்டான் பகுதியை அடைந்து அதற்கு மேலும் பயணம் செய்வதில் நம்பிக்கை இழந்தவராக ஒரு படகை அமர்த்திக்கொண்டு அட்லாண்டிக் கடலில் இறங்கிச் சூரியனை ந�ோக்கிச் சென்றுவிட்டார் என்று அந்த எழுத்து ஆதாரங்கள் விவரித்துச் செல்கின்றன. அப்படிப் ப�ோகும்போது சும்மாயில்லாமல் தான�ோ அல்லது தன்னுடைய மகன்கள�ோ திரும்ப வந்து தான் உருவாக்கிய பேரரசை மீட்டுக்கொள்வோம் என்று ச�ொல்லி வைத்துவிட்டும் ப�ோய்விடுகிறார். இந்தக் கதை பிற்காலத்தில் மீந்திருந்த ஒன்றிரண்டு மீச�ோ அமெரிக்க நாகரீகங்களிலும் ஏஸ்டெக் நாகரீகத்திலும் மிகப் பெரும் நம்பிக்கையாக மாறிப்போனது. அட்லாண்டிக் கடல் வழியாக ஒரு நாள் கண்டிப்பாகக் குவாட்ஸ்சல்குவாட்டல�ோ அல்லது அவருடைய மகன்கள�ோ திரும்ப வருவார்கள் என்று தலைமுறை தலைமுறையாகத் திடமாக நம்பினார்கள் ஏஸ்டெக்குகள். இந்த நம்பிக்கையின் காரணமாகவே பதினைந்தாம் நூற்றாண்டுகளில் கடல் வழியாக வந்த ஸ்பானியர்களைக் குவாட்ஸ்சல்குவாட்டலும் அவருடைய பிள்ளைகளுமாக இருக்கும�ோ என்கிற தடுமாற்றத்துக்கும் அவர்களைக் க�ொண்டு சென்றது. டிய�ோடிஹூக்கான் நாகரீகத்தைப்போலவே மிகப் பெரும் அதே சமயத்தில் மிக நீண்ட த�ொலைவு வணிகத் த�ொடர்புகளை உண்டாக்கினார்கள் ட�ோல்டெக்குகள். தெற்கில் ஹ�ோண்டுராசை தாண்டிக் க�ோஸ்டோ ரீக்கா வரையிலும், வடக்கில், வட அமெரிக்காவின் (இன்றைய அமெரிக்கா) தென் மேற்கு நிலப்பகுதிகள் வரைக்கும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் ட�ோல்டெக்குகள். மெக்சிக்கோவின் வடக்கு சமவெளியில் பலமாக இருந்த அதே சமயத்தில் மாயன் நிலப்பகுதியின் வடக்கு பகுதியிலும் (யுகட்டான்) ட�ோல்டெக்குகளின் சார்பாக ஒரு பேரரசு த�ோன்றியது. அது சிச்சன் இட்சா (Chichen Itza). மாயன் நாகரீகத்தின் ஒட்டும�ொத்த வீழ்ச்சியின் ப�ோது மத்திய நிலப்பகுதி பேரரசு நகரங்களும், தெற்கு நிலப்பகுதி பேரரசு நகரங்களும் மண்ணோடு மண்ணாகிக் க�ொண்டிருக்க வடக்கிலிருந்த உக்ஸ்மால் பேரரசு மாத்திரம் தாக்குப்பிடித்துக் கதையை ஓட்டிக்கொண்டிருந்தது. 117
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
உக்ஸ்மால் பேரரசு தாக்குப்பிடிக்க ட�ோல்டெக் பேரரசைச் சேர்ந்த இராணுவப் பயிற்சி பெற்ற கூலிப்படைகள் உதவி செய்துக�ொண்டிருந்தன. ட�ோல்டெக் கூலிப்படைகளுக்குத் துணையாக வந்து சேர்ந்தவர்கள் மாயன் இனக் குழுவின் ஒரு கிளைப் பிரிவான இட்சா இனக் குழு. மாயன் இட்சா இனக் குழுவின் பூர்வீகம் இன்றைய டபாஸ்கோவின் தெற்கு பகுதியாக இருக்கலாம் என்று ஆய்வாளர் அனுமானம் செய்கிறார்கள். ட�ோல்டெக் கூலிப் படைக்குத் துணையாக