முதல் கற்கோயில்கள் தமிழக க�ோயில் கட்டிடக் கலை (பல்லவர் காலம்)
நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி
Andhazahi Vaitheeswaran Chockalingam, Arun Kumar, David J Praveen, Karthik Dilli, Surendar Lohia, Aravind Sankar, Rameez Raja, Saravanan, Zahir Ibn Jaffarullah, Yathumathi, Jamal Mohammed Copyright © 2018 by Naveena Alexander All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher/Author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email below. www.andhazahi.in First Edition. Jan. 2018 Price Rs. 120/Andhazahi 197, 1st Floor, GST Road, Chrompet Chennai - 44 Printed in Chennai, Tamil Nadu.
ப�ொருளடக்கம் முன்னுரை
1
மாமல்லபுரம் – குடைவரை க�ோயில்கள்
9
மாமல்லபுரம் – குடைவரை மற்றும் சிற்ப க�ோயில்கள்
41
மாமல்லபுரம் – சிற்ப க�ோயில்களும், கற்றளிகளும்
79
கூரம் - வித்யா விநீத பல்லவ பரமேசுவர க்ருகம்
93
காஞ்சிபுரம் – கைலாசநாதர் க�ோயில் (இராசசிம்மேஸ்வரம்)
102
காஞ்சிபுரம் – வைகுண்ட பெருமாள் க�ோயில்
126
Reference Books
133
IV
முன்னுரை
த
மிழகத்தின் முதல் கற்றளி க�ோயிலை - அதாவது முதன் முதலாக பெரிய கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கட்டிய க�ோயில் – குறித்து தெரிந்துக்கொண்ட நான் அதை தேடிப் ப�ோன பயண கதையைத்தான் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். கதையா அப்ப நல்ல சுவாரசிய சங்கதியெல்லாம் இருக்கும்தானே என்றெல்லாம் பேராசை பட்டுத் த�ொலைக்காதீர்கள். தமிழக வரலாற்றின் மிக முக்கிய மைல் கல்லான ஒரு வரலாற்று சின்னம் எப்படி பரவலான கவனம் பெறாமல் கிடக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம் எனது அதை தேடியப் பயணம்.
இந்த தேடல் பயணம் பத்து பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று. ப�ொறியியல் படித்துக்கொண்டிருந்தப�ோது. மூன்றாம் ஆண்டு முடிவின்போதான மே மாத விடுமுறையில் அந்த பயணத்தை எனது நண்பன் ஒருவனுடன் த�ொடங்கினேன். பயணம் என்றால் மிக நீண்டப் பயணமெல்லாம் இல்லை. தாம்பரத்தில் பேருந்தைப் பிடித்து காஞ்சிபுரத்தில் ப�ோய் இறங்கியதைத்தான் அப்படி க�ொஞ்சம் ‘பில்டப்பாக’ கூறினேன். என்னுடன் வந்த நண்பனுக்கு வரலாறு, க�ோயில் கட்டிடக் கலை குறித்த சங்கதியெல்லாம் தெரியாத விசயங்கள். நான் கூப்பிட்டதற்காக என்னுடன் வந்தான். அன்றைய தினம் முழுவதும் என்னுடன் மே மாத வெயிலில் மனித கருவாடாக வேண்டும் என்பது அன்றைய அவனுடைய இராசி பலனாக இருந்திருக்கவேண்டும். தமிழகத்தின் முதல் கற்றளி கூரம் என்கிற ஊரில் இருக்கிறது என்பதையும் அது காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் ப�ோகும் பிரதான சாலையில் க�ொஞ்சம் உள் வாங்கி இருக்கும் சிறிய கிராமம் என்பதையும் மா. இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’ என்ற வரலாற்று ஆராய்ச்சி புத்தகத்தின் மூலம்தான் அறிந்துக்கொண்டிருந்தேன். அது ஒரு சிறிய சிவன் க�ோயில் 1
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
என்பதையும் இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் என்ன அங்க அடையாளங்கள் வேண்டும்! காஞ்சிபுரத்தில் ப�ோய் இறங்கிவிட்டோம். அப்போதெல்லாம் பேருந்து நிறுத்தத்திலிருக்கும் டீக் கடைகளும், ஆட்டோ ஓட்டுனர்களும்தானே GPRS சேவையை தருபவர்கள். எங்களுக்கு வேண்டிய தகவலை பெற ஒரு டீக் கடையில் டீயை வாங்கியபடி கூரம் கிராமத்திற்கான பேருந்து குறித்த தகவலைக் கேட்டோம். இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் தம்பி. ஒரே பஸ்சுதான். காலையில் ஒரு வாட்டி ஊருக்குள்ள ப�ோகும். அத�ோட சாயங்காலம் ஊருக்குள்ள ப�ோகும், என்றார். அடக் க�ொடுமையே! அப்ப காலையில் ஊருக்குள் ப�ோனால் அத்தோடு சாயங்காலம்தான் வெளியே வர முடியுமா. கூரம் சிவன் க�ோயில�ோடு சேர்த்து காஞ்சி கைலாசநாதர் க�ோயிலையும் பார்ப்பது என்பது எனது அன்றைய திட்டம். இவர் ச�ொல்வதைப் பார்த்தால் கூரம் கிராமத்திலேயே ஒருநாள் கழிந்துவிடுமே. சரி தமிழகத்தின் முதல் கற்றளிக்காக ஒரு முழு நாளை ஒதுக்கினால்தான் என்ன என்கிற முடிவுடன் இரண்டு மணி நேரத்தை காஞ்சி வரதராஜ (பெரிய) பெருமாள் க�ோயிலில் கழித்துவிட்டு கூரம் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம். ஊரை சுற்றியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிதான். பெரிய ஆலமரத்தடியை ஒட்டிய ஒரு ஓட்டு வீட்டில் டீக் கடை. அதுதான் கூரம் பேருந்து நிறுத்தம். ஊருக்குள் இறங்கியது எங்களுடன் சேர்த்து மூன்று நான்குப் பேர்தான். நாங்கள் இறங்கும்போது கன்டக்டர், இன்னும் அரமணி நேரம் பஸ்சு ஊர் காரங்களுக்காக நிக்கும். அதுக்குள்ள திரும்பி வந்துருவீங்களா. இல்ல சாயங்காலம்தான் பஸ்சு வரும் என்றார். தமிழகத்தின் முதல் கற்றளியை அரைமணி நேரத்தில் பார்த்துவிட்டு வருவதாவது! ஆனால் கன்டக்டருக்கு ஏற்கனவே அந்த கூரம் சிவன் க�ோயிலைத் தேடி வந்தவர்களைப் பார்த்த அனுபவம் இருந்திருக்கிறது என்பதை அடுத்த அரைமணி நேரம் கழித்துத்தான் நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்துக்கொண்டோம். அந்த ஆலமரத்தடி டீக் கடைக்கு அருகில் ஊருக்குள் செல்லும் பாதை. ஒற்றையடிப் பாதையாக இருக்கும்போல என்று கற்பனை செய்ய வேண்டாம். நல்ல பெரிய பாதை இரண்டு வாகனங்கள் 2
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
அருகருகே செல்லக் கூடிய அளவிற்கான பாதை. தேர் ஓடும் பாதை அப்படித்தானே இருக்கும். இராசமாணிக்கனாரின் எழுத்துக்களில் வருணிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் கற்றளியை நேரில் காணப் ப�ோகிற�ோம் என்கிற ஆர்வத்துடன் ஊருக்குள் சென்றோம். ஊருக்குள் இருந்தவர்கள் எல்லாம் உடனே எங்களை பப்பரக்கா என்று வேடிக்கைப் பார்த்திருப்பார்களாக்கும் என்று அடுத்த கற்பனைக்கு செல்ல உங்களுக்கு நான் அனுமதி தரப்போவதில்லை. காரணம் அப்படியெல்லாம் நடக்கவேயில்லையே. ஊரின் மையத்தில் ஒரு மிகப் பெரிய திருமால் க�ோயில். விஜயநகர மற்றும் நாயக்கர் கால க�ோயில் கட்டிக் கலையில் கட்டப்பட்ட க�ோயில் அது. க�ோயில்களின் கட்டிக் கலையை வைத்தே அதன் காலத்தையும் அது எந்த பேரரசு காலத்திய கட்டிக் கலை என்பதையும் தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு எனக்கு க�ோயில் கட்டிடக் கலையிலும் வரலாற்றிலும் பரிச்சயம் உண்டு. க�ோயில்களில் இருக்கும் கல்வெட்டு எழுத்துக்களின் அமைப்பைக் க�ொண்டு (அதாவது அது தமிழியா, வட்டெழுத்தா, கிரந்தமா) அந்த க�ோயில் கட்டப்பட்ட உத்தேச காலகட்டத்தை அறிந்துக்கொள்ளும் பரிச்சயமும் உண்டு. (இந்த பயிற்ச்சிக்கு எனக்கு உதவியவைகள் நடன காசிநாதன் ப�ோன்ற வரலாற்று அறிஞர்களின் புத்தகங்கள்). நிச்சயமாக அது நான் தேடிவந்த க�ோயில் கிடையாது. அந்த க�ோயிலுக்கு வெளியே இரண்டு நீண்ட பெரிய தெரு. தெருவின் இரண்டு பக்கங்களும் வீடுகள். அவ்வளவுதான் ம�ொத்த ஊரும். வேறு க�ோயில் இருப்பதற்கான எந்த புற அடையாளத்தையும் காணவில்லை. அந்த பெரிய க�ோயில் இருந்த ஒருவரைக் கேட்டேன். இங்க சிவன் க�ோயில் ஒன்னு இருக்கு. அதுக்கு எப்படி ப�ோகணும் என்று. இதுதான் தம்பி அந்த க�ோயில் என்று பதில் வந்தது. இது என்னடா ச�ோதனை. தவறான ஊருக்கு வந்துவிட்டோமா அல்லது இராசமாணிக்கனார் தவறாக எதும் குறிப்பிட்டுவிட்டாரா. நிச்சயமாக இராசமாணிக்கனார் தவறாக குறிப்பிட வாய்ப்பே இல்லை. நான்தான் தவறான இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்கிற நினைப்போடு, கண்ணில் பட்ட மேலும் இருவரைக் கேட்டோம். அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சின்ன சிவன் 3
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
க�ோயிலுங்க அது என்று அங்க அடையாளமெல்லாம் ச�ொல்லி. எங்களுக்குத் தெரிஞ்சு அப்படி சின்ன க�ோயிலெல்லாம் இங்க இல்லயே என்று பதில் வந்தது. கூட வந்த நண்பன், மச்சி கிளம்பு நாம தப்பான ஊருக்கு வந்துட்டோம் ப�ோல. பஸ்சு நின்னுகுட்டுத்தான் இருக்கும் வா ப�ோயிடலாம். இல்ல சாயங்காலம் வரைக்கும் இங்கதான் கிடக்கனும் என்றான். அதுவும் சரிதான். தமிழகத்தின் முதல் கற்றளியை இன்று பார்க்க குடுப்பினை இல்லை ப�ோல என்று ஆலமரத்தடி டீக்கடைக்கு செல்லும் பாதையில் ஊரைவிட்டு வெளியே நடையை கட்டின�ோம். ஊருக்கு உள்ளே வரும் அந்த பாதையில் இடது புறமாக ஒரு வீடு இருந்தது. ஊருக்குள் வருபவர்களை முதலில் வரவேற்பதை ப�ோல இருந்தது அந்த வீடு. அந்த வீட்டில் உள்ளவர்களின் கண்களில் படாமல் யாரும் ஊருக்குள் சென்று விட முடியாது என்பதாக இருந்தது அந்த வீடு. வீட்டிற்கு வெளியே கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நண்பன் தாகம் எடுக்கிறது என்று அவர்களிடம் சென்று குடிக்க நீர் கேட்டான். உடனே அந்த அம்மையார் தண்ணீர் க�ொண்டு வர வீட்டிற்குள் சென்றார். அவருடைய கணவர் எங்களிடம் பேச்சுக் க�ொடுத்தார். நான் தமிழகத்தின் முதல் கற்றளியைப் பற்றியும் அது ஒரு சின்ன சிவன் க�ோயில் என்பதையும் அவருக்கு விளக்கி ச�ொல்லி அந்த க�ோயில் இந்த ஊருலதான் இருக்குன்னு படிச்சேன் அதான் பாத்துட்டு ப�ோகலாம்னு…..ஆனா….எதயும் காணல என்றேன். பெரிய க�ோயிலை சுட்டிக்காட்டி இங்க அந்த க�ோயில் ஒன்னுதான் இருக்கு என்று ச�ொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் அந்த அம்மையார் எங்களுக்கு குடிக்க தண்ணீர் க�ொண்டு வந்துவிட்டார். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டிருப்பார் ப�ோலும். கணவரிடம், ஏன் இந்தா பக்கத்துல ஒரு க�ோயிலு இருக்கே என்றார். அதைக் கேட்டதும் அவரும் அட ஆமா தம்பி த�ோ அங்க ஒரு இடிஞ்ச க�ோயிலு இருக்கு. அது கூட சிவன் க�ோயிலுதான் என்றார். படக்கென்று அவர் சுட்டிக் காட்டிய திசைக்கு ப�ோய் பார்த்தேன். அதேதான். நான் தேடி வந்த அதே அற்புதம்தான். இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்த அதே தமிழகத்தின் முதல் அதிசயம்தான். கால க�ொடுமையே! அந்த க�ோயிலின் நிலையைப் பார்த்தவுடன் 4
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
தமிழனின் வரலாற்று புரிதல் குறித்து மெய்சிலிர்த்து விட்டது ப�ோங்கள். அரச மரத்தின் தடினமான வேர் க�ோயிலின் பிரஸ்தரப் பகுதியையும் பித்தி பகுதியையும் ஊடுருவி சென்றிருந்தது. (க�ோயில் கருவறையை சுற்றியிருக்கும் பகுதியை பித்தி என்பார்கள். பித்திக்கு மேல் பிரஸ்தர பகுதி. க�ோயிலின் அடியிலிருந்து முடி வரை ஆறு அங்கங்கள் உண்டு. அவை அதிட்டாணம், பித்தி, பிரஸ்தரம், கிரிவரம், க�ோபுரம் மற்றும் சிகரம். இந்த ஆறு அங்கங்களையும் உள்ளடக்கிய முழு உருவத்தை விமானம் என்பார்கள்.) விமானத்திற்கு முன்பு ஒரு சிறிய முகப்பு மண்டபம். அவ்வளவுதான் அந்த க�ோயிலின் கட்டுமானம். விமானமும் அவ்வளவு பெரியதெல்லாம் இல்லை. முதல் கற்றளி முயற்ச்சி என்பதால் அதன் உருவம் சிறியதாகத்தான் இருந்தது. சுமார் இரு நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்ட தஞ்சை பெரிய க�ோயிலின் முப்பாட்டான் இந்த கூரம் சிவன் க�ோயில். பித்திப் பகுதியிலும் அவ்வளவாக க�ோஷ்ட பஞ்சாச்சரங்கள் இடம் பெற்று இருக்கவில்லை. (கருவறையின் வெளி சுற்றுப் பகுதியில் இருக்கும் புடைப்பு சிற்பங்களையும் அது இருக்கும் அமைப்பையும் பஞ்சாச்சரங்கள் என்பார்கள். இதில் பல வகை உண்டு). க�ோயில் சிறியதாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இருந்தது. மூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே சற்று த�ொலைவில் இருந்து பார்க்கும்போதே அதன் அழகு அள்ளியது. கூரம் சிவன் க�ோயிலை பார்த்து முடித்த திருப்தியில் மீண்டும் காஞ்சிபுரத்திற்கு வந்து கைலாசநாதர் க�ோயிலையும் வைகுந்த பெருமாள் க�ோயிலையும் பார்த்து அந்த பயணத்தை அப்போது முடித்தேன். அதற்கு அடுத்த வருட கல்லூரி விடுமுறையில் கும்பக�ோணத்தை சுற்றியுள்ள ச�ோழர்களின் க�ோயில்களை தேடிய பயணம் வாய்த்தது. நம்முடைய க�ோயில் கட்டிடக் கலை ப�ொக்கிஷங்களை ஆவணப்படத்த வேண்டும் என்பது அப்போதிலிருந்தே என்னை விரட்டி வரும் விருப்பம். கல்லூரி முடித்து சுமார் பத்து வருடங்கள் கழித்து மாமல்லபுரத்தை ஆவணப்படமாக ஆவணப்படுத்துவது என்று நானும் என்னுடைய நண்பன் முகம்மது ஜமாலும் முடிவு செய்தோம். இதற்கென்று எத்தகைய ப�ொருளாதார எதிர்பார்த்துக்கொண்டிருக்காமல் நானும்
உதவிகளையும் அவனுமே 5
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
கிளம்பிவிட்டோம். கையில் ஒரு பாயிண்ட்-அன்ட்-சூட் (Point and Shoot Camera) இருந்தது. மாமல்லபுர ஆவணப்படத்திற்கான ஸ்கிரிப்டை நான் ஒரு வாரத்தில் தயார் செய்துவிட்டேன். ஒரே நாளில் படபிடிப்பை முடித்துவிடுவது என்பது எனது திட்டம். ஜமாலும் மேலும் ஒரு நண்பனும் ஸ்கிரிப்டின் படி மாமல்லபுர குடைவரைகளையும், சிற்ப க�ோயில்களையும், கற்றளிகளையும் விளக்குவது என்பது திட்டம். கேமிரா க�ோணங்கள் எப்படி வர வேண்டும் என்பதை நான் விளக்க அதன்படி செய்ய மற்றொரு நண்பர் ரமீசை அழைத்துக்கொண்டோம். ஒட்டும�ொத்த ஆவணப்படத்தையும் நாங்கள் நான்கு பேருமே சேர்ந்து முடித்துவிட்டோம். கூரம் க�ோயில், காஞ்சிபுரத்திலிருக்கும் கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் க�ோயில்கள் குறித்த ஆவணப்படத்தை எடுப்பது என்று நானும் என்னுடைய சக எழுத்தாளர் வர்ஷினியும் முடிவு செய்தோம். இருவரும் அதற்கான ஸ்கிரிப்டை எழுதின�ோம். வர்ஷினி க�ோயில்களின் கட்டிடக் கலை குறித்து விளக்குகிறேன் என்றார். ஒளிப்பதிவை நான் செய்வது என்று முடிவானது. ஒரு நாள் படபிடிப்பு என்கிற திட்டத்துடன் சென்றோம். எனது நண்பர் கார்த்தியும் உதவிக்கு வந்திருந்தார். இந்த இரு ஆவணப்படங்களுடன் சேர்த்து ஒரு தமிழக க�ோயில் கட்டிடக் கலை குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதுவது என்று முடிவு செய்து இந்த புத்தகத்தை எழுதின�ோம். இந்த புத்தகத்தின் முதல் பகுதி மாமல்லபுர க�ோயில் கட்டிடக் கலைக்கும் இரண்டாம் பகுதி காஞ்சிபுர க�ோயில் கட்டிடக் கலைக்கும் என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி
6
பகுதி - I
மாமல்லபுரம் – குடைவரை க�ோயில்கள்
த
மிழ் சங்க இலக்கியங்கள் இந்த இடத்தை கடல் மல்லை என்று குறிப்பிடுகின்றன. இது பெரிய, சிறந்த துறைமுகமாக இருந்தது. பிற்கால பல்லவர்களில் மகேந்திரவர்மன் காலமான கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இது கடல் மல்லை என்றுதான் அழைக்கப்பட்டது. இன்றிலிருந்து 1400 வருடங்களுக்கு முன்பாக ர�ோம், மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த வணிக கப்பல்கள் மல்லையின் கடலில் அசைந்து ஆடியபடி இருந்தது அற்புதமான காட்சியாக இருந்திருக்கும்.