வந்த மாயன் இட்சா இனக் குழு வில் அம்பு ஆயுதத்தைக் கையாள்வதில் மிகக் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். மற்ற மாயன் இனக் குழுக்களிடம் இல்லாத ஒரு அம்சம் இது. கூலிப் படையும் அதன் கூட்டாளிகளும் பேரரசுகளைக் கவிழ்ப்பது டிய�ோடிஹூக்கான் பேரரசின் அழிவு த�ொடங்கி நாம் பார்க்கும் சங்கதி. அதே சங்கதிதான் உக்ஸ்மாலிலும் வேலைச் செய்தது. ட�ோல்டெக் கூலிப்படைகளும், மாயன் இட்சா இனக் குழு வீரர்களும் சேர்ந்துக�ொண்டு உக்ஸ்மால் நகரைச் சூறையாடித் தீக்கிரையாக்கிப்போட்டார்கள். இத்தனைக்கும் உக்ஸ்மால் மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த ஒன்றுதான். உக்ஸ்மாலின் கதையை முடித்தபிறகு அந்தப் பகுதியில் ஒரு புதிய பேரரசுக்கான த�ோதான நகரமாகச் சிச்சன் இட்சா தேர்ந்தெடுக்கப்பட்டது. ட�ோல்டெக்
கூலிப் படைகள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க இரண்டு 118
நவீனா அலெக்சாண்டர்
முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று யுகட்டான் பகுதியின் உப்பு மற்றும் தேன் உற்பத்தி அதிலிருந்து கிடைக்கும் வணிக இலாபம். இரண்டாவது இயற்கையாக அமைந்து ஆழ் துளை கிணறு. இது த�ொல் பழங்காலம் த�ொட்டே மீச�ோ அமெரிக்கப் பழங்குடிகளின் புண்ணிய யாத்திரை தளமாக இருந்த பகுதி. இதன் பெயர் புனிதச் சீன�ோட் (Sacred Cenote). (இந்தக் கிணற்றுக்குள்ளிருந்து கி.மு. 800 த�ொடங்கிக் கி.பி. 1550 வரையிலான காலக்கட்டத்தைச் சேர்ந்த த�ொல்லியல் ப�ொருட்கள் கிடைத்திருக்கின்றன.) அழிக்கப்பட்ட உக்ஸ்மால் நகருக்குக் கிழக்கு-வடகிழக்கில் 135 கில�ோ மீட்டர்கள் த�ொலைவில் இருந்தது அன்றைய சிச்சன் இட்சா நகரம். இது நடைபெற்றது கி.பி. 987-ல். த�ொடக்கத்தில் சிச்சன் இட்சா பேரரசு ட�ோல்டெக்குளின் ஆதிக்கத்திலேயே இருந்தது. மாயன் இட்சா இனக் குழு அவர்களுக்கு அடங்கியவர்களாகவே அந்தப் பேரரசில் அவர்களின் கணக்கைத் த�ொடங்கினார்கள். மீச�ோ அமெரிக்க நாகரீகத்தின் படு பிரம்மாண்டமான பிரமிடுகளில் ஒன்றான குல்குல்கான் பிரமிட் (எல் காஸ்டில�ோ என்கிற தற்காலத்திய பெயரும் இதற்கு உண்டு) சிச்சன் இட்சா பேரரசின் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
119
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
நகரின் பெயரில் மாயன் இனக் குழு பெயரான இட்சா ஒட்டிக்கொண்டிருந்தாலும் அது முழுக்க முழுக்க மத்திய மெக்சிக்க ட�ோல்டெக்குகளின் நகரத் திட்டமிடல், க�ோயில் மற்றும் பிரமிட் கட்டிடக் கலைகளையே தன்னிடம் க�ொண்டிருந்தது.
ட�ோல்டெக் பேரரசின் முடிவு கி.பி. 1100-ல் வந்த சேர்ந்தது. சிச்சன் இட்சாவிலும் ட�ோல்டெக்கின் அதிகாரம் சரிந்து சிச்சன் இட்சா நகரமும் கி.பி. 1187-ல் மண்ணோடு மண்ணாகிப்போனது. ஏஸ்டெக் நாகரீகம் முன்பு டிய�ோடிஹூக்கான் பேரரசு த�ோன்றி வீழ்ந்துப�ோன அதே நிலப்பகுதியில் த�ோன்றிய அடுத்த மத்திய மெக்சிக்க பேரரசு ஏஸ்டெக். ஏஸ்டெக் நாகரீகத்துக்கான த�ோற்ற கதை மூன்று விதமாகச் ச�ொல்லப்படுகிறது. முதலாவது, ட�ோல்டெக் பேரரசும் அந்த நகரமும் வீழ்ச்சியடைந்த பிறகு அதிலிருந்து வெளியேறிய மக்கள் அகதிகளாக மத்திய மெக்சிக்க நிலப்பகுதி வந்து சேர்ந்து அதிலிருந்து ஏஸ்டெக் பேரரசு த�ோன்றியது என்பது. இரண்டாவது, த�ொல் பழங்கால அஸ்ட்லான் (Aztlan) நகரிலிருந்து வந்தவர்கள் ஏஸ்டெக் நாகரீகத்தை நிறுவினார்கள் என்பது. மூன்றாவது, த�ொல்பழங்காலம் முதலே அந்த நிலப்பகுதியில் சுற்றித் திரியும் 120
நவீனா அலெக்சாண்டர்
வாழ்கை முறைக�ொண்ட இனக் குழுக்கள் ஒன்றிணைந்து ஏஸ்டெக் நாகரீகத்தை உருவாக்கினார்கள் என்பது.
த�ொல்லியல் ஆதாரங்களின் வழி பார்க்கையில் பதினான்காம் நூற்றாண்டு வாக்கில் தங்களை மெக்சிக்கா என்று அழைத்துக்கொண்ட சில இனக் குழு மக்கள் மத்திய மெக்சிக்கோ நிலப்பகுதியின் மூன்று வெவ்வேறு இடங்களில் ஒன்றிணைந்து வசித்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. மெக்சிக்கா இனக் குழு மக்களின் வாழ்நிலை மிகவும் கீழ் நிலையில் இருந்திருக்கிறது. டிய�ோடிஹூக்கான் மற்றும் ட�ோல்டெக் பேரரசுகளின் வீழ்ச்சிகளுக்குப் பிறகு மத்திய மெக்சிக்கோ நிலப்பகுதியில் அதிகாரம் மிக்க சிறு சிறு பிராந்திய நகரங்கள் த�ோன்றின. அந்த நகரகங்களுக்கு உதவி செய்யும் வகையில் அவைகளுக்குப் ப�ோர் வீரர்களை வழங்கியிருக்கிறது மெக்சிக்கா இனக் குழு. அவர்கள் பெரும்பான்மையாக வசித்த இடத்திற்கு அருகில் இருந்த அஸ்கப�ோட்சல்கோ (Azcapotzalco) நகரின் தலைவரிடம் தங்களுக்கென்று ஒரு நகரை உருவாக்கிக்கொள்ளத் துண்டு நிலம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள். உருப்படாத 121
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