கடல் மல்லை அதாவது இன்றைய மகாபலிபுரம் பழங்காலத்தில் துறைமுக நகரமாக புகழ்பெற்றிருந்தாலும் வரலாற்று முக்கியதும் க�ொண்ட மற்றொரு முகம் கடல் மல்லைக்கு உண்டு. மகாபலிபுரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்ள, முதலில் நாம சில வரலாற்று தகவல்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அது தெரியாமல் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்ப்பது கண்களை கட்டிக்கொண்டு வெள்ளை யானையை தடவி பார்ப்பதற்கு நிகராகும். தமிழர்களின் க�ோயில் கட்டிடக் கலை அதி முக்கிய வராலற்று மாற்றத்துக்கு உள்ளாகும்போது இங்கே பல ச�ோதனை முயற்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்றபட்ட தமிழகத்தில் எப்படிப்பட்ட க�ோயில்கள் இருந்தன என்பது குறித்து சங்க இலக்கியங்களும், பிற்கால பக்தி இலக்கியங்களும் நமக்கு சில பெயர்களை தருகின்றன. அவை ஆலக் க�ோயில், பெருங் க�ோயில், இளங் க�ோயில், க�ொகுடிக் க�ோயில், ஞாழற் க�ோயில், மணிக் க�ோயில், கரக் க�ோயில். பல வித கட்டிட அமைப்புகள் க�ொண்ட க�ோயில்களை சிந்து வெளி நாகரீக காலம் த�ொட்டே தமிழ் ப�ொறியியல் வல்லுனர் 9
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
கட்டி வந்திருப்பதாக தெரிகிறது. இந்த க�ோயில்கள் எப்படியான கட்டுமான ப�ொருட்களை க�ொண்டு கட்டப்பட்டு வந்தன என்பதை குறித்தும் கூட தமிழ் இலக்கியங்கள் தகவல் தருகின்றன. சுட்ட செங்கல், மரம், உல�ோகம் மற்றும் சுண்ணாம்பு சுதை. சுதை என்பது சிப்பி சுண்ணமும் சாந்தும் கலந்த இன்றைய சிமெண்ட் ப�ோன்ற ஒரு கலவை. மரம், செங்கல், சுண்ணாம்பு சுதை க�ொண்ட கட்டப்பட்ட கட்டிடங்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களில் அழிந்துப�ோகும் இயல்பு க�ொண்டதால் சுமார் 4000 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்களின் க�ோயில் கட்டிடக் கலைக்கான வரலாற்று ஆதாரங்கள் அழிந்துப்போய் க�ொண்டிருந்தது. இது ஒரு த�ொடர் கதையாகவே இருந்திருக்கிறது. காலம் தன் கரங்களை க�ொண்டு அழித்திட முடியாத க�ோயில்களை கட்டுகின்ற தேடலில் தமிழ் கட்டிடக் கலைஞர்கள் வந்து நின்ற இடம் கருங்கற்களால் க�ோயில்களை கட்டும் த�ொழில் நுட்பத்தில். வரலாற்றின் இந்த காலகட்டத்தில்தான் மகாபலிபுரம் என்கிற கடல் மல்லை திறந்த வெளி கட்டிடக் கலைக்கான ஆய்வு கூடமாக மாற்றமடைந்தது. கருங்கற்களை க�ொண்டு க�ோயில்களை கட்டியெழுப்பும் த�ொழில் நுட்பத்தை தமிழர்கள் ஒரே இரவில் கண்டு பிடித்துவிடவில்லை. பல ச�ோதனை முயற்ச்சிகளை அவர்கள் செய்து பார்க்க வேண்டியிருந்தது. அந்த ச�ோதனைகளுக்கான களம் அமைத்துக்கொடுத்தது மகாபலிபுரம். கருங்கற்களை க�ொண்டு கட்டப்படும் க�ோயில்களுக்கு கற்றளிகள் என்று பெயர். கற்றளி த�ொழில் நுட்பத்திற்கு முன் வேறு இரண்டு கட்டிடக் கலை த�ொழில் நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்தே கற்றளி த�ொழில் நுட்பம் வளர்ச்சி பெற்றது. அவை குடைவரை மற்றும் சிற்பக் க�ோயில் த�ொழில் நுட்பங்கள். குடைவரை, சிற்பக் க�ோயில் மற்றும் கற்றளி ஆகிய மூன்று கட்டிடக் கலை த�ொழில் நுட்பங்களை ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால் அதற்கு மகாபலிபுரத்திற்குத்தான் வரவேண்டும். சுமார் நூறு வருடங்களுக்கான த�ொடர்ச்சியான க�ோயில் கட்டிடக் கலை த�ொழில் நுட்ப ச�ோதனை முயற்ச்சிகள் மகாபலிபுரம் முழுவதும் சிதறி கிடக்கிறது. 10
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
நான்கு தலைமுறை சிற்பிகளின் கட்டிடக் கலை அற்புதம் அடங்கியிருக்கிறது. கடல் மல்லையில் நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து செல்லும்போது கால வெளியில் சுமார் 25 வருடங்களை நிமிடங்களில் கடந்து ப�ோய்விடுகிற�ோம். இங்கிருக்கும் கட்டிடக் கலை த�ொழில் நுட்பத்தை முழுதாக புரிந்துக்கொள்ள நான்கு பகுதிகளாக கட்டிடக் கலையை புரிந்துக்கொள்ள வேண்டும். அந்த நான்கு பகுதிகளும் நான்கு பல்லவ மன்னர்கள�ோடு த�ொடர்புடையது. முதல் பகுதி, குடைவரை க�ோயில்கள். இது மகேந்திரவர்ம பல்லவன�ோட த�ொடர்புடையது. இரண்டாவது பகுதி குடைவரையும் சிற்ப க�ோயில்களும். இது நரசிம்மவர்ம பல்லவன�ோட த�ொடர்புடையது. மூன்றாவது பகுதி சிற்ப க�ோயில்களும், கற்றளிகளும். இது பரமேசுவரவர்ம பல்லவன�ோட த�ொடர்புடையது. நான்காவது பகுதி கற்றளிகள். இது இராஜசிம்மவர்ம பல்லவன�ோட த�ொடர்புடையது. க�ோயில் கட்டிடக் கலை பரிணாம வளர்ச்சியுடன் சேர்த்து பல்லவர்களுடைய வரலாறும் கடல் மல்லையில் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. தமிழக மூவேந்தர்களில் அடங்காத பல்லவர்கள் யார்? பல்லவர்கள் உண்மையில் தமிழ் மன்னர்கள்தானா அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா என்பது விவாதத்திற்குறிய விசயமாக நீடித்துக்கொண்டருக்கிறது. நாம் முன்பே பார்த்ததைப் ப�ோல பல்லவர்களின் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு த�ொடங்கி கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை. இதில் பிற்கால பல்லவர்களின் காலம்தான் பல்லவ பேரரசின் ப�ொற்காலமாக பார்க்கபடுகிறது. பிற்கால பல்லவர்களின் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து த�ொடங்குகிறது. பிற்கால பல்லவர்களில் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு. இவனுடைய மகன் மகேந்திரவர்மன். மகேந்திரவர்மன்தான் குடைவரை த�ொழில் நுட்பத்தைஇ தமிழகத்தில் அறிமுகம் செய்தவனாக கருதப்படுகிறது. ஆனால் தற்போதைய சில கண்டுபிடிப்புகள் மகேந்திரவர்மனுக்கு முன்பே பாண்டியர்கள் குடைவரை க�ோயில் கட்டிட கலையை தமிழகத்தில் அறிமுகப்படுத்திவிட்டதாக ச�ொல்கின்றன. 11
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
தமிழகத்தின் பல இடங்களில் மகேந்திரவர்மனுடைய குடைவரை க�ோயில்கள் இருக்கின்றன. மகாபலிபுரத்தை ப�ொறுத்த வரை முதல் குடைவரை என்பது ஆதி வராகர் குடைவரை க�ோயிலே. கடல் காற்றை சுவாசித்துக்கொண்டு அக்கடா என்று கிடந்த மகாபலிபுர பாறைகளில் முதன் முதலில் கை வைத்தது மகேந்திரவர்மன் காலத்து சிற்பிகள்தான். அன்று த�ொடங்கி அடுத்த நூறு வருடங்களில் மகாபலிபுரம் உலகத்தின் அதி முக்கியமான கலை கூடங்களில் ஒன்றாக மாறயிருக்கிறது என்பதை மகேந்திரவர்மனே கூட நினைத் துப்பார்த்திருக்கமாட்டான். படம் 1 பார்க்கவும். மகேந்திரவர்மன�ோட த�ொடர்புடைய குடைவரை க�ோயில்களை பார்ப்போம். முன்பே கூறியதைப் ப�ோல முதலாவது குடைவரை ஆதி வராகர் க�ோயில். இரண்டாவது திருமூர்த்தி மண்டபம். மூன்றாவது க�ொற்றவை குடைவரை. படம் 2 பார்க்கவும். இது திரிமூர்த்தி குடைவரைக்கு அடுத்து வலதுபுறம் கழிபிடத்திற்கு பக்கவாட்டில் க�ொஞ்சம் உட்புறமாக இருக்கிறது. இவை தவிர இரண்டு முக்கியமான புடைப்பு சிற்பத்தொகுதியும் மகேந்திரவர்மன் காலத்தை சேர்ந்தது. இங்கே மகேந்திரவர்மன் குறித்து க�ொஞ்சமாக தெரிந்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. பிற்கால பல்லவ பேரரசர்களில் குறிப்பிடும்படியான முதல் மன்னன் இவன்தான். இவனுடைய காலத்தில் காஞ்சிபுரம் தலைநகரமாக இருந்தது. கடல் மல்லை முக்கியமான துறைமுகம் நகரமாக இருந்தது. பல்லவர்களின் பரம்பரை பகையாளிகளாக இருந்தவர்கள் அப்போது ஆந்திராவை ஆண்டு க�ொண்டிருந்த சாளுக்கியர்கள். பிற்கால பல்லவ மன்னர்களில் ஏறக்குறைய அத்துணைப் பேருமே சாளுக்கியர்கள�ோடு ப�ோர் புரிந்தே நிம்மதியையும், செல்வத்தையும் இழந்தார்கள். பல்லவ சாளுக்கியர் ப�ோர் மகேந்திரவர்மன் காலத்தில்தான் உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு வந்த அடுத்த 150 வருடங்களுக்கும் த�ொடர்ச்சியாக இரண்டு அரசுகளுக்கும் 12
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
13
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
ஓயாத ப�ோர்தான். மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கியன் இரண்டாம் புலிகேசிக்கும் நடந்த ப�ோர் வரலாற்று முக்கியதுவம் க�ொண்டது. சாளுக்கியர்களுடனான ப�ோரில் அவர்களை வெல்ல மகேந்திரவர்மன் பதுங்கி பிறகு பாயும் ப�ோர் தந்திரத்தையே பயன்படுத்தினான். பல்லவர்களின் பதுங்கலைத் த�ோல்வியென்று தப்பு கணக்குப�ோட்டு தமிழகத்துக்குள் நுழையும் சாளுக்கியர்கள் அவர்களாகவே பல்லவர்கள் விரிக்கும் வலையில் வந்து சிக்கிக�ொள்வார்கள். பல்லவர்களுக்கும் இதுதான் வேண்டும். ப�ொறிக்குள் வந்து சிக்கிய எதிரிகளை மகேந்திரவர்மன் தனக்கு வாட்டமான இடத்தில் நிறுத்தி சுற்றிவளைத்து அடித்திருக்கிறான். இந்த ப�ோர் தந்திரத்தை மகேந்திரவர்மன் த�ொடங்கி அவனுடைய க�ொள்ளுப் பேரனான பரமேசுவரவர்மன் வரைக்கும் சாளுக்கியர்களுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கிறார்கள். சாளுக்கியன் இரண்டாம் புலிகேசியும் அவனுடைய மகன் விக்கிரமாதித்யனும் பெரும் படையை பல்லவர்களின் இந்த ப�ோர் தந்திரத்திற்கு இலவசமாக காவுக�ொடுத்திருக்கிறார்கள். மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றி பிறகு சைவ மதத்திற்கு மாறியிருக்கிறார். இவர் சைவராக மாறியதும் அந்த காலத்து அரசியல் தேவைகளுக்காகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவரே எழுதிய ‘மத்தவிலாச பிரகசனம்’ நாடக நூலில் பிற சமயங்களை நாசுக்கா விமர்சனம் செய்திருக்கிறார். இங்கே மற்றொரு வரலாற்று முக்கியத்துவத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது பிற்கால பல்லவர்களின் காலம் தான் பக்தி இலக்கிய காலகட்டத்தின் த�ொடக்கமும் கூட. அதாவது, அதுவரை சமண பெளத்த மதங்களுக்கு அடுத்து இருந்த சைவம் முழுவேகத்தில் மக்களின் ஆதரவை பெற்ற காலம். அழிந்துப�ோக கூடிய மரம், செங்கல், சுதையில் கட்டப்படும் க�ோயில்களை குடைவரையாக மாற்றியதால் இவருக்கு “விசித்திர சித்தன்” என்கிற பெயரும் உண்டு. சைவத்தை தழுவியிருந்தாலும் கடல் மல்லையில் இவர் கட்டிய முதல் குடைவரை திருமாலுக்கானது. இதற்கான காரணம் இதை அவர் திருமால் பக்தரான தன்னுடைய தந்தைக்காக கட்டியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அனுமானம் செய்கிறார்கள். 14
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இந்த ஆதிவராகர் குடைவரையில் நாம் சிம்மவிஷ்ணுவையும், மகேந்திரவர்மனையும் புடைப்பு சிற்பங்களாக பார்க்கலாம். இப்போது குடைவரை க�ோயில்களை மண்டபம் என்று அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிற�ோம். ஆனால் குடைவரைகள் வெறும் மண்டபங்கள் கிடையாது. குடைவரைகள் உண்மையான க�ோயில்களே. அன்றைய காலகட்டதில் மக்கள் இந்த குடைவரை க�ோயில்களில் வழிபாடு செய்திருக்கிறார்கள். செங்கல், மரம், சுதை ப�ோன்ற கட்டுமான ப�ொருட்களை வைத்து கட்டப்பட்டுக்கொண்டிருந்த க�ோயில்கள் கற்றளிகளாக மாற்றமடைந்ததற்கான பரிணாம வளர்ச்சியில் முதல் படி குடைவரை க�ோயில்கள். குடைவரை த�ொழில் நுட்பம் தமிழர்களுக்கு புதிய விசயமாக இருந்திருக்குமா என்பது ஆய்விற்குரியது. ஏனென்றால் இதே குடைவரை அமைப்பை எகிப்தியர்களின் நாகரீகத்திலும் காண முடியும். வேலி ஆப் தி கிங்சும் (Valley of the Kings), வேலி ஆப் தி குயின்சும் (Valley of the Queens) குடைவரை கட்டிடக் கலைக்கான முதல் உதாரணங்களாக இருக்கலாம். எகிப்தியர்களின் குடைவரைகள், மகாபலிபுர குடைவரைகளிலிருந்து 2000 வருடங்கள் பழமையானது. எகிப்தியர்களுடன் கி.மு. 3000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே வணிக த�ொடர்புகளுடன் இருந்த தமிழர்கள் குடைவரை த�ொழில் நுட்பத்தை மிகவும் பிற்காலத்தில் அதாவது சுமார் 2000 வருடங்கள் கழித்து தங்களின் கட்டிடக் கலையில் அறிமுகப்படுத்தியது ஆராய்ச்சிக்குரிய விசயம். மகேந்திரவர்மன் காலத்தில்தான் குடைவரை தமிழகத்தில் பரவலாக அறிமுகமாகிறது. ஒரு பாறையை (இந்த பாறை பெரும்பலும் மணல் பாறையாகவே இருக்கும்) முதலில் குகை அமைப்பில் குடைந்து, அதில் க�ோயிலின் கருவறையையும், முகப்பு மண்டபத்தையும் செதுக்கி குடைவரை க�ோயிலை அமைப்பார்கள். நாம் மீண்டும் மீண்டும் அழுத்தமாக ச�ொல்லும் ஒரு விசயம் கடல் மல்லை கட்டிடக் கலைக்கான ச�ோதனை கூடம் என்பது. குடைவரை மற்றும் சிற்ப க�ோயில் த�ொழில் நுட்பம் த�ொடர்பான சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நன்றாக கவனித்து பார்த்தால் 15
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
இங்கேயே பல்லவ சிற்பிகள் பதில்களையும் தந்திருப்பதை காண முடியும். படங்கள் 3 முதல் 5 வரை பார்க்கவும். இவை ஒரு பாறையில் குடைவரை க�ோயில்களை எப்படி குடைந்திருப்பார்கள் என்கிற கேள்விக்கான பதில். ஒரு பாறையில் குடைவரை க�ோயில் எப்படி வரவேண்டும் என்பதற்கான ஸ்கெட்ச்களை (sketches) இப்படி பார் சாக்லேட்கள் (bar chocolate) அமைப்பில் செதுக்கிக்கொண்டு பிறகு உள் ந�ோக்கி சிறிது சிறிதாக குடைந்து குடைவரை க�ோயில்களை அமைத்திருக்கிறார்கள். முகப்பு மண்டபத்திற்கான தூண்கள் எங்கே வரவேண்டும் என்பதற்கான அடையாள குறிகளையும் அந்த படங்களில் நாம் பார்க்க முடியும். பார் சாக்லேட்கள் வடிவில் செதுக்க காரணம், பாறை சுவரின் சமன் பாட்டிற்கும், ஓவியர்கள் ஓவியத்தை தீட்டுவதற்கு முன்பாக அந்த குறிப்பிட்ட ஓவியம் எப்படி வரவேண்டும் என்பதை அனுமானிக்க வரையும் சதுர கட்டங்களை (square rulers) ப�ோல எந்த புடைப்பு சிற்பம் எங்கு வரவேண்டும் என்பதை அனுமானிக்க பல்லவ சிற்பிகள் பாறையில் செதுக்கிய வழிகாட்டி அமைப்பு இது. முதலில் குடைவரையின் பக்கவாட்டு சுவர்களையும், மண்டபத்தின் முகப்பு தூண்களையும் பார் சாக்லேட்கள் வடிவில் செதுக்கிக்கொண்டு பிறகு அந்த பார் சாக்லேட்கள் வடிவை செதுக்கி பாறைய�ோட சுவர சமன் படுத்துவாங்க. சமன் படுத்திய பாறை சுவற்றை மீண்டும் பார் சாக்லேட்கள் வடிவில் செதுக்கி இப்படியே பாறையை குடைந்துக்கொண்டே செல்வார்கள். இந்த முறையில் செதுக்கியதால்தான் புடைப்பு சிற்பங்கள் சமன்பாடான பாறை சுவரிலிருந்து தனியாக புடைத்துக்கொண்டு வெளியே வந்தது ப�ோன்ற த�ோற்றத்தை உண்டாக்குகிறது. முதலில் தூண்களை செதுக்கி முகப்பு மண்டபத்தை உருவாக்கிக�ொள்வார்கள். பிறகு கருவரையை செதுக்குவார்கள். அடுத்தக்கட்டமாக சிற்பிகள் தங்களுக்குள் வேலையை பிரித்துக்கொண்டு குடைவரைய�ோட உருப்புகளை செதுக்குவார்கள். இதில் ஒரு சிற்பியின் கவனம் சிதறினாலும், பாறையில் ஒரு உளி தவறாக அடிக்கப்பட்டாலும் 16
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
17
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
18
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
19