பாடாவதி நிலம் அவர்களுக்குத் தரப்பட்டது. அந்தப் பாடாவதி நிலத்திலிருந்து மிகப் பெரும் பேரரசு ஒன்று உருவாகக் கூடும் என்பதை அஸ்கப�ோட்சல்கோ நகரின் தலைவர் கனவிலும் கூட நினைத்திருக்கமாட்டார்தான். அந்த நிலத்தில் தங்களின் நகரை உருவாக்கக் கிளம்பிய மெக்சிக்கா இனக் குழு மக்களுக்கு முன்பாகத் தென்பட்ட சப்பாத்தி கள்ளி செடியின் மீது கழுகு ஒன்று வாயில் பாம்புடன் வந்து அமரும் காட்சி தென்பட்டிருக்கிறது. தெய்வக் கடாட்சம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அந்தப் பாடாவதி நிலத்தில் டென�ோசிடிட்லான் (Tenochtitlan) மற்றும் டாடில�ோக்கோ (Tlatelolco) என்கிற அவர்களுடைய இரட்டை நகரங்களை உருவாக்கினார்கள். சுமார் கி.பி. 1325-ல் இந்த இரு நகரங்களும் த�ோன்றியிருக்கவேண்டும். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு எப்படியான பிரச்சனைகளும் இல்லாமல் நகர்ந்தது டென�ோசிடிட்லானிலும் டாடில�ோக்கோவிலும். அஸ்கப�ோட்சல்கோ நகரின் தலைவர்களுக்குப் பேரரசு கனவு வந்துவிடவே மத்திய மெக்சிக்க நிலப்பகுதி முழுவதிலும் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட உதிரி இனக் குழுக்களின் மீது தாக்குதல் நிகழ்த்தி அவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டு வரத் திட்டம் தீட்டப்பட்டது. திட்டம் தீட்டிய கைய�ோடு முதலில் மெக்சிக்கா இனக் குழுவின் மீதும் அவர்களுடைய இரண்டு நகரங்களின் மீதும் தாக்குதலை நிகழ்த்தினார்கள் அஸ்கப�ோட்சல்கோ நகரின் தலைவரும் அவருடைய மகனும். மத்திய மெக்சிக்க நிலப்பகுதி முழுவதிலும் சிதறியிருந்த மெக்சிக்கா இனக் குழு மக்கள் இந்தப் ப�ோரில் டென�ோசிடிட்லானுடனும் டாடில�ோக்கோவிலுடனும் கூட்டு சேர்ந்துக�ொண்டார்கள். த�ொடர்ச்சியான (கி.பி. 1428-ல் த�ொடங்கிக் கி.பி. 1431-ல் முடிவடைந்திருக்கிறது) ப�ோர்கள் மற்றும் இரத்த ஆறுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த மெக்சிக்கா இனக் குழு மக்கள் வெற்றியைத் தங்களுடையதாக்கிக்கொண்டார்கள். அத்தோடு மாத்திரம் நின்றுவிடாமல் ஒன்றிணைந்த தங்களை ஏஸ்டெக்குகள் என்று அழைத்துக்கொண்டார்கள். அடுத்த நூறு ஆண்டுகளுக்குள்ளாகப் பெரும்பான்மையான மத்திய மெக்சிக்க நிலப்பகுதி முழுவதிலும் (சப�ோடெக் பேரரசு உட்பட) 122
நவீனா அலெக்சாண்டர்
பரவி விட்டது ஏஸ்டெக் பேரரசு. பேரரசு பரவலாக்க வேகத்திற்கு அடிப்படையாக இருந்தது இராணுவம். ஏஸ்டெக் இராணுவத்தை விட ஏஸ்டெக்குகளின் பெயரைக் கேட்டாலே சுற்று வட்டார இனக் குழு நகரங்களுக்குப் பீதியைக் கிளப்பிய விசயம் ஏஸ்டெக்குகளின் நரபலி சடங்கு. ட�ோல்டெக்குகள் த�ோற்றுவித்த சூரியக் கடவுளுக்கு உதவி செய்ய வேண்டி மனிதர்களை நரபலி க�ொடுக்கும் சடங்கைப் படு தீவிரமாகவும், காண்பவர்களையும் கேட்பவர்களையும் கதிகலங்க அடிக்கும் வகையிலும் பிரமிடுகளின் உச்சியில் வைத்து நிறைவேற்றினார்கள் ஏஸ்டெக்குகள். நரபலி க�ொடுக்கப்படும் நபர் உயிருடன் இருக்கையிலேயே அவருடைய மார்பு கூடு ஓங்கிக் குத்தி உடைக்கப்பட்டு அந்த நபர் துள்ளத் துடிக்கக் கண் எதிரே பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவருடைய இதயத்தை உடலில் இருந்து கைகளால் பிய்த்து எடுத்துச் சூரியனுக்கு அர்பணிக்கும் க�ொடூரத்தைக் கேள்விப்பட்டால�ோ அல்லது பார்த்தால�ோ யாருக்குத்தான் கதி கலங்காது. ப�ோர்களில் பிடிபட்ட கைதிகளையே பெரும்பான்மையாக நரபலி க�ொடுத்திருக்கிறார்கள் ஏஸ்டெக்குகள். இத்தகைய க�ொடூரச் செயலைப் ப�ொதுவெளியில் செய்வதன் மூலம் உள்நாட்டில் தங்களுக்கு எதிராக எப்படியான எதிர் குரல�ோ அல்லது கலகக் குரல�ோ எழுந்து விடாமல் பார்த்துக்கொள்வதற்கும், மற்ற மீச�ோ அமெரிக்க நகர மக்களுக்குப் ப�ோர் குறித்த பீதியையும் உண்டாக்கவுமே ஏஸ்டெக் பேரரசர்கள் நரபலி சடங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது ஒருவகையில் உண்மையாகவும் கூட இருக்கலாம். காரணம் ஒரு ஏஸ்டெக் ப�ோர் வீரன�ோ அல்லது ஏஸ்டெக் பேரரசில் சலுகை பெற வேண்டும் என்று நினைக்கும் சாமானியன் ஒருவன�ோ நரபலி சடங்கிற்கு எவ்வளவு அதிகமாக மற்ற இனக் குழு மக்களைப் பிடித்து வருகிறார்கள�ோ அவ்வளவிற்கு அவர்களுக்குச் சலுகைகள் தரப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் மற்ற மீச�ோ அமெரிக்க நாகரீகங்களை விடச் சமூகம், கல்வி, கலை, உள்நாட்டு நிர்வாகம் என்று பல நிலைகளில் முன்னேற்றச் சிந்தனைகளை வெளிக்காட்டிய நாகரீகம் ஏஸ்டெக். ஸ்பானியர்களின் வருகையுடன் ஏஸ்டெக் பேரரசின் வீழ்ச்சி த�ொடங்கியது. கி.பி. 1517-ல் ஏஸ்டெக் பேரரசின் 123
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
மையப் பகுதிகளில் கால் வைத்த ஸ்பானியர்கள் அதற்கு அடுத்த வந்த ஆண்டுகளில் ஏஸ்டெக் உட்பட ஒட்டும�ொத்த மீச�ோ அமெரிக்க இனக் குழுக்களையும் ஒட்ட ஒட்ட வேட்டையாடிக் க�ொன்றுப�ோட்டார்கள்.