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
ஒட்டும�ொத்த பாறையும் விரிசல் விட்டு வீணாகிவிடும். பாறையை கையாளும் திறமையும், கவன குவிப்பும் இவற்றுக்கெல்லாம் மேலாக கற்பனை வளமும் குடைவரை க�ோயிலை உருவாக்குவதற்கு தேவையான விசயங்கள். குடைவரை க�ோயில்களுக்கு இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று கருவரை, மற்றொன்று முகப்பு மண்டபம். மகேந்திரவர்மனுடைய குடைவரைகளுக்கு என்றே தனித்த அடையாளங்கள் சில உண்டு. முகப்பு மண்டபத்தின் தூண் அமைப்பையும், கருவரை உட்புற சுவரையும், வாயில் காப்போரையும் வைத்து மகேந்திரவர்மனுடைய குடைவரைகளை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். முகப்பு மண்டபத் தூண்கள், மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் பட்டை தீட்டப்பட்டும் இருக்கும். படங்கள் 6 முதல் 8 வரை பார்க்கவும். சதுரப்பகுதியில் தாமரை பூத்த அலங்கார அமைப்பு இருக்கும். ப�ோதிகை சதுரமாக இருக்கம். இதே ப�ோதிகை நரசிம்மவர்மனுடைய குடைவரை க�ோயில்களில் அரைவட்டமாக இருக்கும். அடுத்து கருவரையை பார்ப்போம். கருவரை சுவரில் எவ்விதமான புடைப்பு சிற்பமும் இருக்காது. இதுவும் மகேந்திரவர்மனுடைய குடைவரை க�ோயில்களுக்கான அடையாளங்களில் ஒன்று. அடுத்து வாயில் காப்போர் க�ோயிலுக்குள் நுழைபவர்களை பார்ப்பதைப் ப�ோல் இருப்பார்கள். இந்த அடையாளங்களை க�ொண்டு ஒரு குடைவரையை மகேந்திரவர்மனுடைய குடைவரை என்று உறுதிபடுத்திக்கொள்ளலாம். மகாபலிபுரத்தில் இருக்கும் மகேந்திரவர்மனுடைய இரண்டாவது குடைவரையான திரிமூர்த்தி மண்டபத்தை பார்ப்போம். இந்த குடைவரையில் மூன்று கருவரைகள் இருக்கின்றன. நடுவில் இருப்பது கடவுள் சிவனுக்கானது. பக்கவாட்டில் இருக்கும் இரண்டு கருவரைகளும் கடவுள் திருமாலுக்கும், முருகனுக்கும் உரியது. இது மூம்மூர்த்திகலுக்கான குடைவரை. படம் 9 முதல் 11 வரை பார்க்கவும். 20
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
21
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
22
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இங்கும் மண்டப தூண்கள் மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் பட்டை தீட்டப்பட்டும் இருக்கிறது. ப�ோதிகை சதுரமாக இருக்கிறது. முன்பே குறிப்பிட்டதைப் ப�ோல இந்த அமைப்புகள் இந்த குடைவரை க�ோயில் மகேந்திரவர்மனுடையது என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன. இங்கு இரண்டு அடுக்கு தூண் வரிசை இருக்கிறது. கருவரை சுவரில் எந்த புடைப்பு சிற்பமும் இல்லை. வாயில் காப்போர் புடைப்பு சிற்பங்கள் பிற்காலத்தில் சிதைக்கப்பட்டிருக்கவேண்டும். இது கடவுள் சிவனுக்கான கருவரை. பிற்காலத்தில் கருவரையிலிருந்த லிங்கம் அகற்றப்பட்டிருக்கிறது. லிங்கம் இருந்ததற்கான அடையாள குழியை கருவரையில் காண முடியும். மாமல்லபுரத்தில் இருக்கும் மகேந்திரவர்மனுடைய குடைவரைகளில் இரண்டு வரிசை தூண் அமைப்போடு மிக நேர்த்தியாக அமைந்திருக்கும் குடைவரை இது. கடல் மல்லையில் இருக்கும் மகேந்திரவர்மனுடைய மூன்றாவது குடைவரை க�ோயில் க�ொடிகால் மண்டபம். இது க�ொற்றவைக்கான குடைவரை க�ோயில். பல்லவர்கள் சமண, சைவ, வைஷ்ணவர்களாக இருந்திருந்தாலும் க�ொற்றவை அவர்களுக்கு குலதெய்வம் ப�ோன்ற கடவுள். க�ொற்றவை தமிழர்களின் ப�ோர் கடவுள். பல்லவர்கள் க�ொற்றவை மீது க�ொண்டிருந்த மாறாத பக்தியும் அவர்கள் திராவிட கிளையை சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றுகளில் ஒன்று. படம் 12 பார்க்கவும். கருவரையில் இருந்த க�ொற்றவை உருவமும் கருவரை கதவுகளும் பிற்காலத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. மகேந்திரவர்மனுடைய குடைவரைக்கான அத்துணை அடையாளங்களும் இந்த குடைவரையிலும் இருக்கிறது. ஒய்யாரமான வாயில் காப்போர். இந்த குடைவரை உருவில் சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகான ஒன்று. குடைவரைகள�ோடு சேர்த்து மகேந்திரவர்மன் புடைப்பு சிற்பங்களையும் கடல் மல்லையில் எடுப்பித்திருக்கிறான். புடைப்பு சிற்பங்கள் என்பது பாறையின் சுவர் பகுதியில் இருந்து வீங்கி புடைத்துக�ொண்டு வெளியில் வந்தது ப�ோல 23
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
இருக்கும். அழகிய புடைப்பு சிற்பங்கள் என்று வந்துவிட்டால் அது சந்தேகமேயில்லாமல் பல்லவ சிற்பிகளுடைய புடைப்பு சிற்பங்களாகத்தான். புடைப்பு சிற்பத்தின் சாதக பாதகங்களை முழுதும் உள்வாங்கிக்கொண்டு புடைப்பு சிற்பங்களுடைய அழகியலை உச்சத்திற்கு க�ொண்டு சென்றவர்கள் பல்லவ சிற்பிகள். ச�ோழ பாண்டிய சிற்பிகளாலும் கூட இந்த உச்சத்தை த�ொட முடியவில்லை. படம் 13, 14 பார்க்கவும். இந்த புடைப்பு சிற்ப த�ொகுதிக்கு பெயர் பகிரதன் தவம். இது ஏன் அர்ஜூனன் தபஸ் என்று பிற்கால மக்களால் அடையாளப்படுத்தப்பட்டது என்பது தனி ஆராய்ச்சிக்கான விசயம். அற்புதமான இந்த சிற்ப த�ொகுதியில் முத்தாய்ப்பாக ஒரு பகடியையும் பல்லவ சிற்பிகள் செதுக்கியிருக்கிறார்கள் அதை பிறகு பார்ப்போம். இப்போது சிற்ப த�ொகுதி எதை பற்றி பேசுகிறது என்பதை பார்க்கலாம். இமய மலை பகுதியில் இருந்த காடு ஒன்றை இந்த புடைப்பு சிற்பங்கள் நமக்கு சித்தரிக்கிறது. பாறையை இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொண்டு இரண்டிலும் காட்டில் உறையும் மிருகங்களை காட்டியிருக்கிறார்கள் சிற்பிகள். பாறையின் இடது பக்கம் முருகன் காட்சி தருகிறார், இதை காண தேவர்கள் அனைவரும் வானில் கூடி வருகிறார்கள். தேவர்கள் வருவது பாறையின் வலது பக்கம் காட்டப்பட்டிருக்கிறது. படம் 15 பார்க்கவும். ஒட்டும�ொத்த சிற்ப த�ொகுதியின் கவன ஈர்ப்பு விசை யானை கூட்ட புடைப்பு சிற்பம். இந்த யானை கூட்டத்தை மும்மூர்த்தி குடைவரைக்கு பின்புறம் இருக்கம் பாறை சரிவிலும் காணலாம். பகிரதன் தவ சிற்ப த�ொகுதியில் யானை சிற்பங்களை வடிப்பதற்கு முன்பாக இந்த பாறையில் யானை சிற்பங்களை வடித்து சிற்பிகள் வெல்லோட்டம் பார்த்திருக்கவேண்டும் அல்லது வேறு ஒரு சிற்ப த�ொகுதியை வடிக்க திட்டமிட்டு அதற்கான த�ொடக்கமாக இந்த யானைகளை வடிக்க த�ொடங்கி பாதியிலேயே அந்த பணியை கைவிட்டிருக்கவேண்டும். 24
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
25
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
26
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
படம் 16 பார்க்கவும். பல்லவ சிற்பிகளுக்கு யானைகள் என்றால் க�ொள்ளை பிரியம் ப�ோலும். இந்த யானை புடைப்பு சிற்பமே ப�ோதும் பல்லவ சிற்பிகளுக்கு இருந்த உடற் கூற்றியல் (Anatomy) அறிவை விளக்குவதற்கு. படம் 17 பார்க்கவும். இந்த யானைகளை மேலும் ஊன்றி கவனித்தால் மற்றொரு விசயமும் நம்மை அசரவைக்கும். அது அந்த குட்டி யானைகள். பெரிய யானைகள் முருக பெருமானை காண ஆர்வமாக வந்துக்கொண்டிருக்க எதை பற்றியும் கவலை க�ொள்ளாத குட்டி யானைகள் வழி எங்கும் குறும்புதனம் காட்டியபடி ஆட்டம் ப�ோட்டுக்கொண்டே வருது காண்பவரை அசரடிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு யானைகளின் உளவியல் தெரியுமேன்றால் நிச்சயம் மற்றொரு சங்கதியும் உங்களை அசரவைக்கும். குட்டி யானைகளின் பாதுகாப்பிற்காக பெரிய யானைகள் எப்பொழுதும் அவைகளை தங்களின் காலுகளுக்கு இடையில் இருக்கும்படி வைத்துதான் அழைத்து செல்லும். யானைகளின் அந்த உளவியலை கச்சிதமாக பல்லவ சிற்பிகள் இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இனி இந்த சிற்ப த�ொகுதி விளக்கும் கதையை பற்றி பார்ப்போம். சகர சக்ரவர்த்தியின் பிள்ளைகள் இமய மலையில் பரதன் கட்டிய க�ோயிலை சுற்றிலும் அகழியெடுத்து கங்கையை அந்த அகழியில் திருப்பி விடுகிறார்கள். கங்கை பாதாளம் வரைக்கும் பாய நாகர் தலைவன் க�ோபமாகி மேலே எழுந்து வந்து தன்னுடைய ஐந்து நாக தலையையும் விரித்து அவர்களை பார்வையாலேயே சுட்டு ப�ொசுக்கிவிடுகிறான். இதை கேள்விப்படும் சகர சக்ரவர்த்தியின் பேரன் பகீரதன் தவறை உணர்ந்து தவமிருந்து முருக பெருமானின் அருளை பெற்று மீண்டும் கங்கையை அதன் ப�ோக்கில் திருப்பி விட்டுவிடுகிறான். நாகர் தலைவனின் க�ோபத்தையும், முருக பெருமான் வரம் தரும் நிகழ்வையும் காண வானில் தேவர்கள் கூடி வருகிறார்கள். 27
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
படம் 18, 19 பார்க்கவும். இந்த புடைப்பு சிற்ப த�ொகுதியில் முத்தாய்பான பகடி ஒன்று இருப்பதாக ச�ொல்லியிருந்தோம்தானே. அந்த பகடி பூனையின் உருவில் இதில் இருக்கிறது. அது நெஞ்சு எலும்பு கூடு தெரிய ஒற்றை காலில் நின்று மேல இருக்கும் பகீரதன் ப�ோலவே தவம் செய்துக்கொண்டிருக்கிறது. பூனை துறவியாக மாறிவிட்டதாக நினைத்து எலிகள் பக்தி பரவச நிலையில் பூனையை கையெடுத்து கும்பிடுகின்றன. ஆனால் பூனையின் முகத்தில் திருட்டுத்தனம் அப்பட்டமாக தெரிகிறது. பூனை எலிகளை பிடித்து சாப்பிடப்போவது நிச்சயம். அது ப�ோல வலுத்தவன் என்னதான் பர�ோபகாரியாக நடித்தாலும் இளத்தவனை சுரண்டுவது நிச்சயம் என்பதை மிக தெளிவாக இதை செதுக்கிய சிற்பி காலத்துக்கும் அழியாத பகடியாக பதிவு செய்துவிட்டு ப�ோய்விட்டான். பூனையின் ஒற்றை கால் தவம் பல்லவ சிற்பிகளின் கற்பனையில் இருந்த கலக குரலை நமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது. படம் 20 பார்க்கவும். கிருஷ்ணர் க�ோவர்தன மலையை தலைக்கு மேல் தூக்கி பிடித்து முல்லை நில மக்களை காக்கும் புடைப்பு சிற்ப த�ொகுதி மகேந்திரவர்மனுடைய இரண்டாவது புடைப்பு சிற்ப த�ொகுதியாகும். அடை மழை பெய்யும்பொழுது கிருஷ்ணர் தன்னுடைய இடது கையில் க�ோவர்தன மலையை குடை ப�ோல் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்திருக்கிறார். கிருஷ்ணரின் இடது பக்க த�ொடக்கத்தில் ஆயர் ஒருத்தர் கைத்தடியின் மேல் சாய்ந்தபடி அவருடைய குழந்தையை த�ோள்களின் மீது தூக்கி வைத்தபடி மழைக்கு ஒதுங்கியிருக்கும் காட்சி காட்டப்பட்டிருக்கிறது. அவருக்கு அருகில் குடிநீர் குடங்கள் சுமந்த படி இருக்கும் பெண் காட்டப்பட்டிருக்கிறார். அந்த பெண் ஒரு கையால் தலைக்கு மேல் இரண்டு அடுக்குகளாக இருக்கும் குடிநீர் குடங்களையும் மற்றொரு கையில் பெண் குழந்தை ஒன்றையும் பிடித்தபடி இருக்கிறார். குடியான அந்த பெண்ணுக்கு அருகில் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்ணும் அவருடைய த�ோழியும் இருக்கிறார்கள். படங்கள் 21 முதல் 25 வரை பார்க்கவும். 28
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
29
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
30
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
31
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
32
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
33
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
34
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
த�ோழிகள் இருவரும் கைகளை க�ோர்த்தபடி ஒய்யாரமாக சாய்ந்து நிற்கிறார்கள். இந்த இருவரில் கிருஷ்ணருக்கு பக்கத்தில் இருக்கும் பெண் ஒரு கையில் சிறுவன் ஒருவனின் கையை பிடித்தபடி இருக்கிறார். அடுத்து இந்த புடைப்பு சிற்ப த�ொகுதியின் ஈர்ப்பு விசையான கிருஷ்ணர் மலையை தலைக்கு மேல் தூக்கி பிடித்தபடி நிற்கிறார். இது புடைப்பு சிற்பமாக இருந்தாலும் மிகவும் ஆழமாகவே பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணருக்கு வலது பக்கத்தில் மற்றொரு பெண் இருக்கிறார். இந்த பெண் பலராமனின் த�ோழியாக இருக்காலாம். அந்த பெண்ணின் சிகை அலங்காரமும், ஆபரணங்களும் படு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. படங்கள் 26, 27 பார்க்கவும். அவருக்கு பக்கத்தில் மரம் வெட்டும் த�ொழிலாளி. அவருடைய இடுப்பில் க�ோடாரி த�ொங்கிக்கொண்டிருக்கிறது. அவரின் த�ோளை நட்பாக சுற்றி வளைத்து பலராமன் கை வைத்திருப்பது காட்டப்பட்டிருக்கிறது. அவருக்கு பக்கத்தில் குழலூதும் மற்றொரு ஆயர். அந்த ஆயரின் குழலிசையை கேட்டு சிலர் தங்களை மறந்து நடனம் ஆடுவதைப் ப�ோல காட்டப்பட்டிருக்கிறது. இதில் கை குழந்தை வைத்திருக்கும் பெண் ஒருவர் மெய் மறந்து நடனம் ஆடுவதை பார்க்கலாம். படங்கள் 28, 29 பார்க்கவும். இதற்கு அடுத்து இருப்பது மரம் வெட்டும் த�ொழிலாளியின் துணைவியார். அந்த பெண் தலையின் மீது பாயும் மற்றொரு கையில் பானை உரியும் வைத்திருக்கிறார். அவருக்கு அடுத்து மேலும் சில ஆயர்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள். நடனமாடும் காதலர்களும் இதில் உண்டு. வலது பக்க த�ொடக்கத்தில் சிங்க உடல் க�ொண்ட வித விதமான கற்பனையான மிருகங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது. சிங்கத்தின் உடலில் மனித தலை க�ொண்ட ஸ்பிங்க்ஸ். அடுத்து சிங்கத்தின் உடலில் யாளி முகம் க�ொண்ட மிருகம். அடுத்து தந்தம் க�ொண்ட சிங்கம். இவ்வளவு அற்புதங்களையும் நாம் கிருஷ்ணர் மண்டபத்தில் பார்க்கலாம். 35
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
36
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
37
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
38
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
39
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
படங்கள் 30 முதல் 35 வரை பார்க்கவும். கிருஷ்ணர் மண்டபத்தில் தனியாக ஒரு மேடையில் இந்த காளை புடைப்பு சிற்பம் இருக்கிறது. இது புடைப்பு சிற்பமாக இருந்தாலும், முழு கல்லில் செதுக்கிய காளை சிற்பம் ப�ோலவே இருக்கிறது. புடைப்பு சிற்பம் என்றே ச�ொல்ல முடியாத அளவிற்கு இதன் திமிலும், தலை பகுதியும், க�ொம்பும், காதுகளும் காண்பவரை சுண்டி இழுக்கும் அழகில் வடிக்கப்பட்டிருக்கிறது. படம் 36 பார்க்கவும். இந்த புடைப்பு சிற்பங்களை செதுக்கி ஏறக்குறைய 550 வருடங்களுக்கு பின்பு விஜய நகர அரசு காலத்தில் இந்த முகப்பு மண்டபம் கட்டபட்டிருக்கிறது. பல்லவர் கால தூண்களின் அமைப்பிலிருந்து இந்த தூண்கள் வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. முகப்பு மண்டபத்தை கட்டி இந்த புடைப்பு சிற்ப த�ொகுதியை கருவறை புடைப்பு சிற்பங்களாக மாற்றி மக்கள் வழிபடுவதற்கு வசதி ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாக பந்தம், மத்ம பந்தம், தாடி, குடம், பலகை, பட்டை, தடின்னு எல்லா உறுப்புகளும் முழுதாக இதில் இருப்பதை காணலாம். பிற்கால மக்கள் இந்த மண்டபத்தில் வழிபாடு நடத்தியதற்கான அடையாளங்களை இங்கே பார்க்க முடியும். படம் 37 பார்க்கவும்.