124
பின்னிணைப்பு
மாயன் அஜாவ்களின் (பேரரசர்கள்) முழுமையான பட்டியல் டிக்கால் பேரரசர்கள் டிக்கால் வம்சாவளி யாக்ஸ் எப் சூக் (Yax Ehb Xook) சிவாஜ் சான் கா’ ஆவில் I (Chak Tok Ich’aak Sihyaj Chan K’awiil I) கி.பி. 292 - ? க’இன்ச் முவன் ஜ�ோல் (K’inich Muwaan Jol) கி.பி. ? – 359 சக் ட�ோக் இச்’ஆக் I (Chak Tok Ich’aak I) கி.பி. 360 – 378 டிய�ோடியுஹாக்கான் வம்சாவளி சியாஜ் கா’ ஹாக் (Sihyaj K’ahk) கி.பி. 378 - ? ஸ்பியர்த்தோரவர் ஹவுல் (Spearthrower Owl) கி.பி. 374 – 439 யாக்ஸ் நுன் ஆஹின் (Yax Nuun Ahiin I) கி.பி. 379 – 404 டிக்கால் வம்சாவளி சிவாஜ் சான் கா’ ஆவில் II (Sihyaj Chan K’awiil II) கி.பி. 411 – 456 கா’ ஆன் சிட்டாம் (K’an Chitam) கி.பி. 458 - ? சக் ட�ோக் இச்’ஆக் II (Chak Tok Ich’aak II) கி.பி. 488 – 508 லேடி ஆப் டிக்கால் (Lady of Tikal) கி.பி. 511 - ? கலூம்டே பாலம் (Kaloomte Bahlam) கி.பி. ? பேர்ட் கிளா (Bird Claw) கி.பி. ? 125
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், ட�ோல்டெக்
வக் சான் கா’ ஆவில் (Wak Chan K’awiil) கி.பி. 537 - 562 அனிமல் ஸ்கல் (Animal Skull) கி.பி. 562 - ? நுன் உஜ�ோல் சக் (Nuun Ujol Chaak) கி.பி. ? ஜாசாவ் சான் கா’ ஆவில் I (Jasaw Chan K’awiil I) கி.பி. 682 - ? இக்’ன் சான் கா’ ஆவில் (Yik’In Chan K’awiil) கி.பி. 734 - ? யாக்ஸ் நுன் ஆஹின் II (Yax Nuun Ahiin II) கி.பி. 768 - ? நுன் உஜ�ோல் கி’ இன்ச் (Nuun Ujol K’inich) கி.பி. 800 - ? டார்க் சன் (Dark Sun) கி.பி. ? ஜுவல் கா’ ஆவில் (Jewel K’awiil) கி.பி. ? ஜாசாவ் சான் கா’ ஆவில் II (Jasaw Chan K’awiil II) கி.பி. ? ட�ோஸ் பிலாஸ் பேரரசர்கள் பஜ்லாஜ் சான் கா’ ஆவில் (Bajlaj Chan K’awiil) கி.பி. 648 – 692 இட்சமனாஜ் கா’ ஆவில் (Itzamnaj K’awiil) கி.பி. 698 – 726 மூன்றாவது பேரரசனின் பெயர் தெரியவில்லை கி.பி. 727 – 741 கா’ ஆவில் சான் கி’இன்ச் (K’awiil Chan K’inich) கி.பி. 741 – 761 நரன்ஜோ பேரரசர்கள் சிக்’இன் பாலம் (Tzik’in Bahlam) கி.பி. ? நாட்ஸ் சான் ஆக் (Naatz Chan Ahk) கி.பி. ? டஜால் சாக் (Tajal Chaak) கி.பி. ? அஜ் வ�ோசல் சான் கி’இன்ச் (Aj Wosal Chan K’inich) கி.பி. 546 – 615 கு’சாஜ் (K’uxaj) கி.பி. 629 – 631 கா’ஆக் ஸ்கல் சான் சாக் (K’ahk’ Skull Chan Chaak) கி.பி. 644 – 680 லேடி சிக்ஸ் ஸ்கை (Lady Six Sky) கி.பி. 682 – 741 கா’ஆக் டிலிவ் சான் சாக் (K’ahk’ Tiliw Chan Chaak) கி.பி. 693 – 728 யாக்ஸ் மாயூய் சான் சாக் (Yax Mayuy Chan Chaak) கி.பி. ? – 744 கா’ஆக் யிப்பி சான் சாக் (K’ahk’ Yipiiy Chan Chaak) கி.பி. 746 - ? கா’ஆக் உக்கலாவ் சான் சாக் (K’ahk’ Ukalaw Chan Chaak) கி.பி. 755 – 780 பாட் கா’ ஆவில் (Bat K’awiil) கி.பி. ? இட்சமனாஜ் கா’ ஆவில் (Itzamnaj K’awiil) கி.பி. 784 – 810 வக்சாக்லஜூன் உபா கா’ ஆவில் (Waxaklajuun Ubaah K’awiil) கி.பி. 814 -? 126