40
மாமல்லபுரம் – குடைவரை மற்றும் சிற்ப க�ோயில்கள்
அ
டுத்து நாம் பார்க்க இருப்பது குடைவரை க�ோயில்களையும் சிற்ப க�ோயில்களையும். இது நரசிம்மவர்மன�ோடு த�ொடர்புடையது. பல்லவ அரசர்களிலேயே அனேகமாக அனைவரும் அறிந்த அரசர் இவராகத்தான் இருப்பார். மகேந்திரவர்மனுடைய மகன் இவர். இவருடைய காலம் கி.பி. 630–668. பல்லவர்களுடைய அரசு பேரரசாக மாறியது இவருடைய காலத்தில்தான். இவருடைய ஆட்சி காலத்திலும் இரண்டாம் புலிகேசி பல்லவர்களை எதிர்த்து தமிழகத்திற்குள் படையெடுத்து வந்தான்.
இம்முறை புலிகேசி தன்னுடன் கூட்டி வந்தது படை என்று குறிப்பிடுவதை விட குட்டி நாட�ொன்றின் ம�ொத்த மக்கள் த�ொகை என்றே ச�ொல்லலாம். இன்றைய தாம்பரம்-படப்பை ஊருக்கு அருகில் இருக்கும் மணிமங்களத்தில் நரசிம்மவர்மன் புலிகேசிய சுற்றி வளைத்து ஒரு வழி செய்துவிட்டார். மணிமங்களத்தில் நடைப்பெற்ற இந்த ப�ோர் ஏழாம் நூற்றாண்டின் மிகப் பெரும் ப�ோர் ஆகும். இவருடைய காலத்தை பேரரசை உருவாக்கி அதை காப்பாற்றிய காலகட்டம் என்று ச�ொல்லலாம். இவர் காலத்தில்தான் யூவான் சுவாங் காஞ்சிபுரம் நகருக்கு வந்தது. பிள்ளையார் என்கிற கடவுள் தமிழ் நாட்டிற்கு அறிமுகமானதும் இவருடைய காலத்தில்தான். நாயன்மார்களில் ஒருத்தரும் இவருடைய தளபதியுமான பரஞ்சோதியார் இரண்டாம் புலிகேசியை வாதாபியில் வைத்து த�ோற்கடித்த பிறகு ஆந்திராவிலிருந்து திரும்பியப�ோது தன்னுடன் பிள்ளையார் கடவுளையும் க�ொண்டு வந்தார். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்கிற விருது பெயர் உண்டு. மகாமல்லனான இரண்டாம் புலிகேசியை த�ோற்கடித்த 41
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
காரணத்தால் இந்த விருது பெயர். மகாபலிபுரத்தில் இருக்கும் பெரும்பான்மையான சிற்ப க�ோயில்கள் இவருடைய காலத்தில் உருவாக்கப்பட்டவைகளே. அதன் காரணமாகவே கடல் மல்லையாக இருந்த இந்த இடம் மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் பெற்றது. மாமல்லன் காலத்தில் க�ோயில் கட்டிடக் கலை குடைவரை த�ொழில் நுட்பத்திலிருந்து சிற்ப க�ோயில் த�ொழில் நுட்பத்திற்கு வளர்ச்சியடைந்தது. இவருடைய ஆட்சி காலத்தை இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொண்டால் முதல் பகுதியில் குடைவரை க�ோயில்களும் இரண்டாவது பகுதியில் சிற்ப க�ோயில்களும் வரும். நரசிம்மவர்மனுடைய குடைவரை க�ோயில்களை முதலில் பார்ப்போம். நரசிம்மவர்மனுடைய குடைவரை க�ோயில்களுக்கு என்று தனியான அடையாளங்கள் சில இருக்கின்றன. மண்டப தூணின் அடி பாகத்தில் யாளி என்கிற சிங்க உடலும் யாளி முகமும் க�ொண்ட மிருகம் பின்னங்கால்களை மடித்து உட்கார்ந்திருக்கும். அதனுடைய தலைக்கு மேல் உருண்டை வடிவில் தூண் இருக்கும். தூணின் உறுப்புகளான குடம், தாடி, பலகை ப�ோன்றவை இருக்கும். ப�ோதிகை அரைவட்டமாக இருக்கும். நரசிம்மவர்மன் காலத்து கட்டிடக் கலைஞர்கள் இந்த குடைவரையில் இருக்கும் கருவரையை சுற்றி திருசுற்று பாதையை பாறையை குடைந்து உருவாக்க முயற்ச்சி செய்திருக்கிறார்கள். படங்கள் 1 முதல் 3 வரை பார்க்கவும். ஆனால் அந்த முயற்ச்சி பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது. பல்லவ சிற்பிகள் திட்டமிட்டபடி இதை முடித்திருந்தால் இங்கிருக்கும் மற்ற அற்புதங்களை எல்லாம் இது தூக்கி சாப்பிட்டிருக்கும். நாம் முன்பே பார்த்ததை ப�ோல் குடைவரையை குடைவதற்கு வசதியாக பார் சாக்லேட் அமைப்பில் பாறை சுவற்றை செதுக்கியிருப்பது தெரியும். அனேகமாக இந்த நீண்ட குடைவரையின் பக்க சுவர்களில் அற்புதமான புடைப்பு சிற்பங்களை செதுக்க பல்லவ சிற்பிகள் முடிவு செய்திருந்திருக்கவேண்டும். நம்முடைய துரதிர்ஷடம் குடைவரை முழுதும் முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. திருசுற்று பாதையில் வரிசையாக தூண்களை செதுக்கியிருக்கிறார்கள். 42
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
தூண்களில் எந்த உறுப்புகளும் செதுக்கபடாலம் பாதியிலேயே கை விடப்பட்டிருக்கிறது. குடைவரைய�ோட தரை பகுதியும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இது வராக குடைவரை க�ோயில். நரசிம்மவர்மன் எழுப்பிய குடைவரைகளில் முழுதும் முடிக்கப்பட்ட குடைவரை க�ோயில்களில் இதுவும் ஒன்று. நரசிம்மவர்மனுடைய குடைவரைக்கு அடையாளமான மண்டப தூண் க�ொம்புகள் வைத்த யாளியுடன் இருக்கிறது. யாளி பின்னங்கால்களில் உட்கார்ந்திருக்கிறது. முன்னங்கால்களை ஊன்றியிருக்கிறது. யாளிய�ோட தலைக்கு மேல் உருண்டை தூண். தூணின் அங்கங்களான குடம், தடி, பலகை, இதழ் ப�ோன்றவை இருக்கின்றன. ப�ோதிகை அழகாக அரைவட்ட வடிவில் இருக்கிறது. அதில் வரி வரியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. படங்கள் 4, 5 பார்க்கவும். குடைவரையின் மேற்கூரையில் பூ வேலைபாடுகள் இருக்கிறது. இந்த குடைவரையை கட்டிய சமயத்தில் இந்த பூ வேலைபாடுகளில் சிகப்பு வர்ணம் பூசியிருக்கிறார்கள். அதற்கான அடையாளங்களை இப்போதும் நம்மால் பார்க்க முடியும். மண்டபத்தோட வடக்கு பக்க சுவரில் பூமகளை மடியில் தாங்கியிருக்கும் திருமாலின் வராக அவதாரமும், தெற்கு மண்டப சுவரில் உலகளந்த திருமாலின் அவதாரமும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கிறது. கருவரைக்கு வலபக்க சுவரில் வெண்கொற்ற குடை பிடித்த க�ொற்றவை புடைப்பு சிற்பமும், இடது பக்க சுவரில் லக்ஷ்மி புடைப்பு சிற்பமும் இருக்கிறது. படங்கள் 6 முதல் 10 வரை பார்க்கவும். இது சிவன் க�ோயிலாக இருந்திருக்கவேண்டும். ஆனால் கருவரைக்குள்ளே ச�ோமஸ்கந்தருடைய புடைப்பு சிற்பம் இல்லை. நரசிம்மவர்மனுடைய குடைவரைகளுக்கான அடையாளங்களில் ஒன்றாக வாயில் காப்போர் பக்கவாட்டில் திரும்பி நின்று நம்மை வரவேற்கிறார்கள். கருவரை சுவர�ோட பக்கவாட்டு சுவர்களிலும் வாயில் காப்போர் புடைப்பு சிற்பங்கள் இருக்கிறது. அடுத்து நாம் 43
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
பார்க்கப�ோவது லக்ஷ்மி புடைப்பு சிற்பம் குறித்து. லக்ஷ்மி தாமரை இதழ் இருக்கையில் உட்கார்ந்திருப்பது காட்டப்பட்டிருக்கிறது. பணிவிடை செய்து வழிபட ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் வருகிறார். லக்ஷ்மியின் தலைக்கு மேல் இரண்டு யானைகள் பூ மழை ப�ொழிந்துக்கொண்டிருக்கின்றன. படங்கள் 11 முதல் 13 வரை பார்க்கவும். இந்த பக்கம் க�ொற்றவை. க�ொற்றவையின் வாகனமான சிங்கம் அந்த பக்கம் இருக்க இந்த பக்கம் மான் செதுக்கப்பட்டிருக்கிறது. கீழே க�ொற்றவையின் பக்தர் ஒருவர் தன்னுடைய தலையை க�ொற்றவைக்கு பலி க�ொடுப்பதற்காக வேண்டி ஒரு கையால் தன்னுடைய தலை முடியை இழுத்து பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் கழுத்தை க�ொய்வதற்கான வாளை தயாராக வைத்திருப்பது சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில ந�ொடிகளில் க�ொற்றவையின் காலடியில் அவர் தன்னுடைய தலையை காணிக்கையாக்கிவிடலாம் என்பதை ப�ோல் இருக்கிறது. படம் 14 பார்க்கவும். அடுத்த குடைவரை மகிஷாசுரமர்தினி மண்டபம். இது சிவன் க�ோயில் ஆனால் மகிஷாசுரமர்தினி மண்டபம் என்கிற பெயரில்தான் பலரும் இதை அறிந்து வைத்திருக்கிறார்கள். இது சிவனுக்கான க�ோயிலாக இருந்தாலும் முகப்பு மண்டப சுவர்களில் திருமாலும், க�ொற்றவையும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கிறார்கள். உலகின் தலை சிறந்த படைப்புகளில் இந்த புடைப்பு சிற்பமும் ஒன்று. இது எருமை அரசனை க�ொற்றவை ப�ோரில் அழிக்கும் நிகழ்வை விளக்குகிறது. படு பயங்கரமான ப�ோரின் இறுதி காட்சி இது. ப�ோர் கடவுளான க�ொற்றவையும், எருமை அரசனும் நேருக்கு நேராக ம�ோதிக்கொள்கிறார்கள். உயிர�ோட்டமான இந்த ஒட்டும�ொத்த ப�ோர் கள காட்சிக்கும் மைய ஈர்ப்பு விசயாக இருந்து நம் கண்களை அசறடிப்பது எருமை அரசன். படங்கள் 15 முதல் 20 வரை பார்க்கவும். மாமல்லபுரத்திற்கு “தேமே என்று வந்தோமா பேருக்குன்னு 44
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
45
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
46
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
47
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
48
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
49
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
எல்லாத்தையும் பாத்தோமா ப�ோன�ோமான்னு” செல்பவர்களை கூட நிற்க வைத்து திரும்பி பார்க்க செய்ய கூடிய அளவிற்கு எருமை அரசனின் கம்பீரம் சுண்டி இழுக்க கூடியது. காட்சி அமைப்பிற்கும், கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தவும் ஒளியமைப்பு முக்கியம் என்பதை நிச்சயமாக பல்லவ சிற்பிகள் உணர்ந்தே இருந்திருக்கவேண்டும். பகல் வெளிச்சம் அதிகளவு விழும் இடத்தில் எருமை அரசனை செதுக்கி அவனுடைய உருவத்தை மேலும் வசீகரமாக காட்டியிருக்கிறார்கள். பகல் வெளிச்சமும், அவனுடைய உருண்டு திறண்ட உடற்கட்டும் சேர்ந்து பார்வை குவி மையத்தை அவனை ந�ோக்கி திருப்பி விடுகிறது. சாதாரணமாக ப�ோர் கடவுளான க�ொற்றவை நேரடியாக ப�ோர் களத்தில் இறங்குவது வழக்கம் கிடையாது. க�ொற்றவையின் படையே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இங்கு நிலையே வேறு. க�ொற்றவையே களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம். காரணம் எருமை அரசனுடைய வலிமை அப்படி. க�ொற்றவையின் படையில் சரி பாதி பரல�ோகம் ப�ோய்விட்டது என்பது எருமை அரசன் நிற்கும் த�ோரணையிலேயே நமக்கு தெரிந்துவிடுகிறது. க�ோபம் தலைக்கு ஏறிய க�ொற்றவை எல்லா ஆயுதங்களையும் எடுத்து க�ொண்டு சிங்கத்தை அதி வேகத்தில் விரட்டி வருவதை எருமை அரசன் சர்வ சாதாரணமாக கவனித்துக்கொண்டிருக்கிறான். ‘இவ்வளவுதான் உன் பவுசா’என்று கேட்காமல் கேட்பது ப�ோல் இருக்கிறது அவனுடைய உடல்மொழி. படங்கள் 21 முதல் 23 வரை பார்க்கவும். எருமை அரசனுடைய இந்த அலட்சியம் ஜான் மில்டன் (John Milton) எழுதிய பேரடைஸ் லாஸ்ட் (Paradise Lost)-ல் வரும் “ச�ொர்கத்துல அடிமையா இருக்குறத விட நரகத்துல அரசனா இருக்குறது மேல்” என்கிற வசனத்தை நினைவுபடுத்துகிறது. வழக்கமாக க�ோயில்களில் இருக்கும் புராண கதை புடைப்பு சிற்பங்களில் கெட்டவர்களும் அரக்கர்களும் அழிவதைதான் காட்டியிருப்பார்கள். ஆனால் இங்கு பல்லவ சிற்பிகள் அவர்களுடைய வழக்கம் ப�ோல் வழக்கத்தை மீறி இறுதி வரை இந்த ப�ோர் கள காட்சியின் முடிவை நமக்கு ச�ொல்லவேயில்லை. 50
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
சுமார் 1400 வருடங்களாக க�ொற்றவையும் அம்புகளை மழையாக ப�ொழிஞ்சுகிட்டிருக்காங்க, எருமை அரசனும் சர்வ சாதாரணமாக அதை பார்த்துக்கொண்டேயிருக்கிறான். க�ொற்றவையின் க�ோபமும் தனிந்தபாடில்லை, எருமை அரசனின் திமிரும் அடங்கியபாடில்லை. மண்டபத்தின் தெற்கு பக்க சுவரில் அனந்த சயன பெருமாள் இருக்கிறார். பரிமாணங்களை குறித்து நிச்சயம் பல்லவ சிற்பிகளுக்கு தெரிந்திருக்கவேண்டும். இரு பரிமாண (2D) வடிவமான புடைப்பு சிற்பங்களில் முப்பரிமாண (3D effect) த�ோற்றத்தை பல்லவ சிற்பிகள் இந்த திருமால் புடைப்பு சிற்பத்தில் உண்டாக்கி காண்பவரை அசரடிக்கிறார்கள். பல்லவ சிற்பிகள் பெர்ஸ்பெக்டிக்வ் (Perspective) என்கிற காட்சி க�ோணத்தை கச்சிதமாக பயன்படுத்தி தங்களின் படைப்புகளை பார்வைக்கு விருந்தாகவே மாற்றிவிடுகிறார்கள். திருமால் பள்ளிக�ொண்டிருக்க அழக பாத்துகிட்டே இருக்கலாம் ப�ோல இருக்கு. படம் 24 பார்க்கவும். அடுத்து இராமானுஜர் குடைவரை மண்டபம். ஆராய்ச்சியாளர்கள் இது மகேந்திரவர்மனுடைய குடைவரை கருதுகிறார்கள். ஆனால் மண்டப தூண் அமைப்பு இது நரசிம்மவர்மனுடைய குடைவரை என்றே ச�ொல்கிறது. பின்னங்கால்களில் உட்கார்ந்திருக்கும் யாளி அதன் தலைக்கு மேல் உருண்ட தூண் ப�ோன்றவை நரசிம்மவர்மன் காலத்து குடைவரைக்கான அடையாளங்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிற�ோம். வராக குடைவரை க�ோயில் ப�ோல் முழுதாக முடிக்கப்பட்ட குடைவரையாக இது இருந்திருக்கவேண்டும். அனேகமாக ச�ோமஸ்கந்தர் புடைப்பும், க�ொற்றவை புடைப்பு சிற்பங்களும் இருந்திருக்கும். பிற்காலத்தில் எல்லா புடைப்பு சிற்பங்களும் க�ொத்தி அழிக்கப்பட்டிருக்கிறது. விஜய நகர பேரரசு காலத்தில் முகப்பு மண்டபம் கட்டப்பட்டு அது பின்பு அகற்றப்பட்டதற்கான அடையாளங்களை பார்க்கலாம். படங்கள் 25 முதல் 27 வரை பார்க்கவும். நரசிம்மவர்மன் ஆட்சியின் இரண்டாவது பாதியில் கட்டிடக் கலை குடைவரையில் இருந்து சிற்ப க�ோயிலுக்கு வளர்ச்சியடைகிறது. சிற்ப க�ோயில் என்பது ஒரு முழு பாறையில் முடி முதல் அடி வரை 51
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
சிலை ஒன்றை செதுக்குவதை ப�ோல் ஒரு க�ோயிலை செதுக்குவது. மாமல்லபுரத்தில் இருக்கும் சிற்ப க�ோயில்கள் ரதங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. படங்கள் 28, 29 பார்க்கவும். சிற்ப க�ோயில் என்று சாதாரணமாக கூறிவிட்டாலும், பாறையில் க�ோயிலை சிற்பமாக வடிப்பது என்பது கற்பனையில் கூட சாத்தியப்படாத விசயம். சிற்ப க�ோயிலை வடிக்க தேவைப்படும் அசாதாரணமான கற்பனை வளத்தையும், கற்பனையை உண்மையாக்க தேவையான உழைப்பையும் புரிந்துக்கொள்ள, ஒரு க�ோயிலின் வடிவமைப்பையும் அதன் உருப்புகளையும் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது. படங்கள் 30, 31 பார்க்கவும். மனித உறுப்புகள் பாதம், கால், த�ோள், கழுத்து, தலை, முடி ப�ோல க�ோயிலுக்கும் ஆறு உறுப்புகள் உண்டு. கீழிருந்து முதல் உறுப்பு அதிட்டாணம், அதற்கு மேல் பித்தி, அடுத்து பிரஸ்தரம், அடுத்து கிரிவரம், அடுத்து சிகரம் இறுதியாக உச்சி. அதிட்டாணம் த�ொடங்கி மேலே உச்சி முடிய இந்த ஆறு உறுப்புகளையும் ஓன்றாக சேர்த்து விமானம். அதிட்டாணத்துக்கு கீழே உபபீடம் என்று ஒன்று உண்டு. ஒரு க�ோயிலின் அளவை பிரம்மாண்டமாக எடுத்து காட்டுவது இந்த உப பீடத்தினுடைய அளவுதான். தஞ்சை பெரிய க�ோயிலின் பிரம்மாண்டத்திற்கான காரணம் அதன் உப பீடம். படம் 32 பார்க்கவும். விமானத்தில் மூன்று வகை இருக்கிறது. வேசரம், நாகரம், திராவிடம். தென்னிந்தியாவை ப�ொறுத்த வரைக்கும் திராவிட அமைப்பு விமானம்தான் வழக்கத்தில் இருப்பது. திராவிட விமானத்தில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் ப�ோல பல பிரிவுகள் உண்டு. சிற்ப க�ோயிலுக்கு ஒரே ஒரு பாறைதான் கட்டுமான ப�ொருள். அந்த பாறையைதான் க�ோயிலாக செதுக்கியாகவேண்டும். எந்த கட்டிடமாக இருந்தாலும் கீழே கட்ட த�ொடங்கி மேலே ப�ோய் முடிப்பதுதான் முறை. ஆனால் சிற்ப க�ோயிலை ப�ொறுத்த வரை 52
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
53
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
54
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
55
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
56
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
57
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
58
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
59
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
60
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
61
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
62
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
63
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
அது தலை கீழ். பாறைக்கு மேல் இருந்து த�ொடங்கிதான் கீழே ப�ோய் முடிக்க முடியும். மேலேயிருந்து கீழே வரும் சிற்ப க�ோயில் கட்டிடத்தில் நீள, அகல, உயரம் ப�ோன்றவைகளை கணிப்பதும் அளப்பதும் நிச்சயமாக க�ொடுங்கனவுதான். பாறையை செதுக்க செதுக்க அதன் நீளமும், அகலமும், க�ோயிலின் உறுப்புகளுக்கு ஏற்ப மாற்றமடைந்தபடியே வரும். பாறையை செதுக்கும் சிற்பிகள் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே அலைவரிசையில் இல்லாது ப�ோனால் விமானம் விமானமாக வராது. சிற்ப க�ோயிலுக்கு தேவையான பாறையை கண்டுபிடிப்பது த�ொடங்கி அந்த பாறைக்கு எப்படியான விமான உறுப்புகள் ப�ொருந்தும், அந்த பாறை எப்படி ஒரு க�ோயிலாக முழுமை அடைந்து நிற்கும் என்பதை முன்பே கணிப்பதற்கு படு துல்லியமான ப�ொறியியல் அறிவு தேவை. எத்தகைய நவீன உபகரணங்களும் இல்லாமல் சிற்ப க�ோயில் ப�ோன்ற ப�ொறியியல் அற்புதங்களை படைத்த பல்லவ சிற்பிகளின் திறமையை வியக்க வார்த்தைகளே இல்லை. சிற்பிகள் பாறையில் க�ோயிலை செதுக்கிக�ொண்டிருக்கும்போது ஒரு சிற்பி கவனம் சிதறி உளியை தவறாக அடித்துவிட்டாலும் கதை ம�ொத்த கதையும் முடிந்துவிடும். பாறையில் விரிசல் விழுந்து ஓட்டும�ொத்த க�ோயிலும் பாழாகிவிடும். விரிசல் விழுந்த பாறையை அப்படியே விட்டுவிட்டு வேற பாறையை தேட வேண்டியதுதான். ஒரு பாறையில் பத்து சிற்பிகள் சிற்ப க�ோயிலை செதுக்குகிறார்கள் என்றால் அவர்கள் பத்து பேராக இருக்கமாட்டார்கள் ஒரே ஒருத்தராகதான் இருப்பார்கள். எல்லை கடந்த கவன குவிப்பும், ஒரு முக தன்மையும் பல்லவ சிற்பிகளின் ஏழாம் எட்டாம் அறிவாக இருந்திருக்கவேண்டும். பாண்டவர் ரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து சிற்ப க�ோயில்களும், ஊருக்கு வெளியில் இருக்கும் இரண்டு சிற்ப க�ோயில்களும் நரசிம்மவர்மன் காலத்து சிற்ப க�ோயில்கள். படங்கள் 33, 34, 35 பார்க்கவும். இந்த ஐந்து சிற்ப க�ோயில்களும் உலக புகழ்பெற்றது. ஐந்தில் ஒன்று க�ொற்றவை க�ோயில், இரண்டு சிவன் க�ோயில், மற்றொன்று 64
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
திருமால் க�ோயில், ஒன்று முருகன் க�ோயில். இது க�ொற்றவை க�ோயில். இதை திரெளபதி ரதம் என்று அழைக்கிறார்கள். க�ொற்றவை க�ோயிலுக்கு அடுத்தது சிவன் க�ோயில். இதை அர்சுனன் ரதம் என்று அழைக்கிறார்கள். இதற்கு அடுத்தது திருமால் க�ோயில் ஆனால் பீமசேனன் ரதம் என்று அழைக்கப்படுகிறது. அடுத்ததும் சிவன் க�ோயில் ஆனால் தருமராசன் ரதம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. படங்கள் 36 முதல் 40 வரை பார்க்கவும். இந்த வரிசையிலிருந்து தனித்து வடக்கு பக்கமிருக்கும் முருகன் சிற்ப க�ோயிலை சகாதேவன் ரதம் என்று அழைக்கிறார்கள். இந்த ஐந்து சிற்ப க�ோயில்களில் க�ொற்றவை க�ோயில் முழுதாக முடிக்கப்பட்டிருக்கிறது. முருகன் க�ோயில் முக்கால் பகுதி முடிந்திருக்கிறது. அர்ஜூன ரத சிவன் க�ோயிலும் பெரும் பகுதி முடிக்கப்பட்டிருக்கிறது. திருமால் சிற்ப க�ோயிலும், தருமராச ரத சிவன் க�ோயிலும் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊருக்கு வெளியில் இருக்கும் இரண்டு சிற்ப க�ோயில்களும் பாதியிலயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. முதலில் உலக புகழ்பெற்ற இந்த ஐந்து சிற்ப க�ோயில்களின் கட்டிடக் கலையின் அற்புதங்களைப் பார்த்துவிட்டு, நரசிம்மவர்மன் த�ொடங்கின இந்த மாமல்லபுர சிற்ப க�ோயில்கள் ஏன் பாதியிலயே நிறுத்தப்பட்டுவிட்டன என்பதை பார்ப்போம். இந்த இடம் 1400 வருடங்களுக்கு முன்பு நீண்ட பாறை த�ொகுதியாக இருந்திருக்கவேண்டும். நிறுத்தி நிதானமாக தவம் மாதரியான ஒரு திட்டமிடலுக்கு பிறகு பாறை த�ொகுதியை சிற்ப க�ோயில்களாக செதுக்க த�ொடங்கியிருக்கிறார்கள். ஐந்து க�ோயில்களும் ப�ொதுவாக சிற்ப க�ோயில்களாக இருப்பினும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான கட்டிட அமைப்புகளை க�ொண்ட க�ோயில்கள். மாமல்லபுரம் க�ோயில் கட்டிடக் கலைக்கான ச�ோதனை கூடம் என்று நாம் முன்பே குறிப்பிட்டதற்கான மிகச் சிறந்த உதாரணம் இந்த ஐந்து சிற்ப க�ோயில்கள். ஐந்து விதமான விமானங்களை இந்த ஒரே இடத்தில் பல்லவ சிற்பிகள் முயற்ச்சி செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எங்கும் இது மாதரி 65
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
விதம் விதமான விமானங்களை ஒரே இடத்தில் பார்க்க முடியாது. பல்லவ சிற்பிகள் கற்பனை செய்திருந்ததுப் ப�ோலவே இந்த சிற்ப க�ோயில்கள் முழுதும் முடிக்கப்பட்டிருந்தால் இந்த இடம் பிற்கால சிற்பிகளுக்கான புனித பூமியாக மாறியிருந்திருக்கும். நான்கு விதமான விமான அமைப்புகள் இங்கிருக்கிறது. அர்சுனன் ரத விமானம் சதுர அமைப்பில் இருக்கிறது. தருமராச ரத விமானமும் சதுர அமைப்பில் இருக்கிறது. பீமசேனன் ரத விமானம் நீள் சதுர அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. கருவரைக்குள் இருக்கும் இறைவுருவம் கிடந்த (படுத்த) நிலையில் இருந்தால் மாத்திரமே இவ்விதமான விமானத்தை அமைப்பார்கள். சகாதேவன் ரதம் கஜபிருஷ்ட விமான அமைப்பில் இருக்கிறது. கஜம் என்றால் யானை, பிருஷ்டம் என்றால் பின் பகுதி. யானையின் பின் பகுதி எப்படி இருக்கும�ோ அப்படிதான் இந்த விமானத்தின் அமைப்பும் இருக்கும். காஞ்சிபுரத்திற்கு அருகே கூரம் என்கிற சிற்றூரில் இருக்கும் தமிழகத்தின் முதல் கற்றளியான வித்யா விநீத பல்லவ பரமேசுவர சிவன் க�ோயில் கஜபிருஷ்ட விமான அமைப்பை க�ொண்டது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. இங்கிருக்கும் மற்ற சிற்ப க�ோயில்கள் என்றில்லாமல் தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற எந்த கற்றளிகளைவிடவும் மிகவும் வித்தியாசமானது திரெளபதி ரதம். விமானத்தின் பிரஸ்தர பகுதி பிரமிட் அமைப்பில் இல்லாமல் முற்றிலும் புதிய வடிவில் இருக்கிறது. வழக்கமெல்லாம் எங்களுக்கு வழக்கமெயில்லை என்பதை இதில் மீண்டும் பல்லவ சிற்பிகள் உண்மையாக்கியிருக்கிறார்கள். இங்கே இருக்கும் மற்ற நான்கு சிற்ப க�ோயில்களைவிடவும் இது உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அழகில் மற்ற க�ோயில்களை பின்னுக்கு தள்ளிட்டு முன்னால் வந்துவிடுகிறது. இதன் பிரஸ்தரத்தை பார்க்கும்போது பல்லவ சிற்பிகள் இதை பாறை என்று நினைத்தார்களா அல்லது மெழுகு என்று நினைத்துக்கொண்டார்களா என்று வாய் பிளக்க த�ோன்றுகிறது. படங்கள் 41, 42, 43 பார்க்கவும். வராக குடைவரையில் இருக்கும் அதே விதமான க�ொற்றவை திரெளபதி ரதத்தில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறார். 66
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
67
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
68
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
69
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
70
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
71
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
72
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
73
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
74
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
75
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
பக்தர் ஒருத்தர் தன்னுடைய தலையை அறுத்து பலிக�ொடுக்க தலை முடியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் தலையை அறுத்துக்கொள்ள வாள் ஒன்றை தயாராக வைத்திருக்கிறார். க�ொற்றவை தாமரை இதழ் மேல் நின்றுக்கொண்டிருக்கிறார். வாயில்காப்போர் ஒய்யாரமாக நின்றிருக்கிறார்கள். கருவரை வாயிலுக்கு மேலும், சாலைகளுக்கு மேலும், க�ோபுரத்தின் மேல் கூரையின் நாலா பக்கமும் அழகான க�ொடிகருக்கு வேலைபாடுகள் இருக்கிறது. சிற்ப க�ோயில்கள் தவிர கடவுளருக்கான வாகனங்களையும் சின்ன துண்டு பாறைகளில் வடித்திருக்கிறார்கள். க�ொற்றவையின் வாகனமான சிங்கமும், சிவனுடைய வாகனமான எருதும் (நந்தி), முருகனுடைய வாகனமான யானையும் இங்கே இருக்கின்றன. படங்கள் 45, 46, 47 பார்க்கவும். பல்லவ சிற்பிகளுக்கு யானை மீது தீரா காதல் உண்டு என்பதை முன்பே பார்த்திருக்கிற�ோம். அது இங்கே மீண்டும் நிருபிக்கப்பட்டிருக்கிறது. யானையை உயிருடன் நிற்க வைத்து அதன் மேல் பாறையை உருக்கி ஊற்றியதைப் ப�ோல அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது இந்த யானை. நந்தியின் கழுத்தில் இருக்கும் மணியும், நந்தியின் காதுகளும், திமிலும் வைத்த கண் எடுக்காமல் 76
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
அதை பார்த்துக்கொண்டே இருக்க தூண்டுகிறது. இப்படிப்பட்ட எருது வாகனமாக இருந்தால் சிவன் நிச்சயம் வேண்டாம் என்று ச�ொல்லப்போவதில்லை. நந்தி பிற்காலத்தில் வந்த கற்றளிகளில் மிக முக்கிய பங்கு வகிக்க இருந்தது. க�ொற்றவை க�ோயிலைத் தவிர மற்ற சிற்ப க�ோயில்கள் ஏன் அரைகுறையாக இருக்கின்றன என்பதற்கான காரணத்தை இனி பார்க்கலாம். மாமல்லபுரத்தை ப�ொறுத்தவரைக்கும் நரசிம்மவர்மனுடைய சிற்ப க�ோயில்கள் மாத்திரமே முழுதும் முடிக்கப்படாமல் பாதியிலே விடப்பட்டிருக்கின்றன. அதற்கு நரசிம்மவர்மன் காலத்து அரசியல் நிலை காரணமாக இருந்திருக்கவேண்டும். பிற்கால பல்லவர்களில் இவர் வலிமையான அரசராக இருந்திருந்தாலும் பேரரசின் மூன்று திசைகளில் இருந்தும் த�ொடர்ச்சியான த�ொல்லைகள் இருந்தன. வடக்கில் சாளுக்கியர்கள், வட மேற்கில் கங்கர்கள், தெற்கில் பாண்டியர்கள். ஆட்சியின் பெரும் பகுதி ஓயாத ப�ோர்களிலேயே கழிந்தது. த�ொடர்ச்சியான ப�ோர்களின் காரணமாக நிச்சயமாக கருவூலம் திணறியிருக்கவேண்டும். வரவுக்கும் ப�ோருக்குமே சரியாக இருக்கம்போது சிற்ப க�ோயில் ப�ோன்று காலமும் செலவும் பிடிக்கிற விசயங்களுக்கு க�ொஞ்சம் பற்றாக்குறையாகதான் இருந்திருக்கும். மாமல்லபுரத்தில் த�ொடங்கபட்ட நரசிம்மவர்மனுடைய சிற்ப க�ோயில்கள் ஒரே காலகட்டத்தில் த�ொடங்கி ஏறக்குறைய ஒரே நேரத்தில் கைவிடப்பட்டதாகத்தான் தெரிகிறது. அரசியல், ப�ொருளாதார காரணங்களுக்காக கைவிடப்பட்ட கட்டிட வேலைகள் முடிக்கப்படுவதற்கான வாய்ப்பு நரசிம்மவர்மனுக்கு மீண்டும் கிடைக்காமலேயே ப�ோயிருக்கவேண்டும். படங்கள் 47, 48 பார்க்கவும். இந்த பாறையை இன்றைக்கு வெண்ணை உருண்டை என்று அழைக்கிறார்கள். அப்படி என்ன இந்த பாறையில் இருக்கிறது என்று பார்த்தால் ப�ொறியியல் அடிப்படையிலும் இது ஆச்சரியம் தர கூடியது. டன் கணக்கில் எடை க�ொண்ட பாறை உருண்டு கீழே விழுந்துவிடாமல் இந்த சின்ன முனைப்பகுதி மட்டும் அதை தாங்கி பிடித்திருப்பது புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் விசயம்தான். 77
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
இந்த பெரிய பாறை எங்கிருந்தோ உருண்டு வந்து இங்கே நிற்பது ப�ோலதான் இருக்கிறது. இது தானாகவே உருண்டு வந்ததா அல்லது உருட்டிவிடப்பட்டதா என்கிற சந்தேகம் கேள்வியாக நமக்குள் உருவெடுக்கிறது. படங்கள் 49, 50 பார்க்கவும். இந்த கேள்விக்கான பதிலும் பல்லவ சிற்பிகளிடமே இருக்கிறது. சிற்ப க�ோயிலை செதுக்குவதற்கு ஏற்ற பாறையை இந்த பகுதியில் எங்கிருந்தோ துண்டாக அறுத்து இப்படி உருட்டிவிட்டிருக்கிறார்கள். சிற்ப க�ோயில் செதுக்கத்தான் இந்த பாறையை அறுத்திருக்கிறார்கள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களை காட்ட முடியும். ஒன்று இந்த பாறையின் அடிப்பகுதி. அடிப்பகுதி நிச்சயமாக இது அறுக்கப்பட்ட பாறைதான் என்பதை உறுதி செய்கிறது. இந்த பாறை எங்கிருந்து அறுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் அதற்கு சற்று தள்ளி இருக்கிறது. அடுத்த உதாரணம் இதற்கு அருகில் இருக்கும் கணேச ரத சிற்ப க�ோயில். அந்த சிற்ப க�ோயிலின் உயரமும் அளவும் ஏறக்குறைய இந்த பாறை ப�ோலவே இருக்கிறது. இந்த பாறை மற்றொரு ஆச்சரியத்தையும் நமக்கு உண்டாக்குகிறது. எப்படி இந்த பாறைகளை அறுத்திருப்பார்கள் என்பதே அது. எவ்விதமான கருவிகள் மற்றும் த�ொழில் நுட்பம் க�ொண்டு இதை செய்திருப்பார்கள்? நாம் திரும்ப திரும்ப ச�ொல்வது ப�ோல மாமல்லபுரம் கட்டிடக் கலைக்கான ச�ோதனை கூடம். இந்த ச�ோதனை கூடத்தில் எல்லா விதமான கேள்விக்கும் பதிலிருக்கிறது. படம் 51 பார்க்கவும். அறுத்தெடுக்க வேண்டிய பாறையில் வரிசையாக சிறிய சதுரமான குழிகளை வெட்டி அதில் மர துண்டுகளை ச�ொறுகி வைத்துவிடுவார்கள். பிறகு அந்த மர துண்டுகளில் தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். நீர் பட பட மர துண்டுகள் உப்ப த�ொடங்கும். வரிசையாக இருக்கம் மர துண்டுகள் உப்ப உப்ப பாறை அந்த வரிசைபடி விரிசல் விட்டு பிளக்க த�ொடங்கும். இப்படி பாறைய அறுக்க நடந்த முயற்ச்சிகளை மாமல்லபுரம் முழுவதும் பார்க்கலாம். 78
மாமல்லபுரம்
–
சிற்ப
க�ோயில்களும், கற்றளிகளும்
அ
டுத்து நாம் பார்க்கப�ோவது மூன்றாவது வகையான சிற்ப க�ோயிலும், கற்றளியும். இது முதலாம் பரமேசுரவர்மன�ோடு த�ொடர்புடையது. இவர் நரசிம்மவர்மனுடைய பேரன். இவருடைய காலம் கி.பி. 672 – 700. நாம் முன்பே பார்த்ததைப் ப�ோல இவர் காலத்திலும் பல்லவ – சாளுக்கிய பரம்பரை பகை த�ொடர்ந்தது. இவருடைய க�ொள்ளு தாத்தா மகேந்திரவர்மனிடமும், தாத்தா நரசிம்மவர்மனிடமும் த�ோற்றுப்போன சாளுக்கியன் இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்யன் எல்லாவற்றுக்கும் பழிவாங்க பல்லவர்கள் மீது படையெடுத்தான்.