நவீனா அலெக்சாண்டர்
கலக்மூல் பேரரசர்கள் யுக்நூம் சா’ இன் I (Yuknoom Ch’een I) கி.பி. ? கா’ ஆல்டுன் ஹிக்ஸ் (K’altuun Hix) கி.பி. 520 - 546 ஸ்கை விட்னஸ் (Sky Witness) கி.பி. 561 - 572 யாக்ஸ் ய�ோபாட் (Yax Yopaat) கி.பி. 572 – 579 ஸ்கிர�ோல் செர்பென்ட் (Scroll Serpent) கி.பி. 579 - 611 யுக்நூம் டி’சான் (Yuknoom Ti’Chan) கி.பி. 619 - ? டஜூம் உக்’அப் கா’ ஆக் (Tajoom Uk’ab K’ahk’) கி.பி. 622 - 630 யுக்நூம் ஹெட் (Yuknoom Head) கி.பி. 630 – 636 யுக்நூம் தி கிரேட் (Yuknoom The Great) கி.பி. 636 - 686 யுக்நூம் இச்’ஆக் கா’ஆக் (Yuknoom Yich’aak K’ahk’) கி.பி. 686 – 695 யுக்நூம் டூக் கா’ ஆவில் (Yuknoom Took’ K’awiil) கி.பி. 702 - 731 வாமாவ் கா’ ஆவில் (Wamaw K’awiil) கி.பி. 736 - ? ரூலர் வை (Ruler Y) கி.பி. 741 - ? கிரேட் செர்பன்ட் (Great Serpent) கி.பி. 751 - ? ப�ோலன் கா’ ஆவில் (Bolon K’awiil) கி.பி. 771 - 789 சான் பெட் (Chan Pet) கி.பி. 849 - ? அஜ் டூக் (Aj Took’) கி.பி. 909 - ?
127
Reference Books
Mesoamerica 1. Pre-Historic Mesoamerica by Richard E. W. Adams 2. The Cambridge History Of The Native Peoples Of The Aamerica VOLUME 1: North America - Part I 3. The Cambridge History Of The Native Peoples Of The Aamerica VOLUME 1: North America - Part II 4. The Cambridge History Of The Native Peoples Of The Aamerica VOLUME 2: Mesoamerica - Part I 5. The Cambridge History Of The Native Peoples Of The Aamerica VOLUME 2: Mesoamerica - Part II 6. The Cambridge History Of The Native Peoples Of The Aamerica VOLUME 3: South America - Part I 7. The Cambridge History Of The Native Peoples Of The Aamerica VOLUME 3: South America - Part II 8. South And Meso-American Mythology: A to Z by Ann Bingham 9. Native American Religions by Paula R. Hartz Olmec Mexico From The Olmecs To The Aztecs by Michael D. Coe & Rex Koontz 128
நவீனா அலெக்சாண்டர்
Mayan 1. The Conquest Of The Last Maya Kingdom by Grant D. Jones 2. Maya Palaces And Elite Residences: An Interdisciplinary Approach 3. Star Gods Of The Maya: Astronomy in Art, Folklore and Calendars by Susan Milbrath 4. The Ancient Maya: New Perspectives by Heather McKillop World Of The Maya by Victor W. Von Hagen 5. Chronicle Of The Maya Kings and Queens: Deciphering The Dynasties Of The Ancient Maya by Simon Martin & Nikolai Grube Aztec Aztec Art - Part 1 & 2 by Manuel Aguilar-Moreno, Ph.D.
129
130