இவருடைய காலத்தில்தான் கட்டிடக் கலை சிற்ப க�ோயில் த�ொழில் நுட்பத்திலிருந்து கற்றளி த�ொழில் நுட்பத்திற்கு வளர்ச்சியடைகிறது. மாமல்லபுரத்தில் இருக்கும் கணேசர் ரதம் சிற்ப க�ோயில் முதலாம் பரமேசுவரவர்மன் கட்டியது. முழுதும் முடிக்கப்பட்டு அற்புதமாக காட்சி தரும் சிற்ப க�ோயில். பரமேசுவரவர்மன் எவ்வித ப�ொருளாதார அரசியல் காரணங்களும் பல்லவ சிற்பிகளை தடுக்காமல் பார்த்துக்கொண்டார் ப�ோலும். படம் 1 பார்க்கவும். அனேகமாக பாதியில் நின்ற ஐந்து ரதங்களில் இருக்கும் க�ொற்றவை க�ோயிலையும் இவர்தான் முழுதாக முடித்திருக்கவேண்டும். க�ொற்றவை க�ோயிலுக்கு பக்கத்திலிருக்கும் அர்ச்சுன ரதத்தின் மூன்றாவது அடுக்கையும் இவர்தான் முடித்திருக்கிறார். படம் 2 பார்க்கவும். 79
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
இதை மும்மூர்திகள் மண்டபம் என்று இன்று அழைக்கிறார்கள். இந்த குடைவரை க�ோயில் பரமேசுவரவர்மன் காலத்தில் செதுக்கப்பட்டதாக இருக்கலாம். பரமேசுவரவர்மன் காலத்தில் குடைவரைகள் வழக்கில் இல்லையென்றாலும் இந்த குடைவரையில் மகேந்திரவர்மனுடைய குடைவரைக்கான அடையாளங்கள�ோ அல்லது நரசிம்மவர்மனுடைய குடைவரைக்கான அடையாளங்கள�ோ சுத்தமாக இல்லை. இந்த குடைவரை மிக அழகாவும் நேர்த்தியாவும் குடையப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு கருவரை திருமாலுக்கானதாக தெரிகிறது. ஆனால் இடையில் இருக்கும் கருவரையில் லிங்கம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக இருக்கும் கருவரை முருக கடவுளுக்கானதாக இருக்கலாம். இங்கே ஒரு முக்கியமான வரலாற்று உண்மையை நாம் கவனிக்கவேண்டும். அது தமிழ் நாட்டின் முதல் கற்றளியாக கருதப்படும் கூரம் சிவன் க�ோயிலை பரமேசுவரவர்மன் கட்டியிருந்தாலும் மாமல்லபுரத்தில் இவர் எந்த ஒரு கற்றளியையும் கட்டவில்லை. அடுத்து நான்காவது வகையான கற்றிளி. இது இராஜசிம்மனுடன் த�ொடர்புடையது. இவர் முதலாம் பரமேசுவரவர்மனின் மகன். மகேந்திரவர்மனுடைய எள்ளு பேரன். இவருடைய காலம் கி.பி. 700 – 728. மாமல்லபுரத்தில் இருக்கும் கடற்கரை கற்றளி க�ோயில் இவர் எழுப்பிய முதல் கற்றளி. இதற்கு பிறகு த�ொடங்கப்பட்டு ஆனால் முதலில் முடிக்கப்பட்ட கற்றளி காஞ்சிபுரத்தில் இவர் எடுப்பித்த கைலாசநாதர் க�ோயில். இந்த க�ோயில் குறித்து அடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். படங்கள் 3, 4 பார்க்கவும். பல்லவ கற்றளிகள் இயல்பிலேயே மிகவும் அழகாக இருக்க கூடியவை. அதிலும் கடலுக்கு பின்னனியில் பல்லவ கற்றளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் ஒரே இடத்தில் வரிசையாக மூன்று கற்றளிகள் என்றால் அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. கீழ் வானில் சூரியன் மறைந்தும் மறையாத அந்தி ப�ொழுதில், பளிச்சென்றிருக்கும் நீல கடலுக்கு 80
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
81
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
82
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
83
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
84
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
85
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
86
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
மேலேழுந்து வரும் முழு நிலவின் பின்னணியில், குளிர்ந்த கடல் காற்று நம் தலைமுடியை கலைத்த படி இருக்கும்போது மூன்று கற்றளிகளையும் பார்ப்பது நிச்சயமாக வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். இராஜசிம்மனுக்கும் அது மறக்க முடியாத அனுபவமாத்தான் இருந்திருக்கும். அடுத்து வந்த பல தலைமுறைகளுக்கும் அப்படிதான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அந்த க�ொடுப்பினை நமக்கு இல்லை. சுமார் 1300 வருடங்களுக்கு முன்பு இங்கிருந்த மூன்று கற்றளிகளில் இரண்டு கற்றளிகள் இன்றைக்கு கடலுக்குள் இருக்கின்றன. எஞ்சியிருக்கும் கற்றளியும் கூட தன்னுடைய முழு அழகை வெளிப்படுத்த முடியாமல் அறையும் குறையுமாதான் நின்றுக்கொண்டிருக்கிறது. அறையும் குறையுமாக நிற்கும் இந்த கற்றளியின் அழகே ஆளை அசத்தும்போது முழு உருவத்தில் மூன்று கற்றளிகளையும் கற்பனை செய்வதே கிளர்ச்சி உண்டாக்க கூடிய விசயமாக இருக்கும். இந்த கற்றளியும் கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கடல் மணலில் புதைந்துதான் கிடந்தது. இந்த க�ோயிலில் இருக்கும் ராஜராஜனுடைய கல்வெட்டு வழியாகதான் இங்கு மூன்று கற்றளி க�ோயில்கள் இருந்ததே நமக்கு தெரிய வருகிறது. இன்றைக்கு கடலுக்குள் இருக்கும் இரண்டு கற்றளிகளும் சிவன் க�ோயில்கள் என்று ராஜராஜனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒன்றின் பெயர் “சத்திரிய சிகாமணி பல்லவேச்சுரம்” மற்றொன்றின் பெயர் “இராஜசிம்ம பல்லவேச்சுரம்”. மூன்றாவதான இது “பள்ளிக்கொண்டருளிய தேவர் க�ோயில்” எனப்படும் திருமால் க�ோயில். நல்லவேலையாக ராஜராஜன் தெரிந்தோ தெரியாமல�ோ இந்த க�ோயிலில் தன்னுடைய கல்வெட்டை எழுதி வைத்து நமக்கு ஒரு வரலாற்று உண்மைய ச�ொல்லி சென்றிருக்கிறார். கடலுக்குள் சென்றுவிட்ட கற்றளிகளில் ஒன்றில் அவர் தன்னுடைய கலவெட்டை எழுதியிருந்தால் கடல�ோட ஒரு வரலாற்று உண்மையும் சென்றிருக்கும். பூம்புகார் த�ொடங்கி மாமல்லபுர கற்றளிகள் ப�ோல தமிழர்களின் பல அற்புத வரலாற்று சின்னங்களை கடல் க�ொண்டுப�ோய்விட்டது. தரையில் விட்டு வைத்தால் அந்த வரலாற்று அற்புதங்களின் மதிப்பு தெரியாமல் நாம் அவற்றை பாழடித்துவிடுவ�ோம் என்றுதான் 87
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
நம் கைகளும், கால்களும், பார்வையும் பட முடியாத இடத்தில் கடல் தனக்குள்ள இன்றைக்கும் பத்திரமாக வைத்திருக்கிறது. புலி குகைக்கு ப�ோகும் வழியில் இருக்கும் முகுந்த நாயனார் க�ோயிலும் இராஜசிம்மன் கட்டிய கற்றளியே. படம் 5 பார்க்கவும். இப்போதிருக்கும் கடற்கரை க�ோயிலுக்கு முன்பாக பெரிதாக ஒரு குளமும். இடப்பக்கம் ஒரு குளமும். வலப்பக்கம் சிறியதாக இரண்டு குளங்களும் இருந்திருக்கவேண்டும். படங்கள் 6, 7, 8 பார்க்கவும். க�ோயிலை சுற்றி பெரிய சுற்றுசுவர் இருந்தது. சுற்றுசுவருக்கு மேல் நந்தி சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. பெரிய சுற்றுசுவருக்குள் மற்றொரு சுற்றுசுவர் இருந்தது. அதன் மீதும் வரிசையாக நந்தி சிலைகள் இருந்திருக்கவேண்டும் அல்லது கடலுக்குள் ப�ோய்விட்ட சிவன் க�ோயில்களின் சிலைகளாகவும் கூட இவை இருக்கலாம். இரண்டாவது சுற்றுசுவருக்குள் வரிசையாக இரண்டு விமானங்கள் இருக்கின்றன. முதல் விமானம் பிரஸ்தர பகுதியில் நான்கு தளங்களை க�ொண்ட பெரிய விமானம். அடுத்தது பிரஸ்தர பகுதியில் இரண்டு தளங்கள் க�ொண்ட சின்ன விமானம். க�ோயில் கட்டப்பட்ட காலத்தில் சிறிய விமானத்துடன் சேர்த்து முகப்பு மண்டபமும் இருந்தது. இன்றைக்கு முகப்பு மண்டபத்தின் தரை பகுதி மாத்திரமே இருக்கிறது. படங்கள் 9, 10 பார்க்கவும். இதன் பெயர் புலிக்குகை. இதற்கான பெயர் காரணம் தெரியவில்லை. எவ்விதத்திலும் புலிக்கும் இந்த சிற்பத்துக்கும் த�ொடர்பே கிடையாது. இதில் இருப்பது யாளி எனப்படும் சிங்கம். இதுவும் இராஜசிம்மன் கட்டியதுதான். தலையில் க�ொம்புகள் க�ொண்ட 11 யாளி வாயைப் பிளந்தபடி இருக்கின்றன. உள்ளே மண்டபம் இருக்கிறது. இது சிற்ப க�ோயிலா அல்லது மண்டபமா என்பதில் ஆராய்ச்சியாளர்களிடையே சின்ன விவாதம் இருக்கிறது. இது அமைப்பில் மண்டபம் ப�ோல் இருந்தாலும் க�ோயிலுக்கு உரிய 88
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
அதிட்டாணமும் பித்தியும் இருப்பதால் சிற்ப க�ோயிலாகதான் இருக்கவேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அதிட்டாணமும் பித்தியும் இருப்பதாலேயே இதை சிற்ப க�ோயில் என்று ச�ொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது சிற்ப க�ோயிலாக இருக்க முடியாது என்பதற்கான காரணம் கருவரை என்று தவறாக நினைக்க த�ோன்றும் பகுதியில் எவ்விதமான இறை உருவத்தையும் வைப்பதற்கான ஏற்பாடும் இல்லாமல் இருப்பது. இராஜசிம்மன் சிவ பக்தன். இது சிவனுக்கான சிற்ப க�ோயிலாக இருந்திருந்தால் நிச்சயம் லிங்கம் வைப்பதற்கான குழி இதில் இருந்திருக்கும். திருமால் அல்லது க�ொற்றவை க�ோயிலாக இருந்திருந்தால் பக்க சுவர்களில் அவர்களுடைய புடைப்பு சிற்பங்கள் இருந்திருக்கும். ஆக இது அரசன் உட்காருவதற்கான சிறப்பு மண்டபமாகதான் படைக்கப்பட்டிருக்கவேண்டும். இது மாமல்லபுரத்திற்கு ஏதாவது விழா நடைபெறும் ப�ொழுத�ோ அல்லது கடற்கரை கற்றளி க�ோயில் சிறப்பு வழிபாடுகளுக்கு பல்லவ அரசன் வரும்பொழுத�ோ மக்களை சந்திப்பதற்காக கட்டப்பட்ட மண்டபமாக இருக்கலாம். கட்டுக்கு அடங்காத கற்பனையை அவிழ்த்துவிடுவதும் ஒரு பாறையை பல்லவ சிற்பிகளிடம் க�ொடுப்பதும் ஒன்று. மாமல்லபுர பாறைகளில் பல்லவ சிற்பிகள் செய்து காட்டிய அற்புதங்களை அவர்களால் மட்டுமே மிஞ்ச முடியும். அதற்கான உதாரணம் இது. படங்கள் 11, 12, பார்க்கவும். உலகத்தின் வேறு எந்த ஓரு வரலாற்று சின்னமும் மாமல்லபுரம் ப�ோல் பன்முகத்தன்மை க�ொண்டதாக இருப்பது அறிது. இங்கே ச�ோழர் கால கட்டிடக் கலைஞர்களும் சிற்பிகளும் கூட நினைத்துப் பார்த்திராத பல ச�ோதனை முயற்ச்சிகள் இருக்கின்றன. ச�ோழ, பாண்டிய சிற்பிகளுக்கு சவால் விடும் முயற்ச்சிகளும் இருக்கிறது. குடைவரைகளை எடுத்துக்கொண்டால் நரசிம்மவர்மனுடைய பஞ்ச பாண்டவர் மண்டபம் ச�ோதனை முயற்ச்சிக்கான உதாரணம். சிற்ப க�ோயிலில் க�ொற்றவை க�ோயில் ச�ோதனை முயற்ச்சிதான். கற்றளியில் இராஜசிம்மனுடைய கடற்கரை க�ோயில் ச�ோதனை முயற்ச்சி. 89
பகுதி - II
கூரம் - வித்யா விநீத பல்லவ பரமேசுவர க்ருகம் முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 672 – 700)
இ
வன் கூரம் என்னும் சிற்றூரில் கட்டிய “வித்யா விநீத பல்லவ பரமேசுவர க்ருகம்” என்கிற சிவன் க�ோயிலே தமிழகத்தின் முதல் கற்றளியாக கருதப்படுகிறது. இக்கோயிலின் நிர்வாகத்திற்கு என்று பரமேசுவர மங்கலம் என்கிற ஊரை மானியமாக வழங்கினான். இவன் காலத்தில் கூரம் மிக முக்கிய நிர்வாக நகரமாக இருந்திருக்கிறது. இவன் குறித்த செப்பேடு ஒன்றும் இந்த க�ோயிலிருந்து பெறப்பட்டது.
பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான ப�ோர் என்பது தலைமுறைகளை கடந்த ஒன்று. இவனுடைய காலத்திலும் அது த�ொடர்ந்தது. இவனுடைய காலகட்டத்தில் சாளுக்கிய அரசனாக இருந்தவன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655 – 681). தன்னுடைய தந்தை காலத்தில் ஏற்பட்ட அவமானங்களை துடைக்க த�ொடர்ச்சியாக பல்லவர்களுடன் ம�ோதியவன். ம�ோதலின் த�ொடக்கத்தில் வெற்றியும் பெற்றவன். இவன் வெளியிட்ட கத்வல் பட்டயம், “மகேந்திரன் செல்வாக்கை அழித்தான். நரசிம்மவர்மனது பெருமையை அழித்தான். ஈசுவர ப�ோத்தரசனை வென்றான். மாமல்லனுடைய மரபை அழித்தமையால் இராச மல்லன் என்னும் விருதுப் பெயரைப் பெற்றான்” என்று ஆர்பாட்டமாக அறிவிக்கிறது. ஈசுவர ப�ோத்தரசன் என்று இந்த பட்டயம் குறிப்பிடுவது முதலாம் பரமேசுவரவர்மனைத்தான். இதிலிருந்து நமக்கு தெரியவருவது பெரும் படையுடன் காஞ்சிபுரம் வந்த முதலாம் விக்கிரமாதித்தன் க�ோட்டையை முற்றுகையிட்டு பெரும் ப�ோர் செய்திருக்கிறான். இது நிகழ்ந்தது கி.பி. 674-ஆம் ஆண்டின் த�ொடக்க மாதங்களிலாக இருக்கவேண்டும். அதாவது முதலாம் பரமேசுவரவர்மன் ஆட்சிக்கு வந்த அடுத்த நான்கு ஆண்டுகளில். விக்கிரமாதித்தனுடைய 93
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
படையை எதிர்கொள்ள முடியாமல் பரமேசுவரவர்மன் க�ோட்டையிலிருந்து தப்பி வெளியேறிவிட்டான். மகேந்திரவர்மனுடைய காலத்திலிருந்து பதுங்கி தாக்குவது பல்லவர்களின் ப�ோர் தந்திர�ோபயமாக இருந்தது என்பதை இங்கே கவனத்தில் க�ொள்ள வேண்டும். எதிரியின் படை வலிமை அதிகமாக இருக்கும்பொழுது வீம்பிற்கு அவனுடன் ம�ோதி அதிக இழப்புகளை அழிவுகளை எதிர்கொள்வதை விட எதிரியின் படை அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் வெற்றி களிப்பில் அது ச�ோர்வடைந்திருக்கும்போது திடீரென்று அதை தாக்கி எதிரியை நிலை குலைய செய்து அவனை ஓட ஓட விரட்டியடிப்பது என்கிற ப�ோர் கள தந்திரத்தை பல்லவ பேரரசர்கள் பின் பற்றிவந்தார்கள். அதை முதலாம் பரமேசுவரவர்மனும் சுருதி தப்பாமல் பின்பற்றினான். காஞ்சிபுரத்திலிருந்து தப்பிய பரமேசுவரவர்மன் இன்றைய கர்நாடக்க ஆந்திர எல்லை பகுதிக்கு சென்று தலைமறைவானான். அவன் தப்பி விட்டதை அறிந்த விக்கிரமாதித்தன் காஞ்சிபுர க�ோட்டையை தாக்கி கையில் அகப்பட்ட பல்லவ பேரரசு குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் க�ொன்று ஒழித்துக் கட்டிவிட்டு பாண்டிய பேரரசை தாக்க தெற்கு ந�ோக்கி சென்றான். அப்போது பாண்டிய பேரரசாக இருந்தது பாண்டியன் நெடுமாறன். பல்லவ பேரரசின் தெற்கு எல்லையாகவும், பாண்டிய பேரரசின் வடக்கு எல்லையாகவும் இருந்த உறையூரில் ஏப்ரல் மாதம் 26, கி.பி. 674-ல் தன்னுடைய பெரும் படையை நிலை நிறுத்தி தங்கினான் விக்கிரமாதித்தன். இங்கு தங்கியிருந்த ப�ோதே பல்லவ பேரரசுடனான ப�ோரில் அவன் பெற்ற வெற்றியை அறிவிக்கும் கத்வல் பட்டயம் வெளியிடப்பட்டது. இன்றைய திருச்சி மாவட்டத்திலிருக்கும் அதே உறையூர்தான். அங்கிருந்துக்கொண்டு பாண்டியனை தாக்க வேண்டும் என்பது அவனுடைய ப�ோர் திட்டமாக இருந்தது. ப�ோரும் த�ொடங்கியது. நெடுமாறனும் அவனுடைய மகன் க�ோச்சடையனும் களத்தில் இறங்கினார்கள். ப�ோர் பல மாதங்களுக்கு த�ொடர்ந்து நடந்திருக்கிறது. வெவ்வேறு இடங்களில் இரு தரப்பு படைகளும் 94
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
கடுமையாக ம�ோதிக்கொண்டன. இறுதி கட்ட ப�ோர் திருச்சிக்கு அருகில் நெல்வேலி என்கிற இடத்தில் நடந்திருக்கிறது. இதில் பாண்டியன் நெடுமாறன் பெரு வெற்றி பெற்றான். இது கி.பி. 674-ம் வருடத்தின் இறுதி மாதங்களில் நடந்திருக்கலாம். ஆந்திர எல்லைக்கு தப்பி சென்ற முதலாம் பரமேசுவரவர்மன் மிக சரியாக இந்த சமயத்தில் பெரும் படை ஒன்றை திரட்டிக்கொண்டு உறையூர் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான். அவனுடன் அவனுடைய மகன் இராசசிம்மனும் இருந்தான். பரமேசுவரவர்மன் படை திரட்டிக்கொண்டு உறையூருக்கு வந்து சேர்ந்தது தற்செயலான நிகழ்வாக இருக்க வாய்பில்லை. காஞ்சிபுரத்தை தாக்கிய பிறகு நிச்சயம் விக்கிரமாதித்தன் பாண்டிய நாட்டின் மீது படையெடுப்பான் என்பதை பரமேசுவரவர்மன் முன்பே நன்றாக அறிந்து வைத்திருக்கவேண்டும். பாண்டியன் மீது கை வைத்தால் சந்தேகமேயில்லாமல் விக்கிரமாதித்தனுக்கு பெரும் அடிவிழும் என்பதையும் அவன் முன்பே கணித்திருக்கவேண்டும். அடி வாங்கி ச�ோர்ந்துப�ோய் விக்கிரமாதித்தன் பின் வாங்கும் ப�ோது அவனை சுற்றி வளைத்து தாக்குவது என்கிற பெரும் திட்டத்துடனேயே அவன் ஆந்திர எல்லைப் பகுதிக்கு தப்பி சென்றது. வடக்கே ஒரு பெரும் எதிரியை தப்பி செல்ல விட்டுவிட்டு தெற்கே மற்றொரு பெரும் எதிரியின் மீது படையெடுத்து செல்வது வம்படியாக ஆப்பை தேடிப் ப�ோய் அதன் மேல் உட்கார்வதற்கு நிகரானது என்பதை ஏன�ோ விக்கிரமாதித்தன் கவனிக்க தவறிவிட்டிருந்தான். நெடுமாறனிடம் த�ோல்வியை சந்தித்திருந்த அவன் பாண்டிய பேரரசின் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்கி பெருவளநல்லூர் என்கிற ஊரில் தங்கியிருந்தான். இதுவும் திருச்சிக்கு அருகில் இருந்த ஒரு ஊர்தான். த�ோல்வியில் சுருண்டிருந்த சாளுக்கிய படை மீது முதலாம் பரமேசுவரவர்மனுடைய பல்லவ படைப் பாய்ந்தது. இதை விக்கிரமாதித்தன் முற்றிலும் எதிர் பார்க்கவில்லை. இம்முறையும் ப�ோர் பல நாட்களுக்கு நீடித்தது. பெரும் இழப்புகளை சந்தித்து எதிரிக்கு முன் தாக்கு பிடிக்க முடியாத நிலைக்கு சென்றான் விக்கிரமாதித்தன். ச�ொந்த நாட்டிற்கே உயிரை 95
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
கையில் பிடித்துக்கொண்டு புற முதுகிட்டு தப்பி ஓடுவதை தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் அவன் வாதாபிக்கு தப்பி ஓடினான். கந்தையை சுற்றிக்கொண்டு கதறியடித்து அவன் தப்பிய�ோடியதாக பிற்பாடு பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயம் இது குறித்து விவரிக்கிறது. விக்கிரமாதித்தன் செய்த தவறை பரமேசுவரவர்மன் செய்ய விரும்பவில்லை. தப்பிய�ோடும் எதிரி என்றைக்கு இருந்தாலும் பெரும் தலைவலிதான் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த அவன் வாதாபி வரை விக்கிரமாதித்தனை விடாமல் பின் த�ொடர்ந்து சென்று அங்கு வைத்து அவனுடைய கதையை முடித்தான். கூடவே வாதாபியும் அழிக்கப்பட்டது. இவனுடைய மகன் இராசசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் க�ோயில் கல்வெட்டொன்று பரமேசுவரவர்மன் வாதாபியை அழித்தான் என்கிற செய்தியை பதிவு செய்கிறது. இந்த ப�ோர் குறித்து கூரம் பட்டயம் விரிவான வர்ணனையை தருகிறது. “கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் நடந்து சென்றமையால் கிளம்பிய தூசி கதிரவனை மறைக்க கதிரவன் ஒளி சந்திரனுடைய ஒளியைப்போல மங்கியது. முரச�ொலி இடிய�ோசைப�ோல அச்சமூட்டியது. உறையில் இருந்து வெளிப்பட்ட வாட்கள் மின்னல்போலக் கண்களைப் பறித்தன. கரிகள் கார்மேகங்கள் ப�ோல அசைந்தமை கார்காலத் த�ோற்றத்தை காட்டியது. ப�ோரில் உயர்ந்த குதிரைகள் நின்றிருந்த காட்சி கடல் அலைகள்போலத் த�ோன்றியது. அவற்றின் இடையில் கரிகள் செய்த குழுப்பம் கடலில் அச்சுறுத்தும் பெரிய உயிர்கள் வரும்போது உண்டாகும் சூழலை ஒத்திருந்தது.” “கடலிலிருந்து சங்குகள் புறப்பட்டாற்போலச் சேனைக் கடலில் இருந்து வீரர் சங்கொலி எங்கும் பரப்பினர். கத்தி, கேடயம் முதலியன பறந்தன. பகைவர் ப�ோரிட்டு வீழ்ந்து கிடந்த நிலைமை, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் வீழ்ந்து கிடக்கும் நிலையை ஒத்திருந்தது. ப�ோர் வீரர்கள் நாகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்த காடுகளை ஒப்ப அணியணியாக நின்றனர். வீரர் வில்லை வளைத்து அம்பை விடுத்தப�ோது உண்டான ஓசை, காட்டில் காற்றுத் தடைப்பட்ட காலத்தில் உண்டாகும் பேர�ோசையை ஒத்திருந்தது. கரிகள் ஒன்றோட�ொன்று ப�ொருதப�ொழுது தந்தங்கள் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன.” 96
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
“குதிரை வீரர் வாட்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் க�ொண்டு எடுக்க முடியாமல் நின்றார்கள். சிலர் மயிர் பிடித்து இழுத்து சண்டையிட்டார்கள். கதைகள் ஒன்றோடு ஒன்று ம�ோதின. செந்தீரும் கரிகளிம் மதநீரும் நிலத்தில் த�ோய்ந்து பரந்த காட்சி, தரையில் மஞ்சள் பூசினாற்போல ஆயிற்று. வீரர்களுடைய, கரி பரிகளுடைய தலைகளும் கைகளும் கால்களும் த�ொடைகளும் பிறவும் வெட்டுண்டு சிதறுண்டன. இருதிறத்தாரும் முன்னும் பின்னும் அலைந்து ஓடிச் சண்டையிட்டனர். ஆறாக ஓடிய இரத்தத்தின்மேல் பாலமாக அமைந்த யானைகளின் மீது நின்று வாள் வீரர் ப�ோரிட்டனர். அப்பொழுது வெற்றி அணங்கு வெற்றி என்னும் ஊஞ்சலில் இருந்து ஆடினாள். இறந்த வீரர் கைகளில் வாள் முதலியன அப்படியே இருந்தன. அவர்கள் ப�ோரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். அவர் கண்கள் சிவந்திருந்தன. பெருவீரர் அணிந்திருந்த அணிகள் யாவும் ப�ொடியாகிக் கிடந்தன. பேய்கள் முதலியன செந்நீர் குடித்து மதிமயங்கின. முரசுக்கேற்ற தாளம்போலத் தலை அற்ற முண்டங்கள் கூத்தாடின. பல நூறாயிர வீரருடன் வந்த விக்கிரமாதித்தன், தனியனாய் கந்தையைப் ப�ோர்த்துக் க�ொண்டு ஓடி ஒளிந்தான். இப்போரில் சண்டையிட்ட பரமேசுவரவர்மனது ப�ோர்ப் பரியின் பெயர் அரிவாரணம். குதிரையின் பெயர் அதிசயம்” க�ோயில் கட்டிடக் கலை இந்த க�ோயிலின் முழு உருவை இப்போது காண வாய்க்கவில்லை. சுமார் 1300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த க�ோயிலின் எஞ்சிய மணல் கற்களையே இப்போது காண முடிகிறது. படங்கள் 1, 2 பார்க்கவும். விமானத்தின் அதிட்டாண பகுதி மாத்திரமே இப்போது எஞ்சியிருக்கிறது. அதிட்டாணத்தின் உறுப்புகளான ஜகதி, குமுதம் மற்றும் காந்தம் இடம் பெற்றிருக்கிறது. ஜகதியில் அலங்கார வேலைப்பாடுகள் ஏதும் இல்லை. குமுதம் முப்பட்டை க�ொண்டதாக இருக்கிறது. முப்பட்டை குமுதம் க�ொண்டிருப்பதால் இந்த அதிட்டாணத்தை பாத பந்தம் அதிட்டாணம் என்று அழைப்பார்கள். இந்த க�ோயிலுக்கு பின்பு சுமார் 50 வருடங்கள் கழித்து கட்டப்பட்ட காஞ்சிபுரத்திலிருக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மனின் 97
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
(இவர் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழகத்தின் முதல் கற்றளியான கூரம் சிவன் க�ோயிலை கட்டிய முதலாம் பரமேசுவரவர்மனின் மகன்) வைகுந்த பெருமாள் க�ோயிலின் அதிட்டாணமும் இதே அமைப்பில் இருக்கும் பாத பந்த அதிட்டாணம்தான். படங்கள் 3, 4 பார்க்கவும். பித்தி பகுதியின் அடிபாகம் மாத்திரமே இப்போது இருக்கிறது. பித்தியின் உறுப்பான க�ோஷ்ட பஞ்சாச்சரம் இருந்ததா என்பது தெரியவில்லை. இருந்திருக்கவேண்டும் என்பதே எங்களின் அனுமானம். இது கஜபிருஷ்ட விமான அமைப்பை சேர்ந்தது. மாமல்லபுரத்திலிருக்கும் நரசிம்மவர்மனுடைய சிற்ப க�ோயில்களில் ஒன்றான சகாதேவன் ரதத்தின் (ஐந்து ரத க�ோயில்களில் ஒன்றான முருகன் க�ோயில்) விமானமும் இதே கஜபிருஷ்ட அமைப்பை க�ொண்டது. கஜம் என்றால் யானை, பிருஷ்டம் என்றால் பின்புறம். யானையை பின்புறமிருந்து பார்த்தால் என்ன த�ோற்றம் வரும�ோ அதை ஒத்து அரைவட்ட வடிவில் இந்த விமானம் இருப்பதால் இதற்கு இந்த பெயர். தமிழக க�ோயில் கட்டிடக் கலையில் கஜபிருஷ்ட வடிவில் விமானம் கட்டப்படுவது மிகவும் அரிது. ஆனால் முதல் கற்றளியே கஜபிருஷ்ட விமான அமைப்பில் இருப்பது எதிர்பாரா நிகழ்வுதான். பித்திக்கு மேல் பிரஸ்தர அமைப்பு இருந்ததா என்பதை உறுதியாக கூற முடியவில்லை. இப்போதிருக்கும் விமானத்தில் அதிட்டாணமும் பித்தியும் மாத்திரமே இருக்கின்றன. ஊரை சேர்ந்தவர்கள் இதற்கு பிரஸ்தரம் கிடையாது என்று ச�ொல்கிறார்கள். ஆனால் நிச்சயம் பிரஸ்தர, கிரிவர, சிகர மற்றும் முடி ப�ோன்ற விமான உறுப்புகள் இருந்திருக்கவேண்டும் என்றே த�ோன்றுகிறது. முழுமையான கற்றளி த�ொழில் நுட்பத்திற்கான ச�ோதனை ஓட்டங்களை முன்பே மாமல்லபுர சிற்ப க�ோயில்களில் முயற்ச்சி செய்து பார்த்துவிட்டதால் நிச்சயம் முதல் கற்றளியான இது முழுமையான விமான அமைப்புடனேயே கட்டப்பட்டிருக்கவேண்டும். கற்றளியின் முதல் முயற்ச்சி என்பதால் பிரஸ்தரத்தின் தள அடுக்கு ஒன்றுடன் நிறுத்தப்பட்டிருக்கலம். 98
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
99
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
100
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
விமானத்துடன் சேர்த்து மிக சிறிய முகப்பு மண்டபமும் இருக்கிறது. ஆக தமிழகத்தின் முதல் கற்றளி முகப்பு மண்டப அமைப்புடனேயே கட்டப்பட்டிருக்கிறது. தற்போது அந்த தூண்களை உள்ளடக்கி சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. க�ோயில் கட்டப்பட்ட ப�ோது தூண்களை க�ொண்ட திறந்தவெளி மண்டபமாகவே இருந்தது. தூண்கள் மகேந்திரவர்மனுடைய குடைவரை தூண்களின் அமைப்பிலேயே இருக்கின்றன.
101
காஞ்சிபுரம்
–
கைலாசநாதர் க�ோயில் (இராசசிம்மேஸ்வரம்)
இராசசிம்மன் (கி.பி. 700 – 728)
இ
வருக்கு இரண்டாம் நரசிம்மவர்மன் என்கிற பெயரும் உண்டு. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் க�ோயிலும், ஐராவதேஸ்வரர் க�ோயிலும் இவர் கட்டியவைகள். கைலாசநாதர் க�ோயிலில் இவருடைய மனைவி இரங்கபாதையும் (இரங்கபாதை கம்போடிய நாட்டை சேர்ந்த இளவரசி), மகன் மூன்றாம் மகேந்திரவர்மனும் சிறிய க�ோயில்களை கட்டியிருக்கிறார்கள்.
மூன்றாம் மகேந்திரவர்மன் தந்தைக்கு முன்பே இறந்துவிட்டான். கங்கர்களுடனான ப�ோரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவன் இறந்திருக்கவேண்டும். வைகுந்த பெருமாள் க�ோயிலில் இருக்கும் சுற்று சுவர் புடைப்பு சிற்ப த�ொகுதி ஒன்றில் இராச சபையில் இருக்கும் இராசசிம்மன் மற்றும் இரங்கபாதை முன்னிலையில் பள்ளக்கு ப�ோன்ற த�ொட்டில் ஒன்றில் மூன்றாம் மகேந்திரவர்மன் தூக்கிவரப்படுவதுப�ோல காட்டப்பட்டிருக்கிறது. ப�ோர் களத்தில் படுகாயமடைந்த அவன் அரண்மனைக்கு தூக்கிவரப்பட்டதை சித்தரிக்கும் காட்சியாக இது இருக்கவேண்டும். மூன்றாம் மகேந்திரவர்மன் அவனுடைய தந்தை பேரரசாக இருந்த சமயத்தில் இளவரசனாக இருந்தான் (கி.பி. 720 – 728). கட்டிடக் கலை இராசசிம்மனுடைய காலகட்டம் என்பது தென்னிந்திய க�ோயில் கட்டிடக் கலையின் புத்தெழுச்சி காலகட்டம். கற்றளி த�ொழில் நுட்பம் அறிமுகமாகி ஒரு சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே அழகிய அதே சமயத்தில் பிரம்மாண்டமான கற்றளிகளை இவர் காலத்து கட்டிடக் கலைஞர்கள் படைக்க த�ொடங்கிவிட்டார்கள். 102
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
இதற்கான உதாரணங்கள் காஞ்சி கைலாசநாதர் க�ோயிலும் மாமல்லபுர கடற்கரை க�ோயில்களும். இரண்டுமே இராசசிம்மன் எழுப்பியவையே. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே சுமார் மூன்று கில�ோ மீட்டர் த�ொலைவில் இருக்கிறது இந்த கற்றளி அற்புதம். இதற்கு வேறு பெயரும் உண்டு. அது இராசசிம்மேஸ்வரம். காஞ்சிபுர கைலாசநாதர் கற்றளியை த�ொடங்குவதற்கு முன்பே மாமல்லபுர கடற்கரை க�ோயில்கள் திட்டமிடப்பட்டு த�ொடங்கப்பட்டுவிட்டன. இரண்டுமே பிரம்மாண்ட திட்டமிடலுடன் த�ொடங்கப்பட்டிருக்கிறது. கடற்கரை கற்றளிகள் திட்டமிட்டபடியே அதன் பிரம்மாண்டத்துடன் முழுமையடைந்துவிட கைலாசநாதர் க�ோயில் அதன் பிரம்மாண்டத்தை ஏட்டாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனாலென்ன அதன் அழகிற்கு எவ்வித குறைச்சலும் கிடையாது. படம் 1 பார்க்கவும். தற்போது எஞ்சியிருக்கும் மாமல்லபுர கடற்கரை கற்றளியை ப�ோலவே கைலாசநாதர் கற்றளியிலும் இரண்டு விமானங்கள் இருக்கின்றன. ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. பெரிய விமானம் இராசசிம்மன் எழுப்பிய இராசசிம்மேஸ்வரம். இதற்கு முன்பாக இருக்கும் சிறிய விமானம் அவருடைய மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் எழுப்பிய மகேந்திரேஸ்வரா. இராசசிம்மனுடைய காலத்தில் சில புதிய உறுப்புகள் க�ோயில் கட்டிடக் கலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உறுப்புகள் முன்பே இருந்திருக்கவேண்டும். குடைவரை மற்றும் சிற்ப க�ோயில்களில் அதை செயல்படுத்த முடியாமல் இருந்திருக்கவேண்டும். கற்றளி த�ொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு அதை மீண்டும் செயல்படுத்தியிருக்கலாம். அந்த புதிய உறுப்புகள், கருவரையை சுற்றிய உட் பிரகாரம் கருவரையை சுற்றிய வெளி பிரகாரம் அர்த்த மண்டபம் 103
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
கருவரையை சுற்றிய துணை க�ோயில்கள் வெளி சுற்று சுவர் படங்கள் 2 முதல் 5 வரை பார்க்கவும். விமான உறுப்புகள் - இராசசிம்மேஸ்வரம் அதிட்டாணம் கைலாசநாதர் கற்றளியின் அதிட்டாணம் பத்ம பந்த அதிட்டாண வகையை சேர்ந்தது. குமுதத்தில் பத்ம (தாமரை) வேலைப்பாடுடன் இருக்கும் அதிட்டாணத்தை பத்ம பந்த அதிட்டாணம் என்று அழைப்பார்கள். படம் 6 பார்க்கவும். கூரம் மற்றும் வைகுண்ட பெருமாள் கற்றளிகளின் ஜகதியில் எத்தகைய வேலைபாடுகளும் இல்லாமல் இருக்க இந்த கற்றளியில் பூத கணங்களின் நடன புடைப்பு சிற்பங்கள் அலங்காரத்திற்காக செதுக்கப்பட்டிருக்கிறது. குமுதம் முப்பட்டை க�ொண்டதாக இருந்தாலும் அதில் தாமரை இதழ் வேலைபாடுகள் க�ொடுக்கப்பட்டிருக்கிறது. காந்த உறுப்பிலும் யானைகளின் தலை புடைப்பு சிற்பு வேலைபாடுகள் இருக்கின்றன. இந்த கற்றளியை பிற்காலத்தில் பராமரிப்பு செய்தவர்கள் பாத பந்த அதிட்டாணத்தை உட்புகுத்தியிருக்கிறார்கள். படங்கள் 7 முதல் 10 வரை பார்க்கவும். பித்தி பித்தியின் உட்பகுதியில் மூடப்பட்ட திருசுற்று பிரகாரம் இருக்கிறது. பித்தியின் வெளிபக்க சுவர்களில் எத்தகைய சாளர திறப்புகளும் இல்லாததால் இது வெளிச்சம் படாமலேயே இருக்கிறது. வெளிபக்க சுவர்களில் பித்தியின் உறுப்புகளான க�ோஷ்ட பஞ்சாச்சரங்களும், யாளி கருக்கு வேலைபாடுகளும் இருக்கின்றன. படங்கள் 11, 12 பார்க்கவும். பித்தியின் வெளிபக்க சுவரில் 9 துணை க�ோயில்கள் இருக்கின்றன. கிழக்கு பக்க சுவரில் இரண்டு, தெற்கு பக்க சுவரில் இரண்டு, மேற்கு 104
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
105
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
106
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
107
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
108
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
109
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
110
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
111
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
112
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
113
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
114
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
115
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
116
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
117
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
118
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
119
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
120
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
121
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
பக்க சுவரில் மூன்று மற்றும் வடக்கு பக்க சுவரில் இரண்டு. கருவரை க�ொண்ட இந்த துணை க�ோயில்களின் கருவரையில் சிவனுடைய பல அவதார புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. துணை க�ோயில்களின் கருவரை நுழைவாயில் அனைத்தும் கிழக்கையும் மேற்கையும் பார்த்தபடி இருக்கின்றன. படங்கள் 13 முதல் 19 வரை பார்க்கவும். பிரஸ்தரம் பிரஸ்தரம் மூன்று அடுக்குகளை க�ொண்டதாக இருக்கிறது. இதன் உறுப்புகளான கர்ணகூடு, பஞ்சரம் மற்றும் சாலை சுதை சிற்பங்களுடன் கண்களை கவரும்படி இருக்கின்றன. விமானத்தின் அழகையும் கம்பீரத்தையும் எடுத்துக்காட்டும் விதத்திலும் இருக்கின்றன. பித்தி பகுதியை சுற்றியிருக்கும் துணை க�ோயில்களின் பிரஸ்தரம் ஒரு தள அடுக்குடன் இருக்கின்றன. இதில் விசேசம் என்னவென்றால் சுவர்களின் முக்குகளில் இருக்கும் துணை க�ோயில்களின் பிரஸ்தர தளம் கர்ணகூடு அமைப்பிலும் மற்றவை சாலை அமைப்பையும் க�ொண்டிருக்கின்றன. கப�ோதம் யாளி க�ொடு கருக்கு கூடுகளுடன் இருக்கிறது. படங்கள் 20 முதல் 25 வரை பார்க்கவும். விமான உறுப்புகள் - மகேந்திரேஸ்வரா அதிட்டாணம் இதன் அதிட்டாணம் பாத பந்த அதிட்டாண அமைப்பை க�ொண்டது. இராசசிம்மேஸ்வரம் கட்டப்பட்டு ஒரு சில ஆண்டுகள் கழித்து இது கட்டப்பட்டது என்பதற்கான அடையாளங்களில் இதுவும் ஒன்று. இராசசிம்மேஸ்வரம் கற்றளியின் அதிட்டாணம் பத்ம பந்த அதிட்டாணத்தில் இருக்க இது பாத பந்த அதிட்டாண அமைப்பில் இருக்கிறது. இதற்கு பின்பு சில ஆண்டுகள் கழித்து கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் க�ோயிலின் அதிட்டாணமும் பாத பந்த அமைப்பிலேயே இருப்பது பெரும்பான்மையான பல்லவர பேரரசர்கள் பாத பந்த அதிட்டாணத்தையே விரும்பியிருக்கிறார்கள் என்பதை புலப்படுத்துகிறது. படம் 27 பார்க்கவும். 122
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
பித்தி இதன் பித்தி அனேகமாக அடையாளம் தெரியாதபடி காலத்தால் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போது இருப்பது தற்காலத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட பித்தி. இதில் க�ோஷ்ட பஞ்சாச்சர உறுப்பு இருக்கிறது. படம் 28 பார்க்கவும். கப�ோதத்தில் யாளி கருக்கு கூடுகள் இருக்கின்றன. கூடுகளுக்குள்ளே விநாயகரின் புடைப்பு சிற்பங்கள் இருக்கிறது. கற்றளி கட்டப்பட்ட காலத்தில் இந்த கூடுகளுக்குள் விநாயகரின் புடைப்பு சிற்பங்கள் இருந்தனவா என்பது ஆய்விற்குரியது. படம் 29 பார்க்கவும். பிரஸ்தரம் பிரஸ்தரம் ஒரு தள அடுக்குடன் இருக்கிறது. ம�ொத்த பிரஸ்தரத்தின் அமைப்பும் சாலை உறுப்பின் வடிவிலேயே இருக்கிறது. கர்ணகூடு மற்றும் பஞ்சரம் ப�ோன்ற உறுப்புகள் இல்லை. மகேந்திரசுவரா க�ோயிலின் முன் பக்கமிருந்து த�ொடங்குகிறது இராசசிம்மேஸ்வர க�ோயிலின் சுற்று சுவர். கருவறை மற்றும் முகப்பு மண்டபத்தை சுற்றிய வெளி பிரகார சுற்று வட்ட பாதையும், விமானத்தையும் வெளி பிரகாரத்தையும் உள்ளடக்கிய சுற்று சுவரும் இராசசிம்மனுடைய காலத்திலிருந்தே த�ொடங்குகிறது. இந்த சுற்று சுவரில் ம�ொத்தமாக 59 துணை க�ோயில்கள் இருக்கின்றன. கருவறையுடன் கூடிய மிக சிறிய க�ோயில்கள் இவை. இந்த துணை க�ோயில்களின் கருவறைக்குள் புடைப்பு சிற்பமாக ச�ோமஸ்கந்தர் திரு உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது. சுற்று சுவரின் உள் பகுதியில் இப்படி துணை க�ோயில்களாக த�ொடங்கிய அமைப்பே இதற்கு பின்னால் வந்த க�ோயில்களில் மண்டபமாக மாற்றமடைந்தது. இந்த மாற்றத்தை நாம் அடுத்து பார்க்க இருக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மன் கட்டிய வைகுண்ட பெருமாள் க�ோயிலேயே காணலாம். 123
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
படம் 30 பார்க்கவும். கடற்கரை க�ோயிலின் பிரம்மாண்டம் இராசசிம்மனையும் அவனுடைய மகனான மூன்றாம் மகேந்திரவர்மனையும் முழுதுமாக ஈர்த்திருக்கவேண்டும். முன்பே முடிந்துவிட்ட கைலாசநாதர் க�ோயிலையும், கடற்கரை க�ோயிலைப்போலவே பிரம்மாண்டமானதாக மாற்ற திட்டமிட்டு அப்போது இளவரசனாக இருந்த மூன்றாம் மகேந்திரவர்மன் கைலாசநாதர் க�ோயிலின் விரிவாக்க பணிகளை த�ொடங்கியிருக்கவேண்டும். க�ோயிலின் கிழக்கு பிரதான நுழை வாயிலில் இருக்கும் மகேந்திரேசுவரா க�ோயிலின் அமைப்பே இதற்கு ப�ோதுமான ஆதாரமாக இருக்கிறது. நுழைவாயிலை அகற்றவிட்டு அந்த இடத்தில் மகேந்திரேசுவரா க�ோயிலை கட்டியிருக்கிறார்கள். மேலும் மேற்கு பக்க சுவரிலும் ஒரு நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டு பின்னால் அது மூடப்பட்டிருக்கிறது. மகேந்திரேசுவரா க�ோயிலுக்கு முன்பாக மேலும் எட்டு துணை க�ோயில்களை அமைத்து அதற்கு அடுத்து கிழக்கே மேலும் ஒரு க�ோயிலையும் அதற்கு முன்பாக வரும்படியான நந்தி மண்டபமும் இவைகளை உள்ளடக்கிய பெரிய சுற்று சுவரும் என்பதாக திட்டமிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் எட்டு துணை க�ோயில்கள் மற்றும் நந்தி மண்டப பணிகள் மாத்திரமே முடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது. இப்போது நந்தி மண்டபத்தின் அதிட்டாண பகுதியும் நான்கு தூண்களும் நந்தியுமே எஞ்சியிருக்கின்றன. மண்டபத்தின் மேற் கூரை அழிந்துவிட்டது. இராசசிம்மேஸ்வர அதிட்டாண அமைப்பான பத்ம பந்த அமைப்பே இதன் அதிட்டாணத்திற்கும் க�ொடுக்கப்பட்டிருக்கிறது. படங்கள் 33, 34, 35 பார்க்கவும். கங்கர்களுடனான ப�ோரில் இளவரசனான மூன்றாம் மகேந்திரவர்மனுக்கு ஏற்பட்ட காயம் அவனுடைய உயிரை எடுத்துவிட, அவனுடைய எதிர்பாரா இறப்பு கைலாசநாதர் 124
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
க�ோயிலின் பிரம்மாண்ட விரிவாக்க பணிகளை பாதியிலேயே முடக்கிவிட்டது. மூன்றாம் மகேந்திரவர்மன் தன்னுடன் சேர்த்து கைலாசநாதர் க�ோயிலின் பிரம்மாண்டத்தையும் திரு கைலாயத்திற்கு எடுத்து சென்றுவிட்டான். நமக்குத்தான் பெரும் இழப்பு. கட்டிடக் கலை ப�ொக்கிஷம் ஒன்று நமக்கு கிடைக்காமலேயே ப�ோய்விட்டது.
125
காஞ்சிபுரம் – வைகுண்ட பெருமாள் க�ோயில் (பரமேஸ்வர விண்ணகரம்)
கை
லாசநாதர் மற்றும் கடற்கரை க�ோயில்களுக்கு சமகாலத்தில் கட்டப்பட்ட மற்றொரு முக்கியமான க�ோயில் வைகுண்ட பெருமாள் க�ோயில். இதை கட்டியது இரண்டாம் பரமேசுவரவர்மன். இராசசிம்மனுக்கு முன்பே அவனுடைய மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இறந்துவிட இராசசிம்மனுக்கு அடுத்து பல்லவ ஆட்சி கட்டிலுக்கு வந்தது இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 728 – 731).
பல்லவ பேரரசின் வீழ்ச்சியும் இந்த புள்ளியிலிருந்தே த�ொடங்குகிறது. இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கும், இராசசிம்மனுக்கும் எப்படியான இரத்த உறவு இருந்தது என்பது தெரியவில்லை. இரண்டாம் பரமேசுவரவர்மன் நிச்சயமாக இராசசிம்மனுடைய மகன் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. இரண்டாம் பரமேசுவரவர்மன், இராசசிம்மனுடைய இளைய சக�ோதரனாக இருக்கலாம் என்று சில ஆய்வரிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பட்டத்து இளவரசன் முன்பே இறந்துவிட்ட படியால் இராசசிம்மன் இறந்த பிறகு அடுத்த பல்லவ பேரரசாக யார் வருவது என்கிற குழப்பம் த�ொடங்கியிருக்கவேண்டும். எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு மத்தியிலேயே இரண்டாம் பரமேசுவரவர்மன் ஆட்சிக்கு வந்திருக்கவேண்டும். வந்த சீக்கிரத்திலேயே அவர் இறந்துவிட வாரிசு சண்டை மீண்டும் கிளம்பியது. கிளம்பிய சண்டை பல்லவ பேரரசை ஒட்டும�ொத்த சரிவிற்கு க�ொண்டு சென்றுவிட்டது. பல்லவ பேரரசிடமிருந்து தன்னுடைய பாட்டனாரும் தந்தையும் பெற்ற அவமானங்களை திருப்பி க�ொடுக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்த சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன் (இவன் முதலாம் 126
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
விக்கிரமாதித்தனுடைய மகன்) இந்த வாரிசு சண்டையை வாட்டமாக பயன்படுத்திக்கொண்டு பல்லவ பேரரசின் மீது படையெடுத்தான். இளவரசனாகவே இருந்து இறந்துவிட்ட மூன்றாம் மகேந்திரவர்மனுடைய வாரிசுகளுக்கும் மற்றொரு அரச மரபிற்கும் நடந்த சண்டையில் பல்லவ நாடு பரம்பரை எதிரியான இரண்டாம் விக்கிரமாதித்தனை கண்டுக்கொள்ளாமலேயே ப�ோய் விட்டது. காஞ்சிபுரத்திற்குள் புகுந்த அவன் அழிவுகளை தாராளமகாவே நிகழ்த்தினான். தன்னுடைய தலைநகருக்கு கிடைத்த அழிவுகள் அனைத்தையும் திருப்பித் தரும் விதமாக. அந்த அழிவுகளில் இருந்து தப்பியவைகளில் குறிப்பிடத்தக்கது கைலாசநாதர் க�ோயிலும் வைகுந்த பெருமாள் க�ோயிலும். கைலாசநாதர் க�ோயிலின் கட்டிடக் கலை அழகில் ஈர்க்கப்பட்ட இரண்டாம் விக்கிரமாதித்தன் தன் பெயரில் அந்த க�ோயிலில் பணிகள் நடைபெற நில மானியங்களையும் வழங்கினான். இரண்டாம் பரமேசுவரவர்மன் மூன்று ஆண்டுகளே ஆட்சியில் இருந்ததாலும், அவனுடைய இறப்பை த�ொடர்ந்து சாளுக்கியனின் படையெடுப்பாலும் அவன் த�ொடங்கிய வைகுந்த பெருமாள் க�ோயில் (பரமேஸ்வர விண்ணகரம்) கட்டிடப் பணி பாதியிலேயே நின்றுவிட்டது. படையெடுப்பை த�ொடர்ந்த அழிவுகள் முடிந்து வாரிசு சண்டையும் தீர்ந்து இரண்டாம் நந்திவர்மன் பல்லவ பேரரசானாக வந்த பிறகு பாதியிலேயே நின்றுவிட்ட வைகுண்ட பெருமாள் க�ோயிலின் கட்டிடப் பணியை மீண்டும் த�ொடங்கி முடித்தான். இரண்டாம் பரமேசுவரவர்மனுடைய இறப்பிற்கு பிறகு நிகழ்ந்த இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய காஞ்சி படையெடுப்பு மற்றும் அது த�ொடர்பான நிகழ்வுகளை இந்த க�ோயிலில் இருக்கும் சுற்று சுவர் புடைப்பு சிற்ப த�ொகுதியில் காண முடியும். கட்டிடக் கலை அமைப்பில் கைலாசநாதர் க�ோயிலை ஒத்திருப்பது இந்த க�ோயில். கைலாசநாதர் க�ோயிலை ப�ோலவே இதுவும் கிழக்கு திசையை பார்த்தபடி கட்டப்பட்டிருக்கிறது. சில புதுமைகளையும் இந்த க�ோயிலில் காண முடியும். பெருமாலுக்காக எழுப்பப்பட்ட 127
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
இக்கோயிலில் ஒன்றின் மீது ஒன்றாக மூன்று கருவறைகள் இருக்கின்றன. பெருமாலின் மூன்று நிலைகளான இருந்த, கிடந்த, நின்ற அமைப்புகளுக்கு ஏற்ப கட்டப்பட்ட கருவறைகள். கீழ் தள கருவறை பெருமாலின் இருந்த க�ோலத்தையும், முதல் தள கருவறை கிடந்த க�ோலத்தையும், இரண்டாம் தள கருவறை நின்ற க�ோலத்தையும் உள்ளடக்கியிருக்கின்றன. கீழ் மற்றும் முதல் தள கருவறைகளை சுற்றி இரண்டு சுற்று பிரகாரங்கள் இருக்கின்றன. கைலாசநாதர் க�ோயிலில் கருவறையை சுற்றி ஒரு பிரகாரம் மாத்திரமே இருக்கிறது என்பது இங்கே ஒப்பு ந�ோக்கத்தக்கது. முதல் சுற்று பிரகாரத்திற்குள் வெளிச்சம் நுழைவதற்கான எவ்வித சன்னல் அமைப்பும் வைக்கப்படவில்லை. இரண்டாம் சுற்று பிரகாரத்தில் வெளிச்சம் வருவதற்கான சாளர அமைப்புகள் இருக்கின்றன. முதல் தள கருவறைக்கும் இரண்டாம் தள கருவறைக்கும் செல்ல முதல் சுற்று பிரகாரத்திலேயே படிகட்டுகள் இருக்கின்றன. இந்த க�ோயில் கட்டிடக் கலைக்கான முன் மாதரியை மாமல்லபுரத்தில் இருக்கும் தர்மராச இரத சிற்ப க�ோயிலில் நாம் காண முடியும். கைலாசநாதர் அர்த்தமண்டபத்துடன் இருக்க இந்த க�ோயிலில் முகப்பு மண்டபம் மாத்திரமே உண்டு. பிற்கால ச�ோழர்களின் க�ோயில் கட்டிடக் கலையில் ஒரு அங்மாகிப்போன சுற்று சுவர் மண்டப அமைப்பின் த�ோற்றத்தை இந்த க�ோயிலின் சுற்று சுவர் மண்டபத்தில் காணலாம். தூண்கள் க�ொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்று சுவர் மண்டபத்தின் உட் புற சுவர் நெடுக புடைப்பு சிற்பங்களை காணலாம். பல்லவர்களின் வம்சாவளி த�ோற்ற சித்தரிப்புகள் த�ொடங்கி அவர்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்யும் சித்தரிப்புகள் வரை புடைப்பு சிற்ப த�ொகுதிகளாக அவை அமைந்திருக்கின்றன. புடை சிற்பங்கள் குறிப்பிடும் சித்தரிப்புகளை புரிந்துக்கொள்ள நுழை வாயிலில் இருந்து இடமிருந்து வலமாக சுற்று சுவரை சுற்றி வர வேண்டும். வெளிசுற்று சுவரின் உட்புறம் மண்டபமாக மாற்றமடைந்திருப்பதை இதில் பார்க்க முடியும். படங்கள் 1 முதல் 4 நான்கு வரை பார்க்கவும். 128
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
129
முதல் கற்கோயில்கள்: தமிழக க�ோயில் கட்டிடக் கலை
130
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி
பிற்கால ச�ோழர்கள் இந்த கற்றளியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வேலைகளை த�ொடங்கியிருப்பதாக தெரிகிறது. ஆனால் திட்டமிட்டபடி அது முழுமை பெறவில்லை. நுழைவாயிலுக்கு வெளியே ச�ோழர்கால அர்த்த மண்டபம் ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதை த�ொடர்ந்த ச�ோழர்கால க�ோபுரமும் த�ொடங்கப்பட்டு அது பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது. படம் 5 பார்க்கவும்.
131
Reference Books
பல்லவர் வரலாறு by டாக்டர் மா. இராசமாணிக்கனார் Dravidian Architecture by G. Jouveau-Dubreuil A Dictionary Of Hindu Architecture by Prasanna Kumar Acharya, I.E.S Encyclopaedia Of Indian Temple Architecture: South India Lower Dravidadesa Iconography of Southern India by G. Jouveau-Dubreuil Studies In Pallave History by Rev. H. Heras S. J
133